search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 113362"

    • ஸ்ருதி விவாகரத்து கேட்டு நோட்டீஸ் அனுப்பியதால் ரகு வாழ்க்கையில் விரக்தி அடைந்து விஷத்தை குடித்தார்.
    • இது குறித்து வடவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை,

    கோவை வடவள்ளி அருகே உள்ள வி.என்.ஆர். நகரை சேர்ந்தவர் ரகு (வயது 39). டிரைவர். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கும் மைசூரை சேர்ந்த ஸ்ருதி என்பவருக்கும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் நடந்தது.

    திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகியும் இவர்களுக்கு குழந்தை இல்லை. இதன் காரணமாக கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற் பட்டது. இதனால் ஸ்ருதி தனது கணவரை பிரிந்து மைசூரில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். ரகு மைசூருக்கு சென்று தனது மனைவியை அடிக்கடி சென்று பார்த்து வந்தார்.

    இந்தநிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு ஸ்ருதி விவாகரத்து கேட்டு தனது கணவருக்கு நோட்டீஸ் அனுப்பினார். இதனால் ரகு கடந்த சில நாட்களாக மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார்.

    சம்பவத்தன்று வீட்டில் இருந்த அவர் மனைவி விவாகரத்து கேட்டு நோட்டீஸ் அனுப்பியதால் வாழ்க்கையில் விரக்தி அடைந்து விஷத்தை குடித்தார். சிறிது நேரத்தில் மயங்கி விழுந்து இறந்தார்.

    இதனை பார்த்து அவரது தந்தை அதிர்ச்சியடைந்தார். பின்னர் அவர் இதுகுறித்து வடவள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி னர். பின்னர் போலீசார் தற்கொலை செய்து கொண்ட ரகுவின் உடலை மீட்டு பிரேத பரிசோத னைக்கு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து வடவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மரக்கன்றுகள் நடுவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கூட்டம் நடந்தது.
    • கெம்மாரம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் நிர்மலா பொன்னுச்சாமி முன்னிலை வகித்தார்.

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையம் கெம்மாரம்பாளையம் ஊராட்சி கண்டியூர் கிராமத்தில் தமிழக அரசின் வேளாண்மை துறை சார்பில் வேளாண்மை விரிவாக்க துணை இயக்கம், வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை, விரிவாக்க சீரமைப்பு திட்டம் இணைந்து விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடையே உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடுவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் உழவர் தின விழா மற்றும் விவசாயிகளுடான ஆலோசனை கூட்டம் நடந்தது.

    நிகழ்ச்சியில் ஏ.கே.செல்வராஜ் எம்.எல்.ஏ கலந்து கொண்டார். காரமடை வேளாண்மை உதவி இயக்குனர் பாக்கியலட்சுமி வரவேற்றார். கெம்மாரம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் நிர்மலா பொன்னுச்சாமி முன்னிலை வகித்தார்.

    கோவை வேளாண்மை இணை இயக்குனர் முத்துலட்சுமி, வேளாண்மை துணை இயக்குனர் வெங்கடாசலம், மேட்டுப்பாளையம் வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் வேளாண் காடுகள் வணிக மன்றத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் முத்துபெருமாள், காரமடை வேளாண்மை அறிவியல் நிலையத்தின் தொழில்நுட்ப வல்லுநர் சுரேஷ்குமார் ஆகியோர் பேசினர்.

    நிகழ்ச்சியில் காரமடை தோட்டக்கலை உதவி இயக்குனர் சுசீந்திரா, என்ஜீனியரிங் துறை உதவி பொறியாளர் ஹசீனா, கால்நடை உதவி மருத்துவர் வருண், உதவி வேளாண்மை அலுவலர் ராமகிருஷ்ணன், பட்டு வளர்ச்சித்துறை இளநிலை ஆய்வாளர் சிவசங்கர், உதவி வேளாண்மை அலுவலர் சிவராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் விவசாயிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் சரிதா நன்றி கூறினார்.

    • அபிலாஷ் காதல் தோல்வியால் வாழ்க்கையில் விரக்தி அடைந்து வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • இதுகுறித்து சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை,

    கோவை கணபதி அருகே மணியகாரன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் அபிலாஷ் (வயது26). எம்.எஸ்.சி. பட்டதாரியான இவர் வேலை தேடிக்கொண்டு இருந்தார்.

    இந்நிலையில் அபிலாஷ்க்கு அந்த பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி நேரில் சந்தித்தும், செல்போனில் பேசியும் தங்களது காதலை வளர்த்து வந்தனர்.

    இந்தநிலையில் 2 பேருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் இளம்பெண் அபிலாஷிடம் பேசுவதையும், பழகுவதையும் தவிர்த்தார். அவர் பலமுறை நேரில் சந்தித்து பேச முயன்றார். ஆனால் இளம்பெண் பேச மறுத்து விட்டார். இதனால் அபிலாஷ் கடந்த சில நாட்களாக மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார்.

    சம்பவத்தன்று அபிலாஷ் காதல் தோல்வியால் வாழ்க்கையில் விரக்தி அடைந்து வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் இது குறித்து சரவணம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    • 26-க்கும் மேற்பட்ட விளம்பரப் பலகைகள், பிளக்ஸ் பேனர்கள் அனுமதியின்றி வைக்கப்பட்டு இருந்தன.
    • விளம்பரப் பலகை, பிளக்ஸ பேனர் வைக்க நகராட்சி ஆணையரிடம் முறையான அனுமதி பெற வேண்டும்.

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையம் காரமடை நகராட்சிக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும், குறிப்பாக கோவை-மேட்டுப்பாளையம் சாலையில் 26-க்கும் மேற்பட்ட விளம்பரப் பலகைகள், பிளக்ஸ் பேனர்கள் அனுமதியின்றி வைக்கப்பட்டு இருந்தன. இதை நகராட்சி பணியாளர்கள் அகற்றினர்.

    இதுகுறித்து காரமடை நகராட்சி ஆணையர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-

    நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம் 2023-ன்படி நகராட்சி எல்லைப் பகுதியில் விளம்பரப் பலகை, பிளக்ஸ பேனர் வைக்க நகராட்சி ஆணையரிடம் முறையான அனுமதி பெற வேண்டும். தவறும்பட்சத்தில் அபராதம் மற்றும் சிறைதண்டனை விதிக்க சட்டம் உள்ளது.

    மேலும் விளம்பர பலகைகளால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. இதற்கு சம்பந்தப்பட்ட இட உரிமையாளர் மற்றும் விளம்பர உரிமையாளரே முழு பொறுப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    எனவே காரமடை நகராட்சி பகுதிகளில் நகராட்சி ஆணையாளர் அனுமதியின்றி விளம்பரப் பலகைகள், பிளக்ஸ் பேனர்கள் வைக்கக் கூடாது. அரசு, தனியார் சுவர்களில் சுவரொட்டிகள் ஒட்டக் கூடாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கல்வீரம்பாளையத்தில் 9 கடைகள் மூடப்பட்டன.
    • மளிகை கடைகளில் ஆய்வு செய்து, 10 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான சிகரெட் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

    கோவை,

    கோவையில், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு அருகில் 100 மீட்டர் தூரத்துக்குள் சிகரெட், பீடி, குட்கா உள்ளிட்ட பொருட்கள் விற்கும் பெட்டிக்கடைகள் இருந்தால் அவற்றை உடனடியாக அகற்ற கலெக்டர் கிராந்திகுமார் பாடி உத்தரவிட்டிருக்கிறார்.

    கோவையில் மாணவர்கள் போதை பழக்கத்துக்கு அடிமையாகி வருவது அதிகரித்திருப்பது சமீபத்தில் எடுத்த ஆய்வில் தெரிய வந்தது. இதையடுத்து, மாவட்ட அளவில் ஒவ்வொரு பள்ளிக்கும் அருகில் 100 மீட்டர் தூரத்துக்குள் பெட்டிக்கடைகள் இருக்கிறதா என கணக்கெடுக்கப்பட்டது.

    துடியலூர், தொண்டாமுத்தூர், மதுக்கரை, ஆலாந்துறை, வடவள்ளி, கிணத்துக்கடவு, காருண்யா நகர், க.க.சாவடி, கருமத்தம் பட்டி, செட்டிபாளையம், கோவில்பாளையம், சுல்தான்பேட்டை, சூலூர், பொள்ளாச்சி, கோமங்கலம் என அனைத்து போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு அருகாமையில் உள்ள பெட்டிக்கடைகள் பட்டியலிடப்பட்டன. மொத்தம், 256 இடங்களில் பெட்டிக்கடைகள் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

    இவற்றை அந்தந்த உள்ளாட்சி அமைப்பினர் நேரில் ஆய்வு செய்து போதை பொருட்கள் விற்கப்படுகின்றதா என்பதை உறுதி செய்ய வேண்டும். அவ்வாறு விற்பது உறுதியானால் உடனடியாக பெட்டிக்கடைகளை அகற்ற வேண்டும் அல்லது மூடி சீல் வைக்க வேண்டுமென கலெக்டர் கிராந்திகுமார் உத்தரவிட்டுள்ளார்.

    இதன்படி மாநகராட்சி மேற்கு மண்டலத்துக்கு உட்பட்ட கல்வீரம்பாளையம் மற்றும் வடவள்ளி பகுதிகளில், உதவி நகரமைப்பு அலுவலர் பாபு தலைமையிலான குழு நேற்று கள ஆய்வு செய்தது. கல்வீரம்பாளையத்தில் 9 கடைகள் மூடப்பட்டன. இதில் இரு பெட்டிக்கடைகள் அகற்றப்பட்டன. மளிகை கடைகளில் ஆய்வு செய்து, 10 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான சிகரெட் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

    இதேபோல் மற்ற உள்ளாட்சி அமைப்புகளும் குழுக்கள் அமைத்து பெட்டிக்கடைகளில் ஆய்வு நடத்த அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

    • சேகர் மோட்டார் சைக்கிளில் வெள்ளிக்குப்பம்பாளையம் சாலையில் சென்றார்.
    • விபத்தில், சேகர் மற்றும் நவீன்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

    மேட்டுப்பாளையம்,

    கோவை அன்னூர் அருகே காரனூரை சேர்ந்தவர் சேகர்(32).

    இவர் நேற்றிரவு தனது மோட்டார் சைக்கிளில் வெள்ளிக்கு ப்பம்பாளையம் சாலை யில் சென்றார்.

    அப்போது எதிரே சிறுமுகை லிங்காபுரத்தை சேர்ந்த நவீன்குமார்(30) மற்றும் அவரது நண்பர் ஹரிஹரன்(30) ஆகியோர் மற்றொரு மோட்டார் சைக்கி ளில் வெள்ளிக்குப்பம் பாளையம் நோக்கி வந்தனர். அதே சாலையில் கருப்பசாமி(36) என்பவரும் மோட்டார் சைக்கிளில் வந்தார்.

    அப்போது வெள்ளிகுப்ப ம்பாளையம் சாலை பகுதியில் வந்த போது எதிர்பாராதவிதமாக 3 மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதிக்கொ ண்டன. இந்த விபத்தில் 3 மோட்டார் சைக்கிளில் சென்ற 4 பேரும் தூக்கி சாலையில் வீசப்பட்டனர்.

    இந்த விபத்தில், சேகர் மற்றும் நவீன்குமார் ஆகி யோர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.நவீன்குமா ருடன் வந்த ஹரிஹரனுக்கு பலத்த காயமும், கருப்ப சாமி லேசான காயமும் ஏற்பட்டது. இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து சிறுமுைக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து இறந்த 2 பேரின் உடல்களை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.

    மேலும் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிய ஹரியை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்க ப்பட்டு வருகிறது.மேலும் லேசான காயமடைந்த கருப்பசாமி சிறுமுகையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து சிறு முகை போலீசார் விசா ரணை நடத்தி வருகிறார்கள்.

    பொதுமக்களுக்கு மரக்கன்றுகளும் வழங்கப்பட்டன.

    வடவள்ளி,

    உலக சுற்றுச்சூழல் தினததை முன்னிட்டு கோவை வேளாண்மை பல்கலைக்கழகத்தில் இன்று மனித சங்கிலி நிகழ்ச்சி நடந்தது. தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக பதிவாளர் தமிழ்வேந்தன் மற்றும் சுற்றுச்சூழல் அறிவியல் துறை தலைவர் பேராசிரியர் மகேஸ்வரி ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் பேராசிரியர்கள், மாணவர்கள் என ஏராளமானோர் பங்கேற்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நிகழ்வின் ஒரு பகுதியாக பொதுமக்களுக்கு மரக்கன்றுகளும் வழங்கப்பட்டன.

    • பாஸ்கர் சாமிதாஸ் கோவை சுந்தராபுரத்தில் போதகராக உள்ளார்.
    • சாலையோரம் நின்ற சரக்கு ஆட்டோ மீது மோதி தலை குப்புற கவிழ்ந்தது.

    கவுண்டம்பாளையம்

    தூத்துக்குடியை சேர்ந்தவர் பாஸ்கர் சாமிதாஸ் (வயது37). இவர் கோவை சுந்தராபுரத்தில் போதகராக உள்ளார்.

    இவர் சம்பவத்தன்று தனது காரில் கோவை-துடியலூர் சாலையில், மேட்டுப்பாளையம் நோக்கி சென்றார்.கார் துடியலூர் அடுத்துள்ள என்.ஜி.ஜி.ஓ. காலனி கேட் அருகே வந்த போது கார் கட்டுப்பாட்டை இழந்து அங்கு சாலையோரம் நின்று கொண்டிருந்த சரக்கு ஆட்டோவின் மீது மோதி சாலையில் தலை குப்புற கவிழ்ந்தது.

    மேலும் அங்கு நடந்து சென்ற நரசிம்ம நாயக்கன்பாளையத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளி சக்திவேல் (40) என்பவர் மீதும் மோதியது.

    இதில் அவர் படுகாயம் அடைந்தார். மேலும் காரை ஓட்டி வந்த பாஸ்கர் சாமிதாஸ் வலது கையில் மணிக்கட்டில் முறிவு ஏற்பட்டது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த துடியலூர் போலீசார் 2 பேரையும் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் கார் விபத்து நடைபெற்ற காட்சி அருகில் இருந்த பேக்கரி கடையில் உள்ள சி.சி.டி.வி கேமராவில் பதிவாகியு ள்ளது. இந்த காட்சி தற்போது சமூக வலை தளங்களில் வெளியாகி வைராலாகி வருகிறது.

    • வீட்டு அறையில் ராமலட்சுமி தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார்.
    • இது தொடர்பாக வடவள்ளி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வடவள்ளி,

    தூத்துக்குடியை சேர்ந்தவர் முத்துராஜ். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ராமலட்சுமி என்பவருக்கும் கடந்த 2013-ம் ஆண்டு திருமணம் நடந்தது.

    திருமணத்திற்கு பிறகு கணவன், மனைவி 2 பேரும் மும்பைக்கு சென்று வசித்து வந்தனர். இவர்களுக்கு 9 வயதில் மகன் உள்ளார்.

    இந்த நிலையில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு முத்துராஜ் தனது மனைவி மற்றும் மகனுடன் கோவைக்கு வந்தார்.

    கோவை வடவள்ளி வி.என்.ஆர் நகரில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கினர். ராமலட்சுமி கோவையில் உள்ள ஆஸ்பத்திரியில் நர்சாக வேலைக்கு சேர்ந்து பணியாற்றி வந்தார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் உள்ள அறையில் ராமலட்சுமி தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார். இதனை பார்த்த அவரது கணவர் அதிர்ச்சியாகி கதறி சத்தம் போட்டார்.

    சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து அவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்ற போது அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்தது.

    இதுகுறித்து வடவள்ளி போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து விசாரணை நடத்தினர். அவரது கணவரிடம் விசாரணை நடத்தியபோது, சம்பவத்தன்று காலை எனது மனைவியிடம் ஏ.டி.எம்.மில் பணம் எடுத்து வருவதாக கூறிவிட்டு வெளியில் சென்றேன். பின்னர் வந்து பார்த்த போது தூக்கில் தொங்கி கொண்டிருந்தாகவும், அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரிவித்தார்.

    இதற்கிடையே ராமலட்சுமியின் தந்தை தனது மகளின் சாவில் மர்மம் இருப்பதாகவும், முத்துராஜ் தனது மகளை அடித்து கொன்று விட்டதாகவும் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

    கணவர் தனது மனைவி தற்கொலை செய்து கொண்டதாக கூறுகிறார். ஆனால் கழுத்தில் அதற்கான தடயங்கள் இல்லை. இதனால் நர்சு சாவில் மர்மமாக உள்ளது. இது தொடர்பாக வடவள்ளி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • 30-க்கும் மேற்பட்டோர் சத்தி சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
    • மேட்டுப்பாளையம் -சிறுமுகை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    மேட்டுப்பாளையம்,

    கோவை மாவட்டம் பெள்ளேபாளையம் ஊராட்சி பட்டக்காரனூர் கிராமத்தில் அனிதா என்பவருக்கு சொந்தமான விவசாய நிலம் உள்ளது. இவரது விவசாய நிலம் அமைந்துள்ள பகுதி அருகே ஊராட்சி சாலை அமைந்துள்ளது.

    இந்த சாலை வழியாக தங்களது தோட்டங்களுக்கு செல்ல அனிதா மற்றும் அவரது குடும்பத்தினர் பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இவர்களது விவசாய தோட்டத்திற்கு செல்லும் சாலையை அருகில் உள்ள தனிநபர் ஒருவர் அது தன்னுடைய இடம் என கூறி அந்த வழியாக தங்களை செல்ல அனுமதிப்பது இல்லை என கூறப்பட்டுள்ளது.

    இதுகுறித்து பல முறை ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் கூறியும் நடவடிக்கை எடுக்காததால் அனிதா மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் 30-க்கும் மேற்பட்டோர் மேட்டுப்பாளையம் தாலுகா அலுவலகம் முன்பு சத்தி சாலையில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் மேட்டுப்பாளையம்-சிறுமுகை சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த மேட்டுப்பாளையம் போலீசார் மற்றும் வருவாய் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். பேச்சு வார்த்தையில் இரு தரப்பு ஆவணங்கள் சரிபார்த்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தை தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    இதனால் மேட்டுப்பாளையம் -சிறுமுகை சாலையில் அரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • செல்போனில் தொடர்பு கொண்ட மர்ம நபர் ஆன்லைன் மூலம் அதிக லாபம் சம்பாதிக்கலாம் என்றார்.
    • ஏமாற்றப்பட்டதை உணர்ந்த டோமினிக், கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்

    கோவை,

    கோவை உப்பிலிபாளையம் பகுதியை சேர்ந்தவர் டோமினிக் (வயது 22). இவரது செல்போனுக்கு கடந்த மாதம் 9-ந் தேதி வாட்ஸ்-அப் எண்ணுக்கு ஆன்லைன் மூலம் வேலை செய்வது குறித்து குறுஞ்செய்தி வந்தது.

    இதையடுத்து அவரை செல்போனில் தொடர்பு கொண்ட மர்ம நபர், நாங்கள் கொடுக்கும் வேலைகளை ஆன்லைன் மூலம் செய்து கொடுத்தால் அதிக லாபம் சம்பாதிக்கலாம், அதற்கு முதலீடு செய்ய வேண்டும் என கூறி அதற்கான வழிமுறைகளை தெரிவித்தார்.

    இதனை தொடர்ந்து சிறிது, சிறிதாக டோமினிக், அந்த மர்ம நபர் கூறிய வங்கி கணக்கிற்கு ரூ.12 லட்சத்து 98 ஆயிரம் செலுத்தினார். ஆனால் அதன் பிறகு அவருக்கு கமிஷன் தொகை எதுவும் வரவில்லை. மேலும் அவருக்கு ஏற்கனவே வந்த கமிஷன் தொகை மற்றும் முதலீடு செய்த பணத்தை ஆன்லைன் மூலம் திரும்ப தனது கணக்கிற்கு வரவு வைக்க முடியவில்லை.

    இதையடுத்து அவரை செல்போனில் தொடர்பு கொண்ட மர்ம நபர் தொடர்ந்து பணம் செலுத்துமாறு கேட்டார். ஆனால் அவரால் பணம் செலுத்த முடியவில்லை. மேலும், அவர் குழுவில் இருந்து நீக்கப்பட்டார்.

    இதையடுத்து அந்த நபரை தொடர்பு கொள்ள முயன்றபோது, அவரால் முடியவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர், இது குறித்து கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் அருண் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை மாநகரில் ஆன்லைன் முதலீட்டில் அதிக லாபம் கிடைக்கும் என்ற ஆசையில் பணத்தை இழந்து வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் கூறும்போது, பொதுமக்கள் ஆன்லைன் மூலம் முதலீடு செய்யும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அடையாளம் தெரியாத நபர்களின் வழிகாட்டுதலின்படி ஆன்லைனில் முதலீடு செய்வதை தவிர்க்க வேண்டும் என்றனர்.

    • இளம்பெண்ணின் காதலன், தனது காதலியின் சகோதரர் மோட்டார் சைக்கிளை பஞ்சராக்கினார்.
    • இதுகுறித்து பெற்றோர் சூலூர் போலீசில் புகார் அளித்தனர்.

    சூலூர்,

    சேலத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் சூலூரில் தங்கி வேலை பார்த்து வருகிறார்.

    இவர் பள்ளியில் படித்த போது, அதே ஊரை சேர்ந்த ஒரு வாலிபரை காதலித்து வந்ததார். இதையறிந்த அவரது பெற்றோர் தங்களது பெண்ணை கோவையில் வேலைக்கு சேர்த்து விட்டனர். ஆனாலும் அவர் தனது காதலனுடன் பேசி வந்ததாக தெரிகிறது. பணியில் சேர்ந்து 6 மாதங்கள் ஆன நிலையில் வீட்டிற்கு செல்ல இளம்பெண் முடிவு செய்தார்.

    இதனால் பெற்றோரை தொடர்பு கொண்டு தான் ஊருக்கு வர விரும்புவதாக அவர் தெரிவித்தார். அதற்கு பெற்றோர், நீ தனியாக வர வேண்டாம், அண்ணனை அங்கு அனுப்பி வைக்கிறோம், அவனுடன் நீ ஊருக்கு வா என தெரிவித்தனர்.

    அதன்படி அந்த பெண்ணின் சகோதரர் இங்கு வந்தார்.

    அதேசமயம் இளம்பெண் தனது காதலனுக்கும் போன் செய்து அழைத்துள்ளார். அதன்படி இளம்பெண்ணின் காதலனும் அங்கு வந்தார். காதலன் அருகே உள்ள கடையில் நின்று கொண்டிருந்தார்.

    இளம்பெண்ணின் சகோதரர், தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு, தங்கையை அழைக்க சென்றார். அப்போது அங்கு நின்றிருந்த இளம்பெண்ணின் காதலன் அந்த மோட்டார் சைக்கிளை பஞ்சராக்கினார்.

    அப்பாவியான சகோதரர், தனது தங்கையுடன் வெளியில் வந்த போது, மோட்டார் சைக்கிள் பஞ்சராகி இருந்தது. இதனால் அதிர்ச்சியான அவர் தங்கையை அழைத்து கொண்டு மோட்டார் சைக்கிளை அருகே உள்ள மெக்கானிக் கடைக்கு செல்வதற்காக தள்ளிக்கொண்டு சென்றார்.

    அப்போது இளம்பெண், அங்கு ஏற்கனவே தயாராக இருந்த தனது காதலன் வந்த மோட்டார் சைக்கிளில் ஏறி மின்னல் வேகத்தில் சென்று விட்டார்.

    இதனை சற்றும் எதிர்பாராத இளம்பெண்ணின் சகோதரர் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நின்றார். உடனே இதுகுறித்து தனது பெற்றோருக்கு புகார் ெகாடுத்தார்.

    அதன் பேரில் அவர்கள் விரைந்து வந்து பெற்றோர் சூலூர் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அண்ணனுக்கு டிமிக்கி கொடுத்து விட்டு காதலனுடன் மாயமான இளம்பெண்ணை தேடி வருகிறார்கள்.

    ×