search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மனுதாக்கல்"

    ரபேல் விவகாரத்தில் மத்திய அரசு தவறான தகவல்களை தெரிவித்து தனக்கு சாதகமான தீர்ப்பை பெற்றதாக, சுப்ரீம் கோர்ட்டில் யஷ்வந்த் சின்கா உள்ளிட்டோர் மனு தாக்கல் செய்து உள்ளனர். #Rafale #YashwantSinha
    புதுடெல்லி:

    பிரான்ஸ் நாட்டிடம் இருந்து இந்திய விமானப்படைக்கு ரபேல் போர் விமானங்கள் வாங்க மத்திய அரசு ஒப்பந்தம் மேற்கொண்டதில் ஊழல் நடந்ததாக கூறி முன்னாள் மத்திய மந்திரிகள் யஷ்வந்த் சின்கா, அருண் ஷோரி, வக்கீல் பிரசாந்த் பூஷண் ஆகியோர் தொடர்ந்த வழக்கை சுப்ரீம் கோர்ட்டு கடந்த டிசம்பர் 14-ந்தேதி தள்ளுபடி செய்து தீர்ப்பு கூறியது.

    இந்த நிலையில், அந்த ஒப்பந்தம் தொடர்பாக பத்திரிகையில் வெளியான புதிய ஆவணங்களின் அடிப்படையில், ஏற்கனவே வழங்கிய தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரி அவர்கள் சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும் வழக்கு தொடர்ந்து உள்ளனர். இந்த வழக்கை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது.

    இந்த வழக்கு தொடர்பாக மத்திய அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், பத்திரிகையில் வெளியான தகவல் முழுமை இல்லாதது என்றும், மேலும் அந்த தகவல் சட்டவிரோதமாக பெறப்பட்டது என்றும், எனவே மறுஆய்வு மனுவை தள்ளுபடி செய்யவேண்டும் என்றும் கூறப்பட்டு இருந்தது.

    இந்த மனுவுக்கு யஷ்வந்த் சின்கா உள்ளிட்ட 3 பேர் சார்பிலும் நேற்று சுப்ரீம் கோர்ட்டில் எதிர்பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    அதில் ரபேல் ஒப்பந்தம் தொடர்பான சில உண்மைகளை மறைத்து, தவறான தகவல்களை தெரிவித்து அதன் அடிப்படையில் மத்திய அரசு தனக்கு சாதகமான தீர்ப்பை பெற்று இருப்பதாகவும், எனவே அந்த தீர்ப்பை மறுஆய்வு செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டு உள்ளது.

    இந்த எதிர்பதில் மனுவுக்கு பதில் அளிக்கும் வகையில் மத்திய அரசின் சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், உண்மைகளை மறைத்து தவறான தகவல்களின் அடிப்படையில் அரசு தனக்கு சாதகமான தீர்ப்பை பெற்றதாக கூறுவது முற்றிலும் உண்மைக்கு மாறானது, அடிப்படை இல்லாதது என்றும், பத்திரிகையில் வெளியான சில குறிப்பிட்ட தகவல்களின் அடிப்படையில் தவறான எண்ணத்தில் மறுஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டு இருப்பதாகவும் கூறப்பட்டு இருக்கிறது.

    பொய்யான தகவல்கள் வெளியாக காரணமாக இருந்து கோர்ட்டை தவறாக வழிநடத்தியதற்காக அடையாளம் தெரியாத அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் மனுவில் கூறப்பட்டு உள்ளது.

    யஷ்வந்த் சின்கா உள்ளிட்டோரின் மறுஆய்வு மனு இன்று (வெள்ளிக்கிழமை) மீண்டும் விசாரணைக்கு வருகிறது. #Rafale #YashwantSinha
    சபரிமலை விவகாரம் தொடர்பான சுப்ரீம் கோர்ட் ஆணைக்கு எதிரான மேல்முறையீட்டு மனு மீது பிப்ரவரி 6ம் தேதி விசாரணை நடைபெறுகிறது. #Sabarimala
    புதுடெல்லி:

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டுமென்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
     
    சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை அமல்படுத்த கேரள அரசு நடவடிக்கை எடுத்தது. இதனைக் கண்டித்து ஐயப்ப பக்தர்கள் போராட்டம் நடத்தினர். மேலும் கேரள ஐகோர்ட்டிலும் இது தொடர்பாக பலர் வழக்கு தொடர்ந்தனர்.

    சபரிமலை கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டுமென்ற சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை மறு ஆய்வு செய்யக்கோரி ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டில் ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

    இதற்கிடையே, அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பதற்கு எதிராக தேசிய ஐயப்ப பக்தர்கள் சங்கத்தினர் சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்திருந்தனர்.
      
    இந்த மனு பிப்ரவரி 6ம் தேதி விசாரிக்கப்படும் என்றும், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் நாரிமன், கான்வில்கர், சந்திரசூட், மல்ஹோத்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணை நடத்தும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. #Sabarimala
    தலைமைச் செயலகத்தில் கோவில் கட்டி யாகம் நடத்தியது தொடர்பாக, துணை முதல்-அமைச்சர் ஓபிஎஸ், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆகியோர் மீது ஐகோர்ட்டில் இன்று மனுதாக்கல் செய்யப்பட்டது. #OPSYagam
    சென்னை:

    தமிழக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், தலைமைச் செயலகத்தில் உள்ள அவரது அறையில், நள்ளிரவில் சிறப்பு யாகம் நடத்தியதாகவும், முதலமைச்சர் பதவியை கைப்பற்ற இந்த யாகத்தை நடத்தியதாகவும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டினார். இது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
     
    இதற்கிடையே, மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், 
    தலைமைச் செயலகத்தில் உள்ள என்னுடைய அறையில் சாமி கும்பிடுவது வழக்கம், அதுபோல சாமி கும்பிட்டேன். யாகம் நடத்தவில்லை என்றார்.



    இந்நிலையில், தலைமைச் செயலகத்தில் கோவில் கட்டி யாகம் நடத்தியது தொடர்பாக, துணை முதல்-அமைச்சர் ஓ பன்னீர்செல்வம், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆகியோர் மீது ஐகோர்ட்டில் இன்று மனுதாக்கல் செய்யப்பட்டது.

    இதுதொடர்பாக, ஆனூர் ஜெகதீசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று மனுதாக்கல் செய்துள்ளார். அதில், உயர் நீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் வகையில் நடந்ததையொட்டி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். #OPSYagam
    மேகதாது விவகாரத்தில் கர்நாடக அரசு தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் கூறப்பட்டவை அப்பட்டமான பொய் என தமிழக அரசு தரப்பில் எதிர் பதில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. #MekedatuDam #SC
    புதுடெல்லி:

    காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்னும் இடத்தில் அணை கட்ட கர்நாடக அரசு முடிவு செய்தது. மேகதாதுவில் அணை திட்ட சாத்தியக்கூறு அறிக்கைக்கு மத்திய நீர்வள ஆணையம் ஒப்புதல் அளித்தது.

    இதை எதிர்த்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தது. இந்த மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் டிசம்பர் 12-ந் தேதி விசாரணைக்கு வந்தபோது 4 வாரத்தில் பதில் அளிக்க மத்திய அரசுக்கும், கர்நாடக அரசுக்கும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    அதன்படி கர்நாடக அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், மேகதாது அணைத்திட்டம் செயல்படுத்தப்பட்டால் தமிழகத்துக்கு எந்த வகையில் காவிரியில் இருந்து நீர் குறையும் என்பதை ஆதாரத்துடன் நிரூபிக்க முடியாமல் ஊகத்தில் மட்டுமே இந்த மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றும் கூறப்பட்டது.

    மத்திய அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், தமிழக அரசு ஊகத்தின் அடிப்படையில் மனுதாக்கல் செய்துள்ளதாகவும், அந்த மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

    இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர் தலைமையிலான அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. கர்நாடக அரசு தரப்பில் அரசு வக்கீல் ஆஜராகி, கர்நாடக அரசு வரைவு செயல்திட்டத்தை அனைத்து விவரங்களுடன் மத்திய அரசுக்கு தாக்கல் செய்து உள்ளது. அது தொடர்பான பிரமாண பத்திரத்தை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்திருக்கிறது. எனவே தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

    இதற்கு தமிழக அரசு தரப்பில், கர்நாடக அரசு தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தின் மீது பதில் மனுதாக்கல் செய்ய 4 வாரகால அவகாசம் தேவை என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. அதே போல மத்திய அரசும் அவகாசம் கேட்டு கோரிக்கை வைத்தது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் தமிழக அரசு, மத்திய அரசுக்கு 4 வார கால அவகாசம் அனுமதித்து வழக்கை ஒத்திவைத்து உத்தரவு பிறப்பித்தனர்.

    இதற்கிடையில் நேற்று பிற்பகல் கர்நாடக அரசின் பதில் மனு மீது தமிழக அரசு தரப்பில் நேற்று எதிர் பதில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது:-

    காவிரி மேலாண்மை ஆணையத்தின் அனுமதி பெறாமல் மேகதாதுவில் அணை கட்டுவது தொடர்பாக மத்திய அரசுக்கு வரைவு செயல்திட்டத்தை கர்நாடக அரசு தாக்கல் செய்து இருப்பது காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக காவிரி நடுவர் மன்றம் மற்றும் சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவுக்கு எதிரானது.

    கர்நாடக அரசு மேகதாது தொடர்பான சாத்தியக்கூறு அறிக்கையில், இரு மாநிலங்களுக்கும் தண்ணீர் தேவையான அளவில் பங்கீடு செய்து கொள்வதற்கே இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்று கூறியுள்ளது அப்பட்டமான பொய். பெருமளவு தண்ணீரை தங்கள் பக்கத்தில் தேக்கி வைத்து கொள்வதற்கான முயற்சியாகவே இந்த திட்டத்தை செயல்படுத்த கர்நாடக அரசு முயற்சிக்கிறது. இது காவிரி நடுவர் மன்றம் மற்றும் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை அவமதிக்கும் செயலாகும். எனவே தமிழக அரசின் மனுவை ஏற்றுக் கொண்டு கர்நாடக அரசு மீது கோர்ட்டு அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    அதேபோல் மத்திய அரசு தாக்கல் செய்த பதில் மனுவில் கூறப்பட்டுள்ள அனைத்தையும் மறுத்து தமிழக அரசு தரப்பில் மற்றொரு எதிர் பதில் மனு நேற்று தாக்கல் செய்யப்பட்டது. #MekedatuDam #SC

    திருவாரூர் இடைத்தேர்தலை ரத்து செய்ய தலைமை தேர்தல் ஆணையருக்கு அதிகாரம் இல்லை என உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. #TiruvarurBypoll #HighCourt
    மதுரை:

    திருவாரூர் சட்டசபை தொகுதி உறுப்பினராக இருந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி மரணம் அடைந்ததால், அந்த தொகுதிக்கு வரும் 28-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

    தி.மு.க. சார்பில் பூண்டி கலைவாணனும், அ.ம.மு.க. சார்பில் எஸ்.காமராஜும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டனர்.

    இதற்கிடையே, திருவாரூரில் இன்னும் புயல் நிவாரண பணிகள் முழுமையாக முடிவடையவில்லை. மக்களும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை. எனவே திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என்று அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்தன.

    இதைத்தொடர்ந்து, திருவாரூர் தொகுதிக்கு அறிவிக்கப்பட்டு இருந்த இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. 

    இந்நிலையில், திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக திருமங்கலத்தை சேர்ந்த தாமோதரன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இன்று மனுதாக்கல் செய்துள்ளார்.

    அந்த மனுவில், அறிவிக்கப்பட்ட இடைத்தேர்தலை ரத்து செய்ய தலைமை தேர்தல் ஆணையருக்கு அதிகாரம் இல்லை. தேர்தலை ரத்து செய்ய மத்திய அரசுடன் கலந்தாலோசித்து அதற்கான ஒப்புதல் பெறவேண்டும்.  இதனால் இடைத்தேர்தலை ரத்து செய்த விதம் சட்டவிரோதம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. விரைவில் இந்த மனு விசாரணைக்கு வரவுள்ளது.  #TiruvarurBypoll #HighCourt
    தெலுங்கானா சட்டசபை தேர்தலில் போட்டியிடும் முதல் மந்திரி வேட்பாளர் சந்திரசேகர ராவ் இன்று கஜ்வெல் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார். #TelanganaAssemblyElections #ChandrashekharRao
    ஐதராபாத்:

    119 தொகுதிகளை கொண்ட தெலுங்கானா மாநில சட்டசபைக்கு டிசம்பர் 7-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. இங்கு ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள டி.ஆர்.எஸ். கட்சி போராடி வருகிறது.

    காங்கிரஸ் கட்சி தெலுங்கு தேசம், இந்திய கம்யூனிஸ்டு கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடிக்கும் முயற்சியில் இறங்கி உள்ளது. இதேபோல் பாஜகவும் களத்தில் இருக்கிறது.



    தெலுங்கானாவில் சோனியா காந்தி பிரசாரம் வரும் 22, 23-ம் தேதிகளில் பிரசாரம் செய்து காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார். இதற்கிடையே, தெலுங்கானா சட்டசபை தேர்தலில் போட்டியிடவுள்ள 65 பேர் கொண்ட முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி நேற்று வெளியிட்டது.

    இந்நிலையில், தெலுங்கானா சட்டசபை தேர்தலில் கஜ்வெல் தொகுதியில் போட்டியிடும் முதல் மந்திரி வேட்பாளர் சந்திரசேகர ராவ் இன்று தனது ஆதரவாளர்களுடன் சென்று வேட்புமனு தாக்கல் செய்தார். #TelanganaAssemblyElections #ChandrashekharRao
    கர்நாடகத்தில் 5 தொகுதிகளுக்கும் நடைபெற உள்ள இடைத்தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்ய நாளை கடைசி நாள் ஆகும். ராமநகர் தொகுதியில் போட்டியிட அனிதா குமாரசாமி இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார். #AnithaKumaraswamy
    பெங்களூரு:

    சிவமொக்கா, மண்டியா, பல்லாரி ஆகிய 3 பாராளுமன்ற தொகுதிகளுக்கும், ராமநகர், ஜமகண்டி ஆகிய 2 சட்டமன்ற தொகுதிகளுக்கும் அடுத்த மாதம்(நவம்பர்) 3-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் தொடங்கி நடைபெற்று வருகிறது. முக்கியமான அரசியல் கட்சிகள் இதுவரை மனு தாக்கல் செய்யவில்லை.

    இந்த நிலையில் மனு தாக்கல் செய்ய நாளை(செவ்வாய்க்கிழமை) கடைசி நாள் ஆகும். காங்கிரஸ், பா.ஜனதா மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகளின் வேட்பாளர்கள் இன்று(திங்கட்கிழமை) மனு தாக்கல் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தேர்தலில் காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்துக் கொண்டுள்ளன.

    அதன்படி ராமநகர், மண்டியா, சிவமொக்கா ஆகிய 3 இடங்களில் ஜனதா தளம்(எஸ்) கட்சியும், ஜமகண்டி, பல்லாரி ஆகிய 2 இடங்களில் காங்கிரசும் போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பா.ஜனதா 5 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்துகின்றன.

    இடைத்தேர்தல் பணிகளை கவனிக்க காங்கிரஸ் சார்பில் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மண்டியா தொகுதிக்கு மந்திரி கே.ஜே.ஜார்ஜ், சிவமொக்கா தொகுதிக்கு மந்திரி ஆர்.வி.தேஷ்பாண்டே, ராமநகர் தொகுதிக்கு டி.கே.சுரேஷ் எம்.பி. ஆகியோர் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

    மண்டியா, ராமநகர் தொகுதியில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கு ஆதரவு வழங்கும் முடிவை கடுமையாக எதிர்த்து வருகிறார்கள். 50 ஆண்டுகாலமாக தேவேகவுடா குடும்பத்தை எதிர்த்து அரசியல் செய்துவிட்டு, இப்போது திடீரென அக்கட்சிக்கு ஓட்டுப்போடுங்கள் என்று சொன்னால் எப்படி என்று நிர்வாகிகள் கேட்கிறார்கள். அதற்கு காங்கிரஸ் தலைவர்கள், இது கட்சி மேலிடத்தின் முடிவு, அதை ஏற்று அனைவரும் ஜனதா தளம்(எஸ்) கட்சியை ஆதரிக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளனர்.

    இதற்கிடையே ராமநகர் சட்டமன்ற தொகுதியில் ஜனதா தளம்(எஸ்) கட்சி சார்பில் போட்டியிடும் முதல்-மந்திரியின் மனைவி அனிதா குமாரசாமி இன்று(திங்கட்கிழமை) வேட்புமனு தாக்கல் செய்கிறார்.



    மதியம் 1 மணியில் இருந்து 3 மணிக்குள் மனு தாக்கல் செய்ய அவர் திட்டமிட்டுள்ளார். இதில் முதல்-மந்திரி குமாரசாமி கலந்து கொள்கிறார். இந்த நிலையில் நேற்று தேவேகவுடாவை பெங்களூருவில் உள்ள அவரது இல்லத்தில் அனிதா குமாரசாமி நேரில் சந்தித்து ஆசி பெற்றார்.

    இதேபோல், ஜமகண்டி சட்டமன்ற தொகுதியில், சாலை விபத்தில் மரணம் அடைந்த சித்துநியாமகவுடா எம்.எல்.ஏ. வின் மகன் ஆனந்த் நியாமகவுடா காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து சித்தராமையா 3 நாட்கள் ஜமகண்டியில் தங்கி பிரசாரம் செய்ய உள்ளார். இதற்காக அவர் இன்று(திங்கட்கிழமை) ஜமகண்டிக்கு செல்கிறார். ஜமகண்டியில் பா.ஜனதா சார்பில் ஸ்ரீகாந்த் குல்கர்னி நிறுத்தப்படுகிறார். இவர் கர்நாடக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    சிவமொக்கா தொகுதியில் ஜனதா தளம்(எஸ்) சார்பில் முன்னாள் முதல்-மந்திரி பங்காரப்பாவின் மகன் மது பங்காரப்பா போட்டியிடுகிறார். அவர் இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார். அவருக்கு காங்கிரஸ் ஆதரவு தெரிவித்துள்ளது. அந்த தொகுதியில் பா.ஜனதா சார்பில் எடியூரப்பாவின் மகன் ராகவேந்திரா களம் காண்கிறார். மண்டியா தொகுதியில் ஜனதா தளம்(எஸ்) சார்பில் சிவராமேகவுடா களம் இறங்குகிறார். அந்த தொகுதியில் பா.ஜனதா சார்பில் ஓய்வு பெற்ற அரசு அதிகாரி டாக்டர் சித்தராமையா போட்டியிடுகிறார்.

    ராமநகர் தொகுதியில் ஜனதா தளம்(எஸ்) சார்பில் போட்டியிடும் அனிதா குமாரசாமியை எதிர்த்து, பா.ஜனதா சார்பில் சந்திர சேகர் களம் காண்கிறார். இவர் கடந்த வாரம் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பா.ஜனதாவில் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. பல்லாரி தொகுதியில் பா.ஜனதா சார்பில் முன்னாள் எம்.பி. சாந்தா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

    வேட்பாளர்கள் இன்று மனு தாக்கல் செய்கிறார்கள். பல்லாரி தொகுதியில் காங்கிரஸ் கட்சி இன்னும் தனது வேட்பாளரை அறிவிக்கவில்லை. வேட்புமனு தாக்கலுக்கு பிறகு இடைத்தேர்தல் களம் சூடுபிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #AnithaKumaraswamy


    ×