search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 109311"

    தேனி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மாமனார் மற்றும் மருமகனை போலீசார் கைது செய்தனர்.
    தேனி:

    தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகில் உள்ள ஆனைமலையன்பட்டியை சேர்ந்தவர் ராசு (வயது62). இவரது மருமகன் ஜீவமணி (54). இவர்கள் 2 பேரும் டி.இ.எல்.சி. சர்ச் தெருவை சேர்ந்த 5 வயது சிறுமியை தங்களது வீட்டுக்கு அழைத்து வந்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி அலறியடித்தவாறு வீட்டை விட்டு வெளியேறி தனது தந்தையிடம் அழுதவாறு கூறி உள்ளார்.

    இதனை கேட்டதும் அதிர்ச்சி அடைந்த அவரது தந்தை ராயப்பன்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து ராசு மற்றும் ஜீவமணியை கைது செய்தனர். #tamilnews
    கற்பழிப்புக்கு ஆளான புற்றுநோய் பாதித்த சிறுமியின் கருவை கலைக்க மும்பை ஐகோர்ட்டு அனுமதி வழங்கியது. #BombayHighCourt #TeenCancer
    மும்பை:

    20 வாரங்களுக்கு மேல் வளர்ச்சி அடைந்த கருவை சட்டப்படி கோர்ட்டு அனுமதி பெற்றால் மட்டுமே கலைக்கமுடியும். இந்தநிலையில் கற்பழிப்பால் பாதிக்கப்பட்ட 14 வயது சிறுமி ஒருவரின் தந்தை தன் மகளின் 24 வார கருவை கலைக்க அனுமதி கோரி மும்பை ஐகோர்ட்டை அணுகினார். சிறுமிக்காக வாதாடிய வக்கீல், ’சம்பந்தப்பட்ட சிறுமி கடந்த 2010-ம் ஆண்டு முதல் ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதற்காக சிகிச்சை எடுத்து வருகிறார். இந்த நிலையில் சிறுமி 24 வார கர்ப்பமாக இருப்பது தற்போது தான் தெரியவந்தது. அவரின் கருவை கலைக்க அனுமதி அளிக்கவேண்டும்’ என்று கேட்டுக்கொண்டார்.

    மனுவை விசாரித்த நீதிபதிகள் ஒகா மற்றும் சோனக் அடங்கிய அமர்வு சிறுமியின் உடல்நிலையை பரிசோதித்து மருத்துவ அறிக்கை தாக்கல் செய்யுமாறு மருத்துவ குழுவுக்கு உத்தரவிட்டனர். அவர்கள் கொடுத்த அறிக்கையின் அடிப்படையில் சிறுமியின் கருவை கலைக்க அவர்கள் அனுமதி வழங்கினர்.

    மேலும் வழக்கு விசாரணையின்போது மனுதாரர் தரப்பு வக்கீல், ‘சிறுமி பள்ளிக்கு சென்று படித்து வந்ததாகவும், இந்த நிலையில் அவர் கற்பழிப்புக்கு ஆளானதால் படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டதாகவும்’ தெரிவித்தார். இதை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், சிறுமியின் படிப்பு மற்றும் எதிர்கால வாழ்க்கையை கருத்தில் கொண்டு, அவளின் பெற்றோர் மாநில சட்ட சேவை ஆணையத்தை அணுகி சட்ட உதவி மற்றும் சிறுமியின் கல்விக்கு தேவையான நிதி உதவியை பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தினர்.  #BombayHighCourt #TeenCancer 
    திருமங்கலம் அருகே திருமண ஆசைகாட்டி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
    பேரையூர்:

    திருமங்கலம் அருகே உள்ள எம்.சுப்புலாபுரத்தைச் சேர்ந்தவர் முத்துப்பாண்டி. இவரது மகன் அய்யனார் (வயது 26). விழாக்களுக்கு ரேடியோ செட் போடும் தொழிலாளி.

    இவர் அதே ஊரைச் சேர்ந்த 17 வயது சிறுமியை காதலித்துள்ளார். அப்போது திருமண ஆசை காட்டி சிறுமியுடன் தனிமையில் இருந்துள்ளார்.

    இந்த நிலையில் அய்யனார் நடவடிக்கையில் சிறுமிக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் தன்னை திருமணம் செய்யும்படி சிறுமி கூறினார். ஆனால் அய்யனார் அதற்கு உடன் படவில்லை.

    எனவே டி.கல்லுப்பட்டி போலீசில் சிறுமி புகார் செய்தார். திருமண ஆசை காட்டி, பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு தற்போது ஏமாற்றுவதாக புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

    அதன்பேரில் பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் (போக்சோ) போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி அய்யனாரை கைது செய்தனர். #tamilnews
    கோவையில் வீட்டில் விளையாடி கொண்டிருந்த 4 வயது சிறுமியை வளர்ப்பு நாய் கடித்து குதறியதையடுத்து தனியார் மருத்துவமனையில் தீவிர சிசிக்கை அளிக்கப்பட்டு வருகிறது.
    கோவை:

    கோவை சாய்பாபா காலனி சபாபதிவீதியை சேர்ந்த ஒரு தம்பதிக்கு 6 வயதில் ஒரு மகனும், 4 வயதில் ரித்விகா என்ற மகளும் உள்ளனர்.

    ரித்விகா அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் எல்.கே.ஜி. படித்து வருகிறாள். நேற்று இரவு பெற்றோர் வெளியே செல்ல வேண்டி இருந்ததால் குழந்தைகளை வீட்டில் வைத்து விட்டு கதவை பூட்டிச் சென்றனர்.

    இவர்களது வீட்டில் ‘நீமோ மேத்யூ’ வகை நாய் கூண்டில் அடைக்கப்பட்டு இருந்தது. நாய் தொடர்ந்து குரைத்துக் கொண்டே இருந்ததால் ரித்விகாவின் அண்ணன் கூண்டை திறந்து விட்டான். வெளியே பாய்ந்து வந்த நாய் அங்கு விளையாடிக் கொண்டிருந்த சிறுமி ரித்விகாவை கடித்துக்குதறியது. இதனால் ரித்விகா அலறித் துடித்தாள். 2 குழந்தைகளும் கத்தி கூச்சல் போட்டனர்.

    சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு விரைந்தனர். நாயிடம் இருந்து சிறுமியை மீட்ட அவர்கள் பெற்றோருக்கு தகவல் கூறினர். பெற்றோர் பதறியடித்துக் கொண்டு வீட்டுக்கு ஓடி வந்து, ரித்விகாவை அப்பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    தலை, முகம் உள்ளிட்ட இடங்களில் நாய் கடித்து குதறியதால் ரத்த வெள்ளத்தில் ரித்விகா மயக்கம் அடைந்த நிலையில் காணப்பட்டாள். இதனால் ரித்விகாவை தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர். #tamilnews
    உத்தரபிரதேசம் மாநிலம் கன்னாஜ் என்ற இடத்தில் மனைவியின் பிரசவ செலவுக்காக, பெற்ற குழந்தையை, தந்தை விற்பனை செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #pregnantwife #Kannauj
    கன்னாஜ்:

    உத்தரபிரதேச மாநிலம் கன்னாஜ் பகுதியைச் சேர்ந்தவர் அரவிந்த் பஞ்சாரா. சாதாரண கூலித் தொழிலாளி. இவரது மனைவி சுக்தேவி. இவர்களுக்கு 4 வயதில் ரோஷ்னி என்ற மகளும், 1 வயதில் ஜானு என்ற மகனும் உள்ளனர்.

    இந்த நிலையில் சுக்தேவி மீண்டும் கர்ப்பமானாள். 7 மாத கர்ப்பிணியாக இருந்த சுக்தேவிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. பல தனியார் ஆஸ்பத்திரிகளில் சென்று சேர்க்க முயன்றார். கட்டணம் அதிகம் கேட்டதால் சேர்க்காமல் கடைசியில் மாவட்ட மருத்துவமனையில் சேர்த்தார்.

    அங்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போது சுக்தேவிக்கு ரத்தம் செலுத்த வேண்டும், ரத்தம் செலுத்தினால்தான் உயிர் பிழைப்பாள், வெளியில் ரத்த வங்கியில் போய் வாங்கி வாருங்கள் என டாக்டர்கள் தெரிவித்தனர்.

    ரத்த வங்கிக்கு வந்த அரவிந்த் டாக்டர்கள் குறிப்பிட்ட ரத்தத்தை கேட்ட போது அதற்கு கட்டணமாக ஆயிரக்கணக்கில் பணம் கேட்டனர். அந்த அளவுக்கு பணம் இல்லை.



    இதனால் தவித்த அவர் மனைவி உயிரை காப்பாற்ற தனது 4 வயது சிறுமி ரோஷ்னியை விற்க முடிவு செய்தார். அங்குள்ள ஒருவரிடம் விற்று அந்தப் பணத்தின் மூலம் ரத்தம் வாங்கி ஆஸ்பத்திரிக்கு ஓடினார். அதன் பிறகு ரத்தம் செலுத்தப்பட்டு சுக்தேவி உயிர் பிழைத்தார்.

    இதுபற்றி அரவிந்த் கூறுகையில், மனைவி உயிரை காப்பாற்ற எனக்கு வேறு வழி தெரியவில்லை என்றார். தாய் சுக்தேவி கூறும் போது, குழந்தையை விற்க மனம் இல்லை. எங்களுக்கு வேறு வழியில்லை, பல ஆஸ்பத்திரிகளுக்கு சென்றும் பணம் இல்லாமல் சிகிச்சை அளிக்க மறுத்துவிட்டனர் என்றார். #pregnantwife #Kannauj
    புதுடெல்லியில் 6 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த பள்ளி வாகன ஓட்டுனர் மீது போக்ஸோ பிரிவில் வழக்குப்பதிவு செய்த போலீசார் குற்றவாளியை கைது செய்துள்ளனர். #NewDelhi
    புதுடெல்லி:

    இந்தியாவில் சமீப காலங்களில் பெண்கள் மற்றும் சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனை தடுக்க அரசும், பல்வேறு சமூக அமைப்புகளும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். சிறுமிகள் மீதான பாலியல் குற்றங்களை தடுக்க 12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமை சம்பவ குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கும் புதிய சட்டமும் இயற்றப்பட்டுள்ளது.

    இந்த சட்டம் இயற்றப்பட்டதற்கு பிறகு, சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமை சம்பவ குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், குற்றங்கள் அளவு அதிகரித்துக் கொண்டு வருவதாகவே தெரிகிறது.

    இந்நிலையில், நாட்டின் தலைநகர் டெல்லியில் உள்ள பளாம் கிராமத்தில் இயங்கும் தனியார் பள்ளியில் படிக்கும் 6 வயது சிறுமியை, பள்ளி வாகன ஓட்டுனர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுதொடர்பாக நேற்று காவல்நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் குற்றவாளி மீது போக்ஸோ பிரிவின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இதையடுத்து, வாகன ஓட்டுனரை கைது செய்த போலீசார் அவரிடம் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடரும் இதுபோன்ற சம்பவங்களால் சிறுமிகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி வருகிறது. #NewDelhi
    நாட்டறம்பள்ளி அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபரை பொதுமக்கள் அடித்து உதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
    நாட்டறம்பள்ளி:

    நாட்டறம்பள்ளி அருகே உள்ள புதுப்பேட்டை பக்கிரி மடம் கிராமத்தை சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 22) கூலி தொழிலாளி. இவரது வீட்டின் அருகே நேற்று மாலை 7 வயது சிறுமி விளையாடிக் கொண்டிருந்தார்.

    விக்னேஷ் சிறுமியிடம் பேசி வீட்டுக்குள் அழைத்து சென்றார். அங்கு வைத்து சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்றார். பயந்து போன சிறுமி அலறி கூச்சலிட்டார்.

    சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விக்னேஷ் வீட்டுக்குள் சென்று பார்த்தனர். அப்போது சிறுமியை பலாத்காரம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டிருந்த விக்னேசை அடித்து உதைத்து சிறுமியை மீட்டனர்.

    பின்னர் விக்னேஷை நாட்டறம்பள்ளி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் நாட்டறம்பள்ளி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. #tamilnews
    உத்தரகாண்ட் மாநிலத்தில் 11 வயது சிறுமியை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்த சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். #Uttarakhand
    டேராடூன்:

    இந்தியாவில் பெண்கள் மற்றும் சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையை கூடுமான வரையில் சரிசெய்ய மத்திய, மாநில அரசுகளுக்கு வலியுறுத்தப்பட்டு வருகிறது.

    ஜார்காண்ட் மாநிலத்தின் பக்தா என்ற கிராமத்தில் வீடு புகுந்து சிறுமியை கடத்தி, பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த சிறுமியை வீடு புகுந்து கடத்தி சென்ற 4 பேர், அவரை பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர்.

    அதோடு நின்றுவிடாத அந்த கொடியவர்கள், அந்த 11 வயது சிறுமியை கொலை செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், இதில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவத்தை கண்டித்தும், குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து உரிய தண்டனை வழங்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். #Uttarakhand
    மத்திய பிரதேச மாநிலத்தில் 4 வயது பெண் குழந்தையை பாலியல் வன்புணர்வு செய்த 14 வயது சிறுவன் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவனை தீவிரமாக தேடி வருகின்றனர்.
    போபால்:

    இந்தியாவில் பெண்கள் மற்றும் சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமைகளுக்கு தூக்கு தண்டனை வரை சட்டங்கள் கடுமையாக்கப்பட்டாலும், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இந்த கொடுமை தொடர்ந்துகொண்டே இருக்கிறது.

    இந்நிலையில், மத்திய பிரதேச மாநிலம் ஜல்வா எனும் கிராம பகுதியில் 4 வயது சிறுமியை 14 வயது சிறுவன் பாலியல் வன்புணர்வு செய்த கொடூரம் நடந்துள்ளது. சிறுவன் தொலைக்காட்சி பார்ப்பதாக அடிக்கடி வீட்டுக்கு வருவான் என்றும், அவ்வாறு வந்தபோது இந்த மாபாதக செயலில் ஈடுபட்டதாகவும் சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து, தலைமறைவாக இருக்கும் சிறுவன் மீது போக்ஸோ சட்டப்பிரிவின் படி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    14 வயது சிறுவனுக்கு இதுமாதிரியான செயலை செய்வதற்கான துணிச்சலும், தேவையும் வரும் அளவுக்கு நம் சமூக அமைப்பு இருக்கிறதோ? என்ற கேள்வி இங்கு அனைவரும் தங்களுக்குள்ளாக கேட்க வேண்டிய நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. 
    மத்திய பிரதேசத்தில் சிறுமி கற்பழிப்பு வழக்கு தொடர்பான விசாரணைகள் முடிந்த 3 நாளில் வாலிபருக்கு தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டது.
    போபால்:

    மத்திய பிரதேச மாநிலம் சாகர் மாவட்டம் ரேகளி நகர் அருகே முகினி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்த 10 வயது சிறுமி கடந்த ஜூலை மாதம் 18-ந் தேதி கற்பழிக்கப்பட்டார். இது தொடர்பாக நரேஷ் என்ற வாலிபரை போலீசார் அதே தினத்தில் கைது செய்தனர்.

    சிறுமியை கற்பழித்த வழக்கில் வாலிபர் நரேசுக்கு சாகர் மாவட்ட கோர்ட்டு நீதிபதி சுதான்சு சக்சேனா தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

    மத்திய பிரேதச மாநிலத்தில் 12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்பவர்களுக்கு தூக்கு தண்டனை அளிக்கும் வகையில் சட்டசபையில் ஒருமனதாக மசோதா கடந்த டிசம்பர் மாதம் நிறைவேற்றப்பட்டது. இந்த புதிய சட்டத்தின்படி மரண தண்டனை விதிக்கப்பட்டது. இந்திய தண்டனை சட்டம் 376-வது பிரிவின்படி தூக்கு தண்டனை கொடுக்கப்பட்டது.

    இந்த வழக்கில் விசாரணை முடிந்த 3 தினங்களில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அனைத்து விசாரணையும் முடிந்து 3 நாளில் தீர்ப்பு அளிக்கப்பட்டது சாதனையாகும்.

    சாகர் மாவட்டத்தில் 12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை கற்பழிக்கும் வழக்கில் 3-வது முறையாக தூக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இதே கோர்ட்டில் கடந்த மாதம் இதே மாதிரியான வழக்கில் ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
    உத்தரப்பிரதேச மாநிலத்தில் 14 வயது சிறுமியை 2 நபர்கள் கடத்தி, பாலியல் வன்புணர்வு செய்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர்களை தேடி வருகின்றனர். #UttarPradesh
    உத்தரப்பிரதேசம்:

    இந்தியாவில் பெண்கள் மற்றும் சிறுமிகள் மீதான வன்கொடுமை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அதற்கு கடுமையான சட்டங்கள் இயற்றப்பட்டு வரும் நிலையிலும் குற்றங்கள் குறையவில்லை என்பதாக தெரிகிறது.

    உத்தரப்பிரதேச மாநிலம், மிரான்பூர் பகுதியில் நேற்று காலை கடைக்கு சென்ற 14 வயது சிறுமி 2 நபர்களால் மோட்டார் வாகனத்தில் கடத்தி செல்லப்பட்டார். ஒரு ரகசிய இடத்துக்கு அந்த சிறுமியை கொண்டு சென்ற அந்த இருவரும் பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர். பிறகு அவர்கள் இருவரும் அந்த பெண்ணை மாலை விடுவித்தனர்.

    வீடு திரும்பிய சிறுமி நடந்தவற்றை கூற அதிர்ச்சியடைந்த பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த சம்பவம் குறித்து தஜிம், மற்றும் ஃபிரோஸ் ஆகிய இருவர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த இந்த இருவரையும் பிடிக்கும் முயற்சியில் போலீசார் மிகவும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். #UttarPradesh
    12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை கற்பழிப்போருக்கு மரண தண்டனை விதிக்க வகை செய்யும் சட்டத்துக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்தார். #President #RamNathKovind #DeathPenalty
    புதுடெல்லி:

    காஷ்மீரின் கதுவாவில் சிறுமி ஒருவர் கற்பழித்து கொலை செய்யப்பட்ட சம்பவமும், உத்தரபிரதேசத்தின் உன்னாவ் நகரில் 17 வயது சிறுமி ஒருவர் எம்.எல்.ஏ. உள்ளிட்டோரால் கற்பழிக்கப்பட்ட சம்பவமும் கடந்த சில மாதங்களுக்கு முன் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

    இதைத்தொடர்ந்து சிறுமிகளை கற்பழிப்போருக்கு மரண தண்டனை விதிக்கும் வகையில் கடந்த ஏப்ரல் 21-ந் தேதி மத்திய அரசு அவசர சட்டம் பிறப்பித்தது. பின்னர் இந்த அவசர சட்டத்துக்கு பதிலாக புதிய சட்ட திருத்த மசோதாவை சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் மத்திய அரசு தாக்கல் செய்தது.



    குற்றவியல் சட்டம் (திருத்தம்) மசோதா 2018 என்ற இந்த மசோதா நாடாளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேறியது. இதைத்தொடர்ந்து ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்ட இந்த மசோதாவுக்கு, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று முன்தினம் ஒப்புதல் வழங்கினார். இதன் மூலம் இந்த சட்டம் அமலில் வந்துள்ளது.

    குற்றவியல் (சட்ட திருத்தம்) சட்டம் என அழைக்கப்படும் இந்த சட்டம், கடந்த ஏப்ரல் 21-ந் தேதி முதலே அமலுக்கு வந்ததாக கருதப்படும் என மத்திய அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டு உள்ளது.

    இதன் மூலம் இந்திய தண்டனை சட்டம், இந்திய சாட்சிகள் சட்டம் 1872, குற்றவியல் நடைமுறை சட்டம் 1973 மற்றும் போக்சோ சட்டம் 2012 ஆகியவற்றில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

    இந்த புதிய சட்டம், கற்பழிப்பில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை வழங்க வழிவகுக்கிறது. குறிப்பாக 12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை கற்பழிப்போருக்கு மரண தண்டனை வழங்கப்படும். இதில் குறைந்தபட்ச தண்டனையாக 20 ஆண்டு அல்லது வாழ்நாள் சிறைத்தண்டனை விதிக்கப்படும்.

    இந்த சிறுமிகளை கூட்டு பலாத்காரத்தில் ஈடுபடுவோருக்கு வாழ்நாள் சிறை அல்லது மரண தண்டனையும் விதிக்க வகை செய்கிறது.

    16 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை கற்பழிப்போருக்கான குறைந்தபட்ச சிறைத்தண்டனை 10 ஆண்டுகளில் இருந்து 20 ஆண்டாக அதிகரிக்கப்படுகிறது. இது வாழ்நாள் சிறையாக அதிகரிக்கவும் வழி வகுக்கிறது. இந்த சிறுமிகளை கூட்டு பலாத்காரம் செய்வோருக்கு வாழ்நாள் சிறை விதிக்கப்படும்.

    இந்த கற்பழிப்பு வழக்குகளை விரைவாக விசாரித்து முடிக்கவும் இந்த சட்டம் வழிவகுப்பது குறிப்பிடத்தக்கது.  #President #RamNathKovind #DeathPenalty
    ×