search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அழகிரி"

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து உள்ளனர். #PeriyarStatueVandalised #KSAlagiri #Ramadoss #vaiko
    சென்னை:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

    தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ் சமூகத்திற்கு எவருமே ஆற்ற முடியாத அரும்பெரும் பணிகளை செய்த பெரியாரின் சிலையை தமிழகத்திலுள்ள வகுப்புவாத சக்திகள் இத்தகைய வன்முறைச் செயலின் மூலம் சிலைக்கு சேதாரம் ஏற்படுத்தியது குறித்து காவல்துறையினர் உடனடியாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கிற வகுப்புவாத, பாசிச, பிற்போக்கு சக்திகளை அடையாளம் கண்டு, வழக்கு பதிவு செய்து, கைது செய்யப்பட வேண்டும். அப்படி நடவடிக்கை எடுக்கப்படவில்லையெனில் பெரியார் மீது பற்று கொண்ட மதச்சார்பற்ற முற்போக்கு சக்திகள் அணி திரண்டு கடுமையான போராட்டம் நடத்த வேண்டிய நிலை ஏற்படுமென தமிழக அரசை எச்சரிக்கிறேன்.

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்:-

    தமிழ்நாடு அமைதியாக இருப்பதை சகித்துக் கொள்ள முடியாத சக்திகள் தான் இந்த சமூக விரோத செயலை செய்துள்ளனர். இத்தகைய செயல்களை தமிழக அரசும், காவல்துறையும் இனியும் அனுமதிக்கக்கூடாது.

    பெரியாரின் சிலையை சேதப்படுத்தியவர்களை அடையாளம் கண்டு கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ:-

    பெரியாரின் கருத்துக்களை உடைக்க முடியாத கூட்டம், அவரது சிலைகளைச் சேதப்படுத்தி தமிழ்நாட்டில் ரத்தக்களரி ஏற்படுத்துவதற்குத் திட்டமிட்டு சதிவலை பின்னி வருவதற்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    பாராளுமன்ற பொதுத்தேர்தலைச் சந்திக்கும் நேரத்தில் பெரியார் சிலையை உடைத்து, கலவர விதைகளைத் தூவ நினைப்போரின் உள் நோக்கம் ஒருபோதும் நிறைவேறாது.

    இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர். #PeriyarStatueVandalised #KSAlagiri #Ramadoss #vaiko
    டி.டி.வி. தினகரன் தற்போது அ.தி.மு.க.வில் உறுப்பினராக இல்லை. அவர் ஏற்கனவே அம்மாவால் வெளியேற்றப்பட்டவர் என்று அமைச்சர் உதயகுமார் பேசினார். #ministerudayakumar #dinakaran

    மதுரை:

    திருப்பரங்குன்றம் தொகுதிக்கு உட்பட்ட சிலைமான் பகுதியில் அ.தி.மு.க. பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு பிறகு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஏற்கனவே அம்மா பேரவை சார்பில் அரசின் சாதனைகளை விளக்கி இளைஞர்கள் பங்கேற்கும் சைக்கிள் பேரணியை நடத்தி வருகிறோம். இது மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது.

    திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதியிலும் இளைஞர்கள் பங்கேற்ற சைக்கிள் பேரணி நடந்தது. இதில் பெண்களும் அரசின் சாதனைகளை விளக்கி கூறுவதற்காக சைக்கிள் பேரணியில் பங்கேற்கிறோம் என்று ஆர்வம் தெரிவித்தனர்.

    அதன் அடிப்படையில் வருகிற 24-ந் தேதி 2,500 பெண்கள் பங்கேற்கும் சைக்கிள் பேரணி நடைபெறுகிறது. இதில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், செல்லூர் ராஜூ, வேலுமணி உள்ளிட்ட 15 அமைச்சர்கள் கலந்து கொள்கிறார்கள்.

    சைக்கிள் பேரணியில் பங்கேற்கும் பெண்களுக்கு ஆலோசனை வழங்குவதற்காக ரிங்ரோடு வேலம்மாள் திருமண மண்டபத்தில் நாளை (13-ந் தேதி) பயிற்சி முகாம் நடைபெறுகிறது.

    இதில் அமைச்சர்கள் ராஜலட்சுமி, வளர்மதி மற்றும் முன்னாள் அமைச்சர்கள் பா.வளர்மதி, கோகுல இந்திரா உள்ளிட்டோரும் கலந்து கொண்டு ஆலோசனை வழங்குகிறார்கள்.

    அரசின் சாதனைகளை எடுத்துக்கூறும் இந்த சைக்கிள் பேரணி ஜெயலலிதா பேரவை சார்பில் அந்தந்த மாவட்ட நிர்வாகிகளின் பங்களிப்புடன் ஒருங்கிணைந்து நடத்தப்படுகிறது.

    ஒரு தனி நபரால் இதை செய்ய முடியாது. அனைவரின் கூட்டு முயற்சியோடு இதை நடத்தி வருகிறோம்.

    இந்த சைக்கிள் பேரணிக்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு இருப்பதை பொறுத்துக் கொள்ள முடியாத சிலர், தேவையற்ற அவதூறுகளை பரப்பி வருகிறார்கள்.

    அ.தி.மு.க. பொதுக்குழு, செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அந்த தீர்மானத்தை தேர்தல் ஆணையமும் அங்கீகரித்து ஒருங்கிணைப்பாளர்- துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர்- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரது தைைமையின் கீழ் செயல் பட்டு வருகிறோம்.

    டி.டி.வி. தினகரன் தற்போது அ.தி.மு.க.வில் உறுப்பினராக இல்லை. அவர் ஏற்கனவே அம்மாவால் வெளியேற்றப்பட்டவர்.

    1.10 கோடி உறுப்பினர்கள் கொண்ட அ.தி.மு.க. வில் தங்களது உறுப்பி னர் அட்டைகளை புதுப்பித்தவர்கள் தான் உறுப்பினர் என்ற தகுதியை பெறுவார்கள். தினகரன் போன்றவர்கள் உறுப்பினர் படிவத்தை புதுப்பிக்கும் தகுதி இல்லாதவர்கள்.

    அவர் அ.தி.மு.க.வில் உறுப்பினராவது என்பது முடிந்து போன ஒன்று. ஆனால் அ.தி.மு.க.வில் குழப்பத்தை ஏற்படுத்தவும், தொண்டர்களிடம் சலசலப்பை உருவாக்கவும் தினகரன் போன்றவர்கள் அவ்வப்போது அவதூறு செய்து வருகிறார்கள். அது எடுபடாது.

    அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் என்பது ஒரு அங்கீகாரம் இல்லாத இயக்கம். தினகரன் தன்னை முன்னிலைப்படுத்த வேண்டும் என்பதற்காக, தனக்கு பதவியை உருவாக்க வேண்டும் என்பதற்காக ஏற்படுத்தப்பட்ட இயக்கம் தான் அ.ம.மு.க. இதற்கு தேர்தல் ஆணையமும் அங்கீகாரம் வழங்கவில்லை.

    தினகரன் சுயேட்சை எம்.எல்.ஏ.வாகத்தான் இன்னும் இருக்கிறார். கருத்து தெரிவிக்கும் அமைச்சர்கள் மீது அவர் கட்டுக்கதைகளை அவிழ்த்து விடுகிறார். அதை மக்கள் நம்ப மாட்டார்கள்.

    எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரது வழிகாட்டுதலில் அ.தி.மு.க. தெளிவான பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறது.

    கற்பை இழந்த பெண் கண்ணகியை அடையாளம் காட்ட முடியாதது போல தினகரன் அ.தி.மு.க.வில் சேரும் தகுதியை இழந்து விட்டார்.


    தினகரனையும், அவரது குடும்பத்தினரையும் நாங்கள் தான் தோளில் தூக்கிச் சுமந்தோம். அந்த குடும்பத்தை ஒதுக்கி வைத்துவிட்டு நாங்கள் எடுத்த முடிவில் உறுதியாக, நிலையாக பயணித்து வருகிறோம்.

    அ.தி.மு.க.வில் குழப்பத்தை ஏற்படுத்த பல்வேறு யுக்திகளை செய்து வருகிறார்கள். தங்களை நிலைநிறுத்திக் கொள்ள தினகரன் செய்து வரும் சூழ்ச்சிகள் தமிழகத்தின் சாபக்கேடு.

    தி.மு.க.வில் ஒதுக்கி வைத்துள்ள அழகிரியுடன், தினகரன் கள்ள கூட்டணி வைத்துள்ளார்.

    திருப்பரங்குன்றம் இடைத் தேர்தல் அ.தி.மு.க. வின் தோல்வி பயத்தால் தள்ளி வைக்கப்படவில்லை. திருப்பரங்குன்றம் தொகுதி மக்களை அ.தி.மு.க.வினர் தினமும் சந்தித்து வருகிறார்கள். நலத்திட்டங்கள், வளர்ச்சி திட்டங்கள் செயல் படுத்தப்பட்டு வருகின்றன.

    எப்போது தேர்தல் நடந்தாலும் அ.தி.மு.க. அமோக வெற்றி பெறும்.

    இவ்வாறு அவர் கூறி னார்.

    பேட்டியின் போது சரவணன் எம்.எல்.ஏ., நிர்வாகிகள் வெற்றிவேல், தமிழரசன், மாரிச்சாமி உள்ளிட்ட பலர் இருந்தனர். #ministerudayakumar #dinakaran

    திமுக தலைவர் ஸ்டாலினும், அழகிரியும் இணைந்து செயல்பட வேண்டும் என மதுரை ஆதீனம் கருத்து தெரிவித்துள்ளார். #MaduraiAdheenam
    மதுரை:

    திமுக தலைவர் கருணாநிதியின் மறைவுக்குப் பிறகு அவரது மகன் மு.க.அழகிரி மீண்டும் கட்சியில் சேரும் முயற்சியில் ஈடுபட்டார். ஆனால், கட்சி தலைமை அவரை கண்டுகொள்ளவில்லை. இதனையடுத்து தனது ஆதரவாளர்களுடன் சென்னையில் கருணாநிதி நினைவிடம் நோக்கி பேரணி நடத்தினார் மு.க.அழகிரி. இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதுபற்றி மதுரை ஆதீனம் கூறுகையில், திமுக தலைவர் ஸ்டாலினும், அழகிரியும் இணைந்து செயல்பட வேண்டும் என கூறியுள்ளார்.

    ரஜினியின் அரசியல் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், ரஜினி அரசியலுக்கு முழுமையாக வரவில்லை என்றும் எம்.ஜி.ஆர் போன்று எல்லா நடிகர்களாலும் வரமுடியாது என்றும் கூறினார்.



    ‘சோபியா கைது செய்யப்பட்டிருக்க கூடாது, அவரை அழைத்து பேசியிருக்க வேண்டும். தமிழிசை சத்தம் போட்டது இயல்பு தான், அவர் அவரின் கடமையை செய்திருக்கிறார்’ என்றும் மதுரை ஆதீனம் தெரிவித்தார். #MaduraiAdheenam
    திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தலைமையில் நாளை சென்னையில் நடைபெற உள்ள கூட்டத்தில், மு.க அழகிரி பேரணியில் கலந்து கொண்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? என்பது தெரியவரும். #DMK #MKStalin
    சென்னை:

    திமுக தலைவராக மு.க ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்ட பின்னர், அவர் தலைமையில் நாளை அக்கட்சி மாவட்ட செயலாளர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் காலை 10 மணிக்கு நடக்க உள்ளது. 

    கடந்த 5-ம் தேதி கருணாநிதி சமாதியை நோக்கி பேரணி நடத்திய மு.க அழகிரி, “பேரணியில் பங்கேற்ற 1 1/2 லட்சம் பேர் மீது நடவடிக்கை எடுப்பீர்களா?” என மறைமுகமாக ஸ்டாலினுக்கு கேள்வி எழுப்பியிருந்தார். மேலும், கட்சி நிர்வாகிகள் யாரும் அழகிரி பேரணியில் பங்கேற்றனரா? என்ற விசாரணையையும் ஸ்டாலின் நடத்தியதாக கூறப்பட்டது.

    இந்நிலையில், அப்படி கட்சி நிர்வாகிகள் பங்கேற்றது தெரிய வரும் பட்சத்தில் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து நாளை நடக்க உள்ள கூட்டத்தில் முடிவெடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
    திமுக பொதுக்குழு வரும் 28-ம் தேதி மு.க ஸ்டாலின் தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் கூடும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவித்துள்ளார். #DMK #MKStalin
    சென்னை:

    திமுக தலைவராக இருந்த கருணாநிதி கடந்த 6-ம் தேதி காலமானார். இதனை அடுத்து, சமீபத்தில் கூடிய அக்கட்சியின் செயற்குழு கூட்டத்தில் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தி மட்டும் பேசப்பட்டது. தலைவர் உள்ளிட்ட மற்ற பதவிகள் தொடர்பாக எதுவும் விவாதிக்கப்படவில்லை.

    இந்நிலையில், அடுத்தவாரம் 28-ம் தேதி காலை 9 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் திமுக பொதுக்குழு மு.க ஸ்டாலின் தலைமையில் கூடும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவித்துள்ளார். பொதுக்குழு உறுப்பினர்கள் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

    தலைவர், பொருளாளர் உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்தல் நடத்துவது குறித்து விவாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 5-ம் தேதி கருணாநிதி சமாதியை நோக்கி பேரணி செல்ல உள்ளதாக மு.க அழகிரி அறிவித்துள்ள நிலையில் திமுக பொதுக்குழு கூடுவது மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
    மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் ஸ்டாலின், அழகிரி, கனிமொழி மற்றும் கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் அஞ்சலி செலுத்தினர். #KarunanidhiDeath #DMK #MKStalin
    சென்னை:

    தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா சமாதியின் பின்புறம் நேற்று அடக்கம் செய்யப்படது. சமாதியின் அருகில் கருணாநிதியின் மிகப்பெரிய படம் வைக்கப்பட்டுள்ளது. அங்கு தி.மு.க. கொடி நடப்பட்டுள்ளது. சமாதியை சுற்றி பூக்களால் அலங்காரம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

    மேலும், சமாதிக்கு மேலே தற்காலிகமாக கூரை அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று இரவு 8 மணியளவில் கருணாநிதியின் நினைவிடத்துக்கு வந்த ஸ்டாலின், அழகிரி, கனிமொழி உள்ளிட்ட கருணாநிதி குடும்ப உறுப்பினர்கள் அவரது சமாதியில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

    அவர்கள் அஞ்சலி செலுத்தும் நேரத்தில் கனமழை பெய்து கொண்டிருந்தது. மு.க.ஸ்டாலின் இன்று பகல் 12 மணியளவில் கருணாநிதி சமாதிக்கு வந்து சமாதியில் மாலை வைத்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
    காவிரி மருத்துவமனையில் இருந்து புறப்பட்ட மு.க அழகிரி செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், தி.மு.க தலைவர் கருணாநிதி உடல்நலமுடன் இருப்பதாக தெரிவித்துள்ளார். #Karunanidhi #MKAlagiri #KauveryHosipital #DMK #GetWellKarunanidhi
    சென்னை:

    தி.மு.க தலைவர் கருணாநிதி காவிரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். வயது மூப்பின் காரணமாக அவரது உடல்நிலையில் அடிக்கடி மாறுதல்கள் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து 2 நாட்களாக கருணாநிதியின் உடல்நிலையில் தொய்வு ஏற்பட்டதையடுத்து, இன்று காலை அவரது உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

    இதையடுத்து, தி.மு.க தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து அறிந்துகொள்ள தொண்டர்கள், கழக நிர்வாகிகள் என அனைவரும் காவிரி மருத்துவமனைக்கு வருவதும், தொலைப்பேசியில் தொடர்பு கொள்வதுமாக இருந்தனர். மேலும், கருணாநிதியை சந்திக்க அவரது மனைவி தயாளு அம்மாள் உட்பட குடும்பத்தினர் அனைவரும் காவிரி மருத்துவமனை வந்தடைந்தனர். இதனால் பொதுமக்கள் மற்றும் தொண்டர்களிடையே பரபரப்பு அதிகமானது.

    இந்நிலையில், காவிரி மருத்துவமனையில் இருந்து புறப்பட்ட மு.க அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, திமுக தலைவர் கருணாநிதி உடல் நலத்துடன் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். #Karunanidhi #MKAlagiri #KauveryHosipital #DMK #GetWellKarunanidhi
    மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கருணாநிதி நலமுடன் இருப்பதாக மு.க அழகிரி தெரிவித்துள்ளார். #DMK #Karunanidhi #KauveryHospital #GetWellKarunanidhi #MKAlagiri
    சென்னை:

    தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு சிறுநீரக தொற்று ஏற்பட்டு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இந்த செய்தி நாட்டில் தி.மு.க தொண்டர்களிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.

    நேற்று இரவு திடீரென ரத்த அழுத்தம் ஏற்பட்டதால் கருணாநிதி காவேரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். கருணாநிதியின் உடல்நிலை குறித்து பரவிவரும் வதந்திகளால் தொண்டர்கள் கோபாலபுரம் இல்லத்திலும், கருணாநிதி அனுமதிக்கப்பட்டுள்ள காவேரி மருத்துவமனையிலும் குவிந்துள்ளனர்.

    இதையடுத்து, மாலை 8 மணியளவில் அழகிரி, உதயநிதி ஸ்டாலின் உட்பட கருணாநிதியின் குடும்பத்தினர் காவிரி மருத்துவமனைக்கு சென்றனர்.



    இந்நிலையில், தற்போது மருத்துவமனையில் இருந்து கிளம்பிய அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, கருணாநிதி நன்றாக இருப்பதாகவும், உடல்நலம் தேறி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

    சற்றுமுன்னர் கருணாநிதியின் உடல்நிலை சீராக இருப்பதாக காவிரி மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையை அடுத்து, தற்போது மு.க அழகிரியின் இந்த கருத்து தொண்டர்களிடையே உற்சாகத்தையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது. #DMK #Karunanidhi #KauveryHospital #GetWellKarunanidhi #MKAlagiri
    ×