search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கபிஸ்தலம்"

    கபிஸ்தலம் அருகே ஆற்றில் ஆண் பிணம் கிடைப்பதாக போலீசார் தவகவல் வந்தது. போலீசார் பிணத்தை மீட்டு தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கபிஸ்தலம்:

    கபிஸ்தலம் அருகே உள்ள வீரமாங்குடி கொள்ளிடம் ஆற்றில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் ஒன்று மிதந்து வந்தது. கருப்பு நிற சட்டை வேஷ்டி அணிந்த நிலையில் உடல் அழுகி ஒதுங்கி கிடந்த பிணத்தை அப்பகுதி பொதுமக்கள் மீட்டு வீரமாங்குடி கிராம நிர்வாக அலுவலரிடம் தெரிவித்தனர்.

    வீரமாங்குடி கிராம நிர்வாக அலுவலர் பாலசுப்பிரமணியன் இதுபற்றி கபிஸ்தலம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் கபிஸ்தலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அனந்தபத்மநாபன், சப்-இன்ஸ்பெக்டர்கள் ராகவன், வேம்பு, மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி ஆற்றில் மூழ்கிய வாலிபர் யார்? அவரை யாராவது கொலை செய்து தண்ணீரில் வீசி சென்றார்களா? என்பது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

    கபிஸ்தலம் அருகே வாகனத்தில் மணல் அள்ளிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கபிஸ்தலம்:

    கபிஸ்தலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) நாகரத்தினம், கபிஸ்தலம் சப்-இன்ஸ்பெக்டர் வேம்பு மற்றும் போலீசார் கபிஸ்தலம் பகுதிகளில் தீவிர ரோந்து சென்றனர்.

    அப்போது வீரமாங்குடி கொள்ளிடம் ஆற்று கரையில் எந்தவித முன் அனுமதியும் இன்றி மணல் அள்ளிய வாகனத்தை சோதனை செய்தனர். அந்த வாகனத்தில் எந்தவித முன் அனுமதியும் இல்லாமல் மணல் அள்ளி இருப்பது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து அந்த வாகனத்தை பறிமுதல் செய்து பாபநாசம் புது தெருவைச் சேர்ந்த சூர்யா (22) என்பவரையும், அதே பகுதியை சேர்ந்த ராமகிருஷ்ணன் (23) என்பவரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    ×