search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கற்பழிப்பு"

    ராமநாதபுரம் மாவட்டம் அருகே ஆதரவின்றி உறவினர் வீட்டில் தங்கிய சிறுமியை கர்ப்பிணியாக்கிய வாலிபர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
    கவுண்டம்பாளையம்:

    கோவை காந்திபுரம் பஸ் நிலையத்தில் 2 சிறுமிகள் எங்கு செல்வது என்று தெரியாமல் சுற்றி திரிந்தனர். இதனை பார்த்தவர்கள் இது குறித்து குழந்தைகள் பாதுகாப்பு அமைப்புக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் 2 சிறுமிகளையும் மீட்டு காப்பகத்தில் சேர்த்தனர்.

    இதில் 15-வயது சிறுமி கர்ப்பமாக இருந்தார். அவரிடம் அமைப்பினர் கர்ப்பத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர். தனது உறவினர் தன்னை கட்டாயபடுத்தி கற்பழித்ததால் கர்ப்பமடைந்ததாக கூறினார்.

    பின்னர் இது குறித்து சிறுமி துடியலூர் அனைத்து மகளிர் போலீசில் ஒரு புகார் அளித்தார். அதில் கூறியிருப்பதாவது.

    எனது சொந்த ஊர் ராமநாதபுரம் மாவட்டம் பிரப்பன்வலசை மீனவர் கிராமம். எனது தாய் தற்கொலை செய்து கொண்டார். தந்தை குடிகாரர். எனது அக்காள் எங்களை பராமரித்து வந்தார். அவருக்கும் அவரது கணவருக்கும் ஏற்பட்ட தகராறால் என்னையும் எனது தங்கையையும் அதே பகுதியில் உள்ள எனது தாய் மாமா செல்வராஜின் வீட்டில் விட்டு விட்டு கோவைக்கு புறப்பட்டு வந்து விட்டார். நான் எனது மாமா வீட்டில் இருந்த போது மாமாவின் மகன் அருநேசன் என்னை பலமுறை கட்டாயபடுத்தி கற்பழித்தார். இதில் நான் கர்ப்பமானேன். இதனை தெரிந்து அவரது குடும்பத்தினர். என்னையும் எனது தங்கையையும் ராமநாதபுரம் பஸ் நிலையத்தில் கொண்டு வந்து விட்டு விட்டு கையில் ரூ. 500 பணத்தை கொடுத்து வீட்டுக்கு வரக்கூடாது என கூறிவிட்டு சென்று விட்டனர்.

    பின்னர் நாங்கள் இங்கு புறப்பட்டு வந்து விட்டோம். எனவே என்னை கற்பழித்த அருநேசன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகா அளித்தார்.

    சிறுமி கொடுத்த புகாரின் பேரில் கட்டாயபடுத்தி கற்பழித்த அருநேசன் மீது போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் சம்பவம் நடந்த ராமநாதபுரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு இந்த வழக்கை மாற்றி அனுப்பி வைத்தனர். #tamilnews
    பணம் மோசடி குறித்து நடவடிக்கை எடுக்காததால் போலீஸ் நிலையம் முன்பு தீக்குளித்த பெண், கள்ளக்காதலன் மயக்க மருத்து கொடுத்து கற்பழித்ததாக மரண வாக்குமூலம் அளித்துள்ளார்.
    குமாரபாளையம்:

    கோவை பீளமேடு பகுதியில் ஜவுளிக்கடை நடத்தி வருபவர் சேகர். இவரது மனைவி பார்வதி. இவர்களிடம் குமாரபாளையத்தை சேர்ந்த ஈஸ்வரன் கார் டிரைவராக வேலைப் பார்த்து வந்தார்.

    அப்போது பார்வதிக்கும், கார் டிரைவர் ஈஸ்வரனுக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டது. இதை அறிந்த சேகர் மனைவியிடம் தகராறு செய்து பிரிந்து சென்றுவிட்டார்.

    இதனால் பார்வதி கோவையில் உள்ள சொத்துக்களை விற்றுவிட்டு நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சடையம்பாளையம் காந்தி நகரில் வாடகை வீட்டில் குடியேறினார். அங்கும் இருவரின் கள்ளக்காதல் தொடர்ந்தது.

    அப்போது பார்வதியிடம் இருந்து ரூ.1 கோடியே 30 லட்சம் பணத்தை ஈஸ்வரன் வாங்கினார். பின்னர் அவர் வீட்டுக்கு வராததால் பார்வதி பணத்தை திருப்பி கேட்டார். அவர் தர மறுத்ததால் குமாரபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். ஆனால் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் பார்வதி குமாரபாளையம் போலீஸ் நிலையம் முன்பு தான் கொடுத்த புகாரின் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி மண்எண்ணை ஊற்றி தீக்குளித்தார். இதை பார்த்த போலீசார் அவர் மேல் தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர்.


    பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தார்.

    முன்னதாக ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த பார்வதியிடம், ஈரோடு 2-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு, மரண வாக்குமூலம் பெற்றார்.

    ஈஸ்வரன், எங்கள் வீட்டுக்கு காரில் மாற்று டிரைவர் பணிக்கு வந்த போது அறிமுகம் ஆனார். முதலில் சகஜமாக பழகிய அவர், ஒரு கட்டத்தில் மயக்க மருந்தை கொடுத்து என்னை கற்பழித்து விட்டார். பின்னர் அவர் என்னுடன் நெருக்கமாக இருப்பது போன்று வீடியோ எடுத்துக்கொண்டு என்னை மிரட்டி பணம் பறித்தார்.

    இதனால் எனது கணவர் பிரிந்து சென்ற நிலையில், எனது சொத்துகளை விற்க வைத்து அதில் ரூ.1 கோடியே 30 லட்சத்தை ஈஸ்வரன் வாங்கி கொண்டார். அதை கேட்ட போது அவர் தரமறுத்து விட்டதுடன், என்னுடன் பேச மறுத்து விட்டார். இதனால் இழந்த எனது பணத்தை திரும்ப பெறுவதற்காக குமாரபாளையம் போலீசில் புகார் செய்தேன். அவர்கள் வழக்கு மட்டும் பதிவு செய்து விட்டு விசாரணை நடத்தவில்லை.

    அதே நேரத்தில் ஈஸ்வரனும், அவருடைய மனைவி மலர்க்கொடி, ஈஸ்வரனின் அண்ணன் ஜம்பு மற்றும் நண்பர்கள் 2 பேர் என்னை எவ்வாறு புகார் கொடுக்கலாம் என்று மிரட்டியதால் வேறு வழியின்றி நான் தீக்குளித்து தற்கொலை செய்து கொள்ள முடிவு எடுத்தேன். எனது இந்த நிலைக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் தனது வாக்குமூலத்தில் கூறி இருந்தார்.

    இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில், ஈஸ்வரன், அவருடைய மனைவி மலர்க்கொடி, ஈஸ்வரனின் அண்ணன் ஜம்பு மற்றும் நண்பர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக கள்ளக்காதலன் ஈஸ்வரனை போலீசார் பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மற்றவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

    போலீஸ் நிலையம் முன்பு பெண் குளித்த சம்பவம் குமாரபாளையம் பகுதியில் பெரும் பரபரப்பபை ஏற்படுத்தி உள்ளது.
    அமெரிக்காவில் போதை மருந்து கொடுத்து 100 பெண்களை கற்பழித்த எலும்பு முறிவு டாக்டர் காதலியுடன் கைது செய்யப்பட்டார்.
    லாஸ் ஏஞ்சல்ஸ்:

    அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் அருகேயுள்ள நியூபோர்ட் பீச் நகரை சேர்ந்தவர் கிரேன்ட் வில்லியம் ரோபிசியஸ் (38). எலும்பு முறிவு சிகிச்சை டாக்டர். இவரது காதலி செரிசா லாரா ரிலே (31).

    இவர்கள் இருவரும் மதுப்பிரியர்கள். பார்களுக்கு செல்வதை வழக்கமாக கொண்டு இருந்தனர். அங்கு வரும் அழகிய பெண்களை பேச்சின் மூலம் வசியம் செய்து அவர்களுடன் ரோபிசியஸ் நட்புறவை ஏற்படுத்துவார். பின்னர் அவர்களுக்கு கோகைன் உள்ளிட்ட போதை மருந்துகளை வழங்கி கற்பழித்து வந்தார்.

    இதற்கு அவரது காதலி ரிலே உடந்தையாக இருந்தார். இந்தநிலையில் அவரால் கற்பழிக்கப்பட்ட 2 பெண்கள் போலீசில் புகார் செய்தனர். அதில் ரோபிசியஸ் தங்களை விருந்துக்கு அழைத்து போதைபொருள் வழங்கியதாகவும், நியூபோர்ட் பீச்சில் உள்ள தனது வீட்டுக்கு அழைத்து சென்று கற்பழித்ததாகவும் புகார் செய்தனர்.

    எனவே, ரோபிசியசையும், அவரது காதலி ரிலேவையும் ஆரஞ்கவுண்டி போலீசார் கைது செய்தனர். பின்னர் ரோபிசியஸ் செல்போனை சோதனை செய்தபோது 100-க்கும் மேற்பட்ட பெண்களுடன் அவர் இருக்கும் ஆபாச வீடியோக்கள் இருந்தன.

    இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் பேட்டி அளித்தனர். அப்போது ரோபிசியசால் பாதிக்கப்பட்ட பெண்கள் தைரியமாக வந்து புகார் செய்யலாம். அவர்கள் பெயர் ரகசியமாக வைக்கப்படும் என்றும் அறிவித்தனர். அதையடுத்து அவர் போதை மருந்து கொடுத்து கற்பழித்ததாக 100-க்கும் மேற்பட்ட பெண்கள் புகார் கொடுத்தனர். இதனால் இந்த விவகாரம் சூடுபிடித்துள்ளது.

    இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் ரோபியசியசுக்கு 40 ஆண்டுகள் ஜெயில் தண்டனை கிடைக்கும். அவரது காதலி ரிலேவுக்கு 30 ஆண்டு தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளர்.
    கற்பழிப்புக்கு ஆளான புற்றுநோய் பாதித்த சிறுமியின் கருவை கலைக்க மும்பை ஐகோர்ட்டு அனுமதி வழங்கியது. #BombayHighCourt #TeenCancer
    மும்பை:

    20 வாரங்களுக்கு மேல் வளர்ச்சி அடைந்த கருவை சட்டப்படி கோர்ட்டு அனுமதி பெற்றால் மட்டுமே கலைக்கமுடியும். இந்தநிலையில் கற்பழிப்பால் பாதிக்கப்பட்ட 14 வயது சிறுமி ஒருவரின் தந்தை தன் மகளின் 24 வார கருவை கலைக்க அனுமதி கோரி மும்பை ஐகோர்ட்டை அணுகினார். சிறுமிக்காக வாதாடிய வக்கீல், ’சம்பந்தப்பட்ட சிறுமி கடந்த 2010-ம் ஆண்டு முதல் ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதற்காக சிகிச்சை எடுத்து வருகிறார். இந்த நிலையில் சிறுமி 24 வார கர்ப்பமாக இருப்பது தற்போது தான் தெரியவந்தது. அவரின் கருவை கலைக்க அனுமதி அளிக்கவேண்டும்’ என்று கேட்டுக்கொண்டார்.

    மனுவை விசாரித்த நீதிபதிகள் ஒகா மற்றும் சோனக் அடங்கிய அமர்வு சிறுமியின் உடல்நிலையை பரிசோதித்து மருத்துவ அறிக்கை தாக்கல் செய்யுமாறு மருத்துவ குழுவுக்கு உத்தரவிட்டனர். அவர்கள் கொடுத்த அறிக்கையின் அடிப்படையில் சிறுமியின் கருவை கலைக்க அவர்கள் அனுமதி வழங்கினர்.

    மேலும் வழக்கு விசாரணையின்போது மனுதாரர் தரப்பு வக்கீல், ‘சிறுமி பள்ளிக்கு சென்று படித்து வந்ததாகவும், இந்த நிலையில் அவர் கற்பழிப்புக்கு ஆளானதால் படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டதாகவும்’ தெரிவித்தார். இதை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், சிறுமியின் படிப்பு மற்றும் எதிர்கால வாழ்க்கையை கருத்தில் கொண்டு, அவளின் பெற்றோர் மாநில சட்ட சேவை ஆணையத்தை அணுகி சட்ட உதவி மற்றும் சிறுமியின் கல்விக்கு தேவையான நிதி உதவியை பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தினர்.  #BombayHighCourt #TeenCancer 
    தெலுங்கானாவில் தன்னை திருமணம் செய்துகொள்வதாக வாக்குறுதி அளித்து கற்பழிப்பு செய்து விட்டதாக பெண் வக்கீல் அளித்த புகாரின் பேரில் நீதிபதி கைது செய்யப்பட்டார். #Telangana #JuniorCivilJudge
    ஐதராபாத்:

    தெலுங்கானா மாநிலம், சூரியபேட்டையில் 29 வயதான பெண் வக்கீல் ஒருவரை கற்பழித்ததாக சத்திய நாராயணராவ் (28) என்ற சிவில் நீதிபதி மீது புகார் எழுந்து உள்ளது.

    இதில் பாதிக்கப்பட்ட பெண் வக்கீல் அளித்த புகாரில், நீதிபதி தன்னை திருமணம் செய்துகொள்வதாக வாக்குறுதி அளித்து, செக்ஸ் உறவு வைத்துக்கொண்டு விட்டு, இப்போது வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்வதற்கு நிச்சயதார்த்தம் செய்து உள்ளதாக கூறி உள்ளார்.

    இந்த புகாரின்மீது போலீசார் கற்பழிப்பு தொடர்பான இந்திய தண்டனை சட்டப்பிரிவு மற்றும் எஸ்.சி., எஸ்.டி., வன்கொடுமை தடுப்பு சட்ட பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். அதைத் தொடர்ந்து சிவில் நீதிபதி சத்தியநாராயணராவை நேற்று கைது செய்தனர்.  #Telangana #JuniorCivilJudge 
    12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை கற்பழிப்போருக்கு மரண தண்டனை விதிக்க வகை செய்யும் சட்டத்துக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்தார். #President #RamNathKovind #DeathPenalty
    புதுடெல்லி:

    காஷ்மீரின் கதுவாவில் சிறுமி ஒருவர் கற்பழித்து கொலை செய்யப்பட்ட சம்பவமும், உத்தரபிரதேசத்தின் உன்னாவ் நகரில் 17 வயது சிறுமி ஒருவர் எம்.எல்.ஏ. உள்ளிட்டோரால் கற்பழிக்கப்பட்ட சம்பவமும் கடந்த சில மாதங்களுக்கு முன் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

    இதைத்தொடர்ந்து சிறுமிகளை கற்பழிப்போருக்கு மரண தண்டனை விதிக்கும் வகையில் கடந்த ஏப்ரல் 21-ந் தேதி மத்திய அரசு அவசர சட்டம் பிறப்பித்தது. பின்னர் இந்த அவசர சட்டத்துக்கு பதிலாக புதிய சட்ட திருத்த மசோதாவை சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் மத்திய அரசு தாக்கல் செய்தது.



    குற்றவியல் சட்டம் (திருத்தம்) மசோதா 2018 என்ற இந்த மசோதா நாடாளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேறியது. இதைத்தொடர்ந்து ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்ட இந்த மசோதாவுக்கு, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று முன்தினம் ஒப்புதல் வழங்கினார். இதன் மூலம் இந்த சட்டம் அமலில் வந்துள்ளது.

    குற்றவியல் (சட்ட திருத்தம்) சட்டம் என அழைக்கப்படும் இந்த சட்டம், கடந்த ஏப்ரல் 21-ந் தேதி முதலே அமலுக்கு வந்ததாக கருதப்படும் என மத்திய அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டு உள்ளது.

    இதன் மூலம் இந்திய தண்டனை சட்டம், இந்திய சாட்சிகள் சட்டம் 1872, குற்றவியல் நடைமுறை சட்டம் 1973 மற்றும் போக்சோ சட்டம் 2012 ஆகியவற்றில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

    இந்த புதிய சட்டம், கற்பழிப்பில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை வழங்க வழிவகுக்கிறது. குறிப்பாக 12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை கற்பழிப்போருக்கு மரண தண்டனை வழங்கப்படும். இதில் குறைந்தபட்ச தண்டனையாக 20 ஆண்டு அல்லது வாழ்நாள் சிறைத்தண்டனை விதிக்கப்படும்.

    இந்த சிறுமிகளை கூட்டு பலாத்காரத்தில் ஈடுபடுவோருக்கு வாழ்நாள் சிறை அல்லது மரண தண்டனையும் விதிக்க வகை செய்கிறது.

    16 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை கற்பழிப்போருக்கான குறைந்தபட்ச சிறைத்தண்டனை 10 ஆண்டுகளில் இருந்து 20 ஆண்டாக அதிகரிக்கப்படுகிறது. இது வாழ்நாள் சிறையாக அதிகரிக்கவும் வழி வகுக்கிறது. இந்த சிறுமிகளை கூட்டு பலாத்காரம் செய்வோருக்கு வாழ்நாள் சிறை விதிக்கப்படும்.

    இந்த கற்பழிப்பு வழக்குகளை விரைவாக விசாரித்து முடிக்கவும் இந்த சட்டம் வழிவகுப்பது குறிப்பிடத்தக்கது.  #President #RamNathKovind #DeathPenalty
    ஊத்தங்கரை அருகே பெண்ணை அடித்துக்கொலை செய்து, உடலை சாக்குமூட்டையில் கட்டி கிணற்றில் வீசி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
    ஊத்தங்கரை:

    ஊத்தங்கரை அருகே பெண்ணை அடித்துக்கொலை செய்து, உடலை சாக்குமூட்டையில் கட்டி கிணற்றில் வீசி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் தரப்பில் கூறப்பட்டதாவது:-

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே கல்லாவி மேட்டுத்தெருவில் பொது கிணறு ஒன்று உள்ளது. இந்த கிணற்றில் நேற்று ஒரு சாக்கு மூட்டை மிதந்து கொண்டிருந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் இது தொடர்பாக கல்லாவி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

    பின்னர் போலீசார், ஊத்தங்கரை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து சென்று கிணற்றுக்குள் இறங்கி அந்த சாக்குமூட்டையை மேலே கொண்டு வந்தனர். அந்த சாக்கு மூட்டையை போலீசார் பிரித்து பார்த்த போது உள்ளே பலத்த காயத்துடன் 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரின் பிணம் இருந்தது.

    போலீசாரின் விசாரணையில், அந்த பெண்ணை மர்ம நபர்கள் அடித்துக்கொலை செய்து, உடலை சாக்குமூட்டையில் கட்டி, பின்னர் கல்லை கட்டி கிணற்றில் வீசி சென்றிருப்பது தெரியவந்தது. மேலும் பெண்ணின் உடல் ஆடையின்றி இருப்பதால் மர்ம நபர்கள் அவரை கற்பழித்து கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். ஆனால் கொலை செய்யப்பட்ட பெண் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரம் உடனடியாக தெரியவில்லை. 

    இதைத் தொடர்ந்து உடலை பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையுண்ட பெண் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? அவரை கொலை செய்த மர்ம நபர்கள் யார்? எதற்காக கொலை செய்தார்கள்? என விசாரணை நடத்தி வருகின்றனர். பெண்ணை கொலை செய்து சாக்குமூட்டையில் கட்டி கிணற்றில் வீசி சென்ற சம்பவம் கல்லாவி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் கல்லூரி மாணவியை அவரது வீட்டிலேயே வைத்து கும்பல் கற்பழித்த சம்பவத்தில் பா.ஜனதா பிரமுகரின் மகன் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் மாவட்டம் போபல் கர்த் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் கல்லூரி முடிந்து வீடு திரும்பி கொண்டு இருந்தார்.

    அப்போது காரில் வந்த 2 பேர் அந்த பெண்ணை இழுத்து காரில் போட்டனர். மாணவியின் வீட்டில் யாரும் இல்லாததை அறிந்து அந்த பெண்ணை அவரது வீட்டுகே கொண்டு சென்று கற்பழித்தனர். மேலும் தனது 3 நண்பர்களையும் வரவழைத்தனர். அவர்களும் கல்லூரி மாணவியை கற்பழித்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர்.

    அந்த மாணவி நடந்த சம்பவம் குறித்து பெற்றோரிடம் தெரிவித்தார். 5 பேர் சேர்ந்து கல்லூரி மாணவியை கற்பழித்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதில் ஒருவர் உள்ளூர் பா.ஜனதா பிமுகர் மகன் ஆவார். கற்பழிப்பு சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்யக் கோரி அந்த பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பதட்டமான சூழ்நிலை உருவானது. கடைகள் அனைத்தும் மூடப்பட்டன. அரசியல் தலையீடு காரணமாக கற்பழிப்பு குற்றவாளிகளை போலீசார் கைது செய்யவில்லை என்று அந்த பகுதி மக்கள் குற்றம் சாட்டினர்.

    5 பேரில் ஒரே ஒருவர் மட்டுமே கைதாகி உள்ளார். மற்ற 4 பேரை போலீசார் தேடி வருவதாக உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
    அரியானா மாநிலத்தில் 120 பெண்களை கற்பழித்த பிரபல மடாதிபதி கைது செய்யப்பட்டார். செல்போனில் ரகசியமாக ஆபாச படம் பிடித்து அவர்களை மிரட்டி அவர் கற்பழித்து இருப்பதும் தெரிய வந்துள்ளது.
    சண்டிகார்:

    அரியானா மாநிலம் பதேஹாபாத் நகரையொட்டிய தோகானா புற நகரைச் சேர்ந்தவர் அமர்புரி என்கிற பில்லு. 60 வயதான இவர் அங்குள்ள பிரபலமான பலக்நாத் கோவிலின் மடாதிபதியும் ஆவார். மந்திர, தந்திர கலைகளிலும் கைதேர்ந்த இவரிடம் ஏராளமான பெண்கள் குறி கேட்பதற்காக வருவதுண்டு.

    இப்படி தன்னைத் தேடி வரும் பெண்களை தனது வலையில் சிக்க வைத்து அவர்களை கற்பழிப்பதாக இவர் மீது அண்மையில் புகார்கள் குவிந்தன. இதையடுத்து மடாதிபதி அமர்புரியை பதேஹாபாத் பெண்கள் போலீஸ் நிலைய போலீசார் நேற்று அதிரடியாக கைது செய்தனர். அவர் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து அவரை 5 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க போலீசார் கோர்ட்டில் அனுமதியும் பெற்றனர்.



    இதற்கிடையே, அமர்புரி மடாதிபதியாக உள்ள கோவிலிலும், அவருடைய வீட்டிலும் போலீசார் அதிரடி சோதனை நடத்தி சந்தேகத்துக்குரிய பல சி.டி.க்களை கைப்பற்றினர்.

    அப்போது, அவர் 120 பெண்களை தனது வலையில் விழ வைத்து கற்பழித்தது தெரிய வந்தது. அது மட்டுமின்றி மடாதிபதி அமர்புரி, தான் அந்த பெண்களுடன் உறவு கொள்வதை செல்போனில் ரகசிய வீடியோவாக படம் பிடித்து அதை வைத்து தொடர்ந்து அவர்களை மிரட்டி மீண்டும் மீண்டும் பல முறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

    மடாதிபதியால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவரின் உறவினர் மடாதிபதி எடுத்த அத்தனை ஆபாச புகைப்படங்களையும் சி.டி.யில் பதிவு அதை போலீசாரிடம் ஒப்படைத்து உள்ளார்.

    இதுபற்றி பதேஹாபாத் பெண்கள் போலீஸ் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் பிம்லா தேவி கூறுகையில், “தற்போது மடாதிபதியால் கற்பழிக்கப்பட்ட 2 பெண்கள் அவர் மீது புகார் அளிக்க முன்வந்திருப்பதுடன் இதுபற்றி வாக்குமூலம் அளிக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்து இருக்கின்றனர். மேலும் பாதிப்புக்கு உள்ளான பெண்கள் யார் யார் என சி.டி. மூலம் அடையாளம் காணப்பட்டு அந்த பெண்களிடமும் வாக்குமூலம் பெறப்படும்“ என்றார்.

    இதற்கிடையே கைது செய்யப்பட்ட மடாதிபதி அமர்புரி தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார். அமர்புரி மீது சில மாதங்களுக்கு முன்பு, தனது கோவிலுக்கு வந்த ஒரு பெண்ணை கற்பழித்தாக பதேஹாபாத் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அதில் அவர் ஜாமீனில் விடுதலை ஆகி வெளியே வந்து விட்டார்.

    அதன்பின்பு தனது பாதுகாப்பிற்காக போலீசாருக்கு பணம் கொடுக்க மறுத்துவிட்டதால் போலீசார் திட்டமிட்டு தன்னை மீண்டும் வழக்கில் சிக்க வைத்துவிட்டனர், என்று மடாதிபதி அமர்புரி குற்றம் சாட்டி உள்ளார். 
    ராஜஸ்தான் மாநிலத்தில் 7 மாத கைக்குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்து உயிருக்கு ஆபத்தான நிலைக்கு தள்ளிய 19 வயது வாலிபருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. #Rajasthan
    ஜெய்ப்பூர்:

    12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்கும் சட்டத்தை மத்திய பிரதேச மாநில அரசு அறிமுகப்படுத்தியது. இதனைத் தொடர்ந்து 2-வது மாநிலமாக ராஜஸ்தான் அரசும் இதேபோல் கடந்த மார்ச் மாதம் புதிய சட்டத்தை இயற்றியது.

    இந்நிலையில், கடந்த 9.5.2018 அன்று ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டத்தில் லக்‌ஷ்மன்கர் பகுதியில் தாதியின் பராமரிப்பில் இருந்த 7 மாத பெண் குழந்தையை பறித்து சென்ற ஒருவன், அருகாமையில் உள்ள கால்பந்து திடலில் வீசிச் சென்றான். குழந்தையை தேடித் திரிந்த பெற்றோர்கள் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாக்கப்பட்டு, உயிருக்கு போராடிக் கொண்டிருந்த தங்களது மகளை கண்டெடுத்து, அல்வார் மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

    இந்த கோர சம்பவம் தொடர்பாக, அந்த தாதியின் உறவினரான 19 வயது வாலிபரை போலீசார் கைது செய்தனர். சிறார் பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டம் மற்றும் ராஜஸ்தான் மாநிலம் அறிமுகப்படுத்திய புதிய சட்டம் ஆகிய குற்றப்பிரிவுகளின் கீழ் அதிவிரைவு நீதிமன்றத்தில் பிடிபட்ட வாலிபர் மீது போலீசார் வழக்கு தொடர்ந்தனர்.

    13 முறை நடைபெற்ற இந்த வழக்கின் விசாரணை முடிவுக்கு வந்து நீதிபதி சமீபத்தில் தீர்ப்பளித்தார். பச்சிளம் குழந்தை என்றும் பாராமல் இந்த பாதகத்தை செய்த குற்றவாளிக்கு, புதிய சட்டத்தின் கீழ் மரண தண்டனை விதித்து உத்தரவிட்டார். ராஜஸ்தான் அரசின் புதிய சட்டத்தின் கீழ் முதன்முறையாக கற்பழிப்பு வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டது இந்த வாலிபருக்குதான் என்பது குறிப்பிடத்தக்கது. #Rajasthan
    சண்டிகர் மாவட்டத்தில் வேலை தேடி சென்ற 22 வயது இளம்பெண்ணை 40 பேர் கற்பழித்த கோர சம்பவம் அரங்கேறியுள்ளது. #Chandigarh
    சண்டிகர்:

    அரியானா மாநிலம் பஞ்சகுலா பகுதியில் தனது கணவருடன் வசிக்கும் 22 வயது பெண், கணவரின் நண்பர் வேலை வாங்கி தருவதாக அளித்த வாக்குறுதியை நம்பி, சண்டிகரில் உள்ள மோர்னி மலைப்பகுதிக்கு சென்றுள்ளார்.

    அங்கு அவர் ஒரு சொகுசு பங்களாவில் அடைத்து வைக்கப்பட்டு, 40 கொடூரர்களால் கற்பழிக்கப்பட்டுள்ளார். சுமார் 4 நாட்கள் அவர் அந்த இடத்தில் அடைத்து வைத்து பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.

    இதுதொடர்பாக காவல்துறையில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், இந்த சம்பவத்தில் தொடர்புடைய சொகுசு வீட்டில் பணிபுரியும் 2 பேரை காவல்துறையினர் கைதுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். #Chandigarh
    நிலக்கோட்டை அருகே மைனர் பெண்ணை கடத்தி கற்பழித்த வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    நிலக்கோட்டை:

    நிலக்கோட்டை அருகே உள்ள சிங்காரகோட்டை கிராமத்தைச் சேர்ந்த 17 வயது பெண் தனியார் மில்லில் வேலை பார்த்து வந்தார். அதே பகுதியைச் சேர்ந்த நாகேந்திரன் மகன் தங்கபாண்டி (21) என்பவர் கடந்த 2 வருடங்களாக அவரை காதலித்து வந்துள்ளார்.

    இந்த விபரம் பெண்ணின் தாயாருக்கு தெரியவரவே தனது மகளை விடுதி மில்லிலேயே தங்க வைத்தார். இருந்த போதும் தங்கபாண்டி அவருடன் செல்போனில் தொடர்பு கொண்டு பேசி வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரை கோயம்புத்தூருக்கு அழைத்துச் சென்று தனி அறையில் தங்க வைத்து பல முறை பலாத்காரம் செய்து உள்ளார்.

    தனது மகள் விடுதியில் இருந்து வெளியே சென்ற விபரம் தெரியவரவே பல இடங்களில் தேடிப் பார்த்தார். அப்போது தங்கபாண்டி அவரை கடத்திச் சென்றது தெரிய வந்தது. இது குறித்து நிலக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் தேவி மைனர் பெண்ணை கடத்தி கற்பழித்த தங்கபாண்டியை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து கைது செய்தனர்.

    பின்னர் அவரை சிறையில் அடைத்தனர். பாதிக்கப்பட்ட பெண்ணை காப்பகத்தில் ஒப்படைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    ×