search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தீவிபத்து"

    • அன்னவாசலில் வேதனை சம்பவம்
    • 2 மணி நேரம் போராடி தீயை அணைத்த வீரர்கள்

    புதுக்கோட்டை, 

    புதுக்கோட்டை மாவட்டம் சித்தன்னவாசல் பகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டது . இதனைத் தொடர்ந்து அன்னவாசல், இலுப்பூர், புதுக்கோட்டை என பல பகுதிகளில் இருந்து வந்த தீயணைப்புதுறை வீரர்கள் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை அணைத்தனர்.அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் சிலர் தீயணைப்பு பணிக்கு உதவி செய்தனர். பெரும்பாலானவர்கள் தீ பற்றி எரிவதையும் அதனை தீயணைப்பு வீரர்கள் அணைக்க போராடுவதையும் தங்களது செல்போன்களில் படம் எடுப்பத்திலேயே குறியாக இருந்தனர். தீப்பற்றி எரியும் வேலையில் அதனை அணைக்க முயற்சிக்காமல் செல்போனில் படம் எடுக்கும் மனநிலைக்கு இளைஞர்கள் தள்ளப்பட்டது வேதனைக்குரியதாக இருந்தது.இயற்கையை காக்கும் போராட்டத்தில் மனித சமுதாயம் இதுபோன்ற நிலைக்கு சென்றது கவலை அளிப்பதாக சமூக ஆர்வலர்கள் பலர் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

    • மாதேஸ்வரன் என்பவருக்கு சொந்தமான கூரை வீடு மீது மின்னல் தாக்கி வீடு முழுவதும் எரிந்து போனது.
    • வீட்டின் உரிமையாளர்கள் அருகில் உள்ள நிலத்தில் விவசாயம் வேலை பார்த்து வந்ததால் உயிர் தப்பினார்கள்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள திருக்குன்றம் கிராமத்தில் நேற்று இடி மின்னலுடன் பெய்ந்த கனமழையால் காற்று கொட்டாய் பகுதியில் வசிக்கும் மாதேஸ்வரன் என்பவருக்கு சொந்தமான கூரை வீடு மீது மின்னல் தாக்கி வீடு முழுவதும் எரிந்து போனது . வீட்டின் உரிமையாளர்கள் அருகில் உள்ள நிலத்தில் விவசாயம் வேலை பார்த்து வந்ததால் உயிர் தப்பினார்கள். இந்த தீ விபத்தில் ஒரு லட்சம் பணம் 4 பவுன் நகை ,நிலத்தின் பத்திரம் மோட்டார் சைக்கிள், சைக்கிள், வெங்காய மூட்டைகள் அனைத்தும் எரிந்து சேதமானது. இதன் மதிப்பு2 லட்சத்திற்கு மேல் எனக் கூறப்படுகிறது. இன்று காலை சங்கராபுரம் தொகுதி எம்.எல்.ஏ. உதய சூரியன் எரிந்து போன வீட்டை நேரில் பார்வையிட்டு வீட்டின் உரிமையாளர்களுக்கு ஆறுதல் கூறினார். பின்னர் அவர்களுக்கு அரசு மூலம் புதிய வீடு கட்டித் தருவதாக உறுதி அளித்தார். பின்னர் பாதிக்கப்பட்ட வீட்டின் உரிமையாளர்களுக்கு நிவாரணம் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய துணை சேர்மன் அன்புமணி மாறன் ,தாசில்தார் இந்திரா, சின்னசேலம் வட்டார வளர்ச்சி அலுவலர் உமா மகேஸ்வரி, கிராம நிர்வாக அலுவலர் ரவிச்சந்திரன், ஊராட்சி மன்ற தலைவர் தென்னரசி பாண்டியன் ,துணைத் தலைவர் தன பாலகிருஷ்ணன், தி.மு.க. மாநில பொதுக்குழு உறுப்பினர் அருள்மொழி ஆகியோர் உடன் இருந்தனர்.

    • சந்திரா (வயது 60). இவர் தனது வீட்டில் தியாகதுருகத்தை சேர்ந்த செல்வியுடன் (58) சேர்ந்து கியாஸ் அடுப்பில் சமையல் செய்து கொண்டிருந்தார்.
    • அப்போது எதிர்பாராதவிதமாக சிலிண்டரில் கியாஸ் கசிவு ஏற்பட்டது.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த விரியூர் கிராமத்தை சேர்ந்தவர் சந்திரா (வயது 60). இவர் தனது வீட்டில் தியாகதுருகத்தை சேர்ந்த செல்வியுடன் (58) சேர்ந்து கியாஸ் அடுப்பில் சமையல் செய்து கொண்டிருந்தார். ராதவிதமாக சிலிண்டரில் கியாஸ் கசிவு ஏற்பட்டது. இதனால் கியாஸ் சிலிண்டர் தீப்பிடித்து எரிந்தது. இதில் சந்திரா, செல்வி மற்றும் அவரது மகன் கண்ணன் ஆகியோர் மீது தீ பரவியது.   இது குறித்த தகவலின் பேரில் சங்கராபுரம் தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெயேந்திரன் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.  இதில் தீக்காயமடைந்த சந்திரா, செல்வி, கண்ணன் ஆகியோர் சிகிச்சைக்காக சங்கராபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இது பற்றி அறிந்த தாசில்தார் சரவணன், போலீஸ் இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.

    • பண்ருட்டி ஒன்றியம்பத்திரக்கோட்டைகாலனிஅம்பேத்கார் நகரை சேர்ந்தவர் சிவமணி(45)
    • இவரது கூரை வீட்டில் மின்சார கசிவு ஏற்பட்டு தீப்பிடித்து எரிந்தது.

    கடலூர்:

    பண்ருட்டி ஒன்றியம்பத்திரக்கோட்டைகாலனிஅம்பேத்கார் நகரை சேர்ந்தவர் 45) ,இவரது கூரை வீட்டில் மின்சார கசிவு ஏற்பட்டு தீப்பிடித்து எரிந்தது. தகவல் அறிந்து தீயணைப்புத் துறையினர் அங்கு விரைந்து வந்து அக்கம் பக்கத்தில் உள்ள வீடுகளுக்கு மேலும் பரவாமல் தீஅணைக்கப்பட்டது. அதிர்ஷ்டவசமாக வீட்டில் இருந்த யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

    இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மணிகண்டன் அதே பகுதியை சேர்ந்த கோமதி என்ற பெண்ணை காதலித்து வந்தார்
    • இதனால் 2 குடும்பத்திற்கும் அடிக்கடி தகராறு நடந்து வந்தது.

    கடலூர்:

    பண்ருட்டி அடுத்த தொரப்பாடி குமரக் கோயில் தெருவை சேர்ந்தவர் முருகன்.இவரது மனைவி சின்னபொண்ணு (வயது 40). இவர்களது மகன் மணிகண்டன்.  மணிகண்டன் அதே பகுதியை சேர்ந்த கோமதி என்ற பெண்ணை காதலித்து வந்தார். இதனால் 2 குடும்பத்திற்கும் அடிக்கடி தகராறு நடந்து வந்தது. இது குறித்து மகளிர் போலீசில் புகார் செய்து வழக்கு விசாரணையும் நடந்து வருகிறது. மேலும் மணிகண்டன் குடும்பத்தாரை வீட்டோடு தீ வைத்து கொளுத்தி விடுவதாக கோமதியின் தந்தை மிரட்டல் விடுத்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு மணிகண்டன் வீட்டிற்கு மர்ம ஆசாமிகள் தீ வைத்தனர். இதில் வீட்டிலிருந்த அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இருந்த போதும் வீட்டு உபயோக பொருட்கள் தீயில் கருகி நாசமாயின.

    இது குறித்த புகாரின் பேரில் புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் கோமதியின் தந்தை முருகன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

    • கமலம் (வயது 80). இவர் வீட்டில் தனியாக வசித்து வந்தார்
    • நேற்று இரவு வீட்டில் விளக்கு ஏற்றி வைத்துவிட்டு அதன் அருகாமையில் உட்கார்ந்திருந்தார்

    கடலூர்:

    புவனகிரி அடுத்த வடக்குத்திட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் கமலம் (வயது 80). இவர் வீட்டில் தனியாக வசித்து வந்தார். நேற்று இரவு வீட்டில் விளக்கு ஏற்றி வைத்துவிட்டு அதன் அருகாமையில் உட்கார்ந்திருந்தார். அப்பொழுது சேலை தீப்பற்றியது. இதனை மூதாட்டி கவனிக்காததால், தீ மள மளவென பரவி உடல், கை, கால்கள் முற்றிலும் எரிந்தது.

    இவரின் அலரல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைத்தனர். இவர் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து புவனகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • லாரியின் முன் பகுதி மற்றும் பைக்கில் தீ பரவியதால் இரு வாகனங்களும் நெடுஞ்சாலையில் பற்றி எரிந்தது.
    • காவேரிப்பாக்கம் போலீசார் கருகிய உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராணிப்பேட்டை:

    சென்னையிலிருந்து பெங்களூரு நோக்கி தேசிய நெடுஞ்சாலையில் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அதே வழியாக வந்த பைக் வாலாஜா அடுத்த சுமைதாங்கி அருகே வந்தபோது எதிர்பாராத விதமாக லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.

    இதில் லாரியும் பைக்கும் திடீரென தீப்பற்றி எரிந்தது. லாரியின் முன் பகுதி மற்றும் பைக்கில் தீ பரவியதால் இரு வாகனங்களும் நெடுஞ்சாலையில் பற்றி எரிந்தது.

    லாரியின் அடியில் சிக்கிய பைக் தீப்பற்றி எரிந்தது. இதனால் தீயில் சிக்கிய பைக்கில் வந்த வாலிபர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்று தெரியவில்லை.

    இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த ராணிப்பேட்டை தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அனைத்து இறந்து கிடந்த வாலிபர் உடலை மீட்டனர்.

    காவேரிப்பாக்கம் போலீசார் கருகிய உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • புல் வெளிகள் தீயில் கருகி நாசமாகின
    • அருகில் கியாஸ் குடோன் உள்ளநிலையில் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் அருகே ஆலம்பாடி செல்லும் சாலையில் காய்ந்த புல்வெளி பகுதியில் நேற்று மாலை தீ பற்றி எரிவதாக பெரம்பலூர் தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். அருகே சோளம் அறுக்கப்பட்டு சோளத்தட்டைகள் இருந்தமையால் காற்றின் மூலம் அங்கு பரவியதாக கூறப்படுகிறது. மேலும் தீ விபத்து நடந்த பகுதிக்கு அருகே தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான கியாஸ் குடோன் உள்ளது. இதனால் தீயணைப்பு துறையினர் கவனமாக செயல்பட்டு தீ மேலும் பரவாமல் தடுத்து அணைத்தனர். இந்த தீ விபத்தில் சுமார் 200 மீட்டர் வரை புல்வெளிகள் எரிந்து கருகின. அருகில் இருந்த சில குறு மரங்களும் தீயில் கருகின. இந்த தீ விபத்து எவ்வாறு ஏற்பட்டது என்பது குறித்து தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினர் விசாரித்து வருகின்றனர்.

    • கெரகோட அள்ளி அருகே வந்த போது திடீரென காரில் தீ பற்றி எரிந்தது.
    • இதனை அறிந்ததும் காரில் பயணம் செய்தவர்கள் உடனே காரை நிறுத்தி இறங்கியுள்ளனர்.

    தருமபுரி,

    தேனியில் இருந்து பெங்களூரை நோக்கி கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் கார் ஒன்று சென்று கொண்டி ருந்தது. தருமபுரி மாவட்டம், கெரகோட அள்ளி அருகே வந்த போது திடீரென காரில் தீ பற்றி எரிந்தது.

    இதனை அறிந்ததும் காரில் பயணம் செய்தவர்கள் உடனே காரை நிறுத்தி இறங்கியுள்ளனர்.

    இது குறித்து காரிமங்கலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • பரமத்திவேலூரை அடுத்த வாழவந்தி அருகே தீயில் காயம் அடைந்த இளம் பெண் பரிதாபமாக இறந்தார்.
    • சம்பவத்தன்று இளம்பெண் அடுப்பை பற்ற வைக்க மண்ணெண்ணையை அடுப்பில் ஊற்றிய போது திடீரென தீ பிடித்ததால் கருகி பலியானார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா எஸ்.வாழவந்தி அருகே உள்ள காளிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் வரதன். கூலித் தொழி லாளி. இவரது மனைவி நீலாவதி (வயது 34). இவர்களுக்கு திருமணம் ஆகி 13 வருடங்கள்ஆகிறது. இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.

    நீலாவதி கடந்த 17-ம் தேதி வீட்டில் சமைத்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அடுப்பு எரியாததால் மண்ணெண்ணையை அடுப்பில் ஊற்றிய போது திடீரென தீ குபுவென வெளியேறி நீலாவதி அணிந்திருந்த துணியில் பிடித்தது.

    தீ மளமளவென உடல் முழுவதும் பற்றி எரிய ஆரம்பித்தது. அவருடைய அலறல் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து ஆம்புலன்ஸ் மூலம் அவரை காப்பாற்றி நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் . அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நீலாவதி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து பரமத்தி போலீசில் புகார் செய்தனர். புகாரின் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து நீலாவதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • உளுந்தூர்பேட்டை அருகே உள்ளஎறஞ்சி காலனியில் அமராவதி கூரை வீடு உயர்மின்னழுத்தத்தின் காரணமாக முற்றிலுமாக எரிந்துவிட்டது
    • எடைக்கல் போலீஸ் நிலையம் சார்பில் நிவாரணம் (அரிசி, காய்கறிகள், பாத்திரம், துணி மற்றும் படுக்கை விரிப்புகள்) வழங்கப்பட்டது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ளஎறஞ்சி காலனியில் அமராவதி கூரை வீடு உயர்மின்னழுத்தத்தின் காரணமாக முற்றிலுமாக எரிந்துவிட்டது . இது குறித்து தகவல் அறிந்த எடைக்கல் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அமராவதி குடும்பத்தினரை வரவழைத்து எடைக்கல் போலீஸ் நிலையம் சார்பில் நிவாரணம் (அரிசி, காய்கறிகள், பாத்திரம், துணி மற்றும் படுக்கை விரிப்புகள்) வழங்கப்பட்டது.

    • மகன் உட்பட 2 பேர் கைது
    • விளையாட்டு விபரீதமானது

    அகரம்சீகூர்,

    பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள அத்தியூர் வடக்கு வீதி பகுதியை சேர்ந்தவர் மோகன் தாஸ் (வயது 40). இவரும் அதே பகுதியை சேர்ந்த ராஜதுரை (30) அங்குள்ள ஒரு டாஸ்மாக் கடைக்கு சென்று மது அருந்தியதாக கூறப்படுகிறது.பின்னர் மோகன்தாஸ் வீட்டில் பெட்ரோல் இல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தனது மோட்டார் சைக்கிளுக்கு ஒரு கேனில் பெட்ரோலை வாங்கியுள்ளார். பின்னர் அவர்கள் இருவரும் ஒரு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பினர்.பின்னர் வழியில் மோகன்தாஸ் தனது அத்தையான அத்தியூர் இந்திரா நகர் பகுதியில் வசிக்கும் கதிர்வேல் மனைவி மஞ்சாயியை(75) பார்த்தார்.உடனே இருவரும் அங்கு இறங்கி மூதாட்டி இடம் நலம் விசாரித்தனர். அப்போது மஞ்சாயி மருமகனிடம் எதற்காக பெட்ரோல் வாங்கி செல்கிறாய் என கேட்டுள்ளார். அதற்கு உன் மீது ஊற்றி எரிப்பதற்காக என கூறிக்கொண்டு, விளையாட்டாக கையில் கேனில் இருந்த பெட்ரோலை எடுத்து அவர் மீது ஊற்றுவது போல் காண்பித்தார். ஆனால் எதிர்பாராத விதமாக மூடியிலிருந்து கசிந்த பெட்ரோல் மஞ்சாயி மீது பட்டது.அந்த கணம் அருகில் நின்று கொண்டிருந்த நண்பர் ராஜதுரை வாயில் சிகரட்டை வைத்து பற்ற வைத்ததாக தெரிகிறது. இதில் எதிர்பாராத விதமாக மூதாட்டி மீது தீப்பிடித்தது.இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த இருவரும் உடனடியாக தீயை அணைத்து அவரை மீட்டு அருகிலுள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக மங்களமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து மருமகன் மோகன்தாஸ் ராஜதுரை ஆகிய இருவரையும் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். விளையாட்டாக மூதாட்டி மீது ஊற்றிய பெட்ரோல் துளிகளால் ஏற்பட்ட தீ விபத்து சம்பவம் மங்களமேடு பகுதியில் சலசலப்பை ஏற்படுத்தியது.

    ×