search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 111885"

    • இங்குள்ள மூலவரை ‘பத்தராவிப் பெருமாள்’ என்பர்.
    • தேவர்கள் தேனீக்களாக உருவெடுத்து வந்து பெருமாளை வணங்குவதாக ஐதீகம்.

    திருவாரூர் மாவட்டத்தில் கண்ணனின் பெயரால் திருக்கண்ணமங்கை என்ற ஊர் இருக்கிறது. இங்குள்ள மூலவரை 'பத்தராவிப் பெருமாள்' என்பர். பக்தர்களின் அன்பைப் பெற ஆவி போல விரைந்து வருவதால் இப்பெயர் பெற்றார்.

    பக்தர்கள் மீது குழந்தை போல அன்பு காட்டுவதால் 'பக்தவத்சலன்' என்றும் பெயர் உண்டு. இங்கு தேவர்கள் தேனீக்களாக உருவெடுத்து வந்து பெருமாளை வணங்குவதாக ஐதீகம். அதை உணர்த்தும் வகையில் தாயார் சன்னதியின் வடபுறத்தில் இப்போதும் தேன்கூடு காணப்படுகிறது.

    இங்கு ஒருநாள் தங்கி, பக்தியுடன் பெருமாளை வணங்கினால் மோட்சம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

    • புதன் மகாவிஷ்ணுவின் சொரூபம் அதாவது புரட்டாசி மாதம் பெருமாளின் மாதம்.
    • புரட்டாசி மாதம் வடக்கில் இருக்கும் சூரியன், தெற்கு நோக்கி பயணிக்கிறது.

    ஜோதிடத்தில் 6-வது ராசி கன்னி. கன்னி ராசியின் மாதம் புரட்டாசி. இந்த மாதத்தின் அதிபதி புதன். புதன் மகாவிஷ்ணுவின் சொரூபம் அதாவது புரட்டாசி மாதம் பெருமாளின் மாதம். புதன் சைவத்திற்குரிய கிரகம் ஆதலால் அசைவம் சாப்பிடக்கூடாது. பெருமாளை நினைத்து விரதமிருந்து துளசி நீர் குடிக்க வேண்டும் என சாஸ்திரம் கூறுகின்றது.

    புரட்டாசி மாதம் வடக்கில் இருக்கும் சூரியன், தெற்கு நோக்கி பயணிக்கிறது. இதனால் சூரிய கதிர்வீச்சால் தட்பவெட்பம் மாறுபடுகிறது. இந்த திடீர் மாறுபாடால் நமக்கு செரிமானக்குறைவும், வயிறு பிரச்சினைகளும் ஏற்பட்டு கெட்டக்கொழுப்பு உடலில் தங்கிவிடும். ஆதலால் அசைவ உணவை தவிர்த்து, உடம்புக்கும், வயிற்றிற்கும் நன்மை தரக்கூடிய துளசி நீரை முன்னோர்கள் குடிக்க சொன்னார்கள்.

    - ஜோதிடர் சுப்பிரமணியன்.

    • புரட்டாசி மாத பிறப்பையொட்டி நடக்கிறது
    • திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

    கன்னியாகுமரி:

    பெருமாளுக்கு உகந்த தமிழ் மாதமாக புரட்டாசி மாதம் கருதப்படுகிறது. அதிலும் இந்த மாதத்தில் வரும் சனிக்கிழமைகள் பெருமாளுக்கு விரதம் இருப்பதற்கு ஏற்ற நாளாகவும் கூறப்படுகிறது. அதனால் புரட்டாசி மாதம்பெரும்பாலானோர் விரதம் இருந்து பெருமாளை வணங்கி வழிபடுவது வழக்கம்.

    இதனால் புரட்டாசி மாதங்களில் பெருமாள் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். ஏழரைச் சனியால் பாதிக்கப்பட்டவர்கள் விரதம் இருந்தால் சனியின் தொல்லைகள் நீங்கும் என்பதும் ஐதீகமா கும். இந்தநிலையில் இந்த ஆண்டுக்கான புரட்டாசி மாதம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பிறந்தது.

    புரட்டாசி மாதபிறப்பை யொட்டி குமரி மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோவில்களில்இன்று விசேஷ பூஜைகளும் சிறப்பு வழிபாடுகளும் நடந்தன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    கன்னியாகுமரி விவேகானந்தபுரம் விவேகானந்த கேந்திர கடற்கரை வளாகத்தில் அமைந்து உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான வெங்கடாஜலபதி கோவி லில் இன்று காலை 6 மணிக்கு சுப்ரபாத தரிசனமும் அதைத் தொடர்ந்து விசேஷ பூஜைகளும் சிறப்பு வழிபாடுகளும் தீபாராதனையும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    மாலை 5 மணிக்கு தோமாலை சேவையும் அதைத்தொடர்ந்து இரவுசுவாமி பள்ளியறை எழுந்தருளும் நிகழ்ச்சியும் ஏகாந்த தீபாராதனையும் நடக்கிறது. இதேபோல நாகர்கோவில் வடிவீஸ்வரத்தில் உள்ள இடர்தீர்த்த பெருமாள் கோவிலில் இன்றுஅதிகாலை நடை திறக்கப்பட்டு 5 மணிக்கு நிர்மால்ய பூஜையும் 9 மணி உற்சவ மூர்த்திக்கு அபிஷேகமும் தீபாராதனையும் மதியம் 12 மணிக்கு அலங்கார தீபாராதனையும் நடந்தது. மாலை 6 மணிக்கு சிறப்பு தீபாராதனை நடக்கிறது.

    மேலும் குமரி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற பெருமாள் கோவில்களான திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில், திருப்பதிசாரம் திருவாழ்மார்பன் கோவில், பறக்கை மதுசூதன பெருமாள் கோவில், சுசீந்திரம் துவாரகை கிருஷ்ணன் கோவில், ஆஸ்ராமம் திருவேங்கட விண்ணகப்பெருமாள் கோவில், மகாதானபுரம் நவநீத சந்தான கோபால கிருஷ்ண சாமி கோவில், கன்னியாகுமரி பாலகிருஷ்ண சாமி கோவில், சுசீந்திரம் இரட்டைத்தெரு குலசேகர பெருமாள் கோவில், நாகர்கோவில் கிருஷ் ணன் கோவிலில்உள்ள கிருஷ்ணசாமி கோவில், வடசேரி பாலகிருஷ்ணன் சுவாமி கோவில், கோட்டார்வா கையடிஏழகரம்பெருமாள் கோவில், வட்டவிளை தென் திருப்பதி வெங்கடாஜலபதி கோவில், பார்த்திபபுரம் பார்த்தசாரதி கோவில் உள்பட அனைத்து பெருமாள் கோவில்களிலும் புரட்டாசி மாதப்பிறப்பை யொட்டி இன்று சிறப்பு வழிபாடுகள், விசேஷ பூஜைகள் மற்றும் சிறப்பு அபிஷேகங்கள் அலங்கார தீபாராதனை போன்றவை நடைபெற்றன.

    • இன்று மாலை லட்சுமி, மகாவிஷ்ணுவுக்கு பசும்பால் நைவேத்தியம் செய்து வழிபட வேண்டும்.
    • பரிவர்த்தன ஏகாதசி விரதம் இருப்பதால் சகல தோஷங்களையும் போக்கிக் கொள்ள முடியும்.

    சயன ஏகாதசி தினத்தன்று படுக்கையில் படுத்த மகா விஷ்ணு சற்று புரண்டு படுப்பதை பரிவர்த்தனை ஏகாதசி என்று சொல்வார்கள். இன்று (செவ்வாய்க்கிழமை) பரிவர்த்தன ஏகாதசி தினமாகும். இன்று மாலை லட்சுமியுடன் மகாவிஷ்ணுவுக்கு பசும்பால் நைவேத்தியம் செய்து வழிபட வேண்டும்.

    இந்த ஏகாதசி திதியில்தான் பகவான் வாமன அவதாரம் எடுத்தார். எனவே இன்று அவசியம் எல்லோரும் ஏகாதசி விரதத்தை கடைபிடிப்பது நல்லது. விஷ்ணுவின் அனுக்கிரகத்தை பெற்றுத் தரும் இந்த பரிவர்த்தன ஏகாதசி விரதத்தை குழந்தைகள், முதியவர்கள், ஆண்கள், பெண்கள், திருமணம் ஆகாதவர்கள், திருமணம் ஆனவர்கள், துறவிகள் என அனைவரும் அனுஷ்டிக்கலாம்.

    இதற்கு பத்ம ஏகாதசி என்றும் ஒரு பெயர் உண்டு. இன்று மாலை 4.46 மணி வரை பூராட நட்சத்திரத்தில் வருவதால் ஸ்ரீமகாலட்சுமி தாயாரையும் அர்ச்சனை செய்து வணங்க வேண்டும். இன்று பரிவர்த்தன ஏகாதசி விரதம் இருப்பதால் சகல பாவங்களையும், தோஷங்களையும் போக்கிக் கொள்ள முடியும்.

    ஏகாதசி இரவு பெருமாள் ஆலயங்களுக்கு சென்று வணங்கி, ஸ்ரீமத் பாகவதம், விஷ்ணு புராணம் முதலிய நூல்களை வாசித்து, அடுத்த நாள் (புதன்கிழமை) துவாதசியில் தூய்மையான உணவு சமைத்து, பெருமாளுக்கு படைத்து விட்டுச் சாப்பிட வேண்டும்.

    இதற்கு துவாதசி பாரணை என்று பெயர். ஏகாதசி விரதம், துவாதசி பாரணையோடுதான் முடிகிறது. இந்த துவாதசி, சகல வெற்றிகளையும் கொடுப்பது என்பதால், விஜய துவாதசி என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.

    • தவறாமல் காமிகா ஏகாதசி அன்று துளசி கொண்டு பூஜிக்க வேண்டும்.
    • காமிகா ஏகாதசியின் கதையைக் கேட்பது ஒரு யாகத்தை நிகழ்த்துவதற்கு சமம்.

    தமிழ் மாதத்தின் அடிப்படையில் ஒரு மாதத்திற்கு இரண்டு வீதம் மொத்தம் 24 ஏகாதசி உள்ளது. சில வருடங்களில் மட்டும் 25 ஏகாதசி வரும். அதனை சுக்லபட்ச ஏகாதசி மற்றும் கிருஷ்ணபட்ச ஏகாதசி எனக் குறிப்பிடுகின்றனர். சுக்லபட்சம் என்பது வளர்பிறை ஏகாதசி ஆகவும், கிருஷ்ணபட்சம் என்பது தேய்பிறை ஏகாதசி ஆகவும் குறிக்கிறார்கள். ஏகாதசி என்பது ஏக் (ஒன்று) தஸ் (பத்து) அதாவது ஒன்று + பத்து = பதினொன்று. அமாவாசை முடிந்து 11-வது நாள் வளர்பிறை ஏகாதசி, பவுர்ணமி முடிந்து 11-வது நாள் தேய்பிறை ஏகாதசி ஆகும்.

    விஷ்ணுவின் உபேந்திர அவதாரம் இந்த நாளில் வழிபடப்படுகிறது. இந்த ஏகாதசிக்காக உண்ணாவிரதம் இருப்பதன் மூலம் முந்தைய வாழ்க்கையின் தடைகள் நீக்கப்படும். இந்த புனிதமான ஏகாதசி விரதத்தின் விளைவாக ஆயிரக்கணக்கான பசுவை தானம் செய்த பலன் கிடைக்கும். காமிகா ஏகாதசி தினத்தன்று விஷ்ணுவை வணங்குவதால் முடிக்கப்படாத அனைத்து பணிகளும் நிறைவேறும்.

    இந்த நாளில் விஷ்ணுவை வணங்குவது ஒரு பக்தருக்கு லாபம் தருவது மட்டுமல்லாமல், அவரது முன்னோர்களின் துன்பங்களையும் முடிவுக்குக் கொண்டுவருகிறது. காமிகா ஏகாதசி தினத்தன்று ஒரு ஏரி, நதி அல்லது குளத்தில் யாத்ரீக இடங்களில் குளித்துவிட்டு விரதத்தை ஆரம்பிக்க வேண்டும் . காமிகா ஏகாதசியின் கதையைக் கேட்பது ஒரு யாகத்தை நிகழ்த்துவதற்கு சமம்.

    மகாபாரத காலத்தில் தர்மராஜ் யுதிஷ்டிரர் ஸ்ரீகிருஷ்ணரிடம், "ஆண்டவரே தயவுசெய்து ஏகாதசியின் கதையையும் முக்கியத்துவத்தையும் சொல்லுங்கள்" என்றார் கடவுள் கிருஷ்ணர் கூறினார். "இந்த ஏகாதசியின் கதையை தேவர்ஷி நாரதிடம் பிரம்மா விவரித்தார். எனவே நானும் இதைத்தான் கூறுவேன்". பிரம்மாவிடமிருந்து காமிகா ஏகாதாசியின் கதையைக் கேட்க நாரதர் தனது விருப்பத்தை வெளிப்படுத்திய ஒரு காலம் இருந்தது.

    காசி, நைமிஷாரண்யா, கங்கா, புஷ்கர் போன்ற யாத்திரைகளில் குளிப்பதன் மூலம் கிடைக்கும் பலன்களும் விஷ்ணுவை வழிபடுவதிலிருந்து பெறப்படுகின்றன. தனது பாவங்களுக்கு பயப்படுபவர் காமிகா ஏகாதசி வேகமாக செய்ய வேண்டும். காமிகா நோன்பை நிகழ்த்தும் மக்கள் தாழ்ந்த வாழ்க்கையில் பிறப்பதில்லை என்று கடவுளே கூறியுள்ளார். இந்த ஏகாதசி விரதத்தில் விஷ்ணுவிடம் பக்தியுடன் துளசி இலைகளை வழங்கும் எந்தவொரு பக்தரும் நல்ல முடிவுகளையும் அதிர்ஷ்டத்தையும் பெறுகிறார்.

    காமிகா ஏகாதசி அன்று ஸ்ரீஹரியை துளசி கொண்டு அர்ச்சித்து வழிபடுபவர்கள் தங்கள் பாவங்களிலிருந்து விடுபடுவர். மதிக்க முடியாத தங்கத்தையும் வைர வைடூரியங்களையும் கொண்டு அர்ச்சிப்பதை விட ஒரே ஒரு துளசி இலை சமர்ப்பித்து வழிபடுவது மேன்மையுடையது. துளசிச் செடியில் துளசி மாதா வாசம் செய்வதாக ஐதிகம். எனவே, காமிகா ஏகாதசி அன்று துளசிச் செடியை தரிசனம் செய்வதே புண்ணியம் தரும்.

    துளசிச் செடிக்கு நீரூற்றி அருகே ஓர் விளக்கேற்றிக் கோலமிட்டு நமஸ்காரம் செய்து வழிபட்டால் நோய் நொடிகள் நம்மை அணுகாது. மேலும், இந்த நாளில் புதிதாகத் துளசிச் செடி நடுவது மிகவும் மங்களமானது. அவ்வாறு செய்பவர்களுக்கு யம வாதை இருக்காது.

    தினமும் துளசி மாதாவின் சந்நிதியில் விளக்கேற்றி வழிபடுபவர்களின் புண்ணியக் கணக்கை சித்திர குப்தனாலும் அளவிட முடியாது என்று துளசியின் பெருமையையும் அதைக் கொண்டு செய்யும் வழிபாட்டின் மகிமைகளையும் பிரம்ம தேவர் விவரிக்கிறார். வேறெந்த ஏகாதசியின் மகிமைகளைக் குறிப்பிடும்போதும் இந்த அளவுக்கு துளசியின் பெருமைகளை பிரம்ம தேவர் எடுத்துரைக்கவில்லை. எனவே, தவறாமல் காமிகா ஏகாதசி அன்று துளசி கொண்டு பூஜிக்க வேண்டும்.

    ஏகாதசி விரதமுறை

    ஏகாதசி விரதம் என்பதில் உபவாசம் ஒரு நாள் என்றாலும் விரதமுறை மூன்று நாள்கள் சேர்ந்தது. தசமி திதி அன்றே விரதம் தொடங்கிவிடுகிறது. தசமி திதி அன்று இரவு உணவைத் தவிர்க்க வேண்டும். ஏகாதசி திதி அன்று செய்ய வேண்டிய பூஜைகளுக்காகவும் தீர்த்தத்தில் சேர்ப்பதற்காகவும் வேண்டிய துளசி இலையை தசமி அன்றே பறித்து வைத்துக்கொள்ள வேண்டும். ஏகாதசி அன்று துளசி இலையைப் பறிப்பது பாவம் என்கின்றது சாஸ்திரம். மறுநாள் ஏகாதசி அன்று நாள் முழுவதும் உபவாசம் இருப்பது உத்தமம். இயலாதவர்கள் முழு அரிசி சோற்றைத் தவிர்த்து ஒரு வேளை உணவு உட்கொள்ளலாம். பழம் அல்லது பால் ஆகியவற்றை பகவானுக்குப் படைத்து உண்ணலாம். ஏகாதசி நாள் முழுவதும் இறைவழிபாட்டிலும் நாம ஜபத்திலுமே செலவிட வேண்டும். துவாதசி அன்று காலை பாரனை முடித்து விரதத்தை முடிக்கலாம்.

    • இன்றைய தினம் அசூன்ய சயன விரதம் அனுஷ்டிக்க வேண்டும்.
    • இந்த விரதம் அனுஷ்டித்தால் ஒரு போதும் தம்பதிகள் பிரிய மாட்டார்கள் என்பது ஐதீகமாகும்.

    ஆடி மாத தேய்பிறை துவிதியை தினத்தில் ஸ்ரீகிருஷ்ணர், மகாலட்சுமியுடன் சுகமாக தூங்கும் நாள் ஆகும். இன்று (சனிக்கிழமை) இந்த துவிதியை திதி தினம் வருகிறது. இன்றைய தினம் அசூன்ய சயன விரதம் அனுஷ்டிக்க வேண்டும். அன்று மாலை பூஜை அறையில் ஸ்ரீகிருஷ்ணர் சிலை அல்லது படத்தை வைத்து தம்பதிகளாக பூஜை செய்து வழிபட வேண்டும் கிருஷ்ணருக்கு காய்ச்சிய வாசனையுள்ள பசும்பால் நிவேதனம் செய்ய வேண்டும்.

    புதிதாக வாங்கப்பட்ட பஞ்சுமெத்தை தலையணை போர்வையுடன் கூடிய படுக்கையில் ஸ்ரீகிருஷ்ணரையும், மகாலட்சுமியையும் படுக்க வைக்க வேண்டும். பிறகு கிருஷ்ணா, எவ்வாறு மகாலட்சுமியுடன் எப்போதும் தாங்கள் சேர்ந்தே இருக்கி றீர்களோ அப்படியே நானும் எனது மனைவியுடன்-கணவனுடன் என்றும் இணைபிரியாமல் ஒன்று சேர்ந்தே இருக்க அருள்புரிய வேண்டும் என்னும் சுலோகம் சொல்லி பிரார்த்தித்துக்கொள்ள வேண்டும்.

    நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை மறுபடியும் ஸ்ரீகிருஷ்ணர், லட்சுமி விக்ரகங்களுக்கு பூஜை செய்ய வேண்டும். கிருஷ்ணரை படுக்க வைத்த அந்த புதிய படுக்கையை தானம் தந்துவிட வேண்டும். இவ்வாறு செய்பவர் வீட்டில் ஸ்ரீகிருஷ்ணர் அருளால் படுக்கை எப்போதும் கணவன்-மனைவியுடன் சேர்ந்ததாகவே இருக்கும். ஒரு போதும் தம்பதிகள் பிரிய மாட்டார்கள் என்பது ஐதீகமாகும்.

    • பெருமானின் அருளாசி பெற திருவோண நட்சத்திர விரதத்தை அனைவரும் கடைபிடிக்கலாம்.
    • திருவோண நட்சத்திரத்தில் பெருமாளுக்கு விரதமிருந்தால் சந்திர தோஷம் நீங்கும்.

    தசாவதாரங்களில் வாமன அவதாரமும் ஒன்றாகும். இந்த அவதாரம் திருவோண நட்சத்திரத்தில் நிகழ்ந்ததால் தான் ஆவணி திருவோண நட்சத்திரத்தில் ஓணம் பண்டிகை கேரளாவில் கோலாகலமாகக் கொண்டாடுகின்றனர். மாதம்தோறும் திருவோண நட்சத்திரத்தன்று விரதம் மேற்கொள்வது திருவோண விரதம் ஆகும். இது பெருமாளுக்கு உரிய நட்சத்திரம். திருவோண விரதத்தை ஒருமுறை வாழ்வில் இருந்தால் கூட அத்தனை பாக்கியங்களும் கிடைக்கும் என்பது நியதி.

    27 நட்சத்திரங்கள் இருந்தாலும் சிவனுக்குரிய திருவாதிரை மற்றும் பெருமாளுக்குரிய திருவோணம் இவ்விரண்டு நட்சத்திரங்கள் தான் 'திரு' என்ற அடைமொழியுடன் சிறப்பித்துக் கூறப்படுகிறது. ஒப்பிலியப்பன் பெருமாள் மார்கண்டேயன் மகளாக இருக்கும் பூமாதேவியை மணந்து கொள்ள பெண் கேட்டதும் பங்குனி மாத திருவோண நட்சத்திரத்தில் தான்.

    அவரை மணம் முடிந்ததும் ஐப்பசி மாத திருவோண நட்சத்திரம் அன்று தான். எனவே ஒப்பிலியப்பன் பெருமாள் கோவில்களில் திருவோண நட்சத்திரம் அன்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. பெருமானின் அருளாசி பெற திருவோண நட்சத்திர விரதத்தை அனைவரும் கடைபிடிக்கலாம். மிக எளிதாக வீட்டிலேயே கடைபிடிக்கக் கூடிய திருவோண விரதத்தை ஏதாவது ஒரு நாளில் கடைபிடித்தால் கூட அவர்களுக்கு பெருமாளின் அருளும், சந்திர தோஷமும் விலகும் என்பது நியதி.

    தோஷங்களில் சந்திர தோஷமும் மிகவும் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. சந்திர தோஷம் இருப்பவர்களுக்கு மனநிலையில் சீரற்ற தன்மை இருக்கும். தான் செய்வது சரியா? தவறா? என்கிற பதற்றம் நீடிக்கும். ஏதாவது ஒரு மாதத்தில் வரும் திருவோண நட்சத்திரத்தில் பெருமாளுக்கு விரதமிருந்து வழிபாடு செய்தால் சந்திர தோஷம் முற்றிலுமாக நீங்கி நல்வாழ்வு பிறக்கும் என்பதை ஜோதிட சாஸ்திரம் உறுதியாக கூறுகிறது. அன்று மாலையில் சந்திர தரிசனம் செய்து சந்திரனின் அருளை முழுமையாக பெற்றுக் கொள்ளலாம்.

    திருவோண விரதம் எப்படி இருப்பது?

    மாதா மாதம் வரும் திருவோண நட்சத்திரத்தை முன்கூட்டியே குறித்து வைத்துக் கொள்ள வேண்டும். திருவோண நட்சத்திரத்திற்கு முந்தைய நாள் இரவே உணவேதும் உண்ணாமல் விரதம் இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. அன்று இரவில் பெருமாள் மந்திரங்களை உச்சரிப்பது, விஷ்ணு சகஸ்ரநாமம் படிப்பது நல்ல பலன் கொடுக்கும். மறுநாள் அதிகாலையில் எழுந்து சுத்தமாக நீராடி நல்ல உடை உடுத்திக் கொண்டு பெருமாள் கோவிலுக்கு சென்று அங்கு அவருக்கு துளசி மாலை சாற்றி வழிபடலாம். கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள் வீட்டிலேயே பூஜை அறையில் பெருமாளுக்கு துளசி மாலை சாற்றி விளக்கேற்றி வழிபட வேண்டும். பூஜையில் துளசி தீர்த்தம் வைத்து அந்த தீர்த்தத்தை நீங்கள் பருகலாம்.

    • நாளைய ஏகாதசி விரதத்தின் பின்னணியில் புராண நிகழ்வு ஒன்று சொல்லப்படுகிறது.
    • நாளை வயதானவர்களுக்கு தானங்கள் செய்வது நல்லது.

    ஒவ்வொரு மாத ஏகாதசி விரதத்துக்கும் ஒரு பலன் உண்டு. அந்த வகையில் நாளை (திங்கட்கிழமை) ஏகாதசி விரதம் குழந்தை பாக்கியம் தரும் மகத்துவம் உள்ளதாகும். இதன் பின்னணியில் புராண நிகழ்வு ஒன்று சொல்லப்படுகிறது.

    நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியம் இல்லாத ஒரு பணக்காரர் தனது குறையை முனிவர் ஒருவரிடம் தெரிவித்து, அதற்கு என்ன பரிகாரம் செய்ய வேண்டும்' என்று கேட்டாராம். அதற்கு அந்த முனிவர், 'கடந்த ஜென்மத்தில் தாகத்தோடு வந்த பசுவையும், கன்றையும் நீ அடித்து விரட்டிவிட்டாய். அதனால்தான் குழந்தை பாக்கியம் இல்லை. இந்தமாத வளர்பிறை ஏகாதசியில் விரதம் இருந்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்' என்றார்.

    அதன்படி அந்த பணக்காரர் ஏகாதசி விரதம் கடை பிடித்து குழந்தை பாக்கியத்தை பெற்றார். புத்திர பாக்கியம் இல்லாதவர்கள் நாளை ஏகாதசி விரதத்தை கடைபிடித்து மகாவிஷ்ணுவை வழிபட்டால் நிச்சயம் பலன் கிடைக்கும். நாளை இந்த விரதத்தை மேம்படுத்த வயதானவர்களுக்கு தானங்கள் செய்வது நல்லது.

    திருவொற்றியூர் வடிவுடையம்மன் ஆலயத்தில் இன்று கலிய நாயனார் குருபூஜை. ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் கேட்டை நட்சத்திர தினத்தன்று அவரது குருபூஜை நடத்தப்படுகிறது.

    • சுமார் 2 மணி நேரம் திருமலையில் நடப்பது போன்று திருக்கல்யாண உற்சவம் நடக்க உள்ளது.
    • 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் கடந்த ஏப்ரல் 16-ந்தேதி சென்னை தீவுத்திடலில் 14 ஆண்டுகளுக்கு பிறகு சீனிவாச திருக்கல்யாணம் நடந்தது. தொடர்ந்து 2-வது முறையாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் மற்றும் ஆரணி ஸ்ரீவெங்கடாஜலபதி கோவில் சார்பில் அங்குள்ள ஏ.சி.எஸ். கல்வி குழும என்ஜினீயரிங் கல்லூரி வளாகத்தில் சீனிவாச பெருமாள் திருக்கல்யாண உற்சவம் நாளை (சனிக்கிழமை) மாலை 4.30 மணிக்கு நடக்கிறது.

    இதற்காக திருமலையிலிருந்து இன்று (வௌ்ளிக்கிழமை) மாலை 6 மணிக்கு திருமலை திருப்பதியில் இருந்து உற்சவர் மூர்த்தி ஆரணிக்கு எழுந்தருளல் நிகழ்ச்சி நடக்கிறது. சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. தொடர்ந்து நாளை காலை 7 மணிக்கு சுப்ரபாதம், தோமாலை, அர்ச்சனை, சர்வ தரிசனமும், அன்று மாலை 4.30 மணிக்கு சீனிவாச பெருமாள் திருக்கல்யாண உற்சவம் வெகு விமரிசையாக நடக்கிறது.

    சுமார் 2 மணி நேரம் திருமலையில் நடப்பது போன்று திருக்கல்யாண உற்சவம் நடக்க இருக்கிறது. பண்டிதர்களும் திருமலையிலிருந்து வர உள்ளனா். 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அனைத்து பக்தர்களுக்கும் இலவச லட்டு பிரசாதம், குடிநீர், பழங்கள் உள்ளிட்டவை பிரசாதமாக வழங்கப்படுகிறது. இதில் கலந்து கொள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான தலைவர் மற்றும் செயல்-அதிகாரி உள்ளிட்ட அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

    மேற்கண்ட தகவல்களை தமிழ்நாடு, புதுச்சேரி மாநில திருமலை திருப்பதி தேவஸ்தானம் உள்ளூர் ஆலோசனைக்குழுத் தலைவர் ஏ.ஜெ.சேகர் ரெட்டி, முன்னாள் எம்.பி. ஏ.சி.சண்முகம் ஆகியோர் தெரிவித்தனர்.

    • பெருமானின் அருளாசி பெற திருவோண நட்சத்திர விரதத்தை அனைவரும் கடைபிடிக்கலாம்.
    • சந்திர தோஷம் நீங்க பெற்று வாழ்வில் மகிழ்ச்சி அடைவர்...

    மாதந்தோறும் திருவோண நட்சத்திரத்தில் மேற்கொள்ளப்படும் விரதம் திருவோண விரதம். திருவோண விரதத்தை தீவிர வைணவர்கள் ஒவ்வொரு மாதமும் பின்பற்றி வருகின்றனர். திருவோண விரதம் என்றால் என்ன எப்படி வந்தது என இங்கு காண்போம்.

    மாதா மாதம் வரும் திருவோண நட்சத்திரத்தை முன்கூட்டியே குறித்து வைத்துக் கொள்ள வேண்டும். திருவோண நட்சத்திரத்திற்கு முந்தைய நாள் இரவே உணவேதும் உண்ணாமல் விரதம் இருக்க வேண்டும். அன்று இரவில் பெருமாள் மந்திரங்களை உச்சரிப்பது, விஷ்ணு சகஸ்ரநாமம் படிப்பது நல்ல பலன் கொடுக்கும். மறுநாள் அதிகாலையில் எழுந்து நீராடி விட்டு பெருமாள் கோவிலுக்கு சென்று அங்கு அவருக்கு துளசி மாலை சாற்றி வழிபடலாம்.

    காலையில் துளசி தீர்த்தம் மட்டுமே எடுத்துக் கொள்ளவேண்டும். பெருமாள் பாடல்களை பாராயணம் செய்தல் வேண்டும். மதிய உணவில் உப்பு சேர்க்காமல் சாப்பிட வேண்டும். மாலையில் சந்திரனை தரிசிக்க வேண்டும்.

    இப்படி செய்தால் சந்திரனின் முழு அருள் கிடைப்பதோடு, சந்திர தோஷம் இருந்தால் நிவர்த்தி ஆகும். நல்ல இனிமையான வாழ்க்கை அமையும். இந்த திருவோண விரதம் ஒருமுறை இருந்தால் கூட போதும் என பெரியோர் கூறுகின்றனர். விரதம் இருக்க முடியாதவர்கள் மாலையில் அருகில் உள்ள பெருமாள் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்ய வேண்டும்.

    மாலை வேளையில் வீட்டில் நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்யலாம். திருப்பங்களை தரும் திருவோண நட்சத்திர விரதம் இருந்து பெருமாலின் அருளைப்பெறுங்கள்.

    திருவோண விரதம் மேற்கொள்ளும் பக்தர்கள் வாழ்வில் கஷ்டங்கள் நீங்கி செல்வச்செழிப்பு ஏற்படும். மனக்குறைகள் அகன்று சந்தோஷ வாழ்வு மலரும். பெண்கள் விரும்பியதை அடைவர். அத்துடன் சந்திர தோஷமும் நீங்க பெற்று வாழ்வில் மகிழ்ச்சி அடைவர்...

    • பெருமாளின் தலைமாட்டில் அப்பக்குடம் உள்ளது.
    • இங்கு பெருமாள் மேற்கு நோக்கியபடி, புஜங்க சயனத்தில் வீற்றிருக்கிறார்.

    108 திவ்யதேசங்களில் ஒன்றாகவும், பஞ்ச அரங்க தலங்களில் 'அப்பாலரங்கம்' என்ற பெயரோடும் அழைக்கப்படும் ஆலயம் இது. திருப்பேர்நகர் என்ற கோவிலடியில், இந்த அப்பால ரங்கநாதர் கோவில் உள்ளது. இந்த ஆலயம் கொள்ளிடம் இரண்டாகப் பிரியும் இடத்தில் இந்திரகிரி என்று அழைக்கப்படும் சிறு குன்றின் மேல் இருக்கிறது. திருச்சி அருகே உள்ள லால்குடியில் இருந்து சுமார் 10 கிலோமீட்டர் தூரம் சென்றால் இந்த ஆலயத்தை அடையலாம்.

    பெருமாளின் தலைமாட்டில் அப்பக்குடம் உள்ளது. இக்குடத்திற்கு வெள்ளிக் கவசம் சாற்றப்பட்டு அதன்மேல் தட்டில் வைத்து அப்பம் நிவேதனம் செய்யப்படுவது தற்போதைய வழக்கமாக உள்ளது. மேலும் இத்திருத்தலத்தில் பள்ளி கொண்டுள்ள பெருமாள் தனது ஒரு கரத்தால் மார்க்கண்டேயருக்கு ஆசி கூறுகிறார்.

    உபமன்யுவிடம் இருந்து பெருமாள் அப்பக்குடத்தை பெற்றதால், இத்தல இறைவனுக்கு அப்பக்குடத்தான் (அப்பால ரங்கநாதர்) என்று பெயர். இங்கு பெருமாள் மேற்கு நோக்கியபடி, புஜங்க சயனத்தில் வீற்றிருக்கிறார். இந்திரனுக்குக் கர்வம் போக்கியும், மார்க்கண்டேய முனிவருக்கு எம பயம் நீக்கியும், உபரிசிரவசு மன்னனுக்கு சாபம் மற்றும் பாவம் போக்கியும் பெருமாள் அருள்புரிந்த தலம் இதுவாகும்.

    • ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்
    • இரவு 7 மணிக்கு கேந்திர சங்கீத நாடக அகாடமி தேசிய விருது பெற்ற கலைமாமணி ஸ்ரீமதி கோபிகாவர்மா மோகினியாட்டம் நடைபெறுகிறது.

    கன்னியாகுமரி :

    குமரி மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற திருவட்டார் ஆதிகேசவன் பெருமாள் கோவில் 418 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று மஹா கும்பாபிஷேகம் மிக சிறப்பாக நடைபெற்றது. தமிழகம், கேரளா மற்றும் ஆந்திரா மாநிலங்களில் இருந்தும் லட்சகணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் ‍ செய்தார்கள்.

    நேற்று மாலை 6-மணி அளவில் கோவிலை சுற்றி லட்சதீபம் ஏற்றப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இன்று காலை 5 மணிக்கு கணபதிஹோமம், கொடிமரம் பிரதிஷ்டை, முள பூஜை, சதுர்த்த கலசத்திற்கு பத்மமிடல் அதை தொடர்ந்து அபிஷேகம் மாலை 5 மணிக்கு ஹோமகுண்ட சுத்தி, வாஹன பரிக்கிரகம், ஜலாதிவாசம் மாலை 6.30 மணிக்கு தீபாராதனை இரவு 7 மணிக்கு திருவனந்தபுரம் கவடியார் கொட்டாரம் கேந்திர சங்கீத நாடக அகாடமி தேசிய விருது பெற்ற கலைமாமணி ஸ்ரீமதி கோபிகாவர்மா மோகினியாட்டம் நடைபெறுகிறது.

    ×