search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சரிதாநாயர்"

    எர்ணாகுளம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஹிபி ஈடனை எதிர்த்து சரிதா நாயர் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார். #LokSabhaElections2019 #SarithaNair
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் சோலார் பேனல் அமைத்து தருவதாக கூறி பல கோடி மோசடி செய்ததாக பெண் தொழில் அதிபர் சரிதாநாயர் கைது செய்யப்பட்டார்.

    கேரளாவில் உம்மன்சாண்டி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்தபோது இந்த புகார் எழுந்தது. இதனை விசாரிக்க கமி‌ஷனும் அமைக்கப்பட்டது.

    சோலார் பேனல் மோசடி வழக்கில் அப்போதைய முதல்-மந்திரி உம்மன்சாண்டிக்கும் தொடர்பு இருப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு குற்றம் சாட்டியது.

    இந்த வழக்கில் கைதான சரிதாநாயர் பல மாதங்களுக்கு பிறகு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். ஜெயிலில் இருந்து வெளியே வந்த அவர், காங்கிரஸ் அரசில் அமைச்சர்களாக இருந்த பலரும் பண மோசடி செய்ததாக குற்றம் சாட்டினார்.

    மேலும் உம்மன்சாண்டி, காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஹிபி ஈடன் ஆகியோர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் கூறினார்.

    கேரளாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு சரிதாநாயர் தெரிவித்த பாலியல் புகார் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டது. இது தொடர்பான வழக்கில் ஹிபி ஈடன் உள்பட பலர் சேர்க்கப்பட்டனர்.

    ஹிபி ஈடன் மீதான வழக்கு நிலுவையில் இருக்கும்போதே அவர், எர்ணாகுளம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

    இதற்கு சரிதாநாயர் எதிர்ப்பு தெரிவித்தார். பாலியல் புகாரில் சிக்கிய ஹிபி ஈடனை வேட்பாளராக அறிவித்ததை ஏற்க முடியாது என்று கூறிய சரிதாநாயர், எர்ணாகுளம் தொகுதியில் ஹிபி ஈடனை எதிர்த்து போட்டியிடப்போவதாக அறிவித்தார்.

    எர்ணாகுளம் தொகுதியை போட்டியிட தேர்ந்தெடுத்தது ஏன்? என்பது பற்றி சரிதாநாயர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    குற்றம் சாட்டப்பட்ட பலரும் தேர்தலில் போட்டியிடுவது சகஜமாகி விட்டது. அரசியலில் இருப்பவர்கள் இவர்களுக்கு ஆதரவாக உள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக அவர்கள் பிரசாரமும் செய்கிறார்கள். எந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டாலும் அவர்கள் இதுபற்றி கவலைப்படுவதில்லை. வாக்காளர்களும், பொதுமக்களும் இதை கண்டு கொள்வதில்லை.

    குற்றம் சாட்டப்பட்டவர்கள் தேர்தலில் நிற்க முடியும் என்றால் நானும் தேர்தலில் நிற்க முடியும். இதனை பொதுமக்களுக்கு புரிய வைக்கவே நான், தேர்தலில் நிற்கிறேன்.

    தேர்தலில் வெற்றி பெற்று பாராளுமன்றத்திற்கு போக வேண்டும் என்பது எனது விருப்பமில்லை. ஆனால் குற்றம் சாட்டப்பட்ட எவரும் தேர்தலில் நிற்கக்கூடாது என்பதை வாக்காளர்களும், மக்களும் புரிந்து கொள்ள வேண்டும். நான் தேர்தலில் நிற்பதன் மூலம் இதுபற்றிய விழிப்புணர்வு அனைவருக்கும் ஏற்படும் என்று நம்புகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    எர்ணாகுளம் தொகுதியில் சரிதாநாயர் களம் இறங்க இருப்பது காங்கிரசுக்கு தலைவலியை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.   #LokSabhaElections2019 #SarithaNair

    சோலார் பேனல் அமைக்க அனுமதி கேட்டு அணுகியபோது விருந்தினர் மாளிகையில் உம்மன் சாண்டி உடல் ரீதியாக தொல்லை கொடுத்தார் என்று சரிதாநாயர் போலீசில் அளித்த புகாரில் தெரிவித்துள்ளார். #SarithaNair #OommenChandy
    திருவனந்தபுரம்:

    கேரளாவைச் சேர்ந்த பெண் தொழில் அதிபர் சரிதாநாயர்.

    கேரளாவில் உம்மன்சாண்டி தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்தபோது சோலார் பேனல் அமைத்து தரும் நிறுவனத்தை சரிதாநாயர் தொடங்கினார். இதற்காக பலரிடமும் பணம் வசூலித்தார்.

    இதில், ஏராளமானோர் லட்சக்கணக்கில் பணம் செலுத்தினர். பணம் வாங்கிய பின்பு சரிதாநாயர் கூறியபடி, சோலார் பேனல் அமைக்கவில்லை. இதுபற்றி பணம் கொடுத்தவர்கள் போலீசில் புகார் செய்தனர். அதில், சரிதாநாயர் தங்களிடம் பணம் பெற்று கோடிக்கணக்கில் மோசடி செய்ததாக கூறி இருந்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சரிதா நாயரை கைது செய்தனர்.

    கைதான சரிதாநாயர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் முதல்-மந்திரி உம்மன்சாண்டி மற்றும் அவரது மந்திரிசபையில் இடம் பெற்றவர்கள், அரசியல் பிரமுகர்கள் தன்னை ஏமாற்றி விட்டதாக கூறினார்.

    அப்போது இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுபற்றி நீதிபதி சிவராஜன் தலைமையில் கமி‌ஷன் அமைக்கப்பட்டது.

    கமி‌ஷன் விசாரணை நடந்து வந்த நிலையில் கேரளாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. கம்யூனிஸ்டு கூட்டணி ஆட்சி பதவிக்கு வந்தது. அவர்கள் முன்பு விசாரணை கமி‌ஷன் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், சரிதாநாயருக்கு அரசியல் பிரமுகர்கள் பாலியல் தொல்லை கொடுத்தது பற்றியும் குறிப்பிடப்பட்டிருந்தது.

    இந்த நிலையில் உம்மன்சாண்டி மற்றும் காங்கிரஸ் எம்.பி. வேணுகோபால் ஆகியோர் மீது கேரள குற்றப்பிரிவு போலீசார் கடந்த சில நாட்களுக்கு முன்பு கற்பழிப்பு வழக்குப்பதிவு செய்தனர்.



    கேரளாவில் சபரிமலை ஐயப்பன் கோவில் பிரச்சினை தீவிரமாக இருந்த போது, திடீரென உம்மன்சாண்டி, வேணுகோபால் ஆகியோர் மீது கற்பழிப்பு வழக்குப்பதிவு செய்யப்பட்டது, கேரள அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    சபரிமலை பிரச்சினையை திசை திருப்ப அரசு நாடகமாடுவதாகவும், தங்கள் மீது பொய் புகார் கொடுக்கப்பட்டிருப்பதாகவும், இதற்கு சட்ட ரீதியாக பதில் அளிப்போம் என்றும் உம்மன்சாண்டி, வேணுகோபால் ஆகியோர் தெரிவித்தனர்.

    உம்மன்சாண்டி தெரிவித்த குற்றச்சாட்டுகளுக்கு கேரள டி.ஜி.பி. லோக்நாத் பெக்ரா பதில் அளித்தார். அதில், சரிதாநாயர் சமீபத்தில் புதிய புகார் ஒன்றை அளித்தார். அதன் பேரிலேயே இப்போது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்று கூறினார்.

    இந்நிலையில் சரிதாநாயர் போலீசில் அளித்த புகார் விவரங்கள் இப்போது வெளியாகி உள்ளது. அதில் அவர் கூறி இருப்பதாவது:-

    சோலார் பேனல் நிறுவனத்திற்கு அனுமதி கேட்டு அரசை அணுகினேன். இதற்காக காங்கிரஸ் பிரமுகர்கள் சிலர் என்னை அப்போதைய முதல்-மந்திரி உம்மன்சாண்டியிடம் அறிமுகம் செய்து வைத்தனர். அதன் பிறகு உம்மன்சாண்டி அடிக்கடி என்னை தொடர்பு கொண்டு பேசினார்.

    சோலார் பேனல் அமைக்க தனக்கு லஞ்சம் தர வேண்டும் என்று கூறினார். மேலும் என்னை கடந்த 2012-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 19-ந்தேதி திருவனந்தபுரத்தில் உள்ள அரசு விருந்தினர் மாளிகைக்கு வருமாறு அழைத்தார். அவரை பார்க்க நானும் அங்கு சென்றேன். அப்போது அவர், என்னை உடல் ரீதியாக தொந்தரவு செய்தார்.

    சோலார் பேனல் விவகாரத்தில் உம்மன் சாண்டி எனக்கு உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பல தொந்தரவுகள் கொடுத்தார். இதுபோல வேணுகோபால் எம்.பி. ஆலப்புழாவில் உள்ள ரோஸ் ஹவுஸ் மாளிகையில் என்னை சந்தித்தார். அவரிடம் என்னை காங்கிரஸ் மந்திரி அணில்குமார் அழைத்துச் சென்றார்.

    ரோஸ் ஹவுசில் வேணுகோபால் எம்.பி. என்னை பாலியல் பலாத்காரம் செய்தார். இவர்களால் நான் பலமுறை பாதிக்கப்பட்டேன்.

    இவ்வாறு புகார் மனுவில் கூறி உள்ளார்.

    சரிதாநாயர் புகாரில் தெரிவித்துள்ள சம்பவங்கள் அடிப்படையில் மீண்டும் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். இதற்காக சம்பவம் நடந்த விருந்தினர் மாளிகை, ரோஸ் ஹவுசுக்கு சென்று சாட்சியங்கள் மற்றும் ஆதாரங்களை சேகரிக்கவும் போலீசார் முடிவு செய்துள்ளனர்.  #SarithaNair #OommenChandy



    சரிதாநாயர் பாலியல் புகாரை சட்டரீதியாக எதிர்கொள்வேன் என்று உம்மன்சாண்டி கூறியுள்ளார். #OommenChandy #SarithaNair

    திருவனந்தபுரம்:

    கேரளாவை சேர்ந்த பெண் தொழில் அதிபர் சரிதாநாயர் சோலார் பேனல் அமைத்து தருவதாக பலரிடமும் பணம் வசூல் செய்து மோசடியில் ஈடுபட்டார்.

    உம்மன்சாண்டி தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்த போது இந்த மோசடி நடைபெற்றது. இது தொடர்பாக சரிதாநாயார் கைது செய்யப்பட்டார். அவர் போலீசாரிடம் கூறும்போது, உம்மன்சாண்டி மற்றும் அவரது உதவியாளர்களுக்கு மோசடியில் தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டினார்.

    இது தொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணை கமி‌ஷன் முன்பு ஆஜரான சரிதாநாயர், காங்கிரஸ் பிரமுகர்கள் மற்றும் உம்மன்சாண்டி ஆகியோர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் கூறினார்.

    கேரளாவில் பினராய் விஜயன் தலைமையிலான கம்யூனிஸ்டு ஆட்சி அமைந்த பின்னர் இந்த வழக்கு மீண்டும் வேகம் எடுத்தது.

     


    இப்போது இந்த வழக்கு தொடர்பாக சரிதாநாயர் மீண்டும் கேரள குற்றப்பிரிவு போலீசில் ஒரு புகார் மனு கொடுத்தார்.

    அதில் முன்னாள் முதல்-மந்திரி உம்மன் சாண்டி, காங்கிரஸ் எம்.பி. வேணுகோபால் ஆகியோர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறியிருந்தார். அதன்பேரில் இவர்கள் இருவர் மீதும் கேரள குற்றப்பிரிவு போலீசார் கற்பழிப்பு வழக்கு பதிவு செய்தனர்.

    இந்த விவகாரம் தொடர்பாக உம்மன்சாண்டி கூறும்போது, சரிதா நாயர் புகாரை சட்டப்படி சந்திப்பேன். கேரளாவில் அய்யப்பன் கோவில் விவகாரத்தில் கம்யூனிஸ்டு அரசு மீது மக்கள் கோபத்தில் உள்ளனர். மக்களை திசை திருப்ப இந்த விவகாரத்தை அரசு கையில் எடுத்துள்ளது. இதற்கு நாங்கள் கோர்ட்டு மூலம் உரிய பதில் அளிப்போம், என்றார்.

    இதுபோல கேரள எதிர் கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதலாவும், இந்த குற்றச்சாட்டை காங்கிரஸ் கட்சி சட்டரீதியாக எதிர்கொள்ளும் என்று கூறியுள்ளார். #OommenChandy #SarithaNair

    சரிதாநாயர் பாலியல் புகாரின் பேரில் உம்மன்சாண்டி மற்றும் கே.சி. வேணுகோபால் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. #OommenChandy #SarithaNair

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் கடந்த முறை காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றபோது முதல்- மந்திரியாக உம்மன்சாண்டி இருந்தார்.

    அப்போது சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை 2013-ம் ஆண்டு மாநில அரசு நிறைவேற்றியது.

    இது தொடர்பான ஒப்பந்தம் பந்தளம் செங்கனூரைச் சேர்ந்த பெண் தொழில் அதிபர் சரிதாநாயரின் கம்பெனிக்கு வழங்கப்பட்டது. சரிதாநாயர், அவரது கணவர் பிஜு ராதாகிருஷ்ணன் ஆகியோர் இணைந்து சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிக்கும் சோலார் பேனல் தகடுகளை பெரிய நிறுவனங்கள், தனியார் கம்பெனிகளுக்கு பொருத்தி கொடுத்தனர்.

    அப்போது அவர்கள் பலரிடம் பணம் வசூல் செய்து விட்டு சோலார் பேனல் தகடுகளை பொருத்தி கொடுக்கவில்லை என்று புகார் எழுந்தது. கேரளா, கோவையைச் சேர்ந்தவர்கள் மற்றும் வெளிநாடு வாழ் கேரள தொழில் அதிபர்களிடம் கோடிக்கணக்கில் மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

    இது தொடர்பான புகாரின் பேரில், சரிதாநாயர், பிஜு ராதாகிருஷ்ணன் ஆகியோரை கேரள போலீசார் கைது செய்தனர். பிறகு சரிதாநாயர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.

    ஜாமீனில் வெளி வந்த பிறகு சரிதாநாயர் பரபரப்பு குற்றச்சாட்டுகளை சுமத்த தொடங்கினார். சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிக்கும் சோலார் பேனல் பொருத்தும் பணியை தனது கம்பெனிக்கு வழங்குவதற்கு பலருக்கும் பணம் லஞ்சமாக கொடுத்ததாகவும், பணத்திற்கு பதில் சிலர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் கூறினார்.

    சோலார் பேனல் பொருத்தும் பணி தொடர்பாக தான் பலமுறை உம்மன்சாண்டியை சந்தித்து பேசி உள்ளதாகவும், அப்போது உம்மன்சாண்டியும் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், பரபரப்பு குற்றச்சாட்டை சுமத்தினார்.

    அதேபோல முன்னாள் மத்திய மந்திரி கே.சி. வேணு கோபால் மற்றும் பல அரசியல் பிரமுகர்கள் மீதும் சரிதாநாயர் பாலியல் புகார் கூறினார்.

    தன் மீதான பாலியல் குற்றச்சாட்டை உம்மன்சாண்டி மறுத்தார். முதல்- அமைச்சர் என்ற முறையில் பலரும் தன்னை சந்தித்து பேசுவது வழக்கம். அது போல தொழில் அதிபர் என்ற முறையில் சரிதாநாயரை சந்தித்ததாகவும், தவறாக எதுவும் நடக்க வில்லை என்றும் கூறினார். இதேபோல கே.சி.வேணுகோபாலும் தன் மீதான குற்றச்சாட்டை மறுத்தார்.

    ஆனால் எதிர்க்கட்சிகள் முதல்-மந்திரி பதவியில் இருந்து உம்மன்சாண்டி ராஜினாமா செய்யவேண்டும் என்று போர்க்கொடி உயர்த்தியதால் இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. இது தொடர்பாக விசாரணை கமி‌ஷன் அமைக்கப்பட்டது. இந்த கமி‌ஷன் முன்பு உம்மன் சாண்டி ஆஜராகி விளக்கம் அளித்தார். சரிதாநாயரும் விசாரணை கமி‌ஷனில் இதே குற்றச்சாட்டை வலியுறுத்தினார்.

     


     

    சரிதாநாயர் புகார் தொடர்பாக திருவனந்தபுரம் கோர்ட்டில் வழக்கும் தொடரப்பட்டது. இந்த வழக்கில் ஆஜரான சரிதாநாயர் தனது குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக பரபரப்பு வாக்குமூலத்தையும் கோர்ட்டில் அளித்தார்.

    இந்த நிலையில் கேரள சட்டசபைக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. தேர்தலில் உம்மன்சாண்டி மீதான சோலார் பேனல் மோசடி, சரிதாநாயரின் பாலியல் புகார் போன்றவற்றை முன்னிலைப்படுத்தி கம்யூனிஸ்டு கட்சியினர் பிரசாரம் செய்தனர்.

    அந்த தேர்தலில் காங்கிரஸ் தோல்வியை சந்தித்தது. பினராய் விஜயன் தலைமையிலான கம்யூனிஸ்டு அரசு கேரளாவில் அமைந்தது. பினராய் விஜயன் பதவியேற்றதும், உம்மன்சாண்டி மீதான சரிதாநாயர் புகார் தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிரடியாக அறிவித்தார். ஆனாலும் உம்மன்சாண்டி மீது உடனடியாக நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.

    சமீபத்தில் கேரள குற்றப்பிரிவு போலீசிலும் உம்மன்சாண்டி, கே.சி. வேணுகோபால் ஆகியோர் மீது சரிதாநாயர் புகார் கொடுத்திருந்தார். அந்த புகாரில் உம்மன் சாண்டி, கே.சி.வேணுகோபால் ஆகியோர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

    அந்த புகாரின் பேரில் உம்மன்சாண்டி, கே.சி. வேணுகோபால் ஆகியோர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்த வழக்கில் உம்மன் சாண்டி கைது செய்யப்படலாம் என்ற பரபரப்பும் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக உயர் போலீஸ் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, அவர் பதில் அளிக்க மறுத்து விட்டார்.

    வழக்குப்பதிவு செய்யப்பட்ட கே.சி. வேணு கோபால் தற்போது ஆலப்புழா தொகுதி எம்.பி.யாகவும், கர்நாடக மாநில காங்கிரஸ் பொறுப்பாளராகவும், அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளராகவும் உள்ளார்.

    முன்னாள் முதல்-மந்திரியும், காங்கிரஸ் மூத்த தலைவருமான உம்மன்சாண்டி மீது கற்பழிப்பு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது கேரள அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    உம்மன் சாண்டி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது தொடர்பாக காங்கிரஸ் தலைவர்கள் கூறும்போது, தற்போது கேரளாவில் சபரிமலை கோவில் பிரச்சினை விஸ்வரூபம் எடுத்துள்ளதால் அதை திசை திருப்ப மாநில அரசு இந்த நடவடிக்கையில் இறங்கி உள்ளதாக குற்றம் சாட்டினார்கள்.

    சரிதாநாயர் சில மலையாள சினிமாக்களிலும் நடித்துள்ளார். குமரி மாவட்டம் தக்கலை உள்பட சில இடங்களில் தொழில் நிறுவனங்களும் நடத்தி வருகிறார். அவரது ஆடை மாற்றும் நிர்வாணப் படம் செல்போன்களில் பரவி பரபரப்பு ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. #OommenChandy #SarithaNair

    முன்னாள் அமைச்சர் பச்சைமாலை சந்தித்து பேசிய சரிதா நாயர் டி.டி.வி. தினகரன் கட்சியில் சேர விரும்புவதாகவும் தெரிவித்தார். #SarithaNair #TTVDhinakaran
    நாகர்கோவில்:

    கேரளாவில் உம்மன் சாண்டி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்தபோது சோலார் பேனல் மோசடி வழக்கில் சிக்கியவர் சரிதா நாயர்.

    பெண் தொழில் அதிபரான இவர் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார். வழக்கு தொடர்பான விசாரணையின் போது அப்போதைய முதல்-மந்திரி உம்மன்சாண்டி மீது செக்ஸ் புகார் கூறினார்.

    இது கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் காங்கிரஸ் தலைவர்கள், முதல்-மந்திரி அலுவலக ஊழியர்கள் உள்பட பலரும் சிக்கினர்.

    வழக்கு விசாரணை நடந்து வரும் நிலையில் ஜாமீனில் வெளிவந்த சரிதா நாயர் சினிமா மற்றும் டெலிவி‌ஷன் தொடர்களில் நடிக்க இருப்பதாக பரபரப்பு தகவல் வெளியானது.

    ஆனால் அவர் குமரி மேற்கு மாவட்டம் தக்கலை பகுதியில் சிறு தொழில் தொடங்க முயற்சி செய்து வந்தார். இதற்காக அடிக்கடி குமரி மாவட்டம் வந்து களியக்காவிளை, நாகர் கோவில் பகுதிகளில் தங்கினார்.

    குமரி மாவட்டம் வந்து சென்ற சரிதா நாயருக்கு இங்குள்ள சில அரசியல் பிரமுகர்களின் பழக்கம் கிடைத்தது. இந்த நிலையில் அவர் நேற்று திடீரென நாகர்கோவில் தம்மத்துகோணத்தில் உள்ள முன்னாள் அமைச்சர் பச்சைமால் வீட்டிற்கு சென்றார்.



    அவரை சந்தித்து பேசிய சரிதா நாயர் பச்சைமாலுக்கு சால்வை அணிவித்ததோடு, டி.டி.வி. தினகரன் கட்சியில் சேர விரும்புவதாகவும் தெரிவித்தார். இதற்காக டி.டி.வி. தினகரனுடன் பேசி நேரம் வாங்கித்தரும்படியும் கேட்டார்.

    இதற்கு ஒப்புக்கொண்ட பச்சைமால் இந்த தகவலை கட்சியின் மேலிடத்திற்கு தெரிவிப்பதாகவும், அவர்களின் ஒப்புதல் கிடைத்த பின்பு முடிவை கூறுவதாகவும் தெரிவித்தார். அதன் பிறகு அவர்கள் அரசியல் நிலவரம் குறித்து பேசினர். இதனை முன்னாள் அமைச்சர் பச்சைமால் தெரிவித்தார்.

    கேரள அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சரிதா நாயர், இப்போது தமிழக அரசியலில் கால் பதிக்க நினைப்பது இங்குள்ள அரசியல்வாதிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  #SarithaNair #TTVDhinakaran

    ×