search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கரூர்"

    கரூர் மாவட்டத்தின் அரவக்குறிச்சி அருகில் நோயாளியை ஏற்றிச்சென்ற ஆம்புலன்ஸ் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. #FireinAmbulance
    கரூர்:

    கரூர் மாவட்டத்தில் உள்ள அரவக்குறிச்சி அருகில் 108 ஆம்புலன்ஸ் ஒன்று நோயாளியை அழைத்துக்கொண்டு மருத்துவமனைக்கு வேகமாக சென்றுகொண்டிருந்தது. 

    அப்போது திடீரென ஆம்புலன்சின் என்ஜின் தீப்பிடித்து எரிந்தது. இதையறிந்த, ஆம்புலன்ஸ் டிரைவர் உள்ளே இருந்தவர்களை எச்சரித்து அதிலிருந்து வெளியேறினார். 

    இதைத்தொடர்ந்து ஆம்புலன்சில் சிகிச்சைக்காக சென்ற நோயாளி, அவருடன் வந்தவர்கள் மற்றும் 2 நர்ஸ்கள் கீழே இறங்கினர். இதனால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. 

    தகவலறிந்து, சம்பவ இடத்திற்கு தீயணைப்பு துறையினர் விரைந்து வந்தனர். அவர்கள் ஆம்புலன்சில் எரிந்து கொண்டிருந்த தீயை போராடி அணைத்தனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பட்டப்பகலில் சாலையின் நடுவில் ஆம்புலன்ஸ் வாகனம் திடீரென தீப்பிடித்து எரிந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. #FireinAmbulance
    கரூர் அருகே பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் 94 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. #LSPolls
    கரூர்:

    பாராளுமன்ற தேர்தல் அறிவிப்பு கடந்த 10-ந்தேதி வெளியானது. அப்போது முதலே தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன. பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்த தேர்தல் ஆணையம் ரூ.50 ஆயிரத்திற்கு மேல் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்படும் பணம் தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

    ஆனால் அதையும் மீறி தினந்தோறும் பொதுமக்கள், வியாபாரிகள், வணிகர்கள், தொழிலதிபர்கள் எடுத்து செல்லும் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகிறார்கள். இதில் ஏராளமான வெளிநாட்டு பணம், தங்கம், வெள்ளி நகைகள், மின் சாதன பொருட்களும் சிக்கியுள்ளன.

    இந்த நிலையில் கரூர் அருகே நள்ளிரவில் நடந்த வாகன சோதனையில் 94 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதுபற்றிய விபரம் வருமாறு:-

    மதுரை அய்யர்பங்களா சரோஜினி காலனியில் தனியார் கூரியர் மற்றும் பார்சல் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் மூலம் சேலத்தில் உள்ள நகைக்கடைகளுக்கு தங்கம், வெள்ளி நகைகள் வியாபாரிகள், நகை செய்வோர்களிடம் இருந்து பெறப்பட்டு பாதுகாப்பாக கொண்டு செல்லப்படுவது வழக்கம்.

    அதேபோல் நேற்று இரவு மதுரையில் இருந்து சேலத்தில் உள்ள 13 நகைக்கடைகளில் ஒப்படைப்பதற்காக நகைகளை எடுத்துக்கொண்டு ஆம்னி வேன் ஒன்று புறப்பட்டது. அந்த வேனை டிரைவர் கிருபாகரன் ஓட்டிச் சென்றார். மேலும் கூரியர் நிறுவன மேலாளர் மற்றும் துப்பாக்கியுடன் 2 பாதுகாவலர்களும் அந்த வேனில் வந்தனர்.

    கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியை அடுத்த ஆண்டி பட்டிக்கோட்டை சோதனைச்சாவடி அருகே நள்ளிரவில் அந்த வேன் வந்தபோது அங்கு தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் போலீசார் மறித்தனர். நிலையான ஆய்வுக்குழு அதிகாரி குழந்தைவேலு வேனில் எடுத்து வரப்பட்ட பொருட்கள் குறித்து கேட்டபோது அதில் தங்க நகைகள் இருந்தது தெரியவந்தது.

    ஆனால் அதில் பெரும்பாலான நகைகளுக்கு உரிய ஆவணம் இல்லாதது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து நகைகளுடன் அந்த வேன் இன்று அதிகாலை கரூர் கலெக்டர் அலுவலக வளாத்திற்கு கொண்டு வரப்பட்டது. வேனில் வந்தவர்களிடம் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் அதில் 94 கிலோ 894 கிராம் தங்க நகைகள் கொண்டு வரப்பட்டது தெரிந்தது.

    அதன் மதிப்பு ரூ.5 கோடியே 63 லட்சத்து 13 ஆயிரம் என அதிகாரிகள் தெரிவித்தனர். அந்த நகைகள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டன.

    தொடர்ந்து உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி மீனாட்சி வேனில் எடுத்து வரப்பட்ட நகைகளை ஆய்வு செய்து, உரிய ஆவணங்கள் இருந்தால் திருப்பி ஒப்படைக்கப்படும் என்றும், இல்லையேல் அவை அனைத்தும் கருவூலத்தில் ஒப்படைக்கப்படும் என்றும் தெரிவித்தார். கரூரில் 94 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  #LSPolls

    திருச்சி, புதுக்கோட்டை, கரூரில் பறக்கும் படையினர் சோதனையில் ரூ.4 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. #ParliamentElection
    குளித்தலை:

    பாராளுமன்ற தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதையடுத்து கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள கீழகுறப்பாளையத்தில் உள்ள திருச்சி-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் பறக்கும் படை அதிகாரி ஜெயபிரகாஷ் தலைமையில், சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மதியழகன் தேர்தல் பறக்கும் படை குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது திருச்சியில் இருந்து வந்த ஒரு காரை நிறுத்தி அதிகாரிகள் சோதனை செய்தனர். சோதனையில் அதில் வெளிநாட்டு பணம் 36 யூரோ நோட்டுகள் இருந்தது (இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.1 லட்சத்து 40 ஆயிரத்து 832) கண்டுபிடிக்கப்பட்டது. அதற்கான உரிய ஆவணங்கள் எதுவும் இல்லாதால் காரில் வந்த தம்பதியிடம் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில், காரில் வந்தவர் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த அலஞ்சோ (வயது 35) என்பதும், இலங்கையை பூர்வீகமாக கொண்ட இவர் தற்போது பிரான்ஸ் நாட்டில் உள்ள ஒரு உணவகத்தில் வேலை பார்த்து வருவதும் தெரியவந்தது. தற்போது வெளிநாட்டில் இருந்து தமிழகத்துக்கு வந்திருக்கும் அலஞ்சோ தனது மனைவி மற்றும் குழந்தையுடன் திருச்சியில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்து விட்டு, ஈரோடு மாவட்டம், காங்கேயத்தில் உள்ள தேவாலயத்திற்கு சென்று கொண்டிருந்தது தெரியவந்தது.

    வெளிநாட்டு பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்து குளித்தலை கோட்டாட்சியரும், உதவி தேர்தல் அலுவலருமான லியாகத்திடம் ஒப்படைத்தனர். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட வெளிநாட்டு பணத்திற்கு உரிய ஆவணங்களை ஒப்படைத்தால் அவற்றை திருப்பி ஒப்படைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    திருச்சி குழுமணி சாலை லிங்கநகர் சோதனைச்சாவடியில் பறக்கும் படையை சேர்ந்த தாசில்தார் வசந்தா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் திருக்குமரன் மற்றும் போலீசார் வாகன சோதனை நடத்தினர். அப்போது ஏகிரிமங்கலம் என்ற இடத்தில் வந்த ஒரு காரை மறித்து சோதனையிட்டனர். அந்த காரில் திருச்சி துப்பாக்கி தொழிற்சாலை பகுதியை சேர்ந்த சுந்தர்ராஜ், அவரது மனைவி பிரசன்ன குமாரி ஆகியோர் இருந்தனர். அவர்கள் ரூ.1 லட்சம் வைத்து இருந்தனர். அந்த பணத்திற்கு உரிய ஆவணங்களை அவர்கள் சமர்ப்பிக்காததால் அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த பணத்தை திருச்சி மேற்கு தாசில்தார் ராஜவேலுவிடம் ஒப்படைத்தனர்.

    சுந்தர்ராஜ்-பிரசன்னகுமாரி தம்பதி, அதிகாரிகளிடம் தங்களுடைய மகளுக்கு வருகிற 31-ந்தேதி காதணி விழா நடத்த இருப்பதால் துணிமணிகள் எடுப்பதற்காக இந்த பணத்தை கொண்டு செல்வதாக கூறினர். காதணி விழா அழைப்பிதழையும் அதிகாரிகளிடம் காட்டினர். ஆனாலும் அதிகாரிகள் பறிமுதல் செய்த பணத்தை திரும்ப வழங்கவில்லை. இதனால் அந்த தம்பதியினர் காதணி விழாவுக்காக வைத்திருந்த பணத்தையும் பறிமுதல் செய்து விட்டார்களே? என்ற வேதனையுடன் புலம்பியபடி சென்றனர்.

    இதுபற்றி அதிகாரிகள் கூறுகையில், சொந்த காரணங்களுக்காக பணத்தை எடுத்து செல்பவர்கள் அந்த பணம் எங்கிருந்து வந்தது என்பதற்கான ஆதாரங்களை கையில் வைத்து இருக்க வேண்டும். அப்படி வைத்து இருந்தால் தான் பணம் பறிமுதல் நடவடிக்கைகளில் இருந்து தப்ப முடியும் என்றனர்.

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கூழையன்விடுதியில் பறக்கும் படையை சேர்ந்த வட்டார கல்வி அதிகாரி நடராஜன் தலைமையில் போலீசார், அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் ஒரு காரில் இருந்த ஒரு பொருளை, லாரிக்கு மாற்றினர். இதனால் சந்தேகமடைந்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று சோதனையிட்டனர். லாரியில் சோதனையிட்டபோது அதில் ரூ.1 லட்சத்து 48 ஆயிரம் இருந்தது. அதற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். நெல் வியாபார பணத்தை வைத்திருந்ததாக லாரி டிரைவர் தெரிவித்தார். இருப்பினும் உரிய ஆவணங்களை ஒப்படைத்து பணத்தை பெற்று செல்லலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். #ParliamentElection


    கரூர் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.3 கோடியில் வளர்ச்சி திட்ட பணிகளை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.
    கரூர்:

    கரூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதியில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் தொடக்க விழா நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் அன்பழகன் தலைமை தாங்கினார். இதில் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கலந்து கொண்டு, காதப்பாறை, மின்னாம்பள்ளி பஞ்சமாதேவி, கோயம்பள்ளி, சேமூர், வாங்கல் குப்புச்சிபாளையம், மண்மங்கலம், நெரூர் தெற்கு மற்றும் வடக்கு உள்ளிட்ட ஊராட்சிகளில் சாலை மேம்பாடு செய்தல், சாக்கடை வசதி செய்தல், கூட்டு குடிநீர் திட்ட பணிகள் என ரூ.2 கோடியே 56 லட்சத்து 45 ஆயிரம் மதிப்பிலான பல்வேறு பணிகளை பூமிபூஜையிட்டு தொடங்கி வைத்தார்.

    பின்னர் மின்னாம்பள்ளி பஞ்சமாதேவி அரசு காலணி-சோமூர் கல்லூப்பாளையம்- அச்சமாபுரம் ஆகிய பகுதிகளில் ரூ.36 லட்சத்து 55 லட்சம் மதிப்பில் முடிவுற்ற 3 சமுதாய கூடங்களையும், கோயம்பள்ளியில் தரம் உயர்த்தப்பட்ட கால்நடை மருந்தகத்தையும் திறந்து வைத்தல் என மொத்தம் ரூ.2 கோடியே 93 லட்சம் மதிப்பிலான புதிய திட்டப்பணிகளை பூமிபூஜையிட்டு தொடங்கி வைத்தும், முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தார்.

    தொடர்ந்து அமைச்சர் விஜயபாஸ்கர் நிருபர்களுக்கு பேட்டிளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கரூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதகிளில் இன்று 13 இடங்களில் ரூ.2 கோடியே 93 லட்சம் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. மேலப்பாளையம் புலியூர் இடையே அமராவதி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் உயர்மட்டப்பாலத்தின் அணுகு சாலையை கரூரை சுற்றி அமையவுள்ள சுற்றுவட்டச்சாலையுடன் இணைத்து சாலை வசதி மேம்படுத்தப்படும். கோயம்பள்ளி, செல்லிபாளையம் ஊராட்சிகளில் ரூ.34 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பில் மதிப்பீட்டில் கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக கோயம்பள்ளி மற்றும் செல்லிபாளையத்தில் ஆதார் எண் பதிய தவறியதால் அரிசி பெற இயலவில்லை என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். அவர்களின் கோரிக்கையினை ஏற்று கோயம்பள்ளி மற்றும் செல்லிபாளையம் ஊராட்சியில் ஆதார் எண் பதியாமல் விடுபட்டுள்ள நபர்களின் குடும்ப அட்டைகளை உரிய முறையில் பதிவு செய்திட சிறப்பு முகாமினை நடத்த அமைச்சர் உத்தரவிட்டார்.

    இதில் மாவட்ட ஊரகவளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் கவிதா, வருவாய் கோட்டாட்சியர் சரவணமூர்த்தி, கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் இளங்கோ, கரூர் வட்டார வளர்ச்சி அதிகாரி பரமேஸ்வரன், மாவட்ட அ.தி.மு.க. அவைத்தலைவர் காளியப்பன், கரூர் ஒன்றிய செயலாளர் என்ஜினீயர் கமலக்கண்ணன், மாவட்ட துணை செயலாளர் சிவசாமி, முன்னாள் மாணவரணி தலைவர் என். தானேஷ், அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். 
    கரூரில் புதிதாக ஒருங்கிணைந்த பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என திமுக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    கரூர்:

    கரூர் மாவட்ட தி.மு.க.வின் அவசர செயற்குழு கூட்டம் கலைஞர் அறிவாலய கூட்டரங்கில் நடந்தது-. மாவட்ட அவை தலைவர் டி.ராஜேந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் நன்னியூர் ராஜேந்திரன், முன்னாள் அமைச்சர் வி. செந்தில்பாலாஜி, மாநில விவசாய அணி செயலாளர் ம.சின்னசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட  தீர்மானங்கள் வருமாறு:-

    வாங்கல் - மோகனூர் உயர்மட்ட பாலத்தில் மின்விளக்குகள் பொருத்தப்பட்டும் மின்இணைப்பு கொடுக்கப்படாததால் இருள் சூழ்ந்தபடி இருக்கிறது. எனவே அங்கு மின்விளக்குகள் எரிவதற்கு வழிவகை செய்ய வேண்டும். அமராவதி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட கோயம்பள்ளி உயர்மட்ட பாலப்பணியை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும். வாங்கல் அல்லது தவுட்டுப்பாளையம் பகுதியில் காவிரியின் குறுக்கே தடுப்பணை கட்ட வேண்டும். கரூருக்கு புதிதாக ஒருங்கிணைந்த பஸ் நிலையத்தை அமைக்க வேண்டும். அதுவரை போக்குவரத்து நெரிசலை தவிர்க்க கரூர் பஸ் நிலையத்தில் நகரும் படிகட்டுகள் அமைக்க வேண்டும்.

    மக்களிடம் செல்வோம், சொல்வோம், மக்களின் மனதை வெல்வோம் என்ற கருத்தினை முன்வைத்து அ.தி.மு.க. அரசின் மக்கள் விரோத செயல்பாடுகளை சுட்டி காட்டி ஊராட்சி சபை கூட்டம் நடத்த வேண்டும். மேற்கண்டவை உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் மாநில நெசவாளர் அணி செயலாளர் பரணி கே. மணி, வக்கீல் மணிராஜ், மாவட்ட துணை செயலாளர்கள் ரமேஷ்பாபு, எம்.எஸ்.கருணாநிதி, ஒன்றிய செயலாளர்கள் எம். ரகுநாதன், ஆர்.கந்தசாமி, எம்.எஸ்.மணியன் மற்றும் திரளான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். #DMK
    கரூர் பஸ் நிலையம் அருகே குக்கரை உடைத்து அ.தி.மு.க.வினர் நூதன போராட்டம் நடத்தினர்.

    கரூர்:

    கரூர் மாவட்ட அ.ம.மு.க. செயலாளரும், முன்னாள் அ.தி.மு.க. அமைச்சருமான வி. செந்தில்பாலாஜி அக்கட்சியில் இருந்து திடீரென விலகினார். பின்னர் சென்னை அறிவாலயத்தில் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினை சந்தித்து தன்னை இணைத்துக்கொண்டார். இது கரூர் மாவட்ட அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த நிலையில் கரூர் மாவட்ட அ.தி.மு.க.வினர் செந்தில்பாலாஜிக்கு வழியனுப்புவிழா என நூதன போராட்டத்தினை நடத்தினர். கரூர் மனோகரா கார்னரில் திரண்ட அ.தி.மு.க.வினர், தி.மு.க, பிறகு ம.தி.மு.க, அதன்பின்னர் அ.தி.மு.க, பின்னர் அ.ம.மு.க என மாறிய செந்தில்பாலாஜி தற்போது, 5-வது முறையாக தி.மு.க.விற்கு தாவியுள்ளார். விரைவில் கட்சி தாவலில் அவர் சாதனை புரிவார் என கூறி அவரது கட்சி மாற்றத்தை கிண்டலடித்து பட்டாசு வெடித்தனர். மேலும் “5-வது முறையாக கட்சி மாறுபவருக்கு வழியனுப்பு விழா” என்கிற வாசகங்கள் எழுதிய அட்டையினை கையில் ஏந்தி கண்டன கோ‌ஷங்கள் எழுப்பினர்.

    மேலும் இனிப்பும் வழங்கினர். இதையடுத்து குக்கருக்கு விசில் அடித்த செந்தில்பாலாஜி, அதனை வெடித்து சிதற வைத்து விட்டாரே... என கூறி அ.தி.மு.கவினர் குரல் எழுப்பினர். இதனை வெளிப்படுத்தும் விதமாக கரூர் பஸ் நிலையம் அருகே அலுமினிய குக்கரை தரையில் போட்டும், சம்மட்டியால் அடித்தும் நொறுக்கினர். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் ஓடோடி வந்து நொறுங்கிய குக்கர் பாகங்களை அள்ளிச்சென்றனர்.

    கரூர் அருகே பல்நோக்கு மைய கட்டிடத்தில் ரேசன்கடை மற்றும் ஆவின் பால் நிலையத்தை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் திறந்து வைத்தார்.

    கரூர்:

    கரூர் மாவட்டம், பரமத்தி வட்டம், பவித்திரம் ஊராட்சி, பள்ளமருதப்பட்டி பகுதியில் பல்நோக்கு மைய கட்டடத்தில் பகுதிநேர நியாய விலைக்கடை மற்றும் ஆவின் பால் நிலையம் திறப்பு விழா நடந்தது. கலெக்டர் த. அன்பழகன் தலைமை தாங்கினார். போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜய பாஸ்கர் அதனை திறந்து வைத்து முதல் விற்பனையை தொடங்கி வைத்தார்.

    தமிழக அரசு ஏழை, எளிய மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை தீட்டி முனைப்போடு செயல்படுத்தி வருகிறது. கரூர் மாவட்டத்தில் பொதுவிநியோக திட்டத்தின் கீழ் 583 நியாய விலைக் கடைகள் வாயிலாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் மூலம் அனைத்து நியாயவிலைக்கடைகளிலும் 20 கிலோ விலையில்லா அரிசி, சர்க்கரை உள்ளிட்ட அனைத்து பொருட்களும் வழங்கப்பட்டு வருகிறது. சிறு கனிம வள நிதி திட்டத்தின் கீழ் ரூ.7.80 லட்சம் மதிப்பில் இப்பல்நோக்கு கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இதில் பகுதி நேர நியாய விலைக்கடை மற்றும் ஆவின் நிலையம் இன்று பொதுமக்கள் பயன் பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது. முன்பு இந்த பகுதி நேர நியாயவிலைக்கடை தனியார் கட்டடத்தில் இயங்கி வந்தது. இங்கு 341 குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    விழாவில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் எஸ்.கவிதா, மாவட்ட வழங்கல் அலுவ லர் மல்லிகா, கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் சீனிவாசன், தாசில்தார் பிரபு (அரவக்குறிச்சி), வட்டார வளர்ச்சி அலுவலர் பழனிக்குமார், கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் ஏ.ஆர். காளியப்பன், மார்க்கண்டேயன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    திருச்சி, கரூர், கோவையை இணைக்கும் வகையிலான ஆறுவழி சாலை பணியை துரிதமாக மேற்கொண்டு விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என லாரி உரிமையாளர்கள் சங்கம் வலியுறுத்தி உள்ளது.
    கரூர்:

    கரூர் தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கரூரில் நடந்தது. கூட்டத்திற்கு, மாவட்ட தலைவர் வக்கீல் ராஜூ தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர் அதன்படி செயலாளர்ராக சிங்காரம், பொருளாளராக வி.கே.ஜி.கந்தசாமி, துணை செயலாளர்களாக நந்தகோபால், சந்திரசேகரன்  ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். கூட்டத்தில், பெட்ரோல்-டீசல் விலை காரணமாக லாரி தொழில் சரிவை நோக்கி செல்கிறது. எனவே அதன் விலையை குறைக்க மத்திய&மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். திருச்சி, கரூர், கோவையை இணைக்கும் வகையிலான ஆறுவழி சாலை பணியை துரிதமாக மேற்கொண்டு விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும். சுங்கசாவடி கட்டணத்தை குறைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், ஆடிட்டர் என்.கே.எம். நல்லசாமி உள்பட லாரி உரிமை யாளர்கள், டிரைவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். #tamilnews
    கரூரில் தூங்கும்போது ஜெனரேட்டர் புகை வீட்டினுள் முழுவதும் மண்டி, சுவாசிக்க முடியாமல் தூங்கிய நிலையிலேயே சுந்தரி, ராகவி மூச்சுதிணறி பரிதாபமாக உயிரிழந்தனர்.
    கரூர்:

    கரூர் ராமானுஜம் நகர் வாய்க்கால்மேடு ஜே.ஜே.நகரை சேர்ந்தவர் ராஜா(வயது 48). தள்ளுவண்டியில் பழக்கடை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி சுந்தரி(40). மகள் ராகவி(16), மகன்கள் ரஞ்சித்(14), ரகு(13). இதில் ராகவி சென்னையில் விடுதியில் தங்கி பிளஸ்-1 படித்து வந்தார். வேட்டமங்கலத்தில் ஒரு தனியார் பள்ளியில் விடுதியில் தங்கி ரஞ்சித் 9-ம் வகுப்பும், ரகு 8-ம் வகுப்பும் படித்து வருகின்றனர். சமீபத்தில் வானிலை ஆராய்ச்சி மையம் “ரெட்அலர்ட்” அறிவிப்பு வெளியிட்டது. இதையொட்டி ராகவியை, கரூரிலுள்ள வீட்டுக்கு வந்தார்.

    இந்தநிலையில் ஜே.ஜே.நகரில் ஒரு மின்கம்பத்தில் வயர்கள் ஒன்றோடொன்று உரசி தீப்பொறி கிளம்பியதால், சில நாட்களுக்கு முன்பு பல்வேறு வீடுகளுக்கு மின்வினியோகம் தடைபட்டது. மின்வாரிய ஊழியர்கள் வயர்களை சரிசெய்து வீடுகளுக்கு மின்வினியோகம் செய்தனர். எனினும் ராஜா வீட்டுக்கு மின்வினியோகம் கிடைக்கவில்லை. இதனால் நேற்று முன்தினம் இரவு தனது பழக்கடையில் இருந்த ஜெனரேட்டரை ராஜா வீட்டுக்கு எடுத்துவந்தார். அதிலுள்ள சுவிட்ச் பெட்டியிலிருந்து ஒரு டேபிள்பேனுக்கு மட்டும் இணைப்பு கொடுத்துவிட்டு வெளியே சென்றுவிட்டார்.

    இதையடுத்து சுந்தரி, அவரது மகள் ராகவி ஆகியோர் கதவினை லேசாக மூடிவிட்டு தூங்கினர். மண்எண்ணெயில் இயங்கிய அந்த ஜெனரேட்டரில் இருந்து இரவு முழுவதும் கரும்புகை வெளியேறியது. வீட்டின் வாசல் அருகே டேபிள்பேன் சுற்றியதால், ஜெனரேட்டர் புகை வீட்டினுள் பரவியது. தூங்கி கொண்டிருந்த சுந்தரியும், ராகவியும் இதை உணரவில்லை. ஒரு கட்டத்தில் வீட்டினுள் முழுவதும் புகை மண்டி, சுவாசிக்க முடியாமல் தூங்கிய நிலையிலேயே சுந்தரி, ராகவி மூச்சுதிணறி பரிதாபமாக உயிரிழந்தனர். நேற்று காலை வீட்டுக்கு வந்த ராஜா, தனது மனைவி, மகள் பிணமாக கிடந்ததை பார்த்து, கதறி அழுதார்.

    இதுகுறித்து கரூர் டவுன் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
    கரூரில் வாக்காளர் பட்டியல் திருத்த பணிகளை சிறப்பு அதிகாரி விஜயகுமார் ஆய்வு செய்தார்.
    கரூர்:

    கரூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தத்திற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் செய்தல் தொடர்பான சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் குளித்தலை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கடம்பர்கோவில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, மணத்தட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, கிருஷ்ணராயபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி, மாயனூர் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட வாக்குச்சாவடி மையங்களில் கரூர் மாவட்டத்திற்கு என நியமிக்கப்பட்டுள்ள வாக்காளர் பட்டியல் பார்வையாளரும், எல்காட் நிறுவன மேலாண்மை இயக்குனருமான எம்.விஜயகுமார் நேற்று வருகை தந்து ஆய்வு மேற்கொண்டார். அப்போது வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் விவரங்கள் குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாவட்ட கலெக்டருமான அன்பழகன் விளக்கி கூறினார்.

    அதனை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறைத்திருத்த பணிகள் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரதிநிதிகளுடனான ஆய்வுக்கூட்டம் வாக்காளர் பட்டியல் பார்வையாளர் விஜயகுமார் தலைமையில் மாவட்ட கலெக்டர் அன்பழகன் முன்னிலையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி சூர்யபிரகாஷ், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) செல்வசுரபி, வருவாய் கோட்டாட்சியர்கள் சரவணமூர்த்தி, லியாகத், அனைத்து வட்டாட்சியர்கள், வட்டார வளர்ச்சி அதிகாரிகள் உள்ளிட்ட அலுவலர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பின்னர் வாக்காளர் பட்டியல் பார்வையாளர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்கள் மற்றும் வாக்குச்சாவடி அமைவிடங்கள் ஆகியவற்றில் பொதுமக்களின் பார்வைக்காக வாக்காளர் பட்டியல் கடந்த செப்டம்பர் மாதம் 1-ந் தேதி முதல் வருகிற 31-ந் தேதி வரை வைக்கப்படுகிறது. இன்றுடன் (நேற்று) சேர்த்து 3 ஞாயிற்றுக்கிழமைகளில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதலுக்கான சிறப்பு முகாம் நடைபெற்று இருக்கிறது. தொடர்ந்து வருகிற 14-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) சிறப்பு முகாம் நடக்கிறது.

    இதுவரை நடைபெற்ற சிறப்பு முகாம்களில் மொத்தம் 14,033 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இதில் பெயர் சேர்த்தல் தொடர்பாக 10,453 மனுக்களும், பெயர் நீக்கல் தொடர்பாக 900 மனுக்களும், திருத்தம் மேற்கொள்ளுதல் தொடர்பாக 1,615 மனுக்களும், தொகுதிக்குள் முகவரி மாற்றம் தொடர்பாக 1,065 மனுக்களும் பெறப்பட்டுள்ளன. தேர்தல் குறித்த புகார்களுக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் உள்ள 04324-257502 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். 2019-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதியை தகுதி நாளாக கொண்டு 18 வயது பூர்த்தியான அனைவரும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்து கொள்ளவேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.
    கரூர் மாவட்டத்தில் செல்போன் மற்றும் 3 ஆயிரம் ரூபாய் பணம் திருடியதாக சிறுவன் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Karur
    கரூர்:

    கரூர் மாவட்டத்தில் சிறுவன் ஒருவன் செல்போன் மற்றும் 3 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடியதாக மர்ம நபர்கள் அவனிடம் விசாரிக்க வீட்டுக்கு வந்துள்ளனர். வந்தவர்கள் சிறுவன் மீது கொடூரமாக தாக்குதல் நடத்தியதில் சிறுவன் தனது வீட்டின் வாசலிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இந்த சம்பவத்தின் போது மர்ம நபர்களின் கொடூர தாக்குதலுக்கு அஞ்சி அங்கிருந்து தப்பிச்சென்ற சிறுவனின் தாயார் இலஞ்சியம், காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சிறுவனை தாக்கிய நபர்கள் யார்? என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    சாதாரண செல்போனை திருடியதாக குற்றம்சாட்டப்பட்ட விவகாரத்தில் சிறுவன் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Karur
    மாயனூர் கதவணையில் ஏற்பட்ட உடைப்பை சரியான நேரத்தில் சரி செய்யப்பட்டதால் திருச்சி- கரூர் மாவட்டம் மிகப்பெரிய அழிவில் இருந்து தப்பியுள்ளது. #MayanurDam
    திருச்சி:

    ஜூலை மாதம் தொடங்கிய தென்மேற்கு பருவமழை கர்நாடகாவில் கொட்டி தீர்த்தது, கேரளா மாநிலத்தை புரட்டி போட்டது. கேரளாவில் மழையின் கோர தாண்டவத்திற்கு 350-க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.

    10-க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. சுமார் 10 ஆயிரம் கோடி சேதம் ஏற்பட்டுள்ளது. 2.5 லட்சம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    கேரளா, கர்நாடகாவில் புரட்டி போட்ட மழை தமிழகத்தில் மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்தவில்லை என்றாலும் அனைத்து அணைகளையும் நிரப்பியது. 10 ஆண்டுகளுக்கு மேலாக வெள்ளத்தை பார்த்திராத காவிரி ஆறு, வைகை ஆறு, பவானி, அமராவதி போன்ற ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    திருச்சி காவிரி, கொள்ளிடமும் கடந்த 30 நாட்களாக பெருக்கெடுத்து ஓடுகிறது. கரைபுரளும் வெள்ளத்தை திரண்டு பார்த்து மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். வாய்க்கால்களில் ஓடும் தண்ணீரில் குளித்து மகிழ்ந்தனர்.

    தற்போது ஆற்றில் நீர்வரத்து ஆபத்து இல்லை என்பதால் அமைதி அடைந்துள்ளனர். ஆனால் திருச்சி- கரூர் மாவட்டம் மிகப்பெரிய அழிவில் இருந்து தப்பியுள்ளது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி இருப்பது பலரையும் மிரட்சியடைய வைத்துள்ளது.

    மேட்டூர் அணையில் இருந்தும் பவானி, அமராவதி அணைகளில் இருந்தும் வரும் தண்ணீர் மாயனூர் கதவணையில் தேங்கி வைக்கப்பட்டு பிறகு முக்கொம்புவிற்கு திறந்து விடப்படுகிறது. இந்த மாயனூர் கதவணையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு இடதுகரையில் 100 மீட்டர் தூரத்திற்கு திடீர் உடைப்பு ஏற்பட்டது.

    அதிர்ஷ்டவமாக அவ்வப்போது அணைகள் மற்றும் கரைகளை சென்று பார்வையிட்டு வந்த பொதுப்பணித்துறை அதிகாரிகள் மாயனூர் கதவணையில் ஆபத்தான அளவிற்கு இடது கரையில் உடைப்பு ஏற்பட்டுள்ளதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.



    கடந்த 10 நாட்களாக அணைக்கு 2 லட்சம் கன அடி நீர் வரை தண்ணீர் வந்ததால் கரை தாங்காமல் இந்த நிலை ஏற்பட்டுள்ளது என தெரியவந்தது. உடனடியாக உடைப்பு பகுதியில் பாறாங்கற்களை கொட்டி சரி செய்ய முடிவு செய்யப்பட்டது.

    தொட்டியம் மற்றும் காட்டுப்புத்தூர் பகுதிகளில் இருந்து பெரிய கருங்கற்களை மாயனூர் கதவணைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்காக ஒரே நேரத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட லாரிகள், புல்டோசர்கள், பொக்லைன்கள் பயன்படுத்தப்பட்டன.

    500 முதல் 600 லோடு வரை லாரிகளில் பெருங்கற்கள் குவாரிகளில் இருந்து கொண்டு வந்து இடது கரையில் குவிக்கப்பட்டன. சுமார் 28 மணி நேரங்களுக்கு பிறகு மாயனூர் இடதுகரை சரி செய்யப்பட்டு பலப்படுத்தப்பட்டது.

    இந்த பணிகள் நடைபெற்ற போது மாயனூர் அணைக்கு 2 லட்சத்து 30 ஆயிரம் கன அடி நீர் பாய்ந்து கொண்டிருந்தது. இடதுகரை உடைப்பு மட்டும் உரிய நேரத்தில் கண்டுபிடித்திருக்கபடாவிட்டால் கரை மேலும் உடைந்து முக்கொம்புவிற்கு போக வேண்டிய 2 லட்சம் கன அடி நீரும் வெளியேறி கரூர், முள்ளிப்பாடி, திருச்சி லால்குடி, முசிறி உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களுக்குள் புகுந்திருக்கும்.



    மிகப்பெரிய அழிவை ஏற்படுத்தி ஆயிரக்கணக்கான மனித உயிர்களை பலி வாங்கி இருக்கும் என கூறப்படுகிறது. உரிய நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டதால் திருச்சி மற்றும் கரூர் மாவட்டம் மிகப்பெரிய அழிவில் இருந்து தப்பியுள்ளது.

    பரந்து விரிந்து கடல் போல் காட்சியளிக்கும் மாயனூர் கதவணை 230 மீட்டர் அகலம் கொண்டது. 98 மதகுகள் உள்ளன. இந்த கதவணையில் தேக்கி வைக்கப்படும் தண்ணீர் மூலம் கரூர் மாவட்டத்தில் மட்டும் 22 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெறுகிறது.

    மாயனூர் அணைக்கரையில் ஏற்பட்ட 100 அடி உடைப்பு கண்டுபிடிக்கப்படாமல் போயிருந்தால் உடைப்பு பெரிதாகி அணைக்கு 1 வினாடிக்கு வந்து கொண்டிருந்த 2 லட்சம் கன அடி நீரும் உடைப்பு வழியாக வெளியேறி முசிறி, லால்குடிக்குள் புகுந்திருக்கும்.

    2 லட்சம் கனஅடி வெள்ளம் பாயும் பகுதிகள் புதிய ஆறாக மாறியிருக்கும். ஒரு காவிரியோ, ஒரு கொள்ளிடமோ முசிறி, லால்குடி பகுதியில் புதிதாக உருவாகியிருக்கும். அப்போது அது மிகப்பெரிய இயற்கை அழிவையும் மனித உயிர்பலியையும் ஏற்படுத்தியிருக்கும் என அதிகாரிகள் அதிர்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.

    தற்போது அணைக்கரையை நிரந்தரமாக சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே காவிரி, கொள்ளிடம் வெள்ளப்பெருக்கால் பல ஆயிரம் ஏக்கர் விவசாயபயிர்கள் மூழ்கியுள்ள நிலையில் இந்த பாதிப்பும் ஏற்பட்டிருந்தால் பேரழிவாக மாறியிருக்கும். #MayanurDam
    ×