search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 113362"

    • நரேஷ் சிங் ஓட்டலில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
    • கிணற்றில் 40 அடி ஆளத்துக்கு தண்ணீர் இருந்தது.

    கோவை,

    மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை சேர்ந்தவர் நரேஷ் சிங் (வயது 25). இவர் கோவை மாவட்டம் அன்னூர் மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள ஒரு ஓட்டலில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

    சம்பவத்தன்று இவர் வேலை முடிந்ததும் தனது அறைக்கு சென்றார். பின்னர் நரேஷ் சிங் தனது நண்பர்களுடன் சேர்ந்து மது குடித்தார். போதை தலைக்கேறிய நிலையில் தள்ளாடிய படி வெளியே சென்றார். அப்போது இருட்டில் 100 அடி ஆள கிணற்றில் நிலைதடுமாறி உள்ளே விழுந்தார். கிணற்றில் 40 அடி ஆளத்துக்கு தண்ணீர் இருந்தது. நரேஷ் சிங்கிற்கு நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.

    மறுநாள் காலையில் அவரை அவரது நண்பர்கள் தேடினர். அப்போது நரேஷ் சிங் கிணற்றில் பிணமாக மிதப்பது கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் இது குறித்து அன்னூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.பின்னர் கிணற்றில் தவறி விழுந்து இறந்த நரேஷ் சிங்கின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து அன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கொரோனாவை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
    • கொரோனா பரிசோதனைகளும் அதிகரிக்கப்பட்டு உள்ளது.

    கோவை, -

    கோவை மாவட்டத்தில் தற்போது கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது.

    இதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறை சார்பில் பல்வேறு தடுப்பு நடவடி க்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் பொதுமக்கள் வெளியே செல்லும் போது முக கவசம் அணி வேண்டும், சமூக இடைவெளியை பின் பற்ற வேண்டும், கைகளை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும் என அறிவுறு த்தப்பட்டு வருகிறது.

    இருமல், காய்ச்சல் அறிகுறிகள் ஏற்பட்டால் உடனடியாக பரிசோதனை மேற்கொண்டு சிகிச்சை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. கொரோனா பரிசோதனைகளும் அதிகரிக்கப்பட்டு உள்ளது.

    நேற்று முன்தினம் மாவட்டம் முழுவதும் 381 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த பரிசோதனை முடிவுகள் நேற்று மாலை வெளியானது.

    இதில் கடந்த சில மாதங்களாக இல்லாத வகையில் நேற்று ஒரே நாளில் 55 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

    இதனால் மாவட்டத்தில் கொரோ னாவால் பாதிக்கப்பட்ட வர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 42 ஆயிரத்து 3 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்ற 17 பேர் குணமடைந்தனர். தற்போது பாதிப்பு காரணமாக 274 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    • அருண்பாரதி ஷேர் மார்க்கெட்டில் வேலை செய்து வந்தார்.
    • அருண்பாரதிக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டது

    கோவை

    கோவை நம்பர் 4 வீரபாண்டியை அடுத்த ஆர்.எம் கார்டன் பகுதியை சேர்ந்தவர் அருண்பாரதி (வயது24). இவர் ஷேர் மார்க்கெட்டில் வேலை செய்து வந்தார்.

    இந்தநிலையில் இவருக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டது. இதனால் மனமு டைந்து காணப்பட்டார். சம்பவத்தன்று அருண்பாரதி வாழ்க்கையில் விரக்தி அடைந்து தனது வீட்டிற்க்கு சென்று வெகு நேரம் ஆகியும் வெளியே வரவி ல்லை. இதனால், சந்தே கமடைந்த உறவினர்கள் கதவை நீண்ட நேரம் தட்டியும் திறக்கவில்லை. பின்னர் அருகில் இருந்த வர்களின் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்றபோது அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து பெரியநா யக்க ன்பாளையம் போலீசா ருக்கு தகவல் தெரிவிக்கப்ப ட்டது. தகவலறிந்த போலீ சார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில் தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால் மிகுந்த மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இருப்பினும், வேறு ஏதாவது காரணம் உள்ளதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பால் மாஸ்க் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
    • தனிமனித இடைவெளியையும், அடிக்கடி கைகளை கழுவவும் ஆலோசனை வழங்கப்பட்டது.

    கோவை

    கொரோனா பரவல் தடுப்பு முன்னெச்ச ரிக்கையாக தமிழகம், புதுவையில் உள்ள ஐகோர்ட்டுகள், கீழமை நீதிமன்றங்களில் இன்று முதல் முக கவசம் கட்டாயம் ஆக்கப்பட்டு உள்ளது.

    அதன்படி நீதிமன்ற அலுவலர்கள், ஊழியர்கள், வழக்காடிகள், வக்கீல்கள் உள்ளிட்டோர் முக கவசம் அணிந்து கோர்ட்டுக்கு வர அறிவுறு த்தப்பட்டது. மேலும் தனிமனித இடை வெளியை கடைபிடிக்கவும், அடிக்கடி கைகளை கழுவவும் ஆலோசனை வழங்கப்பட்டது.

    கோவை, பொள்ளாச்சி, மதுக்கரை, வால்பாறை, மேட்டுப்பாளையம் கோர்ட்டுகளிலும் இன்று கோர்ட்டுக்கு வந்த ஊழியர்கள், வக்கீல்கள், பொதுமக்கள் முக கவசம் அணிந்து வந்தனர்.

    முக கவசம் அணியாமல் வந்த பொதுமக்களுக்கு முக கவசம் வழங்கப்பட்டு அதனை அணிந்து கோர்ட்டுக்குள் வர உத்தரவிடப்பட்டது.

    கோவையில் கொரானா நோய்த்தொற்று அதிகரித்து வரும் நிலையில் பொது இடங்களுக்கு செல்பவர்கள் முகக் கவசம் அணிந்து செல்லுமாறு சுகாதார த்துறை யினர் அறிவுறுத்தி யுள்ளனர்.

    கோவை மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக கொரோனா நோய்த் தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஒரு சதவீதத்துக்கும் குறைவாக இருந்த நோய்த் தொற்று பரவல் தற்போது 11.2 சதவீதமாக உயர்ந்துள்ளது. தினசரி கொரோனா பாதிப்பு 40-க்கும் மேல் அதிகரித்துள்ளது. தற்போது 200-க்கும் மேற்பட்டோர் கொரோனா நோய்த்தொ ற்றுக்கு சிகிச்சையில் உள்ளனர்.

    நோய்த் தொற்று பரவலை கட்டுப்படுத்த ஏற்கனவே மருத்துவ மனைகள், திரையரங்குகள் உள்ளிட்ட இடங்களில் கட்டாயம் முகக்கவசம் அணிந்து செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் தொற்றுப் பரவல் அதிகரித்து வருவதால் முகக் கவசம் அணிந்து செல்லுதல், சமூக இடைவெளியை பின்பற்றுவது உள்ளிட்ட கட்டுப்பாட்டு வழிமுறைக ளை பின்பற்ற வேண்டும் என சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

    ஆனால், கோவையில் பஸ் நிலையங்கள், ரெயில்நிலையம், சந்தைகள், வணிக நிறுவனங்களுக்கு செல்பவர்களில் பெரும்பா லானோர் முகக் கவசம் அணிவதில்லை. ஏற்கனவே நோய்த் தொற்று அதிகரித்து வரும் நிலையில் கட்டுப்பாட்டு வழிமுறை களை பின்பற்றாமல் அலட்சி யமாக செயல்பட்டால் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே கட்டாயம், இல்லா விட்டாலும் பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும் என்று சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

    • ஆற்றின் இரு கரைகளிலும் 20-க்கும் மேற்பட்ட குளங்கள் உள்ளன.
    • தண்ணீர் இன்றி குளங்கள் விளையாட்டு மைதானங்களாக மாறின.

    கோவை, -

    மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி ஓடிவரும் நொய்யல் ஆற்றை ஆதாரமாகக் கொண்டு கோவையில் ஆற்றின் இரு கரைகளிலும், 20-க்கும் மேற்பட்ட குளங்களை முன்னோர்கள் ஏற்படுத்தியுள்ளனர்.

    பருவ காலங்களில் கிடைக்கும் மழைநீரை குளங்களில் சேகரித்து வைத்து ஆண்டு முழுவதும் விவசாயத்துக்கும், மற்ற தேவைகளுக்கும் பயன்படுத்தி வருகின்றனர். குளங்களில் தேக்கி வைக்கப்படும் தண்ணீர் அருகில் உள்ள கிராமங்களின் நிலத்தடி நீருக்கு ஆதாரமாக இருந்து வருகிறது.

    இந்நிலையில் கோவை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழைக்குப்பின் தற்போது வரை பெரிய அளவில் மழைப்பொழிவு இல்லை. குறிப்பாக கடந்த பிப்ரவரியில் இருந்து வெயில் தாக்கம் அதிகரித்து வருகிறது.

    நொய்யலின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலும் மழைப்பொழிவு இல்லாத தால் நொய்யல் ஆற்றில் நீர்வரத்து இன்றி வறண்டு காணப்படுகிறது. இதனால், நொய்யலின் இரு கரைகளி லும், அமைந்துள்ள குளங்க ளில் தண்ணீர் இருப்பு குறைந்து மைதானங்கள் போல காட்சியளிக்கின்றன.

    குறிப்பாக தொண்டா முத்தூர் வட்டாரங்களில் உள்ள உக்குளம், புதுக்குளம், பேரூர் பெரியகுளம், கோளரம்பதிகுளம், சொட்டையாண்டி குட்டை, உள்ளிட்ட குளங்களில் மிகக்குறைந்த அளவே தண்ணீர் காணப்படுகிறது. தண்ணீர் வரத்து இல்லாத நிலையில் வெயிலின் தாக்கத்தால் இருக்கும் நீரும் வேகமாக ஆவியாகி வருகிறது. இதனால் பெரும்பாலான குளங்களில் மொத்த கொள்ளளவில் 30 சதவீதத்துக்கும் கீழ் நீர் இருப்பு குறைந்துள்ளது. இதனால், குளங்கள் தண்ணீர் இன்றி வறண்டு விளையாட்டு மைதானம் போல் காட்சியளிக்கின்றன.

    பள்ளித் தேர்வுகள் முடிந்து விடுமுறை அளிக்க ப்பட்டுள்ளதால் குளங்க ளின் நீர் வற்றியுள்ள பரப்புகளில் சிறுவர்கள் கிரிக்கெட் உள்ளிட்ட விளை யாட்டுகளை விளையாடி மகிழ்ந்து வருகின்றனர்.

    இதற்கிடையே கோவைக்கு முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் சிறுவாணி அணை நீர்மட்டம் குறைந்துள்ளது. இதேபோல ஆழியார் அணை நீர்மட்டமும் குறைந்து காணப்படுகிறது.

    • 14 வயது சிறுவன் அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.
    • விக்னேஷ் சிறுவனை பொது கழிப்பிடத்துக்கு அழைத்து சென்றார்.

    கோவை,

    கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியை சேர்ந்தவர் 14 வயது சிறுவன். இவர் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    சம்பவத்தன்று சிறுவன் தனது வீட்டு முன்பு விளையாடிக்கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளி விக்னேஷ் (வயது 27) என்பவர் சிறுவனை அந்த பகுதியில் உள்ள பொது கழிப்பிடத்துக்கு அழைத்து சென்றார். பின்னர் அங்குள்ள குளியல் அறைக்கு சென்று கதவை உள்பக்கமாக பூட்டினர்.இதனை தொடர்ந்து விக்னேஷ், சிறுவனின் வாயில் பேப்பரை வைத்து அடைத்தார். பின்னர் அவர் சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். இதனையடுத்து விக்னேஷ் நடந்த சம்பவங்களை வெளியே கூறினால் கொலை செய்து விடுவதாக மிரட்டி விட்டு அங்கு இருந்து தப்பிச் சென்றார்.சிறுவன் இது குறித்து தனது பெற்றோரிடம் கூறி கதறி அழுதார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் இது குறித்து கிணத்துக்கடவு போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து 14 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விக்னேசை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    • 18 வயது சிறுமி தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.
    • மாணவி பெற்றோரிடம் வேலைக்கு செல்வதாக கூறி விட்டு சென்றார்.

    கோவை

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள அம்பரா ம்பாளையத்தை சேர்ந்தவர் 18 வயது சிறுமி. இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

    கடந்த 10 மாதங்களுக்கு முன்பு மாணவிக்கு ஆனைமலையை சேர்ந்த பவின் (வயது 20) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி நேரில் சந்தித்தும் செல்போனில் பேசியும் தங்களது காதலை வளர்த்து வந்தனர்.இந்த காதல் விவகாரம் மாணவியின் பெற்றோருக்கு தெரிய வந்தது. அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

    பின்னர் அவர்கள் தங்களது மகளை பள்ளிக்கு அனுப்பாமல் ஆன்லைன் வகுப்பு மூலமாக பாடம் கற்க வைத்தனர். ஆனாலும் மாணவி பவினுடனான காதலை தொடர்ந்து வந்தார்.

    சம்பவத்தன்று மாணவி தனது பெற்றோரிடம் வேலைக்கு செல்வதாக கூறி விட்டு வெளியே சென்றார். ஆனால் அவர் வேலைக்கு செல்லாமல் தனது காதலனுடன் சென்றார். நீண்ட நேரம் ஆகியும் தங்களது மகள் வீட்டிற்கு திரும்பி வராததால் சந்தேகம் அடைந்த அவரது பெற்றோர் இது குறித்து பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் மாணவியை தேடினர். அப்போது தனது காதலன் வீட்டில் உள்ள மொட்டை மாடியில் மாணவி இருப்பது தெரிய வந்தது. போலீசார் மாணவியை மீட்டு போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர். மாணவியை ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்ற பவினை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • அரசுத்துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடந்தது.
    • 7 அரசு சார்பு நிறுவனங்களும் பொருட்காட்சியில் கண்காட்சி அரங்குகளை அமைக்க உள்ளன.

    கோவை,

    கோவை மாவட்டத்தில் அரசு பொருட்காட்சி நடத்துவது தொடர்பாக முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்வது குறித்து அனைத்து அரசுத்துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி தலைமை தாங்கி னார். தொடர்ந்து கலெக்டர் கிராந்திகுமார் பாடி கூறியதாவது:-

    தமிழ்நாடு அரசின் சார்பில் கோவை மாவட்டத்தில் செய்தி-மக்கள் தொடர்பு துறையின் சார்பில் ஆண்டுதோறும் அரசு பொருட்காட்சி நடத்தப்ப ட்டு வருகிறது. இந்த ஆண்டு அரசு பொருட்கா ட்சியானது கோவை மாநகராட்சி, சிறைச்சாலை அணிவகு ப்பு மைதான த்தில் இந்த மாதம் இறு தியில் தொடங்கப்பட்டு 45 நாட்கள் தொடர்ந்து நடைபெற உள்ளது.

    இந்த பொருட்கா ட்சியில் செய்தி -மக்கள் தொடர்புத்துறை உள்பட 27 அரசு துறைகள் சார்பில் தங்கள் துறையின் மூலம் செயல்படு த்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து பொது மக்கள் பார்த்து பய ன்பெறும் வண்ணம் அரங்கு கள் அமைக்கப்பட உள்ளது.

    தமிழ்நாடு மின்வாரியம் உள்பட 7 அரசு சார்பு நிறுவனங்களும் பொரு ட்காட்சியில் கண்காட்சி அரங்குகளை அமைக்க உள்ளன. பொருட்கா ட்சியில் சிறப்பாக அரங்குகள் அமைக்கும் துறைகளின் அரங்குகள் தேர்வு செய்யப்பட்டு முதல், இரண்டாம், மூன்றாம் பரிசுகளும், ஆறுதல் பரிசுகளும் வழங்கப்பட உள்ளது. செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தி ல்பாலாஜி ஆகியோர் பரிசுகளை வழங்க உள்ளனர்.

    மேலும் கோடை காலத்தை பயனுள்ளதாக கழிக்கும் வகையில் பொழுதுபோக்கு அம்சத்து டன் கூடிய பல்வேறு விளையாட்டு சாதனங்க ளும், வீட்டு உபயோக பொருட்களுடன் கூடிய பல்வேறு விற்பனை அரங்குகளும் அமைக்கப்ப ட உள்ளது.

    தினமும் மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை பொருட்காட்சி நடைபெற உள்ளது. சிறைச்சாலை அணிவகுப்பு மைதானம் வழியாக பஸ்கள் செல்லும் வகையில் கூடுதல் பஸ் சேவை வசதிகள் செய்யப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

    • கோவையிலிருந்து ஷார்ஜாவுக்கு வாரத்தில் 5 நாட்கள் விமான சேவை வழங்கப்படுகிறது.
    • 3 டன் எடையிலான சரக்குகள் விமானத்தில் கொண்டு செல்லப்படுவது வழக்கம்.

    கோவை,

    விஷு பண்டிகையை முன்னிட்டு கோவையில் இருந்து கடந்த 7 நாட்களில் மொத்தம் 14 டன் எடையிலான காய்கறிகள் ஷார்ஜாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

    கோவையிலிருந்து ஷார்ஜாவுக்கு வாரத்தில் 5 நாட்கள் விமான சேவை வழங்கப்படுகிறது. ஒவ்வொரு முறையும் 3 டன் எடையிலான சரக்குகள் விமானத்தில் கொண்டு செல்லப்படுவது வழக்கம். இந்நிலையில், மலையாள புத்தாண்டு தினமான விஷுவை முன்னிட்டு கடந்த ஒரு வாரத்தில் காய்கறிகள் மட்டுமே அதிக அளவு கையாளப்பட்டுள்ளன.

    இதுகுறித்து, விமான நிலைய அதிகாரிகள் கூறும் போது, மலையாள புத்தாண்டை முன்னிட்டு கடந்த 7 நாட்களில் கோவையிலிருந்து வழங்கப்பட்ட 5 விமான சேவையில் மொத்தம் 15 டன் எடையிலான சரக்குகள் கோவையிலிருந்து ஷார்ஜாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. இவற்றில் 14 டன் சரக்குகள் காய்கறிகளாகும். கோவக்காய், வாழைக்காய், பீன்ஸ், வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகள் ஏற்றுமதி செய்யப்பட்டன. இவை தவிர்த்து 1 டன் எடையிலான மாங்காய் மற்றும் ரோஜாப்பூ, சூரியகாந்திப்பூ உள்ளிட்ட மலர்களும் ஏற்றுமதி செய்யப்பட்டன என்றனர்.

    கோவை விமான நிலையத்தில் தினமும் சென்னை, பெங்களூரு, டெல்லி, மும்பை, உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கும் ஷார்ஜா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் விமான சேவை வழங்கப்படுகிறது. தற்போது தினமும் 25 விமானங்கள் இயக்கப்படுகி ன்றன. பள்ளி, கல்லூரிகளுக்கு கோடை கால விடுமுறை தொடங்கியுள்ள நிலையில் எதிர்வரும் நாட்களில் விமான சேவை அதிகரிக்க வாய்ப்பு ள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • யானை வீட்டின் கதவை உடைத்து உள்ளே செல்லும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது.
    • வனப்பகுதிகளில் காட்டு யானைகள் அதிகளவில் வசித்து வருகின்றன.

    கவுண்டம்பாளையம், -

    கோவை தடாகம் பகுதியையொட்டி வனப்பகுதிகளில் காட்டு யானைகள் அதிகளவில் வசித்து வருகின்றன. இந்த காட்டு யானைகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி அடிக்கடி ஊருக்குள் புகுந்து வருகின்றன.

    அவ்வாறு வரும் யானைகள் விளைநிலங்கள் மற்றும் வீட்டில் உள்ள பொருட்களையும் சேதப்படுத்தி வருவதை வாடி க்கையாக வைத்து ள்ளது.

    பன்னிமடையை அடுத்த வரப்பாளையத்தை சேர்ந்தவர் கணேசன். இவருக்கு அந்த பகுதியில் சொந்தமாக தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் வீடு ஒன்றும் உள்ளது. இந்த நிலையில் சம்பவத்தன்று இந்த தோட்டத்திற்குள் காட்டு யானை ஒன்று புகுந்தது.

    அந்த யானை தோட்டத்திற்குள் அங்கும், மிங்கும் சுற்றி திரிந்தது. பின்னர் வீட்டின் அருகே சென்ற காட்டு யானை வீட்டின் கதவை உடைத்தது. தொடர்ந்து உள்ளே நுழைந்த காட்டு யானை அங்கு வைக்கப்பட்டிருந்த மாட்டுத் தீவனங்களை உண்ண முயன்றது.

    ஆனால் யானையால் மேற்கொண்டு வீட்டிற்குள் செல்ல முடியவில்லை.

    இதனால் யானை அங்கு இருந்த பொருட்கள் அனைத்தையும் தேசப்படுத்தி விட்டு மீண்டும் வனத்தை நோக்கி சென்று விட்டது.

    இந்த காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி காமிராவில் பதிவாகியுள்ளது.

    அந்த காட்சிகள் தற்போ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

    கோடைக்காலம் துவங்கியுள்ள நிலையில், காட்டுயானைகள் எப்போது வேண்டுமா னாலும் ஊருக்குள் நுழையக்கூடும் என்பதால், வனத்துறையினர் தொடர்ந்து ரோந்து பணிகளை மேற்கொள்ள வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • வெயில் கொடுமையில் இருந்து தப்பிக்க மலைப்பகுதிகளுக்கு பொதுமக்கள் வருகின்றனர்.
    • சுற்றுலாபயணிகள் தங்கிச் செல்ல 150-க்கும் மேற்பட்ட தங்கும் விடுதிகள் உள்ளன.

    பொள்ளாச்சி,

    தமிழகத்தின் சமவெளிப்பகுதியில் தற்போது வெயில் கொளுத்துகிறது. இதனால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி உள்ளனர். வெயில் கொடுமையில் இருந்து தப்பிக்க மலைப்பகுதிகளுக்கு பொதுமக்கள் குடும்பத்துடன் படையெடுக்க தொடங்கி உள்ளனர். மேலும் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டு உள்ளதால் சுற்றுலா தலங்களில் சுற்றுலாபயணிகள் கூட்டம் அதிகரிக்க தொடங்கி உள்ளது.

    தமிழ்புத்தாண்டை தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை வந்ததால் கோவை மாவட்டம் வால்பாறைக்கு சுற்றுலாபயணிகள் வருகை அதிகரித்து காணப்படுகிறது. கூழாங்கல் ஆறு, வெள்ளமலை சுரங்கம், நீராறு அணை, சோலையாறு அணை, நல்லமுடி காட்சிமுனை மற்றும் பாலாஜி கோவில் என அனைத்து பகுதியிலும் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் காணப்பட்டனர்.

    ஒரே நேரத்தில் ஏராளமான சுற்றுலாபயணிகள் குவிந்த தால் வால்பாறை நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதற்கிடையே வால் பாறையில் உள்ள தங்கும் விடுதிகள் மே மாத இறுதிக்குள் அனுமதி பெற வேண்டும் என சுற்றுலாத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. வால்பாறையில் சுற்றுலாபயணிகள் தங்கிச் செல்ல வசதியாக 150-க்கும் மேற்பட்ட தங்கும் விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. வால்பாறை நகர், ரொட்டிக் கடை, சோலையாறு அணை உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் தங்கும் விடுதிகள் கட்டப்பட்டுள்ளன. தனியார் தேயிலை தோட்டப்பகுதிகளில் தனியார் ரிசார்டுகளும் உள்ளன.

    இதில் பல தங்கும் விடுதிகள் அனுமதியின்றி செயல்படுவது சுற்றுலாத்துறையின் கணக்கெடுப்பில் தெரியவந்தது. இதுகுறித்து மாவட்ட சுற்றுலாத்துறை அதிகாரி சீனிவாசன் கூறியதாவது:-

    வால்பாறையில் தங்கும் விடுதிகள் நடத்துபவர்கள் சுற்றுலாத்துறையில் முறையாக பதிவு செய்து கொள்ள வேண்டும். நகராட்சியில் மட்டும் அனுமதி வாங்கினால் போதாது. சுற்றுலாத்துறையிலும் பதிவு செய்து கொள்ள வேண்டும். மே மாதம் இறுதிக்குள் தங்கும் விடுதி மற்றும் ரிசார்ட் நடத்தி வருபவர்கள் தமிழ்நாடு சுற்றுலாத்துறையில் தங்கள் பெயர்களை பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    • நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்று வரும் பணிகளையும் ஆய்வு செய்தார்.
    • எத்தப்பன் நகர் பகுதியில் வசிக்கும் பட்டா இல்லாத 46 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா ஆ.ராசா எம்.பி வழங்கினார்.

    மேட்டுப்பாளையம்,

    காரமடை நகராட்சிக்குட்பட்ட 2-வது வார்டு சிவன்புரத்தில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.30 லட்சம் மதிப்பில் பொருத்தப்பட்ட சி.சி.டி.வி காமிராக்கள் இயக்கம், ரூ.25 லட்சம் மதிப்பில் தமிழக முதல்வரின் காலை உணவு திட்டத்தில் ஒருங்கிணைந்த சமுதாய கூடம் அமைக்கும் பணியை ஆ.ராசா எம்.பி. தொடங்கி வைத்தார்.தொடர்ந்து 13 வது வார்டு புருசோத்தமன் நகரில் பசுமைப்பூங்கா அமைக்கும் பணி உள்ளிட்ட சுமார் ரூ.2 கோடி மதிப்பீட்டிலான வளர்ச்சித்திட்ட பணிகளையும் , நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்று வரும் பணிகளையும் ஆய்வு செய்தார்.

    பின்னர் எத்தப்பன் நகர் பகுதியில் வசிக்கும் பட்டா இல்லாத 46 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கினார். தொடர்ந்து பொதுமக்களிடம் மனுக்களையும் பெற்று கொண்டார்.

    பின்னர் அவர் பேசியதாவது:-

    தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் முதல்-அமைச்சர் நிறைவேற்றி வருகிறார். சொல்வதை மட்டுமல்லாமல் சொல்லாததையும் செய்பவர் தான் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்.கொரோனா காலத்தில் தாய், தந்தையரை இழந்த குழந்தைகளுக்கு நிதியுதவி, உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 நிதியுதவி என சொல்லாததையும் நிறை வேற்றியுள்ளார்.

    தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகளும் இயங்க வேண்டும் என்பதற்காக பல கோடி ரூபாய் நிதியையும் ஒதுக்கியுள்ளார்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    இதில் மேட்டுப்பாளையம் தாசில்தார் மாலதி, காரமடை நகர மன்ற தலைவர் உஷா வெங்கடேஷ், வடக்கு மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, மாவட்ட அவைத்தலைவர் புரு ஷோத்தமன், முன்னாள் எம்.எல்.ஏ பா.அருண்குமார், ஒன்றிய செயலாளர்கள் சுரேந்திரன், எஸ்.எம்.டி. கல்யாணசுந்தரம், காரமடை நகரக்கழகச் செயலாளர் வெங்கடேஷ், 2-வது வார்டு உறுப்பினர் குருபி ரசாத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதற்கிடையே காரமடை நகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க அவர்களுடன் நீலகிரி எம்.பி. ஆ.ராசா குழு புகைப்படமும் எடுத்துக்கொண்டார்.

    ×