search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 113362"

    • தனிப்படை போலீசார் பெங்களூருக்கு சென்று தேடுதல் வேட்டை நடத்தினர்.
    • 4 பேரையும் போலீசார் பெங்களூரில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    கோவை,

    கோவை நகரில் ரவுடி கும்பலுக்குள் நடந்த மோதலில் சத்திய பாண்டி என்பவர் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டார். கோர்ட்டு அருகே கோகுல் என்பவர் அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து ரவுடி கும்பல்களின் அட்டகாசத்தை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. காமராஜர்புரம் கவுதம் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். சில ரவுடிகள் கோர்ட்டில் சரண் அடைந்துள்ளனர்.

    போலீசார் தேடுதல் வேட்டையை தொடர்ந்து ரவுடி கும்பல் வெளிமாநிலங்களுக்கு சென்று பதுங்கி உள்ளது. இதனையடுத்து அவர்களை பிடிப்பதற்கு கோவையிலிருந்து போலீஸ் உதவி கமிஷனர் கணேஷ் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் தலைமையிலான தனிப்படை போலீசார் பெங்களூருக்கு சென்று தேடுதல் வேட்டை நடத்தினர்.

    அப்போது பெங்களூரில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் 4 பேர் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்று ஒவ்வொரு அறையாக சோதனை செய்தனர். அப்போது கோவையை சேர்ந்த குரங்கு ஸ்ரீராம் கொலை வழக்கில் தொடர்புடைய சுஜிமோகன் என்பவர் அங்கே நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அவர் போலீசாரை கண்டதும் ஓட்டம் பிடித்தார். அப்போது அவர் வைத்திருந்த செல்போனில் வீடியோ எடுத்துக் கொண்டே ஓடினார். அந்த வீடியோவில் எனது கை, கால்கள் நன்றாக உள்ளது. ஆனால் போலீசார் இன்று என்னை பிடித்து விடுவார்கள் என வீடியோ பதிவிட்டார்.

    தொடர்ந்து போலீசார் அவரை விரட்டி சென்று பிடித்தனர்.

    இதையடுத்து மற்ற 3 பேரும் அங்கு இருப்பதை அறிந்த போலீசார் அவர்களை பிடிக்க முயற்சி செய்தபோது அவர்களும் ஓட முயற்சி செய்தனர்.

    இதனையடுத்து போலீசார் 4 கிலோ மீட்டர் தூரம் வரை அவர்களை விரட்டிச் சென்று பிடித்தனர். அவர்கள் 3 பேரும் கோவை ரவுடிகள் கும்பலை சேர்ந்த புள்ளி பிரவீன், பிரசாந்த் மற்றும் அமர்நாத் என தெரியவந்தது.

    இதனை அடுத்து கைதான 4 பேரையும் போலீசார் பெங்களூரில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பின்னர் அவர்களை கோவை அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.  

    • வெளியூர் செல்வதை நோட்டமிட்ட மர்மநபர்கள் வீட்டிற்குள் நுழைந்தனர்.
    • பேரூர் டி.எஸ்.பி ராஜபாண்டியன் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார்.

    வடவள்ளி,

    கோவை வடவள்ளி தொண்டாமுத்தூர் சாலையில் உள்ள சக்தி நகரை சேர்ந்தவர் கண்ணன். இவருக்கு திருமணமாகி விட்டது.

    கண்ணன் கேரள மாநிலம் பாலக்காடு மாநிலத்தில் வருமான வரித்துறை துணை கமிஷனராக பணியாற்றி வருகிறார்.

    நேற்று காலை கண்ணன் தனது குடும்பத்தினருடன் சென்னைக்கு சென்று விட்டார். இன்று காலை கண்ணனின் வீடு திறந்து கிடப்பதை அருகே வசித்து வருவர்கள் பார்த்தனர். சந்தேகம் அடைந்த அவர்கள் சம்பவம் குறித்து உடனடியாக கண்ணனுக்கு தகவல் கொடுத்தனர்.

    இதை கேட்டதும் அதிர்ச்சியான கண்ணன், சம்பவம் குறித்து வடவள்ளி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்தததும் வடவள்ளி இன்ஸ்பெக்டர் லெனின் அப்பாதுரை தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

    பின்னர் வீட்டிற்குள் சென்று பார்த்த போது, அங்கு பீரோ திறந்து கிடந்தது. மேலும் அதில் வைக்கப்பட்டிருந்த 70 பவுன் நகைகளும் மாயமாகி இருந்தன. இவர்கள் வெளியூர் செல்வதை நோட்டமிட்ட மர்மநபர்கள் வீட்டிற்குள் நுழைந்து பீரோவை திறந்து அதில் இருந்த நகைகளை கொள்ளையடித்து சென்றதும் போலீசின் விசாரணையில் கண்டுபிடிக்க ப்பட்டது.

    இதையடுத்து போலீசார் வீடு முழுவதும் சோதனை மேற்கொண்டனர். அப்போது வீட்டில் மிளகாய் பொடி தூவப்பட்டு இருந்தது. கொள்ளையன் தான் மாட்டிக்கொள்ளாமல் இருக்க இதனை தூவி சென்றது தெரியவந்தது.

    தொடர்ந்து போலீசார் அந்த வீட்டில் உள்ள கண்காணிப்பு காமிராவில் ஏதாவது காட்சிகள் பதிவாகி இருக்கிறதா என்பதை ஆய்வு செய்ய சென்றபோது, அங்கு அதற்கன சர்வரும் திருடப்பட்டு இருந்தது. இதையடுத்து போலீசார் அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு காமிராவில் பதிவாகி இருக்கும் காட்சிகளை ஆய்வு செய்து, அதில் கொள்ளையன் உருவம் பதிவாகி இருக்கிறதா என்பதை பார்த்து வருகின்றனர்.

    மேலும் தடயவியல் நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு, வீட்டில் உள்ள தடயங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றனர். மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது. வீட்டில் இருந்து சிறிது தூரம் ஓடிய நாய் யாரையும் கவ்வி பிடிக்க வில்லை. இதற்கிடையே சம்பவம் பற்றி அறிந்ததும் பேரூர் டி.எஸ்.பி ராஜபாண்டியன் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார்.

    இதுகுறித்து வடவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து 30 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

    வருமான வரித்துறை அதிகாரி வீட்டில் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • சகாயமேரிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
    • துடியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    கவுண்டம்பாளையம்.

    கோவை துடியலூர் முத்துநகர் 5-வது வீதியை சேர்ந்தவர் அந்தோணிசாமி. பெயின்டர்.

    இவரது மனைவி சகாயமேரி (52). தனியார் பள்ளி ஒன்றில் உதவியாளராக பணிபுரிந்து வந்தார். இவர்களுக்கு 3 பெண்கள் உள்ளனர். இவர்கள் அைனவருக்கும் திருமணம் ஆகிவிட்டது.

    சம்பவத்தன்று அந்தோணிசாமி தனது மனைவி சகாயமேரியுடன் மோட்டார் சைக்கிளில் வெளியில் சென்றார். இவர்களது மோட்டார் சைக்கிள் மேட்டுப்பாளையம் சாலை விசுவநாதபுரம் பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த காரும், மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. இதில் மோட்டார் சைக்கிளின் பின்புறம் அமர்ந்திருந்த சகாயமேரி தூக்கி வீசப்பட்டு சாலையில் விழுந்தார்.

    இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. வலியால் துடித்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு அருகே உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் சகாயமேரி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து துடியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • ஓட்டுநர்களுக்கு பணி பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
    • 25-க்கும் மேற்பட்ட கோரிக்கைகளை முன்வைத்து கோஷங்களை எழுப்பினர்.

    சூலூர்,

    சூலூர் அருகே நீலாம்பூரில் எல் அண்ட் டி புறவழிச்சாலையில் தமிழ்நாடு அனைத்து வாகன ஓட்டுநர் சங்க பாதுகாப்பு பேரமைப்பு, சமூக நீதி அனைத்து வாகன ஓட்டுநர் தொழிலாளர் தொழிற்சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஓட்டுநர்களுக்கு பணி பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஒரு சுங்கச்சாவடியை கடக்கும் பொழுதும் அங்கு காவல்துறை மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள் ஒரு வாகனத்திற்கு இவ்வளவு என நிர்ணயித்து லஞ்சத் தொகை கேட்கின்றனர்.

    இந்த லஞ்ச நடவடிக்கையை ஒழிக்க வேண்டும். நீலம்பூர் எல்என்டி புறவழி சாலையை உடனடியாக விரிவாக்கம் செய்திட வேண்டும் என்பன உள்பட 25-க்கும் மேற்பட்ட கோரிக்கைகளை முன்வைத்து கோஷங்களை எழுப்பினர்.ஆர்ப்பாட்டத்தில், சமூக நீதி தொழிலாளர் தொழிற்சங்கத்தை சேர்ந்த நந்தகுமார், ஓட்டுநர் உரிமைக்குரல் நுகர்வோர் மற்றும் தொழிலாளர் நலச் சங்கத்தின் கோவை மாவட்ட தலைவர் சரவணன் உள்பட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    • சிறுமியின் தாய் துடியலூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
    • போக்சோ சட்டத்தில் சிறுமியின் பெரியப்பா கைது செய்யப்பட்டார்.

    கோவை,

    கோவை அருகே உள்ள கிராம பகுதியைச் சேர்ந்தவர் 15 வயது சிறுமி. இவர் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். பள்ளி விடுமுறை நாள் என்பதால் இவர் தனது பெரியப்பா வீட்டில் தங்கியிருந்தார்.

    52 வயதான பெரியப்பாவுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர், தனியார் மில்லில் சூப்பர்வைசராக பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று 15 வயது சிறுமி வீட்டில் தனியாக இருந்தார். அப்போது வீட்டுக்கு வந்த சிறுமியின் பெரியப்பா திடீரென சிறுமியிடம் தவறாக நடந்து கொண்டார். சிறுமி அவருக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

    ஆனால் அவர் தனது தம்பி மகள் என்றும் பார்க்காமல் பாலியல் தொல்லை கொடுத்தார். இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்ட அவர் சிறுமிக்கு பலமுறை பாலியல் தொல்லை கொடுத்து வந்தார். பின்னர் சிறுமியிடம், நடந்ததை யாரிடமும் சொல்ல கூடாது என மிரட்டி அங்கிருந்து சென்றார். இதனால் பயந்து போன சிறுமி யாரிடமும் சொல்லாமல் இருந்து வந்தார். சம்பவத்தன்று சிறுமி அவரது வீட்டிற்கு சென்றார்.

    அங்கு அவரது தாயிடம் நடந்தவற்றை கூறி கதறி அழுதார். அதைகேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாய் துடியலூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    இதையடுத்து போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறுமியின் பெரியப்பாவை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • 2 பெண்கள் அந்த வாலிபரிடம் எங்களிடம் அழகான இளம் பெண்கள் உள்ளனர் என தெரிவித்தனர்.
    • 4 இளம்பெண்கள் மீட்கப்பட்டு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

    கோவை,

    கோவை பாப்பநாயக்கன்பாளையம் ராமசாமி லே-அவுட் ரோடு வழியாக வாலிபர் ஒருவர் நடந்து சென்றார். அப்போது அங்கு நின்றிருந்த 2 பெண்கள் அந்த வாலிபரிடம் எங்களிடம் அழகான இளம் பெண்கள் உள்ளனர். பணம் கொடுத்தால் நீங்கள் உல்லாசம் அனுபவிக்கலாம். போலீஸ் தொந்தரவு இருக்காது என்றனர்.

    இதைகேட்டு அதிர்ச்சி அடைந்த அந்த வாலிபர் இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதணை நடத்தினர். அப்போது அங்கு இருந்த 2 பெண்களையும் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து 4 இளம்பெண்களை வைத்து விபசாரம் நடத்தி வந்தது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விபசார புரோக்கர்களான சூலூரை சேர்ந்த நிர்மலா (வயது 49), திருப்பூர் அருகே சோமனூரை சேர்ந்த சப்னா என்ற சத்யா (30) ஆகிய 2 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இவர்கள் மீது ஆர்.எஸ்.புரம் போலீஸ் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது என குறிப்பிட த்தக்கது.

    பின்னர் அங்கிருந்த 4 இளம்பெண்களை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

    • 170 செல்போன்கள் தனிப்படை போலீசாரால் மீட்கப்பட்டு இன்று உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
    • மிகவும் பதட்டமான பகுதிகள் கண்காணிப்பு காமிராக்கள் மூலம் கண்காணிக்கப்படுகின்றன.

    கோவை,

    கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இன்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    கோவை மாநகர போலீசாரால் இன்று காணாமல் போன 170 செல்போன்கள் தனிப்படை போலீசாரால் மீட்கப்பட்டு இன்று உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு சுமார் ரூ.35 லட்சம் ஆகும்.

    இது தவிர பீளமேடு போலீஸ் நிலையம் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தொடர்ந்து நடைபெற்று வந்த கொள்ளை தொடர்பாக முக்கியமான குற்றவாளி கைது செய்யப்பட்டு அவர் மீது 6 வழக்குகள் உள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    அவரிடம் இருந்து 56 பவுன் தங்க நகைகள், ரூ.25 லட்சம் பணம், ஒரு இன்னோவா கார் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளது.

    கோடை விடுமுறை காரணமாக பலரும் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று வருகின்றனர். பூட்டி இருக்க கூடிய வீடுகள் கண்காணிக்கப்படுகின்றன. பொதுமக்கள் ஊர்களுக்கு செல்லும் போது போலீஸ் துறையினரிடம் தகவல் தெரிவிக்க வேண்டும்.

    கோவையில் முக்கியமான பகுதிகள், மிகவும் பதட்டமான பகுதிகள் கண்காணிப்பு காமிராக்கள் மூலம் கண்காணிக்கப்படுகின்றன.

    ஆக்டோபஸ் என்கிற புதிய மென் பொருள் கோவை மாநகரில் உள்ள குற்றவாளிகளை கண்காணிக்கவும், உடனடியாக அடையாளம் காணவும் குற்றங்களில் சம்பந்தப்பட்டவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் உதவுகிறது.

    போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் அல்லது வேறு ஏதாவது சம்பவங்கள் நடைபெறும் போது உளவுத்துறை போலீசார் உடனடியாக போலீஸ் துறையினருக்கு அனுப்பு வதற்கு இந்த மெ ன்பொருள் பயன்ப டுத்தப்படுகிறது.

    தற்போது உடனடியாக இந்த மென்பொருள் மூலம் அனுப்பலாம். உளவுத்துறை போலீசாரின் வேலைப்பளு வை குறைப்ப தற்கும், மேம்படுத்துவதற்கும் இந்த ஆட்டோபஸ் மென்பொருள் பயன்படுகிறது. மேலும் இதில் சேகரிக்கப்படும் தகவல்கள் மென்பொருளில் சோதனை செய்யப்படும் போது, குற்ற வழக்குகளில் நடவடிக்கை எடுக்க மிகவும் வசதியாக உள்ளது.

    எப்போதும் வேண்டு மானாலும் இதிலிருந்து தகவல்களை போலீசார் வழக்கு சம்பந்தமாக எடுத்துக் கொள்ளலாம். போலீஸ் நிலையங்கள் இடையே தகவல்கள் பரிமாறி கொள்வதற்கும் இது உபயோகப்படுகிறது.

    ஆவணங்கள் அனைத்து ம் டிஜிட்டலைஸ் பண்ண ப்படுகிறது. தமிழகத்தில் கோவையில் மட்டும் தான் இந்த மென்பொருள் பயன்படுத்த ப்படுகிறது என நினைக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது போலீஸ் துணை கமிஷனர் சந்தீஸ் உடன் இருந்தார்.

    • வனவிலங்குகள் ஊருக்குள் வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • வனவிலங்குகள் வராமல் இருக்க தடுப்பு வேலிகள் அமைக்கப்படுகிறது.

    கோவை,

    கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் இன்று நடந்தது.

    கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார் பாடி தலைமை தாங்கினார். கூட்டத்தில் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேணுகோபால் பேசியதாவது:-

    கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக யானைகள் வனப்பகுதியில் இருந்து ஊருக்குள் வருவது தடுக்க முடியாமல் உள்ளது.

    வனத்துறையினர் தக்க நடவடிக்கை எடுத்து வனவிலங்குகள் ஊருக்குள் வருவதை தடுக்க வேண்டும். வனப்பகுதியில் இருந்து வெளியே வரும் வனவிலங்குகள் பயிர்களை சேதப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் மனித உயிர்களுக்கும் அச்சுறுத்தலாக உள்ளது.

    வனவிலங்குகள் வராமல் இருக்க தடுப்பு வேலிகள் அமைக்கப்படுகிறது. இதில் சிக்கி வனவிலங்குகள் உயிரிழக்கும் போது விவசாயிகளும் பாதிக்கப்படுகின்றனர். அவர்கள் மீதும் கைது நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

    வன விலங்குகளால் மேட்டுப்பாளையம், அன்னூர் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் தொழில் செய்ய முடியாத நிலைமை உள்ளது. கலெக்டர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றும்படி பேசினர்.

    • குப்புசாமி தனக்கு சொந்தமான நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார்.
    • தோட்டத்தில் அமைக்கப்பட்ட மின்வேலியில் மோட்டர் சைக்கிளுடன் வாலிபர் விழுந்தார்.

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையம் அருகே தோலம்பாளையம் ஊராட்சி மேல்பாவியைச் சேர்ந்தவர் குப்புசாமி (50). விவசாயி.

    இவருக்கு சொந்தமான நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார். மேலும் தோட்டத்தில் தென்னங் கள்ளும் விற்று வந்துள்ளார். இது வனப்பகுதியையொட்டி உள்ளதால் தோட்டத்தை சுற்றிலும் மின்வேலியும் அமைத்திருந்தார்.

    நேற்று மாலை இவரது தோட்டத்திற்கு கள் குடிப்பதற்காக காளியூரை சேர்ந்த பழங்குடியின வாலிபரான ஜெயக்குமார் (34) தனது நண்பர்களுடன் மோட்டார் சைக்கிளில் வந்தார்.

    சிறிது நேரத்தில், அவருடன் வந்தவர்கள் கள் குடித்து விட்டு அங்கிருந்து சென்று விட்டனர். ஆனால் ஜெயக்குமாருக்கு அதிக போதை ஏற்பட்டதால் அங்கேயே படுத்து விட்டார்.

    இந்த நிலையில் இரவு 7 மணியளவில் ஜெயக்குமார் எழுந்து, தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு புறப்பட்டார். அப்போது அவர் எதிர்பாராத விதமாக மின்வேலியில் மோட்டார் சைக்கிளோடு விழுந்தார்.

    அப்போது யானைகள் வராமல் இருப்பதற்காக அமைக்கப்பட்ட மின் வேலியில் மின் இணைப்பு இருந்தது தெரியாததால், அதில் விழுந்த ஜெயக்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து விட்டார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த மேட்டுப்பாளையம் டி.எஸ்.பி பாலாஜி, காரமடை இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், வட்டாட்சியர் சந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து காரமடை போலீசார் தோட்ட உரிமையாளரான குப்புசாமி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தனது தோட்டத்தில் மின்வேலியில் சிக்கி ஒருவர் பலியான தகவல் அறிந்ததும் குப்புசாமி குடும்பத்துடன் தலைமறைவாகி விட்டார்.

    • உதவுவது போல் நடித்து வாலிபர் கடத்திச் சென்றார்
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் விசாரணை நடத்தி வருகின்றனர்

    கோவை

    கோவை அருகே உள்ள கோட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் 52 வயது விவசாயி. குடிப்பழக்கம் உடையவர்.

    சம்பவத்தன்று அவர் மோட்டார்சைக்கிளில் அதே பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு மது குடிக்கச் சென்றார். அளவுக்கு அதிகமாக மது குடித்ததால் போதை தலைக்கேறியது. கடையில் இருந்து வெளியே வந்த அவர் மோட்டார்சைக்கிளை எடுக்க முயற்சி செய்தார். நடக்க கூட முடியாமல் போதையில் இருந்த அவரால் மோட்டார்சைக்கிளை எடுக்க முடியவில்லை. அடுத்தடுத்து அவர் கீழே விழுந்தார்.

    அந்த சமயம் அங்கு வந்த வாலிபர், போதை நபருக்கு உதவுவதாக கூறினார். உங்கள் வீடு எங்கே இருக்கிறது சொல்லுங்கள் என்றார். உடனே தனக்கு சொந்தமான தோட்டத்தில் கொண்டு போய் தன்னை விடுமாறு போதை நபர் கூறினார். மோட்டார்சைக்கிளின் பின்னால் அவர் ஏறிக்கொள்ள வாலிபர் தோட்டத்துக்கு வண்டியை விட்டார். தோட்டத்தில் போட்டிருந்த கட்டிலில் போதை நபரை படுக்க வைத்து வாலிபர் சென்று விட்டார். காலையில் போதை தெளிந்து எழுந்த விவசாயிக்கு அதிர்ச்சி காத்து இருந்தது. தனக்கு உதவுவதாக கூறி அழைத்து வந்த வாலிபர், செல்லும் போது விவசாயியின் மோட்டார்சைக்கிளையும் திருடிச் சென்று இருந்தார்.

    போதையை பயன்படுத்தி வாலிபர் தன்னை ஏமாற்றி மோட்டார்சைக்கிளை திருடிச் சென்றதை உணர்ந்த விவசாயி, கோட்டூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு காமிராவில் எதாவது காட்சிகள் பதிவாகி உள்ளதா என்பது பற்றி ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • சோலாரை சரி செய்ய வந்து இருப்பதாக கூறி ஏமாற்றினார்
    • நகைகளை கொள்ளையடித்து சென்ற வாலிபரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    கோவை,

    கோவை சூலூர் அருகே உள்ள ராசிபாளையத்தை சேர்ந்தவர் பரமசிவம் (வயது 61). இவர் தமிழக அரசால் வழங்கப்பட்ட வீட்டில் வசித்து வருகிறார்.

    சம்பவத்தன்று பரமசிவம் வீட்டில் இருந்த போது 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் அங்கு வந்தார். அவர் அரசால் வழங்கப்பட்டு உள்ள சோலாரை சரி செய்ய வந்து இருப்பதாக கூறினார்.

    பின்னர் அந்த வாலிபர் சோலார் பேட்டரிகளை சரி செய்து கொண்டு இருந்தார். அப்போது அந்த வாலிபர் பரமசிவத்தை மாடிக்கு சென்று சோலாரை சரி செய்யுமாறு கூறினார். இதனையடுத்து அவர் மேலே சென்றார்.

    அப்போது அந்த வாலிபர் பரமசிவம் வீட்டில் உள்ள பீரோவை திறந்து அதில் இருந்த தங்க காசு மாலை, செயின், கம்மல், மோதிரம் உள்பட 10 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து தனது பையில் வைத்தார். சிறிது நேரத்துக்கு பின்னர் பரமசிவம் கீழே வந்தார். பின்னர் அந்த வாலிபர் வேலை முடிந்து விட்டதாக கூறி தப்பிச் சென்றார்.

    கடந்த 21-ந் தேதி பரம சிவத்தின் குடும்பத்தினர் அந்த பகுதியில் நடந்த கோவில் நிகழ்ச்சிக்கு புறப்பட்டு கொண்டு இருந்தனர். அப்போது பீரோவை திறந்து பார்த்த போது அதில் இருந்த தங்க நகைகள் மாயமாகி இருந்தது தெரிய வந்தது. சோலார் சரி செய்ய வந்த வாலிபர் நகைகளை கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது. இது குறித்து பரமசிவம் சூலூர் போலீசில் புகார் செய்தார்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சோலார் சரி செய்ய வந்ததாக கூறி முதியவரை ஏமாற்றி 10 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற வாலிபரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    • குப்புராஜ் சாப்பிட்டு திரும்பி வந்தபோது கள்ளாவில் இருந்த 15 பவுன் தங்க கட்டி மாயமாகி இருந்தது
    • போலீசார் தங்க கட்டியை திருடி சென்ற நாகராஜை கைது செய்தனர்

    கோவை,

    கோவை கெம்பட்டி காலனி அருகே உள்ள எல்.ஜி. தோட்டத்தை சேர்ந்தவர் குப்புராஜ் (வயது 44). இவர் அந்த பகுதியில் தங்க நகை பட்டறை வைத்து நடத்தி வருகிறார். இவரது பட்டறையில் செல்வபுரம் தில்லை நகரை சேர்ந்த நாகராஜ் (38) என்பவர் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று குப்புராஜ் 15 பவுன் தங்க கட்டியை கள்ளாவில் வைத்து விட்டு மதிய உணவு சாப்பிடுவதற்காக சென்றார். அப்போது நாகராஜ் தங்க கட்டியை திருடி தப்பிச் சென்றார். குப்புராஜ்திரும்பி வந்து பார்த்த போது கள்ளாவில் இருந்த 15 பவுன் தங்க கட்டி மாயமாகி இருந்தது. தொழிலாளியாக வேலை பார்த்து வந்த குமரேசனையும் காணவில்லை. அவரது செல்போனுக்கு தொடர்பு கொண்ட போது அது சுவிட் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இது குறித்து தங்க நகை பட்டறை உரிமையாளர் குப்புராஜ் பெரியக்கடை வீதி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் தங்க கட்டியை திருடி சென்ற நகராஜை கைது செய்தனர். அவரிடம் இருந்த திருடப்பட்ட 12 பவுன் தங்க கட்டியை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் போலீசார் நாகராஜை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    ×