search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 109600"

    • ஸ்ரீவில்லிபுத்தூரில் தெருக்களில் ஓடும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. கால்வாய்களை தூர்வார பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • இந்தப்பகுதியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பெருமாச் சேரி தெரு திருவண்ணாமலை ஊராட்சியின் எல்லையில் உள்ளது. இந்தப்பகுதியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரு கின்றனர். இங்கு பல மாதங்களாக கழிவுநீர் கால்வாய்கள் முறையாக தூர்வாரப்பட வில்லை என கூறப்படுகிறது.

    இதனால் கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டு தெருக் களில் கழிவுநீர் தேங்குகிறது. கால்வாயின் குறுக்கே உள்ள தரைப்பாலத்தில் அடைப்பு ஏற்பட்டு உள்ளதால் கழிவு நீர் வடியாமால் குடியிருப்பு களை சுற்றி தேங்கி நிற்கிறது.

    அங்கன்வாடி மையம், சமுதாய கூடம், சிறுவர் பூங்கா மற்றும் கோயில் அருகிலும் கழிவு நீர் தேங்கி உள்ளது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு குழந்தை கள் மற்றும் பொதுமக்களுக்கு நோய்த்தொற்று பரவும் அபாயம் உள்ளது.

    எனவே கழிவுநீர் கால் வாய்களை தூர்வார வேண் டும் என்றும், தெருக்களில் கழிவுநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண் டும் எனவும் திருவண்ணா மலை ஊராட்சி நிர்வாகத் திற்கு பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பல்வேறு குற்றச் சம்பவங்களும் நடந்துவருகின்றன.
    • குப்பைகள், கோழி கழிவுகள் கொட்டப்படுவதால் தண்ணீர் மாசடைந்து விட்டது.

    குடிமங்கலம் : 

    பி.ஏ.பி., வாய்க்கால் ஓரங்களில் திருட்டுத்தனமாக மது, போதை வஸ்து விற்பது, மரங்களை தீ வைத்து எரிப்பது, வெட்டி கடத்து வது, வெள்ளை வேளாண் மரத்தில் பட்டை உரிப்பது, தண்ணீர் திருட்டு, கொலை செய்துவாய்க்காலில் வீசுவது, தற்கொலை செய்து கொள்வது என பல்வேறு குற்றச் சம்பவங்களும் நடந்துவருகின்றன.வாய்க்காலில்இருந்து மீட்கப்படும்உடல்கள் அழுகி விடுவதால்இறப்பு க்கானமுழுமையான காரணத்தையும் கண்டறிய முடிவதில்லை. போலீசாரும் கண்டு கொள்வதில்லை. வாய்க்கால் முழுக்க உடைந்த மதுபாட்டில்கள், குப்பைகள், கோழி கழிவுகள் கொட்டப்படுவதால் தண்ணீர்மாசடைந்து விட்டது. கால்நடைகள் கூட குடிக்க தகுதியற்றதாக மாறி வருகிறது.பல இடங்களில் வாய்க்கால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு கழிவுநீர் நேரடியாக வாய்க்காலில் கலக்கப்படுகிறது. சிலர் வீடு, காம்பவுண்ட் சுவர் கட்டி குடியிருந்து வருகின்றனர். செப்டிக் டேங்க் கூட வாய்க்காலில் கட்டப்பட்டு ள்ளது. சில இட ங்களில் வாய்க்காலையே காணவில்லை.பாசனத்தை முறைப்படுத்தவும், வா ய்க்காலை கண்காணிக்கவும் நூற்றுக்கும் மேற்பட்ட அதிகாரிகள், 134 பாசன சபை தலைவர்கள், 876 ஆட்சி மன்ற குழு உறுப்பினர்கள், பாசன சபை தலைவர்களால் தேர்ந்தெடுக்கப்படும் ஒன்பது பகிர்மான குழு தலைவர்கள், ஒரு திட்ட குழு தலைவர் உள்ளனர். ஆனாலும் வாய்க்காலை கண்காணிக்கவும் சட்டவிரோத செயல்களை தடுக்கவோ யாரும் குரல் கொடுப்பதில்லை என்ற மனக்குறை விவசாயிகள் மத்தியில் அதிகரித்துள்ளது.

    திருப்பூர் மாநகராட்சி நொச்சிப்பாளையம் பிரிவு திருவள்ளுவர் நகர் சாலையில் வசிக்கும் செல்வகுமார் என்பவர் முதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவில்,திருவள்ளுவர் நகரில் உள்ள சத்துணவு அங்கன்வாடி மையத்தின் பின் நீண்ட நெடுங்காலமாக பி.ஏ.பி., வாய்க்கால் பயன்பாட்டில் இருந்து வருகிறது.இக்கால்வாய் மேற்புறமுள்ள தனியார் பள்ளி நிர்வாகத்தினர், கால்வாயை ஆக்கிரமித்து கட்டடம் கட்ட 2, 3 முறை முயற்சி மேற்கொண்டனர். மக்களின் ஆட்சேபனையை தொடர்ந்து அவர்களது முயற்சி கைவிடப்பட்டது.தற்போது மீண்டும் ஆக்கிரமிப்பு செய்து கட்டுமான பணி செய்கின்றனர். இது குறித்து கலெக்டர் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

    • குட்டை அருகில் உறிஞ்சு குழி அமைத்து அதில் விடுவதாகவும் தகவல்கள் வருகிறது.
    • கரைப்புதூர் ஊர் குட்டை மாசு அடைந்துவிடும்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சி கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் தலைவர் பாரதி சின்னப்பன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கரைப்புதூர் கிராமத்தை சேர்ந்த பொது மக்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சியில் உள்ள ஆதித்யா கார்டன், அண்ணா நகர் பகுதியில் இருந்து வரும் கழிவு நீரை மழை நீர் வடிகால் என்ற பெயரில் கழிவு நீர் கால்வாய் அமைத்து, கரைப்புதூருக்கு நீர் ஆதாரமாக இருந்து வரும் ஊர் குட்டையில் விடுவதாகவும், அல்லது குட்டை அருகில் உறிஞ்சு குழி அமைத்து அதில் விடுவதாகவும் தகவல்கள் வருகிறது. இதனால் கரைப்புதூர் ஊர் குட்டை மாசு அடைந்துவிடும். இந்த குட்டை நீரை நம்பி வாழும் கரைப்புதூர் மக்களுடைய நீராதாரம் பாதிக்கப்படும். உலக தண்ணீர் தினத்தின் மகிமையை மக்களுக்கு விழிப்புணர்வு மூலம் உணர்த்த கிராம சபை கூட்டம் நடத்தி குடிநீர் மற்றும் சுகாதார பிரச்சனைக ளுக்கு தீர்வு காண தமிழக அரசு வழி வகை செய்துள்ளது. கரைப்புதூர் ஊராட்சி ஊர் குட்டையில் இருந்து 500 மீட்டர் தொலை வில் ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சி பகுதிக்குள் உறிஞ்சு குழிஅமைத்து கரைப்புதூர் மக்களுடைய நீர் ஆதாரத்தை, பாதுகாத்து தரும்படி கேட்டு கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • குடியிருக்க வீடு இல்லாதவர்களுக்கு வீட்டுவசதி வாரியம் மூலம் வீடுகள் வழங்கப்பட்டுள்ளது.
    • குடியிருப்பவர்கள் உடல்நலம் பாதிக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர் .

    அவினாசி :

    திருப்பூர் மாவட்டம் அவினாசி சூளை பகுதியில் 448 வீடுகளுடன்அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. குடியிருக்க வீடு இல்லாதவர்களுக்கு வீட்டுவசதி வாரியம் மூலம் வீடுகள் வழங்கப்பட்டுள்ளது. இங்குள்ள வீடுகளிலிருந்து வெளியாகும் கழிவுநீர் குடியிருப்புகளுக்கு மத்தியில்தெப்பக்குளம்போல தேங்கி நிற்பதால் குடியிருப்பவர்கள் உடல்நலம் பாதிக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர் .

    இதுகுறித்து அவர்கள் கூறுகையில் , இங்கு கழிவுநீர் வெளியேற எந்தவித முன் எச்சரிக்கை நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இதனால் அனைத்து வீடுகளின் கழிவுநீரும் பல மாதஙகளாக குடியிருப்புகளுக்கு மத்தியில் சேறும் சகதியுமாய் தேங்கி நிற்கிறது. இதில் ஏராளமான கொசு மற்றும் புழுக்கள் உற்பத்தியாகி அப்பகுதி மக்களுக்கு தொற்றுநோய் பரவுகிறது. குழந்தைகள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். அத்துடன் அங்குள்ள சிறுவர் சிறுமியர்கள் தேங்கி நிற்கும் சாக்கடை குழியின் ஆழம் தெரியாமல் அங்கு விளையாடுவதால் விபரீதம் ஏற்பட வாய்ப்புள்ளது. இது பற்றி ஊராட்சி ஒன்றிய அலுவலகம், பேரூராட்சி அலுவலகம் மற்றும் கலெக்டர் உள்ளிட்டோருக்கு பலமுறை கோரிக்கை மனு கொடுத்தும் எந்த பயனுமில்லை. எனவே அடுத்தகட்ட நடவடிக்கையாக குடியிருப்பவர்கள் சார்பாக போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்றனர்.

    • கீழ்புத்துப்பட்டு ஊராட்சிக்கு உட்பட்ட மொனயம்பேட்டை கிராமத்தில் சாலையில் கழிவுநீர் குட்டை போல் தேங்கியுள்ளது
    • இவற்றால் அந்தப் பகுதியில் கொசு உற்பத்தியாகி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது


    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் ஒன்றியம் கீழ்புத்துப்பட்டு ஊராட்சிக்கு உட்பட்ட மொனயம்பேட்டை கிராமத்தில் சாலையில் கழிவுநீர் குட்டை போல் தேங்கியுள்ளது. இவற்றால் அந்தப் பகுதியில் கொசு உற்பத்தியாகி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே ஊராட்சி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்து அப்பகுதி மக்களின் சுகாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • சாயப்பட்டறைகளில் இருந்து வெளியேற்றப்பட்ட கழிவுகள் நொய்யல் ஆற்றில் கலந்த காரணத்தால் தண்ணீர் சாக்கடை போலாகிவிட்டது.
    • நொய்யல் ஆறு மீட்பு இயக்கத்தினரும் பராமரிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    திருப்பூர் :

    கோவை, திருப்பூர், கரூர் ஆகிய மாவட்ட மக்களின் விவசாயம், குடிநீர் ஆதாரமாக நொய்யல் ஆறு விளங்கி வந்தது. இந்தநிலையில் சில ஆண்டுகளாக பனியன் கம்பெனிகள் மற்றும் சாயப்பட்டறைகளில் இருந்து வெளியேற்றப்பட்ட கழிவுகள் நொய்யல் ஆற்றில் கலந்த காரணத்தால் தண்ணீர் சாக்கடை போலாகிவிட்டது.

    இதையடுத்து நொற்றல் ஆற்றை பாதுகாக்க கோரி சமூக ஆர்வலர்கள் பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்களை செய்தனர். மேலும் தமிழக அரசு, சுற்றுப்புற சூழல் மற்றும் வன அமைச்சகத்திடம் புகார் தெரிவித்தனர். தமிழக அரசு சாய ஆலைகளில் இருந்து கழிவுகளை நொய்யல் ஆற்றில் திறந்து விடப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்துள்ளது. அவ்வப்போது நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. இதனிடையே நொய்யல் ஆறு மீட்பு இயக்கத்தினரும் பராமரிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் திருப்பூர் ஸ்ரீசக்தி தியேட்டர் தரைப்பாலம் அருகே இரண்டு புறத்திலும் இருந்து கால்வாய் வழியாக வெளியேற்றப்படும் கழிவு நீர் அருவி போல ஆற்றில் கலந்து கொண்டிருக்கிறது. இது நகரின் முக்கிய பகுதியாகும். மழைநீர் வெளியேறுவதற்காக தெருக்கள் மற்றும் வீதிகளில் கால்வாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் சாயக்கழிவுகளை திறந்து விடுகின்றனர். பல்வேறு சாயப்பட்டறைகள் மற்றும் வீடுகள், ஓட்டல்களில் இருந்து கழிவுகள் வெளியேற்றப்படுகிறது. தனியார் தொழிற்சாலையில் இருந்து கழிவு நீரை வெளியேற்ற கூடாது என்று பாதாளச் சாக்கடை திட்டம் நிறைவேற்றப்பட்டு கழிவு நீரை வெளியேற்ற ஏற்பாடு செய்யப்பட்டது. அதன் மூலம் கழிவுகளை வெளியேற்றாமல் நொய்யல் ஆற்றில் வெளியேற்றுவது எந்த வகையில் சரியானது என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர். இந்த நிலை நீடித்தால் நொய்யல் ஆறு மிகவும் பாழடைய வாய்ப்புள்ளது. இது குறித்து மாநகராட்சி நிர்வாகமும், மாவட்ட அதிகாரிகளும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். 

    • கழிவுநீர் கால்வாய் உடைந்துவிட்டது.
    • கழிவுநீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஒடுகிறது

    ஊட்டி,

    குன்னூர் 11-வது வார்ட்டில் பழைய ஆஸ்பத்திரி குடியிருப்பு பகுதி உள்ளது. இப்பகுதியில் கடந்த 8 ஆண்டுகளாக எந்த ஒரு பணியும் நடைபெறவில்லை. அந்தப்பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாய் உடைந்துவிட்டது. இதனால் கழிவுநீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஒடுகிறது.

    இதனால் அந்த பகுதியே சாக்கடை நிரம்பி நடக்க முடியாமலும், துர்நாற்றமும் வீசி வருகிறது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமமும் அடைந்து வருகின்றனர். மேலும் நோய் தொற்று பரவும் அபாயமும் உள்ளதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே கழிவுநீர் கால்வாயை சீரமைக்க வேண்டும் என மக்களிடம் கோரிக்கை எழுந்துள்ளது.

    இதுகுறித்து மக்கள் கூறும்போது, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்ற போது சில பணிகள் நடந்தன. ஆனால் அப்போது கூட மக்களுக்கு தேவையான பிரதான அடிப்படை வசதியான நடைபாதை மற்றும் கழிவுநீர் கால்வாய் சீரமைக்கப்படவில்லை. இது குறித்து பலமுறை கூறியும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. எனவே போர்க்கால அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.

    • சுப்பராயக்கவுண்டர் திருமண மண்டபம் அருகே 4-வது வீதிக்கு நேற்று காலை குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது.
    • தண்ணீர் பிடிப்பதை நிறுத்தி விட்டனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சி 26-வது வார்டுக்குட்பட்ட சாமுண்டிபுரத்தை அடுத்த சுப்பராயக்கவுண்டர் திருமண மண்டபம் அருகே 4-வது வீதிக்கு நேற்று காலை குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. இதையடுத்து அப்பகுதி மக்கள் வீடுகளில் பாத்திரங்களில் தண்ணீரை பிடித்தனர். அப்போது குடிநீருடன் கருப்பு நிறத்தில் கழிவுநீரும் கலந்து வந்துள்ளது. மேலும் குடிநீரில் துர்நாற்றம் வீசி உள்ளது.

    இதனால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். மேலும் உடனடியாக தண்ணீர் பிடிப்பதை நிறுத்தி விட்டனர். இதுபோன்ற சுகாதாரமற்ற வகையில் குடிநீர் வினியோகம் செய்வதை மாநகராட்சி நிர்வாகம் முறைப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    • சென்னை குடிநீர் வாரியம், குடிநீர் மற்றும் கழிவு நீரகற்று வரி, குடிநீர் கட்டணங்களை வசூலிக்கும் முறையினை நவீன இணைய அமைப்பிற்கேற்ப மேம்படுத்தி உள்ளது.
    • இணைய வசதி மூலம் நுகர்வோர்கள் தாங்கள் செலுத்த வேண்டிய நிலுவை தொகையினை தெரிந்து கொள்ளவும் பணம் செலுத்தும் ரசீதினை பதிவிறக்கம் செய்து கொள்ளவும் இயலும்.

    சென்னை:

    சென்னை குடிநீர் வாரியத்துக்கு ஆண்டுக்கு 2 முறை குடிநீர் வரியும், கழிவுநீர் கட்டணமும் செலுத்த வேண்டும். இதனை குடிநீர் வாரிய அலுவலகங்களில் பொதுமக்கள் நேரில் சென்று செலுத்தலாம். ரொக்கமாகவோ, காசோலையாகவோ செலுத்தும் முறை நடைமுறையில் உள்ளது.

    இதற்காக ஒவ்வொரு நுகர்வோருக்கும் கட்டணம் செலுத்த அட்டை வழங்கப்பட்டு வந்தது. அந்த அட்டை மூலமாக வரி செலுத்தும் போது அதில் பதிவு செய்து தரப்படும்.

    நவீன தொழிற்நுட்ப வளர்ச்சியின் காரணமாக இணையதளம் வழியாக தற்போது குடிநீர், கழிவுநீர் கட்டணம் செலுத்துகின்றனர். இந்த நிலையில் பொதுமக்கள் அட்டையை பயன்படுத்தி குடிநீர், கழிவுநீர் கட்டணம் செலுத்தும் முறை ஏப்ரல் 1-ந்தேதி முதல் ரத்து செய்யப்படுகிறது.

    இதுகுறித்து சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சென்னை குடிநீர் வாரியத்தின் நுகர்வோர்கள் குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வரி, குடிநீர் கட்டணங்களை செலுத்துவதை டிஜிட்டல் கட்டண முறையில் ஊக்குவிக்கும் முறையில் வரிசையில் காத்திருக்கும் நேரத்தை தவிர்க்கவும் மற்றும் காகித பயன்பாட்டை குறைக்கவும் ஏப்ரல் 1-ந்தேதி முதல் நுகர்வோர் அட்டை வழங்கப்படமாட்டாது.

    நுகர்வோர்களுக்கு 5 வருடங்களுக்கு ஒருமுறை நுகர்வோர் அட்டை சென்னை குடிநீர் வாரியத்தால் வழங்கப்படுகிறது. தற்போது 2020-ம் ஆண்டில் 2020-21 முதல் 2024-25 வரையிலான கால கட்டத்திற்கு அனைத்து நுகர்வோர்களுக்கும் நுகர்வோர் அட்டை வழங்கப்பட்டுள்ளது.

    சென்னை குடிநீர் வாரியம், குடிநீர் மற்றும் கழிவு நீரகற்று வரி, குடிநீர் கட்டணங்களை வசூலிக்கும் முறையினை நவீன இணைய அமைப்பிற்கேற்ப மேம்படுத்தி உள்ளது.

    இந்த இணைய வழியிலான கட்டண நுழை வாயிலைப் பயன்படுத்தி கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு மற்றும் நெட் பேங்கிங் மூலமாக செலுத்தலாம். மேலும் யு.பி.ஐ. கியூஆர் குறியீடு மற்றும் பி.ஏ.எஸ். போன்ற பிற கட்டண முறைகளையும் பயன்படுத்தி நுகர்வோர்கள் தங்களின் குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வரி, குடிநீர் கட்டணங்களை செலுத்தவும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    இந்த இணைய வசதி மூலம் நுகர்வோர்கள் தாங்கள் செலுத்த வேண்டிய நிலுவை தொகையினை தெரிந்து கொள்ளவும் பணம் செலுத்தும் ரசீதினை பதிவிறக்கம் செய்து கொள்ளவும் இயலும். மேலும் வசூல் மையத்தில் பணம் செலுத்தும் போது அளிக்கப்படும் கணினி ரசீது பணம் செலுத்தியதற்கான பதிவாக கருதப்படும்.

    எனவே நுகர்வோர்களுக்கு ஏப்ரல் 1-ந்தேதி முதல் புதியதாக நுகர்வோர் அட்டை வழங்கப்படமாட்டாது. மேலும் ஏற்கனவே உள்ள நுகர்வோர் அட்டையிலும் பணம் செலுத்தப்பட்டதற்காக எந்த பதிவும் செய்யப்படமாட்டாது என சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்து உள்ளது.

    • ரூ. 75 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள கட்டிடத்தை பார்வையிட்டார்.
    • கழிவுநீர் தடையின்றி தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்குமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    திருவாரூர்:

    திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சுகாதாரபணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ ஆய்வு மேற்கொண்டார்.பின்னர் மாவட்ட அவர் கூறியதாவது:-

    திருவாரூர் மருத்து வக்கல்லூரி மருத்துவ மனையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் இயங்கிவரும் சகி ஒருங்கிணைந்த சேவை மையத்தினை மாவட்ட கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    தொடர்ந்து, மருத்துவக்கல்லூரியில் தேசிய நகர்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் பார்வையாளர்கள், உடன் தங்கும் நபர்கள் தங்குவதற்காக ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் கட்டுப்பட்டுள்ள கட்டட த்தினை பார்வையிட்டார்.

    பின்னர், மருத்துவ மனையில் ஒருங்கிணைந்த பேறுகால அவசர சிகிச்சை மற்றும் சிசு தீவிர சிகிச்சை பராமரிப்பு மையத்தை ஆய்வு செய்தார்.

    மருத்துவக்கல்லூரியில் கழிவுநீர் செல்லும் வடிகா லினை பார்வையிட்டு, கழிவுநீர் தடையின்றி தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்குமாறு உரிய அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    இந்த ஆய்வில் வருவாய் கோட்டாட்சியர் சங்கீதா, திருவாரூர் அரசு மருத்து வக்கல்லூரி முதல்வர் ஜோசப்ராஜ் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் உடனிருந்தனர்.

    • வைப்பாற்றில் கழிவுநீர்கலக்கும் விவகாரம் தொடர்பாக விருதுநகர் கலெக்டர் பதிலளிக்க வேண்டும்.
    • மதுரை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.

    விருதுநகர்

    சாத்தூர் அருகே படந்தாலை சேர்ந்தவர் அய்யப்பன். இவர் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதில் கூறியிருப்பதாவது:-

    விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வைப்பாற்றில் கழிவுநீர் கலக்கப்பட்டு வருகிறது. தேனி மாவட்டம் வருசநாட்டு மலை பகுதியில் இருந்து வைப்பாற்றுக்கு தண்ணீர் வருகிறது.

    இந்த தண்ணீர் மூலம் சாத்தூர் மற்றும் சுற்று வட்டார கிராம பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. ஆனால் ஆற்றின் பல இடங்களில் கழிவுநீர் கலப்பதால் மாசு அடைந்துள்ளது. இதுதொடர்பாக நகராட்சியிடமும், மாசு கட்டுப்பாட்டு வாரியத்திட மும் புகார் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. இதுதொடர்பாக தகுந்த நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

    இந்த மனு மீதான விசாரணை நீதிபதி சுவாமிநாதன் அமர்வு முன்பு வந்தது.அப்போது வைப்பாற்றில் கழிவுநீர் கலப்பது தொடர்பாக விருதுநகர் மாவட்ட கலெக்டர், மாசு கட்டுப்பாட்டு அலுவலர், பொதுப்பணித்துதுறை அதிகாரி ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை 2 வாரத்துக்கு ஒத்திவைத்தார்.

    • ஒவ்வொரு மாதமும் 2-வது, 4-வது சனிக்கிழமைகளில் சிறப்பு தூய்மை பணி செய்யப்படுகிறது.
    • கழிவுநீரை மேலாண்மை செய்தல் போன்ற விழிப்புணர்வு செய்யப்படுகிறது.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி நகராட்சி பகுதிகளில் தூய்மை பணியில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு பாராட்டு சான்று வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது, ஆணையர் பிரதான் பாபு தலைமை வகித்தார்.

    நகர்மன்ற துணை தலைவர் ஜெயப்பிரகாஷ், கவுன்சிலர் எழிலரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர், எழிலரசன்நகர்மன்ற தலைவர் கவிதாபாண்டியன் பாராட்டு சான்று வழங்கி பேசும்போது,

    திருத்துறைப்பூண்டியில் தூய்மை நகரங்களுக்கான மக்கள் இயக்கம் செயல்படுத்த ப்படுகிறது.

    இத்திட்டத்தின் மூலம் நகராட்சியின் 24 வார்டுகளிலும், தூய்மை பணியை சிறப்பாக செயல்படுத்த அப்பகுதி மக்களை ஒருங்கிணைத்து ஒவ்வொரு மாதமும் இரண்டாவது நான்காவது சனிக்கிழமைகளில் சிறப்பு தூய்மை பணி செய்யப்படுகிறது.

    அப்போது மக்களிடம் குப்பைகளை தரம் பிரித்து வழங்குவதன் அவசியம், வீடுகளிலேயே குப்பைகளை மக்கவைக்கும் அமைப்பை ஏற்படுத்துதல், கழிவுநீரை மேலாண்மை செய்தல் போன்ற விழிப்புணர்வு செய்யப்படுகிறது.

    இதன் தொடர்ச்சியாக தூய்மையை கடைப்பிடிக்கும் வர்த்தக நிறுவனங்கள், திருமண மண்டபங்கள், உணவகங்கள், பள்ளிகள் ஆகியவற்றிற்கு பாராட்டு சான்று வழங்கி கெளரவிக்கப்படுகிறது.

    இதன்மூலம் தூய்மையான நகரை கொண்டுவர முடியும் என்றார்.

    சிறப்பாக செயல்படும் மங்கை மகால் திருமண மண்டபத்திற்கும், தூய்மை குறித்த விழிப்புணர்வு பணி செய்யும் பாலம் சேவை நிறுவனத்திற்கும் , சிறப்பாக செயல்பட்ட துப்புரவு பணியாளர்களுக்கும் பாராட்டு சான்று வழங்கப்பட்டது.

    தூய்மை பணியாளர்க ளுக்கு நகர ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் ஷைமா தலைமையில் மருத்துவ பரிசோதனை நடந்தது. தூய்மை இந்தியா இயக்க மேற்பார்வையாளர் அம்பிகா நன்றி கூறினார்.

    ×