என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஐஸ்கிரீம்"
- கோடைகாலத்தில் கிடைக்கும் முலாம் பழத்தில் பல்வேறு ரெசிபிகளை செய்யலாம்.
- இன்று குளுகுளு முலாம் பழம் கிரனிதா செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
முலாம் பழம் - 1 (நடுத்தர அளவு)
எலுமிச்சம் பழச்சாறு - 1 மேசைக்கரண்டி
தண்ணீர் - 1 கப்
சர்க்கரை - ½ கப்
ஐஸ் கட்டிகள் - 8
செய்முறை:
முலாம் பழத்தை சுத்தம் செய்து, அதன் மேல் தோல் மற்றும் விதைகளை நீக்கி பொடிதாக நறுக்கிக் கொள்ளவும்.
சர்க்கரையை சிறிது தண்ணீர் சேர்த்து பாகு பதத்தில் காய்ச்சி ஆற வைக்கவும்.
பின்பு நறுக்கிய முலாம் பழம், எலுமிச்சம் பழச்சாறு, சர்க்கரை பாகு ஆகியவற்றை மிக்சியில் போட்டு கொரகொரப்பாக அரைக்கவும்.
அரைத்த கலவையை காற்று புகாத கண்ணாடி பாட்டிலில் போட்டு நன்றாக மூடி, பிரீசரில் வைக்கவும்.
ஒரு மணி நேரம் கழித்து, முள்கரண்டி கொண்டு அதை முழுவதுமாகக் கிளறவும்.
பின்னர் அந்த முலாம் பழக் கலவையை அழகான பவுலில் போட்டு, அதன்மேல் தேன் ஊற்றி அலங்கரித்து பரிமாறவும்.
ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health
- குல்பி ஐஸ்கிரீம் சுகாதாரமற்ற முறையில் தரமற்ற நிலையில் தயாரிக்கப்படுவதாக சுகாதாரத்துறைக்கு புகார்கள் வந்தன.
- மயிலாடுதுறை நகராட்சி அதிகாரிகள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் குல்பி ஐஸ்கிரீம் கடைக்கு சென்று சோதனை செய்தனர்.
தரங்கம்பாடி:
உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ரிஜிவான் அலி மற்றும் பதுருல் உசேன்.
இவர்கள் 2 பேரும் மயிலாடுதுறை நகராட்சிக்குட்பட்ட பனந்தோப்பு தெருவில் கடை வைத்து குல்பி ஐஸ்கிரீம் தயாரித்து விற்பனை செய்து வந்துள்ளனர்.
இந்நிலையில் இங்கு தயாரிக்கப்படும் குல்பி ஐஸ்கிரீம் சுகாதாரமற்ற முறையில் தரமற்ற நிலையில் தயாரிக்கப்படுவதாக சுகாதாரத்துறைக்கு புகார்கள் வந்தன.
இதைத் தொடர்ந்து இன்று காலை மயிலாடுதுறை நகராட்சி அதிகாரிகள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் குல்பி ஐஸ்கிரீம் கடைக்கு சென்று சோதனை செய்தனர். அப்போது அங்கு சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்பட்டிருந்த சுமார் 1 டன் ஐஸ்கிரீமை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து ரிஜிவான் அலி மற்றும் பதுருல் உசேனிடம் சுகாதாரத்துறை அதிகாரிகள் , மயிலாடுதுறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- குழந்தைகளுக்கு ஐஸ்கிரீம் என்றால் மிகவும் பிடிக்கும்.
- இன்று எளிய முறையில் மாம்பழ ஐஸ்கிரீம் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
பெரிய மாம்பழம் - 2
பால் - 1 கோப்பை
வெண்ணிலா ஐஸ்கிரீம் - 1 கோப்பை
ஜெல்லி - 2 மேஜைக் கரண்டி
செய்முறை :
பாலை சுண்டக் காய்ச்சி குளிர வைக்கவும்.
மாம்பழத்தை கழுவி தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
அதனுடன் சிறிது தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் போட்டு கூழாக அரைத்துக் கொள்ளவும்.
குளிரவைத்த பாலுடன் ஜெல்லி சேர்த்து நன்கு அடித்துக் கலந்து, அதனையும் மாம்பழச் சாறுடன் சேர்க்கவும்.
பால் கலந்த மாம்பழச்சாற்றை குளிர்சாதனப் பெட்டியில் சுமார் 2 மணி நேரம் வைத்து குளிர வைக்கவும்.
பின்னர் வெளியே எடுத்து வெண்ணிலா ஐஸ்கிரீம் சேர்த்து பரிமாறவும்.
இப்போது சூப்பரான மாம்பழ ஐஸ்கிரீம் ரெடி.
ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health
- பேட்டரி தள்ளு வண்டிகளில் ஐஸ் கிரீம் விற்பனையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
- ஒரு பேட்டரி வண்டி மற்றும் குளிர் சாதன பெட்டியின் விலை ரூ.1 லட்சத்து 21 ஆயிரத்து 658 ஆகும்.
சென்னை:
ஆவின் நிறுவனம் சார்பில் 'இல்லம் தேடி ஆவின்' என்ற பெயரில் பேட்டரி தள்ளுவண்டி மூலம் வீடு வீடாக சென்று ஆவின் ஐஸ்கிரீம் விற்பனை செய்யும் திட்ட தொடக்க விழா சென்னை சேப்பாக்கம் எழிலகம் வளாகத்தில் இன்று நடந்தது. நிகழ்ச்சிக்கு அமைச்சர் சா.மு.நாசர் தலைமை தாங்கினார்.
இதில் பேட்டரி தள்ளு வண்டிகளில் ஐஸ் கிரீம் விற்பனையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். பெண்களுக்கு சுய தொழில் தொடங்கும் திட்டத்தின் கீழ் இந்த தள்ளு வண்டிகளை 100-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். பின்னர் எழிலகம் ஆவின் பாலகத்தையும் அவர் பார்வையிட்டார்.
வீடு தேடி ஐஸ் கிரீம் விற்பனை செய்யும் இந்த வேலைவாய்ப்பு பெண்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு உள்ளது. இதில் ஒரு பேட்டரி வண்டி மற்றும் குளிர் சாதன பெட்டியின் விலை ரூ.1 லட்சத்து 21 ஆயிரத்து 658 ஆகும். ரூ.10 ஆயிரம் டெபாசிட் கட்டிய பெண்களுக்கு இந்த வண்டி வழங்கப்பட்டது.
வீடு வீடாக சென்று ஆவின் ஐஸ் கிரீம் விற்பனை செய்யும் பெண்களுக்கு ஒரு மொபைல் செயலி வழங்கப்பட்டுள்ளது. இந்த செயலியில் விற்பனை செய்வதற்கு என்னென்ன ஐஸ் கிரீம்கள் எவ்வளவு வேண்டும் என்பதை முந்தைய நாள் இரவே ஆர்டர் செய்து ஆன்லைனில் பணம் செலுத்த வேண்டும்.
மறுநாள் காலையில் அவர்களின் இருப்பிடத்துக்கு சென்று ஐஸ்கிரீம் வினியோகம் செய்யப்படும். இதை அவர்கள் வீடுகள் தோறும் சென்று விற்பனை செய்யலாம்.
ஐஸ்கிரீம் விற்பனை செய்யும் பெண்கள் கமிஷன் அடிப்படையில் வருவாய் ஈட்டலாம்.
குல்பி, கப் ஐஸ், சாக்கோபார், கசாடா, கேண்டி, பிரிமீயம் ஐஸ்கிரீம் உள்ளிட்ட 100 வகை ஐஸ்கிரீம்களை விற்பனை செய்யலாம். பொதுமக்கள் கூடும் இடங்களிலும் ஆவின் ஐஸ்கிரீம் விற்பனை செய்யப்படும். பள்ளி, கல்லூரி, குடியிருப்பு நிகழ்ச்சிகள், திருமணம், திருவிழா உள்ளிட்ட விழாக்களில் ஐஸ்கிரீம் தேவைப்பட்டாலும் இந்த பேட்டரி தள்ளு வண்டிகளில் ஐஸ் கிரீம் அனுப்பி வைக்கப்படும்.
ஆவின் பாலகத்தில் ஏற்கனவே லஸ்சி, தயிர், மோர், ஐஸ்கிரீம் ஆகியவை விற்பனை செய்யப்படுகிறது. தற்போது கோடையை முன்னிட்டு வீடுகளுக்கே சென்று ஐஸ்கிரீம் விற்பனை செய்யப்படுகிறது.
இந்நிகழ்ச்சியில் தி.மு.க. மாவட்ட செயலாளர் சிற்றரசு, பகுதி செயலாளர் மதன்மோகன், ஆவின் மேலாண்மை இயக்குனர் சுப்பையன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- ஃபலூடா என்றால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.
- இதை கடையில் வாங்குவதை விட வீட்டிலேயே எளிய முறையில் செய்யலாம்.
தேவையான பொருட்கள் :
ஐஸ்கிரீம் செய்ய
பால் - 1 கப்
ஓரம் நீக்கப்பட்ட பிரெட் -3
சர்க்கரை - 1/2 கப்
எசன்ஸ் -1 தேக்கரண்டி
ஃபலூடா செய்வதற்கு:
வேகவைத்த சேமியா- 1 கப்
ஜெல்லி - 1 கப்
நறுக்கிய பழங்கள் (ஆப்பிள், திராட்சை, பப்பாளி, வாழைப்பழம்)
செர்ரி பழம் - 3
முந்திரி, காய்ந்த திராட்சை - சிறிதளவு
செய்முறை:
முதலில் பாலை நன்கு சுண்ட காய்த்து கொள்ள வேண்டும்.
காய்ச்சிய பாலில் அதில் பிரெட் துண்டுகளை போட்டு சிறிது நேரம் அப்படியே வைத்து விட வேண்டாம். பால் ஆறியதும் அதில் சிறிது சர்க்கரை சேர்த்து மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்து அந்த கலவையை ஒரு 4 மணி நேரம் ஃபிரீஸரில் வைத்து விட வேண்டும்
பிறகு அந்த ஐஸ்கிரீம் கலவையில் எசன்ஸ் ஊற்றி மிக்ஸியில் போட்டு அடித்து விட வேண்டும். பின்பு ஒரு பாத்திரத்தில் மாற்றி 5 மணி நேரம் ஃபிரீஸரில் வைத்து விட வேண்டும்.
ஒரு நீளமான கண்ணாடி டம்பளரில் முதலில் சேமியா போடவும். பின்பு மேல் குறிப்பிட்ட அனைத்து பழங்களும் ஒன்றன் பின் ஒன்றாக போடவும். அதன் மேல் முந்திரி, காய்ந்த திராட்சை போடவும். கடைசியாக அதில் மேல் ஐஸ்கிரீம், செர்ரிபழம், ஜெல்லி வைத்து ருசி பார்க்கவும்
ஜில் ஜில் ஃபலூடா ஐஸ்கிரீம் தயார்.
ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health
பால் - 1 கப்
ஓரம் நீக்கப்பட்ட பிரட் -3
சர்க்கரை - 1/2 கப்
எசன்ஸ் - 1 தேக்கரண்டி
ஃபலூடா செய்ய தேவையான பொருட்கள் :
வேகவைத்த சேமியா - 1 கப்
ஜெல்லி - 1 கப்
நறுக்கிய பழங்கள் (ஆப்பிள், திராட்சை, பப்பாளி, வாழைப்பழம்)
செய்முறை :
முதலில் பாலை நன்கு சுண்ட காய்ச்சி கொள்ள வேண்டும்.
அதில் பிரட் துண்டுகளை போட்டு சிறிது நேரம் அப்படியே வைத்து விட வேண்டும்.
பால் ஆறியதும் அதில் சிறிது சர்க்கரை சேர்த்து மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்து அந்த கலவையை ஒரு 4-மணி நேரம் ஃபிரீஸரில் வைத்து விட வேண்டும்
பிறகு அந்த ஐஸ்கிரீம் கலவையில் எசன்ஸ் ஊற்றி மிக்ஸியில் போட்டு அடித்து விட வேண்டும்.
பின்பு ஒரு பாத்திரத்தில் மாற்றி 5 மணி நேரம் அப்படியே வைத்து விட வேண்டும்.
ஒரு நீளமான கண்ணாடி டம்பளரில் முதலில் வேகவைத்த சேமியா போடவும்.
பின்பு மேல் குறிப்பிட்ட அனைத்து பழங்களையும் ஒன்றன் பின் ஒன்றாக போடவும்.
கடைசியாக அதன் மேல் ஐஸ்கிரீம், செர்ரிபழம், ஜெல்லி வைத்து ருசி பார்க்கவும்.
சுவை மிகுந்த ஃபலூடா ஐஸ்கிரீம் தயார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்