search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அந்தியூர்"

    அந்தியூர் சுற்றுவட்டார பகுதியில் பலத்த சூறை காற்று வீசியதால் ரூ.10 கோடி மதிப்புள்ள வாழைகள் சேதமடைந்தன.
    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் முழுவதும் கடந்த ஒரு மாதமாக கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. சில இடங்களில் காற்றும் வனப்பகுதியில் சாரல் மழையும் பெய்து வருகிறது.

    இந்த நிலையில் அந்தியூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று பலத்த சூறாவளி காற்று வீசியது.

    காற்று மட்டும் தான் அடித்ததே தவிர மழை பெய்யவில்லை. இந்த சூறாவளி காற்றால் பல இடங்களில் வாழைகள் அடியோடு சாய்ந்தது.

    அந்தியூர் அடுத்த பச்சாம்பாளையம் கொல்லபாளையத்தில் சரஸ்வதி என்பவர் தோட்டத்தில் நன்கு விளைந்திருந்த ரூ.2 லட்சம் மதிப்புள்ள வாழைகள் முற்றிலும் சேதமாகி விட்டன.

    இதே போல் கே.மேட்டூரில் துரைசாமி என்பவரது தோட்டத்தில் உள்ள ரூ.2 லட்சம் மதிப்புள்ள வாழைகளும், புதுப்பாளையத்தை சேர்ந்த சேகர் என்பவரது தோட்டத்தில் ரூ.3 லட்சம் மதிப்புள்ள நேந்திதரம் வகை வாழைகளும் அடியோடு சாய்ந்து நாசமானது.

    மேலும் எண்ணமங்கலம், சென்னம்பட்டி, கொமராயனூர் உள்பட சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பல விவசாயிகளின் தோட்டங்களில் உள்ள பல லட்சம் மதிப்புள்ள வாழைகள் சேதமானது.

    மொத்தம் ரூ.10 கோடி மதிப்புள்ள வாழைகள் நாசமாகி இருப்பதாக விவசாயிகள் கண்ணீருடன் தெரிவித்தனர்.

    பாதிக்கப்பட்ட வாழைகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் கேட்டு கொண்டுள்ளனர்.

    அந்தியூர் அருகே பு.புளியம்பட்டி வியாபாரியிடம் ரூ.77 ஆயிரம் பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படையினர் தாசில்தார் கணேசனிடம் பணத்தை ஒப்படைத்தனர். #LokSabhaElections2019
    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே அத்தாணி பகுதியில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் செல்வராஜ் தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக வந்த சரக்கு ஏற்றும் வாகனத்தை சோதனை செய்தபோது புளியம்பட்டி பகுதியைச் சேர்ந்த சின்னராஜ் (46) என்பவர் புளியம்பட்டியில் இருந்து சத்தியமங்கலம் அந்தியூர் வழியாக சென்னம்பட்டியில் வாழைக்காய் வாங்குவதற்க்காக பணம் 77 ஆயிரம் கொண்டு வந்ததாக தெரிவித்தார்.

    முறையான ஆவணம் இல்லாததால் பணம் பறிமுதல் செய்யப்பட்டு அந்தியூர் தாசில்தார் கணேசனிடம் ரூ. 77 ஆயிரம் தொகையை ஒப்படைத்தனர். #LokSabhaElections2019



    அந்தியூர் அருகே வனப்பகுதியில் இருந்து ஒரு யானை ஊருக்குள் அடிக்கடி புகுந்து அட்டகாசம் செய்துள்ளது.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள வெள்ளி திருப்பூர் அடுத்த மூலையூரை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 44).விவசாயி.

    வனப்பகுதியையொட்டி உள்ள இவர் தன் வீட்டு முன் வாழைகள் மரங்கள் பயிரிட்டுள்ளார். மேலும் அருகே இவருக்கு சொந்தமான 2½ ஏக்கர் தோட்டமும் உள்ளது. தோட்டத்தில் 10 மாடுகளை வளர்த்து வருகிறார். தோட்டத்தில் மாடுகளை கட்டி விட்டு மாடுகளுக்கு செடி- கொடி, தழைகளை போட்டு செல்வார்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக வனப்பகுதியில் இருந்து ஒரு யானை ஊருக்குள் அடிக்கடி புகுந்து அட்டகாசம் செய்து வருவதாக அந்த பகுதி பொதுமக்கள் வனத்துறையினரிடம் கூறி வந்தனர்.

    இதற்கிடையே அந்த யானை நேற்று இரவும் ஊருக்குள் புகுந்தது.

    விவசாயி செல்வராஜ் வீட்டு முன் உள்ள வாழைகளை தின்றது. பிறகு தோட்டத்துக்குள் புகுந்த யானை அங்கு மாடுகளுக்கு தீனியாக வைக்கப்பட்டிருந்த உணவு பொருட்களையும் கபாளீகரம் செய்தது. பிறகு அங்கிருந்து காட்டுக்குள் புகுந்தது.

    இன்று காலை இதை கண்ட செல்வராஜ் அதிர்ச்சி அடைந்தார். அவரும் அந்த பகுதியை சேர்ந்த பொது மக்களும் மீண்டும் வனத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

    தொடர்ந்து ஊருக்குள் புகும் யானையை வர விடாமல் தடுக்க வேண்டும் என கேட்டு கொண்டுள்ளனர்.

    அந்தியூர் அருகே ரூ. 10 லட்சம் கேட்டு லாரி டிரைவரை கடத்திய 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அந்தியூர்:

    கோபி அருகே உள்ள தாழக்கொம்புவை சேர்ந்தவர் மகாதேவன் (வயது 28). மெத்தை வியாபாரி.

    இவருக்கும் ஆப்பக்கூடல் கரட்டுப்பாளையத்தை சேர்ந்த லாரி டிரைவரான வெங்கடேசனுக்கம் பழக்கம் ஏற்பட்டது.

    அப்போது பணம் இரட்டிப்பு செய்து தருவதாக மகா தேவனிடம் வெங்கடேசன் கூறினார். மகாதேவனும் பல தவணையாக ரூ. 3 லட்சத்து 85 ஆயிரம் பணத்தை வெங்கடேசனிடம் கொடுத்தார்.

    ஆனால் பணத்தை வெங்கடேசன் இரட்டிப்பு செய்தும் கொடுக்கவில்லை. கொடுத்த பணத்தையும் தரவில்லை. அவரிடம் பல முறை மகாதேவன் கேட்டு பார்த்தார். ஆனால் அதற்கு பலன் இல்லை.

    இந்த நிலையில் சம்பவத்தன்று கரட்டுபாளையத்தில் இருந்து அந்தியூர் நோக்கி மோட்டார் சைக்கிளில் வெங்கடேசன் வந்தார்.

    அந்தியூர் அருகே உள்ள பிரம்மதேசத்தில் வந்து கொண்டிருந்தபோது மகா தேவன் மற்றும் அவரது நண்பர்களான கோபி ஒட்டன்புதூரை சேர்ந்த கார்த்திகேயன் (29), கோபியை சேர்ந்த முகமது பஷீர் (27), திருச்சி மாவட்டம் துறையூரை சேர்ந்த குமார் (28) ஆகியோர் காரில் அங்கு வந்தனர்.

    அவர்கள் வெங்கடேசனை கடத்தி சென்றனர். பின்னர் வெங்கடேசனின் மனைவி சுந்தரிக்கு போன் செய்து, ‘‘உனது கணவரை நாங்கள் கடத்தி வைத்துள்ளோம். அவரை விடுவிக்க ரூ. 10 லட்சம் பணம் வேண்டும்’’ என்று கூறினர்.

    இதையடுத்து ஆப்பக் கூடல் போலீஸ் நிலையத்தில் சுந்தரி புகார் செய்தார். பவானி போலீஸ் இன்ஸ்பெக்டர் இளங்கோ வழக்குப்பதிவு செய்தார்.

    இதைத்தொடர்ந்து வெங்கடேசனை மீட்க பவானி போலீஸ் இன்ஸ்பெக்டர் இளங்கோ, அந்தியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

    அவர்கள் தீவிர விசாரணை நடத்தி நேற்று இரவு கோபி அருகே வெங்கடேசனை மீட்டனர். அவரை கடத்திய மகாதேவன், கார்த்திகேயன், முகமது பஷீர், குமார் ஆகிய 4 பேரையும் கைது செய்தனர்.

    கடன் தொல்லையால் கணவன்-மனைவி வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்தியூர் பகுதியில் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள மயிலம் பாடி கண்ணாடிபாளையத்தை சேர்ந்தவர் கோவிந்த ராஜ் (வயது 60).

    இவரது மனைவி மாதேஸ்வரி (54). இந்த தம்பதியினருக்கு 1 மகனும் 1 மகளும் உள்ளனர். இவர்களுக்கு திருமணமாகிவிட்டது. அந்தியூர் அடுத்த பருவாச்சியில் கோவிந்தராஜ் கொல்லப்பட்டறை நடத்தி வந்தார்.

    தொழிலை விரிவுப்படுத்த கோவிந்தராஜ் பல இடங்களில் கடன் வாங்கி இருந்தார். மேலும் நிதி நிறுவனத்திலும் வட்டிக்கு பணம் வாங்கி இருந்தாராம்.

    ஆனால் வாங்கிய கடனை அவரால் திருப்பி கொடுக்க முடியாமல் அவதிப்பட்டு வந்தார்.

    இதனால் கணவனும், மனைவியும் வாழ்க்கையில் வெறுப்படைந்து காணப்பட்டனர். இதையொட்டி அவர்கள் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தனர்.

    கணவன்-மனைவி இருவரும் பருவாச்சியில் உள்ள கொல்லப்பட்டறைக்கு சென்றனர். பட்டறை மாடிக்கு சென்ற அவர்கள் தாங்கள் வாங்கி வந்த வி‌ஷத்தை குடித்தனர்.

    முன்னதாக கோவிந்த ராஜ் தனது தம்பி நாராயணனுக்கு போன் செய்தார். போனில் பேசிய அவர், ‘‘நான் உயிரோடு இருக்கமாட்டேன். நானும் என் மனைவியும் வி‌ஷம் குடித்துவிட்டோம்’’ என்று கூறினார்.

    அண்ணன் பேசியதை கேட்டு அதிர்ச்சி அடைந்த நாராயணன் பதறியடித்துக் கொண்டு வீட்டுக்கு ஓடி வந்தார். வீட்டில் யாரும் இல்லாததால் பட்டறைக்கு வந்து பார்த்தார்.

    பட்டறையின் மாடிக்கு சென்று பார்த்தபோது இருவரும் வி‌ஷம் குடித்து மயங்கி உயிருக்கு போராடி கொண்டிருந்ததை கண்டார்.

    உடனடியாக இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் இருவரும் சேர்க்கப்பட்டனர்.

    நேற்று மாலை சிகிச்சை பலனின்றி கோவிந்தராஜ் பரிதாபமாக இறந்தார். தொடர்ந்து ஆபத்தான நிலையில் அவரது மனைவி மாதேஸ்வரிக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

    ஆனால் சிகிச்சை பலனின்றி மாதேஸ்வரி இன்று அதிகாலை 1 மணிக்கு பரிதாபமாக இறந்தார்.

    கடன் தொல்லையால் கணவன்-மனைவி வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்தியூர் பகுதியில் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

    இது குறித்து அந்தியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். #Tamilnews
    அந்தியூர் அருகே குடிநீர் கேட்டு காலிகுடங்களுடன் பெண்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் காரணமாக அந்த பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    அந்தியூர்:

    அந்தியூர் அருகே உள்ள பச்சாம்பாளையம் ஊராட்சி அண்ணாமடுவு, சித்தி ரெட்டிபாளையம், கந்தாம்பாளையம், காட்டூர், பவானி சாலை ஆகிய பகுதி மக்களுக்கு கடந்த சில நாட்களாக சீரான குடிநீர் விநியோகம் இல்லை என்று தெரிகிறது.

    இதை கண்டித்து அந்த பகுதி பெண்கள் மற்றும் பொதுமக்கள் இன்று காலை திடீர் போராட்டத்தில் இறங்கினர். சுமார் 50-க்கும் மேற்பட்ட அவர்கள் ஒன்று திரண்டனர்.

    கையில் காலி குடங்களுடன் வந்த அந்தியூர்- பவானி-மேட்டூர் செல்லும் 3 வழிச்சாலையில் அவர்கள் குவிந்தனர். திடீரென அவர்கள் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

    இதனால் அங்கு பரபரப்பும், போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது. தகவல் கிடைத்ததும் அந்தியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி, சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் மற்றும் போலீசார் அங்கு வந்தனர்.

    அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் மற்றும் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அவர்களிடம் பெண்கள் கூறியதாவது:-

    எங்கள் பகுதிக்கு சீரான குடிநீர் விநியோகம் இல்லை. அப்படியே குடிநீர் விநியோகித்தாலும் இரவு 11 மணிக்கு மேல் விநியோகிக்கிறார்கள். அதுவும் வாரத்துக்கு ஒரு முறைதான் வருகிறது.

    எனவே 2 நாளுக்கு ஒரு முறை குடிநீர் கிடைக்க நட வடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்த வட்டார வளர்ச்சி அதிகாரி இங்கு வரவேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    இதனால் அங்கு பரபரப்பு அதிகரித்தது. எனினும் போலீசார் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

    சீரான குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர்கள் உறுதி அளித்தனர். இந்த போராட்டம் காரணமாக அந்த பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. #tamilnews

    ×