search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேவகோட்டை"

    தேவகோட்டை அருகே மின்சாரம் தாக்கி கொத்தனார் பலியானார்.

    தேவகோட்டை:

    தேவகோட்டை அருகே உள்ள அண்டக்குடி கிராமத்தை சேர்ந்தவர் வீரபாண்டி. இவர் நாரணமங்கலத்தில் புதிதாக வீடு கட்டி வருகிறார்.

    இங்கு சாத்திக்கோட்டையை சேர்ந்த வேம்பன் மகன் சேகர் (வயது 40) என்பவர் கட்டிட வேலை பார்த்து வந்தார்.

    இவர் சம்பவத்தன்று பணிகளை முடித்து விட்டு மோட்டார் சுவிட்ச்சை போட்டுள்ளார். இதில் எதிர்பாரத விதமாக மின்சாரம் சேகர் மீது பாய்ந்தது. இதில் சம்பவ இடத்திலேயே சேகர் இறந்தார்.

    சேகரை காப்பாற்றுவதற்காக அவருடன் பணியாற்றும் சாமிகண்ணு முயற்சி செய்தார். அப்போது அவர் மீதும் மின்சாரம் பாய்ந்தது. இதில் அவர் படுகாயம் அடைந்தார்.

    இதுகுறித்து தகவல் கிடைத்ததும் தேவகோட்டை தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பிளவர்ஷீலா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சேகரின் உடலை கைப்பற்றி பிரதே பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து. விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தேவகோட்டையில் ஆட்டோ டிரைவர் மர்மமான முறையில் இறந்து கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    தேவகோட்டை:

    தேவகோட்டை அருகே உள்ள தென்னீர்வயல் கிராமத்தைச் சேர்ந்தவர் காசி (வயது 47), ஆட்டோ டிரைவர்.

    தேவகோட்டை ராம் நகர் பகுதியில் உள்ள நிறுத்தத்தில் இவர் ஆட்டோ ஓட்டி வந்தார். நேற்று காலை காசி வழக்கம் போல் ஆட்டோ ஓட்டச் சென்றார்.

    இந்த நிலையில் அரசு போக்குவரத்துக்கழக பணிமனை அருகே உள்ள மரத்தில் ஆட்டோ மோதி நின்றதை அந்த வழியே சென்றவர்கள் நேற்று இரவு பார்த்தனர். அருகில் சென்று பார்த்தபோது காசி ரத்தக்காயங்களுடன் கிடந்தார்.

    அவரை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், காசி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    அவர் தற்செயல் விபத்தில் சிக்கி இறந்தாரா? அல்லது யாராவது வாக னத்தை மோதி விபத்தை ஏற்படுத்தினார்களா? என்பது மர்மமாக உள்ளது.

    விபத்து குறித்து தேவகோட்டை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தேவகோட்டை அருகே சொத்து பிரச்சினையில் பெண்ணுக்கு அரிவாளால் வெட்டிய மகன் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தேவகோட்டை:

    தேவகோட்டை அருகே உள்ள களபாங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டியன். இவரது மனைவி மீனாள் (வயது68). இவர்களது மகன் குமார் (40).

    கடந்த சில மாதங்களாகவே குமார் தனக்குரிய சொத்தை பிரித்து தருமாறு பெற்றோருடன் வற்புறுத்தி வந்துள்ளார். அவர்கள் மறுக்கவே குமார் அடிக்கடி பெற்றோருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்தார்.

    நேற்று இரவு குமார் தனது சித்தப்பா மணிவண்ணனுடன் சென்று தாய் மீனாளிடம் சொத்து குறித்து மீண்டும் பிரச்சினை செய்தார். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் முற்றியது.

    இதில் ஆத்திரம் அடைந்த குமார் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து தாய் என்றும் பாராமல் மீனாளை சரமாரியாக வெட்டினார். இதில் படுகாயம் அடைந்த அவர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்த சம்பவம் குறித்து வேலாயுதபட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷீலா பிளவர், சப்-இன்ஸ்பெக்டர் மீனாட்சிசுந்தரம் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து குமார் மற்றும் மணிவண்ணனை கைது செய்தனர்.

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் எலக்ட்ரீசியன் பரிதாபமாக உயிரிழந்தார்.
    தேவகோட்டை:

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள பரம்பக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன் மகன் ஆறுமுகம் (வயது35). எலக்ட்ரீசியனான இவர், சேந்தல்பெரியாணைச் சேர்ந்த போஸ் (43) என்பவருடன் அருகில் உள்ள திருமணவயல் கிராமத்திற்கு தனித்தனி மோட்டார் சைக்கிளில் சென்றனர்.

    பின்னர் மாலையில் இருவரும் வீட்டுக்கு புறப்பட்டனர். ஆறுமுகம் முன்னே செல்ல போஸ் பின்தொடர்ந்து சென்றார். திருமணவயல் கண்மாய் அருகே சென்றபோது திடீரென்று போஸ் வந்த மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து ஆறுமுகம் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த ஆறுமுகம் பலத்த காயம் அடைந்தார். உடனே அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ஆறுமுகம் பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த போஸ் சிகிச்சை பெற்று வருகிறார்.

    விபத்து குறித்து வேலாயுதபட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷீலாபிளவர், சப்-இன்ஸ்பெக்டர் மீனாட்சிசுந்தரம் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #Tamilnews
    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே 2 தனியார் பஸ்களுக்கு மர்மநபர்கள் தீ வைத்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தேவகோட்டை:

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ளது கருதாவூரணி. இங்கு தனியார் வாகனம் நிறுத்துமிடம் உள்ளது. இங்கு சென்னை, பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு இயக்கப்படும் ஆம்னி பஸ்கள் நிறுத்தப்படுவது வழக்கம்.

    இன்று மதியம் இங்கு நிறுத்தப்பட்டு இருந்த 2 தனியார் பஸ்கள் திடீரென தீப்பிடித்து எரிந்தன. இதை பார்த்த அப்பகுதி மக்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் வருவதற்குள் 2 ஆம்னி பஸ்களும் முற்றிலும் எரிந்து நாசமானது. மர்ம நபர்கள் பஸ்களுக்கு தீ வைத்து விட்டு சென்றார்களா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #Tamilnews
    குடியிருப்பு பகுதிக்குள் மின்மயானம் அமைவதை எதிர்த்து கட்டுமான பணிகளுக்கு போடப்பட்ட கொட்டகையை பொது மக்கள் பிரித்து எறிந்தனர்.

    தேவகோட்டை:

    தேவகோட்டை ராம்நகர் 5-வது வீதியில் மின்மயானம் அமைக்க நகராட்சி நிர்வாகம் இடம் ஒதுக்கியது. அவற்றில் முதற்கட்ட கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.

    இதனை அறிந்த அந்தப் பகுதி மக்கள் 150-க்கும் மேற்பட்டோர் மின்மயானம் அமைவதை எதிர்த்து தி.மு.க நகர செயலாளர் பால முருகன், வடக்கு ஒன்றிய செயலாளர் பூபாலசிங்கம் தலைமையில் சார் ஆட்சியாளரிடம் மனு கொடுத்தனர்.

    அந்த மனுவில், இந்தப் பகுதியில் 600 வீடுகளுக்கு மேல் உள்ளது. மின்மயானம் அமைத்தால் சுற்று சூழல் மாசு அடைந்து குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும் என கூறியிருந்தனர்.

    மனுவை பெற்ற சார் ஆட்சியாளரின் பதிலில் திருப்தி பெறாத பொது மக்கள் கட்டுமான பணிகளுக்கு போடப்பட்ட கொட்டகையை பிரித்து எறிந்தனர். இதனால் அப்பகுதி போர்க்களம் போல் காணப்பட்டது.

    தற்போது ஒத்தக்கடை ஆற்றுபாலம் அருகில் செயல்பட்டு வரும் மயானத்தில் மின்மயானம் அமைத்தால் அனைத்து மக்களும் பயன் பெறுவ தோடு எந்த வித இடையூறும் இருக்காது. போதிய இட வசதி இருந்தும் மின் மயானம் அந்தப்பகுதியில் அமையா திருக்க காரணம் என்ன என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பினர்.

    ×