search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செங்கல்பட்டு"

    சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு- அரக்கோணத்துக்கு நேரடி புறநகர் சுற்றுவட்ட ரெயில் சேவை 10 நாட்களில் தொடங்குகிறது.
    சென்னை:

    சென்னை புறநகர் பகுதிகளை சேர்ந்த பயணிகள் செங்கல்பட்டு-அரக்கோணத்துக்கு நேரடி புறநகர் சேவையை தொடங்க வேண்டும் என ரெயில்வே துறைக்கு கோரிக்கை விடப்பட்டது.

    காஞ்சிபுரம், செங்கல்பட்டு, அரக்கோணம், திருமால்பூர் உள்ளிட்ட புறநகரில் இருந்து சென்னைக்கு வருவதற்கு பொதுமக்களுக்கு மின்சார ரெயில்கள் வரப்பிரசாதமாக உள்ளது. சென்னை கடற்கரை- செங்கல்பட்டு, மூர் மார்க்கெட்-அரக்கோணம், கடற்கரை- அரக்கோணம் மார்க்கங்களில் தற்போது மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

    இந்தநிலையில் செங்கல்பட்டில் இருந்து அரக்கோணம் மார்க்கமாக செல்லும் பயணிகள் மூர்மார்க்கெட் அல்லது கடற்கரை, ரெயில் நிலையத்துக்கு வந்து பின்னர் அரக்கோணம் செல்லும் நிலை இருந்து வந்தது. இதனால் கடற்கரை- செங்கல்பட்டு- அரக்கோணம் இடையே சுற்று வட்ட ரெயில் இயக்க வேண்டும் என்று தெற்கு ரெயில்வேக்கு பயணிகள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இதற்கான திட்டத்தை தெற்கு ரெயில்வே நிர்வாகம் தயார் செய்து ரெயில்வே வாரிய ஒப்புதலுக்கு அனுப்பி இருந்தது. அதன் பேரில் ரெயில்வே வாரியம் சுற்று வட்ட ரெயில்கள் இயக்க ஒப்புதல் அளித்தது.

    இதைதொடர்ந்து சென்னை கடற்கரை- திருமால்பூர், திருமால்பூர்- கடற்கரை மின்சார ரெயில்கள் அரக்கோணம் வரை நீட்டிக்கப்பட உள்ளது. இதேபோல் கடற்கரை-காஞ்சிபுரம், காஞ்சிபுரம்- கடற்கரை மின்சார ரெயில்கள் திருமால்பூர் வரை நீட்டிக்கப்படும்.

    தற்போது தக்கோலம்- அரக்கோணம் இடையே ரெயில்பாதை அமைக்கும் பணி நிறைவடைந்து வருகிறது. இன்னும் 10 நாட்களில் சுற்றுவட்ட ரெயில் சேவை தொடங்கப்படுகிறது.

    இதனால் புறநகர் பயணிகள் கடற்கரையில் இருந்து நேரடியாக செங்கல்பட்டு- அரக்கோணத்துக்கு எளிதில் செல்ல முடியும். இதனால் புறநகர் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    செங்கல்பட்டில் அதிமுக தேர்தல் அலுவலகம் தீப்பிடித்து எரிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு, திம்மராஜ குளம், ஜி.எஸ்.டி. சாலையில் பாராளுமன்ற தேர்தலையொட்டி அ.தி.மு.க. தேர்தல் அலுவலகம் கீற்று கொட்டகையால் அமைக்கப்பட்டு இருந்தது.

    இதன் திறப்பு விழாவை வரும் நாட்களில் நடத்த அ.தி.மு.க.வினர் திட்டமிட்டு இருந்தனர்.

    இந்த நிலையில் நேற்று நள்ளிரவு திடீரென அ.தி.மு.க. தேர்தல் அலுவலகம் தீப்பிடித்து எரிந்தது. காற்றின் வேகத்தில் கீற்று கொட்டகை முழுவதும் தீப்பற்றி கரும் புகை ஏற்பட்டது.

    இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் செங்கல்பட்டு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

    தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். எனினும் அங்கிருந்த சேர்கள் மற்றும் பேனர்கள்எரிந்து நாசமானது.

    தீ விபத்துக்கான காரணம் என்ன? என்று தெரிய வில்லை. இதுபற்றி அறிந்ததும் அ.தி.மு.க.வினர் ஏராளமானோர் அங்கு திரண்டனர்.

    டி.எஸ்.பி. கந்தன் மற்றும் போலீசார் தீ விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    இதற்கிடையே அ.தி.மு.க. நகர செயலாளர் செந்தில் குமார் செங்கல்பட்டுபோலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், தேர்தல் அலுவலகத்தை மர்ம கும்பல் தீ வைத்து எரித்து இருப்பதாக கூறி உள்ளார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    செங்கல்பட்டு அருகே விபத்தில் கண்டக்டர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    செங்கல்பட்டு:

    திருச்சியில் இருந்து சென்னை நோக்கி நேற்று இரவு அரசு விரைவு பஸ் புறப்பட்டது. டிரைவர் கஜேந்திரன் பஸ்சை ஓட்டினார்.

    காஞ்சீபுரத்தை அடுத்த அரையம்பாக்கத்தை சேர்ந்த சுதாகர் (வயது 38) கண்டக்டராக இருந்தார். சுமார் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் பஸ்சில் பயணம் செய்தனர்.

    இன்று அதிகாலை 3 மணியளவில் அரசு பஸ் செங்கல்பட்டு அருகே உள்ள ராஜாகுளிபேட்டை பகுதியில் வந்து கொண்டு இருந்தது.

    அப்போது முன்னாள் சென்ற டேங்கர் லாரி மீது திடீரென பஸ் மோதியது. இதில் பஸ்சின் முன்பக்க சீட்டில் இருந்த கண்டக்டர் சுதாகர் படுகாயம் அடைந்தார்.

    அவரை செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் போகும் வழியிலேயே சுதாகர் பரிதாபமாக இறந்தார்.

    இந்த விபத்தில் பஸ்சில் இருந்த மேலும் 6 பயணிகளுக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. விபத்து காரணமாக அப்பகுதியில் சுமார் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இது குறித்து செங்கல்பட்டு தாலுக்கா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    காஞ்சீபுரம் புத்தேரி தெருவை சேர்ந்த கங்காதரன், மகேஷ்வரன், முருகவேல், உமா, நிர்மலா தேவி ஆகியோர் ஒரு காரில் திருச்செந்தூர் சென்றனர்.

    நேற்று அங்கிருந்து 5 பேரும் அதே காரில் காஞ்சீபுரம் திரும்பினார்கள் முருகவேல் காரை ஓட்டினார். இன்று காலை 7 மணியளவில் காஞ்சீபுரம்- வந்தவாசி சாலையில் வந்து கொண்டிருந்தது. மானாம்பதி கூட்டு சாலையில் வந்த போது, அங்கு நின்று கொண்டிருந்த லாரி மீது பயங்கரமாக மோதியது. இதில் காரின் முன் பகுதி லாரியின் கீழே சிக்கிக் கொண்டது.

    இந்த விபத்தில் கார் பலத்த சேதம் அடைந்தது. காரில் வந்த முருகவேல், கங்காதரன், மகேஷ்வரன், உமா, நிர்மலாதேவி ஆகிய 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

    இது குறித்து பெருநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    செங்கல்பட்டு, அரக்கோணம், கும்மிடிப்பூண்டி ஆகிய வழித்தடங்களுக்கு புறநகர் ரெயில்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட உள்ளது. குறிப்பாக கடற்கரை-செங்கல்பட்டு இடையே ரெயில்களின் எண்ணிக்கை மிக அதிகளவு உயர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    சென்னை:

    சென்னையில் புறநகர் பகுதிகளில் இருந்து நகருக்குள் வரும் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தப்படி உள்ளது.

    சென்னை-செங்கல்பட்டு, சென்னை-அரக்கோணம், சென்னை-கும்மிடிப்பூண்டி ஆகிய 3 வழித்தடங்களில் இருந்து புறநகர் பகுதி மக்கள் ரெயில்கள் மூலம் சென்னை வந்து செல்கின்றனர்.

    சென்னை-செங்கல்பட்டு இடையே தினமும் 224 புறநகர் ரெயில் சேவைகள் இயக்கப்படுகின்றன. இதில் சுமார் 5.5 லட்சம் பயணிகள் தினமும் பயணிக்கிறார்கள்.

    அதுபோல சென்னை- அரக்கோணம் இடையே தினமும் 151 புறநகர் ரெயில் சேவைகள் இயக்கப்படுகின்றன. இந்த வழித்தடத்தில் சுமார் 4.5 லட்சம் பேர் வந்து செல்கிறார்கள்.

    சென்னை - கும்மிடிப்பூண்டி இடையே தினமும் 74 புறநகர் ரெயில் சேவை இயக்கப்படுகிறது. இந்த வழித்தடத்தில் சுமார் 1.2 லட்சம் பயணிகள் வந்து செல்கிறார்கள். மொத்தத்தில் தினமும் செங்கல்பட்டு, அரக்கோணம், கும்மிடிப்பூண்டி ஆகிய புறநகர் பகுதிகளில் இருந்து சென்னைக்கு சுமார் 11 லட்சம் பேர் வந்து செல்கிறார்கள்.

    நாளுக்கு நாள் பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பதால் புறநகர் ரெயில் சேவையை அதிகரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டுள்ளது. புறநகருக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் மாற்றங்கள் கொண்டு வர வேண்டும் என்றும் பயணிகள் கூறி வருகிறார்கள்.

    இதையடுத்து கூடுதல் புறநகர் ரெயில் சேவைகளை அறிமுகம் செய்ய தென்னக ரெயில்வே திட்டமிட்டுள்ளது. இதற்கான ரெயில்வே கால அட்டவணை வருகிற 15-ந்தேதி வெளியிடப்பட உள்ளது.

    புதிய கால அட்டவணைப்படி செங்கல்பட்டு, அரக்கோணம், கும்மிடிப்பூண்டி ஆகிய வழித்தடங்களுக்கு புறநகர் ரெயில்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட உள்ளது. குறிப்பாக கடற்கரை-செங்கல்பட்டு இடையே ரெயில்களின் எண்ணிக்கை மிக அதிகளவு உயர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    தற்போது சென்னை சென்ட்ரலில் ஆவடி, திருவள்ளூர் வரை பல்வேறு சேவைகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த புறநகர் ரெயில்சேவையை அரக்கோணம் வரை நீட்டிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    கடந்த ஜனவரி மாதம் பஸ் ஸ்டிரைக் நடந்தபோது புறநகர் ரெயில் சேவை அதிகரிக்கப்பட்டது. அப்போது தென்னக ரெயில்வேக்கு கணிசமான அளவுக்கு வருவாய் கிடைத்தது. எனவே புறநகர் ரெயில் சேவை எண்ணிக்கையை அதிகரிக்க முடிவு செய்துள்ளனர்.

    வருகிற 15-ந்தேதி புதிய கால அட்டவணை வெளியிடப்படும் போது எந்த அளவுக்கு ரெயில் சேவை அதிகரிக்கப்பட்டுள்ளது என்ற முழு விவரம் தெரிய வரும்.
    செங்கல்பட்டு அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் 2 வாலிபர்கள் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    செங்கல்பட்டு, அக். 28-

    செங்கல்பட்டை அடுத்த கரும் பாக்கத்தை சேர்ந்த வர் சூர்யா (வயது 20). முள்ளிப் பாக்கம், புதுநக ரில் வசித்து வந்தவர் பிரதாப் (19). இருவரும் நண்பர்கள்.

    இன்று அதிகாலை 2 பேரும் ஒரு திருமண நிகழ்ச்சி யில் கலந்து கொள்ள ஒரே மோட்டார் சைக்கிளில் செங்கல்பட்டு நோக்கி வந்து கொண்டிருந்தனர்.

    செங்கல்பட்டு அருகே திருப்போரூர் கூட்ரோடு பகுதியில் வந்த போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் தாறு மாறாக ஓடி சாலையோர பனை மரத்தில் பயங்கரமாக மோதியது. இதில் சூர்யா வும், பிரதாப்பும் பலத்த காயம் அடைந்து உயி ருக்கு போராடினர். அவர் களைஅவ்வழியே சென்ற வர்கள் மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு சிகிச்சை பல னின்றி சூர்யாவும், பிரதாப் பும் பரிதாபமாக இறந்த னர். இது குறித்து செங்கல் பட்டு தாலுக்கா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.

    செங்கல்பட்டில் பஸ்சில் இருந்து தவறி விழுந்து பள்ளி மாணவன் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு மறைமலை நரை அடுத்து பனங்காட்டுரை சேர்ந்தவர் புஷ்பராஜ். இவருடைய மகன் ஹேமச்சந்திரன் (14). இவர் செங்கல்பட்டில் உள்ள ஒரு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.

    இன்று காலை தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டுக்கு அரசு பஸ்சில் சென்றார். பள்ளி அருகே சென்றதும் ஓடும் பஸ்சில் இருந்து இறங்கினார்.

    அப்போது மாணவர் ஹேமச்சந்திரன் தவறி கீழே விழுந்தார். இதில் அவரது தலையில் அடிபட்டு பலத்த காயம் ஏற்பட்டது.

    உடனே அவரை செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே பரிதாபமாக உயிழந்தார்.

    இதுகுறித்து செங்கல்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் அதிகபட்சமாக செங்கல்பட்டில் 90 மி.மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று நள்ளிரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. காஞ்சீபுரம் மாவட்டத்தில் அதிகபட்சமாக செங்கல்பட்டில் 90 மி.மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    அதேபோல் உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதூர், காஞ்சீபுரம், திருக்கழுக்குன்றம், மகாபலிபுரம் பகுதிகளிலும் நல்ல மழை பெய்தது. கன மழையால் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கி உள்ளது.

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் பெய்த மழை அளவு (மில்லி மீட்டரில்) வருமாறு:-

    காஞ்சீபுரம் - 47

    ஸ்ரீபெரும்புதூர் - 49.90

    செய்யூர் - 22.30

    திருக்கழுக்குன்றம் - 64.20

    மகாபலிபுரம் - 49.20

    திருப்போரூர் - 31.07

    வாலாஜாபாத் - 14.50

    திருவள்ளூர் மாவட்டதில் நேற்று முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. விடியவிடிய பெய்து வரும் கன மழையால் சாலை முழுவதும் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    திருவள்ளூர் நகரில் எம்ஜிஆர் சிலை, ஜெயா நகர் செல்லும் சாலை, பஜார் வீதி உட்பட பல இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. சில இடங்களில் சாலைகளில் அரிப்பு ஏற்பட்டு குண்டும், குழியுமாக காணப்படுகிறது.கிராமப் பகுதிகளில் உள்ள வயல்வெளிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. தொடர் மழையினால் பொது மக்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர். இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

    மாவட்டத்தில் பதிவான மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:-

    கும்மிடிப்பூண்டி 57 அம்பத்தூர் - 51

    பூந்தமல்லி - 43

    திருவள்ளூர் - 41

    ஆர்.கே.பேட்டை - 15

    மணலி புதுநகர் பகுதியை சேர்ந்தவர் மகேந்திரன். இவருக்கு சொந்தமான 4 மாடுகள் நேற்று இரவு 11 மணிக்கு அதே தெருவில் சென்றது. அப்போது உயர் அழுத்த மின்வயர் திடீரென்று அறுந்து மாடுகள் மீது விழுந்தது. இதில் 4 மாடுகளும் பலியாகின.

    வண்டலூர் அருகே நடைபயிற்சி மேற்கொண்ட வெளிநாட்டு மாணவியை கற்பழிக்க முயன்ற 2 வாலிபர்களை பொதுமக்கள் பிடித்து தர்ம அடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
    செங்கல்பட்டு:

    சென்னை நுங்கம்பாக்கம் லயோலா கல்லூரியில் நைஜீரிய நாட்டை சேர்ந்த 25 வயது இளம்பெண் மேற்படிப்பு படித்து வருகிறார்.

    இவர் வண்டலூர் அருகே உள்ள ஓட்டேரி பகுதியில் தங்கியுள்ளார். நேற்று மாலையில் மாணவி நடைபயிற்சி மேற்கொண்டார்.

    அப்போது அங்குள்ள முட்புதர் நிறைந்த பகுதியில் 2 வாலிபர்கள் மது அருந்திக் கொண்டிருந்தனர். அவர்கள் இருவரும் நைஜீரிய மாணவியை பார்த்ததும் அருகில் சென்று பேச்சு கொடுத்தனர்.

    திடீரென இருவரும் சேர்ந்து அவரது வாயை பொத்தி புதர் மண்டிய பகுதிக்கு தூக்கி சென்று பாலியல் தொல்லை கொடுத்தனர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி கூச்சல் போட்டார். இதனை தொடர்ந்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் திரண்டு வந்து சத்தம் கேட்ட இடத்தை நோக்கி ஓடினர்.

    அப்போது 2 வாலிபர்களும் போதை தலைக்கேறிய நிலையில் மாணவியிடம் தகாத முறையில் நடந்து கற்பழிக்க முயன்றனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொது மக்கள் வாலிபர்களை பிடித்து அடித்து உதைத்து தர்ம அடி கொடுத்தனர். பின்னர் 2 பேரையும் ஓட்டேரி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். ஒருவரது பெயர் தமிழரசன், இன்னொருவரது பெயர் ஜெயவேல் என்பது தெரிய வந்தது. காட்டுமன்னார் கோவிலை சேர்ந்த தமிழரசன், திருவல்லிக்கேணியில் தங்கி இருந்து தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

    ஜெயவேல் ஓட்டேரி பகுதியை சேர்ந்தவர். நண்பரான இவரை பார்ப்பதற்கு நேற்று மாலையில் தமிழரசன் சென்றுள்ளார். அப்போது தான் 2 பேரும் சேர்ந்து மது குடித்துவிட்டு போதையில் கற்பழிப்பு முயற்சியில் ஈடுபட்டது அம்பலமானது.

    2 பேரையும் கைது செய்த போலீசார் பெண்கள் வன்கொமை தடுப்பு சட்டம், கற்பழிக்க முயற்சி செய்தது உள்ளிட்ட 4 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். #Tamilnews
    செங்கல்பட்டு அருகே கான்கிரீட் இடிந்து பள்ளி மாணவி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டை அடுத்த ரெட்டிபாளையம் நேரு தெருவை சேர்ந்தவர் தட்சணாமூர்த்தி. இவரது மனைவி அபிதா, மகன்கள் சரவணன் (14), பிரவீன் (8), மகள் பிரவீனா (11).

    நேற்று இரவு அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தனர். இன்று அதிகாலை திடீரென்று வீட்டின் மேற்கூரை கான்கிரீட் இடிந்து தூங்கி கொண்டிருந்தவர்கள் மீது இடிபாடுகள் விழுந்தது. இதில் பிதா, பள்ளி மாணவி பிரவீனா, சிறுவன் பிரவீன் காயம் அடைந்தனர். இதில் பலத்தகாயம் அடைந்த சிறுமி பிரவீனா சம்பவ இடத்திலேயே இறந்தாள்.

    அபிதா, பிரவீன் ஆகியோரை செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். சரவணன் விழுப்புரத்தில் உள்ள பாட்டி வீட்டுக்கு சென்றதால் காயமின்றி தப்பினான்.

    இதுகுறித்து பாலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர். #Tamilnews

    செங்கல்பட்டு அருகே எரித்து கொல்லப்பட்டவர் கேரள கல்லூரி மாணவியா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    செங்கல்பட்டு:

    கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் தந்தை மற்றும் சகோதரனுடன் வசித்துவந்தவர் ஜேஸ்னா மரியா ஜேம்ஸ் (வயது 20). இவர் கேரள மாநிலம் காஞ்சிரப்பள்ளியில் உள்ள தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்துவந்தார். கடந்த மார்ச் மாதம் 22-ந் தேதி அவர் மாயமானார்.

    இதுகுறித்து பத்தனம்திட்டா போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜேஸ்னாவை தேடிவந்தனர். இந்த வழக்கில் எந்த ஒரு முன்னேற்றமும் ஏற்படவில்லை. காணாமல்போன கல்லூரி மாணவி ஜோஸ்னா குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ.2 லட்சம் பரிசு வழங்கப்படும் என கேரள அரசு அறிவித்தது.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் காஞ்சீபுரம் மாவட்டம் செங்கல்பட்டை அடுத்த பழவேலி பகுதியில் எரிந்து கரிக்கட்டையாக கிடந்த பெண்ணின் உடலை தாலுகா போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். அவர் எரித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்று போலீசார் தீவிரமாக விசாரித்து வந்தனர்.

    கேரள மாநிலத்தில் காணாமல்போன ஜேஸ்னாவின் வயது, உயரம், எடை உடலில் குறிப்பிட்ட சில அடையாளங்கள் கொல்லப்பட்ட பெண்ணின் உடலிலும் காணப்பட்டது. இதனால் சந்தேகத்தின் அடிப்படையில் காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானி, கேரள போலீசாரிடம் இந்த கொலை தொடர்பாக தகவல் தெரிவித்தார்.

    அதன் அடிப்படையில் கேரள போலீசார் காஞ்சீபுரம் மாவட்டத்திற்கு விசாரணை மேற்கொள்ள வருகின்றனர். அவர்கள் வந்து அந்த உடலை பார்வையிட்ட பின்னரே அது மாணவி ஜோஸ்னாவா என்பது தெரியவரும்.

    ×