என் மலர்
நீங்கள் தேடியது "slug 112630"
- ராஜபாளையத்தில் தண்ணீர் பக்கெட்டில் தவறி விழுந்து 1 ½ வயது குழந்தை பலியானது.
- ராஜபாளையம் வடக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராஜபாளையம்
ராஜபாளையம் ஆவாரம்பட்டி கம்பர் தெருவை சேர்ந்த மணிகண்டன்-மாரீஸ்வரி தம்பதியினர். இவர்களுக்கு 5 வயதில் பரமேசுவரன் என்ற ஆண் குழந்தையும், 1½ வயதில் முத்துலட்சுமி என்ற பெண் குழந்தையும் உள்ளனர்.
நேற்று மாலை மாரீஸ்வரி துணி துவைத்து மொட்டை மாடியில் காய போட சென்றார். அப்போது வீட்டின் கீழே விளையாடிக் கொண்டிருந்த 1 ½ வயது பெண் குழந்தை முத்துலட்சுமி தவழ்ந்து சென்று தண்ணீர் இருந்த பிளாஸ்டிக் பக்கெட்டை எட்டிப் பார்த்தாள்.
இதில் குழந்தை எதிர்பாராத விதமாக பக்கெட்டில் தவறி விழுந்து மூச்சு திணறி பரிதாபமாக இறந்தது. துணியை காயப்போட்டுவிட்டு கீழே இறங்கி வந்த மாரீஸ்வரி குழந்தை தண்ணீரில் மூழ்கி இறந்துகிடந்ததை கண்டு அலறி துடித்தார்.
இதுகுறித்து ராஜபாளையம் வடக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை தண்ணீர் பக்கெட்டில் தவறி விழுந்து உயிரிழந்தது அந் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
- வாழப்பாடியை அடுத்த திருமனூர் ஊராட்சி அண்ணாபுரம் வடக்குக்காடு பகுதியில் 8 மாத ஆண் குழந்தை கிணற்றில் விழுந்து பலி.
- தாய் உயிருடன் மீட்பு.
வாழப்பாடி:
வாழப்பாடியை அடுத்த திருமனூர் ஊராட்சி அண்ணாபுரம் வடக்குக்காடு பகுதியைச் சேர்ந்தவர் செல்வகுமார் (30). இவரது மனைவி தேன்மொழி (28). இவர்களுக்கு 8 மாத ஆண் குழந்தை உள்ளது.
இவர்களது தோட்டத்தி–லுள்ள கிணற்று ஓரமாக, நேற்று தேன்மொழி கைக்குழந்தையுடன் நடந்து சென்ற போது தவறி கிணற்றுக்குள் விழுந்து விட்டார். தேன்மொழியின் அலறல் சத்தம் கேட்ட அக்கம்–பக்கத்தினர் ஓடிச் சென்று கிணற்றில் தத்தளித்த தேன்மொழியை மீட்டனர். ஆனால், தண்ணீரில் மூழ்கி இவரது ஆண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
குழந்தையின் சடலத்தை மீட்ட வாழப்பாடி போலீசார், இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- விளையாடிக் கொண்டிருந்தபோது குளத்தில் தவறி விழுந்து பலியாகி இருக்கலாம்
- கருங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை
கன்னியாகுமரி:
கருங்கல் அருகே உள்ள பாலப்பள்ளம் வாழைத் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் பிரதீப். இவர் கப்பலில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ஸ்ரீஜா. இவர்களுக்கு சந்தீப் (வயது 12), சஞ்சய் (10) என்ற மகன்களும் ரிஸ்மிதா (2) என்ற மகளும் உண்டு.
நேற்று ரிஸ்மிதா வீட்டின் அருகே விளையா டிக்கொண்டு இருந்தார். பின்னர் திடீரென குழந்தை காணாமல் மாயமானார். குழந்தையை காணாத ஸ்ரீஜா அக்கம்பக்கம் மற்றும் உறவினர் வீடுகளில் தேடினார். எவ்வித தகவலும் கிடைக்கவில்லை. இதுகுறித்து கருங்கல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து வந்த கருங்கல் சப்-இன்ஸ்பெக்டர்கள் மகேஷ், சோபன ராஜ் ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர்.
குழந்தையை குறித்து எவ்வித தகவலும் கிடைக் காத நிலையில், இவர்களது வீட்டின் அருகே உள்ள குளத்தில் தேட முடிவு செய்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். குளச்சல் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் குளத்தில் நடத்திய தேடுதல் வேட்டையில் குழந்தை பிணமாக மீட்கப்பட்டார்.
பிணத்தை கைப்பற்றிய கருங்கல் போலீசார் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற் கொண்டுள்ளனர்.
ரிஸ்மிதா விளையாடிக் கொண்டிருந்தபோது குளத்தில் தவறி விழுந்து பலியாகி இருக்கலாம் என்று சந்தேகிக்கிறார்கள். தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
- அப்போது தான் எதிர்கால சமுதாயம் நோயற்ற ஆரோக்கியமாக அமையும் என்றார்.
- பள்ளி செல்லும் குழந்தைகளை வேலைக்கு அமர்த்தினால் குழந்தை தொழிலாளர் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
திருத்துறைப்பூண்டி, அக்.13-
திருத்துறைப்பூண்டி நகராட்சி அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு ஆலோசனைக்குழு அமைக்கப்பட்டு அதன் முதல் கூட்டம், குழுவின் தலைவரும் நகர்மன்ற தலைவருமான கவிதாபாண்டியன் தலைமையிலும், ஆணையர் அப்துல்ஹரிஸ் முன்னிலையிலும் நடை்பெற்றது.
கூட்டத்தில் திருவாரூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு துறையிலிருந்து குழந்தை பாதுகாப்பு அலுவலர் முத்தமிழ்செல்வி கலந்துக்கொண்டு பேசும்போது, பிறந்தது முதல் 18 வயதுடைய அனைவரும் குழந்தைகள் தான். இவர்களுக்கு அனைத்து உரிமைகளும் சட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக கல்வி கட்டாயம் கொடுக்கப்பட வேண்டும், அவ்வாறு செய்யாத பெற்றோர்களிடம் விழிப்புணர்வு செய்யப்படும். குழந்தை திருமணம், பாலியல் சீண்டல்கள் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க சட்டம் உள்ளது.
பிறந்தது முதல் குழந்தைகளுக்கு தடுப்பூசி, சத்தான உணவுகள், மருத்துவ கண்காணிப்பு அவசியம், குழந்தைகளை தத்து எடுக்க சட்டப்பூர்வ வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.
பள்ளி செல்லும் குழந்தைகளை வேலைக்கு அமர்த்தினால் குழந்தை தொழிலாளர் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். வீடுகளிலும், பள்ளிகள், குழந்தை பாதுகாப்பு இல்லங்களிலும் தவறுகள் நடப்பதை நாம் அனைவரும் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கட்டணம் இல்லா 1098 தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம், குழந்தைகளை வைத்து பிச்சை எடுப்பதை தடுக்க வேண்டும், பெற்றோர்கள் தினமும் குழந்தைகளிடம் மனம் விட்டு பேசி அவர்கள் தேவையை கண்டறிய வேண்டும், பேரிடர் காலங்களில் குழந்தைகளை பாதுகாப்பாக வைத்திருப்பது அவசியம்.
படிக்கும் பள்ளிகளில் தவறான நண்பர்களுடன் சேர்ந்து தீய பழக்கங்களுக்கு செல்லாமல் கண்காணிக்க வேண்டும். அப்போது தான் எதிர்கால சமுதாயம் நோயற்ற ஆரோக்கியமாக அமையும் என்றார்.
குழந்தை பாதுகாப்பு துண்டு பிரசுரம் வெளியிடப்பட்டது. நிகழ்ச்சியில் சுகாதார ஆய்வாளர் அருண்குமார், பாலம் தொண்டு நிறுவன செயலாளர் செந்தில்குமார், குழந்தை வளர்ச்சி திட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜவேந்தன்.
கிராம நிர்வாக அலுவலர் முருகானந்தம், கவுன்சிலர்கள் எழிலரசன், ரவி, முருகவேல், சமூக பணியாளர் பாரதி, விஜய் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.
- தாயின் தாலிசங்கிலியையும் அபகரிக்க முயன்றதாக புகார்
- தக்கலை அருகே இன்று அதிகாலை துணிகரம்
கன்னியாகுமரி:
தக்கலை அருகே உள்ள பனங்கான விளை பகுதியைச் சேர்ந்தவர் அலோசியஸ், வியாபாரி.
இவர், தனது பெற்றோர், மனைவி அனிட்டா(வயது 32) மற்றும் 1 வயது மகன் ஆகியோருடன் வசித்து வருகிறார். நேற்று இரவு இவர்கள் அனைவரும் வீட்டில் தூங்கிக் கொண்டி ருந்தனர்.
அனிட்டா தனது குழந்தை யுடன் ஒரு அறையில் படுத்தி ருந்தார். அந்த அறையில் காற்றுக்காக ஜன்னல் கதவை திறந்து வைத்து உள்ளனர். இதனை அறிந்த யாரோ மர்மநபர் இன்று அதிகாலை திறந்திருந்த ஜன்னல் வழியாக கை விட்டு கதவை திறந்துள்ளார்.
பின்னர் அந்த நபர் வீட்டின் அறைக்குள் நுழைந்து குழந்தை கழுத்தில் கிடந்த 1 பவுன் தங்க சங்கிலியை பறித்துள்ளான். மேலும் அனிட்டா அணிந்திருந்த 9 பவுன் தாலிச்சங்கிலியையும் அபகரிக்க முயன்றுள்ளான்.
அந்த நேரத்தில் குழந்தை அழுததால், அனிட்டா கண் விழித்து விட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த மர்மநபர், நகையை பறித்து விட்டு தப்பி ஓட முயன்றான். ஆனால் அனிட்டா, தனது கழுத்தில் கிடந்த நகையை பிடித்துக் கொண்டு கூச்சலிட்டார்.
இதனால் அந்த மர்ம நபர், அனிட்டாவின் நகையை விட்டு விட்டு குழந்தையிடம் பறித்த ஒரு பவுன் நகையுடன் தப்பி ஒடிவிட்டான். இந்த துணிகர சம்பவம் குறித்து தக்கலை போலீசில் அனிட்டா புகார் செய்தார்.
அதன்பேரில் போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அந்தப் பகுதியில் உள்ள சி.சி.டி.வி காமிரா பதிவுகளை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அதில் நகை பறித்த நபர் ஸ்கூட்டரில் ஏறிச் செல்வது தெரியவந்தது. சுமார் 30 வயது மதிக்கத்தக்க அவர் யார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நேரம் காலம் இல்லாமல் அவர் செல்போனில் பேசி சுஜிலாவுக்கு தொல்லை கொடுத்து வந்தாராம்.
- மினிபஸ் டிரைவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளது
கன்னியாகுமரி:
குளச்சல் அருகே லட்சுமிபுரம் தாவூரை சேர்ந்தவர் ஆனந்த் (வயது32). எலக்ட்ரிக்கல் மற்றும் பிளம்பர் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சுஜிலா (28).
இருவரும் 8 வருடத்திற்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இவர்களுக்கு 5 வயதில் ஒரு மகனும், 3 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.சுஜிலா நாகர்கோவில் அருகே ஒரு தனியார் மருத்துவமனையில் பார்மசிஸ்டாக வேலை பார்த்து வந்தார்.தற்போது ஆனந்த் மற்றும் சுஜிலா அருகில் காரியாவிளையில் உள்ள ஆனந்தின் சகோதரி வீட்டில் வசித்து வந்தனர்.
கடந்த சில நாட்களாக சுஜிலா மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை சுஜிலா வசித்து வந்த காரியாவிளை வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து சுஜிலாவின் தாய் விஜயகுமாரி குளச்சல் போலீசில் புகார் செய்தார்.
போலீசார் விரைந்து சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.போலீசார் சுஜிலா மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.அவரது உடல் பரிசோதனை செய்ய ப்பட்டு ஆசாரிப்பள்ளம் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. நாளை ஆனந்தின் சகோதரி வெளிநாட்டிலிருந்து புறப்பட்டு ஊருக்கு வருகிறார்.
அதன்பின்பு சுஜிலா உடல் ஊருக்கு எடுத்து அடக்கம் செய்யப்படும் என ஆனந்தின் குடும்பத்தினர் தெரிவித்தனர். சுஜிலாவை தற்கொலைக்கு தூண்டியது திங்கள்நகர் அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த மினி பஸ் டிரைவர் என தெரிய வந்துள்ளது.
நேற்று முன்தினம் அவர் இறந்த பின்பும் அவரது செல் போனுக்கு அழைப்பு வந்தது.செல்போனை போலீசார் எடுத்து பேசினர்.அப்போது பேசிய மினி பஸ் டிரைவர் கோபத்தில்தான் பேசியுள்ளார்.இதனால் இவர்தான் அவரை தற்கொலை தூண்டியதாக கூறப்படுகிறது. தொடர்ந்து சுஜிலாவின் செல்போனுக்கு வந்த அழைப்பு விபரங்களை சேகரித்து ஆய்வு செய்து வருகின்றனர்.இதன் முடிவில் சுஜிலா தற்கொலை வழக்கில் திருப்பம் ஏற்படும் என போலீசார் கூறினர். போலீசார் தன்னை தேடுவதாக அறிந்த மினிபஸ் டிரைவர் தலைமறைவாகி விட்டார்.அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது.அவரை பிடித்து விசாரித்தால்தான் சுஜிலா மரணத்திற்கு காரணம் என்னவென்று தெரியும் என கூறினர்.
தற்கொலை செய்து கொண்ட சுஜிலா எழுதிய கடிதத்தை போலீசார் கைப்பற்றினர்.அதில் மினிபஸ் டிரைவர் ஏமாற்றியதாக குறிப்பிட்டுள்ளார்.மேலும் 'ஐ மிஸ் புருஷா'என காதல் கணவன் ஆனந்தை குறிப்பிட்டுள்ளார்.குழந்தைகள் சாக்லெட் சாப்பிடாமல் பார்த்து கொள்ள வேண்டும்'எனவும் ஆனந்தை அவர் கேட்டு எழுதியுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது,
சுஜிலா அடுத்த மாதம் வெளிநாடு செல்ல திட்டமிட்டிருந்தார்.மினி பஸ் டிரைவருடன் ஏற்பட்ட பழக்கத்தால், மினி பஸ் டிரைவர் இரவு வேளையிலும் சுஜிலாவுக்கு போன் செய்து டார்ச்சர் கொடுப்பாராம்.சுஜிலா வெளிநாடு செல்வதை மினிபஸ் டிரைவர் விரும்பவில்லையாம்.இதனால் நேரம் காலம் இல்லாமல் அவர் செல்போனில் பேசி சுஜிலாவுக்கு தொல்லை கொடுத்து வந்தாராம்.நேற்று முன்தினமும் அவர் தொல்லை அதிகரித்ததால் மன உளைச்சலின் உச்சத்திற்கு சென்ற சுஜிலா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார் என்றனர்.
சுஜிலாவுக்கு கடும் தொல்லை கொடுத்து வந்த மினிபஸ் டிரைவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளது என்பது குறிப்பிட்டத்தக்கது.
- அவர் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கன்னியாகுமரி:
குளச்சல் அருகே லட்சுமிபுரம் தாவூரை சேர்ந்தவர் ஆனந்த் (வயது 32). எலக்ட்ரிக்கல் மற்றும் பிளம்பர் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சுஜிலா (28). நாகர்கோவில் அருகே ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் வேலை பார்த்து வந்தார். தற்போது ஆனந்த் மற்றும் சுஜிலா அருகில் காரியாவிளையில் உள்ள ஆனந்தின் சகோதரி வீட்டில் வசித்து வந்தனர்.
இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த சில நாட்களாக சுஜிலா மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று மாலை சுஜிலா வசித்து வந்த காரியாவிளை வீட்டில் தூக்குப்போட்டு இறந்து கிடந்தார்.
இது குறித்து சுஜிலாவின் தாய் விஜயகுமாரி குளச்சல் போலீசில் புகார் செய்தார். போலீசார் விரைந்து சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்றும் சுஜிலா செல்போனுக்கு அழைப்பு வந்தது. செல்போனை போலீசார் எடுத்து பேசினர். அப்போது பேசிய வாலிபர் கோபத்தில்தான் பேசியுள்ளார். இதனால் இந்த வாலிபர்தான் அவரை தற்கொலை தூண்டியதாக கூறப்படுகிறது. தொடர்ந்து சுஜிலாவின் செல்போனுக்கு வந்த அழைப்பு விவரங்களை சேகரித்து ஆய்வு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாரணை முடிவில் சுஜிலா தற்கொலை வழக்கில் திருப்பம் ஏற்படும் என போலீசார் தெரிவித்தனர்.
- குழந்தை தவழ ஆரம்பித்த பிறகு, அதிக அளவில் ஆடைகள் தேவைப்படும்.
- ஒரு சில துணிகள் மற்றும் நிறங்கள் மட்டுமே குளிர்காலத்திற்கு ஏற்றது.
குழந்தைகளுக்கான ஆடைகளை தேர்ந்தெடுக்கும்போது, சவுகர்யம் மற்றும் சுலபமாக பராமரிப்பதை அடிப்படையாகக் கொள்ள வேண்டும். குழந்தைகளின் ஆடைகள் மென்மையானதாகவும், இழுதன்மையுடன் வளைக்கக் கூடியதாகவும், எரிச்சல் ஏற்படுத்தாதவாறும் இருக்க வேண்டும். ஈரப்பதம் இருந்தால் ஆவியாகி காற்றோட்டம் ஏற்படுத்துவதாக இருக்க வேண்டும். போதுமான காற்றோட்டம் இன்மை, ஈரத்தால் தோலில் அரிப்பு ஏற்படுத்தும் விளைவுகளை உண்டாக்கும். ஆடைகள் எளிமையானதாகவும், சிறப்பானதாகவும் செய்யப்பட்டு இருக்க வேண்டும். அழகிற்காக கத்தரித்து ஆடை அலங்கரிக்கப்பட்டிருந்தால் சலவை செய்யும்போது மிகுந்த கவனம் தேவைப்படும். மேலும், இது போன்று கத்தரித்து அலங்கரிக்கப்படுவது குழந்தைக்கு எரிச்சலை ஏற்படுத்தும்.
பின்னப்பட்ட துணியால் ஆன ஆடைகள் உடல் அசைவுகளுக்கு ஏற்றவாறு இழுதன்மை பெற்று நீளும் திறன் பெற்றும் இருக்கும். எனவே குழந்தைக்கு பின்னப்பட்ட துணியாலான ஆடையை அணிவிப்பது மிகவும் எளிது. முன்பக்கம் அல்லது பின்பக்கத்தில் ஆடையின் திறப்பு மேல் இருந்து கீழ்வரை அமைத்து இருப்பது ஆடை அணிவித்தலை எளிமையாக்கும். முடிச்சு போட்டு கட்டுபவை அல்லது தட்டையான பொருத்துவான்கள் மிகவும் பொருத்தமாக இருக்கும். கழுத்துப் பகுதிக்கு இழுத்து கட்டக்கூடியவைகளை அநேகமாக பரிந்துரைப்பதில்லை. ஏனெனில், கட்டக்கூடிய நாடாவால் குழந்தைக்கு பாதிப்பு ஏற்பட்டு விடும். முடிச்சு போட்டு கட்டக்கூடியன அல்லது பொத்தான்கள் பயன்படுத்தப்பட்டிருந்தால், அவை பாதுகாப்பான முறையில் தைக்கப்பட்டுள்ளனவா என்பதை அடிக்கடி கவனிக்க வேண்டும்.
குழந்தை தவழ ஆரம்பித்த பிறகு, அதிக அளவில் ஆடைகள் தேவைப்படும். முக்கியமாக குழந்தையின் பாதுகாப்பை மனதில் கொள்ள வேண்டும். சட்டையில் அழுக்குபடாதிருக்க சட்டையின் மேல் முழுவதுமாக அணியப்படும் ஆடையே இருபாலின குழந்தைகளுக்கும் எளிமையான ஆடையாகும். முக்கியமாக கால்கள் பிரியும் இடத்தில் கொக்கிகள் பொருத்தியிருந்தால் குழந்தைகளுக்கு டையாப்பர் மாற்றுவதற்கு உதவியாக இருக்கும். முழுவதுமாக மூடப்பட்ட ஆடையானது குழந்தைகளின் கால் முட்டிகளை மூடும் கவசமாக தரையில் இருந்து உராய்வதை பாதுகாக்கும். கால்சட்டையின் கால்பகுதி குழந்தையின் முட்டிகளுக்கு அதிக பலமளிக்க கூடியதாக இருப்பதால் நீடித்து உழைக்குமாறு இருப்பது அவசியம்.
ஆரோக்கியம், தோரணை மற்றும் சுயமரியாதை ஆகியனவற்றிற்கு தகுந்த ஆடைகள் தேவைப்படுகிறது. சம்பாதிப்பதை எல்லாம் செலவு செய்பவரை விட வரவு செலவு திட்டமிட்டு வாழ்க்கை நடத்துபவர் பொதுவாக மிகுந்த மகிழ்வோடு, திருப்திகரமாகவும் வாழ்வார். நமது ஆசை மற்றும் தேவைகள், எல்லைகள் அற்றவை என்பது உண்மை. ஒப்பிடுகையில் நமது தேவைகள் மிகவும் குறைவே. குடும்ப வாழ்வில் தேவைகளை ஒழுங்காக்குவது இன்றியமையாதது மற்றும் முக்கியமானது. ஒருவரது ஆளுமை வளர்ச்சிக்கு, அனைத்து தேவைகளையும் நிறைவாக்குவது என்பது விரும்பத்தக்கதல்ல. விருப்பங்கள் மற்றும் தேவைகள் ஆகியவற்றிக்கு இடையே வித்தியாசம் உள்ளது. ஒரு நல்ல ஆடை வாங்குவதற்கான திட்டத்தில் விருப்பம் மற்றும் தேவை அடங்கியிருக்கும்.
ஆடைக்கான துணியை தேர்ந்தெடுக்கும் போது குழந்தையின் வயதை மனதில் கொள்ள வேண்டும் சிறு குழந்தைகளுக்கு, மென்மையான வெளிர் நிறத்தில் அழகான, கச்சிதமான அச்சுக்கள் உள்ள துணியை தேர்ந்தெடுக்கலாம். பின் குழந்தைப் பருவ நிலையை அடையும் போது, ஆண் குழந்தைகள் நீலம், சாம்பல் நிறத்துடன் கூடிய நீலம் மற்றும் பிரவுன் போன்ற ஆண்மை தன்மை வாய்ந்த நிறங்களை விரும்புவர். பிங்க், பச்சை மற்றும் சிவப்பு போன்ற பெண்மைத்தன்மை வாய்ந்த நிறங்களை உடைய உடைகளை பெண் குழந்தைகள் விரும்பி அணிவர். சில மென்மையான துணிகளை வளரிளம் பெண்களுக்கு தேர்வு செய்யலாம்.
வளரிளம் ஆண்களுக்கு சற்று கடினமான துணிகள் உகந்தவை. உடையின் ஸ்டைலும் குழந்தைகளின் வயதிற்கு ஏற்ப மாறுகின்றன. கிலைன் உடைகள் சிறு குழந்தைகளுக்கு பொருத்தமானவை. அதிக அளவு சுருக்கங்களுடன் கூடிய பிராக்குகள் போன்ற உடைகள் பெண் குழந்தைகளுக்கு உகந்தவை. இது போன்றே சிறிய வயதினருக்கு பலவகை காலர்கள் பொருத்தமாக இருக்கும், உதாரணத்திற்கு, குழந்தைக்கான காலர் வளரிளம் பருவத்தினருக்கு பொருத்தமானதாக இருக்காது. ஒரு சில துணிகள் மற்றும் நிறங்கள் மட்டுமே குளிர்காலத்திற்கு ஏற்றது.
உதாரணத்திற்கு சின்தெடிக்குகள், பட்டு மற்றும் கம்பளி ஆகியன குளிர் காலத்திற்கு ஏற்றவை, ஏனெனில், அவை வெப்பத்தை கடத்தாதவை. பருத்தி மற்றும் சின்தெடிக் இணைத்து தயாரிக்கப்பட்ட பருத்தி ஆகியன வெயில் காலத்திற்கு ஏற்றவை. ஏனெனில், அவை உறிஞ்சும் தன்மையுடன், வெப்பம் கடத்தும் தன்மையும், கொண்டவை. குளிர் மற்றும் வெம்மையான நிறங்கள் உள்ளன. குளிர் நிறங்கள் என்பவை குளுமையுடன் தொடர்புடையன. உதாரணத்திற்கு நீலம், பச்சை, வெள்ளை முதலானவை வெம்மையான நிறங்கள் வெப்பத்தை கடத்தாது. மேலும் வெம்மை நிறங்கள் வெப்பத்துடன் தொடர்புடையது. உதாரணத்திற்கு சிவப்பு, ஆரஞ்சு மற்றும் மஞ்சள். ஆகவே, வெம்மை நிறங்கள் குளிர்காலத்திற்கும், குளுமையான நிறங்கள் வெயில் காலத்திற்கும் ஏற்றவை.
- இரண்டாவது குழந்தையை சுகபிரசவத்தில் வீட்டிலேயே பெற்றெடுக்க முடிவு செய்தனர்.
- நீண்ட நேர காத்திருப்பிற்கு பின் தாய் சேய் நலமாக உள்ளார்களா என பார்த்து விட்டு செல்கிறோம்.
சீர்காழி:
சீர்காழி அருகில் எருக்கூர் மெயின்ரோட்டை சேர்ந்தவர் ஜான். இவரது மனைவி பெல்சியா.
இவர்களுக்கு முதல் குழந்தை அறுவை சிகிச்சை மூலம் மருத்துவமணையில் மருத்துவர்களால் பிரசிவிக்க பட்டது.
இதனால் 2-வது குழந்தையை சுகபிரசவம் மூலம் பெற்றெடுக்க விரும்பினர்.
மருத்துவர்கள் முதல் குழந்தை அறுவை சிகிச்சையில் பிறந்ததால் இரண்டாவது குழந்தையும் அறுவை சிகிச்சைதான் என்றனர்.
அதை விரும்பாத தம்பதியினர் இரண்டாவது குழந்தையை சுகபிரசவத்தில் வீட்டிலேயே பெற்றெடுக்க முடிவு செய்துஅதற்கான அனைத்து வழிமுறைகளையும் பின்பற்றி மருந்து மாத்திரை ஊசிகள் பயன்ப டுத்தாமல் நேற்று மாலை மரூட்டி சுகபிரசவத்தின் வாயிலாக அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்தனர்.
குழந்தை பிறந்து நஞ்சுகொடி (பிளசன்டா) வருவதற்காக காத்திருந்தனர்.
அந்நேரத்தில் அங்கு வந்த சுகாதார துறையை சேர்ந்தவர்களும் அந்த பகுதி செவிலியரும் தம்பதியினரிடம் தாய் சேய் உயிருக்கு ஆபத்து உடனடியாக மருத்துவமனை வரவேண்டும் என்று கூறினர்.
அதற்கு நாங்கள் வீட்டிலேயே பார்த்து கொள்கிறோம் என்று தம்பதியினர் கூறினர்.
நீண்ட நேர காத்திருப்பிற்கு பின் குழந்தை தாய் நலமாக உள்ளார்களா என்று பார்த்துவிட்டு செல்கி றோம் என்று தாயின் கை நாடியை பிடித்து பார்த்துவிட்டு நலமாக உள்ளனர் என்று அங்கிருந்து சுகாதாரதுறையினரும் செவிலியரும் திரும்பி சென்று விட்டனர்.
நாங்கள் நினைத்தபடி சுகபிரசவத்தில் அறுவை சிகிச்சை இல்லாமல் குழந்தை பிறந்ததால் தம்பதியினர் மகிழ்ச்சி அடைந்தனர்.
- வெள்ளி ச்சந்தை போலீசில் புகார்
- உறவினர்கள் வீட்டில் தேடியும் எந்த தகவலும் கிடைக்கவில்லை.
கன்னியாகுமரி:
குமரி மாவட்டம் வெள்ளிச்சந்தை அருகே உள்ள ஆலங்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீதரன் (வயது 44). இவர் சொந்தமாக ஸ்டுடியோ நடத்தி வருகிறார்.
இவரது மனைவி சகாய ஜஸ்மின் ( 36). இவர்களுக்கு திருமணமாகி 16 வருடங்கள் ஆகிறது. 2 மகள்கள் உள்ளனர். ஸ்ரீதரன் கடந்த சில தினங்களுக்கு முன்பு, மனைவி மற்றும் 2 பெண் குழந்தைகளையும் அழிக்காலில் உள்ள மாமியார் வீட்டில் கொண்டு சென்று விட்டு உள்ளார்.
இந்த நிலையில் சம்பவ த்தன்று 3 பேரையும் அழைத்து வரச் சென்றபோது அவர்கள் அங்கு இல்லை. உறவினர்கள் வீட்டில் தேடியும் எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இது குறித்து வெள்ளி ச்சந்தை போலீசில் ஸ்ரீதரன் புகார் செய்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் வழக்கு பதிவு செய்து மாயமான சகாய ஜஸ்மின், அவரது மகள்களை தேடி வருகிறார்.
- பேபிதேவிக்கு பிரசவ வலி அதிகரித்து பனிக்குடம் உடைந்து குழந்தையின் தலை வெளியே வந்தது.
- சோமனூர் அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனையில் சிகிச்சைக்காக தாய், சேய் இருவரையும் சேர்த்தனர்.
கோவை,
கோவை கருமத்தம்பட்டி அடுத்த சென்னியாண்டவர் கோவில் பகுதியை சேர்ந்தவர் கைலாஷ். இவரின் மனைவி பேபிதேவி(23).
இவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். இவருக்கு நேற்றிரவு வீட்டில் இருக்கும்பொழுது பனிக்குடம் உடைந்தது. இதனால் மிகுந்த வலியுடன் துடித்தார். இதை பார்த்த அவரது கணவர் உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து கருமத்தம்பட்டி பகுதியில் இருந்து ஆம்புலன்ஸ் விரைந்து வந்தது. அவருடைய வீட்டிற்கு வந்து பார்த்தபோது பேபிதேவிக்கு பிரசவ வலி அதிகரித்து குழந்தையின் தலை வெளியே வந்தது.
இதனால் ஆம்புலன்ஸ் மருத்துவ நிபுணர் முருகன் அவருடைய வீட்டிலேயே பைலட் பாண்டி உதவியுடன் இளம்ெபண்ணுக்கு பிரசவம் பார்த்தார்.
அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது இதையடுத்து சோமனூர் அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனையில் சிகிச்சைக்காக தாய், சேய் இருவரையும் சேர்த்தனர்.
அவரை பரிசோதனை செய்த டாக்டர் இருவரும் நலமுடன் இருப்பதாக தெரிவித்தார். அவசரம் கருதி பிரசவம் பார்த்த ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு அப் பகுதியில் உள்ள மக்கள் தங்களின் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரித்தனார்.
- மலைவாழ் பழங்குடி இனத்தை சார்ந்த இவர்கள் காட்டு பகுதியில் கூலி வேலை செய்து வருகிறார்கள்.
- தாயையும் சேயையும் பாதுகாப்பாக பேச்சிப்பாறை அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனையில் சேர்த்தனர்.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி மாவட்டம் கோதையாறு காட்டுப் பகுதியில் உள்ள கொலஞ்சிமடம் என்ற பகுதியில் வசிப்பவர் நிஷாந்த். இவருக்கு அபிஷா (வயது 19) என்ற மனைவி உள்ளார்.
இவர்கள் மலைவாழ் பழங்குடி இனத்தை சார்ந்தவர்கள் காட்டு பகுதியில் கூலி வேலை செய்து வருகிறார்கள். முதல் குழந்தை பிரசவ வலியால் அவதிபட்டு வந்தார். இவரின் கணவர் வெளியூர் சென்றிருந்தார். உடனே அக்கம்பக்கத்தினர் இரவு 9.54 மணிக்கு பேச்சிப்பாறை ஆம்புலன்சிற்கு போன் செய்தார்கள்.
உடனடியாக பேச்சிப்பாறை 108 ஆம்புலன்ஸ் விரைந்து சென்று அபிஷாவை அழைத்து வரும் வழியில் அந்தப் பெண்மணிக்கு யானைகள் நடமாடும் அடர்ந்த காட்டுப்பகுதியில் வைத்து பிரசவ வலி அதிகமானதால் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் அஜீஸ் ஆம்புலன்சை ஓரமாக நிறுத்தினார். அந்த பகுதியானது இருண்ட அடர்ந்த காட்டு பகுதியாகும். இரவில் மிருகங்கள் நடமாடும் பகுதி மற்றும் கரடுமுரடான பாதையாகவும் இருந்தது.
அவசர கால மருத்துவ நுட்புநர் சுஜின்ராஜ் அந்தப் பெண்மணிக்கு பிரசவம் பார்த்து மருத்துவ சிகிச்சை அளித்தார். உடனே அந்தப் பெண்மணிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. மருத்துவ சிகிச்சை அளித்து தாயையும் சேயையும் பாதுகாப்பாக பேச்சிப்பாறை அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனையில் சேர்த்தனர்.
இந்தப் பணியை சிறப்பாக செய்த 108 ஆம்புலன்ஸ் பணியாளர்களுக்கு அந்த பகுதி மக்கள் பாராட்டுகள் தெரிவித்தனர்.