search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுதீஷ்"

    சங்கராபுரத்தில் கள்ளக்குறிச்சி பாராளுமன்ற தொகுதி தே.மு.தி.க. வேட்பாளர் சுதீசை ஆதரித்து துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பிரசாரம் செய்தபோது தி.மு.க. கூட்டணி பழைய சோறு என்று கூறினார். #LokSabhaElections2019
    கள்ளக்குறிச்சி:

    தமிழகத்தில் அடுத்த மாதம் (ஏப்ரல்) 18-ந்தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது. தமிழகத்தின் துணை முதல்-அமைச்சரும், அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் அ.தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து வருகிறார்.

    விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் பஸ்நிலையத்தில் இன்று காலை 10.20 மணிக்கு கள்ளக்குறிச்சி பாராளுமன்ற தொகுதி தே.மு.தி.க. வேட்பாளர் சுதீசை ஆதரித்து ஓ.பன்னீர்செல்வம் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:

    மத்தியில் காங்கிரஸ் - தி.மு.க. கூட்டணி ஆட்சி இருந்தபோது மக்களுக்கு பயன்பெறும் வகையில் எந்த திட்டமும் கொண்டு வரவில்லை.

    காவிரி நடுவர் மன்றம் தொடர்பாக தமிழகத்தில் எந்த முதல்வரும் சாதிக்க இயலாத காரியத்தை சாதித்து காட்டியவர் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆவார். சட்டரீதியாக போராடி காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை தமிழகத்துக்காக வாங்கி தந்த ஒரே முதல்வர் ஜெயலலிதா தான்.

    காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு வந்த நாள் தான் தனது வாழ்க்கையில் மகிழ்ச்சியான நாள் என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.



    தி.மு.க. தலைவர் ஸ்டாலினை போன்று நடந்து சென்றும், சைக்கிள் ஓட்டியும், டீ கடையில் டீ குடிப்பது போன்றும், மாய தோற்றத்தை நான் உருவாக்க மாட்டேன். நானே டீ கடை நடத்தியவன். டீ கடையில் டீ சாப்பிடுவது யார்? டீ சாப்பிடுவது போல் நடிப்பது யார்? என்பது எனக்கு தெரியும்.

    தமிழகத்தில் உள்ள விவசாயிகள் யாரும் பேண்ட் போட்டுக்கொண்டு ஏர் உழுவது இல்லை. ஆனால் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கலர் கலராக பேண்ட், சட்டைகளை போட்டுக்கொண்டு போட்டோவுக்கு போஸ் கொடுக்கிறார்.

    இலங்கையில் போர் நடக்கும்போது கருணாநிதி உண்ணாவிரத போராட்டம் நடத்துவதுபோல் பாவனை செய்துவிட்டு அங்கிருந்து கிளம்பினார். அப்போது கருணாநிதியிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்டபோது,

    இலங்கை தமிழர்களுக்காக நான் மத்திய அரசிடம் பேசி சுமூகமாக போரை நிறுத்தி விட்டேன் என்று கூறிவிட்டு சென்றார்.

    ஆனால் அதேசமயத்தில் இலங்கையில் பதுங்கும் குழியில் இருந்தவர்கள் கருணாநிதியின் பேச்சை நம்பி வெளியே வந்தனர். அப்போது இலங்கை அரசு வெடிகுண்டுகளை வீசி தமிழர்களை அழித்து விட்டனர். அந்த சூழ்நிலையில் இலங்கை அதிபர் ராஜபக்சேவை போரை நிறுத்த வலியுறுத்தி பேச்சுவார்த்தை நடத்த சென்ற கனிமொழி இலங்கை தமிழர்களுக்காக பேச்சுவார்த்தை நடத்தாமல் பரிசு மட்டும் வாங்கி வந்து விட்டார்.

    தி.மு.க.வினர் பிரியாணி கடை மற்றும் பரோட்டா கடைகளுக்கு சென்று சாப்பிட்டு விட்டு வந்துள்ளனர். அவர்கள் சாப்பிட்டதற்கு கடைக்காரர்கள் காசு கேட்டனர். காசு கொடுக்காமல் கடைக்காரர்களை தி.மு.க.வினர் தாக்கி உள்ளனர்.

    காலை முதல் மாலை வரை அடுப்பில் கஷ்டப்பட்டு சம்பாதிக்கிறவர்களை தி.மு.க.வினர் வயிற்றில் அடிக்கிறார்கள். ஓசியில் சாப்பிட்டால் செரிக்காது.

    தி.மு.க.வினர் ஏற்கனவே அவர்களுடன் இருந்தவர்களுடனே கூட்டணி அமைத்து உள்ளனர். தி.மு.க. கூட்டணி பழைய சோறு ஆகும்.

    அம்மா இல்லாமல் நடைபெறும் முதல் தேர்தல் இதுவாகும். பகிர்ந்து உண்டால் பசி தீரும் என்ற தமிழர்களின் பண்பாட்டின்படி பாதி சீட்டை கூட்டணி கட்சிகளுக்கு பகிர்ந்து கொடுத்துள்ளோம். மீதி தொகுதியில் நாங்கள் போட்டியிடுகிறோம்.

    தர்மத்தின் ஆட்சி நீடிக்கவும், வலிமையான பாரதம் அமையவும், வலிமையான பிரதமர் கிடைக்கவும் அ.தி.மு.க. கூட்டணிக்கு நீங்கள் வாக்களிக்க வேண்டும். நமது பாரத பிரதமர் மோடி மீண்டும் பிரதமராக வருவார்.

    இவ்வாறு அவர் பேசினார். #LokSabhaElections2019
    கடந்த டிசம்பர் மாதம் 18-ந்தேதி மேல் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்ற விஜயகாந்த் வரும் 16-ந்தேதி காலை சென்னை திரும்புவதாக தேமுதிக அறிவித்துள்ளது. #DMDK #Vijayakanth
    சென்னை:

    தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் சிகிச்சைக்காக கடந்த டிசம்பர் மாதம் 18-ந்தேதி அமெரிக்கா சென்றார்.

    அவருக்கு அங்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்படுகிறது. விஜயகாந்த் மனைவி பிரேமலதா உடன் இருந்து கவனித்து வருகிறார்.

    விஜயகாந்தும், பிரேமலதாவும் அமெரிக்காவில் இருப்பதால் கட்சி பணிகளை விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன், கட்சியின் துணை செயலாளர் சுதீஷ் ஆகியோர் கவனித்து வருகிறார்கள். இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தல் வர இருக்கிறது.



    கூட்டணிக்கான பேச்சு வார்த்தையில் சுதீஷ் ஈடுபட்டுள்ளார். பா.ஜனதாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

    தே.மு.தி.க. எத்தனை தொகுதிகளில் போட்டியிடும்? எந்த தொகுதிகளில் நிற்கும் என்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

    கட்சி தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் விஜயகாந்த் ஆலோசனைப்படி நடப்பதாக சுதீஷ் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் விஜயகாந்த் வருகிற 16-ந்தேதி சென்னை திரும்புகிறார்.

    இதுகுறித்து தே.மு.தி.க. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தே.மு.தி.க. நிறுவனத் தலைவர், பொதுச் செயலாளர் விஜயகாந்த் கடந்த டிசம்பர் மாதம் 18-ந்தேதி மேல்சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார். சிகிச்சை முடிந்து பூரண நலமுடன் வரும் 16-ந்தேதி (சனிக்கிழமை) காலை 8.30 மணிக்கு தாயகம் திரும்புகிறார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #DMDK #Vijayakanth
    பாராளுமன்ற தேர்தலில் டி.டி.வி. தினகரனுடன், தே.மு.தி.க. கூட்டணி வைக்குமா? என கேட்டதற்கு மாநில துணை பொதுச்செயலாளர் சுதீஷ் பதில் அளித்தார். #DMDK #Sudhish
    திருச்சி:

    திருச்சி காந்திமார்க்கெட் பகுதியில் கடந்த 2017-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 17-ந்தேதி டெங்கு காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தே.மு.தி.க. சார்பில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. இதில் கட்சியின் மாநில துணை பொதுச்செயலாளர் எல்.கே. சுதீஷ் பங்கேற்றார்.

    இந்த நிகழ்ச்சியின் மூலம் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதாக சுதீஷ், மாநகர் மாவட்ட செயலாளர் டி.வி கணேஷ், நிர்வாகிகள் அலங்கராஜ், மில்டன் குமார் உள்பட 7 பேர் மீது திருச்சி காந்திமார்க்கெட் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    இது தொடர்பான வழக்கு, திருச்சி ஜுடிசியல் மாஜிஸ்திரேட் எண்-5 கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் நேற்று நடைபெற்ற விசாரணையின்போது சுதீஷ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் 7 பேரும் கோர்ட்டில் ஆஜர் ஆனார்கள்.

    சாட்சிகள் விசாரணை முடிந்ததும் இந்த வழக்கின் அடுத்த விசாரணையை வருகிற 14-ந்தேதிக்கு ஒத்தி வைத்து மாஜிஸ்திரேட் நாகப்பன் உத்தரவிட்டார்.

    கோர்ட்டில் இருந்து வெளியே வந்த சுதீஷ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ‘தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் நலமுடன் உள்ளார். விரைவில் தே.மு.தி.க.வின் மாநில மாநாடு பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட உள்ளது. இந்த மாநாட்டில் விஜயகாந்த் கலந்து கொண்டு பேசுவார்’ என்றார்.

    இதனை தொடர்ந்து நிருபர்கள் பாராளுமன்ற தேர்தலில் தே.மு.தி.க. டி.டி.வி. தினகரன் கட்சியான அ.ம.மு.க.வுடன் கூட்டணி வைப்பதற்கான பேச்சுவார்த்தை நடப்பதாக கூறப்படுகிறதே என கேட்டதற்கு அதற்கு, “இன்னும் காலம் இருக்கிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் யாருடன் கூட்டணி என்பதை விஜயகாந்த் முடிவு செய்து அறிவிப்பார்” என பதில் அளித்தார்.  #DMDK #Sudhish

    ×