search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    கோவையில் சொந்த ஊருக்கு செல்வோர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவும்-போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் அறிவுறுத்தல்
    X

    கோவையில் சொந்த ஊருக்கு செல்வோர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவும்-போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் அறிவுறுத்தல்

    • 170 செல்போன்கள் தனிப்படை போலீசாரால் மீட்கப்பட்டு இன்று உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
    • மிகவும் பதட்டமான பகுதிகள் கண்காணிப்பு காமிராக்கள் மூலம் கண்காணிக்கப்படுகின்றன.

    கோவை,

    கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இன்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    கோவை மாநகர போலீசாரால் இன்று காணாமல் போன 170 செல்போன்கள் தனிப்படை போலீசாரால் மீட்கப்பட்டு இன்று உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு சுமார் ரூ.35 லட்சம் ஆகும்.

    இது தவிர பீளமேடு போலீஸ் நிலையம் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தொடர்ந்து நடைபெற்று வந்த கொள்ளை தொடர்பாக முக்கியமான குற்றவாளி கைது செய்யப்பட்டு அவர் மீது 6 வழக்குகள் உள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    அவரிடம் இருந்து 56 பவுன் தங்க நகைகள், ரூ.25 லட்சம் பணம், ஒரு இன்னோவா கார் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளது.

    கோடை விடுமுறை காரணமாக பலரும் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று வருகின்றனர். பூட்டி இருக்க கூடிய வீடுகள் கண்காணிக்கப்படுகின்றன. பொதுமக்கள் ஊர்களுக்கு செல்லும் போது போலீஸ் துறையினரிடம் தகவல் தெரிவிக்க வேண்டும்.

    கோவையில் முக்கியமான பகுதிகள், மிகவும் பதட்டமான பகுதிகள் கண்காணிப்பு காமிராக்கள் மூலம் கண்காணிக்கப்படுகின்றன.

    ஆக்டோபஸ் என்கிற புதிய மென் பொருள் கோவை மாநகரில் உள்ள குற்றவாளிகளை கண்காணிக்கவும், உடனடியாக அடையாளம் காணவும் குற்றங்களில் சம்பந்தப்பட்டவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் உதவுகிறது.

    போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் அல்லது வேறு ஏதாவது சம்பவங்கள் நடைபெறும் போது உளவுத்துறை போலீசார் உடனடியாக போலீஸ் துறையினருக்கு அனுப்பு வதற்கு இந்த மெ ன்பொருள் பயன்ப டுத்தப்படுகிறது.

    தற்போது உடனடியாக இந்த மென்பொருள் மூலம் அனுப்பலாம். உளவுத்துறை போலீசாரின் வேலைப்பளு வை குறைப்ப தற்கும், மேம்படுத்துவதற்கும் இந்த ஆட்டோபஸ் மென்பொருள் பயன்படுகிறது. மேலும் இதில் சேகரிக்கப்படும் தகவல்கள் மென்பொருளில் சோதனை செய்யப்படும் போது, குற்ற வழக்குகளில் நடவடிக்கை எடுக்க மிகவும் வசதியாக உள்ளது.

    எப்போதும் வேண்டு மானாலும் இதிலிருந்து தகவல்களை போலீசார் வழக்கு சம்பந்தமாக எடுத்துக் கொள்ளலாம். போலீஸ் நிலையங்கள் இடையே தகவல்கள் பரிமாறி கொள்வதற்கும் இது உபயோகப்படுகிறது.

    ஆவணங்கள் அனைத்து ம் டிஜிட்டலைஸ் பண்ண ப்படுகிறது. தமிழகத்தில் கோவையில் மட்டும் தான் இந்த மென்பொருள் பயன்படுத்த ப்படுகிறது என நினைக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது போலீஸ் துணை கமிஷனர் சந்தீஸ் உடன் இருந்தார்.

    Next Story
    ×