search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கருணாரத்னே"

    உலகக்கோப்பைக்கான இலங்கை அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதில் நான்கு வருடமாக ஒருநாள் போட்டியில் விளையாடாத கருணாரத்னே கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். #WorldCup2019
    50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் அடுத்த மாதம் 30-ந்தேதி தொடங்குகிறது. இதில் 10 அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ஒவ்வொரு அணிகளும் 15 பேர் கொண்ட தங்களது வீரர்கள் பட்டியலை வெளியிட்டு வருகின்றன.

    இன்று மதியம் இலங்கை அணி 15 பேர் கொண்ட வீரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. கடந்த 2015-ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குப்பின் ஒருநாள் கிரிக்கெட் அணியில் இடம் பிடிக்காமல் இருந்த கருணாரத்னே கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

    இலங்கை அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    1. கருணாரத்னே, 2. அவிஷ்கா பெர்னாண்டோ, 3. திரிமன்னே, 4. குசால் பெரேரா, 5. குசால் மெண்டிஸ், 6. மேத்யூஸ், 7. டி சில்வா, 8. வாண்டர்சே, 9. திசாரா பேரேரா, 10. உடானா, 11. லசித் மலிங்கா, 12. லக்மல், 13. நுவான் பிரதீப், 14. ஜீவன் மெண்டிஸ், 15. ஸ்ரீவர்தனா.
    ஆஸ்திரேலியாவில் நான்கு இன்னிங்சில் 24 ரன்கள் மட்டுமே அடித்ததால் இலங்கை கேப்டன் சண்டிமல் தென்ஆப்பிரிக்கா தொடரில் இருந்து கழற்றி விடப்பட்டுள்ளார். #SAvSL
    ஆஸ்திரேலியா - இலங்கை அணிகளுக்கு இடையில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்றது. முதல் டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றும் 40 ரன்னிலும், 2-வது டெஸ்டில் 366 ரன்கள் வித்தியாசத்திலும் இலங்கை அணி படுதோல்வியடைந்தது.

    அந்த அணியின் கேப்டன் சண்டிமல் படுமோசமாக விளையாடினார். முதல் டெஸ்டில் 5 மற்றும் 0 ரன்கள் அடித்த அவர், 2-வது டெஸ்டில் 15 மற்றும் 4 ரன்கள் மட்டுமே எடுத்தார். சராசரி 6 மட்டுமே.

    இதனால் தென்ஆப்பிரிக்கா தொடருக்கான இலங்கை அணியில் இருந்து சண்டிமல கழற்றி விடப்பட்டார். அத்துடன் உள்ளூர் தொடரில் விளையாட வலியுறுத்தப்பட்டுள்ளார். சண்டிமல் அணியில் இல்லாததால் கருணாரத்னே தற்காலிக கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

    இலங்கை அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் செய்து இரண்டு டெஸ்ட், ஐந்து ஒருநாள் போட்டிகள், மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. டெஸ்ட் தொடர் வருகிற 13-ந்தேதி டர்பனில் தொடங்குகிறது.
    இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியிலும் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. #England #SriLanka #Whitewash
    கொழும்பு:

    இலங்கை-இங்கிலாந்து அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொழும்பில் நடந்தது. இதில் முதல் இன்னிங்சில் முறையே இங்கிலாந்து அணி 336 ரன்களும், இலங்கை அணி 240 ரன்களும் எடுத்தன. 96 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி 230 ரன்களுக்கு ‘ஆல்-அவுட்’ ஆனது. அதிகபட்சமாக ஜோஸ் பட்லர் 64 ரன்களும், பென் ஸ்டோக்ஸ் 42 ரன்களும் எடுத்தனர். இலங்கை அணி தரப்பில் சுழற்பந்து வீச்சாளர்கள் தில்ருவான் பெரேரா 5 விக்கெட்டுகளும், புஷ்பகுமாரா 3 விக்கெட்டுகளும், சன்டகன் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.



    பின்னர் 327 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2-வது இன்னிங்சை ஆடிய இலங்கை அணி 3-வது நாள் ஆட்டம் முடிவில் 17 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 53 ரன்கள் எடுத்து தடுமாறி கொண்டிருந்தது. குசல் மென்டிஸ் 15 ரன்னுடனும், சன்டகன் ஒரு ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.



    நேற்று 4-வது நாள் ஆட்டம் நடந்தது. இங்கிலாந்து வீரர்களின் அபாரமான சுழற்பந்து வீச்சில் இலங்கை அணியின் விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் வீழ்ந்தன. சன்டகன் 7 ரன்னில் ஜாக் லீச் பந்து வீச்சில் பென் ஸ்டோக்சிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 6-வது விக்கெட்டுக்கு ரோஷன் சில்வா, குசல் மென்டிஸ்சுடன் இணைந்தார். இந்த ஜோடி நிலைத்து நின்று ஆடி அணியின் தோல்வியை தவிர்க்க போராடியது. ஆனால் அதற்கு பலன் கிடைக்கவில்லை.

    அணியின் ஸ்கோர் 184 ரன்னாக உயர்ந்த போது சிறப்பாக ஆடிய குசல் மென்டிஸ் (86 ரன்கள், 129 பந்துகளில் 8 பவுண்டரி, ஒரு சிக்சருடன்) ஜாக் லீச்சால் ‘ரன்-அவுட்’ செய்யப்பட்டார். அடுத்து களம் கண்ட டிக்வெல்லா 19 ரன்னிலும், தில்ருவான் பெரேரா 5 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். சற்று நேரம் தாக்குப்பிடித்து ஆடிய ரோஷன் சில்வா 65 ரன்னில் அவுட் ஆனார். கடைசி விக்கெட்டாக லக்மல் (11 ரன்) வீழ்ந்தார்.

    தேனீர் இடைவேளைக்கு பிறகு இலங்கை அணி 2-வது இன்னிங்சில் 86.4 ஓவர்களில் 284 ரன்னில் ஆட்டம் இழந்தது. இதனால் இங்கிலாந்து அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. புஷ்பகுமாரா 42 ரன்னுடன் (40 பந்துகளில் 6 பவுண்டரி, ஒரு சிக்சருடன்) ஆட்டம் இழக்காமல் இருந்தார். இங்கிலாந்து அணி தரப்பில் சுழற்பந்து வீச்சு வீச்சாளர்கள் மொயீன் அலி, ஜாக் லீச் தலா 4 விக்கெட் வீழ்த்தினார்கள். இங்கிலாந்து அணி வீரர்கள் பேர்ஸ்டோ ஆட்டநாயகன் விருதையும், பென் ஸ்டோக்ஸ் தொடர்நாயகன் விருதையும் பெற்றனர்.

    இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது. 1963-ம் ஆண்டுக்கு பிறகு அன்னிய மண்ணில் 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரை இங்கிலாந்து அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றுவது இதுவே முதல்முறையாகும். உள்ளூரில் 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் 3 ஆட்டங்களிலும் இலங்கை அணி தோல்வியை சந்திப்பது இது 3-வது முறையாகும். இதற்கு முன்பு டெஸ்டில் ஆஸ்திரேலியா, இந்தியாவுக்கு எதிராக இலங்கை அணி இதேபோல் தோல்வியை சந்தித்துள்ளது. ஏற்கனவே நடந்த ஒருநாள் போட்டி தொடரை இங்கிலாந்து அணி 3-1 என்ற கணக்கிலும், ஒரே ஒரு 20 ஓவர் போட்டி தொடரை 1-0 என்ற கணக்கிலும் வென்று இருந்தது குறிப்பிடத்தக்கது.
    இலங்கை - இங்கிலாந்து அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெறவே பிரகாசமான வாய்ப்புள்ளது. #engvssl #testcricket
    கொழும்பு:

    இலங்கை - இங்கிலாந்து அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொழும்பில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 336 ரன்களும், இலங்கை 240 ரன்களும் எடுத்தன. 96 ரன்கள் முன்னிலையுடன் 3-வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி 2-வது இன்னிங்சில் 69.5 ஓவர்களில் 230 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.



    இதன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 327 ரன்கள் இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சை ஆடிய இலங்கை அணி ஆட்ட நேர முடிவில் 17 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை தாரைவார்த்து 53 ரன்களுடன் ஊசலாடிக் கொண்டிருக்கிறது. இதில் மேத்யூஸ் (5 ரன்), கருணாரத்னே (23 ரன்) ஆகியோர் அவுட் ஆனதும் அடங்கும். 4-வது நாள் ஆட்டம் இன்று நடக்கிறது. இலங்கை அணி வெற்றி பெற இன்னும் 274 ரன்கள் தேவைப்படுகிறது. கைவசம் 6 விக்கெட் மட்டுமே உள்ளது. அதனால் இந்த டெஸ்டில் இங்கிலாந்து வெற்றி பெறவே பிரகாசமான வாய்ப்புள்ளது.  #engvssl #testcricket 
    கொழும்பில் நடைபெற்று வந்த 2-வது டெஸ்டில் இலங்கை 199 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தென்ஆப்பிரிக்காவை ஒயிட்வாஷ் செய்தது. #SLvSA
    இலங்கை - தென்ஆப்பிரிக்கா இடையிலான 2-வது டெஸ்ட் கடந்த 20-ந்தேதி கொழும்பு தொடங்கியது. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த இலங்கை அணி முதல் இன்னிங்சில் 338 ரன்கள் குவித்தது. மகாராஜ் 9 விக்கெட் வீழ்த்தினார்.

    பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய தென்ஆப்பிரிக்கா 124 ரன்னில் சுருண்டது. தில்ருவான் பெரேரா 4 விக்கெட்டும், அகிலா தனஞ்ஜெயா 5 விக்கெட்டும் வீழ்த்தினார்கள். 214 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி 5 விக்கெட் இழப்பிற்கு 275 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது.

    ஒட்டுமொத்தமாக 489 ரன்கள் முன்னிலைப் பெற்றதால், தென்ஆப்பிரிக்கா அணியின் வெற்றிக்கு 490 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது.

    இமாலய ஸ்கோரை சேஸிங் செய்யும் நோக்கத்தில் தென்ஆப்பிரிக்கா 2-வது இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய 3-வது நாள் ஆட்ட முடிவில் தென்ஆப்பிரிக்கா 5 விக்கெட் இழப்பிற்கு 139 ரன்கள் எடுத்திருந்தது. டி ப்ரூயின் 45 ரன்னுடனும், பவுமா 14 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

    இன்னும் ஐந்து விக்கெட்டுக்கள் மட்டுமே கைவசம் இருப்பதால், 4-வது நாள் ஆட்டத்தில் விரைவில் ஆல்அவுட் ஆகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    இன்றைய 4-வது நாள் ஆட்டம் தொடங்கியதும் ப்ரூயின், பவுமா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் ப்ரூயின் அரைசதம் அடித்தார்.



    இந்த ஜோடி ஹெராத், தில்ருவான் பெரேரா, தனஞ்ஜெயா சுழற்பந்தை நேர்த்தியாக எதிர்கொண்டது. இதனால் இலங்கை வீரர்கள் விரக்தியடைந்தது. மதிய உணவு இடைவேளைக்கு சற்று முன் இந்த ஜோடி பிரிந்தது.

    பவுமா 63 ரன்கள் எடுத்த நிலையில் ஹெராத் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த டி காக் 8 ரன்னில் எல்பிடபிள்யூ மூலம் வெளியேறினார். அத்துடன் மதிய உணவு இடைவேளை விடப்பட்டது. 7 விக்கெட் வீழ்ந்ததால் இலங்கை வெற்றியை நோக்கி சென்றது.

    மதிய உணவு இடைவேளை முடிந்து ஆட்டம் தொடங்கியது. சிறப்பாக விளையாடிய டி ப்ரூயின் தனது முதல் சதத்தை பூர்த்தி செய்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 101 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ரபாடா 18 ரன்னிலும், ஸ்டெய்ன் 6 ரன்னிலும் வெளியேற தென்ஆப்பிரிக்கா 2-வது இன்னிங்சில் 290 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.



    இதனால் தென்ஆப்பிரிக்கா 199 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஹெராத் 6 விக்கெட் வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட தொடரை இலங்கை 2-0 என கைப்பற்றி தென்ஆப்பிரிக்காவை ஒயிட்வாஷ் செய்தது. இலங்கை தொடக்க பேட்ஸ்மேன் கருணாரத்னே ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதை தட்டிச் சென்றார். 
    கொழும்பில் நடைபெற்று வரும் தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்டில் இலங்கை அணி 365 ரன்கள் முன்னிலையுடன் வலுவான நிலையில் உள்ளது. #SLvSA #Karunaratne
    இலங்கை - தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி கொழும்பில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்த இலங்கை, முதல்நாள் ஆட்ட முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 277 ரன்கள் சேர்த்தது.

    இன்று 2-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. தொடர்ந்து விளையாடிய இலங்கை 338 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது. தென்ஆப்பிரிக்கா அணி சார்பில் மகாராஜ் அதிகபட்சமாக 9 விக்கெட்டுக்கள் அள்ளினார்.

    பின்னர் தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சை தொடங்கியது. அகிலா தனஞ்ஜெயா (5 விக்கெட்), தில்ருவான் பெரேரா (4) ஆகியோரின் சுழலில் சிக்கி தென்ஆப்பிரிக்கா 124 ரன்னில் சுருண்டது.

    214 ரன்கள் முன்னிலைப் பெற்றாலும் பாலோ-ஆன் கொடுக்காமல் இலங்கை தொடர்ந்து 2-வது இன்னிங்சை தொடங்கியது. முதல் இன்னிங்சில் அசைரதம் அடித்த தொடக்க வீரர்களான குணதிலகா, கருணாரத்னே ஆகியோர் 2-வது இன்னிங்சிலும் அரைசதம் அடித்தனர்.

    குணதிலகா 61 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த டி சில்வா ரன்ஏதும் எடுக்காமல் வெளியேறினார். 3-வது விக்கெட்டுக்கு களம் இறங்கிய குசால் மெண்டிஸ் 18 ரன்னில் வெளியேறினார்.


    குணதிலகா

    4-வது விக்கெட்டுக்கு கருணாரத்னே உடன் ஜோடி சேர்ந்த மேத்யூஸ் 2-வது நாள் முடியும் வரை மேலும் விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டார். இலங்கை அணி 2-வது நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்துள்ளது.

    ஒட்டுமொத்தமாக இலங்கை அணி 365 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. நாளைய 3-வது நாளில் எவ்வளவு பேட்டிங் செய்ய இயலுமோ, அவ்வளவு நேரம் பேட்டிங் செய்யும். சுழற்பந்து வீச்சுக்க சாதகமான இந்த ஆடுகளத்தில் தென்ஆப்பிரிக்கா 300 ரன்களுக்கு மேல் எடுப்பது இயலாத காரியம். இதனால் தென்ஆப்பிரிக்கா ஒயிட்வாஷ் ஆகிறது. #Gunathilaka #Karunaratne
    தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான முதல் டெஸ்டின் 2-வது நாள் ஆட்ட முடிவில் இலங்கை அணி 272 ரன்கள் முன்னிலைப் பெற்று வலுவான நிலையில் உள்ளது. #SLvSA
    இலங்கை - தென்ஆப்பிரிக்கா இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி காலேயில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை கருணாரத்னேயின் (158 அவுட்இல்லை) அபார சதத்தால் 287 ரன்கள் குவித்தது. பின்னர் தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய முதல்நாள் ஆட்ட முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 4 ரன்கள் எடுத்திருந்து.

    இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. டு பிளிசிஸை (49) தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 126 ரன்னில் சுருண்டது. இதனால் இலங்கை அணி முதல் இன்னிங்சில் 161 ரன்கள் முன்னிலைப் பெற்றது. 161 ரன்கள் முன்னிலையுடன் இலங்கை அணி 2-வது இன்னிங்சை தொடங்கியது.

    குணதிலகா, கருணாரத்னே தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். குணதிலகா 17 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். முதல் இன்னிங்சில் சதம் அடித்த கருணாரத்னே 2-வது இன்னிங்சிலும் சிறப்பாக விளையாடினார். அவர் 60 ரன்கள் எடுத்தார். அதன்பின் வந்த டி சில்வா 9 ரன்னிலும், மெண்டிஸ் ரன்ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். 5-வது விக்கெட்டுக்கு மேத்யூஸ் உடன் ஏஆர்எஸ் சில்வா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 2-ம் நாள் ஆட்டம் முடியும் வரை மேலும் விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டது.



    மேத்யூஸ் 14 ரன்னுடனும் சில்வா 10 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். 2-வது நாள் ஆட்ட முடிவில் இலங்கை அணி 4 விக்கெட் இழப்பிற்கு 111 ரன்கள் எடுத்துள்ளது. தற்போது வரை இலங்கை 272 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. இன்னும் மூன்று நாட்கள் இருப்பதால் இலங்கை அணி முடிந்த அளவிற்கு விளையாடிவிட்டு, தென்ஆப்பிரிக்காவை சேஸிங் செய்ய வைக்கும்.

    காலே மைதானத்தில் நான்காவது இன்னிங்சில் 200 ரன்களுக்கு மேல் எடுப்பது இயலாத காரியம். இதனால் இலங்கையின் வெற்றி ஏறக்குறைய உறுதியாகிவிட்டது.
    தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான முதல் டெஸ்டில் கருணாரத்னே சதத்தால் இலங்கை அணி 287 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. #SLvSA #Rabada
    இலங்கை - தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் காலேயில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளம் என்றாலும் தென்ஆப்பிரிக்கா ஸ்டெயின், ரபாடா, பிலாண்டர் ஆகிய மூன்று வேகப்பந்து வீச்சாளருடன் களம் இறங்கியது. இவர்களுடன் மகாராஜ், ஷாம்சி ஆகிய இரண்டு சுழற்பந்து வீச்சாளரும் தென்ஆப்பிரிக்கா அணியில் இடம்பிடித்திருந்தனர்.

    இலங்கை அணியின் குணதிலகே, கருணார்னே ஆகியோர் தொடக்க வீரர்களாக கறங்கினார்கள். குணதிலகே 26 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த டி சில்வா 11 ரன்னிலும், மெண்டிஸ் 24 ரன்னிலும் வெளியேறினார். ரபாடாவின் அச்சுறுத்தலான பந்து வீச்சை எதிர்கொள்ள இலங்கை பேட்ஸ்மேன்கள் திணறினார்கள்.

    அதன்பின் வந்த மேத்யூஸ் 1 ரன்னிலும், ஏஆர்எஸ் சில்வா டக்அவுட்டிலும் வெளியேற, இலங்கை அணி திணறியது. ஆனால், மற்றொரு தொடக்க வீரரான கருணாரத்னே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்து சதம் அடித்தார். அவர் சதம் அடித்தாலும் இலங்கை அணியின் ஸ்கோர் உயர்ந்தபாடில்லை.


    4 விக்கெட் கைப்பற்றிய ரபாடா

    கடைநிலை பேட்ஸ்மேன்களை வைத்துக் கொண்டு ரன்கள் குவிக்க முயற்சி செய்தார். கடைசி விக்கெட்டுக்கு களம் இறங்கிய சண்டகன் 25 ரன்னில ஆட்டமிழக்க இலங்கை அணி முதல் இன்னிங்சில் 78.4 ஓவர்கள் தாக்குப்பிடித்து 287 ரன்னில் ஆல்அவுட் ஆனது. கருணாரத்னே 222 பந்துகள் சந்தித்து 13 பவுண்டரி, 1 சிக்சருடன் 158 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இவர் சண்டகன் உடன் இணைந்து கடைசி விக்கெட்டுக்கு 63 ரன்கள் குவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக காலே ஆடுகளத்தில் வேகப்பந்து வீச்சாளர் ரபாடா நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்தி அசத்தினார். ஷாம்சி 3 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.
    ×