search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சந்திப்பு"

    • 2009ம் ஆண்டு சட்ட படிப்பை முடித்தவர்கள்
    • தற்போதைய அனுபவங்களை பகிர்ந்து கொண்டு மகிழ்ந்தனர்

    திருச்சி,

    திருச்சி சட்டக் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் 2004-2009 ஆம் கல்வியாண்டில் பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்தித்துக் கொண்டனர்.இதில் தற்போது நீதிமன்ற நடுவர்களாக இருக்கும் முன்னாள் மாணவர்களும் பங்கேற்றனர். அப்போது முன்னாள் மாணவர்களான நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் தங்களின் பழைய நினைவுகள் மற்றும் தற்போதைய அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.இதற்கான ஏற்பாடுகளை வழக்கறிஞர்கள் முனீஸ்வரன், மணிவண்ண பாரதி, ஜீவானந்தம், அஸ்வின் குமார், இக்பால் நாசின் , கோபிநாத், சாகர் மற்றும் குழுவினர் செய்திருந்தனர்.

    • இக்கல்லூரியில் படித்த மாணவர்கள் பலர் உயர்ந்த பதவிகளிலும், தொழில்முனைவோராகவும் உள்ளனர்.
    • தனியார் டி.வி. சூப்பர் சிங்கர் புகழ் வானதி சுரேஷ் பாடல் நிகழ்ச்சி, டி.ஜே. நிகழ்ச்சி நடக்கிறது.

     திருப்பூர்:

    திருப்பூர் சிட்கோ முதலிபாளையத்தில் அமைந்துள்ள நிப்ட்-டீ காலேஜ் ஆப் நிட்வேர் பேஷன் கல்லூரி 25-வது ஆண்டு நிறைவு செய்வதை முன்னிட்டு முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நாளை 1-ந் தேதி காலை 10 மணிக்கு கல்லூரி வளாகத்தில் நடக்கிறது. இந்த கல்லூரியில் 1997-ம் ஆண்டு முதல் படித்த அனைத்து மாணவர்களும் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    இந்த கல்லூரியில் படித்த மாணவர்கள் பலர் உயர்ந்த பதவிகளிலும், தொழில்முனைவோராகவும் உள்ளனர். இவர்கள் அனைவரும் ஒரேநாளில் சந்திக்கும் வாய்ப்பு இந்தநிகழ்ச்சி மூலம் சாத்தியமாகிறது. மேலும் தனியார் டி.வி. சூப்பர் சிங்கர் புகழ் வானதி சுரேஷ் பாடல் நிகழ்ச்சி, டி.ஜே. நிகழ்ச்சி நடக்கிறது. இந்த தகவலை கல்லூரி முதல்வர் கே.பி.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

    • பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பணிபுரியும் தொழிலாளர்களை சந்தித்தனர்
    • அச்சுறுத்தல், வதந்திகளை நம்ப வேண்டாம் என்று அறிவுறுத்தல்

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்ட தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர்கள் பாஸ்கரன், மூர்த்தி மற்றும் தொழிலாளர் அலுவலர் சாந்தி ஆகியோர் கொண்ட குழுவினர் பல்வேறு இடங்களில் பணிபுரியும் வெளிமாநில தொழிலாளர்களை நேரில் சந்தித்து அவர்களின் பாதுகாப்பு குறித்து கேட்டறிந்தனர்.இதே போல் திருச்சி தொழிலாளர் நலத் துறை இணை ஆணையர் திவ்யநாதன், பெரம்பலூர் அஸ்வின்ஸ் தொழிற்சாலை மற்றும் கம்பெனிகள், ஓட்டல்கள் போன்ற பல்வேறு இடங்களில் பணிபுரியும் வெளிமாநில தொழிலாளர்களை நேரில் சந்தித்து அவர்களின் பாதுகாப்பு மற்றும் தங்குமிடம், பணிபுரியும் இடத்தில் குறைபாடு மற்றும் வசதிகள் குறித்து விரிவாக கேட்டறிந்தார்.அப்போது அவர்களிடம் பாதுகாப்பு மற்றும் அச்சுறுத்தல் குறித்து வெளியாகும் வதந்திகளை நம்ப வேண்டாம். நீங்கள் பாதுகாப்பாக இருக்கிறீர்கள் என்பதை வாட்ஸ்-அப் மூலமாகவோ, போன் மூலமாகவோ உங்கள் குடும்பத்திற்கு தகவல் தெரியபடுத்துங்கள். உங்களுக்கு தேவையான பாதுகாப்பு அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். ஆய்வின்போது தொழிலாளர் உதவி ஆணையர் பாஸ்கரன், தொழிலாளர் அலுவலர் சாந்தி ஆகியோர் உடனிருந்தனர்.

    • கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நடந்தது.
    • பேராசிரியை முருகேசுவரி வரவேற்றார்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில், "ஏ.கே.சி.இ.-கே.எல்.யூ. முன்னாள் மாணவர் சங்கம்'' சார்பில் முன்னாள் மாணவர் சந்திப்பு விழா, பல்கலைக்கழக துணைத்தலைவர் எஸ்.அர்ஜூன் கலசலிங்கம் தலைமையில் நடந்தது. பதிவாளர் வாசுதேவன் வாழ்த்துரை வழங்கினார். சங்கதலைவர், பேராசிரியை முருகேசுவரி வரவேற்றார். முன்னாள் மாணவர்கள் 300-க்கும் மேற்பட்டோர், குடும்பத்தினரோடு கலந்து கொண்டு பல்கலைக்கழக வளாகத்தை சுற்றிப்பார்த்து பேராசிரியர்கள், அலுவலர்கள், அதிகாரிகளுடன் பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.

    அவர்களை இன்னாள் மாணவர்கள் இன்னிசை மழையில் வரவேற்றனர். பேராசிரியர்கள் முத்துக்கண்ணன், கைலாசம், பாலமுருகன், கார்த்திகாதேவி ஆகியோர் ஏற்பாடு செய்தனர். பேராசிரியை தனலட்சுமி நன்றி கூறினார்.

    • 1997-ம் ஆண்டு முதல் 2004-ம் ஆண்டு வரை படித்த மாணவ - மாணவிகள் சந்திப்பு நிகழ்ச்சி பள்ளியில் நடைபெற்றது.
    • 200-க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

    திருப்பூர் :

    பெருமாநல்லூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 1997-ம் ஆண்டு முதல் 2004-ம் ஆண்டு வரை படித்த மாணவ - மாணவிகள் சந்திப்பு நிகழ்ச்சி பள்ளியில் நடைபெற்றது.

    இந்த சந்திப்பில் தங்களுக்கு பயிற்றுவித்த அனைத்து ஆசிரியர்களையும் பொன்னாடை போர்த்தி கவுரவித்தனர்.

    பள்ளிக்குத் தேவையான உபகரணங்கள் பீரோ, மின்விசிறி மற்றும் பல பொருள்களை பள்ளிக்கு முன்னாள் மாணவர்கள் வழங்கினர். 18 ஆண்டுகளுக்கு முன் 5½ ஏக்கர் நிலத்தை பெருமாநல்லூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் பால சமுத்திரத்தில் உள்ள பெண்கள் அரசு மேல்நிலைப்பள்ளிகளுக்கு வழங்கிய நன்கொடையாளர் ரத்தினசாமி நினைவுகூர்ந்து அவரது மகன் முரளிகுமரேசனை கவுரவப்படுத்தினர்.

    இந்த சந்திப்பில் 200-க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • மானாமதுரை சி.எஸ்.ஐ. பள்ளியில் 50 ஆண்டுகளுக்கு முன்பு படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
    • பள்ளி தாளாளர் பிச்சை தலைமை தாங்கினார்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சி.எஸ்.ஐ உயர்நிலைப்பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நடந்தது. பள்ளி தாளாளர் பிச்சை தலைமை தாங்கினார். விரிவுரையாளர் மரியதாஸ் வரவேற்றார். 50 ஆண்டுகளுக்கு முன்பு இந்த பள்ளியில் படித்தவர்கள் தங்களது மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். அதைத்தொடர்ந்து முன்னாள் மாணவர்களும், ஆசிரியர்களும் கவுரவிக்கப்பட்டனர். தலைமையாசிரியர் செல்வின் ஆசிர்வாதம், சி.எஸ்.ஐ. செவித்திறன் குறைவுடையார் விடுதி காப்பாளர் ராஜா, கூட்ட ஒருங்கிணைப்பாளர் பொறியாளர் காவேரி உள்ளிட்ட பலர் பேசினர். சி.எஸ்.ஐ. ஆலய சபைகுரு ஞான ஆனந்தராஜ் சிறப்புரையாற்றினார். இம்மானுவேல் நன்றி கூறினார்.

    • காரைக்குடி அழகப்பா அரசு கலைக்கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
    • அவர்கள் தங்களது கடந்த கால நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.

    காரைக்குடி

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரியில் கடந்த 1993 முதல் 1996 வரை தாவரவியல் துறையில் படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.தாவரவியல் துறை தலைவர் முனைவர் கோமளவள்ளி தலைமை தாங்கினார். உதவி பேராசிரியர்கள் பழனிச்சாமி மற்றும் ஆறுமுகம் முன்னிலை வகித்தனர். 25 ஆண்டுகளுக்கு பின்னர் மாணவ-மாணவிகள் தங்கள் குடும்பத்துடன் சந்தித்து மகிழ்ந்தனர். குவைத், சிங்கப்பூர், கத்தார், துபாய் போன்ற வெளிநாடுகளில் இருந்தும் பல்வேறு ஊர்களில் இருந்தும் வந்த மாணவர்கள் தங்கள் கல்லூரி காலத்தில் நடந்த சுவாரஸ்யமான சம்பவங்களையும், தங்கள் பேராசிரியர்களைப் பற்றியும், பசுமை நிறைந்த நினைவுகளையும் ெதரிவித்தனர்.

    துறை தலைவர் மற்றும் அதே துறையில் உதவி பேராசிரியராக பணியாற்றி வரும் பழனிச்சாமி வாழ்த்துரை வழங்கினார். பின்னர் அனைவரும் வள்ளல் அழகப்பர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.

    கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தனர். பின்னர் வரும் காலங்களில் தாவரவியல் துறைக்கு தேவையான பல்வேறு உதவிகளை செய்து தருவதாக உறுதி அளித்தனர்.நிகழ்ச்சி ஏற்பாடுகளை முன்னாள் மாணவர்கள் சார்பில் ஒருங்கிணைப்பாளர்கள் வீரபாண்டியன், ஐங்கரன் ஆகியோர் செய்திருந்தனர்.

    • மலையபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த 22 ஆண்டுகளுக்கு முன்பு 10-ம் வகுப்பு படித்த மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
    • தொடர்ந்து மாணவர்கள் சார்பில் 80 ஆயிரம் நன்கொடை பள்ளிக்கு வழங்கினர்.

    நம்பியூர்:

    ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே உள்ள மலைய பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில் கடந்த 22 ஆண்டுகளுக்கு முன்பு 10-ம் வகுப்பு படித்த மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்ட முன்னாள் ஆசிரியர்கள் ராமலிங்கம், குருசாமி, சரோஜா, பழனிசாமி, மலர்ச்செல்வி, ஆறுமுகம், ருத்ரமூர்த்தி, உமாமகேஸ்வரி, பத்மா, சுப்பிரமணி உள்ளிட்ட ஆசிரியர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கி குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

    22 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்துக்கொண்ட மாணவர்கள் ஒருவருக்கு ஒருவர் தங்களது மகிழ்ச்சிகளை வெளிபடுத்திக் கொண்டனர். தொடர்ந்து மாணவர்கள் சார்பில் 80 ஆயிரம் நன்கொடை பள்ளிக்கு வழங்கினர்.

    • இந்தியாவின் மொத்த ஆயத்த ஆடை ஏற்றுமதியில் ஜெர்மனிக்கான ஏற்றுமதி 5.19 சதவீதமாக உள்ளது.
    • நவம்பர் 2, 3-ந் தேதிகளில் வர்த்தகர், ஏற்றுமதியாளர் சந்திப்பு நடைபெற உள்ளது.

    திருப்பூர் :

    ஐரோப்பிய நாடுகளின் ஒன்றான ஜெர்மனி, உலகின் இரண்டாவது மிகப்பெரிய ஜவுளி மற்றும் ஆயத்த ஆடை ரகங்கள் இறக்குமதியாளராக உள்ளது. அந்நாட்டின் மொத்த ஆடை இறக்குமதியில் இந்திய ஆடைகளின் பங்களிப்பு 3 முதல் 4சதவீதத்துக்கும் குறையாமல் தொடர்கிறது.கடந்த 2019ல் ரூ. 2.92 லட்சம் கோடி மதிப்பிலான இந்திய ஆயத்த ஆடைகள் ஜெர்மனியில் இறக்குமதி செய்யப்பட்டன. இதன் மதிப்பு கடந்த 2021ல், 3.13 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இந்தியாவின் மொத்த ஆயத்த ஆடை ஏற்றுமதியில் ஜெர்மனிக்கான ஏற்றுமதி 5.19 சதவீதமாக உள்ளது.

    ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (ஏ.இ.பி.சி.,), ஜெர்மனிக்கான இந்திய ஆடை ஏற்றுமதியை அதிகரிக்க செய்வதற்கான முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டுவருகிறது.ஜெர்மனி தலைநகர் பெர்லினில் வருகிற நவம்பர் 2, 3-ந் தேதிகளில் வர்த்தகர், ஏற்றுமதியாளர் சந்திப்பு நடைபெற உள்ளது.

    இதில் இந்திய ஏற்றுமதியாளர்கள் பங்கேற்பதற்கான ஏற்பாடுகளை ஏ.இ.பி.சி., செய்துள்ளது.ஜெர்மனி மட்டுமின்றி ஐரோப்பிய நாட்டு வர்த்தகர்கள் அதிக அளவில் பங்கேற்று ஆடை தயாரிப்புக்கான ஆர்டர்கள் வழங்குவது குறித்து ஏற்றுமதியாளர்களுடன் கலந்துரையாட உள்ளனர்.இந்த கண்காட்சியில் பங்கேற்க விரும்பும் ஏற்றுமதியாளர்கள் வரும் 16-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். www.aepcindia.com என்கிற இணையதளத்திலிருந்து விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்யலாம்.திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் 0421 2232634, 99441 81001 என்கிற எண்களில் ஏ.இ.பி.சி., அலுவலகத்தை தொடர்புகொண்டு கூடுதல் விவரம் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    • இவர்கள் ஆண்டுதோறும் தஞ்சையில் ஒன்று கூடி சந்தித்து கொள்கின்றனர்.
    • கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவலால் இந்த சந்திப்பு நடைபெறவில்லை.

    தஞ்சாவூர்:

    தஞ்சை தூய பேதுரு பள்ளியில் 1976-ம் ஆண்டு படித்த மாணவர்கள் அரசு மற்றும் தனியார் துறைகளில் பல்வேறு உயர் பதவிகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்றிருந்தனர்.

    இவர்கள் ஆண்டுதோறும் தஞ்சையில் ஒன்று கூடி சந்தித்து கொள்கின்றனர்.

    கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவலால் இந்த சந்திப்பு நடைபெறவில்லை.

    தற்போது இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இன்று தஞ்சையில் ஒன்று கூடி சந்தித்தனர்.

    இந்நிகழ்ச்சிக்கு முன்னாள் மாணவரும் ஓய்வு பெற்ற காவல்துறை தலைவருமான ஸ்ரீதர், ஓய்வு பெற்ற துபாய் விமான நிலைய அதிகாரி மொய்ன்அலி, சென்னை மெட்ரோ வாட்டர் தலைமை பொறியாளர் ரசீத், உயர் கல்வித் துறை கூடுதல் செயலாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

    மருத்துவர் வெங்கடேஷ், பள்ளி தாளாளர் ராக்லண்ட் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழாவில் தங்களுக்கு கற்று கொடுத்த ஆசிரியர்கள் கிறிஸ்டோபர் ஜெயசீலன், வெற்றிவேல், சதானந்தம், ராஜகோபால பாண்டியன், ஸ்டீபன் பொன்னையா ஆகியோரை பாராட்டி பொன்னாடை அணிவித்து கௌரவித்தனர்.

    நிகழ்ச்சியில் மாணவர்கள் தங்களது பள்ளிக்கால சம்பவங்களை நினைவு கூர்ந்தனர். கேக் வெட்டி கொண்டாடினர்.

    முடிவில் அனைவரும் ஒன்று சேர்ந்து குரூப் போட்டோ எடுத்து மகிழ்ந்தனர்.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை முன்னாள் மாணவர்கள் சங்கர், இளங்கோ, சுகுமார், எடிசன் மனோகரன், ரெங்கராஜ், நெடுஞ்செழியன் ஆகியோர் செய்திருந்தனர்.

    • ஏ.இ.பி.சி., ஏற்றுமதியாளர் வர்த்தகர் சந்திப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது.
    • 2 ஆண்டுகளாக கொரியாவின் ஆடை இறக்குமதி தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    திருப்பூர் :

    தென்கொரியாவின் மொத்த ஆயத்த ஆடை இறக்குமதியில் இந்தியாவின் பங்களிப்பு 0.67 சதவீத அளவிலேயே உள்ளது. அந்நாட்டுக்கான ஏற்றுமதியை அதிகரிக்கச் செய்வதற்காக ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (ஏ.இ.பி.சி.,), ஏற்றுமதியாளர் வர்த்தகர் சந்திப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது.தென்கொரிய தலைநகர் சியோலில் வருகிற செப்டம்பர் 29, 30 ஆகிய தேதிகளில் இந்த சந்திப்பு நடைபெற உள்ளது.

    கொரோனா பரவல் இருந்தபோதும்கூட கடந்த 2 ஆண்டுகளாக கொரியாவின் ஆடை இறக்குமதி தொடர்ந்து அதிகரித்து வருகிறது.வர்த்தக வாய்ப்புகள் மிகுந்த தென்கொரிய சந்தையை கைப்பற்ற ஏதுவாக திருப்பூர் உள்பட நாடு முழுவதும் உள்ள ஆடை ஏற்றுமதியாளர்கள் வர்த்தகர் சந்திப்பில் பங்கேற்க ஏ.இ.பி.சி., அழைப்புவிடுத்துள்ளது. பங்கேற்க விரும்பும் நிறுவனத்தினர் வரும் 30ந்தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • 1976 -77- ம் ஆண்டு கல்வி ஆண்டில் எஸ். எஸ். எல். சி படித்த முன்னாள் மாணவர்கள் 45 வருடங்களுக்கு பிறகு ஒருவரை ஒருவர் சந்தித்து தங்களது பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
    • மேலும் 2021-22- ம் கல்வியாண்டில் 10 மற்றும் 12 -ம் வகுப்புகளில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுக்கா பாண்டமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கடந்த 1976 -77- ம் ஆண்டு கல்வி ஆண்டில் எஸ். எஸ். எல். சி படித்த முன்னாள் மாணவர்கள் 45 வருடங்களுக்கு பிறகு ஒருவரை ஒருவர் சந்தித்து தங்களது பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். விழாவிற்கு பாண்டமங்கலம் பேரூராட்சி தலைவரும், பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவருமான, டாக்டர் சோமசேகர் தலைமை வகித்தார்.

    பள்ளியின் தலைமை ஆசிரியர் தங்கவேலு அனை வரையும் வரவேற்றார்.பெற்றோர் ஆசிரியர் கழகத் துணைத் தலைவர் ரங்கசாமி, பேரூராட்சித் துணைத் தலைவர் முருக வேல், கிராமக் கல்விக் குழு தலைவர் கருணாநிதி, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் மகாமுனி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். அதனை தொடர்ந்து முன்னாள் மாணவர்கள் மற்றும் முன்னாள் ஆசிரி யர்களுக்கு தற்போது அதே பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள் பொன்னாடை அணிவித்து கவுரவித்தனர்.

    மேலும் 2021-22- ம் கல்வியாண்டில் 10 மற்றும் 12 -ம் வகுப்புகளில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. முன்னாள் மாணவர்கள், தங்களுக்கு கல்வி கற்று தந்த ஆசிரியர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கினர்.

    முன்னாள் மாணவர்கள் ஒன்றிணைந்து சுமார் ரூ. 3 லட்சம் செலவில் பாண்ட மங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் உள்ள சீரணி அரங்கத்தை சீரமைத்து சீரணி அரங்கத்தின் முன்பு தகர மேற்கூரை அமைத்து அதற்கு கான்கிரீட் தளம் அமைத்துக் கொடுத்தனர்.

    முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியின் போது முன்னாள் மாணவர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்து. ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி தங்களது பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். நிகழ்ச்சியில் சுமார் 60-க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    ×