search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாஹல்"

    யுவராஜ் சிங் தொடர்ச்சியாக 3 சிக்சர்கள் அடித்ததும், 2007-ல் ஸ்டூவர்ட் பிராட்டிற்கு ஏற்பட்ட நிலை தனக்கும் ஏற்பட்டு விடுமோ? என உணர்ந்தேன் என்ற சாஹலுக்கு பிராட் பதிலடி கொடுத்துள்ளார். #IPL2019
    ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான லீக் ஆட்டம் சின்னசாமி மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங் செய்யும்போது சாஹல் வீசிய ஓவரை யுவராஜ் சிங் எதிர்கொண்டார்.

    இதில் முதல் மூன்று பந்துகளையும் யுவராஜ் சிங் சிக்சருக்கு தூக்கினார். ஆனால், 4-வது பந்தில் ஆட்டமிழந்தார். போட்டி முடிந்த பிறகு இதுகுறித்து சாஹல் கூறுகையில் ‘‘யுவராஜ் சிங் மூன்று சிக்சர்கள் அடித்தபோது, நான் ஸ்டூவர்ட் பிராட் போன்று உணர்ந்தேன்’’என்று தெரிவித்திருந்தார்.

    இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஸ்டூவர்ட் பிராட் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘10 வருடத்தில் நான் 437 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளேன். இந்த விஷயத்திலும் என்னைப் போன்று உணர்வார் என்று நம்புகிறேன்’’ என்று பதிலடி கொடுத்துள்ளார்.

    2007-ம் ஆண்டு தென்ஆப்பிரிக்காவில் நடைபெற்ற முதல் டி20 உலகக்கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் ஸ்டூவர்ட் பிராட் வீசிய பந்தில் யுவராஜ் சிங் தொடர்ச்சியாக 6 சிக்சர்கள் விளாசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    அதன்பின் ஸ்டூவர்ட் பிராட் இங்கிலாந்தின் முக்கியமான இரண்டு பந்து வீச்சாளர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சாஹல் இன்றும் இந்திய டெஸ்ட் அணியில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
    ஐபிஎல் தொடரில் தலைசிறந்த வீரர்களுக்கு எதிராக பந்துவீசுவது தன்னம்பிக்கைக்கு உதவியாக இருக்கும் என சாஹல் தெரிவித்துள்ளார். #IPL2019 #chahal
    ஐபிஎல் கிரிக்கெட்டில் சுழற்பந்து வீச்சாளர் சாஹல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடி வருகிறார். ஆர்சிபி அணிக்கு பெங்களூரு சின்னசாமி மைதானம் சொந்த மைதானமாகும். இந்த மைதானம் மிகவும் சிறியது. அதேவேளையில் பேட்டிங் செய்ய சாதகமாக இருக்கும்.

    ஆனால் சாஹல் சவாலை எதிர்கொண்டு தலைசிறந்த வீரர்களுக்கு எதிராக சிறப்பாக பந்து வீசினார். இதனால்தான் அவருக்கு இந்திய அணியில் இடம் கிடைத்தது.

    ஐபிஎல் தொடரில் மேலும் தனது திறமையை நிரூபித்து உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பிடிக்க ஆர்வமாக உள்ளார். இந்நிலையில் தலைசிறந்த வீரர்களுக்கு எதிராக விளையாடுவது எனது தன்னம்பிக்கைக்கு உதவியாக இருக்கும் என சாஹல் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து சாஹல் கூறுகையில் ‘‘சின்னசாமி மைதானத்தில் உள்ள ஆடுகளம் பேட்ஸ்மேன்களுக்கு மிகவும் அற்புதமான ஆடுகளங்களில் ஒன்று. கடந்த ஆண்டு ஆடுகளம் பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருந்தது. ஆனால் தற்போது பழைய நிலைக்கு (பிளாட்) பிட்ச் மாறியுள்ளது. ஒவ்வொரு போட்டியிலும் 190 ரன்களுக்கு மேல் குவிக்கலாம்.



    இதனால் பந்து வீச்சாளர்களுக்கு கடும் சவாலாக இருக்கும். ஒவ்வொரு பந்தையும் விளாசும் பேட்ஸ்மேன்களை எதிர்கொள்ளும்போது, மனதளவில் எப்படி தயாராகுவது, அன்றைய தினம் மோசமானதாக அமைந்தால், அதில் இருந்து மீள்வது எப்படி போன்றவற்றில் மனதளவில் தயாராக நல்ல வாய்ப்பு.

    மனதளவில் தயாராக மிகவும் சிறப்பாக இருக்கும். இங்கு 14 போட்டிகளில் விளையாடலாம். ஆனால் இந்திய அணிக்காக மூன்று அல்லது ஐந்து போட்டிகளிலும் மட்டுமே விளையாட முடியும். ஆகவே, இந்த மைதானத்தில் சிறப்பாக தயாராகி, இந்திய அணிக்கு மீண்டும் வலுவாக திரும்ப முடியும்’’ என்றார்.
    நேப்பியரில் நடைபெற்ற முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் முகமது ஷமி மற்றும் தவான் ஆட்டத்தால் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. #NZvIND
    நியூசிலாந்து - இந்தியா இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேப்பியரில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து இந்தியாவின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 157 ரன்னில் சுருண்டது. முகமது ஷமி 3 விக்கெட்டும், குல்தீப் யாதவ் 4 விக்கெட்டும், சாஹல் 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    பின்னர் 158 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் இறங்கியது. 10 ஓவர் முடிந்த நிலையில் சூரிய ஒளியால் ஆட்டம் அரைமணி நேரம் நிறுத்தப்பட்டது. இதனால் இந்தியாவிற்கு 49 ஓவரில் 156 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.



    ரோகித் சர்மா 11 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து தவான் உடன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. தவான் அரைசதம் அடிக்க, இந்தியாவின் ஸ்கோர் 132 ரன்னாக இருக்கும்போது விராட் கோலி 45 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.



    3-வது விக்கெட்டுக்கு தவான் உடன் அம்பதி ராயுடு ஜோடி சேர்ந்தார். இந்தியா 34.5 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் அடித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தவான் 75 ரன்களுடனும், அம்பதி ராயுடு 13 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.



    6 ஓவர்கள் வீசி 19 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட் வீழ்த்திய முகமது ஷமி ஆட்டநாயகன் விருது பெற்றார். இரு அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் போட்டி மவுண்ட் மவுங்கானுயில் வருகிற 26-ந்தேதி பகல்-இரவு ஆட்டமாக நடக்கிறது.
    மெல்போர்னில் நடைபெற்ற கடைசி ஒருநாள் போட்டியில் டோனியின் ஆட்டத்தால் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா முதன்முறையாக கோப்பையை கைப்பற்றியது. #AUSvIND
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி மெல்போர்னில் இன்று பகல்-இரவு ஆட்டமாக நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா சாஹலின் (6 விக்கெட்) அபார பந்து வீச்சால் 230 ரன்னில் ஆல்அவுட் ஆனது.

    பின்னர் 231 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் இறங்கியது. வானம் மேகமூட்டமாகவே காணப்பட்டதால் ரன் அடிக்க கடும் சிரமமாக இருந்தது. மேலும் மைதானம் மிகப்பெரியது என்பதால் பவுண்டரி எளிதாக செல்லவில்லை. ஒன்றிரண்டு ரன்களாகத்தான் எடுக்க முடிந்தது.

    ரோகித் சர்மா 9 ரன்னிலும், ஷிகர் தவான் 23 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதனால் விராட் கோலி 4-வது வீரராக டோனியை பேட்டிங் செய்ய அழைத்தார்.

    விராட் கோலி - டோனி ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இந்தியா 26.3 ஓவரில் 100 ரன்னைத் தொட்டது. டோனி சிறப்பாக விளையாடியதால் விராட் கோலி நம்பிக்கையுடன் ரன்கள் அடிக்க துவங்கினார். இந்தியாவின் ஸ்கோர் 113 ரன்னாக இருக்கும்போது விராட் கோலி 46 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

    இதனால் இந்தியாவுக்கு நெருக்கடி ஏற்பட்டது. 4-வது விக்கெட்டுக்கு டோனியுடன் கேதர் ஜாதவ் இணைந்தார். இருவரும் நிதானமாக விளையாடினார்கள். இந்தியா 38 ஓவரில் 150 ரன்னைத் தொட்டது. அதேவேளையில் டோனி 74 பந்தில் அரைசதம் அடித்தார்.

    இந்தியா 40 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்திருந்தது. கடைசி 60 பந்தில் 66 ரன்கள் தேவைப்பட்டது. 42-வது ஓவரில் 2 ரன்களும், 43-வது ஓவரில் 5 ரன்களும், 44-வது ஓவரில் 1 ரன்களும் அடித்ததால் இந்தியாவிற்கு நெருக்கடி ஏற்பட்டது.

    36 பந்தில் 52 ரன்கள் தேவைப்பட்டது. ஸ்டாய்னிஸ் வீசிய 45-வது ஓவரில் டோனி ஒரு பவுண்டரி அடிக்க இந்தியாவிற்கு 8 ரன்கள் கிடைத்தது. இதனால் டென்சன் சற்று குறைந்தது. 46-வது ஓவரில் கேதர் ஜாதவ் ஒரு பவுண்டரி அடிக்க இந்தியாவிற்கு 11 ரன்கள் கிடைத்தது.

    இதனால் கடைசி 18 பந்தில் 27 ரன்கள் தேவைப்பட்டது. 48-வது ஓவரை ஸ்டாய்னிஸ் வீசினார். முதல் பந்தை டோனி தூக்கியடித்தார். பந்தை மிட்ஆஃப் திசையில் நின்ற பிஞ்ச் கேட்ச் பிடிக்க தவறினார். இதில் இந்தியாவிற்கு இரண்டு ரன்கள் கிடைத்தது. அடுத்த பந்தை பவுண்டரிக்கு தூக்கினார். கடைசி பந்தை கேதர் ஜாதவ் பவுண்டரிக்கு விரட்டினார். அத்துடன் 52 பந்தில் 5 பவுண்டரியுடன் அரைசதம் அடித்தார்.



    இதனால் இந்தியாவிற்கு 48-வது ஓவரில் 13 ரன்கள் கிடைத்தது. கடைசி 12 பந்தில் 14 ரன்கள் தேவைப்பட்டது. 49-வது ஓவரை சிடில் வீசினார். 2-வது பந்தில் கேதர் ஜாதவ் பவுண்டரி அடித்தார். 3-வது பந்தில் மூன்று ரன்கள் அடித்தார். 5-வது பந்தில் டோனி பவுண்டரி விளாசினார். 49-வது ஓவரில் இந்தியா 13 ரன்கள் அடித்தது.

    இதனால் கடைசி ஓவரில் 1 ரன் தேவைப்பட்டது. 2-வது பந்தை கேதர் ஜாதவ் பவுண்டரிக்கு விரட்ட இந்தியா 49.2 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 234 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் தொடரை 2-1 எனக்கைப்பற்றி சாதனைப்படைத்துள்ளது.

    டோனி 114 பந்தில் 87 ரன்கள் எடுத்தும், கேதர் ஜாதவ் 57 பந்தில் 61 ரன்களும் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
    மெல்போர்ன் ஒருநாள் போட்டியில் சுழற்பந்து வீச்சாளர் சாஹல் 42 ரன்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட் வீழ்த்தி சாதனைப் படைத்துள்ளார். #AUSvIND
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி புகழ் பெற்ற மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பந்து வீச்சு தேர்வு செய்தார். காலையில் லேசாக மழை பெய்ததால் ஆடுகளம் பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்தது.

    இதை பயன்படுத்தி இந்திய பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசினார்கள். குறிப்பாக சுழற்பந்து வீச்சாளர் சாஹல் அசத்தினார். முதல் ஓவரிலேயே ஷான் மார்ஷ், கவாஜா ஆகியோரை வீழ்த்தி ஆஸ்திரேலியாவின் ரன் வேட்டையை கட்டுப்படுத்தினார். 10 ஓவர்கள் வீசிய சாஹல் 42 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுக்கள் சாய்த்தார்.



    இதன்மூலம் ஆஸ்திரேலிய மண்ணில் 6 விக்கெட் வீழ்த்திய 2-வது இந்திய பந்து வீச்சாளர் என்றும், ஒட்டுமொத்தமாக 3-வது இந்திய வீரர் என்ற சாதனையும் படைத்துள்ளார்.

    இதற்கு முன் மும்பையில் நடைபெற்ற ஆட்டத்தில் முரளி கார்த்திக்கும், மெல்போர்னில் நடைபெற்ற ஆட்டத்தில் அஜித் அகர்கரும் 6 விக்கெட்டுக்கள் சாய்த்துள்ளனர். தற்போது அவர்கள் வரிசையில் சாஹல் இணைந்துள்ளார்.
    மெல்போர்ன் ஒருநாள் போட்டியில் சுழற்பந்து வீச்சாளர் சாஹல் 42 ரன்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட் வீழ்த்தி சாதனைப் படைத்துள்ளார். #AUSvIND
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி புகழ் பெற்ற மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பந்து வீச்சு தேர்வு செய்தார். காலையில் லேசாக மழை பெய்ததால் ஆடுகளம் பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்தது.

    இதை பயன்படுத்தி இந்திய பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசினார்கள். குறிப்பாக சுழற்பந்து வீச்சாளர் சாஹல் அசத்தினார். முதல் ஓவரிலேயே ஷான் மார்ஷ், கவாஜா ஆகியோரை வீழ்த்தி ஆஸ்திரேலியாவின் ரன் வேட்டையை கட்டுப்படுத்தினார். 10 ஓவர்கள் வீசிய சாஹல் 42 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுக்கள் சாய்த்தார்.

    இதன்மூலம் ஆஸ்திரேலிய மண்ணில் 6 விக்கெட் வீழ்த்திய 2-வது இந்திய பந்து வீச்சாளர் என்றும், ஒட்டுமொத்தமாக 3-வது இந்திய வீரர் என்ற சாதனையும் படைத்துள்ளார்.

    இதற்கு முன் மும்பையில் நடைபெற்ற ஆட்டத்தில் முரளி கார்த்திக்கும், மெல்போர்னில் நடைபெற்ற ஆட்டத்தில் அஜித் அகர்கரும் 6 விக்கெட்டுக்கள் சாய்த்துள்ளனர். தற்போது அவர்கள் வரிசையில் சாஹல் இணைந்துள்ளார்.
    அடிலெய்டில் நாளை நடக்கும் 2-வது போட்டி வாழ்வா? சாவா? என்பதால் இந்திய வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். #AUSvIND
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. சிட்னியில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்தியா 34 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. தொடக்க பேட்ஸ்மேன் ரோகித் சர்மா சதமும், டோனி அரைசதமும் அடித்தனர்.



    தவான், அம்பதி ராயுடு டக்அவுட் ஆனார்கள். விராட் கோலி 3 ரன்னில் ஆட்டமிழந்தார். தினேஷ் கார்த்திக்கும் பெரிய அளவில் பேட்டிங் செய்யவில்லை. இதனால் பேட்டிங்கில் கவனம் செலுத்தும் வகையில் விராட் கோலி, தினேஷ் கார்த்திக் தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர். அதேபோல் சுழற்பந்து வீச்சாளரான சாஹலும் பயிற்சியில் ஈடுபட்டார்.



    முதல் போட்டியில் விக்கெட் வீழ்த்தவில்லை என்றாலும், 10 ஓவரில் 46 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். பயிற்சியாளருடன் ஷமி தீவிர ஆலோசனையில் ஈடுபட்டார்.



    நாளைய போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே தொடரை உயிரோட்டமாக வைத்துக்கொள்ளப்படும். இதனால் 2-வது இந்தியாவிற்கு வாழ்வா? சாவா? போட்டியாகும். இதனால் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
    தற்போது தனக்கு ‘பேபி சிட்டர்’ தேவை என்று ரிஷப் பந்தை நகைச்சுவைக்காக கிண்டல் செய்துள்ளார் இந்திய ஒருநாள் அணியின் துணைக் கேப்டன் ரோகித் சர்மா #RohitSharma #RishabhPant
    இளம் வீரரான ரிஷப் பந்த் இந்திய டெஸ்ட் அணியின் விக்கெட் கீப்பராக செயல்பட்டு வருகிறார். மெல்போர்ன் டெஸ்டின்போது ரிஷப் பந்து பேட்டிங் செய்து கொண்டிருக்கும்போது ஆஸ்திரேலிய அணியின் கேப்டனும், விக்கெட் கீப்பருமான டிம் பெய்ன் ‘‘ரிஷப் பந்த் பேட்டிங் செய்யும்போது ‘‘ஒரு நாள் போட்டிக்கு டோனி வந்து விட்டார். நாம் இவரை (ரிஷப் பந்த்) ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணிக்கு எடுத்துக் கொள்ளலாம். அந்த அணிக்கு பேட்ஸ்மேன் தேவை. அதனால் ஆஸ்திரேலியாவில் இருப்பதை கொஞ்ச நாள் நீட்டித்துக்கொள்.

    ஹோபர்ட் அழகான நகரம். தங்குவதற்கு ஒரு சொகுசு குடியிருப்பை அவருக்கு வழங்கிவிடலாம்.... அப்புறம்... நான் என் மனைவியை சினிமாவுக்கு அழைத்து செல்லும்போது, நீதான் என் குழந்தைகளை பார்த்துக்கொள்ள வேண்டும். சரியா...’’ என்று கூறி கேலி செய்தார்.

    பின்னர் புத்தாண்டையொட்டு ஆஸ்திரேலிய பிரதமர் இருஅணி வீரர்களுக்கும் விருந்து அளித்தார். அப்போது டிம் பெய்ன் தனது மனைவி குழந்தைகளுடன் வந்திருந்தார். அப்போது ரிஷப் பந்த் டிம் பெய்னின் குழந்தைகளை எடுத்து கொஞ்சினார். இந்த போட்டோவை வெளியிட்ட டிம் பெய்னின் மனைவி, ‘‘ரிஷப் பந்த் சிறந்த பேபி சிட்டர்’’ என்று கூறியிருந்தார்.

    இதற்கிடையே இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் துணைகேப்டனும், அதிரடி வீரரும் ஆன ரோகித் சர்மாவிற்கு கடந்த வாரம் பெண் குழந்தை பிறந்தது. ரோகித் சர்மா - ரித்திகா தம்பதி தங்களது குழந்தைக்கு ‘சமைரா’ என்று பெயரிட்டுள்ளனர்.

    தற்போது ரோகித் சர்மா ஒருநாள் தொடர் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியா சென்றுள்ளார். அவர் நகைச்சுவைக்காக ரிஷப் பந்தை டுவிட்டரில் கிண்டல் செய்துள்ளார். ரோகித் சர்மா தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘நீங்கள் சிறந்த பேபி சிட்டர் என்று கேள்விப்பட்டேன். இப்போது தனக்கு பேபி சிட்டர் தேவை. ரித்திகா மிகவும் சந்தோசம் அடைவார்’’ என்று பதிவிட்டார்.

    இதற்கு ரிஷப் பந்த் ‘‘சாஹல் அவரது வேலையை சரியாக பார்க்கவில்லையா? ரோகித் சர்மாவின் மகளுக்கு பேபி சிட்டராக இருப்பது மிகவும் மகிழ்ச்சி’’ என்று பதிவிட்டுள்ளார்.
    பிரிஸ்பேன் போட்டியில் 6 சிக்சருடன் 55 ரன்கள் விட்டுக்கொடுத்து அதிக ரன்கள் விட்டுக்கொடுத்த 3-வது இந்திய வீரர் என்ற மோசமான சாதனையை குருணால் பாண்டியா படைத்துள்ளார். #AUSvIND
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான முதல் டி20 போட்டி பிரிஸ்பேனில் நடைபெற்று வருகிறது. இந்தியா பும்ரா, புவனேஸ்வர் குமார், கலீல் அகமது ஆகிய மூன்று வேகப்பந்து வீச்சாளருடனும், குல்தீப் யாதவ், குருணால் பாண்டியா ஆகிய இரண்டு சுழற்பந்து வீச்சாளருடனும் களம் இறங்கியது.

    பும்ரா, புவி, குல்தீப் யாதவ் ஆகியோர் சிறப்பாக பந்து வீசிய போதிலும் குருணால் பாண்டியா, கலீல் அகமது பந்தை ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்கள் விளாசினார்கள். கலீல் அகமது 3 ஓவரில் 42 ரன்கள் விட்டுக்கொடுத்தார். இதில் மூன்று சிக்சர் அடங்கும்.



    குருணால் பாண்டியா 4 ஓவரில் 55 ரன்கள் விட்டுக்கொடுத்தார். இதன்மூலம் டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் விட்டுக்கொடுத்த 3-வது இந்திய பந்து வீச்சாளர் என்ற மோசமான சாதனையை பதிவு செய்துள்ளார்.

    தென்ஆப்பிரிக்காவிற்கு எதிராக இந்த வருடம் செஞ்சூரியனில் சாஹல் 64 ரன்கள் விட்டுக்கொடுத்து முதல் இடத்தில் உள்ளார். ஜோகிந்தர் சர்மா 2007-ல் டர்பனில் இங்கிலாந்திற்கு எதிராக 57 ரன்கள் விட்டுக்கொடுத்து 2-வது இடத்தில் உள்ளார். குருணால் பாண்டியா 55 ரன்கள் விட்டுக்கொடுத்து 3-வது இடத்தில் உள்ளார்.
    ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் விராட் கோலி, பும்ரா தொடர்ந்து முதலிடம் வகிக்கின்றனர். ரோகித் சர்மா 2-வது இடத்தில் உள்ளார். #ICCRankings
    ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி 899 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடம் வகிக்கிறார். ரோகித் சர்மா 2-வது இடத்தில் உள்ளார். ஷிகர் தவான் 9-வது இடத்தில் இருந்து 8-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.



    பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் பும்ரா 841 புள்ளிகளுடன் தொடர்ந்து முதல் இடம் வகிக்கிறார். குல்தீப் யாதவ் மூன்றாவது இடத்திலும், சாஹல் ஐந்தாவது இடத்திலும் உள்ளனர்.



    ஆல்ரவுண்டர் தரவரிசையில் ரஷித் கான் 353 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளார்.
    வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான நான்காவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது. #INDvWI
    இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. மூன்று போட்டிகள் முடிவடைந்த நிலையில் 4-வது ஆட்டம் இன்று மதியம் 1.30 மணிக்கு மும்பையில் தொடங்குகிறது.

    இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்துள்ளார். இந்திய அணியில் சாஹல், ரிஷப் பந்த் ஆகியோர் நீக்கப்பட்டு ஜடேஜா, கேதர ஜாதவ் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
    பனிப்பொழியும் போது பந்து வீசுவது கடினம் என்று விசாகப்பட்டினம் போட்டி குறித்து குல்தீப் யாதவ் கருத்து தெரிவித்துள்ளார். #INDvWI
    இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 2-வது ஒருநாள் போட்டி விசாகப்பட்டினத்தில் நேற்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா விராட் கோலியின் சதத்தால் (157) 50 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 321 ரன்கள் குவித்தது.

    பின்னர் 322 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் களம் இறங்கியது. ஷாய் ஹோப் (123 அவுட் இல்லை), ஹெட்மையர் (94) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் வெஸ்ட் இண்டீஸ் வெற்றியை நெருங்கியது. ஆனால் போட்டி வெற்றித் தோல்வியின்றி ‘டை’யில் முடிவடைந்தது.

    இந்திய பந்து வீச்சாளர்கள் ஷமி 59 ரன்னும், உமேஷ் யாதவ் 78 ரன்களும், குல்தீப் யாதவ் 67 ரன்களும், ஜடேஜா 49 ரன்களும், சாஹல் 63 ரன்களும் விட்டுக்கொடுத்தனர்.

    விசாகப்பட்டினத்தில் இந்தியா 2-வது பந்து வீசும்போது கடும் பனிப்பொழிவு காணப்பட்டது. இதனால் பவுலர்கள் பந்தை இருக்கமாக பிடிக்க முடியவில்லை. இதனால் பந்தை டர்ன் செய்ய கஷ்டப்பட்டனர்.

    குல்தீப் யாதவ் மூன்று விக்கெட்டுக்கள் வீழ்த்தினாலும் 67 ரன்கள் விட்டுக்கொடுத்தார். இந்நிலையில் விசாகப்பட்டினத்தில் நிலவிய சூழ்நிலையில் பந்து வீசுவது மிகவும் கடினம் என்று குல்தீப் யாதவ் கூறியுள்ளார்.



    இதுகுறித்து குல்தீப் யாதவ் கூறுகையில் ‘‘பனிப்பொழிவின் போது பந்து வீசுவது மிகவும் கடினமானது. பனியால் பந்து ஈரப்பதமானது. பந்தை பிடிக்க கடினமாக இருந்தது. ஆனால், இந்த சூழ்நிலையில் தொடர்ச்சியாக விளையாட வேண்டுமென்றால், அதிக அளவில் பயிற்சி பெறுவது அவசியமானது.

    இந்த சூழ்நிலையில் ஜெட் வேகத்தில் சென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி, அதன்பின் திணறியது. இதனால் பந்து வீச்சு யுனிட்டான நாங்கள் மகிழ்ச்சி அடைந்தோம். பனிப்பொழிந்த நிலையிலும் நாங்கள் சிறப்பாக செயல்பட்டோம்’’ என்றார்.
    ×