search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குற்றச்சாட்டு"

    • மது விற்பனையில் ஊழல், மணல் கடத்தல் மற்றும் பல பிரச்னைகள் அப்பட்டமாக நடக்கிறது.
    • பல்வேறு திட்டங்களுக்காக மத்திய அரசு வழங்கிய நிதியை பெரிய அளவில் திருப்பி அனுப்பியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

    திருப்பதி:

    ஆந்திர மாநில பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் சதினேனி யாமினி சர்மா அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி எம்.பி.விஜயசாய் ரெட்டிக்கு எங்கள் கட்சியின் மாநிலத் தலைவர் புரந்தேஸ்வரியை விமர்சிக்க தார்மீக உரிமை இல்லை.

    விஜய சாய் ரெட்டி மற்றும் முதல் மந்திரி ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டி ஆகியோர் சம்பந்தப்பட்ட ஊழல் வழக்குகளில் நிரபராதிகள் என்பது நிரூபிக்கப்படவில்லை.

    மது விற்பனையில் ஊழல், மணல் கடத்தல் மற்றும் பல பிரச்னைகள் அப்பட்டமாக நடக்கிறது.

    பல்வேறு திட்டங்களுக்காக மத்திய அரசு வழங்கிய நிதியை பெரிய அளவில் திருப்பி அனுப்பியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

    ஜெகன் மோகன் ரெட்டி 2019 தேர்தல் நேரத்தில் பல வாக்குறுதிகளை அளித்தார், ஆனால் அவற்றை நிறைவேற்றத் தவறிவிட்டார். புரந்தேஸ்வரியை கேலி செய்வதைத் தவிர்க்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பா.ஜனதாவின் அத்துமீறல்களை தேர்தல் கமிஷன் மவுனமாக வேடிக்கை பார்க்கிறது, மக்களை ஏமாற்றி விட்டது என்று ப.சிதம்பரம் கூறினார். #PChidambaram #ElectionCommission #Congress
    புதுடெல்லி:

    காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான ப.சிதம்பரம், ஒரு தனியார் செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியதாவது:-

    தேர்தல் கமிஷன், நாட்டு மக்களை பெரிதும் ஏமாற்றி விட்டது. பா.ஜனதாவின் அத்துமீறல்கள், பிரதமர் மோடியின் உரைகள், பா.ஜனதாவால் செலவழிக்கப்படும் பெருமளவு பணம் ஆகியவற்றை தேர்தல் கமிஷன் மவுனமாக வேடிக்கை பார்க்கிறது.

    எதிர்க்கட்சி வேட்பாளர்களின் சிறு செலவுகள் என்று கூறப்படுவதை எல்லாம் அவர்களின் செலவுக்கணக்கில் சேர்க்கிறது. அதே அணுகுமுறையை மேற்கொண்டால், பா.ஜனதா வேட்பாளர்கள் அனைவரும் தகுதியிழப்புக்கு ஆளாக வேண்டி இருக்கும்.

    பா.ஜனதா தனது தோல்வியை மறைக்க ‘தேசியவாதம்’ என்ற கோஷத்தை எழுப்பி வருகிறது. பா.ஜனதா ஆட்சிக்கு வருவதற்கு முன்பு இங்கு எல்லோரும் தேசவிரோதியாகவா இருந்தார்கள்?

    எல்லோரும் தேசபக் தர்கள்தான். எந்த தேசபக்தரையும் தேசவிரோதியாக கருத முடியாது. ஊடகங்களை கையில் போட்டுக்கொண்டு, இந்த பிரசாரத்தை பா.ஜனதா மேற்கொண்டு வருகிறது.

    இப்போது கேட்க வேண்டிய கேள்வி என்னவென்றால், “ஒவ்வொரு இந்தியனும் 5 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததுபோல் இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறானா?” என்பதுதான். என்னைக் கேட்டால் ‘இல்லை’ என்றுதான் சொல்வேன். ஒவ்வொரு இந்தியரும் அச்சத்துடனே வாழ்ந்து வருகிறார்கள். பெண்கள், பத்திரிகையாளர்கள், கல்வியாளர்கள் உள்பட அனைவரும் அச்சத்துடனே இருக்கிறார்கள்.

    பா.ஜனதா நிச்சயமாக ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள முடியாது. பா.ஜனதா அல்லாத அரசே மத்தியில் அமையும். காங்கிரசும், அதன் தேர்தலுக்கு முந்தைய கூட்டணி கட்சிகளுமே முக்கிய பங்கு வகிக்கும். தேர்தலுக்கு முந்தைய கூட்டணி கட்சிகள் நிறைய தொகுதிகளை கைப்பற்றினால், 3-வது தடவையாக ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக்கு பிரகாசமான வாய்ப்பு இருக்கிறது.

    சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கட்சி, திரிணாமுல் காங்கிரஸ் போன்ற கட்சிகள், நிலையான அரசு அமைய காங்கிரசை ஆதரிக்க வாய்ப்புள்ளது. எல்லா மதச்சார்பற்ற முற்போக்கு கட்சிகளும் நிலையான அரசு அமைய ஒன்று சேரும்.

    இந்தியாவில், தேர்தல் சமயத்தில், சி.பி.ஐ., வருமான வரித்துறை, அமலாக்கத்துறை ஆகியவை இதற்கு முன்பு இப்படி பட்டவர்த்தனமாக துஷ்பிரயோகம் செய்யப்பட்டதே இல்லை. நாட்டில் 545 தொகுதிகள் உள்ளன. சில தொகுதிகளில் போட்டியிடும் எதிர்க்கட்சி வேட்பாளர்களிடம்தான் கணக்கில் காட்டாத பணம் இருக்கிறதா? எந்த பா.ஜனதா வேட்பாளரிடமும் கணக்கில் காட்டாத பணம் இல்லையா?

    துப்பு கிடைத்ததாக கூறுகிறார்கள். எதிர்க்கட்சி வேட்பாளர்களைப் பற்றி மட்டுமே துப்பு கிடைக்குமா? பா.ஜனதா வேட்பாளர்கள் பற்றி துப்பு கிடைக்காதா? பிரதமர் மோடியின் ஒவ்வொரு கூட்டத்துக்கும் ரூ.10 கோடி செலவிடப்படுகிறது. இப்பணம் எங்கிருந்து வருகிறது? அதற்கு யார் செலவிடுகிறார்கள்? அதற்கு என்ன கணக்கு?

    இவ்வாறு ப.சிதம்பரம் கூறினார்.  #PChidambaram #ElectionCommission #Congress
    ஆந்திரப்பிரதேசம் முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு செய்தியாளர்களிடம் பேசுகையில், பிரதமர் மோடி தான் வரும் ஹெலிகாப்டரில் பணத்தை கொண்டு வந்து பாஜக பிரமுகர்களுக்கு அளிக்கிறார் என குற்றம்சாட்டினார். #ChandrababuNaidu #PMModi
    அமராவதி:

    பிரதமர் நரேந்திர மோடி கடந்த 9-ம் தேதி கர்நாடக மாநிலத்தின் சித்ரதுர்காவில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். 
    ஹெலிகாப்டர் மூலம் அவர் சித்ரதுர்கா வந்து இறங்கினார். அவருக்கு பாதுகாப்புக்காக மேலும் 3 ஹெலிகாப்டர்கள் வந்தன.

    அந்த ஹெலிகாப்டர்கள் தரை இறங்கிய நிலையில் மோடியின் ஹெலிகாப்டரில் இருந்து பெரிய வடிவிலான கருப்பு நிற இரும்பு பெட்டியை பாதுகாப்பு வீரர்கள் இறக்கினார்கள். 2 பேர் மிகவும் கஷ்டப்பட்டு இறக்கி சென்று அருகில் நின்றிருந்த காரில் ஏற்றினர். பின்னர் கார் அங்கிருந்து புறப்பட்டு சென்று விட்டது.

    அந்த பெட்டியில் என்ன இருந்தது என்று தெரியவில்லை. பெட்டியில் பணம் கொண்டு வரப்பட்டு இருக்கலாம் என்ற பேச்சும் எழுந்தது. அதில் ஏதோ மர்மம் இருப்பதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியது.



    இந்நிலையில், ஆந்திரா முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு நிருபர்களிடம் பேசுகையில், பிரதமர் மோடி தான் வரும் ஹெலிகாப்டரில் பணத்தை கொண்டு வந்து பா.ஜ.க. பிரமுகர்களுக்கு அளிக்கிறார் என குற்றம்சாட்டினார்.

    இதுதொடர்பாக அவர் கூறுகையில், பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக பிரதமர் மோடி, தான் வரும் ஹெலிகாப்டரில் பணத்தை கொண்டு வருகிறார்.

    தனக்கு அளிக்கப்படும் உயர் பாதுகாப்பை பயன்படுத்தி, அவற்றை பா.ஜ.க. பிரமுகர்களுக்கு அளிக்கிறார். அதன்மூலம் இந்த தேர்தலில் வெற்றி பெற திட்டமிட்டு உள்ளார் என குற்றம் சாட்டியுள்ளார். #ChandrababuNaidu #PMModi
    உலக பயங்கரவாதத்தின் தலைமையாக விளங்கும் அமெரிக்கா எங்கள் நாட்டு ராணுவத்தை பயங்கரவாத அமைப்பாக முத்திரை குத்துவதா? என ஈரான் அதிபர் ரவுஹானி சீறியுள்ளார். #UStheleader #Worldterrorism #Rouhani #Trump #IRG
    டெஹ்ரான்:

    அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் இருந்து விலகிகொண்ட அமெரிக்கா, அடுத்தடுத்து ஈரான் அரசின்மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதித்து வருகிறது. தனது நேசநாடுகளும் ஈரானை புறக்கணிக்க வேண்டும் என அமெரிக்க வெளியுறவுத்துறையின் சார்பில் நிர்பந்திக்கப்படுகிறது.

    அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் இருந்து விலகிய அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் முடிவால் உலகளாவிய அளவில் தங்கள் நாட்டின் மீதான நன்மதிப்பு பாதிக்கப்பட்டுள்ளதாக அதிபர் ஹஸன் ரவுகானி தெரிவித்தார்.
     
    அமைதியான முறையில் ஆக்கப்பூர்வமான தேவைகளுக்கு யூரேனியத்தை செறிவூட்டும் உரிமை ஈரானுக்கு உள்ளதாகவும் தெரிவித்த ரவுகானி, அமெரிக்காவின் அழுத்தத்துக்கு ஒருபோதும் அடிபணிய மாட்டோம். எங்கள் நாட்டின் சுதந்திரத்தையும், இஸ்லாமிய நன்முறைகளையும் பாதுகாக்க ஒருநாளும் தவற மாட்டோம் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

    சில இடங்களில் ஈரான் அரசு ரகசியமாக அணு உலைகளை அமைத்து வருவதாக அமெரிக்க உளவுத்துறை குற்றம்சாட்டி வருகிறது.



    இதற்கிடையில், ஈரான் நாட்டின் ராணுவமான புரட்சிகர பாதுகாப்பு படையை வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்தார். இதற்கு ஈரான் அதிபர் ஹசன் ரவுஹானி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, ஈரான் மக்களிடையே தொலைக்காட்சி மூலம் இன்று உரையாற்றிய ரவுஹானி, ‘எங்கள் நாட்டின் புரட்சிகர படைகளுக்கு பயங்கரவாத முத்திரை குத்த நீங்கள் (அமெரிக்கா) யார்? என்று ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.

    எங்கள் பிராந்தியத்தில் உள்ள நாடுகளுக்கு எதிராக பயங்கரவாத குழுக்களை கருவியாக பயன்படுத்தும் நீங்கள்தான் உலக பயங்கரவாதத்தின் தலைமை என்பதை நினைவில் கொள்ள வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். #UStheleader #Worldterrorism #Rouhani #Trump #IRG
    வேலையின்மை அதிகரிப்பை ஏற்க மோடி அரசு மறுக்கிறது என ராகுல் காந்தி குற்றம்சாட்டினார். #Modi #Government #RahulGandhi
    புதுடெல்லி:

    காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் ராகுல் காந்தி பல்கலைக்கழக மாணவர்களுடன் டெல்லியில் உள்ள ஜவகர்லால் நேரு மைதானத்தில் நேற்று கலந்துரையாடினார். அப்போது மாணவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து ராகுல் காந்தி பேசியதாவது:-

    நாட்டில் வேலையின்மை அதிகரிப்பு பிரச்சினை கவலை அளிக்கிறது. இதை ஒரு பிரச்சினையாக பிரதமர் நரேந்திர மோடி கருதவில்லை. இதை ஏற்க மோடி அரசு மறுக்கிறது.



    சீனாவுடன் ஒப்பிடும் போது வேலைவாய்ப்பை உருவாக்குவதில் இந்தியா மிகவும் பின்தங்கி உள்ளது. 24 மணி நேரத்தில் சீனா 50 ஆயிரம் வேலைவாய்ப்புகளை உருவாக்குகிறது. ஆனால் இந்தியா வெறும் 450 வேலைவாய்ப்புகளை மட்டுமே உருவாக்கி வருகிறது. இதை நான் சொல்லவில்லை. மத்திய நிதி அமைச்சகம் நாடாளுமன்ற மக்களவையில் அளித்த புள்ளிவிவரம் தான் இது.

    முதலில் நம்முடைய தவறை உணர வேண்டும். அதன் பிறகு அதை சரிசெய்ய முயற்சி செய்ய வேண்டும். இதை தான் காங்கிரஸ் கட்சி விரும்புகிறது.

    ரபேல் விவகாரம், ஊழல், வேலையின்மை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து என்னிடம் நேரடியாக விவாதிக்க மோடிக்கு அழைப்பு விடுத்தேன். ஆனால் அவர் என்னிடம் விவாதிக்க தயாராக இல்லை. நான் மேற்கொண்ட இந்த முயற்சி போல உங்களிடம் மோடி நேரடியாக கலந்துரையாட தயாராக இருப்பாரா? உங்களின் கேள்விகளை எதிர்கொள்ள தயாராக உள்ளாரா? என தெரியவில்லை.

    வேலையின்மை பிரச்சினை குறித்து உங்களிடம் மோடி விவாதிக்க வேண்டும். அவருடைய பார்வையில் பேசுவதை கைவிட்டு, உங்களின் பேச்சை அவர் உன்னிப்பாக கவனிக்க வேண்டும்.

    மாணவர்களின் கல்விக்காக மாநில அரசுகள் அதிகம் செலவிட வேண்டும். பட்ஜெட்டில் கல்விக்கு அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். கல்வியை தனியார் மயமாக்குவதற்கு காங்கிரஸ் ஒருபோதும் ஆதரவு அளிக்காது. நாட்டின் வளம் அனைத்தும் ஒரு சிலரின் கைகளில் இருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.

    முன்னதாக புலவாமா தாக்குதலில் இறந்த துணை ராணுவ படை வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் 2 நிமிடம் அஞ்சலி செலுத்தப்பட்டது.
    ‘அரசை செயல்படவிடாமல் ரங்கசாமியும் கிரண்பேடியும் சேர்ந்து சதி செய்கின்றனர்’ என்று நாராயணசாமி பகிரங்கமாக குற்றம்சாட்டி உள்ளார். #Narayanasamy #GovernorKiranbedi
    புதுச்சேரி:

    கவர்னர் கிரண்பேடிக்கு எதிராக முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையில் அமைச்சர்கள், காங்கிரஸ், தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள், கூட்டணி கட்சி தலைவர்கள் புதுவை கவர்னர் மாளிகை முன்பு தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இரவு பகல் என விடிய, விடிய இந்த போராட்டம் நேற்று 4-வது நாளாக தொடர்ந்து வருகிறது.

    கவர்னர் மாளிகை முன்பு தர்ணாவில் ஈடுபட்டுள்ள முதல்-அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் ரோட்டிலேயே உணவு சாப்பிட்டு இரவு சாலையிலேயே தூங்குகிறார்கள்.

    போராட்டத்தின்போது முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-



    கவர்னர் கிரண்பேடி பதவியேற்ற நாள்முதலே மக்கள் நலத்திட்டங்களை முடக்கும் செயல்களில் ஈடுபட்டு வருகிறார். மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் பெறும் கவர்னர் கிரண்பேடி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் போராட்டம் பற்றி கவலைப்படாமல் டெல்லிக்கு சென்றுவிட்டார்.

    மோடியின் தம்பியான எந்த பிரச்சினைகளிலும் வாய் திறக்காத ரங்கசாமியும், கிரண்பேடியும் சேர்ந்து கொண்டு இந்த அரசை செயல்படவிடாமல் சதி செய்து வருகின்றனர். இவர்கள் யார்? என்பதை இப்போது மக்கள் தெரிந்துகொண்டுவிட்டனர்.

    எங்களது நியாயமான போராட்டத்தை மக்கள் ஆதரிக்கின்றனர். டெல்லியில் மக்களால் புறக்கணிக்கப்பட்ட கவர்னர் கிரண்பேடி இங்கு வந்து மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுக்கு தொல்லை கொடுக்கிறார். இனிமேல் ஒரு நிமிடம் கூட அவர் கவர்னராக நீடிக்கக்கூடாது.

    இதுதொடர்பாக ஜனாதிபதி, பிரதமர், உள்துறை மந்திரி, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி ஆகியோருக்கு விளக்கமாக கடிதம் அனுப்பி உள்ளேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #Narayanasamy #GovernorKiranbedi
    இந்திய ஜனநாயகம் மற்றும் தேர்தல் கமிஷன் மீது களங்கம் ஏற்படுத்துவதற்கு காங்கிரஸ் கட்சி முயற்சி செய்வதாக மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். #EVMHackathon #RaviShankar #Congress
    புதுடெல்லி:

    மின்னணு வாக்கு எந்திரங்களில் மோசடி செய்துதான் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா கட்சி வெற்றி பெற்றது என்று லண்டனில் இருந்து இணையவழியில் அமெரிக்க வாழ் இந்திய மின்னணு தொழில் நுட்ப வல்லுனர் சையது சுஜா என்பவர் பேட்டி அளித்துள்ளார்.

    இதற்கு பாரதீய ஜனதா கட்சி பதில் அளித்துள்ளது.

    அந்த கட்சியின் மூத்த தலைவரும், மத்திய மந்திரியுமான ரவிசங்கர் பிரசாத் டெல்லியில் நேற்று நிருபர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    இந்த விவகாரத்தில் புகார் கூறிய நபரின் பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருப்பது காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஆஷிஸ் ராய் தலைமையிலான இந்திய பத்திரிகையாளர் சங்கம் ஆகும். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு ஆதரவான பாட்டை அவர் பாடி உள்ளார். அவர் காங்கிரஸ் பத்திரிகையான நேஷனல் ஹெரால்டு பத்திரிகைக்கும் எழுதுகிறார். சமூக வலைத்தளங்களில் காங்கிரசுக்காக பிரசாரம் செய்கிறார். லண்டனில் ராகுல் காந்தியின் பொது நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்ததும் அவர்தான். எனவே இந்திய ஜனநாயகம் மற்றும் தேர்தல் கமிஷன் மீது களங்கம் ஏற்படுத்துவதற்கு காங்கிரஸ் கட்சியின் ஆதரவில் நடந்த சதிதான் அந்த பத்திரிகையாளர் சந்திப்பு.

    இவ்வாறு அவர் கூறினார். #EVMHackathon #RaviShankar #Congress

    இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவன விவகாரத்தில் காங்கிரஸ் கூறும் குற்றச்சாட்டுகள் தவறானவை என நாடாளுமன்றத்தில் நிர்மலா சீதாராமன் பதில் அளித்தார். #NirmalaSitharaman #HAL #Congress #RahulGandhi
    புதுடெல்லி:

    பொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனத்துக்கு ரூ.1 லட்சம் கோடி அளவுக்கு ஆர்டர் வழங்கி உள்ளதாக நாடாளுமன்றத்தில் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் பொய் தகவல் அளித்துள்ளார். அந்த நிறுவன ஊழியர்களுக்கு ஊதியம் கூட கொடுக்க முடியாமல் பலவீனப்படுத்தி அங்கு பணியாற்றும் ஊழியர்களை அனில் அம்பானி நிறுவனத்துக்கு மாற்ற மத்திய அரசு முயற்சி செய்கிறது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.

    இது குறித்து ஆதாரங்களை நாடாளுமன்றத்தில் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் அவர் பதவி விலக வேண்டும் என ராகுல் காந்தி வலியுறுத்தினார்.

    இந்நிலையில் நாடாளுமன்ற மக்களவை நேற்று கூடியது. அப்போது காங்கிரஸ் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்து நிர்மலா சீதாராமன் கூறியதாவது:-

    காங்கிரஸ் கூறும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் தவறானவை. அவை தவறாக வழி நடத்துபவையாக இருக்கின்றன. இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனத்துக்கு சுமார் ரூ.26 ஆயிரம் கோடி அளவுக்கு ஆர்டர் வழங்குவதற்கான ஒப்பந்தங்கள் ஏற்கனவே கையெழுத்தாகி விட்டன.

    தற்போது ரூ.73 ஆயிரம் கோடி மதிப்பில் கொள்முதல் ஒப்பந்தம் போடப்பட்டு உள்ளது. இதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன. ஆர்டர் பெற்றதற்கான உறுதி பத்திரம் இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனத்திடம் இருந்து வந்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #NirmalaSitharaman #HAL #Congress #RahulGandhi 
    நாடாளுமன்றத்தில் கேள்விகளை சந்திக்க மோடிக்கு துணிச்சல் இல்லை, அவரை பாதுகாக்க அ.தி.மு.க. எம்.பி.க்கள் முயற்சிக்கின்றனர் என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டினார். #RahulGandhi #AIADMK #Modi
    புதுடெல்லி:

    நாடாளுமன்ற மக்களவையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, நேற்று 193-வது விதியின் கீழ், ரபேல் விமான ஒப்பந்த பிரச்சினையை எழுப்பி பேசினார். அவர் பேசியதாவது:-

    பிரதமர் மோடி, அரங்கேற்றப்பட்ட பேட்டியில் 90 நிமிடங்கள் பேசியுள்ளார். அதிலும் ரபேல் விவகாரம் குறித்த கேள்விகளுக்கு பதில் அளிக்கவில்லை. ரபேல் பிரச்சினையில், தன் மீது தனிப்பட்ட குற்றச்சாட்டு கிடையாது என்று அவர் கூறியது உண்மை அல்ல.

    ஒட்டு மொத்த நாடும் இந்த ஒப்பந்தம் குறித்து அவரிடம் நேரடியாக கேள்வி கேட்கிறது.

    பொதுத்துறை நிறுவனமான எச்.ஏ.எல்லிடம் இருந்து இந்த ஒப்பந்தம் பறிக்கப்பட்டது. ‘இரண்டு ஏ’ பெயர் கொண்டவரது பையில் ரூ.30 ஆயிரம் கோடியை மோடி போட்டார். அந்த நபர், மோடியின் அன்பு நண்பர்.

    காங்கிரஸ் ஆட்சியில் முடிவு செய்யப்பட்ட விலையை விட 3 மடங்கு அதிக விலைக்கு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதை பற்றி தெரிந்து கொள்வதற்காகவே, நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை கேட்கிறோம். அதற்கு பா.ஜனதா பயப்பட தேவையில்லை.

    இவ்வாறு ராகுல் காந்தி பேசியபோது, மேகதாதுவில் அணை கட்டக்கூடாது என்று வலியுறுத்தி, அ.தி.மு.க. எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

    அதனால், அ.தி.மு.க. எம்.பி.க்களை சுட்டிக்காட்டி ராகுல் காந்தி பேசியதாவது:-

    பிரதமர் மோடியை பாதுகாக்க அ.தி.மு.க. எம்.பி.க்கள் முயற்சிக்கிறார்கள். இங்கே அமர்ந்துள்ள ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன், அ.தி.மு.க. உறுப்பினர்களின் பின்னால் ஒளிந்து கொள்கிறார். பிரதமர் தனது அறையில் ஒளிந்து கொள்கிறார். அவருக்கு நாடாளுமன்றத்துக்கு வந்து கேள்விகளை சந்திக்கும் துணிச்சல் இல்லை.

    இப்போது என்னிடம் ஒரு ஆடியோ டேப் இருக்கிறது. கோவா மாநில மந்திரி விஷ்வஜித் ரானே, ரபேல் விவகாரம் தொடர்பான ஒரு கோப்பை முன்னாள் ராணுவ மந்திரி மனோகர் பாரிக்கர் தனது படுக்கை அறையில் வைத்திருப்பதாக கூறியுள்ளார். இந்த ஆடியோ டேப்பை போட்டுக்காட்ட சபாநாயகர் அனுமதி அளிக்க வேண்டும்.

    இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.

    அப்போது, மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி குறுக்கிட்டு, “அந்த டேப் போலியானது, தில்லுமுல்லு செய்து உருவாக்கப்பட்டது. அது உண்மை என்று ராகுல் காந்தியால் அங்கீகரிக்க முடியுமா? அது பொய் என்று நிரூபணமானால், அவர் உரிமை பிரச்சினையை சந்தித்து, வெளியேற்றப்பட வேண்டி இருக்கும்” என்று கூறினார்.

    அதற்கு ராகுல் காந்தி, தன்னால் அதை அங்கீகரிக்க முடியாது, சபாநாயகர் அனுமதி இல்லாமல் போட்டுக்காட்ட மாட்டேன் என்று கூறினார்.

    இதனால் ஆவேசம் அடைந்த அருண் ஜெட்லி, “அது போலி என்று விஷ்வஜித் ரானே மறுத்துள்ளார். அது ராகுல் காந்திக்கே தெரியும். அதனால் பயப்படுகிறார். இந்த மனிதர் திரும்பத்திரும்ப பொய் சொல்லிக் கொண்டிருக்கிறார். ஏற்கனவே இவரது குற்றச்சாட்டை பிரான்ஸ் அரசு மறுத்துள்ளது“ என்று கூறினார்.

    அப்போது ஏற்பட்ட அமளியை தொடர்ந்து, சபை ஒத்திவைக்கப்பட்டது.   #RahulGandhi #AIADMK #Modi 
    சென்னையைச் சேர்ந்த மனிதி அமைப்பின் பெண்கள் சபரிமலைக்கு சென்றதன் பின்னணியில் சதி இருப்பதாக பாஜக தலைவர் குற்றம்சாட்டியுள்ளார். #Sabarimala #Manithi #BJP
    திருவனந்தபுரம்:

    சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் தரிசனம் செய்ய அனுமதிக்கும்படி உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து ஐயப்ப பக்தர்கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். அதேசமயம், உச்ச நீதிமன்ற தீர்ப்பை சுட்டிக்காட்டி கோவிலுக்கு வரும் முயற்சியில் இளம்பெண்கள் ஈடுபட்டுள்ளனர். அவர்களை பக்தர்கள் தடுத்து நிறுத்துவதால் சபரிமலையில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவுகிறது. இன்றும் கேரளாவைச் சேர்ந்த 2 பெண்கள் தடுத்து நிறுத்தப்பட்டதால், அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.



    சென்னையை சேர்ந்த மனிதி அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் செல்வி தலைமையிலான 11 பெண்கள் நேற்று போலீஸ் பாதுகாப்புடன் மலையேறியபோது, ஐயப்ப பக்தர்களால் பம்பையில் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

    இதுபற்றி பா.ஜனதா கட்சியின் கேரள மாநில தலைவர் ஸ்ரீதரன்பிள்ளை கூறும்போது, ‘சபரிமலையை சீர்குலைக்க வேண்டுமென்பதற்காக சர்வதேச அளவில் நடைபெறும் சதியாக இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதுபற்றி தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்த வேண்டும்’ என்று கூறினார்.

    கேரள எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் நிர்வாகியுமான ரமேஷ் சென்னிதலா கூறும்போது, ‘சபரிமலையை வன்முறைக் களமாக்க அரசு முயற்சிக்கிறது. மனிதி அமைப்பினர் சபரிமலை வந்ததில் மர்மம் இருக்கிறது. இதுபற்றி விசாரிக்க வேண்டும்’ என்றார். #Sabarimala #Manithi #BJP
    தன்னை கொலை செய்யவும், வெனிசூலாவில் ஆட்சியை கவிழ்க்கவும் அமெரிக்கா சதி திட்டம் தீட்டுவதாக நிக்கோலஸ் மதுரோ பரபரப்பு குற்றம் சாட்டி உள்ளார். #Venuzuela #NicolasMaduro
    கராகஸ்:

    தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான வெனிசூலாவில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. இதன் காரணமாக கடந்த 2014-ம் ஆண்டு முதல் சுமார் 20 லட்சம் மக்கள் அந்நாட்டை விட்டு வெளியேறிவிட்டனர்.

    ஆனால் அங்கு அதிபராக உள்ள நிக்கோலஸ் மதுரோ, நாட்டில் நிலவும் பொருளாதார பிரச்சினைகளுக்கு தீர்வு காண எந்த ஒரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை எனவும், மாறாக அவர் சர்வாதிகார ஆட்சியில் ஈடுபடுவதாகவும் அமெரிக்கா குற்றம் சாட்டுகிறது.

    இதனை காரணம் காட்டி அதிபர் நிக்கோலஸ் மதுரோ மீது அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் நிர்வாகம் பல்வேறு பொருளாதார தடைகளை விதித்துள்ளது. இதனால் இருநாடுகளுக்கும் இடையே மோதல் போக்கு நீடிக்கிறது.

    இந்த நிலையில், தன்னை கொலை செய்யவும், வெனிசூலாவில் ஆட்சியை கவிழ்க்கவும் அமெரிக்கா சதி திட்டம் தீட்டுவதாக நிக்கோலஸ் மதுரோ பரபரப்பு குற்றம் சாட்டி உள்ளார். அதிபர் மாளிகையில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்த போது அவர் கூறியதாவது:-

    என்னை படுகொலை செய்யவும், வெனிசூலாவில் அயல்நாட்டு படைகளை குவித்து இடைக்கால அரசாங்கத்தை அமைக்கவும் அமெரிக்கா சதி திட்டம் தீட்டி வருகிறது. இந்த பொறுப்பு அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டனிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. அதனை எதிர்கொள்ள நட்பு நாடுகளின் உதவியோடு வெனிசூலா மக்கள் தாயராக இருக்கிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #Venuzuela #NicolasMaduro
    ரமேஷ் பவாரின் குற்றச்சாட்டால் வேதனைக்குள்ளாகி இருக்கும் மிதாலிராஜ் இது எனது வாழ்க்கையின் கருப்பு நாள் என்று கூறியிருக்கிறார். #DarkestDay #MithaliRaj #RameshPowar
    புதுடெல்லி:

    சமீபத்தில் வெஸ்ட் இண்டீசில் நடந்த பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அரைஇறுதியில் படுதோல்வி அடைந்து வெளியேறியது. இங்கிலாந்துக்கு எதிரான முக்கியமான அரைஇறுதி ஆட்டத்தில் இந்திய அணியில் அனுபவ வீராங்கனை மிதாலி ராஜ் ஓரங்கட்டப்பட்டது சர்ச்சையை கிளப்பியது. பயிற்சியாளர் ரமேஷ் பவார் வேண்டுமென்றே தன்னை நீக்கியதாகவும், பலமுறை அவர் அவமதித்ததாகவும் 35 வயதான மிதாலிராஜ் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

    இதைத் தொடர்ந்து இந்திய கிரிக்கெட் வாரிய அதிகாரிகளை சந்தித்து விளக்கம் அளித்த ரமேஷ் பவார், மிதாலியை நீக்கியது அணியின் நலன் கருதி எடுக்கப்பட்ட முடிவு என்று கூறினார். மேலும் ‘பயிற்சி ஆட்டங்களில் மிதாலி அதிரடியாக ரன்கள் எடுப்பதில் தடுமாறினார். அவரிடம் 20 ஓவர் கிரிக்கெட்டுக் குரிய உத்வேகமும் இல்லை’ என்பது போன்ற விஷயங்களையும் சுட்டிகாட்டி அறிக்கையை சமர்பித்தார்.



    எல்லாவற்றுக்கும் மேலாக, ‘தொடக்க வீராங்கனையாக ஆட அனுமதிக்காவிட்டால் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விடுவேன் என்று மிதாலிராஜ் மிரட்டினார். அத்துடன் பயிற்சியாளருக்கு மிகுந்த நெருக்கடி கொடுக்கிறார். அணியின் நலனை பார்க்காமல் தனிப்பட்ட சாதனை மீதே அவரது நோக்கம் அதிகமாக உள்ளது. 50 ஓவர் போட்டி அணிக்கு கேப்டனாக இருக்கும் அவர் இத்தகைய போக்கை நிறுத்திக்கொள்ள வேண்டும்’ என்றும் பவார் அதில் குறிப்பிட்டு இருக்கிறார்.

    ரமேஷ் பவாரின் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளால் அதிர்ச்சிக்குள்ளாகி இருக்கும் மிதாலிராஜ் நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள உருக்கமான பதிவு வருமாறு:-

    என்னை பற்றி தவறாக சித்தரித்து இருப்பதால் (பவாரின் கருத்து) மிகுந்த வேதனைக்குள்ளாகி இருக்கிறேன். கிரிக்கெட் மீதான எனது அர்ப்பணிப்பு உணர்வும், தேசத்திற்காக 20 ஆண்டுகள் வியர்வை சிந்தி கடினமாக உழைத்ததும் வீணாகி விட்டது. இன்று, என் தேசப்பற்றை சந்தேகிக்கின்றனர். எனது திறமை கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது. என்னுடைய புகழை அழிக்க முயற்சிக்கிறார்கள். இது, எனது வாழ்க்கையின் கருப்பு நாள். காயப்பட்ட எனக்கு கடவுள் தான் மனவலிமையை கொடுக்க வேண்டும்.

    இவ்வாறு மிதாலி அதில் கூறியுள்ளார்.

    இதற்கிடையே மிதாலிராஜிக்கு ஆதரவு கரம் நீட்டியுள்ள இந்திய முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் அளித்த ஒரு பேட்டியில், ‘மிதாலிக்காக நான் வருத்தப்படுகிறேன். இந்திய கிரிக்கெட்டுக்காக 20 ஆண்டு காலம் பங்களிப்பை அளித்துள்ளார். நிறைய ரன்கள் குவித்து இருக்கிறார். 20 ஓவர் உலக கோப்பையில் இரண்டு ஆட்டங்களில் அடுத்தடுத்து அரைசதம் விளாசி ஆட்டநாயகி விருதை பெற்றார். ஒரு ஆட்டத்தின் போது காயமடைந்த அவர் அடுத்த ஆட்டத்திற்குள் குணமடைந்து தயாராகி விட்டார். ஆனாலும் அரைஇறுதிப்போட்டியில் அவரை சேர்க்கவில்லை. இதே சூழலை அப்படியே ஆண்கள் கிரிக்கெட்டுக்கு கொண்டு வந்து பாருங்கள். விராட் கோலி ஒரு ஆட்டத்தில் காயமடைந்து, அடுத்து நாக்-அவுட் சுற்றுக்கு அவர் உடல்தகுதியுடன் இருக்கும் போது அவரை சேர்க்காமல் விட்டு விடுவார்களா?

    எப்போதும் நாக்-அவுட் சுற்று ஆட்டங்களுக்கு சிறந்த ஆட்டக்காரர்களை தேர்வு செய்ய வேண்டும். இத்தகைய ஆட்டங்களில் மிதாலிராஜ் போன்ற வீராங்கனையின் அனுபவம் அவசியமாகும். எந்த காரணம் சொன்னாலும் மிதாலியை நீக்கியது தவறு தான்.’ என்றார். #DarkestDay #MithaliRaj #RameshPowar
    ×