search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாதயாத்திரை"

    ஏராளமான பக்தர்கள் கடந்த 16-ம் தேதி முதல் பாதயாத்திரையாக புறப்பட்டு நேற்று இரவு வரை வைத்தீஸ்வரன் கோவிலுக்கு வந்து வழிபாடு செய்து வருகின்றனர்.
    நாகை மாவட்டம் சீர்காழியை அடுத்த வைத்தீஸ்வரன் கோவிலில் தருமபுர ஆதீனத்துக்கு சொந்தமான தையல்நாயகி, உடனாகிய வைத்தியநாத சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் செல்வமுத்து குமாரசாமி, செவ்வாய் அதிபதியான அங்காரகன் தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார். செவ்வாய் தோ‌ஷம் பரிகார தலமான இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை 2-ம் செவ்வாய்கிழமை நகரத்தார் பாத யாத்திரையாக வந்து வழிபாடு செய்வது வழக்கம்.

    இந்த ஆண்டுக்கான விழாவையொட்டி காரைக்குடி, தேவகோட்டை, புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சை ஆகிய மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கடந்த 16-ம் தேதி முதல் பாதயாத்திரையாக புறப்பட்டு நேற்று இரவு வரை வைத்தீஸ்வரன் கோவிலுக்கு வந்து வழிபாடு செய்து வருகின்றனர்.

    கையில் மஞ்சள் பூசிய குச்சியில் வேப்பிலைகளை கட்டி கொண்டு வந்த பக்தர்கள் அதனை வைத்தீஸ்வரன் கோவில் கொடி மரத்து முன்பு போட்டு விட்டு சென்று சாமி தரிசனம் செய்தனர். சித்திரை மாதம் 2-ம் செவ்வாய் கிழமையொட்டி வைத்தீஸ்வரன் கோவிலில் இன்று காலை 4 மணிக்கு திறக்கப்பட்டது. பக்தர்கள் தீர்த்த குளத்தில் நீராடி சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    வைத்தீஸ்வரன் கோவிலில் இன்று 2 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்வார்கள் என்பதால் பேரூராட்சி சார்பில் குடிநீர் வசதி, சுகாதார வசதி, மருத்துவ வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

    விழாவை முன்னிட்டு பல்வேறு இடங்களில் இருந்து வைத்தீஸ்வரன் கோவிலுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. பாதுகாப்பு ஏற்பாடுகள் டி.எஸ்.பி. வந்தனா, இன்ஸ்பெக்டர் சிங்காரவேல் தலைமையில் செய்யப்பட்டுள்ளது. 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். விழாவுக்கு மாட்டு வண்டிகளிலும் பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.

    பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு காரைக்குடியை சேர்ந்த ஒருவர் தீராத நோயால் அவதிப்பட்டு வந்தார். அவரது கனவில் தோன்றிய தையல் நாயகி அம்மன் வைத்தீஸ்வரன் கோவிலுக்கு வரும்படி கூறியுள்ளார். அதனை ஏற்று அவர் பாதயாத்திரையாக வந்து தையல் நாயகி அம்மனை தரிசனம் செய்ததும் அவரின் நோய் குணமாகி விட்டது.

    இதை தொடர்ந்து அவரது குடும்பத்தினர் தையல் நாயகி அம்மனை தங்களது குல தெய்வமாக வழிபட தொடங்கினர். அவர்கள் சித்திரை 2-வது செவ்வாய் கிழமை கோவிலுக்கு வந்து வழிபாடு செய்யும் வழக்கத்தை உருவாக்கினர். அன்று முதல் இந்த வழிபாடு காலம் காலமாக நடந்து வருவதாக கூறப்படுகிறது.
    பெரம்பலூர் அருகே இன்று காலை சமயபுரம் கோவிலுக்கு பாதயாத்திரை சென்ற 3 பக்தர்கள் கார் மோதி பரிதாபமாக உயிரிழந்தனர்.

    பாடாலூர்:

    சக்தி ஸ்தலங்களில் பிரசித்தி பெற்ற திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நடைபெறும் விழாக்களில் மிகவும் சிறப்பு வாய்ந்தது பூச்சொரிதல் விழா. இதையொட்டி திருச்சி, பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் மாலை அணிந்து, விரதமிருந்து பாதயாத்திரையாக வந்து அம்மனை தரிசித்து செல்வார்கள்.

    அதேபோல் பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூர் பகுதியை சேர்ந்த பக்தர்கள் 25 பேர் இன்று அதிகாலை 3 மணிக்கு சமயபுரம் கோவிலுக்கு பாதயாத்திரையாக புறப்பட்டனர். அவர்கள் இன்று அதிகாலை பாடாலூர் சஞ்சீவி ஆஞ்சநேயர் கோவில் அருகே சென்று கொண்டிருந்தனர்.

    இதில் 20 பேர் ஒரு குழுவாகவும், மற்ற 5 பேர் சற்று பின்னால் மற்றொரு குழுவாகவும் சென்றனர். அப்போது அந்த வழியாக சென்னையில் இருந்து திருச்சி நோக்கி மின்னல் வேகத்தில் சென்ற கார் திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. இறுதியில் அந்த கார் பாதயாத்திரை சென்ற 5 பேர் குழுவின் கூட்டத்தில் புகுந்தது.

    இதில் கலியன் (வயது 60), பரமேஸ்வரி (35), காவேரி (55) ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். அவர்களுடன் சென்ற மருதாம்பாள் (60), சோலையம்மாள் (70) ஆகிய இருவரும் தலை மற்றும் உடலில் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடினர்.

    தகவல் அறிந்ததும் அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்சு வேன் மூலம் அனுப்பி வைத்தனர். இதற்கிடையே விபத்தை ஏற்படுத்திய காரில் 2 பேர் வந்துள்ளனர். தூக்க கலக்கத்தில் இருந்த அவர்கள் பக்தர்கள் கூட்டத்தில் மோதியுள்ளனர். விபத்து நடந்ததும் அந்த இருவரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

    விபத்து குறித்து பாடாலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சமயபுரம் மாரியம்மன் கோவிலில் முதலாவது பூச்சொரிதல் விழா இன்று தொடங்கும் நிலையில் பாதயாத்திரை பக்தர்கள் 3 பேர் பலியானது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலில் மாசி திருவிழாவையொட்டி குமரி மாவட்டத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் காவடி ஊர்வலமாக சென்று நேர்த்தி கடனை செலுத்தி வருகிறார்கள்.
    திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலில் மாசி திருவிழாவையொட்டி குமரி மாவட்டத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் காவடி ஊர்வலமாக சென்று நேர்த்தி கடனை செலுத்தி வருகிறார்கள்.

    இந்தநிலையில் நேற்று கன்னியாகுமரியில் மறக்குடி தெருவில் உள்ள சுப்பிரமணியசாமி கோவில், வடக்குரதவீதியில் உள்ள முத்தாரம்மன் கோவில், வடக்கு தெருவில் உள்ள பிரானோபகாரி தர்ம மடம் சுப்பிரமணியசாமி கோவில், கற்பக விநாயகர் கோவிலில் இருந்து ஏராளமான பக்தர்கள் காவடியுடன் திருச்செந்தூருக்கு பாதயாத்திரையாக புறப்பட்டனர்.

    இந்த பக்தர்கள் பாதயாத்திரையாக அஞ்சுகிராமம், செட்டிகுளம், கூடங்குளம், நவலடி, திசையன்குளம், உடையன்குடி வழியாக திருச்செந்தூர் கோவிலை சென்றடைகிறார்கள்.
    ஜெகன் மோகன் ரெட்டி இன்று சலூர் சட்டமன்ற தொகுதியில் இருந்து தனது பாதயாத்திரையை மீண்டும் தொடங்க உள்ளதாக அக்கட்சியின் கவுரவ தலைவர் விஜயம்மா தெரிவித்துள்ளார். #JaganmohanReddy #Yatra
    ஐதராபாத்:

    ஆந்திர மாநிலத்தின் முக்கிய எதிர்க்கட்சியான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருப்பவர் ஜெகன் மோகன் ரெட்டி. இவர் கடந்த 2017-ம் ஆண்டு நவம்பர் 6ம் தேதி கடப்பா மாவட்டம் புலிவெந்தலா பகுதியில் இருந்து பொதுமக்களுடன் பாதயாத்திரையை தொடங்கினார். தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களுக்கு பாதயாத்திரை மேற்கொண்டார்.
     
    கடந்த அக்டோபர் 25-ம்  தேதி ஜெகன் மோகன் ரெட்டி விசாகப்பட்டினம் விமான நிலையத்துக்கு வந்தபோது, ஒரு வாலிபர் ‘செல்பி’ எடுப்பது போல் நடித்து அவரை கத்தியால் குத்தினார். இதில் காயம் அடைந்த ஜெகன் மோகன் ரெட்டி ஆஸ்பத்திரியில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். அவரை கத்தியால் குத்திய விமான நிலைய ஓட்டல் ஊழியரான சீனிவாஸ் என்பவரை போலீசார் கைது செய்தனர்.



    இதற்கிடையே, ஜெகன் மோகன் ரெட்டி நவம்பர் 12-ம் தேதி மீண்டும் சலூர் சட்டமன்ற தொகுதியில் இருந்து தனது பாதயாத்திரையை தொடங்கினார்.

    இந்நிலையில், ஜெகன்மோகன் ரெட்டி ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தின் இச்சாபுரம் பகுதியில் தனது பாதயாத்திரையை இன்று நிறைவு செய்தார்.

    இதுவரை அவர், சுமார் 341 நாட்களில் 13 மாவட்டங்களில் உள்ள 134 சட்டசபை தொகுதிகளில் சுமார் 3 ஆயிரத்து 648 கிலோமீட்டர் தூரம் நடந்துள்ளார்.  

    கடந்த சில ஆண்டுகளில் இதுபோல் 3 ஆயிரம் கி.மீ. தொலைவு நடந்தவர்களில் ஜெகன்மோகன் ரெட்டி முதல் அரசியல்வாதி என்பது குறிப்பிடத்தக்கது. #JaganmohanReddy #Yatra 
    பழனியில், தைப்பூச திருவிழா தொடங்குவதற்கு முன்பே பாதயாத்திரை பக்தர்கள் வரத்தொடங்கியுள்ளனர்.
    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடாக பழனி விளங்குகிறது. இங்கு தைப்பூசம், பங்குனி உத்திரம் போன்ற திருவிழாக்கள் வெகுவிமரிசையாக கொண்டாடப்படும். அந்த வகையில் இந்த ஆண்டு தைப்பூச திருவிழா வருகிற 15-ந்தேதி தொடங்குகிறது.

    திருவிழா தொடங்கியதும், மதுரை, திருச்சி, சென்னை உள்ளிட்ட வெளிமாவட்டங்கள் மற்றும் கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் பழனிக்கு பாதயாத்திரையாக வருவார்கள். அப்போது அவர்களுக்கு தங்கும் வசதி, கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கோவில், நகராட்சி நிர்வாகம் சார்பில் ஏற்படுத்தி கொடுக்கப்படும்.

    பழனியில் இருந்து சில கிலோ மிட்டர் தூரம் வரை பக்தர்கள் தங்கும் இடம், அன்னதான கூடம், தற்காலிக கழிப்பறை உள்ளிட்டவை அமைக் கப்பட்டிருக்கும். இந்த சூழ்நிலையில் இந்த ஆண்டுக்கான திருவிழா தொடங்குவதற்கு முன்பே பழனிக்கு பாதயாத்திரை பக்தர்கள் வரத்தொடங்கியுள்ளனர். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் இருந்து ஏராளமான பக்தர்கள் பழனிக்கு பாதயாத்திரையாகவந்தனர்.

    அவர்கள் இளநீர், பால், தீர்த்தம், மயில் காவடிகளை எடுத்து ஆடிப்பாடியபடியே பழனிக்கு பாதயாத்திரையாக வந்தனர். பழனி-திண்டுக்கல் சாலையில் பாதயாத்திரை பக்தர்களுக்காக நடைபாதை வசதி உள்ளது. ஆனால் பழனி-உடுமலை ரோட்டில் அந்த வசதி இல்லை. இதனால் பக்தர்கள் சாலை யோரத்தில் நடந்து வருகின்றனர்.

    அப்போது அந்த வழியாக வேகமாக வரும் வாகனங்கள் பக்தர்கள் கூட்டத்துக்குள் புகுந்தால் பெரும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே பழனி-உடுமலை சாலையில் பக்தர்கள் நடக்க தற்காலிக பாதை ஏற்படுத்த வேண்டும். மேலும் அவர்களுக்கான உணவு, குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்தி கொடுக்க கோவில், நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
    ஜெகன் மோகன் ரெட்டி இன்று சலூர் சட்டமன்ற தொகுதியில் இருந்து தனது பாதயாத்திரையை மீண்டும் தொடங்க உள்ளதாக அக்கட்சியின் கவுரவ தலைவர் விஜயம்மா தெரிவித்துள்ளார். #JaganmohanReddy #Yatra
    ஐதரபாத்:

    ஆந்திர மாநிலத்தின் முக்கிய எதிர்க்கட்சியான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருப்பவர் ஜெகன் மோகன் ரெட்டி. இவர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கடப்பா மாவட்டம் புலிவெந்தலா பகுதியில் இருந்து பொதுமக்களுடன் பாதயாத்திரையை தொடங்கினார்.

    கடந்த மாதம் 25-ந் தேதி ஜெகன் மோகன் ரெட்டி விசாகப்பட்டினம் விமான நிலையத்துக்கு வந்தபோது, ஒரு வாலிபர் ‘செல்பி’ எடுப்பது போல் நடித்து அவரை கத்தியால் குத்தினார். இதில் காயம் அடைந்த ஜெகன் மோகன் ரெட்டி ஆஸ்பத்திரியில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.

    அவரை கத்தியால் குத்திய விமான நிலைய ஓட்டல் ஊழியரான சீனிவாஸ் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    இந்த நிலையில் ஜெகன் மோகன் ரெட்டி இன்று (திங்கட்கிழமை) சலூர் சட்டமன்ற தொகுதியில் இருந்து தனது பாதயாத்திரையை மீண்டும் தொடங்க உள்ளதாக அக்கட்சியின் கவுரவ தலைவர் விஜயம்மா தெரிவித்துள்ளார்.

    இதுபற்றி அவர் கூறுகையில், ‘கடவுளின் கருணையாலும், மக்களின் ஆசீர்வாதத்தாலும் ஜெகன் மோகன் ரெட்டி முழுமையாக பூரண குணம் அடைந்து விட்டார். எனவே அவர் இன்று முதல் தனது பாதயாத்திரையை மீண்டும் தொடங்குகிறார். மறைந்த முதல்-மந்திரி ராஜசேகர் ரெட்டிக்கு மக்கள் ஆதரவு அளித்ததுபோல், ஜெகன் மோகன் ரெட்டிக்கும் மக்கள் ஆதரவு அளித்து வருகின்றனர்’ என்றார்.  #JaganmohanReddy #Yatra 
    ×