search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆபத்து"

    ஓட்டுப்பதிவு எந்திரங்களுக்கு எலிகளால் ஆபத்து என்றும் அறையை சுற்றிலும் கம்பி வலை வேலி அமைக்க வேண்டும் என்றும் நரேந்திர சிங் கோரிக்கை விடுத்துள்ளார்.
    மதுரா:

    உத்தரபிரதேச மாநிலம் மதுரா தொகுதியில் பா.ஜனதா வேட்பாளர் நடிகை ஹேமமாலினிக்கு எதிராக சமாஜ்வாடி கூட்டணி சார்பில் ராஷ்டிரீய லோக்தளம் வேட்பாளர் நரேந்திர சிங் போட்டியிடுகிறார். கடந்த மாதம் 18-ந் தேதியே அங்கு ஓட்டுப்பதிவு முடிந்துவிட்டது.
    ஓட்டுப்பதிவு எந்திரங்கள், மதுராவில் மண்டி சமிதி பகுதியில் உள்ள பாதுகாப்பு பெட்டக அறையில் வைக்கப்பட்டுள்ளன.

    இந்நிலையில், ஓட்டுப்பதிவு எந்திரங்களுக்கு எலிகளால் ஆபத்து என்று நரேந்திர சிங் பீதியை கிளப்பி உள்ளார். எனவே, அறையை சுற்றிலும் கம்பி வலை வேலி அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். இதையடுத்து, அந்த அறையை நேற்று 3-வது நாளாக மாவட்ட கலெக்டர் சர்வக்ய ராம் மிஸ்ரா பார்வையிட்டார். பிறகு அவர் கூறுகையில், “எலிகளால் ஓட்டுப்பதிவு எந்திரங்களுக்கு எந்த ஆபத்தும் கிடையாது. வெளியாட்களை அனுமதிக்கக்கூடாது என்று மத்திய பாதுகாப்பு படைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்றார். 
    இதயநோய் தொடர்பாக சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் அதிக நேரம் தூங்குவதாலும் இதய நோய் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாக தெரியவந்துள்ளது.
    லண்டன்:

    ஜெர்மனியின் முனிச் நகரில் இதய நோய் தொடர்பாக ஆய்வுகள் நடத்தப்பட்டது. இந்த ஆய்வு குறித்து மருத்துவ நிபுணர் எபாமேனோண்டஸ் ஃபௌண்டாஸ் கூறுகையில், 10 லட்சம் இளைஞர்களிடம் நடத்தப்பட்ட 11 ஆய்வுகள் மூலம் குறைவாக தூங்குவதால் இதயநோய் வருவது போன்று தொடர்ந்து அதிகமாக தூங்கினாலும் இதயநோய் வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

    மேலும், எந்த காரணிகளால் இதயம் பாதிக்கப்படும் என்பதை கண்டறிய இன்னும் பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    தற்போதைய ஆய்வின்படி, குறைவாக தூங்குபவர்களுக்கு 11 சதவிகிதம் இதயநோய் தாக்குவதற்கான வாய்ப்புகள் இருக்கும் நிலையில், தொடர்ந்து அதிகமாக தூங்குபவர்களுக்கு 33 சதவிகிதம் அதாவது 3 மடங்கு அதிகமாக இதயநோய் தாக்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் என தெரியவந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார். 
    உடல் பருமன் மற்றும் சர்க்கரை நோய் உடையவர்கள் சர்க்கரைக்கு பதிலாக செயற்கை சுவையூட்டிகளை உபயோகித்து வருகின்றனர். அது சர்க்கரையை விட மிகவும் ஆபத்து என ஆயுர்வேத நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். #ArtificialSweetener
    புதுடெல்லி:

    சர்க்கரை நோய் உலகளாவிய, அனைவரும் எதிர்கொள்ளும் நோய்களில் ஒன்றாகிவிட்டது. இன்றைய கால உணவு முறை அதற்கான மிக முக்கிய காரணங்களில் ஒன்று. சர்க்கரை நோய் உடையவர்கள் இனிப்பான எதையும் சாப்பிட கூடாது என்பது ஆங்கில மருத்துவர்களின் முதல் எச்சரிக்கை ஆகும்.

    இதனால், வாழ்நாள் முழுவதும் அவர்கள் இனிப்பை தொடாமல் இருக்க மிகவும் முயற்சி செய்து வருகின்றனர். இந்த பிரச்சனைக்கு தீர்வாக அவர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டதுவே செயற்கை சுவையூட்டி. கலோரீஸ் ஃப்ரீ என சொல்லப்படும் இந்த இனிப்பு சுவை அளிக்கும் செயற்கை சுவையூட்டிகள், முழுக்க முழுக்க வேதிப்பொருட்களால் தயாரிக்கப்படுகின்றன.

    இது தற்போது அனைவரும் உபயோகித்து வருகின்றனர். மிகவும் பிரபலமடைந்து வரும் இந்த செயற்கை சுவையூட்டியை குழந்தைகள் பெரியவர்கள் என அனைவரும் உபயோகித்து வருகின்றனர்.



    இந்நிலையில், சர்க்கரை நம் உடலுக்கு தரும் ஆபத்துக்களை விட இந்த செயற்கை சுவையூட்டிகளால் ஆபத்துக்கள் அதிகம் என ஆயுர்வேத நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த செயற்கை சுவையூட்டிகள் முழுவதும் வேதிப்பொருட்களை பயன்படுத்தி தயாரிக்கப்படுவதால், பின்விளைவுகள் மிகவும் கொடுமையாக இருக்கும் என தெரிவிக்கின்றனர்.

    இந்த செயற்கை சுவையூட்டிகளை உபயோகித்தால், காலப்போக்கில், நாவின் சுவை நரம்புகள் செயலிழந்து சுவை அறிய இயலாமல் போகும். மேலும், அதிகப்படியான செயற்கை சுவையூட்டிகளின் உபயோகத்தால், கண்பார்வை கோளாறு, ஹார்மோன் குறைபாடு, தூக்கமின்மை, பசியின்மை, மூட்டு வலி, கிட்னி செயலிழப்பு, இரத்த அழுத்த குறைபாடு போன்ற பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும் எனவும் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    சுவையூட்டிகளாக மட்டுமன்றி, பிஸ்கட்டுகள் போன்ற பல்வேறு சுகர் ஃப்ரீ அல்லது கலோரீஸ் ஃப்ரீ என்று விற்பனை செய்யும் அனைத்து உணவு பொருட்களிலும் இந்த செயற்கை சுவையூட்டிகள் பயன்படுத்தப்படுவதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி ஆயுர்வேத நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். #ArtificialSweetener
    அசாதாரண சூழல்களாலும், இயற்கை சீற்றங்களாலும் வரும் டிசம்பர் மாதத்திற்குள் தமிழகத்தில் நடந்துவரும் ஆட்சிக்கு பேராபத்து ஏற்படும் என்று சுவாமிகள் சற்குரு சீனிவாச சித்தர் கூறி உள்ளார்.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி கோரம்பள்ளம் அய்யனடைப்பு ஸ்ரீபிரத்தியங்கிராதேவி காலபைரவர் சித்தர் பீடத்தின் சுவாமிகள் சற்குரு சீனிவாசசித்தர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பஞ்சாங்கத்தின் அடிப்படையில் தற்போது நிலவிவரும் கிரக சூழ்நிலைகள் மற்றும் தோ‌ஷங்களின் அடிப்படையில் தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே விரும்பத்தகாத நிகழ்வுகள் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. இந்த வருடத்தில் இதுபோன்ற பேரழிவிற்கான இயற்கை சீற்றங்கள் நிகழும் என்று முன்கூட்டியே சித்தர்கள் கணித்துள்ளனர்.

    கிரக சூழ்நிலைகளால் தமிழ்க்கடவுள் முருகப்பெருமானின் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் முருகன் கோவிலின் மேற்கூரை திடீரென்று உடைந்து விழுந்தது. திருச்செந்தூரில் நிகழ்ந்த இந்த விபரீத சம்பவத்தை தொடர்ந்து தமிழகத்திலுள்ள பல்வேறு ஆன்மீக சிறப்புபெற்ற கோவில்களிலும் இதுபோன்ற அசம்பாவித நிகழ்வுகள் அரங்கேறி வருவது தொடர்கதையாகி விட்டது மிகுந்த மனவருத்தம் அளிக்கிறது.



    ஆன்மீக சிறப்புபெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவில் வளாகத்தில் மிகப்பெரும் தீவிபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் வரலாற்று சிறப்புமிக்க கோவில் சேதமடைந்தது பக்தர்கள் மனதில் மிகுந்த காயத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்தமிழகத்தில் மிகவும் சிறப்புபெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவால் வழங்கப்பட்ட யானை மசினி தன்னை வளர்த்து பராமரித்த பாகனையே திடீரென்று கோவில் வளாகத்தில் தாக்கி மிதித்து கொன்றுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. ஸ்ரீரங்கம் கோவில் வசந்த மண்டபத்தில் தீ விபத்து ஏற்பட்டது.

    ஆன்மீக சிறப்புபெற்ற ஸ்தலங்களில் எல்லாம் தொடர்ந்து நிகழ்ந்துவரும் இதுபோன்ற நிகழ்வுகள் பக்தர்கள், ஆன்மீக அன்பர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் தொழிற்சாலைக்கு எதிரான மக்கள் பேரணியில் திடீரென்று கலவரம் வெடித்தது. இந்த கலவரத்தினை தொடர்ந்து போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிர் இழந்துள்ளனர். இந்த சம்பவம் எதிரொலியாக மாவட்டம் முழுவதும் விரும்பத்தகாத நிகழ்வுகள் முடிவில்லாமல் தொடர்ந்து அரங்கேறி வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை அமைதியின்றி முடங்கி போய் கிடக்கிறது.

    கிரகங்களின் மாறுபட்ட கோணத்தாலும், தோ‌ஷங்களாலும் தமிழகத்தில் இந்த வருடத்தில் தீ மற்றும் கடும் மழையால் பெரும் பாதிப்புகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. அதாவது இந்த வருடம் இயற்கை சீற்றங்கள் கடந்த காலங்களை காட்டிலும் மிகவும் அதிகமான அளவில் இருக்கும். இதுபோன்று தற்போது கேரளாவில் பரவிவரும் நிபா வைரஸ் போன்ற கொடிய நோய்களும் தமிழகத்தில் பரவுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. தண்ணீர், தீ மற்றும் கொடிய நோய்களால் ஏற்படும் அழிவிற்கு அறிகுறியாகத்தான் ஆங்காங்கே இதுபோன்ற விரும்பத்தகாத நிகழ்வுகள் நடந்து வருகிறது.

    இதுபோன்ற அசாதாரண சூழல்களாலும், இயற்கை சீற்றங்களாலும் வரும் டிசம்பர் மாதத்திற்குள் தமிழகத்தில் நடந்துவரும் ஆட்சிக்கு பேராபத்து ஏற்படும் அபாயசூழல் ஏற்பட்டிருப்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது. கிரக தோ‌ஷங்களின் அடிப்படையில் அரசியலில் பெரும் மாற்றம் ஏற்படுவது நிச்சயமாகும். இந்த மாற்றம் ஆட்சியை மாற்றினாலும் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.

    தற்போதுள்ள சூழலில் தமிழகத்திலுள்ள கோவில்களில் ஏற்பட்டுவரும் திடீர் திடீர் விபத்துக்களை தடுத்திடவும், வரும் நாட்களில் இயற்கை சீற்றங்கள் ஏற்படுவதை தடுத்திடவும், தமிழகத்தில் அமைதியை நிலைநாட்டவும் அம்பாள் மற்றும் கோவில் வழிபாடுகளை சிறப்பாக மேற்கொள்ளவேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

    அதாவது ஒவ்வொருவரும் தங்கள் பகுதியிலுள்ள கோவில்களுக்கு சென்று அங்கு எழுந்தருளியிருக்கும் அம்பாளை மனம் குளிர ஐந்துமுக நெய் விளக்கேற்றி வழிபடுவது நல்லபலன் தரும். அம்பாள் மற்றும் இயற்கைக்கு உரிய கடவுள் வழிபாடுகளையும், சித்தர் வழிபாடுகளையும் பக்தர்களும், ஆன்மீக அன்பர்களும் திருப்திகரமாக செய்திடும் பட்சத்தில் கிரகதோ‌ஷங்களில் இருந்து ஓரளவிற்கு நிவர்த்தி பெறலாம். இதன்மூலமாக தமிழகமும் எந்தவிதமான ஆபத்துக்களும், வன்முறைகளும் இன்றி அமைதிப்பூங்காவாக திகழ்ந்திடும். மேலும், வரும் நாட்களில் நிகழ இருக்கும் இயற்கை சீற்றங்களின் தாக்குதல்களையும் ஓரளவிற்கு கட்டுக்குள் கொண்டு வரலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ×