search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருப்பத்தூர்"

    திருப்பத்தூரில் பறக்கும்படை சோதனையில் ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
    திருப்பத்தூர்:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலையொட்டி பணம் கொடுப்பதை தடுக்க பறக்கும் படை அமைக்கபட்டு சோதனை செய்யபட்டது. தேர்தல் கடந்த 18-ந் தேதி நடந்தது.

    வாக்கு எண்ணிக்கை நடக்காததால் தேர்தல் விதி அமலில் உள்ளது. இதனால் மீண்டும் சோதனை நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. வேலூர் மாவட்டத்தில் 39 பறக்கும் படைகள் சோதனை நடத்தி வருகின்றன.

    திருப்பத்தூர் பெங்களூர் ரோட்டில் நள்ளிரவு பறக்கும் படையினர் சோதனை நடத்தினர்.

    அப்போது பசலிகுட்டையை சேர்ந்த கிருஷ்ணன் (34) என்பவர் காரில் வந்தார். காரை சோதனையிட்ட போது உரிய ஆவணங்களின்றி ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் பணம் இருந்தது.

    அதனை பறிமுதல் செய்து திருப்பத்தூர் தாசில்தார் அனந்தகிருஷ்ணனிடம் ஒப்படைத்தனர்.

    திருப்பத்தூரில் பறக்கும்படைசோதனையில் சிக்கிய ரூ.3½ லட்சத்துடன் அதிகாரிகள்.

    திருப்பத்தூர் அருகே இருதரப்பினர் மோதல் சம்பவத்தில் 13 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் அருகே உள்ள குரும்பேரி கிராமத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 2 பிரிவினருக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

    இந்த நிலையில், ஒரு பிரிவை சேர்ந்த இளைஞர்கள் சிலர் மோட்டார் சைக்கிளில் ‘சைலன்சரை’ கழற்றிவிட்டு, அதிக ஒலி எழுப்பியவாறு மற்றொரு பிரிவினர் இருக்கும் பகுதிக்குள் சென்றனர். அதனை அவர்கள் தட்டிக்கேட்ட போது, மீண்டும் தகராறு ஏற்பட தொடங்கியது.

    அதேபோல் மற்றொரு பிரிவை சேர்ந்தவர்கள் நேற்று முன்தினம், கோவில் மாட்டினை அழைத்து வரும்போது தகராறு ஏற்பட்டது. மேலும் அங்குள்ள தலைவர் ஒருவரின் சிலை அருகில் காலி மதுபாட்டில்கள் கிடந்தன. அதனை மற்றொரு பிரிவை சேர்ந்தவர்கள் தான் வீசியுள்ளார்கள் என நினைத்து கேட்டதால் இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    நேற்றும் வாக்குவாதம் நீடித்தது. இதில் இரு பிரிவினரும் ஒருவரையொருவர் கல், கையால் தாக்கி கொண்டனர். இந்த சம்பவத்தில் வெங்கடேசன் தரப்பை சேர்ந்த நீலகண்டன் (வயது 24), ஸ்ரீதர் (24) ஆகிய 2 பேருக்கும், சாந்தலிங்கம் தரப்பை சேர்ந்த அன்பரசு, செங்கல்வராயன், ஜெகதீசன் ஆகிய 3 பேருக்கும் காயம் ஏற்பட்டது.

    பின்னர் அவர்கள் சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். மேலும் வீடுகள் மீது கற்கள் வீசப்பட்டதாக தெரிகிறது.

    இந்த சம்பவங்களின் தொடர்ச்சியாக 3 மோட்டார்சைக்கிள்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டது. இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது.

    தகவல் அறிந்த திருப்பத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜேசுராஜ் தலைமையில், இன்ஸ்பெக்டர் உலகநாதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அங்கு ஆயுதப்படை போலீசாரும் வரவழைக்கப்பட்டனர். அசம்பாவிதம் எதுவும் ஏற்படாத வகையிலும் பதற்றத்தை தணிக்கவும் 100 -க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.

    இந்த நிலையில் சிகிச்சை பெற்று வரும் ஒருதரப்பை சேர்ந்தவர்களை பார்த்துவிட்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் சுபாஷ்சந்திரபோஸ் திருப்பத்தூர் சப்-கலெக்டரிடம் புகார் மனு அளித்தார். பின்னர் அங்கிருந்து குரும்பேரி கிராமத்திற்கு தனது ஆதரவாளர்களை அழைத்துக் கொண்டு, 4 கார்களில் புறப்பட்டார்.

    அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், சுபாஷ்சந்திரபோஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வந்த வாகனங்களை நிறுத்தினர். அவர்களிடம், ‘‘ஊர் முழுவதும் போலீசாரின் முழுகட்டுப்பாட்டிற்குள் உள்ளது, யாரும் அத்துமீறி உள்ளே வரக்கூடாது’’ என கூறி, அவர்களை திருப்பி அனுப்பினர்.

    இப்பிரச்சினை தொடர்பாக இருதரப்பை சேர்ந்த 13 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    வேலூர் மாவட்டத்தை 3-ஆக பிரிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்துள்ளார். #Vellore #MinisterVeeramani
    வேலூர்:

    வேலூர் மண்டலத்திற்கு ரூ.6 கோடி மதிப்பில் ஒதுக்கப்பட்ட 24 பஸ்களில் 16 பஸ்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தொடங்கி வைக்கப்பட்டது.

    இதில் மேலும், 8 புதிய பஸ்கள் இயக்க நிகழ்ச்சி வேலூர் புதிய பஸ் நிலையத்தில் நடந்தது. கலெக்டர் ராமன் தலைமை தாங்கினார். அமைச்சர் கே.சி.வீரமணி கலந்து கொண்டு கொடியசைத்து புதிய பஸ்களை தொடங்கி வைத்தார்.

    இதில் சென்னையிலிருந்து வேலூர் வழியாக ஓசூருக்கு 3 பஸ்களும், வேலூரிலிருந்து திருச்சிக்கு ஒரு பஸ்சும், வேலூரிலிருந்து ஈரோட்டுக்கு ஒரு பஸ்சும், ஆம்பூரிலிருந்து அம்பத்தூருக்கு ஒரு பஸ்சும், பேரணாம்பட்டிலிருந்து ஆவடிக்கு ஒரு பஸ்சும், குடியாத்தத்திலிருந்து சோழிங்கநல்லூருக்கு ஒரு பஸ்சும் இயக்கப்படுகிறது.

    இதைத் தொடர்ந்து அமைச்சர் கே.சி.வீரமணி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறுகையில்:- ‘‘வேலூரை 2 மாவட்டமாக பிரிக்க ஏற்கனவே பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன. ஆனால் வேலூர் மாவட்டத்தை வேலூர், அரக்கோணம், திருப்பத்தூர் என 3 மாவட்டமாக பிரித்தால் சிறப்பாக இருக்கும் என்ற கருத்தை முதல்- அமைச்சரிடம் வலியுறுத்தி உள்ளேன். நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் உறுதி அளித்து உள்ளார். அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது’’ என்றார். #Vellore #MinisterVeeramani
    திருப்பத்தூர் அருகே கஜா புயலால் மின்சாரம் தடைபட்டது தொடர்பாக கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். #Gajastorm

    திருப்பத்தூர்;

    கஜா புயல் காரணமாக தமிழகத்தில் நாகை, புதுக்கோட்டை உள்ளிட்ட 7 மாவட்டங்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகின.

    புயல் எதிரொலியால் சிவகங்கை மாவட்டத்தில் அதிக மழை பதிவானது. மேலும் அங்கு பலத்த காற்று வீசியதால் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்து மின்கம்பங்கள் சேதமானது.

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள காரையூர் கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.

    கடந்த வாரம் கஜா புயல் தாக்கத்தின் காரணமாக இந்தப்பகுதியில் மின் கம்பங்கள் சாய்ந்து விழுந்ததால் அந்தப்பகுதி முழுவதும் மின்சாரம் தடை பட்டது. இதனால் கிராம மக்கள் கடும் அவதியடைந்தனர்.

    இது குறித்து திருப்பத்தூர் மின் வாரியத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து மின் ஊழியர்கள் காரையூர் பகுதியில் மின் கம்பங்களை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது காரையூர் கிராமத்தில் ஒரு பகுதிக்கு மட்டும் மீண்டும் மின்சாரம் வினியோகம் செய்யப்பட்டது. மற்றொரு பகுதி இருளில் மூழ்கியது.

    இது தொடர்பாக பலமுறை புகார் தெரிவித்தும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இதை கண்டித்து நேற்றிரவு காரையூர் பகுதி கிராம மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் திருப்பத்தூர்- சிங்கம்புணரி ரோட்டில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்த தாசில்தார், திருப்பத்தூர் போலீஸ் டி.எஸ்.பி. மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது மின்சாரம் விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது. இதையடுத்து கிராமமக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

    போராட்டம் நடந்து முடிந்தபின் மின் வாரிய ஊழியர்கள் காரையூர் பகுதியில் மின்கம்பங்களை சீரமைத்தனர். இதைத் தொடர்ந்து மின் வினியோகம் செய்யப்பட்டது. #Gajastorm

    திருப்பத்தூர் அருகே கேரள வாலிபர் மர்மமான முறையில் தூக்கில் பிணமாக தொங்கினார்.

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் அருகே உள்ள இலவம்பட்டி கிராமத்தையொட்டி உள்ள காட்டுபகுதியில் உள்ள மரத்தில் இன்று காலை வாலிபர் ஒருவர் தூக்கில் பிணமாக தொங்கினார்.

    இதனைக்கண்டு திடுக்கிட்ட பொதுமக்கள் திருப்பத்தூர் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிணத்தை கைப்பற்றினர். வாலிபர் சட்டையில் அவரது செல்போன் இருந்தது.

    இதன்மூலம் இறந்து கிடந்த வாலிபர் கேரள மாநிலம் கர்னூல் பகுதியை சேர்ந்த விஜயகுமார் (27) என்பது தெரியவந்தது.

    வாலிபர் இங்கு எப்படி வந்தார். அவரை கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டார்களா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பத்தூர் அருகே மண் சரிந்து தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் அருகே உள்ள குருசிலாபட்டு கூடபட்டுகாலனியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 55). கூலி தொழிலாளி. இவர் நேற்று காக்னாம்பாளையம் சுடுகாடு அருகே மணல் அள்ளிக் கொண்டிருந்தார்.

    அப்போது எதிர்பாராமல் திடீர் என மணல் சரிந்து ராஜேந்திரன் மீது விழுந்தது. இதில் ராஜேந்திரன் மூச்சு திணறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடிதுடித்து இறந்தார்.

    இது குறித்து தகவலறிந்த குறிசிலாபட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மாநில அளவிலான 3 நாட்கள் வாலிபால் போட்டி திருப்பத்தூர் அரசு பூங்கா சாலையில் உள்ள சப்-கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள மைதானத்தில் தொடங்கியது.
    திருப்பத்தூர்:

    திருப்பத்தூரில் மாநில அளவிலான 3 நாட்கள் வாலிபால் போட்டி திருப்பத்தூர் அரசு பூங்கா சாலையில் உள்ள சப்-கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள மைதானத்தில் மின்னொளியில் நேற்று தொடங்கியது.

    போட்டியில் ஆண்களுக்கான பிரிவில் இந்தியன் வங்கி வருமான வரி துறை அணி, கஸ்டம்ஸ் அணி உள்பட பிற அணிகளும், இதேபோல் பெண்களுக்கான அணியில் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் அணி, ஈரோடு அணி விளையாட்டு மேம்பாட்டு துறை அணி உட்பட பிற அணிகளும் மோதுகின்றன.

    இந்த போட்டியை திருப்பத்தூர் சப்-கலெக்டர் பிரியங்கா, வேலூர் மாவட்ட பி‌ஷப் டாக்டர் சவுந்தரராஜன், திருப்பத்தூர் தொகுதி நல்லதம்பி எம்.எல்.ஏ., அ.ம.மு.க. ஞானசேகர், தொழிலதிபர் கணேஷ்மல் உட்பட பலர் போட்டியை தொடங்கி வைத்தனர்.

    வெற்றி பெறும் அணிக்கு முதல் பரிசாக ரூ.2 லட்சம் உட்பட பல்வேறு பரிசுகளை அமைச்சர் கே.சி.வீரமணி கலந்து கொண்டு பரிசுகளை வழங்குகிறார். இந்த போட்டியை காண திருப்பத்தூரில் இருந்து ஏராளமானோர் வந்து பார்த்தனர். போட்டிக்கான ஏற்பாடுகளை திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி வாலிபால் முன்னாள் மாணவர்கள் மற்றும் அப்பூனிஸ் கிளப் செய்திருந்தனர்.
    திருப்பத்தூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பத்தூரில் எல்.ஐ.சி. முகவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    திருப்பத்தூர்:

    எல்.ஐ.சி. பாலிசிதாரர்களுக்கு பாலிசியின் மீது வழங்கப்படும் போனஸ் தொகையை உயர்த்த வேண்டும், பிரிமிய தொகையின் மீதும், தாமத கட்டணத்தின் மீதும் விதிக்கப்படும் ஜி.எஸ்.டி. வரியை நீக்க வேண்டும், காலாவதியான பாலிசிகளை புதுப்பித்தலுக்கான கால அளவை 2 ஆண்டில் இருந்து 5 ஆண்டுகளாக மாற்ற வேண்டும், லாபம் ஈட்டும் நிறுவனங்களில் மட்டும் எல்.ஐ.சி. நிதியை முதலீடு செய்ய வேண்டும், ஐ.ஆர்.டி.ஏ. நிர்ணயித்துள்ள அளவிற்கு முகவர்களுக்கு கமிஷன் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பத்தூரில் எல்.ஐ.சி. முகவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த ஆர்ப்பாட்டத்திற்கு முகவர்கள் சங்க துணைத்தலைவர் பிரேம்குமார் தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் சங்க செயலாளர் வீரப்பன், மாவட்ட செயலாளர் சிவசுப்பிரமணியன் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் பொருளாளர் மகாலிங்கம் நன்றி கூறினார். இதனைத்தொடர்ந்து 7-ந்தேதி வரை ஆர்ப்பாட்டம் தொடரும் என்றும், எல்.ஐ.சி. வாரவிழாவை புறக்கணிக்க போவதாகவும் தெரிவித்தனர். 
    திருப்பத்தூர் அருகே பெட்ரோல் பங்க் ஊழியர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தருமபுரி:

    திருப்பத்தூரை அடுத்த கவுதம்பேட்டையை சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மகன் சுதர்சன் (வயது 25). இவர் பெட்ரோல் பங்கில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

    இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்து என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒன்றரை வயது மதிக்கத்தக்க மோனீஸ்வரன் என்ற ஆண் குழந்தை ஒன்று உள்ளது.

    சம்பவத்தன்று பெட்ரோல் பங்கில் வேலை பார்த்த சுதர்சன் வீட்டிற்கு செல்லாமல் அங்கேயே தங்கிவிட்டார். இதுகுறித்து அவரது மனைவி அவரிடம் கேட்டு தகராறு செய்துள்ளார். இதனால் மனம் உடைந்து காணப்பட்ட சுதர்சன் பெட்ரோல் பங்கில் உள்ள பைப்பை எடுத்து தனது உடலில் பெட்ரோல் ஊற்றி நடுரோட்டில் நின்று தீ வைத்து கொண்டார். அப்போது தீ உடல் முழுவதும் பரவியதால் வலியால் அவர் அலறி துடித்தார்.

    இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் சுதர்சனை மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சுதர்சன் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து திருப்பத்தூர் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
    திருப்பத்தூரில் குழந்தை கடத்தல் குறித்து வாட்ஸ்-அப்பில் வீடியோ வெளியிட்டு வதந்தி பரப்பிய கட்டிட மேஸ்திரியை போலீசார் கைது செய்தனர்.
    திருப்பத்தூர்:

    வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தில் குழந்தை கடத்தல் கும்பல் ஊடுருவியதாக வாட்ஸ்-அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கடந்த சில நாளாக வதந்தி பரப்பப்பட்டு வந்தது.

    இதன் எதிரொலியாக போளூர் அருகே உள்ள களியம் கிராமத்தில் சென்னை பல்லாவரத்தை சேர்ந்தவர்கள் சென்ற காரை மறித்த கிராம மக்கள், குழந்தை கடத்தல் கும்பல் என்று நினைத்து கொடூரமாக தாக்கினர்.

    இதில் ருக்மணி என்ற மூதாட்டி சம்பவ இடத்திலேயே இறந்தார். 4 பேர் பலத்த காயமடைந்தனர். இதுதொடர்பாக, 11 கிராமங்களை சேர்ந்த 46 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் பலரை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள்.

    இதையடுத்து, குழந்தை கடத்தல் வதந்தியை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க போலீசார் முடிவு செய்தனர். செய்யாறில் குழந்தை கடத்தல் வதந்தி குறித்து வதந்தி பரப்பிய வாட்ஸ்-அப்பில் செல்பி வீடியோ வெளியிட்ட சக்தி என்ற கட்டிட மேஸ்திரியை போலீசார் வீடு புகுந்து கைது செய்தனர்.

    இந்த நிலையில், அதே போன்று திருப்பத்தூரிலும் குழந்தை கடத்தல் குறித்து வாட்ஸ்-அப்பில் வீடியோ வெளியிட்டு வதந்தி பரப்பிய கட்டிட மேஸ்திரி கைது செய்யப்பட்டுள்ளார்.

    திருப்பத்தூர் அடுத்த ஆதியூர் ராவுதம்பட்டியை சேர்ந்தவர் ஜெகதீசன் மகன் யாதவமூர்த்தி (வயது 31). கட்டிட மேஸ்திரியான இவர், கடந்த 2 நாட்களுக்கு முன்பு வாட்ஸ்-அப்பில் ஒரு வீடியோ வெளியிட்டார். அந்த வீடியோ வைரலாக பரவியது. வீடியோவில், 400 வடமாநிலத்தவர்கள் குழந்தை கடத்த ஊடுருவி உள்ளனர்.

    ஒருவன் சிக்கி விட்டான். மீதமுள்ள 399 பேரை எங்கு பார்த்தாலும் அடித்து கொள்ளுங்கள். ஆந்திராவில் குழந்தை கடத்தல் கும்பலை போலீசார் என்கவுண்டர் செய்கின்றனர். தமிழக போலீசார் எதற்கும் லாயக்கில்லை. குழந்தை கடத்தல்காரர்களை பொதுமக்கள் பிடித்து கொடுத்தாலும், போலீசார் விடுவிக்கின்றனர் என்று பேசி இருந்தார்.

    இந்த வீடியோ குறித்து எஸ்.பி. பகலவன் உத்தரவின் பேரில், திருப்பத்தூர் டி.எஸ்.பி. ஜேசுராஜ் தலைமையில் தாலுகா இன்ஸ்பெக்டர் உலக நாதன், சப்-இன்ஸ்பெக்டர் பிரசன்னா மற்றும் போலீசார், யாதவமூர்த்தியை தேடி பிடித்து கைது செய்தனர்.

    தவறான தகவல் பரப்புதல் உள்ளிட்ட 2 பிரிவுகளில் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.


    திருப்பத்தூரில் 2 மாத குழந்தைக்கு ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருப்பது தெரியவந்ததையடுத்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
    திருப்பத்தூர்:

    வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் புதுப்பேட்டை ரோடு பகுதியை சேர்ந்தவர் சரவணன் கூலித்தொழிலாளி இவரது மனைவி லாவண்யா.

    இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. கடந்த 2 மாதத்திற்கு முன்பு லாவண்யாவுக்கு 2-வது பெண் குழந்தை பிறந்தது.

    இந்நிலையில், கடந்த சில நாட்களாக 2 மாத குழந்தை மயங்கிய நிலையிலும், அடிக்கடி மூச்சு திணறல் ஏற்பட்டும் அவதிப்பட்டு வந்தது. இதனால், பெற்றோர் குழந்தையை திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை டாக்டர் செந்தில்குமார் பரிசோதித்தார்.

    அப்போது, ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, குழந்தையை உடனடியாக வார்டில் அனுமதித்து சுவாச கருவிகள் பொருத்தினர். பின்னர், குழந்தைக்கு இன்சுலின் செலுத்தி படிப்படியாக சர்க்கரையின் அளவை குறைத்தனர்.

    பிறந்த குழந்தைகளுக்கு மஞ்சள் காமாலை, நிமோனியா, வைரஸ் காய்ச்சல் போன்ற நோய்கள் தாக்கும். ஆனால், இந்த குழந்தைக்கு ரத்தத்தில் சர்க்கரையின் அளவு 787 ஆக இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தேன். பின்னர் குழந்தைக்கு இன்சுலின் செலுத்தி படிப்படியாக சர்க்கரையின் அளவு 300 ஆக குறைக்கப்பட்டது.

    தற்போது குழந்தையின் சர்க்கரை அளவை குறைத்து அதன் உயிரை காப்பாற்றியுள்ளோம்.

    கருவுற்றிருக்கும் போது உடல் உறுப்புகளில் பாதிப்பு இருக்கிறதா? என்றுதான் நாங்கள் கண்டறிய முடியும். ஆனால், இந்த குழந்தையின் கணையம் செயல்பாட்டினை கண்டறியவில்லை. இப்போது அதற்கும் வசதி வாய்ப்புகள் வந்திருக்கிறது.

    கருவில் இருக்கும் போதே குழந்தையின் உடல் நலனை தெரிந்து கொள்ள முடியும். இக்குழந்தையின் பிரச்சனைக்கு ஜீன் பிரச்சனையாக இருக்கலாம். வம்சா வழியாக இதுபோன்ற நோய்கள் வர வாய்ப்புகள் இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    குழந்தையின் உயிரை காப்பாற்றிய டாக்டருக்கு பெற்றோர் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர். தற்போது குழந்தைக்கு வேலூர் சி.எம்.சி. ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
    திருப்பத்தூரில் மது குடித்து வந்ததை மனைவி கண்டித்ததால் ஸ்டேசனரி கடை அதிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
    திருப்பத்தூர்:

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் குறிஞ்சி நகரைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 46). இவர் அதே பகுதியில் ஸ்டேசனரி கடை நடத்தி வருகிறார்.

    இவருக்கு கலைச்செல்வி என்ற மனைவியும், ஆர்த்தி (18), லட்சுமி (17) என்ற மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.

    சுப்பிரமணியன் அடிக்கடி மது அருந்தியதால் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. நேற்றும் சுப்பிரமணியன் மது குடித்து வந்ததால் கலைச்செல்வி கண்டித்தார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது

    இதையடுத்து கலைச்செல்வி தனது மகள்கள், மகனுடன் வீட்டின் மேல் மாடியில் உள்ள அறைக்கு தூங்கச்சென்றார்.

    அதன் பிறகு மன வேதனையில் இருந்த சுப்பிரமணியன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    நள்ளிரவு நேரத்தில் அவரது மகள் வந்து பார்த்த போது தந்தை தற்கொலை செய்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    இது குறித்த புகாரின் பேரில் திருப்பத்தூர் நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #Tamilnews
    ×