search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 113362"

    • ஆரோக்கியராஜா ஆடுகளை தேடி கொண்டு இருந்த போது 30 அடி பள்ளத்தில் தவறி விழுந்தார்.
    • மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை,

    கோவை பன்னிமடை அருகே உள்ள தென்றல் நகரை சேர்ந்தவர் ஆரோக்கிய ராஜா (வயது 45). ஐ.டி. ஊழியர். இவருக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர்.

    சம்பவத்தன்று ஆரோக்கிய ராஜா குன்னூரில் உள்ள தனது அக்கா மகள் வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்றார். செல்லும் வழியில் அவர் மேட்டுப்பாளையத்தில் உள்ள தனது மாமா ஜார்ஜ் பாலன் என்பவரது வீட்டிற்கு சென்றார்.

    அவர் வளர்த்து வரும் ஆடுகள் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. எனவே ஆடுகளை தேடி ஜார்ஜ் பாலன் வெளியே சென்றார். அவருடன் ஆரோக்கிய ராஜாவும் சென்றார். கல்லாறு ரெயில்வே பாலத்தில் ஆடுகளை தேடி கொண்டு இருந்த போது 30 அடி பள்ளத்தில் ஆரோக்கிய ராஜா தவறி விழுந்தார்.

    இதில் அவரது விலா எலும்பு உடைந்தது. உயிருக்கு போராடிய ஆரோக்கிய ராஜாவை அவரது மாமா மீட்டு மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே ஆரோக்கிய ராஜா இறந்து விட்டதாக தெரிவித்தனர்.இது குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • சி.எஸ்.ஐ. கிறிஸ்துநாதர் ஆலயத்தில் ஆயர் டேவிட் பர்ணபாஸ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது.
    • மாநகரின் முக்கிய பகுதிகளில் இரவு முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    கோவை

    ஏசு கிறிஸ்து உயிர்த்தெழும் நிகழ்வை ஈஸ்டர் பண்டிகையாக உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் கொண்டாடுகின்றனர். நேற்று இரவு ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்பட்டது.

    இதனையொட்டி கோவை மாநகரில் உள்ள காட்டூர் கிறிஸ்து அரசர் ஆலயம், உப்பிலிபாளையம் இம்மானுவேல் ஆலயம், டவுன்ஹால் புனித மைக்கேல் ஆலயம், திருச்சி ரோடு கிறிஸ்துநாதர் ஆலயம், புலியகுளம் அந்தோணியார் ஆலயம் உள்பட கிறிஸ்தவ தேவாலயங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, நள்ளிரவு சிறப்பு திருப்பலி நடந்தது.

    இந்த திருப்பலியில் ஏராளமான கிறிஸ்தவர்கள் தங்களது குடும்பத்தினருடன் பங்கேற்றனர்.

    ஈஸ்டர் பண்டிகையையொட்டி கோவை காந்திபுரத்தில் உள்ள சி.எஸ்.ஐ. கிறிஸ்துநாதர் ஆலயத்தில் ஆயர் டேவிட் பர்ணபாஸ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது. திருப்பலியின் போது ஏசு கிறிஸ்துவின் உயிர்ப்பு நிகழ்வு தத்ரூபமாக நிகழ்த்தி காண்பிக்கப்பட்டது. அதன் பின்னர் கிறிஸ்தவர்கள் ஒருவருக்கு ஒருவர் தங்களது ஈஸ்டர் வாழ்த்துக்களை தெரிவித்து மகிழ்ந்தனர்.

    ஈஸ்டர் பண்டிகையை யொட்டி அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க அனைத்து ஆலயங்கள் முன்பும் மாநகரின் முக்கிய பகுதிகளில் இரவு முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    • செல்வராஜ் வலது கையில் பாம்பு கடித்து விட்டது.
    • கிணத்துக்கடவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை,

    கிணத்துக்கடவு அருகே சோலவம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ்(55).கூலி தொழிலாளி.

    சம்பவத்தன்று இவர் தனது வீட்டிற்கு வெளியே தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அவரது வலது கையில் பாம்பு கடித்து விட்டது. இதனையடுத்து அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கிணத்துக்கடவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • சப்-இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் தலைமையிலான போலீசார் ஆய்வு மேற்கொண்டனர்.
    • ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள 3 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    கோவை,

    கோவை கள்ளிபாளையம் அருகே கஞ்சா விற்பனை செய்வதாக பெரியநாயக்கன்பாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி சப்-இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் தலைமையிலான போலீசார் அந்த பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்றிருந்த நபரை பிடித்து விசாரித்ததில் அவர் ஒடிசாவை சேர்ந்த தனபதான் (வயது28) என்பதும், அன்னூர் அருகே கணேசபுரத்தில் தங்கி தனியார் கம்பெனியில் வேலை செய்வதும் தெரியவந்தது.மேலும் இவர் ஒடிசாவில் இருந்து ரெயில் மூலம் கஞ்சாவை வாங்கி வந்து கள்ளிபாளையம் பகுதியில் விற்பனை செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

    பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி ெஜயிலில் அடைத்தனர். மேலும் அவரிடமிருந்து ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள 3 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • நாகராஜ் குடிபோதையில் சங்கனூர் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
    • உயிருக்கு போராடிய நாகராஜை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    கோவை,

    கோவை ரத்தினபுரி அருகே உள்ள பூந்தோட்டத்தை சேர்ந்தவர் நாகராஜ்(வயது45). வெல்டர்.

    இவர் இன்று காலை குடிபோதையில் சங்கனூர் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென நாகராஜ் அங்கு கடந்த பீர் பாட்டிலை உடைத்து தனக்குத்தானே தனது கழுத்தை அறுத்துக் கொண்டார்.

    இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த வழியாக சென்றவர்கள் அவரை தடுக்க முயன்றனர். அதற்குள் நாகராஜ் ரத்த வெள்ளத்தில் மயங்கி கீழே விழுந்தார். உடனடியாக அங்கு இருந்தவர்கள் இதுகுறித்து துடியலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உயிருக்கு போராடிய நாகராஜ் மேட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவரை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவுகள் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர் இது குறித்து துடியலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நடுரோட்டில் குடிபோதையில் பீர் பாட்டிலால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

    • முருகேசன் நதியாவுடன் சேர்ந்து வாழ மறுப்பு தெரிவித்து விட்டார்.
    • ரேஸ்கோர்ஸ் போலீசார் நதியா மற்றும் அவரது மகன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை,

    கோவை பாப்பநாயக்கன்பாளையம் அம்மன் குளத்தை சேர்ந்தவர் முருகேசன்(வயது42). தனியார் ஆஸ்பத்திரி ஊழியர்.

    இவருக்கு நதியா(37) என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். இந்தநிலையில், கணவன் -மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபா டுஏற்பட்டது. இதன் காரணமாக முருகேசன் மனைவியை பிரிந்து தனியாக வசித்து வருகிறார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு நதியா தனது கணவரை செல்போனில் தொடர்பு கொண்டு சேர்ந்து வாழ விருப்பம் தெரிவித்தார். அதற்கு முருகேசன் மறுப்பு தெரிவித்து விட்டார்.

    இதனால் ஆத்திரமடைந்த நதியா தனது மகனை அழைத்து கொண்டு நேற்று முன்தினம் முருகேசன் வீட்டுக்கு சென்றார். அவரை தன்னுடன் சேர்ந்து வாழ அழைத்தாக தெரிகிறது. அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த நதியா தனது மகனுடன் சேர்ந்து உருட்டுக்கட்டையால் முருகேசனை தாக்கினர்.

    பின்னர் கத்தியை காட்டி மிரட்டி அங்கிருந்து சென்றனர். தாக்குதலில் காயமடைந்த முருகேசனை அங்கிருந்தவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து முருகேசன் ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், சேர்ந்து வாழ மறுத்த கணவரை தாக்கிய மனைவி நதியா மற்றும் அவரது மகன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ரூ.1.5 லட்சம் செலவில் 11 கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.
    • டி.எஸ்.பி. நமச்சிவாயம் ரிப்பன் வெட்டி பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.

    கோவை,

    கோவை பெரியநாயக்கன்பாளையம் போலீஸ் நிலையம் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் குற்ற நடவடிக்கைகளை தடுக்கும் நோக்கில் தனியார் பங்களிப்புடன் பெரியநாயக்கன்பாளையம் டி.எஸ்.பி நமச்சிவாயம் மற்றும் இன்ஸ்பெக்ட்டர் தாமோதரன் ஆகியோர் பல்வேறு முக்கிய பகுதிகளில் கண்காணிப்பு காமிராக்களை அமைத்து வருகின்றனர்.

    கண்காணிப்பு காமிராக்களின் இயக்கங்கள் அனைத்தும் பெரியநாயக்கன்பாளையத்தில் இருந்து கண்காணிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள திருமலை நாயக்கன்பாளையத்தில் குற்ற நடவடிக்கைகளை தடுக்கும் நோக்கில் தனியார் பங்களிப்புடன் ரூ.1.5 லட்சம் செலவில் 11 கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.

    இதன் தொடக்க விழாவில் பெரியநாயக்கன்பாளையம் டி.எஸ்.பி. நமச்சிவாயம் கலந்து கொண்டு 3 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு காமிராக்களை ரிப்பன் வெட்டி பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.

    கண்காணிப்பு காமிராக்கள் அமைத்துக் கொடுத்தவர்களுக்கு சால்வை அணிவித்து பா ாட்டு தெரிவிக்கப்பட்டது.

    அப்போது அங்கிருந்த பொதுமக்களிடம் போலீஸ் சூப்பிரண்டு நமச்சிவாயம் பேசும்போது, பல லட்சம் மதிப்பில் வீடுகளை கட்டுவோர் குற்ற நட டிக்கைகளை தடுக்கும் விதமாக சில ஆயிரம் மதிப்பில் கண்காணிப்பு காமிராக்களையும் பொருத்த வேண்டும்.

    இதன் மூலம் குற்ற சம்பவங்களை தடுக்க முடியும் என்றார்.

    • தந்தை மகன் இருவரும் ஒன்றாக மது அருந்திவிட்டு இருவரும் குடிபோதையில் இருந்தனர்.
    • கோவில்பாளையம் போலீசார் குருநாதனை கைது செய்தனர்.

    கோவை,

    கோவை கீரணத்தம் விநாயகர் கோவில் வீதியை சேர்ந்தவர் கர்ணன் (வயது50). இவர் தனியார் நிறுவனத்தில் தோட்டப் பணியாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மகன் குருநாதன் (25). இவருக்கு திருமணமாகி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வருகிறார். இதனால் வேலைக்கும் செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார்.

    சம்பவத்தன்று தந்தை மகன் இருவரும் ஒன்றாக மது அருந்திவிட்டு இருவரும் குடிபோதையில் இருந்தனர். இந்நிலையில் கர்ணன் தனது மகனிடம், மனைவியுடன் சேர்ந்து வாழும்படியும், வேலைக்கு செல்லும்படியும் அறிவுறுத்தியுள்ளார். இதனால் அவர்களுக்கு இடையே வாய் தகராறு ஏற்பட்டது.

    இதில் கோபமடைந்த கர்ணன் அவரது மகனை திட்டியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த குருநாதன், அவரது தந்தையை தகாத வார்த்தைகளால் திட்டி, அருகில் இருந்த அரிவாள் மனையை எடுத்து தலை, முகம் மற்றும் பல இடங்களில் வெட்டினார். இதனையடுத்து அவரது அலறல் சத்தத்தை கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். பின்னர் காயம் அடைந்த அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து அவர் கோவில்பாளையம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் சம்பவ இடத்திற்க்கு விரைந்து சென்று குருநாதனை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • கோகுல் கொலை வழக்கில், ரவுடி கவுதமுக்கு தொடர்பு இருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
    • 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க ரத்னபுரி போலீசார் திட்டமிட்டனர்.

    கோவை,

    கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரத்தை சேர்ந்தவர் கவுதம் (வயது28). ரவுடியான இவர் மீது கோவை நகரில், 15-க்கும் மேற்பட்ட அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.

    கோவை கோர்ட்டு அருகே நடந்த கோகுல் கொலை வழக்கிலும், ரவுடி கவுதமுக்கு தொடர்பு இருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

    பல்வேறு வழக்குகளில் ஜாமீனில் வெளியே வந்த இவர், கடந்த சில ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தார். இந்த நிலையில் அவருக்கு கோர்ட்டு பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டது.

    இதையடுத்து போலீசார் ரவுடி கவுதமை தேடி வந்தனர். இந்த நிலையில் சில வாரங்களுக்கு முன்பு கவுதம் சென்னையில் கோர்ட்டில் சரண் அடைந்தார். அவரை போலீசார் கைது செய்து புழல் ஜெயிலில் அடைத்தனர்.

    பின்னர் அவர் புழல் ஜெயிலில் இருந்து கோவை மத்திய ஜெயிலுக்கு மாற்றப்பட்டார்.

    இந்த நிலையில் ரவுடி கவுதமிடம் விசாரணை நடத்த வேண்டி, அவரை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க ரத்னபுரி போலீசார் திட்டமிட்டனர். இதற்காக ஜே.எம்.3 கோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது மனுவை விசாரித்த நீதிபதி, ரவுடி கவுதமை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கொடுத்தார். இதையடுத்து போலீசார் ரவுடி கவுதமை ரகசிய இடத்திற்கு அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கோவையில் 4 மாவட்ட போலீசாருடனான ஆலோசனை கூட்டம் நடந்தது.
    • போதை பொருட்கள் விற்பனையை தடுப்பது உள்ளிட்ட சட்டம் ஒழுங்கு குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

    கோவை,

    கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு மாவட்ட போலீஸ் உயர் அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி சங்கர் தலைமை தாங்கினார்.

    கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி உள்ளிட்ட 4 மாவட்ட போலீஸ் அதிகாரிகளுடன் சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி சங்கர் இன்று ஆலோசனை நடத்தினார்.

    குற்ற வழக்குகளை விரைந்து முடிப்பது. வழக்குகள் சம்பந்தமான குற்றப்பத்திரிகை விரைவில் தாக்கல் செய்வது. ரவுடிகள் கண்காணிப்பை தீவிரப் படுத்துவது கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனையை தடுப்பது உள்ளிட்ட சட்டம் ஒழுங்கு குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. கூட்டத்தில் பங்கேற்ற போலீஸ் அதிகாரிகளுக்கு சட்டம் ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி சங்கர் பல்வேறு ஆலோசனைகளையும் வழங்கினார்.

    பிரதமர் மோடி நாளை மறுநாள் முதுமலைக்கு வருகிறார். இதனையொட்டி நீலகிரி மாவட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும், என்னென்ன மாதிரியான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்பது குறித்தும் போலீஸ் அதிகாரிகளுடன் சட்டம் ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி ஆலோசித்து பல்வேறு ஆலோசனைகளை தெரிவித்தார்.

    இந்த கூட்டத்தில் மேற்கு மண்டல ஐ.ஜி சுதாகர், கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், கோவை சரக டி.ஐ.ஜி விஜயகுமார், கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன், ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிகுமார், நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரபாகரன், திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷசாங் சாய் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    கூட்டம் முடிந்ததும் சட்டம் ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி. சங்கர் கோவை, திருப்பூர் மாவட்ட போலீஸ் நிலையங்களில் வரவேற்பாளராக பணிபுரிந்து வரும் போலீசாரை சந்தித்து பேசினார். அப்போது அவர்களிடம் போலீஸ் நிலையங்களுக்கு புகார் அளிக்க வரும் பொதுமக்களை காக்க வைக்க கூடாது. அவர்கள் போலீஸ் நிலையங்களுக்கு வந்ததும், என்ன பிரச்சினை என கேட்டு அவர்களின் குறைகளை கேட்க வேண்டும். குறைகளை கேட்டு உடனே அதனை நிவர்த்தி செய்ய வேண்டும். மேலும் போலீஸ் நிலையங்களுக்கு வரும் மக்களிடம் மிகவும் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும் எனவும் அறிவுரை வழங்கினார்.

    பின்னர் போலீஸ் நிலையங்களில் வரவேற்பாளராக பணியாற்றும் போலீசாருடன், சட்டம் ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி சங்கர் குழு புகைப்படம் எடுத்து கொண்டார்.

    • திருப்பூரில் உள்ள ஒரு கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர்.
    • இன்று காலை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தஞ்சம் அடைந்து மனு கொடுத்தனர்.

    கோவை,

    கோவை பட்டணம் அடுத்த நடுப்பாளையத்தை சேர்ந்தவர் பாலாஜி(வயது23).

    இவருக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பட்டணம் பகுதியை சேர்ந்த யோகேஸ்வரி(22) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. 2 பேரும் கடந்த 3 ஆண்டுகளாக ஒருவரையொருவர் தீவிரமாக காதலித்து வந்தனர்.

    இந்த நிலையில் இவர்களது காதல் விவகாரம் யோகேஸ்வரின் பெற்றோருக்கு தெரியவந்தது. அவர்கள் மகளின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் வாலிபரிடம் பேசுவதையும் தவிர்க்குமாறு கூறியதாக தெரிகிறது.

    இருப்பினும் காதல்ஜோடியினர் செல்போனில் பேசி தங்கள் காதலை வளர்த்து வந்தனர். இந்த நிலையில் பெற்றோர் தங்களை சேர விடமாட்டார்கள் என நினைத்த காதலர்கள் 2 பேரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.

    அதன்படி சம்பவத்தன்று காதல் ஜோடியினர் 2 பேரும் வீட்டை விட்டு வெளியேறி, திருப்பூரில் உள்ள ஒரு கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர்.

    இவர்கள் திருமணம் செய்து கொண்டது தெரியவரவே பெண்ணின் பெற்றோர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் காதலர்களான பாலாஜி, யோகேஸ்வரி ஆகியோர் பாதுகாப்பு கேட்டு இன்று காலை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தஞ்சம் அடைந்து மனு கொடுத்தனர்.

    மனுவில், நாங்கள் இருவரும் காதலித்து வந்தோம். பின்னர் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டோம். நாங்கள் இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் எங்களது வீட்டில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். மிரட்டலும் விடுக்கின்றனர். எங்களது உயிருக்கும் அச்சுறுத்தல் உள்ளது. எனவே எங்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என மனுவில் கூறியிருந்தனர்.

    • வினோத்குமாரிடமிருந்து லிப்ட் கேட்பது போல நடித்து ரூ.200 பணத்தை பறித்து சென்றார்.
    • போத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

    கோவை,

    கோவை வெள்ளலூர் அருகே உள்ள மகாலிங்கபுரத்தை சேர்ந்தவர் வினோத்குமார் (வயது 30). கூலித் தொழிலாளி. சம்பவத்தன்று இவர் தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டு இருந்தார்.

    மோட்டார் சைக்கிள் போத்தனூர் ராமசாமி வீதி வழியாக சென்ற போது அங்கு நின்று கொண்டு இருந்த வாலிபர் லிப்ட் கேட்டார்.

    இதனை பார்த்த வினோத்குமார் மோட்டார் சைக்கிளை நிறுத்தினார். அப்போது அந்த வாலிபர் கத்தியை காட்டி மிரட்டி ரூ.200 பணத்தை பறித்து சென்றார்.

    இது குறித்து வினோத்குமார் போத்தனூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து லிப்ட் கேட்பது போல நடித்து பணத்தை பறித்து சென்ற கோணவாய்க்கால் பாளையத்தை சேர்ந்த ஆறுபடையப்பன் (18) என்பவரை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    ×