search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நீர்வரத்து"

    கோவை மாவட்டத்தில் பலத்த மழை காரணமாக குளம், குட்டைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
    கோவை:

    கோவையில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் மழையின் தாக்கம் அதிகமாக உள்ளது.

    நேற்று இரவு கோவை ராமநாதபுரம், காந்திபுரம், சிங்காநல்லூர், கணபதி உள்ளிட்ட மாநகர் பகுதிகளிலும், பெரியநாயக்கன்பாளையம், துடியலூர், நரசிம்ம நாயக்கன்பாளையம் பகுதிகளிலும் மழை பெய்தது. மழை காரணமாக குளம், குட்டைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
    நீர் பிடிப்பு பகுதியில் பெய்த கனமழை காரணமாக முல்லைப் பெரியாறு அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. #PeriyarDam
    கூடலூர்:

    முல்லைப் பெரியாறு அணை நீர் பிடிப்பு பகுதி மற்றும் தேனி மாவட்டத்தில் விடிய விடிய மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். தேனி, போடி, உத்தமபாளையம், கூடலூர், குமுளி, சிலமலை, சங்கராபுரம், துரைராஜபுரம் காலனி, குரங்கணி மற்றும் சுற்று வட்டார கிராமங்களில தொடர்ந்து பெய்த மழையால் விவசாய பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    தொடர் மழை காரணமாக முல்லைப் பெரியாறு அணைக்கு நீர் வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளது. நேற்று வரை 951 கன அடி நீர் வந்தது. இன்று காலை நிலவரப்படி அது 3,161 கன அடியாக உயர்ந்துள்ளது. அணையில் இருந்து 1,200 கன அடி நீர் திறக்கப்படுகிறது. அணையின் நீர் மட்டமும் உயர்ந்து 126.05 அடியாக உள்ளது.


    வைகை அணையின் நீர் மட்டம் 55.94 அடியாக உள்ளது. 1,055 கன அடி நீர் வருகிறது. குடிநீர் மற்றும் பாசனத்துக்காக 1,460 கன அடி நீர் திறக்கப்படுகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் பரவலாக அனைத்து பகுதிகளிலும் சாரல் மழை பெய்தது. குறிப்பாக கொடைக்கானல், பழனி பகுதியில் கன மழை பெய்தது.

    கொடைக்கானலில் பெய்த மழை காரணமாக மஞ்சளாறு அணைக்கு நீர் வரத்து 43 கன அடியாக உயர்ந்துள்ளது. அணையில் இருந்து தண்ணீர் திறப்பு இல்லை. அணையின் நீர் மட்டம் 42.30 அடியாக உள்ளது.

    சோத்துப்பாறை அணையின் நீர் மட்டம் 121.03 அடியாக உள்ளது. 36 கன அடி நீர் வருகிறது. 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:- பெரியாறு 94.4, தேக்கடி 78, கூடலூர் 18.2, சண்முகாநதி அணை 13, உத்தமபாளையம் 8.6, வீரபாண்டி 30, வைகை அணை 3, மஞ்சளாறு 21, சோத்துப்பாறை 12, கொடைக்கானல் 21.6

    தொடர் மழை காரணமாக தேனி மாவட்டத்தில் பெரியாறு, வைகை, கொட்டக்குடி, வராகநதி உள்ளிட்ட ஆறுகளில் நீர் வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளதால் குடிநீர் தட்டுப்பாட்டுக்கு தீர்வு கிடைக்கும் என பொதுமக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.  #PeriyarDam
    கடந்த 5 நாட்களாக பவானிசாகர் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த மழையால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
    ஈரோடு:

    கடந்த 5 நாட்களாக பவானிசாகர் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த மழையால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    நேற்று அணைக்கு 1750 கனஅடி நீர் வந்த வண்ணம் இருந்தது. இன்று அது உயர்ந்து வினாடிக்கு அணைக்கு 5172 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இன்று காலை அணையின் நீர்மட்டம் 99.01 அடியாக இருந்தது.

    ஏற்கெனவே இந்தாண்டு பவானிசாகர் அணை 2 தடவை நிரம்பி உள்ள நிலையில் மீண்டும் அணை குழு கொள்ளவை எட்டும் நிலையில் உள்ளது. இது ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்ட விவசாயிகளை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.

    அணையிலிருந்து கீழ்பவானி வாய்க்காலுக்கு 2300 கன அடியும் பவானி ஆற்றில் குடிநீருக்காக வினாடிக்கு 100 கன அடி வீதமும் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

    அணைக்கு மீண்டும் தண்ணீர் வரத்து வரத்தொடங்கி உள்ளதால் இந்தாண்டு மட்டுமல்ல அடுத்த ஆண்டுக்கும் விவசாயத்துக்கு பஞ்சம் இருக்காது என விவசாயிகள் தெரிவித்தனர்.
    மேட்டூர் மற்றும் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நேற்று லேசான மழை பெய்ததையடுத்து மேட்டூர் அணையில் நீர்வரத்து சற்று அதிகரித்துள்ளது.
    மேட்டூர்:

    மேட்டூர் மற்றும் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நேற்று லேசான மழை பெய்தது. இதனால் நீர்வரத்து சற்று அதிகரித்து இன்று விநாடிக்கு 6 ஆயிரத்து 136 கன அடி வீதம் தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. நேற்று 6 ஆயிரத்து 47 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று 89 கன அடி அதிகரித்துள்ளது.

    அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 20 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீரும், கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்துக்கு 800 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டு வருகிறது. நீர்வரத்தை விட திறப்பு அதிகமாக உள்ளதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் படிப்படியாக சரிந்து வருகிறது. நேற்று காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 118.38 அடியாக இருந்தது. இன்று காலை 117.55 அடியாக சரிந்தது. #tamilnews
    நீர்வரத்து அதிகரிப்பால் மேட்டூர் அணையில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவு 19 ஆயிரத்து 800 கன அடியில் இருந்து 20 ஆயிரத்து 800 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
    மேட்டூர்:

    கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் அங்குள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் கூடுதல் தண்ணீர் காவிரியில் திறந்து விடப்பட்டுள்ளது.

    இந்த தண்ணீர் ஒகேனக்கல் வழியாக நேராக மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. இதனால் கடந்த 4 நாட்களாக அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்த வண்ணம் உள்ளது.

    நேற்று முன்தினம் 15 ஆயிரத்து 525 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று 21 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. இன்று காலை இதே அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    இதனால் மேட்டூர் அணையில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவு 19 ஆயிரத்து 800 கன அடியில் இருந்து 20 ஆயிரத்து 800 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அணையின் நீர்மட்டம் 120.19 அடியாக உள்ளது.

    கர்நாடக அணைகளில் இருந்து மீண்டும் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் அங்குள்ள அருவிகளில் தண்ணீர் அதிகளவு கொட்டுகிறது.

    இதையடுத்து அருவிகளில் குளிக்க இன்று 56-வது நாளாக தடை நீடித்து வருகிறது. இன்று விடுமுறை நாள் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல்லில் குவிந்தனர். ஆனால் அவர்கள் அருவிகளில் குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    காவிரி ஆற்றில் வரும் நீர்வரத்தை ஒகேனக்கல் பிலிகுண்டுலுவில் பொதுப் பணித்துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர்.
    நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்ததையொட்டி இன்று பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.
    ஈரோடு:

    பவானிசாகர் அணை இந்த ஆண்டு முழு கொள்ளளவை எட்டி உபரிநீர் பவானி ஆற்றுக்கு திறந்து விடப்பட்டது. மழை ஓய்ந்து படிப்படியாக அணைக்கு தண்ணீர் வரத்தும் குறைந்தது. நேற்று அணைக்கு வினாடிக்கு 3100 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    இந்த நிலையில் நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்ததையொட்டி இன்று பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இன்று காலை 9 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 4273 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 102 அடியாக இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 4300 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.

    நேற்று ஈரோடு மாவட்டத்தில் பரவலாக சாரல் மழை பெய்தது. கோபியில் 3 மி.மீ., தாளவாடி-1, சத்தியமங்கலம்-4, கவுந்தப்பாடி- 8.6, மொடக்குறிச்சி-4, சென்னிமலை-7, கொடிவேரி அணை-4, வரட்டுப்பள்ளம் அணை-1.2, மி.மீட்டர் மழை பெய்தது.
    பவானிசாகர் அணைக்கு இன்று காலை வினாடிக்கு 3138 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. கடந்த 10 நாட்களாகவே அணையின் நீர்மட்டம் 102 அடியாக இருப்பது குறிப்பிடத்தக்கது. #BhavanisagarDam
    ஈரோடு:

    கடந்த 5 ஆண்டுக்கு பிறகு பவானிசாகர் அணை தனது முழு கொள்ளவை எட்டியது.

    தொடர்ந்து பெய்த மழையால் அணைக்கு வினாடிக்கு 50 ஆயிரம் கனஅடிக்கு மேல் தண்ணீர் திறந்து விடப்பட்டதால் பவானி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டது.

    தற்போது மழை நின்று விட்டதால் அணைக்கு வரும் நீர்வரத்து படிப்படியாக குறைந்தது. இன்று காலை அணைக்கு வினாடிக்கு 3138 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணைக்கு வரும் தண்ணீர் அதாவது 3100 கனஅடி தண்ணீர் பாசனத்துக்காக வாய்க்கால்களிலும், குடிநீருக்காக பவானி ஆற்றிலும் திறந்துவிடப்பட்டு உள்ளது.

    இன்று அணையின் நீர்மட்டம் 102 அடியாக இருந்தது. கடந்த 10 நாட்களாகவே அணையின் நீர்மட்டம் 102 அடியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

    அணையில் இருந்து வாய்க்கால்களில் திறந்து விடப்பட்ட தண்ணீரால் விவசாயிகள், விவசாயப் பணிகளையும் தீவிரப்படுத்தி உள்ளனர். மேலும் தினமும் அணைக்கு கணிசமான அளவில் தண்ணீர் வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தும் உள்ளனர். #BhavanisagarDam
    மேட்டூர் அணை தண்ணீருடன் பவானிசாகர் அணை நீரும் ஒன்று சேர்ந்து வருவதால் மாயனூர் கதவணைக்கு வரும் நீர்வரத்து அளவானது 1 லட்சத்து 42 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது.
    லாலாப்பேட்டை:

    மேட்டூர் அணையில் இருந்து கடந்த மாதம் திறந்து விடப்பட்ட தண்ணீர் மூலம் கரூர் மாவட்டம் மாயனூர் கதவணை முற்றிலும் நிரம்பியது. இதையடுத்து அங்கிருந்து திருச்சி முக்கொம்பு அணைக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

    பரந்து விரிந்த அணை என்பதால் தண்ணீர் முழுவதும் நிரம்பி கடல் போல் காட்சியளிக்கிறது. அதனை காண தினமும் ஏராளமான பொதுமக்கள் திரண்டு வந்த வண்ணம் உள்ளனர். மேலும் கரூர் மாவட்ட விவசாயிகள் சாகுபடி பணியை தொடங்கினர்.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு மேட்டூர் அணையில் இருந்து 1 லட்சம் கன அடிக்கும் மேலாக தண்ணீர் திறந்து விடப்பட்டதால் மாயனூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவும் அதிகரிக்கப்பட்டது. மாயனூர் காவிரி ஆற்றில் இருகரைகளையும் தொட்டபடி தண்ணீர் ஆர்ப்பரித்து சென்றது.

    மேலும் கரையோர பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் வயல்களுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் பல ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த வாழை, நெல் உள்ளிட்ட பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்தன.


    இந்த நிலையில் நேற்று மேட்டூர் அணையில் இருந்து 2 லட்சம் கனஅடி வரை தண்ணீர் திறக்கப்பட வாய்ப்பு இருப்பதால் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகத்திற்கு மத்திய அரசு உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து முன்னேற்பாடு பணிகளை அதிகாரிகள் செய்தனர்.

    கலெக்டர் அன்பழகன் மாயனூர் மற்றும் கரூர் மாவட்ட காவிரி கரையோர பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்ததோடு, கரையோர பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு உத்தரவிட்டார். தண்டோரா மூலமும் வெள்ள அபாயம் குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டது.

    இந்தநிலையில் நேற்று மாலை மேட்டூர் அணையில் இருந்து திறந்துவிடப்பட்ட கூடுதல் தண்ணீர் இன்று அதிகாலை மாயனூர் கதவணையை வந்தடைந்தது. இது மட்டுமின்றி ஈரோடு பவானிசாகர் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட 40,000 ஆயிரம் கனஅடி தண்ணீரும், அமராவதி ஆற்றில் இருந்து திறந்து விடப்பட்ட 15,000 கன அடி தண்ணீரும் கரூர் மாவட்டம் திருமுக்கூடலூர் அருகே காவிரி ஆற்றில் கலந்தன. இதனால் காவிரி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    இன்று அதிகாலை நிலவரப்படி மேட்டூர் அணையில் இருந்து மாயனூர் கதவணைக்கு வரும் தண்ணீரின் அளவானது 1.42 லட்சம் கனஅடியாக இருந்தது. அந்த தண்ணீர் அப்படியே காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது. மாயனூர் கதவணையில் மொத்தம் 98 கதவுகள் உள்ளது. இதில் 78 கதவுகள் திறக்கப்பட்டு தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    இன்று காலை மேட்டூர் அணையில் இருந்து 1.70 லட்சம் கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. அந்த தண்ணீர் இன்று மதியம் மாயனூர் கதவணையை வந்தடைய வாய்ப்புள்ளது. எனவே தண்ணீர் செல்வதற்கு வசதியாக மீதமுள்ள கதவுகளும் திறக்கப்பட உள்ளது.

    இதன் மூலம் இன்று மதியத்திற்கு மேல் மாயனூர் கதவணையில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவு 1.50 லட்சம் கன அடியை தாண்டும். எந்தவித பாதிப்புகளும் ஏற்படாத வகையில் வருவாய்த்துறை, பொதுப் பணித்துறை, தீயணைப்பு துறையினர் கரையோர பகுதியில் முகாமிட்டு தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    கரூர் மாயனூர் கதவணையில் இருந்து காவிரி ஆற்றில் 1 லட்சத்து 42 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் கரையோர பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. குறிப்பாக என்.புகழூர் ஊராட்சிக்கு உட்பட்ட தவுட்டுப்பாளையம் கிராமத்திற்குள் வெள்ளம் புகுந்துள்ளது.

    இதனால் அங்குள்ள சுமார் 50-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. முன்னெச்சரிக்கையாக அங்கு வசித்தவர்கள் வெளியேற்றப்பட்டு தவுட்டுப்பாளையத்தில் உள்ள சமுதாயக்கூடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    அத்துடன் அங்கு நூற்றுக்கணக்கான ஏக்கரில் நெல், வாழை உள்ளிட்ட பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன. தொடர்ந்து மாயனூர் கதவணை பகுதியில் 1 லட்சத்து 42 ஆயிரம் கன அடி வரை தண்ணீர் செல்வதால் ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ யாரும் முயற்சிக்க வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தொடர்ந்து தண்டோரா மூலம் எச்சரிக்கப்பட்டு வருகிறது.


    கல்லணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் மூலம் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள அணைக்கரை கீழணை நிரம்பியது. இன்று காலை நிலவரப்படி கீழணைக்கு 61,534 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அதில் கொள்ளிடம் ஆற்றில் 59,906 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. அந்த தண்ணீர் வீணாக கடலுக்கு செல்கிறது.

    கீழணையில் இருந்து வடவாற்றில் 978 கன அடி தண்ணீரும், வடக்கு ராஜன் வாய்க்காலில் 191 கன அடி தண்ணீரும், தெற்கு ராஜன் வாய்க்காலில் 395 கன அடி தண்ணீரும், குமிக்கி மண் ஆற்றில் 109 கன அடி தண்ணீரும் திறந்துவிடப்பட்டுள்ளது. இன்று காலை மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்டுள்ள தண்ணீர் மூலம் கீழணைக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே கரையோர பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே கொள்ளிடம் ஆற்றில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. காவிரி ஆற்றில் இருந்து திறந்து விடப்படும் உபரிநீர் கொள்ளிடம் ஆற்றின் இருகரைகளையும் தொட்டு செல்கிறது. தற்போது ஆற்றில் வெள்ள நீர் அதிக அளவில் செல்வதால் திருமானூர் பகுதியில் திருவெங்கனூர், விழுப்பனங்குறிச்சி, சுள்ளங்குடி, ஏலாக்குறிச்சி, அழகிய மணவாளன், நதியனூர், தூத்தூர் போன்ற கொள்ளிட கரையோர கிராமங்களில் உள்ள செங்கல் சூளைகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. மேலும் அங்கு தண்ணீருக்காக அமைக்கப்பட்ட போர் வெல்கள், அங்குள்ள டீசல் என்ஜின்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன.

    புதுக்கோட்டை மாவட்டத்திற்கு கல்லணையில் இருந்து கல்லணை கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அந்த தண்ணீர் இன்று புதுக்கோட்டை மாவட்ட கடைமடை பகுதியான மேற்பனைக்காடு, நாகுடியை சென்றடைந்துள்ளது.
    பெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்படுவதால் வைகை அணை நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.
    கூடலூர்:

    தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணைக்கு மழைக்காலங்களில் மேகமலை, வெள்ளிமலை, வரு‌ஷநாடு ஆகிய பகுதிகளில் பெய்யும் மழையின் மூலமாக நீர் வரத்து ஏற்படும். கடந்த சில வருடங்களாக போதிய மழை பெய்யாததால் வரலாறு காணாத அளவில் குறைந்து வந்தது. 71 அடி உயரமுள்ள அணையின் நீர் மட்டம் 22 அடி வரை சரிந்தது.

    இந்நிலையில் கடந்த 1 மாதத்துக்கும் மேலாக கேரளாவில் கன மழை பெய்து வருவதால் பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. எனவே அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டு வைகை அணையில் தேக்கப்பட்டது.

    இன்று காலை நிலவரப்படி பெரியாறு அணையின் நீர் மட்டம் 135.30 அடியாக உள்ளது. அணைக்கு 2,377 கன அடி வீதம் தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 2,200 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    வைகை அணையின் நீர் மட்டம் 61.15 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 2,063 கன அடி தண்ணீர் வருகிறது. திண்டுக்கல் மற்றும் மதுரை பாசனத்துக்காகவும், மதுரை குடிநீருக்காகவும் 960 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது.

    கடந்த மாதம் 28-ந் தேதி அணையின் நீர் மட்டம் 49.41 அடியாக இருந்தது. அப்போது முதல் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று பெரியாறு பிரதான கால்வாய் வழியாக வைகை அணையில் இருந்து 45 நாட்களுக்கு முழுமையாகவும், 75 நாட்களுக்கு முறை வைத்தும் தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது.

    அதன்படி அணையில் இருந்து 900 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. தற்போது அணையின் நீர் மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால் இந்த ஆண்டு முழு போக விளைச்சலை எடுக்க முடியும் என வைகை அணை பாசன விவசாயிகள் நம்பிக்கை அடைந்துள்ளனர்.
    ஒகேனக்கல் காவிரி ஆற்றில் இருந்து 60 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டால் மேட்டூர் அணை நாளை மாலைக்குள் 2-வது முறையாக மீண்டும் நிரம்ப வாய்ப்பு உள்ளது. #MetturDam
    மேட்டூர்:

    கர்நாடகா மற்றும் கேரளாவில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மீண்டும் கனமழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகள் மீண்டும் நிரம்பின.

    இதனால் நேற்று முன்தினம் கர்நாடக அணைகளில் இருந்து உபரிநீர் 70 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. பின்னர் தண்ணீர் திறப்பு படிப்படியாக அதிகரிக்கப்பட்டது.

    இன்று காலை கபினி அணையில் இருந்து 80 ஆயிரம் கனஅடி தண்ணீரும், கே.ஆர்.எஸ். அணையில் இருந்து 63 ஆயிரம் கன அடி தண்ணீரும் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    இந்த தண்ணீர் நேற்றிரவு தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவை கடந்து ஒகேனக்கலை வந்தடைந்தது. இதனால் ஒகேனக்கலில் நேற்று காலை 9 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்றிரவு 8 மணிக்கு 18 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. இன்று காலை நீர்வரத்து 60 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது.

    இதனால் ஒகேனக்கல் மெயின்அருவி, ஐந்தருவி, சினி பால்ஸ் உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. மெயின்அருவி உள்ளிட்ட அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    நீர்வரத்து அதிகரித்துள்ளதை காவிரி கரையில் நின்று சுற்றுலா பயணிகள் வேடிக்கை பார்த்து வருகிறார்கள்.

    ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வரும் தண்ணீர் நேராக மேட்டூர் அணைக்கு வருகிறது. இதனால் நேற்று காலை 8 ஆயிரத்து 311 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று 16 ஆயிரத்து 969 கன அடியாக அதிகரித்தது. அணையில் இருந்து 30 ஆயிரம் கன அடி தண்ணீர் டெல்டா பாசனத்திற்காக வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டம் இன்று காலை 116.85 அடியாக உள்ளது.

    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து இன்று பிற்பகல் 60 ஆயிரம் கன அடியை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி தண்ணீர் வரும் பட்சத்தில் அணையில் இருந்து இதே அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டால் மேட்டூர் அணை நாளை மாலைக்குள் 2-வது முறையாக மீண்டும் நிரம்ப வாய்ப்பு உள்ளது.

    இதற்கிடையே மத்திய நீர்வள ஆணையத்தின் செயற்பொறியாளர் சரவணன் தமிழக அரசுக்கும், 6 மாவட்ட கலெக்டர்களுக்கும் எச்சரிக்கை கடிதத்தை அனுப்பி உள்ளார்.

    அதில் காவிரி கரையோரம் உள்ள பகுதிகளில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும், அணைகளில் இருந்து திறக்கப்படும் நீர் தொடர்பாக அணைக்கு கீழ் பகுதியில் உள்ள மக்களுக்கும், தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் கூறி உள்ளார்.


    இதை தொடர்ந்து கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ஈரோடு, திருச்சி, தஞ்சை மாவட்டங்களில் காவிரி கரையோரம் வசிக்கும் மக்களுக்கு தண்டோரா மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. வெள்ள அபாய எச்சரிக்கை குறித்த துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டது.

    கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக ஒகேனக்கல் மெயின் அருவிக்கு செல்லும் வழியில் உள்ள பாதையில் கேட் பூட்டி வைக்கப்பட்டுள்ளது. அதன் அருகில் போலீசார் மற்றும் ஊர்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    நாளை ஆடி அமாவாசை என்பதாலும், விடுமுறை நாள் என்பதாலும் லட்சக்கணக்கில் சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல்லுக்கு வருவார்கள் என்று எதிர் பார்க்கப்படுகிறது. ஒகேனக்கல்லில் தர்ப்பணம் கொடுக்க நாகர்கோவில் மற்றும் முதலைப்பண்ணை அருகே 2 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

    அங்கே தர்ப்பணம் கொடுத்து விட்டு மெயின் அருவிக்கு சிறிய கால்வாய் போல் தண்ணீர் வரும் இடத்தில் பக்தர்கள் குளிக்குமாறும், கரைபுரண்டு ஓடும் காவிரி ஆற்றில் யாரும் குளிக்க வேண்டாம் என்றும் அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

    இன்று காலை முதல் ஏரியூர் அருகே உள்ள நாகமறையில் இருந்து சேலம் மாவட்டம் பண்ணவாடி பரிசல் துறைக்கு இயக்கப்பட்டு வந்த பரிசல் மற்றும் படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

    காவிரி கரையோரத்தில் உள்ள ஊட்டமலை உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக தங்க சமூக நலக்கூடங்கள் மற்றும் திருமண மண்டபங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

    மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பட உள்ளதால் மேட்டூர் அருகே உள்ள தங்கமாபுரி பட்டணம், சேலம் கேம்ப், தொட்டில்பட்டி, எடப்பாடி, சங்ககிரி தாலுகா பகுதிகளில் காவிரி கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு தண்டோரா மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் காவிரி கரையோர பகுதிகளில் அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். மேலும் ஆறுகளில் குளிப்பதையும், புகைப்படங்கள் எடுப்பதையும் தவிர்க்க வேண்டும் என்று கேட்டு கொள்ளப்பட்டுள்ளது. #MetturDam
    நீர்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் கனமழை கொட்டியதால் பவானிசாகர் அணை நீர்வரத்து இன்று காலை முதல் அதிகரித்தது.
    ஈரோடு:

    பவானிசாகர் வனப்பகுதி மலையடிவாரத்தில் உள்ள பவானிசாகர் அணை ஆசியாவிலேயே மண்ணால் உருவாக்கப்பட்ட 2-வது பெரிய அணை ஆகும்.

    கடந்த 5 ஆண்டுகளுக்குப் பிறகு அணையின் நீர்மட்டம் 99 அடியை எட்டியது. தென்மேற்கு பருவமழை கொட்டியதால் அணையின் நீர்மட்டம் கிடு...கிடுவென உயர்ந்தது.

    இந்த நிலையில் கடந்த சில தினங்களாக அணைக்கு நீர்வரத்து குறைந்திருந்தது. எனினும் சராசரியாக தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

    இந்த நிலையில் நேற்று நீர்பிடிப்பு பகுதியான ஊட்டி மலைப்பகுதியில் மீண்டும் கனமழை பெய்தது. இதையொட்டி பவானிசாகர் அணைக்கு இன்று காலை முதல் தண்ணீர் வரத்து அதிகரித்தது.

    இன்று காலை நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 6933 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. பாசனத்துக்காக கீழ்பவானி வாய்க்காலுக்கு வினாடிக்கு 2300 கனஅடி தண்ணீரும், தடப்பள்ளி- அரக்கன்கோட்டை வாய்க்காலில் 850 கனஅடியும், காளிங்கராயன் வாய்க்காலுக்கு 450 கனஅடி தண்ணீரும் திறந்துவிடப்படுகிறது.

    இதேபோல் பொது மக்களின் குடிநீருக்காக பவானி ஆற்றில் 200 கனஅடி வீதமும் தண்ணீர் திறந்துவிடப்பட்டு உள்ளது. இன்று காலை 8 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 97.27 அடியாக இருந்தது.
    கர்நாடக அணைகளில் இருந்து திறந்துவிடப்பட்ட காவிரி நீர் நேற்று மாலை முதல் மேட்டூர் அணைக்கு வரத் தொடங்கியது. இதனால் நீர்வரத்து 14 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது.
    மேட்டூர்:

    கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான குடகு, மைசூரு, மண்டியா, ராம்நகர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் கடந்த 5 நாட்களாக கன மழை கொட்டி தீர்க்கிறது.

    இதனால் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கிருஷ்ணராஜசாகர், ஹாரங்கி, ஹேமாவதி ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து பல மடங்கு அதிகரித்துள்ளது.

    கபினி ஆறு உற்பத்தியாகும் கேரள மாநிலம் வயநாடு மலை பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மைசூர் மாவட்டத்தில் உள்ள கபினி அணைக்கு கடந்த சில நாட்களாக நீர்வரத்து அதிகரித்த வண்ணம் உள்ளது.

    இதனால் அணையின் நீர்மட்டம் 82.14 அடியை நெருங்கியது. (மொத்த கொள்ளளவு 84 அடி) இதே போல் கிருஷ்ணராஜசாகர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 112.70 அடியாக (மொத்த கொள்ளளவு 124.80 அடி) உயர்ந்துள்ளது.

    இதையடுத்து கபினி அணையில் இருந்து பாதுகாப்பு கருதி காவிரி ஆற்றில் 35 ஆயிரம் கன அடி திறந்துவிடப்பட்டது. இன்று காலை அணைக்கு 35 ஆயிரத்து 685 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் நீர் திறப்பு 35 ஆயிரத்து 565 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

    இதேபோல் கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்தும் 3 ஆயிரத்து 571 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. அணைக்கு 31 ஆயிரத்து 490 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்தும் திறக்கப்பட்ட 40 ஆயிரம் கன அடி தண்ணீர் தமிழகத்தை நோக்கி காவிரி ஆற்றில் சீறிப்பாய்ந்து வருகிறது.

    நேற்று காலை இந்த தண்ணீர் தமிழக - கர்நாடக எல்லைப்பகுதியான பிலிகுண்டுலுவை கடந்து ஒகேனக்கல் வந்து சேர்ந்தது. இதனால் ஒகேனக்கல்லில் நீர்வரத்து படிப்படியாக அதிகரித்தது.

    நேற்று முன்தினம் மாலை விநாடிக்கு 2600 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 5600 கன அடியாகவும் பிற்பகல் 21 ஆயிரம் கன அடியாகவும் உயர்ந்தது. இது மாலை 25 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. இன்று காலை 30 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    இதனால் ஒகேனக்கல் மெயின் அருவி ஐந்தருவி, சினிபால்ஸ் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது

    ஒகேனக்கல் காவிரி ஆற்றின் இருபுறங்களையும் தொட்டபடி தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதைக்கு மேல் தண்ணீர் பாய்ந்தோடி செல்வதால் அருவிகளில் குளிக்க நேற்று முதல் தடை விதிக்கப்பட்டது.

    இன்று 2-வது நாளாக இந்த தடை நீடிக்கிறது. இதேபோல் காவிரி ஆற்றில் பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. அருவி பக்கம் யாரும் செல்லாத வகையில் அதி காரிகள் ஒகேனக்கல்லில் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    காவிரி ஆற்றில் நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து பிலிகுண்டுலுவில் நீர்ப்பாசனத்துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கர்நாடக அணைகளில் இருந்து திறந்துவிடப்பட்ட காவிரி நீர் நேற்று மாலை முதல் மேட்டூர் அணைக்கு வரத் தொடங்கியது. நேற்று காலை 1533 கன அடி வீதம் வந்து கொண்டிருந்த நீர்வரத்து மாலையில் 3 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. இன்று காலை இது 14 ஆயிரத்து 334 கன அடியாக அதிகரித்தது.

    அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 1000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. நீர் திறப்பைவிட தண்ணீர் வரத்து பல மடங்கு அதிகரித்துள்ளதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

    நேற்று 63.72 அடியாக நீர்மட்டம் இன்று காலை 65.15 அடியாக உயர்ந்தது. இன்று நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் என பொதுப் பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்பட்ட 40 ஆயிரம் கன அடி தண்ணீர் முழுமையாக வந்து சேரும் பட்சத்தில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் வேகமாக உயரும் வாய்ப்பு உள்ளது. அணையின் நீர்மட்டம் 90 அடியை எட்டும் பொழுது காவிரி டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது

    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்த வண்ணம் உள்ளதால் காவிரி டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    ×