என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 110947
நீங்கள் தேடியது "கற்பழிப்பு"
கற்பழிப்பு, ஆசிட் வீச்சு போன்ற சம்பவங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணத் தொகையை ரூ.3 லட்சத்தில் இருந்து 7 லட்சமாக உயர்த்தி வழங்க பீகார் அரசு உத்தரவிட்டுள்ளது. #Bihar
பாட்னா:
ஒருதலைக் காதல், காதல் தோல்வி போன்ற பல்வேறு காரணங்களால் பெண்கள் மீது ஆசிட் வீசுவதும், கொலை செய்ய முயற்சிப்பதுமான சம்பவங்கள் நிகழ்ந்து வருகிறது. இதுபோன்ற துரதிர்ஷ்டவசமான சம்பவங்களால் பாதிக்கப்பட்டு, மனம் தளராமல் வாழ்பவர்களுக்கு பீகார் அரசு 3 லட்சம் ரூபாய் நிவாரணத் தொகையாக வழங்கி வருகிறது. இதேபோல் பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண்களின் மறுவாழ்வுக்கும் நிவாரணம் வழங்கப்படுகிறது.
இந்நிலையில், தற்போது இந்த நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்க அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, 7 லட்ச ரூபாய் இனி நிவாரணத் தொகையாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட 14 வயதுக்கும் குறைவானவர்களுக்கு உயர்த்தப்பட்ட நிவாரணத் தொகையான 7 லட்சம் ரூபாய்க்கும் கூடுதலாக 50 சதவிகிதம் அதாவது, 10.5 லட்சம் ரூபாய் அளிக்கப்படும் எனவும் பீகார் அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #Bihar
ஒருதலைக் காதல், காதல் தோல்வி போன்ற பல்வேறு காரணங்களால் பெண்கள் மீது ஆசிட் வீசுவதும், கொலை செய்ய முயற்சிப்பதுமான சம்பவங்கள் நிகழ்ந்து வருகிறது. இதுபோன்ற துரதிர்ஷ்டவசமான சம்பவங்களால் பாதிக்கப்பட்டு, மனம் தளராமல் வாழ்பவர்களுக்கு பீகார் அரசு 3 லட்சம் ரூபாய் நிவாரணத் தொகையாக வழங்கி வருகிறது. இதேபோல் பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண்களின் மறுவாழ்வுக்கும் நிவாரணம் வழங்கப்படுகிறது.
இந்நிலையில், தற்போது இந்த நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்க அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, 7 லட்ச ரூபாய் இனி நிவாரணத் தொகையாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட 14 வயதுக்கும் குறைவானவர்களுக்கு உயர்த்தப்பட்ட நிவாரணத் தொகையான 7 லட்சம் ரூபாய்க்கும் கூடுதலாக 50 சதவிகிதம் அதாவது, 10.5 லட்சம் ரூபாய் அளிக்கப்படும் எனவும் பீகார் அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #Bihar
உத்தரப்பிரதேச மாநிலத்தில் பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்து, அவரை கோவில் வளாத்தில் உயிருடன் எரித்து கொலை செய்த கொடூரம் நிகழ்ந்துள்ளது. #Uttarpradesh
லக்னோ:
இந்தியாவில் பெண்களின் பாதுகாப்பு நாளுக்கு நாள் கேள்விக்குறியாகி வருவதாக சமூக ஆர்வலர்கள் மற்றும் பல்வேறு ஆய்வுகள் அறிவுறுத்தி வருகின்றன. இதனை உறுதி செய்யும் வகையில் சமீப காலங்களில் பெண்களுக்கு எதிராக பல்வேறு வன்முறைகள் நடக்கிறது.
இதனை தடுக்க அரசு பல்வேறு புதிய நடவடிக்கைகளை மேற்கொண்ட போதிலும், பெண்களின் பாதுகாப்பு உறுதிபடுத்தப்படவில்லை.
இந்நிலையில், உத்தரப்பிரதேச மாநிலம் சம்பால் மாவட்டத்தில் உள்ள ராஜ்புரா பகுதியில் நள்ளிரவில் வீட்டில் தனது மகளுடன் இருந்த 30 வயது மதிக்கத்தக்க பெண்ணை 5 பேர் சேர்ந்து கூட்டு பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர்.
இதையடுத்து, அப்பகுதியில் உள்ள ஒரு கோவிலின் வளாகத்தில் பூஜைக்காக போடப்பட்டிருந்த குடிசைக்கு அந்த பெண்ணை கொண்டு சென்ற அந்த 5 பேரும், அவரை உயிருடன் எரித்து கொன்றுள்ளனர்.
இந்த சமபவம் தொடர்பாக பெண்ணின் கணவர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் முக்கிய குற்றவாளிகள் இருவரை கைது செய்துள்ளனர். மேலும், தலைமறைவாக உள்ள 3 பேரையும் தேடும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். #Uttarpradesh
இந்தியாவில் பெண்களின் பாதுகாப்பு நாளுக்கு நாள் கேள்விக்குறியாகி வருவதாக சமூக ஆர்வலர்கள் மற்றும் பல்வேறு ஆய்வுகள் அறிவுறுத்தி வருகின்றன. இதனை உறுதி செய்யும் வகையில் சமீப காலங்களில் பெண்களுக்கு எதிராக பல்வேறு வன்முறைகள் நடக்கிறது.
இதனை தடுக்க அரசு பல்வேறு புதிய நடவடிக்கைகளை மேற்கொண்ட போதிலும், பெண்களின் பாதுகாப்பு உறுதிபடுத்தப்படவில்லை.
இந்நிலையில், உத்தரப்பிரதேச மாநிலம் சம்பால் மாவட்டத்தில் உள்ள ராஜ்புரா பகுதியில் நள்ளிரவில் வீட்டில் தனது மகளுடன் இருந்த 30 வயது மதிக்கத்தக்க பெண்ணை 5 பேர் சேர்ந்து கூட்டு பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர்.
இதையடுத்து, அப்பகுதியில் உள்ள ஒரு கோவிலின் வளாகத்தில் பூஜைக்காக போடப்பட்டிருந்த குடிசைக்கு அந்த பெண்ணை கொண்டு சென்ற அந்த 5 பேரும், அவரை உயிருடன் எரித்து கொன்றுள்ளனர்.
இந்த சமபவம் தொடர்பாக பெண்ணின் கணவர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் முக்கிய குற்றவாளிகள் இருவரை கைது செய்துள்ளனர். மேலும், தலைமறைவாக உள்ள 3 பேரையும் தேடும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். #Uttarpradesh
திருமணம் செய்வதாக கூறி எல்லைபாதுகாப்பு படை வீரரால் கற்பழிக்கப்பட்ட பெண் பின்னர் திருமணம் செய்ய அவர் மறுத்துவிட்டதால் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
முசாபர்நகர்:
உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகர் பகுதியை சேர்ந்த 26 வயது பெண்ணை திருமணம் செய்வதாக கூறி எல்லை பாதுகாப்பு படை வீரர் ஒருவர் கற்பழித்ததாகவும், பின்னர் திருமணம் செய்ய அவர் மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் அந்த பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து அந்த பெண்ணின் தந்தை போலீசில் அளித்த புகாரில் ‘எனது மகளை திருமணம் செய்வதாக கூறி எல்லைபாதுகாப்பு படை வீரர் கற்பழித்து விட்டார். அவரிடம் திருமணம் செய்ய எனது மகள் கேட்டபோது, அதற்கு அவர் எனது மகளுடன் இருந்த வீடியோ படங்களை இன்டர்நெட் மற்றும் சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதாக கூறி மிரட்டி உள்ளார். இதனால் தான் என் மகள் தற்கொலை செய்து கொண்டார்’ என குறிப்பிட்டு உள்ளார்.
இதுதொடர்பாக விசாரணை நடத்தப்படும் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகர் பகுதியை சேர்ந்த 26 வயது பெண்ணை திருமணம் செய்வதாக கூறி எல்லை பாதுகாப்பு படை வீரர் ஒருவர் கற்பழித்ததாகவும், பின்னர் திருமணம் செய்ய அவர் மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் அந்த பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து அந்த பெண்ணின் தந்தை போலீசில் அளித்த புகாரில் ‘எனது மகளை திருமணம் செய்வதாக கூறி எல்லைபாதுகாப்பு படை வீரர் கற்பழித்து விட்டார். அவரிடம் திருமணம் செய்ய எனது மகள் கேட்டபோது, அதற்கு அவர் எனது மகளுடன் இருந்த வீடியோ படங்களை இன்டர்நெட் மற்றும் சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதாக கூறி மிரட்டி உள்ளார். இதனால் தான் என் மகள் தற்கொலை செய்து கொண்டார்’ என குறிப்பிட்டு உள்ளார்.
இதுதொடர்பாக விசாரணை நடத்தப்படும் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
கேரளாவில் குடும்ப பிரச்சனையை தீர்த்து வைப்பதாக கூறி பெண்ணை கற்பழித்த பாதிரியார் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் பத்தனம் திட்டா மாவட்டத்தில் உள்ள ஒரு கிறிஸ்தவ ஆலயத்திற்கு பாவமன்னிப்பு கேட்கச் சென்ற ஒரு பெண்ணை மிரட்டி அந்த பாதிரியார் பாலியல் பலாத்காரம் செய்தார்.
மேலும் அதே ஆலயத்தை சேர்ந்த 3 பாதிரியார்களும் அந்த பெண்ணை பாலியல் கொடுமைக்கு ஆளாக்கினார்கள். இது பற்றி பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் புகார் செய்ததை தொடர்ந்து 4 பாதிரியார்கள் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருச்சூர் அருகே உள்ள முள்ளக்கல்லை சேர்தவர் பிராங்கோ. இவர் ஜலந்தரில் பிஷப்பாக உள்ளார். இந்த பிஷப் மீது கோட்டயம் குரவிலங்காட்டை சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர் பாலியல் புகார் கொடுத்து உள்ளார். 2 வருடமாக தன்னை மிரட்டி 13 முறை பிஷப் பிராங்கோ பலாத்காரம் செய்ததாக அவர் குற்றம்சாட்டி உள்ளார்.
இதைதொடர்ந்து அந்த பிஷப்பை கைது செய்ய போலீசார் தீவிர நடவடிக்கையில் இறங்கி உள்ளனர். முன்னதாக இந்த புகார் தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகும்படி பிஷப்புக்கு நோட்டீசு அனுப்பவும் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
இந்த நிலையில் பத்தனம் திட்டா மாவட்டத்தை சேர்ந்த 4 பாதிரியார்கள் மீது பாலியல் புகார் கூறப்பட்ட அதே கிறிஸ்தவ ஆலயத்தை சேர்ந்த இன்னொரு பாதிரியாரான பினுஜார்ஜ் என்பவர் மீதும் பாலியல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த பாதிரியார் சில ஆண்டுகளுக்கு முன்பு ஆலப்புழை மாவட்டத்தில் பாதிரியாராக பணிபுரிந்தார். அப்போது அந்த பகுதியை சேர்ந்த பெண் தனக்கும் தனது கணவருக்கும் ஏற்பட்டுள்ள குடும்ப பிரச்சினை பற்றி அந்த பாதிரியாரிடம் கூறி அதை தீர்த்து வைக்கும்படி கேட்டுக்கொண்டார்.
இந்த நிலையில் அந்த பாதிரியார் மாவேலிகரைக்கு மாற்றலாகி சென்றதால் அந்த பெண்ணை அங்குள்ள ஆலயத்திற்கு வரவழைத்து குடும்ப பிரச்சினையை தீர்க்க ஆலோசனை வழங்குவதாக கூறி பலாத்காரம் செய்துவிட்டார்.
இதுபற்றி அந்த பெண் பிஷப்பிடம் புகார் கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதே சமயம் பாதிரியார் பினு ஜார்ஜ் தொடர்ந்து அந்த பெண்ணுக்கு செல்போனில் ஆபாச படங்களை அனுப்பி தொந்தரவு செய்ததால் காயங்குளம் போலீசில் தற்போது அந்த பெண் புகார் செய்துள்ளார். இந்த புகாரை தொடர்ந்து பாதிரியார் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கேரளாவில் தொடர்ந்து பாதிரியார்கள் மீது பாலியல் புகார் எழுந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews
கேரள மாநிலம் பத்தனம் திட்டா மாவட்டத்தில் உள்ள ஒரு கிறிஸ்தவ ஆலயத்திற்கு பாவமன்னிப்பு கேட்கச் சென்ற ஒரு பெண்ணை மிரட்டி அந்த பாதிரியார் பாலியல் பலாத்காரம் செய்தார்.
மேலும் அதே ஆலயத்தை சேர்ந்த 3 பாதிரியார்களும் அந்த பெண்ணை பாலியல் கொடுமைக்கு ஆளாக்கினார்கள். இது பற்றி பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் புகார் செய்ததை தொடர்ந்து 4 பாதிரியார்கள் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருச்சூர் அருகே உள்ள முள்ளக்கல்லை சேர்தவர் பிராங்கோ. இவர் ஜலந்தரில் பிஷப்பாக உள்ளார். இந்த பிஷப் மீது கோட்டயம் குரவிலங்காட்டை சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர் பாலியல் புகார் கொடுத்து உள்ளார். 2 வருடமாக தன்னை மிரட்டி 13 முறை பிஷப் பிராங்கோ பலாத்காரம் செய்ததாக அவர் குற்றம்சாட்டி உள்ளார்.
இதைதொடர்ந்து அந்த பிஷப்பை கைது செய்ய போலீசார் தீவிர நடவடிக்கையில் இறங்கி உள்ளனர். முன்னதாக இந்த புகார் தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகும்படி பிஷப்புக்கு நோட்டீசு அனுப்பவும் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
இந்த நிலையில் பத்தனம் திட்டா மாவட்டத்தை சேர்ந்த 4 பாதிரியார்கள் மீது பாலியல் புகார் கூறப்பட்ட அதே கிறிஸ்தவ ஆலயத்தை சேர்ந்த இன்னொரு பாதிரியாரான பினுஜார்ஜ் என்பவர் மீதும் பாலியல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த பாதிரியார் சில ஆண்டுகளுக்கு முன்பு ஆலப்புழை மாவட்டத்தில் பாதிரியாராக பணிபுரிந்தார். அப்போது அந்த பகுதியை சேர்ந்த பெண் தனக்கும் தனது கணவருக்கும் ஏற்பட்டுள்ள குடும்ப பிரச்சினை பற்றி அந்த பாதிரியாரிடம் கூறி அதை தீர்த்து வைக்கும்படி கேட்டுக்கொண்டார்.
இந்த நிலையில் அந்த பாதிரியார் மாவேலிகரைக்கு மாற்றலாகி சென்றதால் அந்த பெண்ணை அங்குள்ள ஆலயத்திற்கு வரவழைத்து குடும்ப பிரச்சினையை தீர்க்க ஆலோசனை வழங்குவதாக கூறி பலாத்காரம் செய்துவிட்டார்.
இதுபற்றி அந்த பெண் பிஷப்பிடம் புகார் கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதே சமயம் பாதிரியார் பினு ஜார்ஜ் தொடர்ந்து அந்த பெண்ணுக்கு செல்போனில் ஆபாச படங்களை அனுப்பி தொந்தரவு செய்ததால் காயங்குளம் போலீசில் தற்போது அந்த பெண் புகார் செய்துள்ளார். இந்த புகாரை தொடர்ந்து பாதிரியார் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கேரளாவில் தொடர்ந்து பாதிரியார்கள் மீது பாலியல் புகார் எழுந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews
உத்தரப்பிரதேசத்தில் தலித் சமூகத்தை சேர்ந்த பெண்ணை கற்பழித்து நிர்வாணமாக்கி தெருவில் ஊர்வலமாக அழைத்து சென்ற 4 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
லக்னோ:
உத்தரபிரதேச மாநிலம் ஹாமிர்பூர் மாவட்டம் குராரா என்ற ஊரில் தலித் சமூகத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் உயர் ஜாதி பெண்ணை காதலித்து வந்தார்.
இதனால் உயர் ஜாதி சமூகத்தை சேர்ந்தவர்கள் அந்த வாலிபரை எச்சரித்தனர். ஆனால், அதை கண்டுகொள்ளாத அவர் உயர் ஜாதி பெண்ணை தொடர்ந்து காதலித்து வந்தார்.
இதற்கு பாடம் கற்பிக்க வேண்டும் என்று உயர் ஜாதியினர் முடிவு செய்தனர். சம்பவத்தன்று உயர் ஜாதியை சேர்ந்த 4 பேர் அந்த வாலிபரின் உறவு பெண்ணின் வீட்டுக்கு வந்தனர். தனியாக இருந்த அவரை 4 பேரும் கூட்டாக கற்பழித்தனர்.
இந்த விஷயத்தை வெளியே சொன்னால் கொன்று விடுவோம என மிரட்டிவிட்டு சென்றனர். ஆனால், நடந்த சம்பவத்தை கணவரிடமும், உறவினரிடமும் அந்த பெண் கூறினார்.
இதனால் ஆத்திரம் அடைந்த கணவர் உயர் ஜாதியினரிடம் சென்று சண்டை போட்டார். இதனால் அவர்களுக்கு மேலும் ஆத்திரம் ஏற்பட்டது.
ஏற்கனவே கற்பழிப்பில் ஈடுபட்ட 4 பேரும் மறுபடியும் அந்த பெண்ணின் வீட்டுக்கு வந்தனர். நடந்த விஷயத்தை எப்படி வெளியே சொல்லலாம்? என்று கூறி அவரை அடித்து உதைத்தனர்.
பின்னர் அந்த பெண்ணை வீட்டுக்கு வெளியே இழுத்து வந்தனர். அவரை நிர்வாணமாக்கி தெருவில் ஊர்வலமாக அழைத்து சென்றனர். அந்த காட்சியை ஊரே நின்று வேடிக்கை பார்த்தது. யாரும் அவரை காப்பாற்ற முன்வரவில்லை.
இது சம்பந்தமாக பெண்ணின் கணவர் குராரா போலீசுக்கு தகவல் கொடுத்தார். ஆனால், அவர்களும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
உள்ளூர் பிரமுகர்கள் சிலர் போலீசாரை அங்கு வரவிடாமல் தடுத்துவிட்டனர். இதனால் அவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அஜய்குமாரிடம் சென்று புகார் கொடுத்தார்.
அதை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அந்த பெண்ணை கோரி லால், சோட்டாலால், ஜெய்கிஷோர், ஹாகன் ஆகிய வாலிபர்கள் கற்பழித்தது தெரிய வந்தது. அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். பாதிக்கப்பட்ட பெண் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
சம்பவம் நடந்ததும் உடனடியாக நடவடிக்கை எடுக்காமல் இருந்ததால் குராரா போலீசார் மீது துறை ரீதியான விசாரணைக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டுள்ளார்.
இது சம்பந்தமாக சமாஜ்வாடி கட்சி செய்தி தொடர்பாளர் சுனில்சிங் கூறும் போது, உத்தரபிரதேசத்தில் பாரதிய ஜனதா ஆட்சியில் சட்டம்- ஒழுங்கு சீர்குலைந்துள்ளது என்பதற்கு இந்த சம்பவமே சாட்சி.
பா.ஜ.க. ஆட்சி வந்த பிறகு தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்கள் மீதான வன்முறை அதிகரித்துள்ளது என்று கூறினார்.
உத்தரபிரதேச மாநிலம் ஹாமிர்பூர் மாவட்டம் குராரா என்ற ஊரில் தலித் சமூகத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் உயர் ஜாதி பெண்ணை காதலித்து வந்தார்.
இதனால் உயர் ஜாதி சமூகத்தை சேர்ந்தவர்கள் அந்த வாலிபரை எச்சரித்தனர். ஆனால், அதை கண்டுகொள்ளாத அவர் உயர் ஜாதி பெண்ணை தொடர்ந்து காதலித்து வந்தார்.
இதற்கு பாடம் கற்பிக்க வேண்டும் என்று உயர் ஜாதியினர் முடிவு செய்தனர். சம்பவத்தன்று உயர் ஜாதியை சேர்ந்த 4 பேர் அந்த வாலிபரின் உறவு பெண்ணின் வீட்டுக்கு வந்தனர். தனியாக இருந்த அவரை 4 பேரும் கூட்டாக கற்பழித்தனர்.
இந்த விஷயத்தை வெளியே சொன்னால் கொன்று விடுவோம என மிரட்டிவிட்டு சென்றனர். ஆனால், நடந்த சம்பவத்தை கணவரிடமும், உறவினரிடமும் அந்த பெண் கூறினார்.
இதனால் ஆத்திரம் அடைந்த கணவர் உயர் ஜாதியினரிடம் சென்று சண்டை போட்டார். இதனால் அவர்களுக்கு மேலும் ஆத்திரம் ஏற்பட்டது.
ஏற்கனவே கற்பழிப்பில் ஈடுபட்ட 4 பேரும் மறுபடியும் அந்த பெண்ணின் வீட்டுக்கு வந்தனர். நடந்த விஷயத்தை எப்படி வெளியே சொல்லலாம்? என்று கூறி அவரை அடித்து உதைத்தனர்.
பின்னர் அந்த பெண்ணை வீட்டுக்கு வெளியே இழுத்து வந்தனர். அவரை நிர்வாணமாக்கி தெருவில் ஊர்வலமாக அழைத்து சென்றனர். அந்த காட்சியை ஊரே நின்று வேடிக்கை பார்த்தது. யாரும் அவரை காப்பாற்ற முன்வரவில்லை.
இது சம்பந்தமாக பெண்ணின் கணவர் குராரா போலீசுக்கு தகவல் கொடுத்தார். ஆனால், அவர்களும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
உள்ளூர் பிரமுகர்கள் சிலர் போலீசாரை அங்கு வரவிடாமல் தடுத்துவிட்டனர். இதனால் அவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அஜய்குமாரிடம் சென்று புகார் கொடுத்தார்.
அதை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அந்த பெண்ணை கோரி லால், சோட்டாலால், ஜெய்கிஷோர், ஹாகன் ஆகிய வாலிபர்கள் கற்பழித்தது தெரிய வந்தது. அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். பாதிக்கப்பட்ட பெண் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
சம்பவம் நடந்ததும் உடனடியாக நடவடிக்கை எடுக்காமல் இருந்ததால் குராரா போலீசார் மீது துறை ரீதியான விசாரணைக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டுள்ளார்.
இது சம்பந்தமாக சமாஜ்வாடி கட்சி செய்தி தொடர்பாளர் சுனில்சிங் கூறும் போது, உத்தரபிரதேசத்தில் பாரதிய ஜனதா ஆட்சியில் சட்டம்- ஒழுங்கு சீர்குலைந்துள்ளது என்பதற்கு இந்த சம்பவமே சாட்சி.
பா.ஜ.க. ஆட்சி வந்த பிறகு தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்கள் மீதான வன்முறை அதிகரித்துள்ளது என்று கூறினார்.
பிரபல ஹாலிவுட் பட அதிபர் ஹார்வி வெயின்ஸ்டீன் மீது கற்பழிப்பு, பாலியல் குற்றச்செயல் குற்றச்சாட்டுகளை போலீசார் பதிவு செய்துள்ளனர். #HarveyWeinstein
நியூயார்க்:
‘நியூயார்க் டைம்ஸ்’ பத்திரிகை அவரது பாலியல் லீலைகளை அம்பலத்துக்கு கொண்டு வந்ததைத் தொடர்ந்து, அவரது வாழ்க்கைப்பாதையும் இறங்குமுகத்துக்கு வரத் தொடங்கியது.
இந்த நிலையில், அவர் தன் மீதான குற்றச்சாட்டுகளை சட்டப்படி எதிர்கொள்வதற்காக கடந்த வாரம் நியூயார்க் போலீசில் சரண் அடைந்தார். பின்னர் 1 மில்லியன் டாலர் (சுமார் ரூ.6¾ கோடி) ரொக்க ஜாமீனில் வெளியே வந்தார்.
அதைத் தொடர்ந்து இப்போது அவர் மீது கற்பழிப்பு, பாலியல் குற்றச்செயல் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு உள்ளதாக மேன்ஹட்டன் மாவட்ட அட்டார்னி சைரஸ் வான்ஸ் ஜூனியர் தெரிவித்தார்.
இதுபற்றி அவர் குறிப்பிடுகையில், “ஹார்வி வெயின்ஸ்டீன் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்து இருப்பது, அவர் செய்த பாலியல் குற்றச்செயல்களுக்கு பொறுப்பேற்க வைக்கிற அளவுக்கு கொண்டு வந்து நிறுத்தி உள்ளது” என்று கூறினார்.
அதே நேரத்தில் ஹார்வி வெயின்ஸ்டீன் வக்கீல் பெஞ்சமின் பிராப்மேன், “ஹார்வி வெயின்ஸ்டீன் மீது குற்றச்சாட்டு பதிவு செய்து இருப்பது ஒன்றும் வியப்புக்கு உரியது அல்ல; குற்றச்சாட்டு பதிவு என்பது வெறுமனே சட்டப்படி குற்றம் சாட்டுவது மட்டும்தான்” என்று குறிப்பிட்டார்.
இருப்பினும் ஹார்வி வெயின்ஸ்டீன் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு 25 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என தகவல்கள் கூறுகின்றன. கோர்ட்டு விசாரணை அடுத்த மாதம் (ஜூலை) 30-ந் தேதி நடக்க இருப்பது குறிப்பிடத்தக்கது. #HarveyWeinstein
சித்தூர் அருகே 12 வயது சிறுமியை 3 மாதங்களாக மிரட்டி கற்பழித்த சிறுவர்கள் 5 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சித்தூர்:
ஆந்திர மாநிலம் சித்தூர் அடுத்த புங்கனுர் பகத்சிங் நகரை சேர்ந்தவர் 12 வயது சிறுமி. அதே பகுதியை சேர்ந்த சிறுவன் ஒருவன் அந்த சிறுமிக்கு சாக்லெட் கொடுத்து அவர்களின் வீட்டுக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளான்.
பின்னர் இது குறித்து தனது நண்பர்களிடத்தில் கூறி அவர்களையும் அழைத்து சென்று சிறுமியை பலாத்காரம் செய்துள்ளனர். கடந்த 3 மாதங்களாக அந்த சிறுமியை 5 சிறுவர்கள் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
மேலும் இது குறித்து வெளியே சொன்னால் கொலை செய்து விடுவோம் என்று சிறுமியை மிரட்டியுள்ளனர். சிறுமிக்கு நேர்ந்த கொடுமை குறித்து சிறுமியின் பெற்றோருக்கு தெரிய வந்தது.
இதையடுத்து சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் 5 பேரையும் தேடி சென்றனர். புங்கலூர் பஸ் நிலையம் அருகே இருந்த 2 சிறுவர்களை பிடித்து அடித்து உதைத்தனர்.
டி.எஸ்.பி. சவுடேஸ்வரி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று 2 சிறுவர்களையும் மீட்டு போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
அவர்கள் கூறியதின் பேரின் மேலும் 3 சிறுவர்களையும் மடக்கி பிடித்து கைது செய்தனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் சித்தூர் அடுத்த புங்கனுர் பகத்சிங் நகரை சேர்ந்தவர் 12 வயது சிறுமி. அதே பகுதியை சேர்ந்த சிறுவன் ஒருவன் அந்த சிறுமிக்கு சாக்லெட் கொடுத்து அவர்களின் வீட்டுக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளான்.
பின்னர் இது குறித்து தனது நண்பர்களிடத்தில் கூறி அவர்களையும் அழைத்து சென்று சிறுமியை பலாத்காரம் செய்துள்ளனர். கடந்த 3 மாதங்களாக அந்த சிறுமியை 5 சிறுவர்கள் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
மேலும் இது குறித்து வெளியே சொன்னால் கொலை செய்து விடுவோம் என்று சிறுமியை மிரட்டியுள்ளனர். சிறுமிக்கு நேர்ந்த கொடுமை குறித்து சிறுமியின் பெற்றோருக்கு தெரிய வந்தது.
இதையடுத்து சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் 5 பேரையும் தேடி சென்றனர். புங்கலூர் பஸ் நிலையம் அருகே இருந்த 2 சிறுவர்களை பிடித்து அடித்து உதைத்தனர்.
டி.எஸ்.பி. சவுடேஸ்வரி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று 2 சிறுவர்களையும் மீட்டு போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
அவர்கள் கூறியதின் பேரின் மேலும் 3 சிறுவர்களையும் மடக்கி பிடித்து கைது செய்தனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவில் 6 பேர் கொண்ட கும்பல் சிறுமியை கடத்தி கற்பழித்த சம்பவம் தொடர்பாக ஒருவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவனந்தபுரம்:
கேரளாவில் பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் சமீப காலமாக அதிகரித்து வருகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு கேரளாவில் உள்ள சினிமா தியேட்டரில் வைத்து சிறுமிக்கு பாலியல் கொடுமை செய்த தொழில் அதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டார். அவருக்கு உடந்தையாக இருந்ததாக அந்த சிறுமியின் தாயாரும் கைதானார்.
மேலும் திருவனந்தபுரத்தில் உள்ள ஆயுர்வேத சிகிச்சை மையத்தில் தங்கி சிகிச்சை பெற வந்த வெளிநாட்டு பெண் ஒருவரும் போதை மருந்து கும்பலால் கடத்தி கற்பழித்து கொல்லப்பட்டார். அவரது சகோதரியின் நீண்ட போராட்டத்திற்கு பிறகு இந்த வழக்கில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.
பெண்கள் விடுதிக்குள் புகுந்து தனியார் கம்பெனி பெண் ஊழியருக்கு செக்ஸ் தொல்லை கொடுத்த ஆட்டோ டிரைவரை அந்த பெண்ணே துணிச்சலாக செயல்பட்டு கத்தியால் குத்தி பிடித்து போலீசில் ஒப்படைத்தார். இதுபோன்று தொடர்ந்து பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர் கதையாக உள்ளது.
இந்த நிலையில் சிறுமி ஒருவர் கும்பலால் கற்பழிக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. திருவனந்தபுரம் பகுதியைச் சேர்ந்த அந்த சிறுமி திடீரென்று மாயமானார். இது தொடர்பாக போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த சிறுமியை தேடி வந்தனர்.
இதற்கிடையில் கொல்லம் அருகே தென்மலா-புளியரா போலீஸ் நிலையங்களுக்குட்பட்ட பகுதியில் இருந்து அந்த சிறுமி மீட்கப்பட்டார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது திடுக்கிடும் தகவலை வெளியிட்டார். அந்த சிறுமியை 6 பேர் கொண்ட கும்பல் கடத்தி கற்பழித்ததாக அவர், போலீசாரிடம் தெரிவித்தார்.
இதை தொடர்ந்து அந்த சிறுமியை காப்பகத்தில் போலீசார் ஒப்படைத்தனர். மேலும் அந்த சிறுமி கூறிய அடையாளத்தை வைத்து அவரை கற்பழித்த கும்பலை சேர்ந்த ஒரு வாலிபரை போலீசார் கைது செய்தனர். மற்ற 5 பேரை போலீசார் தேடி வருகிறார்கள். 6 பேர் கும்பலால் சிறுமி கடத்தி கற்பழிக்கப்பட்டது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.#tamilnews
கேரளாவில் பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் சமீப காலமாக அதிகரித்து வருகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு கேரளாவில் உள்ள சினிமா தியேட்டரில் வைத்து சிறுமிக்கு பாலியல் கொடுமை செய்த தொழில் அதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டார். அவருக்கு உடந்தையாக இருந்ததாக அந்த சிறுமியின் தாயாரும் கைதானார்.
மேலும் திருவனந்தபுரத்தில் உள்ள ஆயுர்வேத சிகிச்சை மையத்தில் தங்கி சிகிச்சை பெற வந்த வெளிநாட்டு பெண் ஒருவரும் போதை மருந்து கும்பலால் கடத்தி கற்பழித்து கொல்லப்பட்டார். அவரது சகோதரியின் நீண்ட போராட்டத்திற்கு பிறகு இந்த வழக்கில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.
பெண்கள் விடுதிக்குள் புகுந்து தனியார் கம்பெனி பெண் ஊழியருக்கு செக்ஸ் தொல்லை கொடுத்த ஆட்டோ டிரைவரை அந்த பெண்ணே துணிச்சலாக செயல்பட்டு கத்தியால் குத்தி பிடித்து போலீசில் ஒப்படைத்தார். இதுபோன்று தொடர்ந்து பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர் கதையாக உள்ளது.
இந்த நிலையில் சிறுமி ஒருவர் கும்பலால் கற்பழிக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. திருவனந்தபுரம் பகுதியைச் சேர்ந்த அந்த சிறுமி திடீரென்று மாயமானார். இது தொடர்பாக போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த சிறுமியை தேடி வந்தனர்.
இதற்கிடையில் கொல்லம் அருகே தென்மலா-புளியரா போலீஸ் நிலையங்களுக்குட்பட்ட பகுதியில் இருந்து அந்த சிறுமி மீட்கப்பட்டார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது திடுக்கிடும் தகவலை வெளியிட்டார். அந்த சிறுமியை 6 பேர் கொண்ட கும்பல் கடத்தி கற்பழித்ததாக அவர், போலீசாரிடம் தெரிவித்தார்.
இதை தொடர்ந்து அந்த சிறுமியை காப்பகத்தில் போலீசார் ஒப்படைத்தனர். மேலும் அந்த சிறுமி கூறிய அடையாளத்தை வைத்து அவரை கற்பழித்த கும்பலை சேர்ந்த ஒரு வாலிபரை போலீசார் கைது செய்தனர். மற்ற 5 பேரை போலீசார் தேடி வருகிறார்கள். 6 பேர் கும்பலால் சிறுமி கடத்தி கற்பழிக்கப்பட்டது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.#tamilnews
பாலியல் வன்கொடுமையால் உயிர் இழக்கும் பெண்களுக்கு ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சம் வரை நஷ்ட ஈடு வழங்கும் வகையில் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. #Centralgovt
புதுடெல்லி:
பாலியல் வன்கொடுமை, ஆசிட் வீச்சு போன்ற பல்வேறு குற்றங்களில் பாதிக்கப்படும் பெண்களுக்கு நஷ்டஈடு வழங்குவது வழக்கமாக உள்ளது. ஆனால், மாநிலத்துக்கு மாநிலம் இந்த நஷ்ட ஈட்டின் தொகை மாறுபடுகிறது.
எனவே, குறைந்த பட்சம் அனைத்து மாநிலங்களிலும் ஒரே மாதிரியான நஷ்டஈடு வழங்கும் வகையில் மத்திய அரசு திட்டங்களை உருவாக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது.
அதன்படி மத்திய சட்ட சேவை வாரியம் மத்திய அரசுடன் கலந்து பேசி புதிய நஷ்டஈடு திட்டத்தை உருவாக்கி உள்ளது.
இதன் மூலம் பாலியல் வன்கொடுமையில் உயிர் இழக்கும் பெண்களுக்கு ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சம் வரை வழங்கும் வகையில் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
அதேபோல் பலரால் கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்யப்படும் பெண்களுக்கும் ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சம் வரை நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் பல்வேறு பாதிப்புகளை சந்திக்கும் நபர்களுக்கும் நஷ்டஈடு வழங்கும் வகையில் திட்டங்களை உருவாக்கி உள்ளனர்.
இதன்படி பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்படும் பெண்களுக்கு ரூ.4 லட்சத்தில் இருந்து ரூ.7 லட்சம் வரையிலும், இயற்கைக்கு மாறான பாலியல் பிரச்சனையில் பாதிக்கப்படும் நபருக்கு ரூ.4 லட்சத்தில் இருந்து ரூ.7 லட்சம் வரையிலும், பாலியல் குற்றத்தில் கர்ப்பம் அடைந்தால் ரூ. 2 லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சம் வரையிலும், கற்பழிப்பில் கர்ப்பமானால் ரூ. 3 லட்சத்தில் இருந்து ரூ. 4 லட்சம் வரையிலும்,
திராவகம் வீச்சு மற்றும் தீக்காயங்கள் ஏற்படுத்தப்பட்டு கடுமையாக பாதிக்கப்பட்டால் ரூ. 7 லட்சத்தில் இருந்து ரூ. 8 லட்சம் வரையிலும், 50 சதவீதம் காயம் அடைந்திருந்தால் ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.8 லட்சம் வரையிலும் வழங்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த திட்ட வரையரை கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் இது போன்ற குற்றங்களில் ஆண்கள் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு நஷ்டஈடு வழங்கும் வகையில் திட்டங்கள் வரையரை செய்யவில்லை.
இது சம்பந்தமாக நீதிபதிகள் மதன்லோகூர், தீபக் குப்தா ஆகியோர் கொண்ட சுப்ரீம் கோர்ட்டு பெஞ்சு கூறும் போது, மைனராக உள்ள சிறுவர்கள் இது போன்ற குற்றத்தால் பாதிக்கப்பட்டாலும் அவர்களுக்கும் நஷ்ட ஈடு வழங்கும் அம்சங்களை சேர்க்கும்படி உத்தரவிட்டனர். #Centralgovt
பாலியல் வன்கொடுமை, ஆசிட் வீச்சு போன்ற பல்வேறு குற்றங்களில் பாதிக்கப்படும் பெண்களுக்கு நஷ்டஈடு வழங்குவது வழக்கமாக உள்ளது. ஆனால், மாநிலத்துக்கு மாநிலம் இந்த நஷ்ட ஈட்டின் தொகை மாறுபடுகிறது.
எனவே, குறைந்த பட்சம் அனைத்து மாநிலங்களிலும் ஒரே மாதிரியான நஷ்டஈடு வழங்கும் வகையில் மத்திய அரசு திட்டங்களை உருவாக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது.
அதன்படி மத்திய சட்ட சேவை வாரியம் மத்திய அரசுடன் கலந்து பேசி புதிய நஷ்டஈடு திட்டத்தை உருவாக்கி உள்ளது.
இதன் மூலம் பாலியல் வன்கொடுமையில் உயிர் இழக்கும் பெண்களுக்கு ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சம் வரை வழங்கும் வகையில் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
அதேபோல் பலரால் கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்யப்படும் பெண்களுக்கும் ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சம் வரை நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் பல்வேறு பாதிப்புகளை சந்திக்கும் நபர்களுக்கும் நஷ்டஈடு வழங்கும் வகையில் திட்டங்களை உருவாக்கி உள்ளனர்.
இதன்படி பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்படும் பெண்களுக்கு ரூ.4 லட்சத்தில் இருந்து ரூ.7 லட்சம் வரையிலும், இயற்கைக்கு மாறான பாலியல் பிரச்சனையில் பாதிக்கப்படும் நபருக்கு ரூ.4 லட்சத்தில் இருந்து ரூ.7 லட்சம் வரையிலும், பாலியல் குற்றத்தில் கர்ப்பம் அடைந்தால் ரூ. 2 லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சம் வரையிலும், கற்பழிப்பில் கர்ப்பமானால் ரூ. 3 லட்சத்தில் இருந்து ரூ. 4 லட்சம் வரையிலும்,
திராவகம் வீச்சு மற்றும் தீக்காயங்கள் ஏற்படுத்தப்பட்டு கடுமையாக பாதிக்கப்பட்டால் ரூ. 7 லட்சத்தில் இருந்து ரூ. 8 லட்சம் வரையிலும், 50 சதவீதம் காயம் அடைந்திருந்தால் ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.8 லட்சம் வரையிலும் வழங்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த திட்ட வரையரை கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் இது போன்ற குற்றங்களில் ஆண்கள் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு நஷ்டஈடு வழங்கும் வகையில் திட்டங்கள் வரையரை செய்யவில்லை.
இது சம்பந்தமாக நீதிபதிகள் மதன்லோகூர், தீபக் குப்தா ஆகியோர் கொண்ட சுப்ரீம் கோர்ட்டு பெஞ்சு கூறும் போது, மைனராக உள்ள சிறுவர்கள் இது போன்ற குற்றத்தால் பாதிக்கப்பட்டாலும் அவர்களுக்கும் நஷ்ட ஈடு வழங்கும் அம்சங்களை சேர்க்கும்படி உத்தரவிட்டனர். #Centralgovt
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X