search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 114897"

    பெரம்பூர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் ஆர்.டி.சேகர் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுடன் சேர்ந்து வீதி வீதியாக ஆதரவு திரட்டி வருகிறார். #LokSabhaElections2019

    சென்னை:

    பெரம்பூர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் ஆர்.டி.சேகர் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுடன் சேர்ந்து வீதி வீதியாக ஆதரவு திரட்டி வருகிறார்.

    45-வது வட்டத்தில் நடந்து சென்று உதயசூரியன் சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார். கலைஞர் விட்டு சென்ற பணிகளை கடமை தவறாமல் நிறைவேற்ற தயாராக இருக்கும் தலைவர் மு.க.ஸ்டாலின் கரத்தை வலுப்படுத்த தனக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க கேட்டுக்கொண்டார்.

    பெரம்பூர் தொகுதியின் வளர்ச்சிக்கு என்னென்ன திட்டங்கள் செயல்படுத்த வேண்டும் என்பதை ஆய்வு செய்து அதனை படிப்படியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பேன் என ஆர்.டி.சேகர் உறுதியளித்தார்.

    வேட்பாளருடன் மாவட்ட செயலாளர் சுதர்சனம், பொறுப்பாளர்கள் வைத்திய லிங்கம், பாலவாக்கம் சோமு, முன்னாள் எம்.எல்.ஏ. மகேந்திரன், பகுதி செயலாளர் ஜெயராமன், வட்ட செயலாளர் மாரிமுத்து மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் சென்றனர். #LokSabhaElections2019

    நீட் தேர்வு ரத்து, பழைய ஓய்வூதிய திட்டம், மாணவர்களுக்கு இலவச ரெயில் பாஸ், கேபிள் டிவி கட்டணம் குறைப்பு உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை திமுக தனது தேர்தல் அறிக்கையில் வழங்கி உள்ளது. #LSPolls #DMKManifesto
    சென்னை:

    தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 பாராளுமன்ற தொகுதிகளுக்கும், தமிழகத்தில் காலியாக இருக்கும் 18 சட்டசபை தொகுதிகளுக்கும் வரும் ஏப்ரல் 18-ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது. இந்த தேர்தலுக்கான திமுக தேர்தல் அறிக்கையை கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார். அதில் உள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

    வேளாண்துறைக்கு தனியாக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும். மத்திய அரசின் வரி வருவாயில் 60 சதவீதம் மாநிலங்களுக்கு பகிர்ந்து அளிக்கவேண்டும். பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரப்படும்.



    மாணவர்களுக்கு நடத்தப்படும் நீட் தேர்வு ரத்து செய்யப்படும். மாணவர்களின் கல்விக்கடன் அனைத்தையும் முழுவதுமாக தள்ளுபடி செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும். சேலம், மதுரை, திருச்சி, கோவையில் மெட்ரோ ரெயில் சேவை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    தேசிய நெடுஞ்சாலைகளை பராமரிக்க 10ம் வகுப்பு வரை படித்துள்ள ஒரு கோடி பேர் சாலை பணியாளர்களாக நியமிக்கப்படுவார்கள். தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீட்டு முறையை அமல்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

    கிராமப்புறங்களுக்கு 10ம் வகுப்பு வரை படித்தவர்கள் மக்கள் நலப் பணியாளர்களாக நியமிக்கப்படுவார்கள். கிராமப்புறங்களில் வறுமைக் கோட்டுக்கு கீழே வசிக்கும் பெண்கள் சிறு தொழில் தொடங்க 50 ஆயிரம் ரூபாய் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படும்.
    அகதிகள் முகாம்களில் உள்ள அனைவருக்கும் இந்திய குடியுரிமை வழங்கப்படும்.

    பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இலவச ரெயில் பயண சலுகை வழங்கப்படும். மீத்தேன், ஹைட்ரோ கார்பன் போன்ற சுற்றுச்சூழலை பாதிக்கக்கூடிய திட்டங்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

    பாலியல் குற்றங்களைத் தடுக்க உரிய சட்டம் நிறைவேற்றப்படும். காவிரி டெல்டா பகுதியானது பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிக்கப்படும். கேபிள் டிவி கட்டணம் முந்தைய அளவுக்கு குறைக்கப்படும். கீழடியில் தொல்லியல் ஆய்வு தொடரும்.

    இவ்வாறு திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #LSPolls #DMKManifesto
    தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் ஊழல் அமைச்சர்கள் ஜெயிலுக்கு போவார்கள் என்று கூறிய மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் பாண்டியராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார். #ADMK #MinisterPandiarajan #DMK #MKStalin
    திருவள்ளூர்:

    திருவள்ளூரில் அ.தி.மு.க. தொழிற்சங்க நிர்வாகியின் மகன் திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    இடைத்தேர்தல் அறிவிக்கும் முன்பே பொறுப்பாளர்களை நியமித்த கட்சி அ.தி.மு.க தான். கடந்த தேர்தலில் வெற்றி பெற்றதைவிட இருமடங்கு வாக்கு வித்தியாசத்தில் அதிமுக வெற்றி பெறும்.

    அதற்காக அ.தி.மு.க நிர்வாகிகள் முதல் தொண்டர்கள் வரை அனைவரும் தயாராக இருக்கிறார்கள். பூந்தமல்லி தொகுதி பொறுப்பாளராக நான் இருப்பதால் 40 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம்.


    திமுக ஆட்சிக்கு வந்தால் ஊழல் அமைச்சர்கள் ஜெயிலுக்கு போவார்கள் என்று தி.மு.க தலைவர் ஸ்டாலின் கூறுகிறார்.

    ஸ்டாலினின் ஆணவப் பேச்சால் தான் ஆர்.கே.நகர் தொகுதியில் டெபாசிட் இழந்தனர். பிரியாணி கடை யை அடித்து உடைப்பதும், பியூட்டி பார்லரில் பெண்களை தாக்குவதும், பேன்சி ஸ்டோரை அடித்து உடைக்கும் தி.மு.க. வினரை முதலில் கட்டுக்கோப்போடு நடத்துங்கள். உங்கள் அராஜகத்தை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

    தேர்தலில் யார் ஜெயிப்பது, யாரை எங்கே அனுப்புவது என்று பார்த்துக் கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் கூறினார். #ADMK #MinisterPandiarajan #DMK #MKStalin
    புதிய தலைமை செயலகம் தொடர்பான வழக்கில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை நாளை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற உள்ளது. #DMK #HighCourt #MKStalin
    சென்னை:

    தி.மு.க. ஆட்சி காலத்தில் சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்பட்டது.

    2011-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின், புதிய தலைமைச் செயலகம் கட்டியதில் முறைகேடுகள் நடந்ததாக கூறப்பட்ட புகார்கள் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ரகுபதி தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டது.

    இந்த ஆணையம் அனுப்பிய சம்மனை எதிர்த்து மறைந்த முதல்வர் கருணாநிதி, தற்போதைய தி.மு.க. தலைவர் ஸ்டாலின், பொருளாளர் துரைமுருகன் ஆகியோர் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் நீதிபதி ரகுபதி ஆணையத்தை நிறுத்தி வைக்க உத்தரவிட்டதுடன், இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை பெற்று, அவற்றை பரிசீலித்து குற்ற நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டது.


    தனி நீதிபதி எஸ் எம்.சுப்பிரமணியத்தின் உத்தரவை எதிர்த்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

    இந்த நிலையில், இந்த வழக்கை அவசர வழக்காக இன்று விசாரணைக்கு ஏற்க வேண்டும் என்று ஐகோர்ட்டு நீதிபதிகள் ஹூலுவாடி ஜி.ரமேஷ், நீதிபதி கே.கல்யாணசுந்தரம் ஆகியோர் முன்பு ஸ்டாலின் தரப்பு வக்கீல் ஆஜராகி முறையிட்டார். இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கை நாளை விசாரணைக்கு எடுப்பதாக உத்தரவிட்டனர்.  #DMK #HighCourt #MKStalin
    மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதி உடல் நலம் பற்றி நேரில் சென்று முதல்வர் விசாரித்தது நல்ல மாண்பு என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் நடிகர் கமலஹாசன் பாராட்டியுள்ளார். #Karunanidhi #karunanidhiHealth #KamalHassan
    சென்னை :

    மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் நடிகர் கமலஹாசன் நேற்று சென்னையில் இருந்து விமானம் மூலம் மும்பைக்கு புறப்பட்டுச் சென்றார். முன்னதாக அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    திமுக தலைவர் கலைஞரை சந்திக்க முடியவில்லை. என்னுடைய ஆதங்கத்தின் காரணமாக போனேன். கலைஞர் நலம் பெற்றுவிட்டதாகவும், இல்லை என்றும் கூறுவதும் பற்றி எனக்கு தெரியாது.

    சிகிச்சை நடந்துகொண்டு இருக்கிறது. கலைஞர் நலம் பெற வேண்டும் என்பதுதான் எல்லோரையும் போல் என்னுடைய ஆசையும் ஆகும்.

    ரஜினிகாந்த் வெளியூரில் இருப்பதால் சந்திக்கவில்லை. நல்ல செய்தியாக இருக்கும் என்பதால் வெளியூர் செல்கிறேன். 
    கலைஞரை, முதல்வர் உள்பட அதிமுகவினர் நேரில் சென்று உடல்நலம் விசாரித்தது நல்ல மாண்பு. 19 வயதில் இருந்து அரசியலில் இருக்கும் பெரும் தலைவர். அவர் எப்படிப்பட்ட தலைவர் என்பது முக்கியமல்ல. இது போன்ற நிகழ்வுகளில் மாண்பு காண்பிப்பது பாராட்டுக்குரியது என தெரிவித்துள்ளார். #Karunanidhi #karunanidhiHealth #KamalHassan
    ×