என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 107602"
கும்பகோணம்:
கும்பகோணம் அடுத்த பட்டீஸ்வரம் அருகே முழையூர் இந்திரா நகரை சேர்ந்தவர் சிவானந்தம் (வயது 30). கூலி தொழிலாளி. இவரது மனைவி அருண்மொழி. இவர்களுக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகிறது. 2 குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் சிவானந்தம் மது குடித்து விட்டு வீட்டுக்கு போதையில் வந்தார். அப்போது அருண்மொழி வீட்டில் டி.வி. பார்த்து கொண்டிருந்தார்.
அப்போது பசியில் இருந்த சிவானந்தம் மனைவியிடம் ‘சோறு போடும்படி‘’ கூறினாராம். ஆனால் இதை கவனிக்காமல் அருண்மொழி டி.வி.யை சுவாரஸ்சியமாக பார்த்து கொண்டிருந்தார்.
இதனால் போதையில் இருந்த சிவானந்தத்துக்கு ஆத்திரம் தலைக்கேறியது.
அப்போது சிவானந்தம் வீட்டில் பாட்டிலில் இருந்த மண்எண்ணையை தனது வாயில் ஊற்றிக்கொண்டு பின்னர் தீக்குச்சியை பற்ற வைத்து அருண்மொழி முகம் அருகில் கொப்பளித்தார்.
அப்போது அருண்மொழி முகம், தலை மீது தீ ‘குபீர்’ என பிடித்தது. இதில் தீயில் கருகி அவர் அலறி கூச்சல் போட்டார்.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சிவானந்தம் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். உடனே அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து அருண்மொழியை மீட்டு கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து பட்டீஸ்வரம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு தென்முடியனூர் ஊராட்சி நெல்லிக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் பங்காரு. இவரது மகன் செல்வம் (வயது 25). கூலித்தொழிலாளி. இவரது மனைவி மீனா (21). கடந்த சில நாட்களாக செல்வம் சென்னைக்கு வேலைக்கு சென்று வந்தார்.
இதற்கிடையே அதே பகுதியை சேர்ந்த ஏழுமலை மகன் சவுந்தரபாண்டியன் (25) என்ற வாலிபருடன் மீனாவுக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. கணவன் வேலைக்கு சென்ற நேரத்தில் கள்ளக்காதலனை வீட்டிற்கே வரவழைத்து மீனா உல்லாசமாக இருந்துள்ளார்.
செல்வம் நேற்று வழக்கம் போல் வேலைக்கு சென்னை சென்றார். இரவில் வீட்டில் தனியாக இருந்த மீனாவை சந்திக்க கள்ளக்காதலன் சவுந்தரபாண்டியன் வந்தார். 2 பேரும் தனிமையில் இருந்ததால் படுக்கையில் உல்லாசமாக இருந்தனர்.
சென்னைக்கு வேலை சென்ற கணவன் செல்வம் நள்ளிரவு 1 மணிக்கு வீடு திரும்பினார். அப்போது, வீட்டிற்குள் மனைவி கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்ததை பார்த்து ஆத்திரம் அடைந்தார்.
வீட்டுக்குள் புகுந்த செல்வம் அரிவாளை எடுத்து 2 பேரையும் சரமாரியாக வெட்டினார். இதில் அவர்கள் பலத்த காயமடைந்து அலறினர். அக்கம், பக்கத்தினர் சத்தம் கேட்டு ஓடி வந்து செல்வத்தை சமரசம் செய்தனர்.
பின்னர், 2 பேரையும் மீட்டு தண்டராம்பட்டு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். தலையில் பலத்த வெட்டு விழுந்ததில் மீனாவின் நிலைமை கவலைகிடமாக இருந்ததால் அவர் மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதேபோல், கள்ளக்காதலன் சவுந்தரபாண்டியன் தனியார் ஆஸ்பத்திரிலேயே சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுதொடர்பாக, தென்முடியனூர் கிராம நிர்வாக அலுவலர் சம்பத் அளித்த புகாரின் பேரில் தண்டராம்பட்டு போலீசார் வழக்குப்பதிந்து செல்வத்தை பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
ஆண்டிப்பட்டி:
ஆண்டிப்பட்டி அருகே உள்ள வாடிப்பட்டியில் சின்னத்துரை என்ற விவசாயிக்கு சொந்தமான கிணற்றில் கடந்த 2-ந் தேதி வாலிபர் பிணம் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கிடந்தது. தீயணைப்பு துறையினர் உதவியுடன் அவரது உடலை மேலே கொண்டு வந்து போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் ஆண்டிப்பட்டியைச் சேர்ந்த முருகன் (40) என்பதும், பழ வியாபாரம் பார்த்து வந்தவர் எனவும் தெரியவந்தது.
அவர் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டு கிடந்ததால் அவரது மனைவி, மகன் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். அவர்கள் முன்னுக்கு பின் முரணான பதில் அளித்தனர். முருகன் இறந்து 3 நாட்களுக்கு மேல் ஆகியும் அது குறித்து போலீசாருக்கு எவ்வித தகவலும் அவர்கள் தெரியபடுத்தவில்லை.
இதனால் இந்த கொலையில் அவர்களுக்கு தொடர்பு உள்ளதா? என்ற கோணத்தில் மனைவி, மகன், அவரது நண்பர், மகள் ஆகிய 4 பேர்களிடம் இன்ஸ்பெக்டர் பாலகுரு தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.
தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே உள்ள சவுளுக்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் லோகநாதன் (வயது 36), டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி. இவரது மனைவி நதியா (30). இவர்களுக்கு பூவரசன் (12), சஞ்சய் (8), நிர்மல் (6) என்ற 3 மகன்கள் இருந்தனர்.
நேற்று காலை அதே பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் நதியா அவரது 3 மகன்கள் ஆகியோர் கிணற்றில் பிணமாக மீட்கப்பட்டனர். அவர்கள் வாயில் துணி கட்டியும், உடலில் கற்கள் கட்டியும் இருந்தது.
இதுகுறித்து காரிமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி இவர்கள் சாவுக்கு காரணமான லோகநாதனை கைது செய்தனர். பின்னர் அவரை பாலக்கோடு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
தனது அக்காள் மற்றும் அக்காள் மகன்கள் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், அவர்கள் கிணற்றில் தள்ளி கொலை செய்யப்பட்டு இருப்பதாகவும் நதியாவின் தம்பி மணிவண்ணன் கொடுத்த புகாரின் பேரில் லோகநாதன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
முதற்கட்டமாக போலீசார் 4 பேர் இறந்த வழக்கை மர்ம மரணம் (174) பிரிவின் கீழ் பதிவு செய்துள்ளனர்.
தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் 4 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு இன்று உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.
பிரேத பரிசோதனை அறிக்கைக்காக போலீசார் காத்திருக்கிறார்கள். அந்த அறிக்கை வந்தவுடன் மர்ம மரணம் பிரிவின் கீழ் தொடரப்பட்ட வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட உள்ளது.
மேலும் 4 பேர் மரணம் தொடர்பாக லோகநாதனின் தாயார் தேவகி, தந்தை சண்முகம் ஆகியோரை பிடித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள். லோகநாதனின் அக்காள் ரேணுகா, அவரது கணவர் முருகேசன் ஆகியோரை தேடி வருகிறார்கள்.
போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் கள்ளக்காதல் விவகாரத்தில் நதியாவும், அவரது குழந்தைகளும் கொலை செய்யப்பட்டது தெரிய வந்துள்ளது. லோகநாதனுக்கும், அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. இதை நதியா தட்டிக்கேட்டார் இதற்கு உதவியாக லோகநாதனின் குடும்பத்தினர் இருந்து உள்ளனர். லோகநாதன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த பெண்ணை நேரில் சென்று நதியா தட்டிக்கேட்ட விவரம் லோகநாதனுக்கு தெரிய வந்துள்ளது.
இதனால் அவரும், அவரது உறவினர்களும் இணைந்து நதியாவையும், அவரது மகன்களையும் கிணற்றில் தள்ளி கொலை செய்தது தெரியவந்தது. #tamilnews
காஞ்சீபுரத்தை சேர்ந்தவர் முருகானந்தம். கியாஸ் சிலிண்டர் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது மனைவி சுஷ்மிதா. இவர்களது வீட்டில் ஆந்திராவை சேர்ந்த மகாலட்சுமி (19) என்ற இளம்பெண் வேலை பார்த்து வந்தார்.
முருகானந்தத்துக்கு சொந்தமான வீடு சென்னை அடையாறு பெசன்ட் அவென்யூவில் உள்ளது. இங்கு நேற்று முருகானந்தம்- சுஷ்மிதா தம்பதி வேலைக்கார பெண் மகாலட்சுமியுடன் வந்தனர்.
கணவன்-மனைவி இருவரும் வெளியே சென்று விட்டு வீட்டுக்கு திரும்பி வந்த போது மகாலட்சுமி உடலில் காயங்களுடன் கிடந்தார். ரத்த கட்டு காயங்களும் தோல் வெந்த நிலையிலும் இருந்தன. உடனே அவரை மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி மகாலட்சுமி இறந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த அடையாறு உதவி கமிஷனர் ஆரோக்கிய ரவீந்திரன் மற்றும் சாஸ்திரி நகர் போலீசார் விசாரணை நடத்தினர். இறந்த மகாலட்சுமி உடலை பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி தொழில் அதிபர் முருகானந்தம் அவரது மனைவி சுஷ்மிதாவிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் கூறும் போது, சென்னைக்கு வரும் போதே மகாலட்சுமி உடல் நலம் இல்லாமல் இருந்தார்.
இதனால் அவருக்கு வீட்டிலேயே வைத்து டிரிப்ஸ் ஏற்றப்பட்டு மருத்துவ சிகிச்சை அளித்தோம். வெளியில் சென்று திரும்பி வந்து பார்த்த போது அவரது உடல் நிலை மோசமடைந்து இருந்தது என்றனர். ஆனால் மகாலட்சுமி உடலில் காயங்கள் இருப்பதால் போலீசார் மர்மசாவு என்று வழக்குபதிவு செய்துள்ளனர்.
மேலும் மகாலட்சுமிக்கு டிரிப்ஸ் மூலம் உடலில் மருந்து ஏற்றப்பட்டபோது தவறான மருந்து செலுத்தியதால் இறந்தாரா என்ற சந்தேகம் போலீசாருக்கு ஏற்பட்டு இருக்கிறது.
இது தொடர்பாக சிகிச்சை அளித்த நர்சிடம் விசாரணை நடத்தபடுகிறது. மேலும், முருகானந்தம்-சுஷ்மிதா தம்பதியிடமும் விசாரணை நடந்து வருகிறது. இதற்கிடையே வேலைக்கார பெண் மகாலட்சுமி கொலை செய்யப்பட்டதாகவும், பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டதாகவும் தகவல் வெளியானது. ஆனால் அதை போலீசார் மறுத்தனர்.
இங்கிலாந்து கால்பந்து வீரர்கள் ஓய்வு இடைவேளையில் தங்களது குடும்பத்தினரை சந்திக்க அந்த அணியின் பயிற்சியாளர் காரெத் சவுத்கேட் அனுமதி அளித்துள்ளார்.
இங்கிலாந்து முன்னணி வீரர் ஜாமி வார்டின் மனைவி ரெபிகா, உலக கோப்பை போட்டியில் கணவரின் ஆட்டத்தை நேரில் பார்த்து உற்சாகப்படுத்துவதற்காக 4 குழந்தைகளுடன் தனிவிமானத்தில் ரஷியாவுக்கு வந்துள்ளார். அவர் தங்கியுள்ள நட்சத்திர ஓட்டலின் தினசரி வாடகை ரூ.22,500 ஆகும். மேலும் தனது குடும்பத்தினரின் பாதுகாப்பு பணியை கவனிக்கும் ஊழியர்களுக்கு தினமும் ரூ.90 ஆயிரம் சம்பளமாக வழங்குகிறார். 12 நாட்கள் ரஷியாவில் தங்கும் அவர் ஏறக்குறைய ரூ.1½ கோடிவரை செலவிடுவார் என்று தெரிகிறது.
காளையார்கோவில் கஸ்தூரிபாய் கிழக்கு தெருவைச் சேர்ந்தவர் செந்தில்(வயது 35). மீன் வியாபாரம் செய்து வருகிறார். இவருடைய மனைவி தமிழ்ச்செல்வி(30). இவர்களுக்கு தர்ஷன்(7) என்ற மகனும், தர்ஷினி(5) என்ற மகளும் உள்ளனர். கணவன்-மனைவி இடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு குடும்ப பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அடிக்கடி ஏற்பட்டு வந்த பிரச்சினையால் தமிழ்ச்செல்வி கோபித்துக்கொண்டு கணவரை பிரிந்து சாலைகிராமம் அருகே வலசகாடு கிராமத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு குழந்தைகளுடன் சென்றுவிட்டார்.
இந்தநிலையில் குழந்தைகளை பள்ளிக்கூடத்தில் சேர்ப்பதற்காக சான்றிதழ் வாங்க வேண்டியிருந்தது. இதற்காக காளையார்கோவிலுக்கு தமிழ்ச்செல்வி தனது கணவர் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது அங்கிருந்த செந்திலுக்கும், தமிழ்ச்செல்விக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த செந்தில் வீட்டில் இருந்த கத்தியால் தமிழ்ச்செல்வி சரமாரியாக குத்திவிட்டு தப்பியோடிவிட்டார். கத்திக்குத்தில் படுகாயமடைந்த தமிழ்ச்செல்வி சம்பவ இடத்திலேயே இறந்துபோனார்.
பின்னர் அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து காளையார் கோவில் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் விரைந்து வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன் மற்றும் போலீசார், தமிழ்ச்செல்வியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிவகங்கை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், தப்பியோடிய செந்திலை வலைவீசி தேடி வருகின்றனர்.
கம்போடியா நாட்டில் அடுத்த மாதம் 29-ந் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடக்கிறது. இதில் அந்நாட்டின் இளவரசரும், முன்னாள் பிரதமருமான நோரோடோம் ரனாரித் தனிக்கட்சி தொடங்கி போட்டியிடுகிறார். இவர் கம்போடிய மன்னர் சிஹாமோனியின் ஒன்றுவிட்ட சகோதரர் ஆவர். தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவதற்காக ரனாரித் மற்றும் அவருடைய மனைவி அவுக் பால்லா(வயது 39) இருவரும் நேற்று பிரீச் ஷிஹானுக் மாகாணத்திற்கு ஒரு காரில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது எதிரே வந்த வாடகை கார் அவர்கள் பயணித்த கார் மீது பயங்கரமாக மோதியது. இதில் ரனாரித்தும், அவுக் பால்லாவும் படுகாயம் அடைந்தனர். இருவரும் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில் சில மணி நேரத்துக்கு பின்பு அவுக் பால்லா சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். ரனாரித் 1993-ம் ஆண்டு முதல் 1997-ம் ஆண்டு வரை கம்போடியாவில் பிரதமராக பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. #Combodia #PrinceRanariddh #Tamilnews
மேட்டுப்பாளையம் அருகே உள்ள வன பத்ரகாளியம்மன் கோவில், நெல்லித்துறை பாலம், மேட்டுப்பாளையம் பவானி ஆற்று பாலம் ஆகிய பாலங்களை தொடும் அளவிற்கு வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது.
நேற்று அமாவாசை என்பதால் கோவிலுக்கு பக்தர்கள் அதிக அளவில் வந்தனர். பக்தர்களின் நலன் கருதி கோவில் நிர்வாகம் சார்பில் அரை மணி நேரத்திற்கு ஒரு முறை சைரன் மூலம் ஒலி எழுப்பியும், ஒலி பெருக்கி மூலமும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.
மேலும் ஆற்றின் கரையோர பகுதிகளில் தீயணைப்பு துறையினரும், கோவில் பணியாளர்களும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். பவானி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானி சாகர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்து உள்ளது.
மேட்டுப்பாளையம் அருகே தமிழக - கேரள எல்லையில் அட்டப்பாடி கிராமம் உள்ளது. இங்கு பாலக்காடு மாவட்டம் பட்டிமாளம் பகுதியை சேர்ந்த சுகுணன் (70), அவரது மனைவி வல்சம்மா (65) ஆகியோர் ஒரு ஏக்கர் நிலத்தில் மரவள்ளி கிழங்கு விவசாயம் செய்து வருகின்றனர்.
இவர்களது தோட்டத்துக்கு பவானி ஆற்றை கடந்து தான் செல்ல வேண்டும். கடந்த 8-ந் தேதி இவர்கள் தோட்டத்தில் இருந்த போது பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
உடனே இருவரும் வெளியேற முயன்றும் முடியவில்லை. ஆற்றின் நடுவில் உள்ள மணல் திட்டில் நின்று கொண்டனர். இந்த நிலையில் பில்லூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டதால் பவானி ஆற்றில் நீர் வரத்து அதிகரித்தது.
இவர்கள் இருவரும் சிக்கி கொண்டது யாருக்கும் தெரியவில்லை. செல்போனும் இல்லாததால் யாரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை.
இந்த நிலையில் அப்பகுதி மக்கள் ஆற்றின் மறு கரையில் நின்று பார்த்த போது கணவன்-மனைவி ஆற்றின் நடுவே உள்ள மண் திட்டில் அமர்ந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து அட்டபாடி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து சென்றனர். தீயணைப்பு வீரர்கள் இரு மரங்களுக்கிடையே கயிறு கட்டி கணவன்-மனைவியை மீட்டனர்.
6 நாட்களாக தவித்த தம்பதிகள் மீட்கப்பட்டதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். சாப்பிடாமல் சோர்வுற்று இருந்ததால் அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
கோவை மாவட்டம் வால்பாறையில் 8-வது நாளாக இன்றும் மழை பெய்து வருகிறது. இதனால் பள்ளி செல்லும் மாணவர்கள் பெரிதும் அவதியடைந்தனர். கோவை மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் நேற்று இரவு பலத்த மழை பெய்தது.
இன்று காலையும் மழை நீடித்தது. இதனால் காந்திபுரம், சிங்கா நல்லுர், கவுண்டம் பாளையம் உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளில் சாலையில் மழை நீர் தேங்கி நின்றது.
மழை காரணமாக பள்ளி செல்லும் மாணவ- மாணவிகள் அவதிப்பட்டனர்.
கோவை மாவட்டத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு-
பீளமேடு விமான நிலையம்-1, மேட்டுப்பாளையம்-2, பொள்ளாச்சி- 25, பெரிய நாயக்கன் பாளையம்-4, கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகம்-4.60, சின்கோனா-120, சின்னக் கல்லார்-116, வால்பாறை ( பரம்பிக்குளம்- ஆழியாறு திட்டம்) -97, வால்பாறை தாலுகா அலுவலகம்- 107, கோவை தெற்கு - 3. மாவட்டம் முழுவதும் மொத்தம் 479.60 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.
நெல்லை அருகே உள்ள சுத்தமல்லி வ.உ.சி.நகரைச் சேர்ந்தவர் ஜாகீர் உசேன்(வயது55). இவரது மனைவி சுபேதாபானு (45). இவர்கள் சுத்தமல்லி பஜாரில் ஓட்டல் நடத்தி வருகிறார்கள். நேற்று முன்தினம் 6 பிரியாணி பார்சல் விற்பனை செய்த போது, அதில் சிக்கன் பீஸ் இல்லை என்று ஒரு கும்பல் தகராறு செய்தது. இதில் வாக்குவாதம் முற்றி ஜாகீர்உசேனையும், அவரது மனைவி சுபேதாபானுவையும் அந்த கும்பல் சரமாரியாக அரிவாளால் வெட்டியது.
இதில் படுகாயமடைந்த 2 பேரும் பாளை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதுதொடர்பாக சுத்தமல்லி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுதா மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதில் சுத்தமல்லி அருகே உள்ள விஸ்வநாதநகரைச் சேர்ந்த சபரி (25), மற்றும் அவரது நண்பர்களும் ஈடுபட்டது தெரியவந்தது.
உடனடியாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி நேற்று இரவு சபரியையும், பேட்டை நரிக்குறவர் காலனியைச் சேர்ந்த சுடலைமுத்து (27) என்பவரையும் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களது நண்பர்கள் 4 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள். #tamilnews
ஜலகண்டாபுரம் அருகே நரியம்பட்டி பகுதியை சேர்ந்தவர் நாகப்பன்(வயது 40). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி மாதம்மாள்(35). இவர்களுக்கு சிவா என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். இவர்கள் 2 பேருக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்ததாக தெரிகிறது.
இதனால் இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். இந்தநிலையில் மனைவி மாதம்மாளுடன் தனிவீட்டில் வசித்துவரும் மகன் சிவாவை, நாகப்பன் சென்று பார்த்து வருவது வழக்கம். இந்தநிலையில் மகன் சிவாவை பார்க்க நாகப்பன் சென்ற போது அங்கு அவன் இல்லை என்று தெரிகிறது. அப்போது அங்கு வந்த மாதம்மாளிடம் சிவா எங்கு என்று கேட்டு தகராறு செய்துள்ளார். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.
உடனே அருகில் இருந்த கட்டையால் நாகப்பனை, மாதம்மாள் அடித்து, அங்கிருந்த திராவகத்தை அவர் மீது வீசினார். இதில் படுகாயமடைந்த நாகப்பன் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து ஜலகண்டாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாதம்மாளை கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள தகரையை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 29), விவசாயி. இவரது மனைவி ரஞ்சிதா (26). இவர்களுக்கு தனுஷ் (9) என்கிற மகனும், ஆர்த்தி (3) என்ற மகளும் உள்ளனர்.
மணிகண்டன் நேற்று காலை தனது நிலத்தில் மூக்கில் ரத்தம் வடிந்த நிலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதைப் பார்த்த சிலர் இதுபற்றி சின்னசேலம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ரஞ்சிதா மற்றும் அக்கம்பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது ரஞ்சிதா முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்ததால் அவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில், அவர் தனது கணவரை கள்ளக்காதலன் ஆறுமுகம் (43) மற்றும் 18 வயது சிறுவனுடன் சேர்ந்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.
இதையடுத்து மணிகண்டனின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். போலீசார் விசாரணையில் கிடைத்த தகவல் வருமாறு:-
மணிகண்டன் தனது நிலத்தை ஆறுமுகம் என்பவருக்கு குத்தகைக்கு விட்டிருந்தார். இதனால் ஆறுமுகத்துக்கும், மணிகண்டனின் மனைவி ரஞ்சிதாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. அவர்கள் 2 பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து, தங்களது கள்ளக்காதலை வளர்த்துவந்தனர்.
இவர்களது கள்ளக்காதல் விவகாரம் மணிகண்டனுக்கு தெரியவந்ததும் அவர் தனது மனைவியை கண்டித்தார். ஆறுமுகத்திடம் குத்தகைக்கு விட்டிருந்த நிலத்தையும் மீட்டார். இதுதொடர்பாக கடந்த பிப்ரவரி மாதம் இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது. இதுகுறித்து மணிகண்டன் சின்னசேலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீசார் ஆறுமுகத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஜாமீனில் வெளியே வந்த பின்னரும் ஆறுமுகத்துக்கும், ரஞ்சிதாவுக்கும் இடையே கள்ளத்தொடர்பு தொடர்ந்தது. மணிகண்டன், மனைவியை மீண்டும் கண்டித்ததால் அவரை தீர்த்துக்கட்ட ரஞ்சிதா முடிவு செய்தார்.
அதன்படி நேற்று முன்தினம் இரவு வீட்டில் மணிகண்டனுக்கு ரஞ்சிதா மதுவில் அதிக தூக்க மாத்திரைகளை கலந்துகொடுத்தார். மணிகண்டன் அந்த மதுவை அருந்திய சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தார். பின்னர் தனது கள்ளக்காதலன் ஆறுமுகம், 18 வயது சிறுவன் ஆகியோரை வரவழைத்து, அவர்களுடன் சேர்ந்து தலையணையால் அமுக்கி மணிகண்டனை கொலை செய்தார். உடலை அவரது நிலத்தில் வைத்துவிட்டு வந்தது தெரிந்தது.
இதையடுத்து ரஞ்சிதா, கள்ளக்காதலன் ஆறுமுகம் மற்றும் 18 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்