search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுகாதாரத்துறை"

    மதுரை அரசு ஆஸ்பத்திரியில் 5 நோயாளிகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சுகாதாரத்துறையிடம் ஆஸ்பத்திரி டீன் விளக்கம் அளித்துள்ளார். #MaduraiGovernmenthospital
    மதுரை:

    அரசினர் ராஜாஜி மருத்துவமனையின் புதிய விரிவாக்க கட்டிடத்தில் தலைக்காய சிகிச்சை பிரிவு இயங்கி வருகிறது. இங்கு கடந்த 7-ந் தேதி இரவு 15 படுக்கைகளிலும் நோயாளிகள் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்தனர்.

    இந்த நிலையில் அன்று மாலை கடும் இடியுடன் கூடிய மழை பெய்தது. பலத்த காற்றுக்கு மரங்களும், மின்கம்பங்களும் சாய்ந்தன. இதனால் மதுரை ஆஸ்பத்திரியில் மாலை 6.20 மணியளவில் மின்சாரம் தடைபட்டது. ஆஸ்பத்திரி முழுவதும் இருளில் மூழ்கியது.

    ஆஸ்பத்திரி ஊழியர்கள் ஜெனரேட்டரை இயக்க முயன்றனர். அது கோளாறு காரணமாக இயங்கவில்லை. இதனால் அவசர சிகிச்சை பிரிவில் வெண்டிலேட்டர் இயங்குவதில் பெரும் சிரமம் ஏற்பட்டது.

    அப்போது அங்கு சிகிச்சை பெற்ற பூஞ்சுத்தியைச் சேர்ந்த மல்லிகா (வயது 55), திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்த பழனியம்மாள் (60), விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த ரவிச்சந்திரன் (52) ஆகிய 3 பேரும் செயற்கை சுவாசம் கிடைக்காததால் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    அதைத்தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த செல்லூர் மீனாம்பாள்புரம் செல்லத்தாய் (வயது 55), பல்லடம் ஆறுமுகம் (48) ஆகியோரும் இறந்தனர். இதனால் இறப்பு எண்ணிக்கை 5 ஆக உயர்ந்தது.

    இதனால் உறவினர்கள் ஆஸ்பத்திரிகளில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    போலீஸ் உதவி கமி‌ஷனர் சசிமோகன் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மருத்துவமனை நிர்வாகத்தின் அலட்சியம் காரணமாகவே 5 பேரும் உயிரிழந்தனர் என்று புகார் தெரிவித்தனர்.

    இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தியும், விளக்கம் அளிக்கவும், சுகாதாரத்துறை, மதுரை ஆஸ்பத்திரி நிர்வாகத்துக்கு உத்தரவிடட்டது.

    இதுகுறித்து அரசு ஆஸ்பத்திரி டீன் வனிதா கூறியதாவது:-

    மதுரை அரசு ஆஸ்பத்திரியின் தீவிர சிகிச்சை பிரிவில் மின்தடை காரணமாக 5 பேர் இறந்ததாக கூறப்படுவது உண்மை அல்ல. எந்த நிர்வாக அலட்சியமும் ஏற்படவில்லை.

    ஆஸ்பத்திரியில் மின்தடை ஏற்பட்ட போதிலும் அங்குள்ள வெண்டிலேட்டர் கருவிகள், பேட்டரியின் உதவியுடன் இயக்கப்பட்டன. 2 மணி நேரம் வரை மின்தடை வந்தாலும் வெண்டிலேட்டர் இயங்கும் அளவுக்கு சக்தி வாய்ந்த பேட்டரிகள் உள்ளன.

    மதுரை அரசு ஆஸ்பத்திரியில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சுகாதாரத்துறை செயலாளருக்கு தகவல் தெரிவித்து உள்ளோம். விரைவில் அறிக்கை அனுப்புவோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #MaduraiGovernmenthospital

    ராஜஸ்தான் மாநிலத்தில் வேகமாக பரவிவரும் பன்றிக்காய்ச்சலால் ஜனவரி முதல் தேதியில் இருந்து இன்றுவரை 75 பேர் உயிரிழந்துள்ளனர். #swineflu #Rajasthanswineflu
    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் மாநிலத்தின் சில மாவட்டங்களில் பன்றிக்காய்ச்சல் நோய் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக, இந்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கி நோயின் வீரியம் அதிகமாக காணப்படுகிறது.

    இந்நிலையில், இந்த ஆண்டில் ஜனவரி முதல் தேதியில் இருந்து 28-ம் தேதிவரை 1911 பேருக்கு பன்றிக்காய்ச்சல் நோய்தாக்கம் உள்ளது என கண்டறியப்பட்டுள்ளதாகவும், இம்மாதத்தில் இதுவரை 75 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அம்மாநிலத்தின் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #swineflu  #Rajasthanswineflu
    மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் கொடுத்த பின்னர் 45 மாதங்களில் மருத்துவமனை செயல்படத் தொடங்கும் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. #MaduraiAIIMS #MaduraiHC
    மதுரை:

    மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்து, அதற்கான பணிகளை தொடங்கி உள்ளது. இது தொடர்பாக மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். அவர் தனது மனுவில், எய்ம்ஸ் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும், எய்ம்ஸ் அமைவதற்கான அனுமதியை அரசிதழில் வெளியிட வேண்டும் எனக் கோரியிருந்தார். இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம், இதுதொடர்பாக மத்திய அரசு  விளக்கம் அளிக்கும்படி கூறியிருந்தது.

    இந்நிலையில், இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய சுகாதாரத்துறை சார்பில் எய்ம்ஸ் பணிகள் தொடர்பாக விளக்கம் அளிக்கப்பட்டது. அதில், மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு நிதிக்குழுவின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தது.


    நிதிக்குழு ஒப்புதல் அளித்ததும் மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் கோரப்படும் என்றும், அமைச்சரவை ஒப்புதல் அளித்தபின்னர் 45 மாதங்களில் எய்ம்ஸ் செயல்படத் தொடங்கும் என்றும் மத்திய சுகாதாரத்துறை கூறியது. இதையடுத்து கே.கே.ரமேஷ் தொடர்ந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது. #MaduraiAIIMS #MaduraiHC
    தமிழகத்தில் டெங்கு, பன்றி காய்ச்சலை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என விளக்கம் அளிக்குமாறு சுகாதாரத்துறைக்கு, மதுரை ஐகோர்ட்டு நோட்டீசு அனுப்பி உள்ளது. #Dengue
    மதுரை:

    மதுரையை சேர்ந்த சமூக ஆர்வலர் ரமேஷ் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த பொது நல மனுவில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தில் தற்போது டெங்கு, சிக்குன்குனியா உள்ளிட்ட உயிரை பாதிக்கும் காய்ச்சல்கள் வேகமாக பரவிவருகிறது. இதில் பாதிக்கப்பட்ட சிலர் உயிரிழந்துள்ளனர். எனவே போர்க்கால அடிப்படையில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அரசு, மருத்துவமனைகளில் போதுமான மருந்து மாத்திரைகள் இருப்பு வைப்பதோடு, சிறப்பு வார்டுகளை ஏற்படுத்த உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

    இந்த வழக்கு நீதிபதிகள், சசிதரன், ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது.


    அப்போது நீதிபதிகள், தமிழகத்தில் டெங்கு மற்றும் பன்றி காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை குறித்தும், டெங்கு-பன்றி காய்ச்சல் நோய் பாதிப்புக்களை தடுக்க அரசு என்ன நடவடிக்கைகள் எடுத்துள்ளது? என்பது குறித்தும் அறிக்கையை வருகிற 20-ந் தேதிக்குள் கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.

    மேலும் தமிழக சுகாதாரத்துறை முதன்மை செயலருக்கு நோட்டீசு அனுப்பவும் உத்தரவிட்டு வருகிற 20-ந் தேதிக்கு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர். #Dengue
    சிறியவர் முதல் பெரியவர் வரை பன்றி காய்ச்சல் பரவுவது எப்படி? என்பது குறித்து சுகாதாரத்துறை இயக்குனர் குழந்தைசாமி விளக்கம் அளித்துள்ளார். #SwineFlu
    சென்னை:

    தமிழகத்தில் பன்றி காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க சுகாதாரத்துறை தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதுகுறித்து பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் குழந்தைசாமி கூறியதாவது:-

    “எச் 1 என்1 எனப்படும் “இன்புளுயன்சா” வைரஸ் கிருமிகளால் இந்த காய்ச்சல் ஏற்படுகிறது. 1920-30களில் இந்த நோய் பன்றிகள் இடையே காணப்பட்டதால் பன்றி காய்ச்சல் என அழைக்கப்பட்டது. இந்நோய் பன்றிகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவுவது இல்லை. தற்போது இந்நோய் பாதிக்கப்பட்ட மனிதனிடம் இருந்து மட்டுமே மற்றவர்களுக்கு பரவுகிறது.

    அக்டோபர், நவம்பர் மாதங்களில் பன்றி காய்ச்சல் வைரஸ் அதிகமாக பரவக்கூடிய காலமாகும். அதனால் அரசு முன் எச்சரிக்கையாக அனைத்து மாவட்டங்களிலும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது. 25 மாவட்டங்களுக்கு சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு பன்றி காய்ச்சல் குறித்து சுகாதாரத்துறை ஊழியர்கள் உஷார்படுத்தப்பட்டு மருத்துவமனைகளில் வார்டுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.


    சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்ட சுற்றுப் பகுதிகளில் பன்றி காய்ச்சலுக்கான அறிகுறிகள் காணப்படுகின்றன. நெல்லை, திருச்சி, வேலூர், மதுரை, கோவை போன்ற மாவட்டங்களிலும் தீவிரமாக கண்காணித்து வருகிறோம்.

    பன்றி காய்ச்சல் தொற்றினால் உயிர் இழப்பு ஏற்படுவது இல்லை. ஏற்கனவே வேறு பல நோய் பாதிப்புகளுக்கு ஆளானவர்களுக்கு பன்றி காய்ச்சல் பாதிப்பும் ஏற்பட்டதால் உயிர் இழப்பு நடந்துள்ளது. பன்றி காய்ச்சல் அறிகுறிகளுடன் 20 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். தனி வார்டுகளில் அவர்களுக்கு சிசிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    பன்றி காய்ச்சல் தொற்றுக்கான அறிகுறிகள் சளி, காய்ச்சல், இருமல், தும்மல், தலைவலி மற்றும் தொண்டை வலியாகும். ஒரு சிலருக்கு மேற்கண்ட அறிகுறிகளுடன் வாந்தி அல்லது வயிற்று போக்கும் ஏற்படலாம்.

    இந்த கிருமி தொற்று ஏற்பட்டவர் இருமும் போது அல்லது தும்மும் போது வெளிப்படும் நீர்த்தி வலைகள் மூலம் நோய் கிருமிகள் காற்றில் பரவுகிறது. இந்த நீர் நிலைகள் படிந்த பொருட்களை தொடும் பொழுது கைகளில் இந்த கிருமி ஒட்டிக் கொள்கிறது. கைகளை கழுவாமல் கண்கள், மூக்கு அல்லது வாயைத் தொடும் போது கிருமி தொற்று ஏற்படுகிறது.

    இன்புளுயன்சா வைரஸ் கிருமிகள் தரைபரப்பு, கதவு மற்றும் மேஜைகள் போன்ற பரப்புகளில் பல மணி நேரம் உயிருடன் இருக்க வாய்ப்பு உள்ளது. குளிர்ந்த இடங்களில் 2 நாட்கள் வரை கூட கிருமிகள் இருக்கலாம். கதவு கைப்பிடிகள், மேஜை பரப்பு, நாற்காலிகள், மின் சுவிட்சுகள், தொலைபேசி போன்றவற்றை தினமும் ஒரு முறையாவது கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்வதன் மூலம் கைகளை கழுவுவதன் மூலமும் நோய் தொற்றை தடுக்கலாம்.


    பன்றி காய்ச்சல் தொற்று ஏற்படாமல் தடுக்க கைகளை அடிக்கடி சோப்பு போட்டு நன்கு கழுவ வேண்டும். வீட்டில் இருந்து பள்ளிக்கோ, அலுவலக பணியிடத்திற்கோ சென்றவுடன் கை கழுவ வேண்டும். அதே போல வீடு திரும்பியவுடன் சோப்பு போட்டு கைகளை நன்கு கழுவ வேண்டும். கைகளை கழுவாமல் மூக்கு, வாய், மற்றும் கண்களை தொடுவதை தவிர்க்க வேண்டும். காய்ச்சல் அறிகுறி உள்ளவர்களிடம் இருந்து சுமார் 1 மீட்டர் இடைவெளி விட்டு விலகி இருக்க வேண்டும்.

    பன்றி காய்ச்சல் குணமாகவும் மேலும் நோய் எதிர்ப்பு சிகிச்சைக்காகவும் OSeltamivir என்கிற சக்தி வாய்ந்த மருந்து உள்ளது. எந்தவிதமான காய்ச்சல் ஏற்பட்டாலும் மருத்துவரை ஆலோசிக்க வேண்டும். எச்1 என் 1 காய்ச்சலாக இருப்பின் அறிகுறிகள் ஏற்பட்டவுடன் இந்த மருந்து உட்கொண்டால் எளிதில் குணப்படுத்தலாம்.

    பன்றி காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டவுடன் மருத்துவ ஆலோசனை பெற்று முறையான சிகிச்சை பெற வேண்டும். மருத்துவ ஆலோசனை இல்லாமல் தாமாகவே மருந்துகள் உட்கொள்ளக் கூடாது. நோயின் அறிகுறிகள் தென்பட்டவுடன் வீட்டிலேயே ஓய்வில் இருக்க வேண்டும். பள்ளி, அலுவலகம் மற்றும் பொது இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்.

    இருமும் போதும், தும்மும் போதும் வாய் மற்றும் மூக்கை கைக்குட்டை அல்லது துணியால் மூடிக் கொள்ளவும். பயன்படுத்திய கைக்குட்டை மற்றும் இதர துணிகளை நன்கு துவைத்து வெயிலில் காய வைத்து பயன்படுத்த வேண்டும்.

    பஸ், ரெயில், மாடிப்படி, எஸ்கலேட்டர், கைப்பிடிகள், கதவு கைப்பிடிகள், டிக்கெட் கவுண்டர்கள், லிப்ட் போன்றவற்றில் உள்ள ஸ்விட்சுகள், திரையரங்குகள், பொது இடங்களில் உள்ள இருக்கைகள் போன்ற அடிக்கடி கைகள் படக்கூடிய இடங்களை அவ்வப்போது கிருமி நாசினி கொண்டு சுத்தமாக துடைக்க வேண்டும்.

    காய்ச்சல் ஏற்பட்டால் உடனடியாக பொது சுகாதாரத்துறையின் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொள்ளலாம். 044-24350 496, 9444340496, 8754448477 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு சிகிச்சை பெற ஆலோசனை பெறலாம்.

    இவ்வாறு அவர் கூறினார். #SwineFlu
    பணிக்காலத்தில் இறந்தவர்களின் வாரிசுகள் சுகாதாரத்துறையில் இளநிலை உதவியாளர்களாக நியமனம் செய்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பணி ஆணை வழங்கினார். #TNCM
    சென்னை:

    தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    அரசு மருத்துவமனைகளில் ஏற்படும் காலிப்பணியிடங்கள் மற்றும் அவ்வப்போது புதிதாக தோற்றுவிக்கப்படும் பணியிடங்களை உடனுக்குடன் நிரப்புவதற்காக மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தால் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் இதர பணியாளர்கள் என இதுவரை 23 ஆயிரத்து 882 பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்பட்டுள்ளனர்.இதுதவிர, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் தேர்வு செய்யப்பட்ட 216 வட்டார சுகாதார புள்ளியியலாளர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். இதன்தொடர்ச்சியாக, பொது சுகாதாரத்துறையில் பணிபுரிந்து, பணிக்காலத்தில் காலமான 42 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில், இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கான பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக, தலைமைச்செயலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, 5 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர், தலைமைச்செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், முதன்மை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து இயக்குனர் டாக்டர் கே.குழந்தைசாமி மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.  #TNCM
    கேரளாவில் இருந்து தென் மாநிலங்களுக்கு. பரவும் நிபா வைரசை கட்டுப்படுத்த தேனி மாவட்ட சுகாதாரத்துறையினர் மெத்தனமாக செயல்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
    கூடலூர்:

    கேரள மாநிலம் கோழிக்கோடு, மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் கடந்த 2 வாரங்களாக ஏராளமானோர் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த 10 பேர்  அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

    சுகாதாரத்துறை அதிகாரிகள் உயிரிழப்புக்கு காரணம் குறித்து ஆய்வு செய்தனர். காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்களின் ரத்த மாதிரி எடுத்து சோதனை நடத்தப்பட்டதில் நிபா என்ற கொடிய வைரஸ் தாக்கியது தெரிய வந்துள்ளது.

    இதனையடுத்து மற்ற பகுதிகளுக்கும் இந்த வைரஸ் காய்ச்சல் பரவாமல் தடுக்க சுகாதாரத்துறையினர் முடுக்கி விடப்பட்டுள்ளனர். கேரளாவில் இருந்து தினசரி ஏராளமானோர் வேலை, வர்த்தகம் மற்றும் கல்வி, சுற்றுலாவிற்காக தமிழகத்திற்கு வருகின்றனர்.

    இதனால் கேரளாவில் இருந்து நிபா வைரஸ் பரவுவதை தடுக்க சுகாதாரத்துறை அதிகாரிகள் முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    மாவட்ட எல்லையில் சுகாதாரத்துறையினர் முகாமிட்டு நோய் பாதிக்கப்பட்ட நபர்களிடம் இருந்து மற்றவர்களுக்கு பரவாமல் தடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    தமிழக கேரள எல்லையில் அமைந்துள்ள தேனி மாவட்டத்தில் கம்பம் மெட்டு, போடி மெட்டு, குமுளி மலைச்சாலை ஆகிய பாதைகள் வழியாக ஏராளமானோர் வந்து செல்கின்றனர். பொதுவாக இதுபோன்ற வைரஸ் காய்ச்சல் பரவும்போது குமுளி மலைச்சாலையில் செக்போஸ்டில் மருத்துவ குழுவினர் முகாமிட்டு சோதனை நடத்துவது வழக்கம்.

    ஆனால் தற்போது அது போன்ற எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளனர். இந்த 3 இடங்களிலும் போலீஸ் மற்றும் வனத்துறை சோதனைச்சாவடிகளும் உள்ளன. தமிழகத்தில் நிபா வைரஸ் பரவ வாய்ப்பு இல்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது. இருப்பினும் தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு பலர் உயிரிழந்துள்ளனர்.

    தற்போது அந்த பீதி அடங்கி உள்ள நிலையில் மீண்டும் ஒரு வைரஸ் காய்ச்சல் அச்சுறுத்தி வருவது பீதியை ஏற்படுத்தி உள்ளது. எனவே மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் இது குறித்து முன்எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
    ×