என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாகன சோதனை"

    • கூடங்குளம் அருகே உள்ள உலகரட்சகர்புரம் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
    • சந்தேகம் அடைந்த போலீசார் லாரியை சோதனை செய்தபோது அதில் சுமார் 2 டன் அளவு பீடி இலை பதுக்கி வைக்கப்பட்டிருந்தது.

    நெல்லை:

    நெல்லை, தூத்துக்குடி மாவட்ட கடலோர கிராமங்கள் வழியாக படகுகளில் இலங்கைக்கு சட்டவிரோதமாக பீடி இலை, கடல் அட்டை, மஞ்சள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கடத்தப்படுபவதை தடுக்க நெல்லை, தூத்துக்குடி மாவட்ட கடலோர பாதுகாப்பு குழும போலீசார் தீவிர ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    நெல்லை மாவட்டத்திலும் கிழக்கு கடற்கரை சாலையில் கூடங்குளம் பகுதியில் சோதனை சாவடி அமைத்து நெல்லை மாவட்ட போலீசாரும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் கூடங்குளம் கடல் வழியாக படகில் தடை செய்யப்பட்ட பீடி இலையை ஒரு கும்பல் கடத்துவதற்கு முயற்சி செய்வதாக நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    உடனே அவரது தலைமையின் கீழ் இயங்கும் தனிப்படை கூடங்குளம் பகுதிக்கு விரைந்தது.

    கூடங்குளம் அருகே உள்ள உலகரட்சகர்புரம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது சந்தேகத்திற்கிடமான முறையில் அந்த வழியாக வந்த மினிலாரியை தடுத்து நிறுத்தினர். டிரைவரிடம் விசாரித்தபோது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினார்.

    இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் லாரியை சோதனை செய்தபோது அதில் சுமார் 2 டன் அளவு பீடி இலை பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து லாரியை ஓட்டி வந்தவரை போலீசார் பிடித்து விசாரித்தபோது கூடங்குளத்தில் இருந்து கடல் வழியாக இலங்கைக்கு பீடி இலையை அனுப்பி வைக்க கொண்டு செல்வதாக அவர் தெரிவித்தார்.

    அந்த நேரத்தில் ஒரு காரில் வேகமாக வந்த 4 பேர் கும்பல் போலீசாரை கண்டதும் காரை திருப்பிக்கொண்டு தப்ப முயன்றது. அவர்களை போலீசார் மடக்கிப்பிடித்து விசாரித்தபோது அந்த கும்பல் தான் பீடி இலையை இலங்கைக்கு கடத்த முயன்றது என்பது தெரியவந்தது.

    இதையடுத்து பீடி இலையுடன் லாரியையும், காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    மேலும் போலீசாரின் பிடியில் சிக்கிய 5 பேரையும் கூடங்குளம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று நடத்திய விசாரணையில், அவர்கள் கூத்தங்குழி கிராமத்தை சேர்ந்த ஜெனா(வயது 70), தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தை சேர்ந்த சண்முகம்(25), ஏரலை சேர்ந்த சந்தோஷ்குமார்(23), தூத்துக்குடியை சேர்ந்த அந்தோணி ராஜ்(36), வள்ளியூர் அருகே உள்ள தளபதி சமுத்திரத்தை சேர்ந்த முத்துக்குமார்(42) என்பது தெரியவந்தது.

    அந்த கும்பல் கடல் வழியாக கடத்த முயன்ற பீடி இலையின் இலங்கை மதிப்பு ரூ.50 லட்சம் வரை இருக்கும் என்று கூறப்படுகிறது.

    • திருட்டு, வழிப்பறி போன்ற குற்ற சம்பவங்ளை தடுக்க மாநகர போலீசாா் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
    • வாகன சோதனையின்போது வாகன ஓட்டுனர் பெயர், வாகன எண் ஆகியவை பதிவு செய்யப்படுகிறது.

    திருப்பூர்:

    திருப்பூரில் பனியன் சார்ந்த தொழில் நிறுவனங்கள் அதிக அளவில் உள்ளன. பனியன் நிறுவனங்களில் பணியாற்ற வெளிமாவட்டம் மற்றும் வடமாநில தொழிலாளிகள் ஏராளமானோர் தங்கி பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் தமிழ்புத்தாண்டு கொண்டாட திருப்பூரில் தங்கி வேலை செய்யும் வெளி மாவட்ட தொழிலாளர்கள் குடும்பத்துடன் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று வருகின்றனர். இதனால் பல்வேறு பகுதிகளில் திருட்டு, வழிப்பறி போன்ற குற்ற சம்பவங்ளை தடுக்க மாநகர போலீசாா் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

    மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவின் பேரில் திருப்பூர் மாநகரின் முக்கிய பகுதிகளில் நேற்று போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். தொடர்ந்து வாகன சோதனையின்போது வாகன ஓட்டுனர் பெயர், வாகன எண் ஆகியவை பதிவு செய்யப்படுகிறது. அதேபோல் முறையான ஆவணங்கள் இல்லாமல் வரும் இருசக்கர வாகனம், தலைக்கவசம் இல்லாமல் வருபவர்கள் மற்றும் நான்கு சக்கர வாகனத்திற்கு அபராதம் விதித்தனர்.

    • கிருஷ்ணசாமி (71). பாலக்கரை அருகே உள்ள தேசிய உடமையாக்கப்பட்ட வங்கி ஒன்றில் நகையை அடமானம் வைத்து 1 ஒரு லட்சத்து 27 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார்.
    • இருசக்கர வாகனத்தில் வந்த இரு வாலிபர்கள் கிருஷ்ணசாமியிடம் பணப்பையை பறித்துக் கொண்டு சென்று விட்டனர்.

    திருச்சி

    திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள ரெங்கநாதபுரம் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி (71). இவர் கடந்த 7 -ந்தேதி துறையூர் பாலக்கரை அருகே உள்ள தேசிய உடமையாக்கப்பட்ட வங்கி ஒன்றில் நகையை அடமானம் வைத்து 1 ஒரு லட்சத்து 27 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார்.

    பிறகு பணத்தை ஒரு பையில் வைத்துக்கொண்டு பாலக்கரை அருகே வரும் பொழுது இருசக்கர வாகனத்தில் வந்த இரு வாலிபர்கள் பணப்பையை பறித்துக் கொண்டு சென்று விட்டனர்.

    இச்சம்பவம் தொடர்பாக கிருஷ்ணசாமி அளித்த புகாரின் பேரில் துறையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளைக் கொண்டு விசாரணை மேற்கொண்டிருந்தனர்.

    இந்நிலையில் நேற்று சொரத்தூர் பிரிவு சாலை அருகே துறையூர் போலீசார் வாகன சோதனை மேற்கொண்டிருந்தனர்.

    அப்பொழுது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபர்களை மறித்து விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசினர். இதனையடுத்து இருவரையும் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டதில் ஒரு நபர் பொள்ளாச்சி அருகே உள்ள அங்காளக்குறிச்சி கிராமத்தை சேர்ந்த தினேஷ் குமார் (22) என்பதும், மற்றொரு நபர் பெரம்பலூர் அருகே உள்ள விளாமுத்தூர் கிராமத்தை சேர்ந்த 17 வயதுடைய வாலிபர் என்பதும் இருவரும் சேர்ந்து கிருஷ்ணசாமி என்பவரிடம் பணப்பையை பறித்து சென்றதும் விசாரணையில் தெரியவந்தது.

    இதனை அடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 3 இரு சக்கர வாகனம், பணம் ரூபாய் 2000 ஆகியவற்றை பறிமுதல் செய்ததோடு தினேஷ் குமாரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இச்சம்பவத்தில் ஈடுபட்ட 17 வயதுடைய வாலிபரை கூர்நோக்கு இல்லத்திற்கு அனுப்பி வைத்தனர்.

    • 300-க்கும் மேற்பட்ட வாகனங்களை இரவு முழுவதும் சோதனை செய்தனர்.
    • குன்னூர் வட்டாட்சியர் தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    குன்னூர்,

    நீலகிரி மாவட்டத்திற்கு நுழைவாயிலாக பர்லியார் சோதனை சாவடி உள்ளது. குன்னூர் மற்றும் மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இந்த சோதனை சாவடியில் திடீரென்று இரவு முழுவதும் குன்னூர் வட்டாட்சியர் சிவக்குமார் தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    நீலகிரி மாவட்டத்திற்குள் நுழையக்கூடிய வாகனங்கள் குன்னூர் நகரம் வழியாக தான் செல்ல வேண்டும். வெளி மாவட்டம் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து வரக்கூடிய வாகனங்கள் அனைத்தும் பர்லியார் சோதனை சாவடி வழியாகத்தான் மாவட்டத்திற்குள் நுழைய முடியும்.

    இதையடுத்து இந்த ேசாதனை சாவடியில் வருவாய்த்துறையினர் இரவில் வந்த அனைத்து வாகனங்களையும் நிறுத்தி சோதனை செய்தனர். சுமார் 300-க்கும் மேற்பட்ட வாகனங்களை இரவு முழுவதும் சோதனை செய்தனர். வாகனங்களில் ஏதாவது தேவையற்ற பொருட்கள் எடுத்து வரப்படுகிறதா, அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா, குட்கா பொருட்கள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் ஏதாவது எடுத்து வரப்படுகிறதா என வாகனங்களை ஆய்வு செய்தபின்னர் உள்ளே வர அனுமதித்தனர்.

    இதில் குன்னூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெய்சங்கர், வருவாய் அலுவலர்கள், அரசு அலுவலர்கள் பலர் இரவு முழுவதும் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    • திண்டிவனத்தில் போலீசார் விடிய விடிய வாகன சோதனையில் ஈடுப்பட்டனர்.
    • குற்றவாளிகள் யாரேனும் இருக்கிறா ர்களா? என எப்.ஆர்.எஸ். என்ற செயலி மூலம் கண்டறிந்தனர்.

    விழுப்புரம்:

    கடந்த சில தினங்களுக்கு முன்பு கோவையில் கார் சிலிண்டர் வெடிப்பு நடந்தது. இதையடுத்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு வெடிகுண்டு நிபுணர்கள் திண்டிவனம் ெரயில் நிலையம் மற்றும் முக்கிய இடங்களில் போலீசார் சோதனை நடத்தினர். இதனை தொடர்ந்து திண்டிவனம்- மரக்காணம் சாலையில் திண்டிவனம் இன்ஸ்பெக்டர் பிரேமா மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர் லட்சுமி நாராயணன், தலைமை போலீ சார் அன்புவேல், சோலை, போலீசார் அய்யனார், அப்துல் ரசீத் மற்றும் போலீ சார் தீவிர வாத தடுப்பு முன்னெச்சரிக்கையாக வாகன சோத னையில் ஈடுபட்டனர்.

    சந்தேகம் படும்படியான நபர்கள் யாரேனும் வருகி றார்களா? எனவும் சோத னையில் ஈடுபட்ட போலீசார் கார் மற்றும் இரு சக்கர வாகனங்களில் குற்றவாளி கள் யாரேனும் இருக்கிறா ர்களா? என எப்.ஆர்.எஸ். என்ற செயலி மூலம் கண்டறிந்தனர். மேலும் சரியான ஆவணங்கள் இல்லாத வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.விழுப்புரம் மாவட்டம் முழு வதும் வாகன சோதனை நடைபெறுவது குறிப்பிட த்தக்கது.

    • அதிவேகத்தில் சென்ற 3 ஆயிரத்து 356 வாகனங்கள், எப்.சி. இன்றி இயக்கப்பட்ட 435 வாகனங்கள் கண்டறியப்பட்டன
    • வரி மற்றும் அபராதமாக ரூ.3.5 கோடி வசூலாகி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    தருமபுரி, 

    தருமபுரி மாவட்டத்தில் போக்குவரத்து அதிகாரிகள் தொடர் வாகன சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதில் கடந்த 10 மாதங்களில் மட்டும் வரி மற்றும் அபராதமாக ரூ.3.5 கோடி வசூலாகி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    தருமபுரி மாவட்டத்தில் கடந்த ஜனவரி முதல் அக்டோபர் மாதம் வரை 10 மாதங்களில் போக்குவரத்து துறையின் சார்பாக வட்டாரப் போக்குவரத்து அலுவலர் தாமோதரன், தலைமையில் பறக்கும் படை மோட்டார் வாகன ஆய்வாளர் கதிர்வேல், தருமபுரி மோட்டார் வாகன ஆய்வாளர் தரணிதர், பாலக்கோடு பகுதி அலுவலக மோட்டார் வாகன ஆய்வாளர் வெங்கிடுசாமி, அரூர் பகுதி அலுவலக மோட்டார் வாகன ஆய்வாளர் குலோத்துங்கன் ஆகியோர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வாகன தணிக்கை மேற்கொண்டனர்.

    சுமார் 37 ஆயிரத்து 500 வாகனங்கள் சோதனை செய்யப்பட்டதில் அதிக அளவு லோடு ஏற்றிய 134 வாகனங்கள், உரிய ஆவணங்கள் இன்றி இயங்கிய 304 வாகனங்கள், அதிவேகத்தில் சென்ற 3 ஆயிரத்து 356 வாகனங்கள், எப்.சி. இன்றி இயக்கப்பட்ட 435 வாகனங்கள் கண்டறியப்பட்டன.

    இதேபோல முறையான பராமரிப்பில்லாமல் இயங்கிய வாகனங்கள், ஒளிரும் பட்டைகள் ஒட்டா மல் இயக்கப்பட்டவை, விளக்குகள் எரியாத வாகனங்கள் என்று பல வாகனங்களை இயக்கியவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    வாகன சோதனையில் பிடிபட்ட பிற மாநிலங்களை சேர்ந்த வாகனங்களுக்கு சம்பந்தப்பட்ட ஆர்.டி.ஓ. அலுவலகம் மூலம் நோட்டீஸ் அனுப்பி அபராதம் பெறவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ள அதிகாரிகள் இந்த சோதனை தொடர்ந்து நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளனர்.

    • வாகன சோதனையில் சிக்கினர்
    • 2 பைக்குகள், 2 பவுன் செயின் பறிமுதல்

    அரக்கோணம்:

    அரக்கோணம் டவுன் போலீசார் நேற்று முன்தினம் திருவள்ளூர்ரோடு சில்வர் பேட்டை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக வந்த பைக்கில் வந்த 3 வாலிபர்களை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்த போது முன்னுக்கு பின் முரணாக பேசினர்.

    அவர்களை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரித்தபோது அவர்கள் அரக்கோணத்தை அடுத்த மோசூர் பகுதியை சேர்ந்த சத்தியா என்கிற சக்தி (வயது 23), தக்கோ லத்தை அடுத்த உரியூரை சேர்ந்த நரேஷ் (25), பிரகாஷ் (20) என்பது தெரிய வந்தது.

    இதில் சக்தி மீதுபல்வேறு வழக்குகள் இருப்பதும், 3 பேரும் நகை பறிப்பு, மோட்டார்சைக்கிள் திருட்டில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    அவர்களிடமிருந்து 2 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 2 1/2 பவுன் செயின் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • விரட்டி சென்று மடக்கி பிடித்தனர்
    • போலீசார் விசாரணை

    ஆற்காடு:

    திமிரி போலீசார் ஆற்காடு அடுத்த காவனூர் கூட்ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது ஆற்காடு நோக்கி வேகமாக வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்த முற்யறனர்.

    அதில் வந்த நபர்கள் நிற்காமல் சென்று விட்ட னர். பின்னர் போலீசார் அவர்களை விரட்டி சென்றனர். இதனால் கென்னடிபாளையம் செல்லும் வழியில் மோட் டார் சைக்கிளை அங்கேயே விட்டுவிட்டு மர்மகும்பல் தப்பிச் சென்று விட்டனர்.

    அதைத்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் இருந்த மூட்டையை சோதனை செய்தனர்.

    அப்போது சுமார் 5 கிலோ எடை கொண்ட சந்தன கட்டைகள் இருப்பது தெரியவந்தது. மோட்டார் சைக்கிள் மற்றும் சந்தன கட்டை களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மாவட்டம் முழுவதும் 3,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
    • ரெயில்கள் மற்றும் தண்டவாளத்தில் சோதனை மேற்கொண்டனர்.

    கோவை

    பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி தமிழகம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.

    கோவையில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மநகரில் 2,500 போலீசார், புறநகர் மாவட்டத்தில் 1000 போலீசார் என மாவட்டம் முழுவதும் 3,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.மாநகரில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான பெரியக்கடை வீதி, ஒப்பணக்கார வீதி, ராஜவீதி, டவுன்ஹால், காந்திபுரம் கிராஸ்கட் ரோடு, 100 அடி ரோடு, சாய்பாபா காலனி ஆகிய பகுதிகளில் போலீசார் ரோந்து சென்று தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

    மேலும் போலீசார் காந்திபுரத்தில் உள்ள நகர மற்றும் வெளியூர் பஸ் நிலையங்கள், சிங்காநல்லூர் பஸ் நிலையம், மேட்டுப்பாளையம் ஊட்டி பஸ் நிலையம் ஆகிய இடங்களிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இதேபோல மாநகரில் உள்ள தண்டுமாரியம்மன் கோவில், கோனியம்மன் கோவில், கோட்டை சங்கமேஸ்வரர் கோவில் உள்ளிட்ட கோவில்களிலும், தேவாலயங்கள், மசூதிகளில் போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டு உள்ளனர்.

    கோவை ரெயில் நிலையத்தில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. ரெயில் நிலையத்துக்கு வரும் பயணிகள் மற்றும் அவர்களது உடமைகளை போலீசார் தீவிர சோதனை செய்த பின்னரே ரெயில் நிலையத்துக்கு செல்ல அனுமதிக்கின்றனர். மேலும் போலீசார் வெடிகுண்டு நிபுணர்கள் உதவியுடன் ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களை தீவிரமாக சோதனை செய்தனர். ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் பிளாட்பாரத்தில் ரோந்து சென்று கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மோப்பநாய் மற்றும் மெட்டல் டிடக்டர் உதவியுடன் ரெயில்கள் மற்றும் தண்டவாளத்தில் சோதனை மேற்கொண்டனர்.

    இதேபோல கோவை ரெயில் நிலையத்திலும் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் துப்பாக்கி ஏந்தியபடி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறனர். மேலும் விமான நிலையத்துக்கு வரும் பயணிகளை பாதுகாப்பு படையினர் தீவிர சோதனை செய்த பின்னரே விமான நிலையத்துக்குள் செல்ல அனுமதிக்கின்றனர்.

    கோவை நகரில் இரவு முழுவதும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். புறநகர் மாவட்ட பகுதியில் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.  

    • இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன் உள்ளிட்ட போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
    • கார்களில் ஒட்டப்பட்டிருந்த ஸ்டிக்கர்கள் போலியானது என்பது தெரியவந்தது.

    மாமல்லபுரம்:

    ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு நேற்று இரவு மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் போலீசார் தடுப்புகளை அமைத்து சென்னையில் இருந்து புதுச்சேரி நோக்கி சென்ற வாகனங்களை நிறுத்தி சோதனையிட்டனர். டி.எஸ்.பி. ஜெகதீஸ்வரன் தலைமையில், இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன் உள்ளிட்ட போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது பிரபல ஊடகம், பத்திரிகை என ஸ்டிக்கர் ஒட்டி வந்த 4 கார்களை நிறுத்தி விசாரித்தனர். விசாரணையில், அது போலியானது என்பதும், அவர்கள் அங்கு பணி புரியவில்லை என்பதும் தெரியவந்தது. இதையடுத்து 4 கார்களுக்கும் 21 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். கார்களில் ஒட்டப்பட்டிருந்த ஸ்டிக்கர்களையும் அகற்றினர். பின்னர் அவர்களின் உறவினர்களிடம் தொலைபேசியில் பேசி, அறிவுரை கூறி எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

    • வடக்கு வாசல் பகுதியில் கிழக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர், போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
    • மாட்டு வண்டியில் உரிய அனுமதியின்றி மணல் ஏற்றி வந்தது தெரிய வந்தது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை வடக்கு வாசல் பகுதியில் கிழக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்கமல் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக வந்த மாட்டு வண்டியை வழி மறித்து நிறுத்தி சோதனை செய்தனர்.

    அதில் மணல் ஏற்றி வந்தது தெரிய வந்தது.

    இதுகுறித்து போலீசார் மாட்டுவண்டியை ஓட்டி வந்தவரிடம் நடத்தி விசாரணையில், அவர் தஞ்சை வடக்கு அலங்கத்தை சேர்ந்த பாலசுப்பிரமணியன் (வயது 35) என்பதும், ஆற்றில் மணல் கடத்தி வந்ததும் தெரிய வந்தது.

    இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து பாலசுப்ரமணியனை கைது செய்து மாட்டு வண்டியை பறிமுதல் செய்தனர்.

    • 3 மாவட்டங்களில் சப்ளை செய்த நெல்லை வியாபாரி
    • கைதான 2 பேர் திடுக்கிடும் தகவல்கள்

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டத்தை போதை இல்லாத மாவட்ட மாக மாற்ற மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

    மாவட்டத்தில் புகையிலை பொருட்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்திய அவர், வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வருவதை தடுக்கும் வகையில் ரெயில்களில் அதிரடி சோதனை நடத்தி னார். இதில் ரெயில் மூலம் கடத்தி வரப்பட்ட குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.

    தொடர்ந்து கொரியர் மூலம் போதைப் பொருட்கள் வருவதை அறிந்து அவற்றை யும் கைப்பற்றினார். மேலும் போலீசாரின் நடவ டிக்கையை தீவிரப்படுத்தி யும் அவர் உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் போலீசார் வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் குமரி மாவட்ட புகையிலைப் பொருள் கடத்தல் பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெ க்டர் மகேஷ் ராஜ் மற்றும் போலீசார் ஆரல்வாய் மொழியை அடுத்த முப்பந்தல் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது அங்கு வைக்கோல் பாரம் ஏற்றிய மினி லாரி வந்தது.

    அதனை சந்தேகத்தின் பேரில் போலீசார் தடுத்து நிறுத்தி விசாரித்தனர்.அப்போது லாரியின் டிரைவர் மற்றும் அதில் வந்தவர் முன்னுக்கு பின் முரணாக பேசினர்.இதனால் வைக்கோல் பாரத்தை போலீசார் சோதனை செய்தனர்.

    இதில் வைக்கோல்களுக்கு அடியில் 64 மூடைகள் இருப்பது தெரியவந்தது. அதனை வெளியே எடுத்து பார்த்த போது, தடை செய்யப்பட்ட புகையிலை இருந்தது. பழனியில் இருந்து அதனை கொண்டு வருவது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.அவற்றை தனிப் படையினர் பறிமுதல் செய்து ஆரல்வாய்மொழி போலீஸ் நிலையத்தில் ஒப்ப டைத்தனர்.

    இதனை தொடர்ந்து மினி லாரி டிரைவரான பழனி ரெட்டியார்பட்டி ஆவணி மூல வீதியைச் சேர்ந்த சித்திக் மகன் பீர்முகமது (வயது39) மற்றும் பழனி இறைநாயகன்பட்டி ராஜமாணிக்கம் மகன் மதன கோபால் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

    இவர்கள் வாரத்துக்கு ஒரு முறை வாகனங்களில் பழனியில் இருந்து மூடை முடையாக புகையிலை கொண்டு வருவதும், நெல்லை, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் அவற்றை கடைகளுக்கு விநியோ கிப்பதும் கண்டு பிடிக்கப்பட்டது.

    நெல்லை மாவட்டம் திசையன்விளையை சேர்ந்த வர் பழனியில் மளிகை கடை வைத்துள்ளதாகவும் அவர் தான், கர்நாடக மாநிலம் பெங்களூரு மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து குட்காவை நேரடியாக கொள்முதல் செய்து, நெல்லை தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் விற்பனை செய்து வருவதாக கைதான 2 பேரும் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி குட்கா வியாபாரியை பிடிக்க தீவிர நடவடிக்கை எடுத்து உள்ள னர்.

    தற்போது பிடிபட்ட 64 மூடைகளில் சுமார் 400 கிலோ புகையிலை பொருட்கள் இருந்தது என்றும் அதன் மதிப்பு சுமார் ரூ. 6 லட்சம் என்றும் கூறப்படுகிறது.

    ×