search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 108818"

    • மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் 3-வது நாள் ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெற்றது.
    • கட்டிட இடிப்பாடுகள் முறையாக அகற்றப்படாமல் உள்ளதால், குட்டையில் மழை நீர்தேங்குவதில் தடை ஏற்பட்டுள்ளது.

    பல்லடம் :

    பல்லடம் தாலுகா அலுவலகத்தில், மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் 3-வது நாள் ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சாமளாபுரம் உள்வட்டம் சாமளாபுரம், இச்சிபட்டி, பூமலூர், வேலம்பாளையம், சுக்கம்பாளையம், செம்மிபாளையம்,கோடங்கிபாளையம், ஆகியவற்றைச் சேர்ந்த பல்வேறு கிராம மக்கள் கலந்துகொண்டு மனு அளித்தனர். இதற்கிடையே கோடங்கிபாளையம் ஊராட்சி சங்கோதி பாளையத்தை சேர்ந்த பொதுமக்கள் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:- பல்லடம் அருகே காரணம்பேட்டை சங்கோதிபாளையத்தில் அரசு நிலத்தை ஆக்கிரமித்து தனியார் நிறுவனத்தினர் மண் கொட்டி பாதை அமைக்க முயற்சித்ததாகவும், இதனை தடுத்து பொதுமக்கள் புகார் அளித்ததால், அளவீடு பணி மேற்கொண்டு அந்த அரசு நிலம் மீட்கப்பட்டதாகவும், ஆனால் அந்த அரசு நிலத்தை பாதுகாக்க கம்பி வேலி அமைக்க பொதுமக்கள் மனு கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே அரசு நிலத்தை மீண்டும் தனியார் ஆக்கிரமிக்காமல், அந்த இடத்தை மீட்டு கம்பி வேலி அமைத்து பாதுகாக்க வேண்டும் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. மேலும் கரடிவாவி கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில். கரடி வாவி சின்ன குட்டை பகுதியில் ஆக்கிரமிப்பு கட்டடங்கள் இடித்து அகற்றப்பட்டது. ஆனால் கட்டிட இடிப்பாடுகள் முறையாக அகற்றப்படாமல் உள்ளதால், குட்டையில் மழை நீர்தேங்குவதில் தடை ஏற்பட்டுள்ளது. எனவே கட்டட இடிபாடுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

    இதே போல பல்லடம் பச்சாபாளையம் விநாயகர் கோவில் அருகே உள்ள பொதுக் கிணற்றை சுத்தம் செய்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் எனவும், தெரு விளக்குகள் அமைக்க வேண்டும் எனவும் மனு அளிக்கப்பட்டுள்ளது.இந்த ஜமாபந்தியில் முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனைப் பட்டா, பட்டா மாறுதல், உட்பிரிவு பட்டா மாறுதல், வாரிசு சான்று, பிறப்பு மற்றும் இறப்பு சான்று, குடும்ப அட்டை, சாதிச்சான்று, வருமானச் சான்று, முதல் பட்டதாரிச் சான்று மற்றும் இருப்பிடச் சான்று என மொத்தம் 200க்கும் மேற்பட்ட கோரிக்கை மனுக்கள் பொதுமக்களிடமிருந்து வரப்பெற்றது. அனைத்து கோரிக்கை மனுக்களையும் முழுமையாக ஆய்வு செய்து தகுதியுடைய மனுக்கள் மீது துரித நடவடிக்கை மேற்கொண்டு உடனடி தீர்வு காண வேண்டும் என்று கலெக்டர் கிறிஸ்துராஜ் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார் .இந்த நிகழ்ச்சியில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் விஜயராஜ்,பல்லடம் தாசில்தார் ஜெய்சிங் சிவகுமார், பல்லடம் வட்டார வளர்ச்சி அலுவலர் ரமேஷ், பல்லடம் துணை தாசில்தார்கள் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் உட்பட அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 7-ந் தேதி பிற்பகல் 3 மணிக்கு நடைபெற உள்ளது.
    • தங்கள் கோரிக்கைகளை மனுவாக அளித்து பயனடையலாம்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்தம் சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 7-ந் தேதி (புதன்கிழமை) பிற்பகல் 3 மணிக்கு நடைபெற உள்ளது.

    அக்கூட்டத்தில் மயிலா டுதுறை மாவட்டத்தைச் சார்ந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் சார்ந்தோர்கள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகளை மனுவாக அளித்து பயனடையலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பட்டா உட்பரிவு மாற்றம், அடிப்படை வசதிகள் குறித்து 418 மனுக்களை கலெக்டர் சாருஸ்ரீயிடம் அளித்தனர்.
    • முத்துப்பேட்டை வட்டத்திற்கு உட்பட்ட அனைத்து கிராமங்களிலும் வருவாய் தீர்வாய கணக்கு முடிக்கப்பட்டது.

    முத்துப்பேட்டை:

    திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை தாசில்தார் அலுவலகத்தில் முத்து ப்பேட்டை வட்டத்திற்கு உட்பட்ட வருவாய் கிராமங்களுக்கான 1432-ம் பசலி ஆண்டு வருவாய் தீர்வாய கணக்கு முடிப்பு நாள் ஜமாபந்தி நிகழ்ச்சி கலெக்டர் சாருஸ்ரீ தலைமை யில் 2-வது நாளாக நேற்று நடைபெற்றது.

    இதில் முத்துப்பேட்டை வருவாய் வட்டத்திற்கு உட்பட்ட கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    இதில் முதியோர் உதவித்தொகை, வீட்டுமனை பட்டா, பட்டா மாறுதல், பட்டா உட்பரிவு மாற்றம், அடிப்படை வசதிகள் குறித்து 418 கோரிக்கை மனுக்களை கலெக்டர் சாருஸ்ரீயிடம் அளித்தனர்.

    அந்த வகையில் நேற்றுடன் முத்துப்பேட்டை வட்டத்திற்கு உட்பட்ட அனைத்து கிராமங்களிலும் வருவாய் தீர்வாய கணக்கு முடிக்கப்பட்டது.

    அதனை தொடர்ந்து, வருவாய்துறை சார்பில் 291 பேருக்கு ரூ.83 லட்சத்து 29 ஆயிரத்து 357 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சாருஸ்ரீ வழங்கினார்.

    இதில் மாரிமுத்து எம்.எல்.ஏ, மாவட்ட ஊராட்சி தலைவர் பாலசுப்ரமணியன், முத்துப்பேட்டை பேரூராட்சி தலைவர் மும்தாஜ் நவா ஸ்கான், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் கலைவாணி மோகன், தாசில்தார் மகேஷ் குமார், மாவட்ட கலெக்டர் அலுவலக மேலாளர் சந்தான கோபால கிருஷ்ணன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) ஏழுமலை, துணை தாசில்தார்கள் உள்ளிட்ட அனைத்து அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • மகனிடம் இருந்து வீட்டை மீட்டுத்தர வேண்டும் என்று கலெக்டரிடம் மூதாட்டி மனு அளித்தார்.
    • மகள் மற்றும் மகன்களுக்கு திருமணமாகி தனித்தனியே வசித்து வருகின்றனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மம்சாபுரத்தைச் சேர்ந்தவர் தவசி. இவரது மனைவி செல்லம்மாள் (வயது80). இவர்களுக்கு 4 மகன்கள், 1 மகள் உள்ளனர். மகள் மற்றும் மகன்களுக்கு திருமணமாகி தனித்தனியே வசித்து வருகின்றனர்.

    தவசி 20 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். செல்லம்மாள் சொத்துக்களை மகன்களுக்கு பிரித்து கொடுத்தார்.

    தான் வசித்து வரும் வீட்டையும் மகன்க ளுக்கு தானமாக பத்திரப் பதிவு செய்து கொடுத்தார்.

    இந்தநிலையில் மூத்த மகன் பொன்மாடசாமி, தாய் செல்லம்மாளை வீட்டை விட்டு வெளியேறு மாறு அடித்து துன்புறுத்தி உள்ளார். இது குறித்து செல்லம்மாள் ஸ்ரீவில்லி புத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்த ஜமாபந்தியில் கலெக்டர் ஜெயசீலனிடம் புகார்் செய்தார். அந்த மனுவில் மகன் தன்னை அடித்து விரட்டுவதால் வீட்டை தானமாக வழங்கிய பத்திரத்தை ரத்து செய்து வீட்டை மீட்டுத் தர வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

    • தகுதியுடைய மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • கலெக்டர் ஆஷா அஜீத் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் தீர்வாணையம் (ஜமாபந்தி) நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் ஆஷா அஜீத் தலைமை தாங்கினார். மானாமதுரை வருவாய் கிராமங்களான அரசனேந்தல், கீழப்பசலை, கிளங்காட்டூர், அன்னவாசல், வேதியரேந்தல், தெற்கு சந்தனூர், கால்பிரவு, ராஜகம்பீரம், மானாமதுரை, அரிமண்டபம்,

    எம்.கரிசல்குளம், மிளகனூர், சின்னக்கண்ணனூர், தெ.புதுக்கோட்டை ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டன.

    பட்டா மாறுதல், வீட்டுமனை பட்டாக்கள், இலவச வீட்டுமனைப் பட்டாக்கள், பிறப்பு-இறப்பு சான்றிதழ், சாதி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், வருமான சான்றிதழ், குடும்ப அட்டை, மாதாந்திர உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, விபத்து நிவாரண தொகை, நலிந்தோர் உதவித்தொகை, நிலம் தொடர்பான பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்களை பெற்று, தகுதியுடைய மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுத்து அதன் பயன்களை பயனாளிகளுக்கு வழங்க வேண்டும் என்று அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.

    சிவகங்கை வட்டத்தில் 30 மனுக்களும், திருப்பத்தூர் வட்டத்தில் 14 மனுக்களும், காளையார்கோவில் வட்டத்தில் 70 மனுக்களும், காரைக்குடி வட்டத்தில் 51 மனுக்களும், தேவகோட்டை வட்டத்தில் 28 மனுக்களும், திருப்புவனம் வட்டத்தில் 70 மனுக்களும், மானாமதுரை வட்டத்தில் 123 மனுக்களும், இளையான்குடி வட்டத்தில் 8 மனுக்களும், சிங்கம்புணரி வட்டத்தில் 135 மனுக்களும் என மொத்தம் 529 மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டது.

    மேற்கண்ட மனுக்களின் மீது அலுவலர்கள் சிறப்புக் கவனம் செலுத்தி, உரிய களஆய்வுகள் மேற்கொண்டு ஒருவாரகாலத்திற்குள் அனைத்து மனுதாரர்களின் மனுக்கள் மீது தீர்வு கண்டு நடவடிக்கை எடுக்குமாறு கலெக்டர் ஆஷா அஜீத் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    இதில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், வருவாய் கோட்டாட்சியர்கள் சுகிதா(சிவகங்கை), பால்துரை(தேவகோட்டை) மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

    • பட்டா மாறுதல் உள்ளிட்ட 3 மனுக்களுக்கு உடனடித் தீா்வு காணப்பட்டது.
    • இலவச வீட்டுமனைப் பட்டா, முதியோா் உதவித் தொகை உள்பட பல்வேறு கோரிக்கைகளுக்காக மனு கொடுத்தனா்.

    காங்கயம் :

    காங்கயம் வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில், திருப்பூா் மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு அலுவலா் மகாராஜ் தலைமையில் நத்தக்காடையூா் உள்வட்டத்தைச் சோ்ந்த மறவபாளையம், கீரனூா், பாப்பினி, நான்கு சாலை, பரஞ்சோ்வழி, மருதுறை, நத்தக்காடையூா், முள்ளிப்புரம், குட்டப்பாளையம், பழையகோட்டை ஆகிய பகுதிகளுக்கு நடைபெற்ற வருவாய்த் தீா்வாய நிகழ்வில் இலவச வீட்டுமனைப் பட்டா, முதியோா் உதவித் தொகை உள்பட பல்வேறு கோரிக்கைகளுக்காக 110 போ் மனு கொடுத்தனா். இதில் பட்டா மாறுதல் உள்ளிட்ட 3 மனுக்களுக்கு உடனடித் தீா்வு காணப்பட்டது.

    நிகழ்ச்சியில் காங்கயம் வட்டாட்சியா் புவனேஸ்வரி, மண்டல துணை வட்டாட்சியா் ஆா்.மோகனன், தலைமையிடத்து துணை வட்டாட்சியா் கோபால் மற்றும் வருவாய்த் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

    வெள்ளகோவில் உள்வட்டத்தைச் சோ்ந்த முத்தூா், சின்னமுத்தூா், ஊடையம், மங்கலப்பட்டி, வேலம்பாளையம், பூமாண்டன்வலசு, ராசாத்தாவலசு, மேட்டுப்பாளையம், சேனாபதிபாளையம், வெள்ளகோவில், உத்தமபாளையம், லக்கமநாயக்கன்பட்டி, கம்பளியம்பட்டி, பச்சாபாளையம், வீரசோழபுரம், வள்ளியரச்சல் ஆகிய பகுதிகளுக்கு இன்று வருவாய்த் தீா்வாய நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. 

    • ரூ.14 லட்சத்தில் புதிய பொது விநியோக கட்டிடம் கட்டப்பட்டது.
    • அத்தியாவசிய பொருட்களை வழங்கி, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.

    மெலட்டூர்:

    தஞ்சை மாவட்டம், அருந்தபுரம் ஊராட்சி உத்தமர்குடியில் பாபநாசம் தொகுதி எம்.எல்.ஏ. மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.14 லட்சத்தில் புதியதாக பொதுவிநியோக கட்டிடம் கட்டப்பட்டு பொது பயன்பாட்டிற்கு திறந்து வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    ஒன்றியக்குழு உறுப்பினர் குமார் தலைமை வகித்தார்.

    ஒன்றிய கவுன்சிலர் கிருஷ்ண பிரியா விஜயகுமார் முன்னிலை வகித்தார்.

    அருந்தவபுரம் ஊராட்சி மன்ற தலைவர் சரிதாஆசை த்தம்பி வரவேற்றார்.

    நிகழ்ச்சியில் ஜவாஹி ருல்லா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு புதியதாக கட்டப்பட்ட பொதுவிநியோக கட்டிடத்தை திறந்து வைத்து அத்தியாவசிய பொருள்களை வழங்கி பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.

    இதில் மனிதநேய மக்கள் கட்சி தஞ்சை வடக்கு மாவட்ட தலைவர் ஹிபாயத்துல்லா, தலைமை செயற்குழு உறுப்பினர் முஹமதுரிபாயி,

    வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கூத்தரசன், அமானுல்லா, அருந்தபுரம் கூட்டுறவு சங்க செயலாளர் வரதராஜன், ஊராட்சி செயலாளர் காமராஜ், ஊராட்சி சங்க நிர்வாகிகள் ஜெகத்குரு, மாரிமுத்து மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், கிராமமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • பட்டா நகல் கோருதல், பட்டா மாறுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 94 மனுக்கள் பெறப்பட்டது.
    • மனுக்களை, திருவாரூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் விஜயன் ஆய்வு செய்தார்.

    நீடாமங்கலம்:

    வலங்கைமான் தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் பட்டா நகல் கோருதல், பட்டா மாறுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்கள் அளித்தளர்.

    மனுக்களை, திருவாரூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் விஜயன் ஆய்வு செய்தார்.

    சுமார் 94 மனுக்கள் பெறப்பட்டு, அதில் 11 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டுள்ளது.

    நிகழ்ச்சியில் வலங்கைமான் தாசில்தார் அன்பழகன், மண்டல துணை வட்டாட்சியர் ஆனந்தன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    • பொதுமக்களிடம் இருந்து 125 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.
    • 3 மனுக்களுக்கு உடனடித் தீா்வு காணப்பட்டது.

    காங்கயம் :

    காங்கயத்தில் நடைபெற்ற வருவாய்த் தீா்வாயம் (ஜமாபந்தி) நிகழ்ச்சியில் பொதுமக்களிடம் இருந்து 125 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.

    காங்கயம் வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் திருப்பூா் மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு அலுவலா் மகாராஜ் தலைமையில், ஊதியூா் உள்வட்டதைச் சோ்ந்த ஆரத்தொழுவு, வட சின்னாரிபாளையம், சம்மந்தம்பாளையம், காங்கயம்பாளையம், குருக்கபாளையம், நெழலி, ஊதியூா், முதலிபாளையம் ஆகிய வருவாய் கிராமங்களுக்கு நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சியில் இலவச வீட்டுமனைப் பட்டா, முதியோா் உதவித் தொகை உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து 125 போ் மனு அளித்தனா். இந்த மனுக்களில் முதியோா் உதவித் தொகை உள்ளிட்ட 3 மனுக்களுக்கு உடனடித் தீா்வு காணப்பட்டது.

    • 190 மனுக்களுக்கு விசாரணை நிலுவையில் உள்ளது.
    • பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டத்தில் 1432-ம் பசலிக்கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) அனைத்து தாலுகாக்களிலும் கடந்த 16-ந் தேதி முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதனடிப்படையில் வேப்பந்தட்டை தாலுகாவில் மாவட்ட கலெக்டர் கற்பகம் தலைமையில் பசும்பலூர் மற்றும் வாலிகண்டபுரம் குறுவட்ட பகுதிகளுக்குட்பட்ட திருவாளந்துறை, அகரம், தொண்டபாடி, நெய்குப்பை மற்றும் அனுக்கூர் ஆகிய கிராமங்களிலும், குன்னம் தாலுகாவில் கீழப்புலியூர் குறுவட்ட பகுதிக்குட்பட்ட சித்தளி (கிழக்கு), சித்தளி (மேற்கு), பேரளி (வடக்கு), பேரளி (தெற்கு) மற்றும் ஒதியம் ஆகிய கிராமங்களிலும், ஆலத்தூர் தாலுகாவில் கொளக்காநத்தம் மற்றும் கூத்தூர் குறுவட்ட பகுதிகளுக்குட்பட்ட கொளத்தூர் (கிழக்கு), தொண்டபாடி, மேலமாத்தூர், அழகிரிபாளையம் மற்றும் ஆதனூர் (வடக்கு) ஆகிய கிராமங்களிலும் நடைபெற்றது.

    வேப்பந்தட்டை தாசில்தார் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் கற்பகம் தலைமையில் நடைபெற்ற ஜமாபந்தியில் 192 மனுக்கள் பெறப்பட்டன. குன்னம் தாலுகாவில் 76 மனுக்களும், ஆலத்தூர் தாலுகாவில் 26 மனுக்களும் என மொத்தம் 294 மனுக்கள் பெறப்பட்டன. இதில் வேப்பந்தட்டை தாலுகாவில் 39 மனுக்களும், குன்னம் தாலுகாவில் 41 மனுக்களும், ஆலத்தூர் தாலுகாவில் 24 மனுக்களும் என மொத்தம் 104 மனுக்கள் ஏற்கப்பட்டன. 190 மனுக்களுக்கு விசாரணை நிலுவையில் உள்ளது. மேலும் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

    • கலெக்டர் கிராந்திகுமார்பாடி, 3 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
    • 11 தாசில்தார் அலுவலகங்களிலும் வருகிற 31-ந்தேதி வரை வருவாய் தீர்வாயம் நடத்தப்பட உள்ளது

    கோவை,

    கோவை மாவட்டத்தில் உள்ள 11 தாசில்தார் அலுவலகங்களிலும் வருகிற 31-ந்தேதி வரை வருவாய் தீர்வாயம் நடத்தப்பட உள்ளது. இதன் ஒரு பகுதியாக ஆனைமலை தாசில்தார் அலுவலகத்தில் நேற்று வருவாய் தீர்வாயம் நடந்தது. மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார்பாடி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

    இதில் பெத்தநாயக்கனூர், தென்சித்தூர், சோமந்துறை, தென்சங்கம் பாளையம், ஆனைமலை ஒடையகுளம், வேட்டைக்காரன்புதூர், காளியாபுரம் ஆகிய பகுதிகளை சேர்ந்த பொது மக்கள் பங்கேற்றனர். அவர்களிடம் முதியோர் உதவித்தொகை, கணவரால் கைவிடப்பட்டோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, விரைவு பட்டா மாற்றம், விலையில்லா வீட்டுமனைப்பட்டா ஆகியவை தொடர்பாக கோரிக்கை மனுக்களை கலெக்டர் நேரடியாக பெற்றுக்கொண்டார்.

    இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்திய கலெக்டர் கிராந்திகுமார்பாடி, 3 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நிகழ்ச்சியில் உதவி கலெக்டர் (பயிற்சி) சவுமியாஆனந்த், உதவி இயக்குநர் (நிலஅளவை) கோபாலகிருஷ்ணன், ஆனைமலை தாசில்தார் ரேணுகா தேவி உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். ஆனைமலை தாசில்தார் அலுவலகத்தில் இன்று (24-ந்தேதி) ஆத்துப்பொள்ளாச்சி, மார்ச்சநாயக்கன்பாளையம், அம்பாரம்பாளையம், சிங்காநல்லூர், நாயக்கன்பாளையம், வக்கம்பாளையம், பெரியபோது, ஆகிய ஊராட்சிகளுக்கும், வருகிற 25-ந்தேதி சமத்தூர், பில்சின்னாம்பாளையம், எஸ்.பொன்னாபுரம், தளவாய்பாளையம், பழையூர், தென்குமாரபாளையம், வீரல்பட்டி, நல்லூர், தொண்டாமுத்தூர், கம்பா லப்பட்டி, கரியாஞ் செட்டிபாளையம், கோட்டூர், அங்காலக்குறிச்சி, துறையூர், ஜல்லிப்பட்டி, அர்த்தநாரிபாளையம் ஆகிய ஊராட்சிகளுக்கும் வருவாய் தீர்வாயம் நடக்க உள்ளது.

    • பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட 331 மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • 56 பயனாளிகளுக்கு கலெக்டர் பட்டாக் களுக்கான ஆணைகளை வழங்கினார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தாசில்தார் அலுவலகத்தில் வருவாய் தீர்வாணையம் (ஜமாபந்தி) நிகழ்ச்சி கலெக்டர் ஆஷா அஜீத் தலைமையில் நடைபெற்றது.

    இந்த ஜமாபந்தியில் மானாமதுரை வருவாய் கிராமங்களான செய்களத்தூர், காட்டூரணி, மானம்பாக்கி, மாங்குளம், கே.கே.பள்ளம், மேலப்பிடாவூர், வடக்கு சந்தனூர், எஸ்.காரைக்குடி, சூரக்குளம், எழுநூற்றி மங்கலம், மேலநெட்டூர், ஆலங்குளம் ஆகிய பகுதி களிலுள்ள பொதுமக்களிடம் இருந்து பட்டா மாறுதல், வீட்டுமனை பட்டா, இலவச வீட்டுமனை பட்டா, பிறப்பு- இறப்பு சான்றி தழ்கள், சாதி சான்றிதழ்கள், இருப்பிட சான்றிதழ்கள் உள்ளிட்ட கோரிக்கை தொடர்பாக பொதுமக்கள் மனுக்களை வழங்கினர்.

    பின்னர் செய்களத்தூர் சமத்துவபுரத்தில் உள்ள குடியிருப்புகளில் வசித்து வரும் 56 பயனாளிகளுக்கு கலெக்டர் பட்டாக் களுக்கான ஆணைகளை வழங்கினார்.

    சிவகங்கை வட்டத்தில் 41 மனுக்களும், திருப்பத்தூர் வட்டத்தில் 22 மனுக்களும், காளையார்கோவில் வட்டத்தில் 21 மனுக்களும், காரைக்குடி வட்டத்தில் 18 மனுக்களும், தேவகோட்டை வட்டத்தில் 32 மனுக்களும், திருப்புவனம் வட்டத்தில் 102 மனுக்களும், மானா மதுரை வட்டத்தில் 22 மனுக்களும், இளையான்குடி வட்டத்தில் 24 மனுக்களும், சிங்கம்புணரி வட்டத்தில் 49 கள ஆய்வுகள் மேற்கொண்டு ஒரு வாரகாலத்திற்குள் அனைத்து மனுதாரர்களின் மனுக்கள் மீது தீர்வு காண்ப தற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ள கலெக்டர் ஆஷா அஜீத் அலுவ லர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், வருவாய் கோட்டாட்சியர்கள் சுகிதா (சிவகங்கை, பால்துரை (தேவகோட்டை) மற்றும் அனைத்து வட்டங்களிலும், சம்பந்தப்பட்ட தாசில் தார்கள், துறை சார்ந்த அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×