search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருவொற்றியூர்"

    திருவொற்றியூரில் அனைத்து ரெயில்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என்று வாக்குறுதி அளித்து மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளரான ஏ.ஜி. மவுரியா பிரசாரம் செய்தார். #LokSabhaElections2019 #MNM
    சென்னை:

    வடசென்னை பாராளுமன்ற தொகுதி மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளரான முன்னாள் போலீஸ் ஐ.ஜி. ஏ.ஜி.மவுரியா தொகுதி முழுவதும் எளிமையான முறையில் பிரசாரம் செய்து வருகிறார். வண்ணாரப்பேட்டை, கொருக்குப்பேட்டை, தண்டையார்பேட்டை நெடுஞ்சாலை உள்ளிட்ட பகுதிகளிலும், திருவொற்றியூர் குப்பம், மார்க்கெட் காலடிப்பேட்டை மார்க்கெட் உள்ளிட்ட இடங்களில் மக்களை சந்தித்து பிரசாரம் செய்த மவுரியா அப்பகுதியில் நிலவும் குடிநீர் பிரச்சினை பற்றி கேட்டறிந்தார்.

    தெற்கு பகுதியில் இருந்து வரும் ரெயில்கள் தாம்பரத்தில் நின்று செல்வதுபோல, வடக்கில் இருந்து வரும் ரெயில்கள் திருவொற்றியூரில் நிற்பதற்கு நடவடிக்கை எடுப்பேன் என்று உறுதி அளித்தார். மழை காலங்களில் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்குவதை தீர்க்கப்படும் என்றும் கூறினார்.

    டார்ச் லைட் சின்னத்துடன் ஆடம்பரமின்றி மவுரியா எளிமையாக பிரசாரம் செய்வது மக்களை கவர்ந்துள்ளது. #LokSabhaElections2019 #MNM

    திருவொற்றியூரில் மாநகர பஸ் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்த 9-ம் வகுப்பு மாணவர், தவறி விழுந்து, பஸ் சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக இறந்தார். #BusAccident #StudentDeath
    திருவொற்றியூர்:

    எண்ணூர் அன்னை சிவகாமி நகர் 3-வது தெருவில் வசித்து வருபவர் பாஸ்கர். தனியார் தொழிற்சாலையில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மகன் கபிலன் (வயது 14). இவர், திருவொற்றியூர் ஜெய்கோபால் கரோடியா அரசு மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.

    மாணவர் கபிலன், நேற்று மாலை பள்ளிக்கூடம் முடிந்து வீட்டுக்கு செல்வதற்காக வள்ளலார் நகரில் இருந்து மாதவரம் செல்லும் மாநகர பஸ்சில்(தடம் எண் 56 டபிள்யூ) சென்றார். அவர், பஸ் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்ததாக கூறப்படுகிறது.

    திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் மெட்ரோ ரெயில் திட்டப்பணிகள் நடைபெற்று வருவதால் சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளத்தில் பஸ் தட்டு தடுமாறி சென்றது. பெரியார் நகர் அருகே சாலையில் உள்ள பள்ளத்தில் பஸ் இறங்கி ஏறியபோது, ஒருபுறமாக சாய்ந்தபடியே சென்றது.

    இதனால் பஸ் படிக்கட்டில் தொங்கியபடி வந்த மாணவர் கபிலன், சாலையோரம் இருந்த மின்சார பெட்டியில் மோதி பஸ்சுக்கு அடியில் விழுந்து விட்டார். அவர் மீது பஸ்சின் பின்புற சக்கரம் ஏறி இறங்கியது. இதில் மாணவர் கபிலன், அதே இடத்தில் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்துவந்த வண்ணாரப்பேட்டை போக்குவரத்து போலீசார், பலியான மாணவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    விபத்து பற்றி அறிந்ததும் அப்பகுதி மக்கள் அங்கு ஒன்று திரண்டனர். குண்டும் குழியுமாக உள்ள சாலையால் இந்த பகுதியில் அடிக்கடி சாலை விபத்துகள் நடைபெறுவதாக கூறி, சாலையை சீரமைக்க வலியுறுத்தி திடீரென அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    சாலையை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்தனர். அதை ஏற்று பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த விபத்து காரணமாக திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    விபத்து குறித்து வண்ணாரப்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து மாநகர பஸ் டிரைவரான மீஞ்சூரை அடுத்த விச்சூரைச் சேர்ந்த விநாயகம் (40) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். #BusAccident #StudentDeath

    திருவொற்றியூரில் பெண் வியாபாரியிடம் ரூ.40 ஆயிரம் திருடிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவொற்றியூர்:

    கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்தவர் சாந்தி. இவர் திருவொற்றியூர் மார்க்கெட் பகுதியில் பழ வியாபாரம் செய்து வருகிறார். நேற்று இரவு அவர் மார்க்கெட் பகுதியில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது சுருக்கு பையில் வைத்திருந்த 11 பவுன் நகை மற்றும் ரூ.40 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்று விட்டனர்.

    இதுகுறித்து திருவொற்றியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மாலதி விசாரணை நடத்தி வருகிறார்.

    திருவொற்றியூரில் குப்பைகளை எரித்ததால் அப்பகுதி முழுவதும் புகை மூட்டமாக காட்சியளித்தது. மேலும் அந்த சாலை வழியாக சென்ற பொதுமக்களுக்கு கண் எரிச்சலுடன் மூச்சு திணறல் ஏற்பட்டது. #garbageburning
    திருவொற்றியூர்:

    திருவொற்றியூர் கரிமேடு பகுதியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்றனர். இதன் அருகே பல ஏக்கர் ரயில்வே நிலம் உள்ளது. இங்கு காலியாக உள்ள இடத்தில் மாநகராட்சியும் , தனியார் நிறுவனத்தை சேர்ந்தவர்களும் குப்பைகளை கொண்டு வந்து இங்கு கொட்டுவதால் மலைபோல் குவிந்துள்ளது.

    இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. இந்த குப்பைகளை அப்புறப்படுத்த வேண்டும், தொடர்ந்து குப்பை கொட்ட கூடாது என்று அப்பகுதியை சேர்ந்த மக்கள் பலமுறை திருவொற்றியூர் மண்டல அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தனர். ஆனாலும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இந்நிலையில் இன்று அதிகாலை மலைபோல் குவிந்துள்ள குப்பையில் மர்மநபர்கள் யாரோ தீ வைத்து விட்டனர். இதனால் தீ கொழுந்து விட்டு எரிந்து அப்பகுதி முழுவதும் புகை மூட்டமாக காட்சியளித்தது. மேலும் அந்த சாலை வழியாக இரண்டு சக்கர வாகனம் மற்றும் நடந்து சென்ற பொதுமக்களுக்கு கண் எரிச்சலுடன் மூச்சு திணறல் ஏற்பட்டது.

    இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் 3 தீயணைப்பு வண்டிகளில் விரைந்து வந்து குப்பையில் பற்றிய தீயை அணைத்தனர். #garbageburning

    திருவொற்றியூரில் என்ஜினீயர் வீட்டில் நகை-பணம் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவொற்றியூர்:

    திருவொற்றியூர் ஜோதி நகர், 4-வது தெருவை சேர்ந்தவர் பழனியப்பன், என்ஜினீயர். இவர் கடந்த 17-ந்தேதி வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் திண்டுக்கல்லில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார்.

    நேற்று காலை பழனியப்பன் திரும்பி வந்தபோது வீட்டு கதவு பூட்டு உடைந்து கிடந்தது. பீரோவில் இருந்த 12 பவுன் நகை, ரூ.5 ஆயிரம் கொள்ளை போய் இருந்தது.

    வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் நகை- பணத்தை அள்ளிச்சென்று இருப்பது தெரிந்தது. இதுகுறித்து சாத்தாங்காடு போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    இதேபோல் அதே பகுதியை சேர்ந்த விஜயகுமார் என்பவர் தனது காரை அங்குள்ள போலீஸ் பூத் அருகே நிறுத்தி இருந்தார். மர்ம நபர்கள் காரில் இருந்த ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள டேப் ரிக்கார்டரை திருடி சென்று விட்டனர்.

    கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சியை வைத்து அதே பகுதியை சேர்ந்த 2 வாலிபர்களை போலீசார் பிடித்து உள்ளனர்.

    திருவொற்றியூரில் வடமாநில வாலிபர் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவொற்றியூர்:

    திருவொற்றியூர் விம்கோ நகரில் தனியார் பள்ளி உள்ளது. இதன் பின் பகுதியில் உள்ள மழை நீர் கால்வாயில் சுமார் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரது கழுத்து அறுக்கப்பட்டு இருந்தது.

    இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் திருவொற்றியூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    கொலையுண்ட வாலிபர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர் என்று தெரிய வில்லை. வட மாநிலத்தவர் தோற்றத்தில் காணப்பட்டார். டி-சர்டடும், ஷாட்சும் அணிந்து இருந்தார்.

    உடல் கிடந்த இடம் அருகே கத்தி கிடந்தது. அதனை போலீசார் கைப்பற்றினர். கொலையாளிகள் யார்? கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருவொற்றியூர், மணலி பகுதியில் ஏராளமான தொழிற்சாலைகள் உள்ளன. இதில் வட மாநில வாலிபர்கள் பலர் வேலை பார்த்து வருகிறார்கள்.

    எனவே நண்பர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் அவரை யாரேனும் அழைத்து வந்து கொலை செய்தனரா? என்ற கோணத்தில் விசாரணை தொடங்கி உள்ளனர்.

    இது தொடர்பாக தொழிற்சாலைகளில் வேலை பார்த்த வட மாநில வாலிபர் யாரேனும் மாயமாகி உள்ளனரா? என்ற விபரத்தை சேகரித்து வருகிறார்கள்.

    வாலிபர் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் திருவொற்றியூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×