search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 113362"

    • தொடர் போராட்டங்களைத் தொடர்ந்து, இரவு நேர இணைப்பு ெரயில் கடந்த 2011-ம் ஆண்டு முதல் இயக்கப்பட்டது.
    • பொதுச் செயலர் என்.சுப்பிரமணியனுக்கு சேலம் கோட்ட ெரயில்வே அலுவலகம் கடந்த 23-ம் தேதி பதில் அளித்துள்ளது.

    கோவை,

    தூத்துக்குடி-கோவை இடையே ெரயில் இயக்க வேண்டும் என பல்வேறு அமைப்புகள், வர்த்தக சங்கங்கள், அரசியல் கட்சியினர் நடத்திய தொடர் போராட்டங்களைத் தொடர்ந்து, இரவு நேர இணைப்பு ெரயில் கடந்த 2011-ம் ஆண்டு முதல் இயக்கப்பட்டது.

    ெகாரோனாவுக்கு முன்பு வரை தூத்துக்குடியில் இருந்து 7 பெட்டிகளுடன் புறப்படும் இந்த ெரயில், வாஞ்சி மணியாச்சி ெரயில்நிலையம் வந்தடைந்து, அங்கிருந்து நாகர்கோவில்- கோவை எக்ஸ்பிரஸ் ெரயிலுடன் இணைத்து இயக்கப்பட்டு வந்தது.ெகாரோனா தொற்று பரவல் காரணமாக 2020-ல் நாடு முழுவதும் பல்வேறு ெரயில் சேவைகள் நிறுத்தப்பட்டன. அதில், இந்த ெரயில் சேவையும் நிறுத்தப்பட்டது.

    ஆனால், நிலைமை சீரானபிறகு இந்த ெரயில் மீண்டும் இயக்கப்படவில்லை. எனவே, இந்த ெரயிலை மீண்டும் இயக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், போத்தனூர் ெரயில் பயணிகள் நலச் சங்கத்தின் பொதுச் செயலர் என்.சுப்பிரமணியனுக்கு சேலம் கோட்ட ெரயில்வே அலுவலகம் கடந்த 23-ம் தேதி பதில் அளித்துள்ளது.

    அந்த பதிலில், மேட்டுப்பாளையம்-தூத்துக்குடி இடையே வாரம் மும்முறை ெரயில் இயக்க ெரயில்வே வாரியத்துக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக, ெரயில் பயணிகள் நலச் சங்கத்தினர் கூறியதாவது: துறைமுக நகரமான தூத்துக்குடியில் இருந்து நிறைய பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

    கோவை, திருப்பூர், பொள்ளாட்சி, மேட்டுப்பாளையத்தில் இருந்து தான் பல பொருட்கள் ஏற்றுமதிக்காக அனுப்பி வைக்கப்படுகின்றன. எனவே, சரக்குகளை ஏற்றிச்செல்ல இந்த ெரயில் பயனுள்ளதாக இருக்கும், கடல் மீனுக்கான சந்தை வாய்ப்பு இங்கு உள்ளது.

    தூத்துக்குடியில் இருந்து இரவில் மீன்களை ெரயிலில் ஏற்றி அனுப்பினால், காலையில் அவை இங்கு வந்து சேர்ந்து விடும். இதனால் வியாபாரிகள் பயன்பெறுவர். நீலகிரியில் விளையும் பல்வேறு காய்கறிகளை தூத்துக்குடிக்கு கொண்டு செல்லவும் இந்த ெரயில் பயன்படும். பயணிகளைப் பொருத்தவரை, திருச்செந்தூர், பழநி முருகன் கோவில்கள் மற்றும் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சென்று வரமுடியும்.

    தென் மாவட்ட மக்கள் ஆயிரக்கணக்கானோர் கோவையில் தங்கி பணிபுரிகின்றனர். அவர்கள், தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று வர பஸ்களையே அதிகம் நம்பியிருக்க வேண்டியுள்ளது. எனவே, அவர்களுக்கும் இந்த ெரயில் பயன்தரும். மேட்டுப்பாளையத்துக்கு நேரடியாக இந்த ெரயிலை இயக்கும்போது, தென் மாவட்ட மக்கள் சுற்றுலாவுக்காக நீலகிரி வந்து செல்ல முடியும்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • 17 பார்கள் புதுப்பிக்காமல் டாஸ்மாக் நிர்வாகத்திற்கு பணம் கட்டவில்லை
    • போலீஸ் சோதனையில் 15 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்தனர்.

    மேட்டுப்பாளையம்,

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை உள்ளிட்ட பகுதிகளில் அரசு டாஸ்மாக் கடைகளில் டாஸ்மாக் பாரும் செயல்பட்டு வருகிறது.

    இந்நிலையில் இந்த டாஸ்மாக் பார்கள் ஒப்பந்த அடிப்படையில் தனியாருக்கு விடபட்ட நிலையில் காரமடை, சிறுமுகை, மேட்டுப்பாளையம் என 17 பார்கள் செயல்பட்டு வந்தது.

    இந்நிலையில் பாரை ஒப்பந்தம் எடுத்தவர்கள் சிலர் முறையாக புதுப்பிக்காமல் டாஸ்மாக் நிர்வாகத்திற்கு பணம் கட்டவில்லை என கூறப்படுகிறது.

    கடந்த 25-ந் தேதி மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகையில் உரிய பணம் செலுத்தாமல் செயல்பட்ட 10 பார்களுக்கு டாஸ்மாக் நிர்வாகத்தின் சார்பில் சீல் வைக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று காலை முதல் வெள்ளியங்காடு பகுதியில் சீல் வைக்கபட்ட டாஸ்மாக் பாரில் உள்ளவர்கள் கள்ளத்தனமாக டாஸ்மாக் பாரின் அருகே உள்ள ஒரு தோட்டத்தில் வைத்து கூடுதல் விலைக்கு மதுபாட்டில்களை விற்பனை செய்தனர்.

    இது தொடர்பாக காரமடை போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கு மது விற்பனை செய்தவர்களிடம் இருந்து 15 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் அவர்களை இதுபோன்று விற்பனையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து விட்டு சென்றனர்.

    • இந்த கோவிலில் ஆண்டு தோறும் தேர்த்திருவிழா 3 நாட்கள் நடைபெறுவது வழக்கம்.
    • 3-ம் நாள் தேரோட்டம் இன்று (சனிக்கிழமை) மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது.

    பொள்ளாச்சி,

    கிணத்துக்கடவு அருகே சூலக்கல் மாரியம்மன் கோவிலில் 3-ம் நாள் தேரோட்டம் இன்று மாலை நடக்கிறது.

    கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள சூலக்கல்லில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் தேர்த்திருவிழா 3 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் இந்த ஆண்டுக்கான தேர்த்திருவிழா கடந்த 5-ந் தேதி திருத்தேர் முகூர்த்தக்காய் உடைக்கும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. நேற்று முன்தினம் முதல் நாள் தேரோட்டம் நடந்தது. இதையடுத்து நேற்று மாலை 2-ம் நாள் தேரோட்டம் நடைபெற்றது.

    தேரோட்டத்தை சிரவை ஆதீனம் குமரகுருபரசாமிகள் முன்னிலையில் புரவிபாளையம் ஜமீன் குடும்பத்தினர், எம்.எல்.ஏ.க்கள் பொள்ளாச்சி ஜெயராமன், செ.தாமோ தரன் ஆகியோர் வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர்.

    வாண வேடிக்கைகள் முழங்க விநாயகர் சப்பரம் முன்னால் செல்ல பின்னால் சூலக்கல் மாரியம்மன் தேர் பக்தர் வெள்ளத்தில் தவழ்ந்து வந்தது.

    3-ம் நாள் தேரோட்டம் இன்று (சனிக்கிழமை) மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது. நாளை (ஞாயிற்றுக்கிழமை) மதியம் 12 மணிக்கு சூலக்கல் மாரியம்மனுக்கு மகா அபிஷேகத்துடன் அன்னதானம் நடைபெறுகிறது.  

    • 3 பேரும் அதிகாலை 2 மணி வரை பேசிக் கொண்டிருந்தனர்.
    • மாயமான முத்தம்மாளை போலீசார் தேடி வருகின்றனர்.

    பொள்ளாச்சி,

    கோவை ஆனைமலை அருகே தர்மராஜ் காலனியை சேர்ந்தவர் கமலம் (வயது 70). இவரது மகள் செல்வி (47). செல்வி மாசாணி அம்மன் கோவில் அருகே உள்ள பொம்மை கடையில் வேலை பார்த்து வருகிறார்.

    இந்த நிலையில் செல்விக்கும், அவரது கணவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து செல்வி கடந்த சில மாதங்களாக தனது தாயுடன் வசித்து வருகிறார். இவர்களது வீட்டில் கோவையை சேர்ந்த முத்தம்மாள் (50) என்பவர் வாடகைக்கு குடியிருந்து வந்தார். இவர் ஓட்டலில் வேலை செய்து வருகிறார்.

    கமலம் மற்றும் அவரது மகள் செல்வி ஆகியோர் இரவில் மொட்டை மாடியில் படுத்து தூங்குவதை வழக்கமாக வைத்திருந்தனர். நேற்று இவர்களது வீட்டிற்கு முத்தமாள் வந்தார்.

    அப்போது அவர் நானும், இன்று உங்களுடன் மொட்டை மாடியில் படுத்து கொள்கிறேன் என தெரிவிக்கவே 3 பேரும் மொட்டை மாடிக்கு சென்றனர்.அங்கு நேரம் போவது தெரியாமலும், தூங்காமலும் வெகுநேரமாக பேசி கொண்டே இருந்தனர். இவர்கள் அதிகாலை 2 மணி வரை பேசிக் கொண்டிருந்தனர்.

    அப்போது முத்தம்மாள் நான் டீ போட்டு எடுத்து வருகிறேன் என கூறி விட்டு சென்று மீண்டும் டீயுடன் வந்தார்.

    அதனை கமலம் மற்றும் அவரது மகளுக்கு கொடுத்தார். பின்னர் 3 பேரும் சேர்ந்து டீ குடித்து விட்டு தூங்கி விட்டனர்.

    இந்த நிலையில் இன்று காலை கமலம் வீட்டிற்கு அருகே வசிக்கும் முத்துராஜா என்பவர் தேங்காய்களை போடுவதற்கு வந்தார். அப்போது வீட்டில் யாரும் இல்லை.

    இதையடுத்து மொட்டை மாடியில் சென்று பார்த்தார்.அப்போது செல்வியும், கமல மும் வாயில் நுரை தள்ளியபடி கிடந்தனர். இதை பார்த்ததும் அதிர்ச்சியான அவர் சம்பவம் குறித்து, செல்வியின் கணவருக்கு தகவல் தெரிவித்தார்.

    அவர் உடனடியாக இங்கு வந்து 2 பேரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதற்கிடையே கமலம், செல்வி ஆகியோர் கழுத்து மற்றும் வீட்டில் வைத்திருந்த 24 பவுன் நகைகள் மாயமாகி உள்ளதாக செல்வியின் கணவர் ஆனைமலை போலீசில் புகார் அளித்தார்.

    இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், இவர்களது வீட்டில் இருந்த முத்தம்மாள் திடீரென மாயமாகி விட்டார். இதனால் போலீசாருக்கு அவர் மீது சந்தேகம் எழுந்துள்ளது.

    மேலும் இவர் கொடுத்த டீயை குடித்த பின்பு தான் தாயும், மகளும் மயங்கி உள்ளனர். இதனால் அவர் டீயில் ஏதாவது மயக்க மாத்திரை அல்லது வேறு ஏதாவது கலந்து கொடுத்தாரா? என்பது குறித்தும் விசாரித்து வருகின்றனர்.

    • 18 தேர்வு மையங்களுக்கு 682 அறை கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
    • தேர்வு மையங்களுக்கு போலீசார் பாதுகாப்பு அளிக்க உள்ளனர்.

    கோவை,

    மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வு நாளை நடக்கிறது. இத்தேர்வு கோவை மாவட்டத்தில் 18 தேர்வு மையங்களில் நடைபெற உள்ளது. இத்தேர்வினை 7,742 நபர்கள் எழுதுகின்றனர். இத்தேர்வு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதுடன் மிகுந்த கவனத்துடனும் வெளிப்படை தன்மையுடனும் நடத்தப்படுகிறது.

    இத்தேர்வினை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணைய மாவட்ட ஒருங்கிணைப்பு மேற்பார்வையாளர் மற்றும் கோவை மாவட்ட கலெக்டர் தலைமையில் துணை கலெக்டர் நிலையில் 7 உதவி ஒருங்கிணைப்பு மேற்பார்வையாளர்கள், வட்டாட்சியர் நிலையில் 18 தேர்வு மையங்களுக்கு தலா ஒரு தேர்வு மைய ஆய்வு அலுவலர்கள், துணை வட்டாட்சியர் நிலையில் 39 தேர்வு மைய உதவி கண்காணிப்பாளர்கள், 341 அறைகண்காணிப்பாளர்கள் மாவட்ட நிர்வாகத்தின் மூலமும், மேலும் 341 அறை கண்காணிப்பாளர்கள் தேர்வு மைய கண்காணிப்பாளர்கள் மூலமும் மொத்தம் 682 அறை கண்காணிப்பாளர்கள் நியமனம் செய்யப் பட்டுள்ளனர்.

    மேலும், தேர்வை பார்வையிடும் வகையில் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் துணை இயக்குநர் நிலையில் அலுவலர் ஒருவரும் மற்றும் மாநில அரசின் சிறப்பு கண்காணிப்பாளர் ஒருவரும் தேர்வின் செயல்பாடுகளை ஆய்வு செய்ய நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    காவல் துறையினரால் தேர்வு மையங்களுக்கு பாதுகாப்பு வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேர்வு நடை பெறும் அனைத்து தேர்வு மையங்களிலும் செல்போன் ஜாமர்கள் நிறுவப்பட்டுள்ளன. தேர்வு மையத்திற்கு தமிழ்நாடு மின்சார வாரியத்தால் தடையில்லா மின்சார வசதி செய்யப்பட்டுள்ளது.

    மேலும், தேர்வு மையங்களுக்கு போதுமான அளவில் உக்கடம், கவுண் டம்பாளைம், சிங்காநல்லூர், சூலூர் மற்றும் காந்திபுரம் போன்ற புறநகர் பேருந்து நிலையங்களிலிருந்தும் வெளி மாநில மற்றும் மாவட்ட தேர்வர்களுக்கும் பேருந்து வசதிகள் மாவட்ட அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இத்தேர்வு எழுதும் தேர்வர்கள் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் வழங்கப்பட்ட நுழைவுச் சீட்டுடன் வர வேண்டும் என மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார்.

    • இறந்த வாலிபர் நீல நிற சட்டை அணிந்து இருந்தார்.
    • சம்பவம் குறித்து போத்தனூர் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    கோவை ,

    கோவை போத்தனூரில் ரெயில் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த ரெயில் நிலையத்திற்கு இன்று காலை பயணிகள் வந்திருந்தனர்.

    அப்போது பயணிகள் நடைமேடை அருகே உள்ள மின் கம்பத்தில் வாலிபர் ஒருவர் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார்.இதை பார்த்ததும் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.உடனடியாக சம்பவம் குறித்து போத்தனூர் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவல் அறிந்ததும் ரெயில்வே இன்ஸ்பெக்டர் பிரியா சாய்ஸ்ரீ தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இறந்து கிடந்த வாலிபரின் உடலை பார்வையிட்டனர்.

    அப்போது இறந்த வாலிபருக்கு 45 வயது இருக்கும். அவர் நீல நிற சட்டை அணிந்து இருந்தார். இதையடுத்து போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்தும், அவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதாவது காரணமா என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 1433 இடங்களுக்கு 34 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப் பட்டுள்ளன.
    • நாளை மறுநாள் முதல் கலந்தாய்வு தொடங்குகிறது

    கோவை,

    கோவை அரசு கலைக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நாளை மறுநாள் (29-ந் தேதி) தொடங்குகிறது.

    பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியானதை அடுத்து மாநிலம் முழுவதும் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான இணை யவழி விண்ணப்பப்பதிவு தொடங்கியது. கோவை அரசு கலைக் கல்லூரியில் 23 இளநிலை பாடப்பிரிவுகளில் மொத்தமுள்ள 1433 இடங்களுக்கு 34 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

    இதையடுத்து தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி கலந்தாய்வு நடை முறை நாளை மறுநாள் (29-ந் தேதி) தொடங்குகிறது. அன்றைய தினம் சிறப்பு இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது. ஜூன் 1-ந் தேதி வணிகப்பிரிவு பாடங்களுக்கான கலந்தாய்வு நடக்கிறது.

    ஜூன் 2-ந் தேதி கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம், கணிதம், அறிவியல் பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வும், ஜூன் 3 -ந் தேதி பொருளாதாரம், வரலாறு, பொது நிர்வாகம் உள்ளிட்ட பாடங்களுக்கும் கலந்தாய்வு நடக்கிறது. இறுதியாக ஜூன் 5 -ந் தேதி தமிழ், ஆங்கில இலக்கிய பாடப் பிரிவுகளுக்கான கலந்தாய்வு நடக்கிறது.மாணவர் சேர்க்கை நடைமுறைகள் தொடர்பான மேலும் விவரங்களுக்கு கல்லூரியின் இணையதளத்தைக் காணலாம் என்று முதல்வர் உலகி தெரிவித்துள்ளார்.

    • திமுக அரசு மக்கள் பணம் ரூ.3ஆயிரம் கோடியை மோசடி செய்துள்ளனர்.
    • அத்திக்கடவு அவினாசி திட்டத்தை 95 சதவீதம் பணி முடித்தும் இன்னும் தொடங்கவில்லை.

    கோவை,

    கள்ளச்சாராயம் சாவு, போதைப்பொருள் நடமாட்டம், சட்டம் ஒழுங்கு சீர்கேடு போன்ற பிரச்சினைகளுக்காக தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் மாவட்ட தலைநகரங்களில் வருகிற 29-ந் ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

    கோவையில் 3 இடங்களில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதுகுறித்து அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட தலைமை அலுவலகத்தில் இன்று நடந்தது.

    கூட்டத்துக்கு முன்னாள் அமைச்சர் எஸ்பி.வேலுமணி தலைமை தாங்கி பேசினார். அவர் கூறியதாவது:-

    அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆணைக்கிணங்க வருகிற 29-ந் தேதி கோவையில் வடக்கு மாவட்டம் சார்பில் மேட்டுப்பாளையம் பஸ் நிலையத்திலும், மாநகர் மாவட்டம் சார்பில் செஞ்சிலுவை சங்கம் முன்பும், புறநகர் தெற்கு மாவட்டம் சார்பில் பொள்ளாச்சியிலும் என 3 இடங்களில் 9 மணிக்கு கண்டனஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைவரும் திரளாக கலந்து கொள்ள வேண்டும்

    திமுக அரசு மக்கள் பணம் ரூ.3ஆயிரம் கோடியை மோசடி செய்துள்ளனர். மக்கள் விரோத திமுக ஆட்சியை பதவி விலக வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

    இந்தியாவில் பல முதல்வர்கள் உள்ளனர். முதல்வர்களிலேயே எதுவும் தெரியாமல் இருக்கும் முதல்வர் தமிழக முதல்வர் தான்.முன்பு முதலீடுகளை ஈர்ப்பதற்காக துபாய் சென்றதாக தெரிவித்தனர். ஆனால் அப்போது எத்தனை முதலீடு வந்தது. ஒன்றும் வரவில்லை. இப்போது முதலீடுகளை ஈர்ப்பதற்காக சிங்கப்பூருக்கு சென்றுள்ளார். எத்தனை முதலீடு வருகிறது என பார்ப்போம்.

    4 அரை ஆண்டு காலம் ஆட்சியில் இருந்தபோது மக்களுக்காக எண்ணற்ற திட்டங்கள் கொண்டு வந்தது எடப்பாடியார் மட்டுமே. அத்திக்கடவு அவினாசி திட்டத்தை 95 சதவீதம் பணி முடித்தும் இன்னும் தொடங்கவில்லை. இப்போது ஸ்டாலின் தொடங்கும் திட்டங்கள் அனைத்தும் எடப்பாடி யாரால் கொண்டு வரப்ப ட்டது.

    தமிழகத்தில் கள்ளச்சாராயம், திருட்டு, மது விற்பனை, கஞ்சா, போதை பொருள் உள்ளிட்டவை சர்வசாதாரணமாக நடை பெறுகிறது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்கெட்டு உள்ளது.

    நாடாளுமன்ற தேர்தலில் எனக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. கண்டிப்பாக நாம் வெற்றி பெறுவோம்.இப்போது தேர்தல் வந்தாலும் சட்டமன்ற தேர்தலில் எடப்பாடியார் வெற்றி பெறுவார்.அதிமுக ஆட்சியில் காவல்துறை சுதந்திரமாக செயல்பட்டது. இன்று திமுக ஆட்சியில் காவல்துறை அவர்களுக்கு சாதகமாகவே செயல்படுகிறது.இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செ.ம.வேலுச்சாமி, எம்.எல்.ஏ.க்கள் பி.ஆர்.ஜி அருண்குமார், கே.ஆர்.ஜெயராம் ஏ.கே.செல்வராஜ், தாமோதரன், சூலூர் கந்தசாமி, அமுல் கந்தசாமி, புறநகர் தெற்கு மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செய லாளர் என்ஜினீயர் சந்திரசேகர் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்

    • சிறுதானிய பயிர்களுக்கான பன்னாட்டு கருத்தரங்கம் கோவையில் நடைபெற்றது.
    • உழவர் உற்பத்தியாளர்கள் கம்பெனி உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

    வடவள்ளி,

    கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய பயிர்களுக்கான பன்னாட்டு கருத்தரங்கம் கடந்த 24-ந் தேதியில் இருந்து இன்று வரை நடைபெற்றது.

    கருத்தரங்கின் ஒரு அங்கமாக உழவர் உற்பத்தியாளர்கள் மற்றும் கம்பெயின் செயல்பாடுகளை எவ்வாறு சிறப்பாக செயல்பட செய்வது என்பதை பற்றிய கலந்துரையாடல் நிகழ்ச்சி இன்று நடந்தது.

    இதில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பங்கேற்றார். இதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து உழவர் உற்பத்தியாளர்கள் மற்றும் கம்பெனி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    கருத்தரங்கில் கவர்னர் ஆர்.என்.ரவி, உழவர் உற்பத்தியாளர்கள் மற்றும் கம்பெனி உறுப்பினர்களுடன் கலந்துரையாடினார். பின்னர் அவர் பேசியதாவது:-

    இந்திய நாடு 50 சதவீதத்திற்கு மேல் வேளாண்மை தொழிலை சார்ந்தே உள்ளது. அப்படி பட்ட நாட்டில் வேளாண் பொருளாதாரத்தை உயர்த்தினால் மட்டுமே நம் நாட்டை வளம் பெறும் நாடாக மாற்ற முடியும்.

    உழவர்களின் வருமானத்தை இரட்டிப்பு செய்ய மத்திய அரசு 7 அம்ச உத்திகள் மற்றும் வேளாண்மை 4.0 கொள்கைகளை செயல்படுத்தி வருகிறது.

    உழவர்களின் சமூக பொருளாதார மேம்பாட்டை உறுதி செய்ய மத்திய அரசு தற்போது உழவர் உற்பத்தியாளர்கள் கம்பெனிகளை நாடு முழுவதும் உழவர்களின் துணையோடு உருவாக்கி வருகிறது. இந்த அமைப்பை விவசாய பெருமக்கள் நல்வழியில் பயன்படுத்தி சந்தை சார்ந்த வேளாண் உத்திகளை கடைபிடித்து உழவர்களின் பொருளாதாரத்தை உயர்த்த வேண்டும்.

    உழவர் உற்பத்தியாளர்கள் கம்பெனியை எவ்வாறு வெற்றிகரமான அமைப்பாக செயல்படுத்த அதற்கான வெற்றியின் உத்திகளை பற்றி உழவர்களிடையே கூறினார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தொடர்ந்து கவர்னர் முன்னிலையில் 10 உழவர் உற்பத்தியாளர்கள் கம்பெனிகளுடன் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது. பின்னர் கவர்னர் சிறுதானிய தொழில்நுட்பங்கள் மற்றும் மதிப்பூட்டப்ட்ட பொருட்களின் கருத்துக்காட்சி மற்றும் விற்பனை அரங்கத்தை பார்வையிட்டார்.

    இதில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் வெ.கீதாலட்சுமி, ஆராய்ச்சி இயக்குநர் ரவீந்திரன், முன்னோடி உழவர்கள், உழவர்கள் உற்பத்தியாளர்கள் கம்பெனியின் உறுப்பினர்கள், தொழில்முனைவோர்கள், விஞ்ஞானிகள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    • போலீஸ் நிலையம் அமைப்பதற்கான வேலைகள் கடந்த 3 மாதங்களாக நடைபெற்று வந்தது.
    • காவல் நிலையத்திற்கு ஒரு இன்ஸ்பெக்டர், 2 சப்-இன்ஸ்பெக்டர் உட்பட 27 போலீசார் நியமிக்கப்பட்டிருந்தனர்.

     கவுண்டம்பாளையம்,

    கோவை மாநகரில் பெருகி வரும் மக்கள் தொகையை கருத்தில் கொண்டு போலீஸ் நிலையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.

    அதனை ஏற்று கோவை மாநகரில் கவுண்டம்பாளையம், சுந்தராபுரம், கரும்புக்கடை உள்ளிட்ட பகுதிகளில் 3 போலீஸ் நிலையங்கள் அமைக்க தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

    அதன் அடிப்படையில் கவுண்டம்பாளையம் மேம்பாலம் அருகே போலீஸ் நிலையம் அமைப்பதற்கான வேலைகள் கடந்த 3 மாதங்களாக நடைபெற்று வந்தது. இந்த காவல் நிலையத்திற்கு ஒரு இன்ஸ்பெக்டர், 2 சப்-இன்ஸ்பெக்டர் உட்பட 27 போலீசார் நியமிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் இன்று இந்த புதிய காவல் நிலையத்தை டி.ஜி.பி சைலேந்திரபாபு ரிப்பன் வெட்டியும், குத்து விளக்கு ஏற்றியும் தொடங்கி வைத்தார்.

    தொடர்ந்து அங்குள்ள காவல் துறையினரிடம் இந்த பகுதியை முழுவதுமாக ஆய்வு செய்து சட்டம் ஒழுங்கு பிரச்சனை வராமல் பாதுகாக்க வேண்டும் என அறிவுரை கூறினார்.

    இதேபோல் சிட்கோ பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சுந்தராபுரம் போலீஸ் நிலையம், குனியமுத்தூரை அடுத்த சுண்ணாம்பு காலவாயில் அமைந்துள்ள கரும்புக்கடை போலீஸ் நிலையம் மற்றும் போத்தனூர் காவல் நிலைய வளாகத்தில் கோவை தெற்கு மகளிர் போலீஸ் நிலையத்தையும் டி.ஜி.பி.சைலேந்திரபாபு திறந்து வைத்தார்.

    இதில் மாவட்ட கலெக்டர் கிராந்திரகுமார் பாடி, மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், மாவட்ட எஸ்.பி பத்ரிநாராயணன், துணை கமிஷனர்கள் சந்தீஷ், மதிவாணன், சந்தீப், சுகாசினி, உதவி ஆணையாளர் பசீனா பிவி, இன்ஸ்பெக்டர்கள் ராஜேஷ், தமிழரசு, ரத்தினகுமார், நடசேன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மர்ம நபர் ஒருவர் கூகுள் மேப் குறித்து ரிவ்யூ செய்தால் அதிக வருமானம் கிடைக்கும் என்றார்.
    • புவனேஸ்வரி கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.

    கோவை,

    கோவை கணபதி அருகே உள்ள லட்சுமி கார்டனை சேர்ந்தவர் சதாசிவம்.

    இவரது மனைவி புவனேஸ்வரி (வயது 32). ஐ. டி. ஊழியர். இவரது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு சில நாட்களுக்கு முன்பு மெசேஜ் வந்தது அதில் பகுதிநேர வேலை இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனை அடுத்து புவனேஸ்வரி அதில் உள்ள லிங்கை கிளிக் செய்து டெலிகிராம் குழுவில் இணைந்தார்.

    பின்னர் அவரை தொடர்பு கொண்ட மர்ம நபர் ஒருவர் கூகுள் மேப் குறித்து ரிவ்யூ செய்தால் அதிக வருமானம் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறினார். மேலும் அவர் பிட்காயின் முதலீடு செய்தால் அதிகம் சம்பாதிக்கலாம் என்றும் கூறினார்.

    இதனை உண்மையான நம்பிய புவனேஸ்வரி முதற்கட்டமாக முதற்கட்டமாக அவர் கூறிய வங்கி கணக்கில் அதற்குரிய வங்கி கணக்கில் ரூ.2 ஆயிரம் பணம் செலுத்தினார்.

    இதனை அடுத்து அவருக்கு லாபமாக ரூ.2800 பணம் கிடைத்தது. மேலும் ஆன்லைன் மூலமாக அவர்கள் அனுப்பிய பணிகளை செய்து கொடுத்தார்.

    அப்போது அந்த நபர் கூறிய வங்கி கணக்கில் வெவ்வேறு காலகட்ட ங்களில் ரூ.8.97 லட்சம் பணம் அனுப்பினார்.

    ஆனால் அவர் கூறியபடி ஆனால் லாபத் தொகை கிடைக்கவில்லை. மர்ம நபர் மோசடி செய்தது தெரியவந்தது. இதுகுறித்து புவனேஸ்வரி கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். புகார் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மேட்டுப்பாளையம் வட்டத்தில் அரசு டாஸ்மாக் கடைகள் 16 உள்ளது.
    • பார் நடத்துவதற்கான தொகையை கட்டாமல் அதன் உரிமையாளர்கள் இழுத்தடிப்பு செய்து வந்ததாக தெரிகிறது.

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை பகுதிகளில் கடந்த ஓராண்டாக டாஸ்மாக் மதுக்கடையில் பார் ஏலம் எடுத்தவர்கள் அரசுக்கு செலுத்த வேண்டிய தொகையை செலுத்தாததால் பார்களுக்கு மாவட்ட டாஸ்மாக் அதிகாரிகள் சீல் வைத்தனர்.

    மேட்டுப்பாளையம் வட்டத்தில் அரசு டாஸ்மாக் கடைகள் 16 உள்ளது. இந்த கடைகள் அனைத்திலும் அரசு சார்பில் மது அருந்துவதற்கும் அதற்கு தின்பண்டங்களை விற்பனை செய்வதற்கும் பார்கள் உள்ளன.

    இதில் மேட்டுப்பாளையம் போலீஸ் நிலைய எல்லையில் ஓடந்துறை 1 கடை, உருளைக்கிழங்கு மண்டி 10, பஸ் நிலையம் 1, அபிராமி பஸ் நிறுத்தம் 1, சி.டி.சி பகுதியில் 1, பூ மார்க்கெட் சந்தில் 3 கடைகள் என 8 கடைகள் உள்ளன.

    சிறுமுகை போலீஸ் நிலைய எல்லையில் ஜடையம்பாளையம் காய்கறி மண்டி பகுதியில் 1, பெத்திக்குட்டையில் 1, வெள்ளிப்பாளையத்தில் 2 என 4 கடைகள். காரமடை போலீஸ் நிலைய எல்லையில் காரமடை, திம்மம்பாளையம், கணுவாய்ப்பாளையம், தோலம்பாளையம், வெள்ளியங்காடு என 5 கடைகள் உள்ளன.

    இதில் கடந்த ஓராண்டாக மாவட்ட டாஸ்மாக் நிர்வாகத்திற்கு பார் நடத்துவதற்கான தொகையை கட்டாமல் அதன் உரிமையாளர்கள் இழுத்தடிப்பு செய்து வந்ததாக தெரிகிறது. இதையடுத்து பார்களுக்கு சீல் வைக்க மாவட்ட டாஸ்மாக் அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

    இதையடுத்து நேற்று மேட்டுப்பாளையத்தில் பூ மார்க்கெட் சந்தில் 2 கடைகள், ஓடந்துறை, சிறுமு கையில் வெள்ளிப்பா ளையத்தில் 2 கடைகள், பெத்திகுட்டை, காரமடையில் , தோலம்பாளையம், வெள்ளியங்காடு, கணுவாய்ப்பாளையம் என மொத்தம் 10 கடைகளுக்கு மாவட்ட டாஸ்மாக் அதிகாரிகள் சீல் வைத்தனர்.

    ×