என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 109600"
- திருமங்கலம் அரசு பெண்கள் பள்ளி வளாகத்தில் கழிவுநீர் செல்லும் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டுள்ளது.
- துர்நாற்றம் வீசுவதோடு நோய் பரவும் அபாயம் ஏற்படுவதாக மாணவிகள் தலைமை ஆசிரியர்களிடம் தெரிவித்தனர்.
திருமங்கலம்
மதுரை மாவட்டம் திருமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 1800 மாணவிகள் பயின்று வருகின்றனர்.
திருமங்கலம் கல்வி மாவட்டத்தில் சிறந்த பள்ளியாக விளங்கக்கூடிய அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் கழிவுநீர் செல்லும் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டது. இதனால் கழிவுநீர் செல்ல வழி இன்றி பாதாள சாக்கடை வழியாக பள்ளி வளாகத்திற்குள் குளம் போல் தண்ணீர் தேங்கி நிற்கிறது.
கழிவுநீர் துர்நாற்றம் வீசுவதோடு நோய் பரவும் அபாயம் உள்ளது என்று மாணவிகள் தலைமை ஆசிரியர்களிடம் தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து தலைமை ஆசிரியர், நகராட்சி ஆணையாளருக்கு புகார் தெரிவித்தார். அதன் பின்னரும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் மாணவிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
இது குறித்து மாணவிகள் கூறியதாவது:-
கடந்த ஒரு வாரமாக கழிவுநீர் செல்லக்கூடிய பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் கழிவறையில் இருந்து வரக்கூடிய தண்ணீர் அனைத்தும் வெளியேறி பள்ளி வளாகத்தில் தேங்கி உள்ளது. அங்கிருந்து துர்நாற்றம் வீசுவதால் மதிய வேளையில் உணவு உண்ண கூட முடியாத சூழ்நிலை உள்ளது.
மைதான பகுதியில் தண்ணீர் தேங்கி இருப்பதால் கடும் அவதிக்குள்ளாகி வருகிறோம். எனவே சம்பந்தப்பட்டநகராட்சி அதிகாரிகள் பாதாள சாக்கடை அடைப்பை நீக்கி கழிவுநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- சாக்கடை கழிவுநீர் செல்வதற்கு போதிய சாக்கடை வசதி இல்லாததால் தண்ணீர் தேங்கி நின்று சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.
- குடிநீரில் சாக்கடை நீர் கலந்து வருவதாக கூறி 50க்கும் மேற்பட்டவர்கள் மாநகராட்சி அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் :
திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட 45-வது வார்டு காங்கேயம் ரோடு புளியமரத்தோட்டம் பகுதியில் 25 க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இதில் பலதரப்பட்ட கூலி தொழிலாளர்கள் வாடகைக்கு வசித்து வருகின்றனர். இந்நிலையில் அந்த வீடுகளில் இருந்து வெளியேறும் சாக்கடை கழிவுநீர் செல்வதற்கு போதிய சாக்கடை வசதி இல்லாததால் தண்ணீர் தேங்கி நின்று சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. குடிநீரில் சாக்கடை நீர் கலந்து வருவதாக கூறி அப்பகுதியை சேர்ந்த சுமார் 50க்கும் மேற்பட்டவர்கள் திருப்பூர் மாநகராட்சி மைய அலுவலகத்தில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெண்கள் கூறும்போது , நாங்கள் பலமுறை மாநகராட்சி நிர்வாகத்திடம் மனு அளித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும் வரை நாங்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம் . நடவடிக்கை எடுக்கவில்லை எனில் தீக்குளித்து தற்கொலை செய்து கொள்வோம் என கூறிக்கொண்டு திருப்பூர் மாநகராட்சி மைய அலுவலகத்தில் பெண்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
- முதுகுளத்தூர் பேருராட்சி மன்றக்கூட்டம் நடந்தது.
- கழிவுநீரை சுத்திகரிக்க ரூ.5 கோடி நிதிஉதவி கேட்கப்பட்டுள்ளது.
முதுகுளத்தூர்
முதுகுளத்தூர் பேரு ராட்சி மன்றக்கூட்டம் பேரூராட்சி தலைவர் ஏ.ஷாஜஹான் தலைமையில் நடைபெற்றது. பேரூராட்சி நிர்வாக அதிகாரி மாலதி முன்னிலை வகித்தார். ராஜேஷ் அனைவரையும் வரவேற்றார். கூட்டத்தில் 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கவுன்சிலர் மோகன்தாஸ்:-
தி.மு.க. 7-வது வார்டு வீடு கட்டுபவர்கள் சன்சைடு மற்றும் வாசல்படிகளை ரோட்டில் கட்டுவதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதால் பேரூராட்சி சார்பில் சர்வேயர் நியமிக்க வேண்டும்.
தலைவர் ஷாஜகான்:- சர்வேயர் நியமிக்க நடவடிக்கை நிலையில் தற்போது கழிவுகள் தேங்கி துர்நாற்றம் வீசுவதால் கூடுதல் துப்புரவு பணியாளர்களை நியமித்து சுத்தப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உம்முகர்தா (தி.மு.க.):-
கழிவுநீர் கால்வாய் சுத்தம் செய்தவுடன் கழிவுகளை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். இல்லையேல் மீண்டும் கால்வாயிலே கோழிகளால் கொத்தி தள்ளிவிடப்படுகிறது.
தலைவர் ஷாஜகான்:-
4 கூடுதல் துப்புரவுப் பணியாளர்களை நியமித்து கழிவுநீர் கால்வாய்களை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். சுந்தரம்பாள் (தி.மு.க.):- கழிவுநீர் தேங்குவதை தடுக்க ஜே.சி.பி. மூலம் கழிவுகளை அப்புறப்படுத்த வேண்டும்.
தலைவர் ஷாஜகான்:-
15-வது வார்டில்தான் ஜே.சி.பி. எந்திரம் மூலம் வேலை நடந்து வருகிறது. அதனை நேரில் பார்வையிட்டு வேலை சிறப்பாக நடக்க ஆலோசனை வழங்க வேண்டும்.
அமைச்சர் ராஜகண்ணப்பன் மூலம் கழிவுநீரை சுத்திகரிக்க ரூ.5 கோடி நிதிஉதவி கேட்கப்பட்டுள்ளது.
மோகன்தாஸ் (தி.மு.க.):-
தினசரி மார்க்கெட்டில் ஏலம் விடாமல் நிறுத்தப் பட்டால் பேரூராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்படும்.தலைவர் ஷாஜகான்:-
இது தொடர்பாக டி.எஸ்.பி. மற்றும் மாவட்ட கலெக்டர் அலுவகம் மூலம் மனுக்கள் வந்துள்ளன. தினசரி சந்தை ஏலம் விடுவதால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. மீன் மார்க்கெட் கழிப்பறை ஏலம் விடுவதும் நிறுத்தப்பட உள்ளன.
தமிழகம் முழுவதும் கழிப்பறைகளில் ரூ.5 கட்டணமாக வாங்கும் நிலை இருந்தும், முதுகுளத்தூரில் ரூ.16 வசூலிக்கப்படுகிறது.
எனவே கட்டணம் நிர்ணயம் செய்தபின் ஏலம் விடப்படும்.
இவ்வாறு விவாதம் நடைபெற்றது.
முடிவில் முனியசாமி நன்று கூறினார்.
- கடந்த சில நாட்களாக அவர் வேலைக்கு சரிவர செல்லாமல் குடித்து விட்டு சுற்றி கொண்டு இருந்தார்.
- வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
பீகார் மாநிலம் பெருசு ராய் மாவட்டம் கிசான்பூர் பகுதியை சேர்ந்தவர் சுனில்சர்மா (40). இவர் ஈரோடு, நசியனூர் ரோடு கைகாட்டிவலசில் உள்ள கிளாஸ் கம்பெனியில் கார்பென்டராக வேலை பார்த்து அங்கேயே தங்கியிருந்து வந்தார். சுனில் சர்மாவுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக அவர் வேலைக்கு சரிவர செல்லாமல் குடித்து விட்டு சுற்றி கொண்டு இருந்தார். நேற்று இரவு அதே பகுதியில் ரோட்டோரம் இருந்த கல் மேல் உட்கார்ந்து இருந்துள்ளார். அப்போது குடிபோதையில் இருந்த சுனில் சர்மா நிலைதடுமாறி கழிவுநீர் கால்வாயில் விழுந்தார். இதில் மூச்சு திணறி, பலத்த காயம் ஏற்பட்டு இறந்து விட்டார்.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அருகில் இருந்தவர்கள் இது குறித்து வீரப்பன்சத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சுனில்சர்மா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிங்கம்புணரி-திண்டுக்கல் சாலையில் கால்நடை மருத்துவமனைக்கு எதிரில் மழைநீர் வடிகால் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த தொட்டியில் இருந்து சாலையின் மறுபுறம் வரை குழாய் அமைத்து மழைநீர் பாலாற்றுக்கு கொண்டு செல்லப்படுகிறது. இந்தநிலையில் மழைநீர் வடிகால் தொட்டியில், இந்த பகுதியில் இருந்து வரும் கழிவுநீர் செல்லும் வகையில் இணைக்கப்பட்டது.
இதனால் கழிவுநீருடன் வரும் குப்பைகள் மழைநீர் வடிகால் தொட்டியில் தேங்குவதால், தொட்டியில் அடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் செல்ல வழியின்றி, சாலைகளில் ஆறாக பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசி வருகிறது. மேலும் அந்த பகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் சுகாதார கேடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் கூறினர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:- இந்த பகுதியில் முறையாக கழிவுநீர் கால்வாய் அமைக்கப்படாததால் குடியிருப்புகள், ஓட்டல்களில் இருந்து வரும் கழிவுநீரை குழாய் மூலம் சாலை ஓரம் அமைக்கப்பட்டுள்ள மழைநீர் வடிகால் தொட்டியில் இணைத்துள்ளனர்.
இதனால் கழிவுநீர் குழாயில் வரும் குப்பைகள் பிளாஸ்டிக் பைகள், கோழி கடைகளின் கழிவுகள் மழைநீர் வடிகால் தொட்டியில் தேங்கி அடைப்பு ஏற்படுகிறது. அப்போது இந்த தொட்டி நிரம்பி கழிவுநீர் சிங்கம்புணரி-திண்டுக்கல் சாலையில் ஆறாக பெருக்கெடுத்து ஓடுகிறது.
இதுபோன்று அடிக்கடி நிகழ்வதால், கடும் துர்நாற்றம் வீசிவருவதோடு, இந்த பகுதியை சேர்ந்த அனைத்து தரப்பினரும் பெரும் சிரமமடைகின்றனர். மேலும் மழைநீர் வடிகால் செல்லும் பாதையில் கழிவுநீர் செல்வதால், பாலாற்றில் மாசு ஏற்பட்டு வருகிறது.
இதனால் தொற்று நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பகுதி பொதுமக்கள், வியாபாரிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களின் நலன் கருதி, கழிவுநீர் கால்வாய் முறையாக அமைத்தும், மழைநீர் வடிகால் தொட்டியில் கழிவுநீர் செல்லாத வகையிலும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்