search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மனஅழுத்தம்"

    இன்று பெரும்பாலானவர்களுக்கு இருக்கும் பிரச்சினைகளில் ஒன்று ஸ்ட்ரெஸ் என்று சொல்லப்படும் மன அழுத்தம். இது உளவியல் ரீதியாக மட்டுமின்றி உடலியல் ரீதியாகவும் மனிதர்களை பாதிக்க செய்கிறது.
    இன்று பெரும்பாலானவர்களுக்கு இருக்கும் பிரச்சினைகளில் ஒன்று ஸ்ட்ரெஸ் என்று சொல்லப்படும் மன அழுத்தம். இது உளவியல் ரீதியாக மட்டுமின்றி உடலியல் ரீதியாகவும் மனிதர்களை பாதிக்க செய்கிறது. மகிழ்ச்சியை தொலைத்து விட்டு நிம்மதியின்றி தவிப்பவர்கள் அதற்கு காரணமாக சொல்வது இந்த மனஅழுத்ததைத்தான்.!

    மன அழுத்தம் மக்களை எந்த வகையில் பாதிக்கிறது?

    நம் முன்னோர்கள் இருப்பதைக் கொண்டு நிம்மதியாக வாழ்ந்தார்கள். போதுமென்ற மனம் அவர்களிடம் இருந்தது. எதிலும் பேராசையோ பரபரப்போ இருந்ததில்லை. இதனால் மன அழுத்தமும் இல்லை. இன்றைய காலத்து மக்கள் எந்திரத்தனமான அவசர உலகில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். எனவே குடும்பம், வேலை, தொழில், பணம், படிப்பு என எதுவானாலும் இவற்றின் அன்றாட செயல்களில் கொஞ்சம் மாறினாலோ அல்லது அதிகரித்தாலோ உடனே ஏதோ பெரிய பிரச்சினை வந்து விட்டதாக நினைத்து மூச்சு திணறி போகிறார்கள். அது தொடர்பாக யாராவது கேள்வியோ விளக்கமோ கேட்டு விட்டால்போதும் நெஞ்சு படபடத்து “எனக்கு மட்டும் ஏன் இத்தனை கஷ்டம்” என்று புலம்புகிறார்கள்.

    இந்த மனஅழுத்தம்தான் அவர்களை துயரத்துக்குள் அமிழ்த்தி விடுகிறது. வாழ்க்கையே இருண்டு விட்டது,எதிர்காலம் என்ன ஆகுமோ என்று அச்சப்படுகிறார்கள். இதனால் கையில் இருக்கும் வாழ்வை அனுபவிக்காமல் நழுவ விட்டு விடுகிறார்கள்.

    வாழ்க்கை இனிதாக அமைய மன அழுத்தத்தை எவ்வாறு மடைமாற்றம் செய்ய வேண்டும்?

    மன அழுத்தம் குறித்து அமெரிக்காவில் பல ஆண்டுகாலமாக பல்லாயிரம் பேர்களிடம் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. இதில் “மன அழுத்தம் என்பது நண்பனுக்கு நண்பன், விரோதிக்கு விரோதி. அதனை சாதகமாகவும் பயன்படுத்தி கொள்ளலாம். பாதகமாகவும் ஆக்கிக் கொள்ளலாம்” என்று கண்டறியப்பட்டது. அதாவது ஒரு வேலையை விரும்பி செய்யும் போது பாஸிட்டிவ் ஆன மன அழுத்தம் ஏற்படுகிறது. இதனால் பாதிப்பில்லை. மாறாக அப்போதைய சூழ்நிலைக்கு ஏற்ப செயல்படும் திறனை அதிகரிக்க செய்கிறது. அந்த வேலையை செய்து முடிப்பதற்கான ஆற்றலை, புத்துணர்ச்சியை கொடுக்கிறது. இதனால் ஸ்ட்ரெஸ்ஸாக எண்ணக்கூடிய அந்த வேலையை மகிழ்ச்சி தரக்கூடியதாக மாற்றி விடுகிறது.

    அதையே சுமையாக நினைத்து செய்யும் போது நெகட்டிவ் ஸ்ட்ரெஸ் ஏற்பட்டு நமது செயல் திறனை முடக்கி விடுகிறது. இதனால் உடலும் மனமும் பாதிக்கப்பட்டு சோர்ந்து விடுகிறது. மன அழுத்தத்தின் விளைவு குறித்து நடத்தப்பட்ட ஆய்வில் பிரச்சினைகளோ, சூழ்நிலைகளோ உங்களுக்கு எந்த கெடுதலையும் தராது. எந்த நேரத்திலும் உங்கள் மனநிலையை நேர்மறையாக வைத்திருந்தால் போதும், அதுவே எந்த பிரச்சினைகளையும் சமாளித்து அந்த சூழலை மகிழ்ச்சியானதாக மாற்றி விடும்.

    பொதுவாக மன அழுத்தத்தில் இருக்கும் பலரும் அந்த சமயத்தில் தங்களுக்கு யாராவது ஆறுதல் சொல்ல மாட்டார்களா? என்று எதிர்பார்ப்பார்கள். அல்லது அப்படி பட்டவர்களை தேடிச் செல்வார்கள். அங்கு ஆறுதல் கிடைத்தால் சரி, இல்லை என்றால் மன அழுத்தம் மேலும் அதிகரித்து மோசமான விளைவை ஏற்படுத்திவிடும்.

    இதற்கு காரணம் என்னவென்றால் நம் உடலில் உள்ள பிட்யூட்டரி சுரப்பியில் இருந்து சுரக்கும் ஆக்ஸிடோசின் ஹார்மோன்தான். இந்த ஹார்மோன் தான் யாராவது நம்மை கவனிக்க மாட்டார்களா? என்ற ஏக்கத்தை நம் மனதில் உண்டாக்குகிறது. மன அழுத்தம் இருக்கும் சமயத்தில் நீங்கள் ஆறுதலைத்தேடி செல்ல வேண்டியதில்லை. அதற்கு பதிலாக வேறு யாரிடமாவது நீங்கள் பரிவு காட்டினாலே போதும், உங்கள் மனம் அமைதி அடைந்து விடும். ஏன் என்றால் இந்த ஆக்ஸிடோசின் ஹார்மோனுக்கு தேவை ‘கவனித்தல்’ மட்டுமே. அதை நீங்கள் பெறுவதாகவும் இருக்கலாம். கொடுப்பதாகவும் இருக்கலாம்.

    இதற்கு பர்மாவில் நடந்த சம்பவத்தில் இருந்து ஒரு உதாரணத்தை காட்ட முடியும். பர்மாவில் உள் நாட்டு கலவரம் நடந்த போது ஏராளமான மக்கள் தங்கள் வீடு, வாசல், உறவுகள், உடமைகளை இழந்து தவித்தனர். பாதிக்கப்பட்ட இந்த மக்கள் உயிர் பிழைத்தால் போதும் என்ற அச்சத்துடன் நாட்டை விட்டு வெளியேறிக் கொண்டிருந்தார்கள்.

    அடர்ந்த காடு, மலை, மேடு, பள்ளங்கள் வழியாக நடுக்கத்தோடு கடந்து கொண்டிருந்த அந்த கூட்டத்தில் இருந்த முதியவர் ஒருவர் மற்றவர்களுக்கு ஈடுகொடுத்து நடக்க முடியாமல் தள்ளாடினார். தன் மகனை பார்த்து “என்னால் இதற்கு மேல் நடக்க முடியாது, எனவே என்னை பற்றி கவலைப்படாமல் நீங்கள் தொடர்ந்து செல்லுங்கள்” என்றார்.

    மகன் பலவாறு வற்புறுத்தியும் அந்த இடத்தை விட்டு நகர மறுத்தார். தந்தையால் நடக்க முடியவில்லைதான், ஆனால் ஆபத்தான சூழலில் அவரை எப்படி விட்டு செல்வது என்று யோசித்த மகன் ஒரு உபாயம் செய்தான். தன் சிறு வயது மகனை அவரிடம் கொடுத்தான். அப்பா இவனாலும் நடக்க முடியவில்லை. அவனை தூக்கிக்கொண்டு போவது எனக்கு சிரமமாக இருக்கிறது. அதனால் அவனையும் உங்களுடன் இங்கே வைத்துக் கொள்ளுங்கள். இனி இவன் உங்கள் பொறுப்பு என்று சொல்லி விட்டு வேகமாக நடக்க தொடங்கினான்.

    அவ்வளவுதான் தன் உயிரை பற்றி கவலைப்படாத அந்த பெரியவர் தன் பேரப்பிள்ளையை மகன் விட்டுச் செல்ல போகிறான் என்றவுடன் பதைபதைத்து போனார். “இவனை அழைத்துக் கொண்டு செல்ல உனக்கு சிரமமாக இருந்தால் நீ போ... நான் கூட்டிக்கொண்டு வருகிறேன்” என்று சொன்னபடி குழந்தையை வாரி அணைத்துக்கொண்டார். பேரனை காப்பாற்ற வேண்டுமென்ற உந்துதல் அவர் மனதில் ஏற்பட்டது. அந்த அழுத்தம் காரணமாக மற்றவர்களைவிட வேகமாக நடந்தார். பத்திரமாக நாடு கடந்தார்.

    இந்த உண்மை சம்பவம் நமக்கு சொல்லும் பாடம் ஒன்றுதான். விருப்பமும் பொறுப்பும் இருந்தால் அழுத்தத்தால் நன்மையே விளையும். அதுவே நம் மனதில் உடலில் திடத்தையும் வேகத்தையும் அளிக்கும். நம்முன் தோன்றும் எந்த சவாலையும் எதிர்கொண்டு வெற்றி பெறும் ஆற்றலை கொடுக்கும்.

    பிரச்சினைகளை எப்படி சமாளிப்பது?

    உங்கள் மனப்பிரச்சினை களுக்கு இறக்கை கொடுங்கள். அவை உங்களை விட்டு எங்காவது பறந்துச் செல்லட்டும் என்கிறார் அறிஞர் டெர்ரி கில்மெட்.
    பிரச்சினைகளை கையாளத் தெரிந்தவர்களுக்கு எதுவுமே பிரச்சினை இல்லை. வாழ்க்கை உங்களை அழுத்தி நீங்கள் கொஞ்சம் தர்மச் சங்கடமாக உணரும் சமயத்தில் ஒரு விசயத்தை நினைவுப்படுத்திக் கொள்ளுங்கள். வெற்றியின் ஒரு பகுதியே அந்த அழுத்தம். அழுத்தம் இல்லை என்றால் வைரம் இல்லை என்கிறார் அறிஞர் எரிக் தாமஸ்.

    அழுத்தம்தான் குப்பைகளை உரமாக மாற்றுகிறது. அழுத்தம்தான் கரியை வைரமாக மாற்றுகிறது. அதுபோல் உங்களுக்குள் ஏற்படும் மன அழுத்தத்தையும் திடமும் ஆற்றலும் கொடுக்கும் வகையில் மாற்றிக் கொள்ளலாம். ஆகவே உங்களுக்கு அழுத்தம் ஏற்படும் போதெல்லாம் விழிப்புணர்வோடு செயல்பட்டால் நன்மை பயக்கும் வகையில் அதனை சாதகமாக மாற்றிக்கொள்ளலாம். அப்படி செய்தால் அழுத்தமே ஆனந்தமாக மாறும். அதில் மகிழ்ச்சி என்னும் பூ மலரும்.
    Email:fajila@hotmil.com
    குழந்தைகள் தங்களுக்கு ஏற்பட்டும் மனஅழுத்தத்தை ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு விதமாக வெளிப்படுத்துவார்கள். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
    குழந்தைகளின் மன அழுத்தத்தை அதிகமாக்கும் காரணங்கள் பலப்பல. தங்களுக்கு ஏற்பட்ட மனஅழுத்தத்தை ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு விதமாக வெளிப்படுத்துவார்கள். சில குழந்தைகள் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு யாருடனும் பேசாமல் உம்மென்று இருப்பார்கள்.

    சில குழந்தைகள் தங்கள் மன அழுத்தத்தைக் கோபமாகவும், ஆத்திரமாகவும் வெளிக்காட்டுவார்கள். சில குழந்தைகள் எப்போதும் கவலையோடு காணப்படுவார்கள். இதற்கெல்லாம் காரணங்கள் இருக்கலாம் என்று குழந்தை மனநல மருத்துவர்கள் கூறுகின்றனர். அவையாவன;

    1. குடும்பத்தில் தொடர்ந்து நடைபெறும் குழப்பங்கள், வாக்குவாதங்கள்.

    2. பெற்றோர்கள் மற்றும் உறவினர்களுடன் குழந்தைக்கு உறவில் ஏற்படும் விரிசல்.

    3. நட்பில் உண்டாகும் மனவருத்தம்

    4. குடும்பங்கள் பிரிந்து விடுதல்

    5. மிக நெருக்கமானவர்களின் பிரிவு அல்லது செல்லப்பிராணிகளின் இறப்பு

    6. பெரிதாக ஏற்படும் இழப்புக்கள் , அல்லது அதிர்ச்சி ஏற்படுத்திய நிகழ்ச்சிகள்

    7. அடிக்கடி ஏற்படும் உடல்நோய்கள், தொற்றுநோய்கள்

    8. குழந்தைகளை மற்றவர்கள் தவறாகப் பயன்படுத்துதல்

    9. மற்ற குழந்தைகளின் முரட்டுத்தனம், பிடிவாதம்

    10. பள்ளியில் அல்லது வெளிவட்டாரத்தில் தொடர்ந்து ஏற்படும் தோல்விகள்

    11. பெற்றோரைப் பாதிக்கும் மனஉணர்வுகள் சில நேரங்களில் குழந்தையையும் பாதிக்கும்.

    12. உட்கொண்ட மருந்துகளினால் ஏற்படும் பக்க விளைவுகள்.

    - இது போன்ற காரணங்களினால் குழந்தைகள் மனஅழுத்த நோய்க்கு ஆளாகி அவதிப்படுவார்கள். சில குழந்தைகளுக்கு இது பரம்பரையாகவும் வரலாம். அத்தகைய குழந்தைகள் மேலே காட்டப்பட்ட காரணங்களுள் ஏதேனும் ஒன்று ஏற்பட்டால் கூட அதை ஏற்றுக் கொள்ளவோ அல்லது சமாளிக்கவோ முடியாமல் அதிகம் திணறிப் போய்விடுவார்கள். வெகுவிரைவில் மனஅழுத்த நோய்க்கும் ஆளாகி விடுவார்கள்.

    மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் பெற்றோருடன் பேசுவதற்கு விரும்ப மாட்டார்கள். இருந்த போதிலும், அவர்களுடன் நேரடியாகவோ அல்லது அவர்கள் மிகவும் விரும்புகின்ற நண்பர்கள் அல்லது உறவினர்கள் மூலமாகவோ பேசுவது நன்மைகளை ஏற்படுத்தும். இவ்வாறு பேசுவதன் மூலமாக அவர்களுக்கு மனஅழுத்தத்தை உண்டாக்கியது எது என்பதை அறிவதற்கு வாய்ப்பு ஏற்படும்.

    உடல் நலத்தினை வெகுவாய் பாதிக்கும் கவலை, மனஉளைச்சல் போன்றவற்றிலிருந்து எப்படி வெளியில் வருவது என்பதை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    அடிக்கடி மருத்துவத்தில் கூறப்படுவது கவலை, மனஉளைச்சல் போன்றவை உடல் நலத்தினை வெகுவாய் பாதிக்கும் என்பதுதான். அநேகர் கூறும் சில வார்த்தைகள் என்ன தெரியுமா? குறைந்தது 10 வருடம் முன்னாடி இதெல்லாம் நான் செய்திருந்தால் எனக்கு இன்று மனநலம், உடல் நலம் இரண்டும் நன்றாக இருந்திருக்கும் என்பதாகும். நாமும் அவ்வாறு சொல்லாதிருக்க கீழ்கண்ட வழி முறைகளை இன்றிலிருந்தே கடைபிடிப்போம்.

    * வாழ்வின் இளமை காலத்தில் ‘என்னால் இவ்வளவு உழைக்க முடியாது. போராட முடியாது’ என்று சொல்லி மெத்தனமாக இருந்து விட்டால் அதுவே பிற்காலத்தில் மிகுந்த மனஉளைச்சலை ஒருவருக்குத் தந்துவிடும். எனவே தன்னால் முடிந்தவரை ‘சவாலை ஏற்று செயலாற்றுவது’ நிறைந்த மனநிறைவினை ஒருவருக்கு அளிக்கும்.

    * சிலருக்கு மற்றவர்களைப் பற்றிய குறை, குற்றங்களை கூறிக் கொண்டே இருக்க வேண்டும். இது அவர்களின் குணம். ஆனால் இந்த குணம் பிற்காலத்தில் அவர்களை மனஉளைச்சல் உடையவராக மாற்றி விடும். எனவே இந்த தரக்குறைவான குணத்தினை இன்றே மாற்றிக் கொள்ள வேண்டும்.

    * தனக்கு மட்டுமே வேலை அதிகம் என்று சொல்லிக் கொண்டு சிலர் வீட்டில் உள்ளவர்களுடன் நேரம் செலவழிக்க மாட்டார்கள். மனைவி, குழந்தைகள் எல்லாம் இவர் வீட்டில் இவருக்கு சம்பந்தம் இல்லாதவர்களாக இருப்பார்கள். வீட்டிற்கு வரும் விருந்தினர்களிடம் ஒரு வார்த்தை கூட சிரித்து பேச மாட்டார்கள். இத்தகையோர் விரைவிலேயே மனஉளைச்சலுக்கு ஆளாவதால் பல நோய் தாக்குதல்கள் இவர்களுக்கு ஏற்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. பூமி நம் தலைமீது சுற்றுவதில்லை. சூரியனும், சந்திரனும் நம்மை கேட்டு உதிப்பதில்லை. அப்படியிருக்க ஏன் நாமே தான் எல்லாம் செய்கின்றோம் என்ற நினைப்பு இருக்க வேண்டும். குடும்பம், ஓய்வு இவற்றுக்கு கண்டிப்பாய் சிறிது நேரம் ஒதுக்குங்கள். இது நம் ஆரோக்கியத்தினைக் கூட்டும்.

    * உடற்பயிற்சிக்கு நேரமே இல்லை என்று கூறுபவர்களை அவர்களது உடலே நோயை கொடுத்து தண்டித்து விடுகின்றது. 30 நிமிட துரித நடைபயிற்சி அநேக நன்மைகளை அள்ளித் தரும்.

    * நன்றி சொல்ல பழகுங்கள். காலை வெயிலுக்கு, மலரும் பூவுக்கு, மற்றவர்களின் சிறிய உதவிக்கும் நன்றி சொல்ல பழகுங்கள்.

    * எதிலும் ‘பயம்’ என முடங்காதீர்கள். தவறுகளுக்கு மட்டுமே அஞ்ச வேண்டும். முயற்சிகளுக்கு அஞ்சுவது ஒருவரை வெகுவாய் பலவீனப்படுத்தி விடும்.

    * பிறருக்கு உதவாவிட்டாலும் பரவாயில்லை. பிறரை வேதனைப்படுத்தாது இருங்கள். காரணம் கோபப்படுபவர்களே அதிக அசிடிடி, உயர் ரத்த அழுத்தம் போன்ற நோய்களுக்கு ஆளாகின்றனர்.



    * மிகவும் சோர்ந்த பிறகு ஓய்வு எடுப்பது தவறு. குறிப்பிட்ட நேரம் வேலை செய்தபின் நாமே சிறிது நேரம் ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும்.

    * தன்னைப் பற்றி மட்டுமே நினைத்துக் கொண்டிருப்பவர்கள் எப்பொழுதும் படபடப்புடனேயே இருப்பார்கள். ஆகவே பிறரைப் பற்றியும் சிந்தியுங்கள். இதனால் உங்கள் சிந்தனை, பேச்சு இரண்டும் தெளிவாகும்.

    * சிறு நன்மைகள், நற்செயல்களை கண்டு மனதில் மகிழ்ச்சி அடையுங்கள். புன் முறுவல் செய்யுங்கள். சிரியுங்கள். இது இறைவன் தந்த உடல் நல, மனநல மருந்து.

    * உங்களை மிகவும் பலவீனமானவராகவும், பரிதாபத்திற்குரியவராகவும் நினைக்காதீர்கள். சுய பரிதாபம் வேண்டாம். இது ஒருவரை நிரந்தர நோயாளி ஆக்கி விடும்.

    மேற் கூறப்பட்டவைகள் பொதுவில் கூறப்படும் அறிவுரைகள் அல்ல. உடல் நலனுக்காக செய்யப்பட்ட சில ஆய்வுகளின் முடிவுகள் ஆகும். இனியாவது இவைகளை கடை பிடிப்போமாக. 
    லாஸ்பேட்டையில் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    புதுச்சேரி:

    லாஸ்பேட்டை குறிஞ்சிநகரை சேர்ந்தவர் ஆதிமூலம். இவர் செல்போன் சர்வீஸ் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி மலர்விழி. இவர்களது மூத்த மகன் அரவிந்த் (வயது22). இவர் லாஸ்பேட்டை மோதிலால்நேரு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். இவருக்கு மனஅழுத்தம் நோய் இருந்ததாக கூறப்படுகிறது. இதற்காக இவர் பிம்ஸ் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்த நிலையில் நேற்று வீட்டில் அரவிந்த் தங்கி இருந்த அறை கதவு வெகுநேரமாக திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த மலர்விழி அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து பார்த்தபோது அரவிந்த் மின்விசிறியில் துப்பட்டாவால் தூக்குபோட்டு தொங்குவதை கண்டு திடுக்கிட்டார். பின்னர் அரவிந்தை தூக்கில் இருந்து மீட்டு ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அரவிந்த் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்த புகாரின் பேரில் லாஸ்பேட்டை புறக்காவல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    மன அழுத்தமும் முதுகுவலியை ஏற்படுத்தும். மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாகும்போது முதுகு தசைகள் இறுக்கமடைய ஆரம்பித்துவிடும்.
    முதுகில் மேல்பகுதி, நடுப்பகுதி, கீழ்பகுதி என மூன்று வகையான கட்டமைப்புகளில் வலி ஏற்படுகிறது.

    புகை பிடிக்கும் பழக்கம் உடையவர்கள் முதுகுவலி பாதிப்புக்கு அதிகம் ஆளாவார்கள். தொடர்ந்து புகை பிடிப்பதன் மூலம் முதுகெலும்பில் சிதைவு ஏற்படக்கூடும். சிகரெட்டில் இருக்கும் நிகோடின் நச்சுத்தன்மையை ஏற்படுத்தி முதுகெலும்பை பலவீனப்படுத்தும். முதுமை பருவத்தை எட்டும்போது அதன் பாதிப்பு அதிகமாகும். கடும் முதுகுவலியால் அவதிப்பட நேரிடும்.

    மன அழுத்தமும் முதுகுவலியை ஏற்படுத்தும். மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாகும்போது முதுகு தசைகள் இறுக்கமடைய ஆரம்பித்துவிடும். முதலில் முதுகுவலி குறைவாக இருக்கும். நேரம் செல்ல செல்ல வலியின் தீவிரம் அதிகமாகும்.

    உடல் எடையை கட்டுக்கோப்பாக பராமரிக்க விரும்புபவர்களில் பெரும்பாலானோர் ஜிம்முக்கு சென்று அதற்கான பயிற்சிகளை மேற்கொள்கிறார்கள். அதற்காக இப்போது நிறைய பேர் வீடுகளிலேயே சைக்கிளிங் பயிற்சி மேற்கொள்ள தொடங்கிவிட்டார்கள். அந்த பயிற்சியை முறையாக மேற்கொள்ளாவிட்டால் முதுகு தசைகள் அழுத்தத்திற்கு உள்ளாகும். தசைகளின் செயல்பாடு அளவுக்கு அதிகமாகும்போது முதுகுவலி தோன்றும்.

    உடல் தசைகள் முழுவதும் சீராக அமைந்து உடல் எடையை சுமப்பதற்கு ஏற்பவே முதுகெலும்பு வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அதிக எடை அல்லது உடல்பருமனாக இருக்கும்போது அந்த கூடுதல் எடையை தாங்குவதற்கு முதுகெலும்பு கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். இறுதியில் எலும்பு தசைகள் சேதமடைந்து முதுகு வலியை ஏற்படுத்திவிடும்.

    இரு கால்களின் நீளத்தில் வேறுபாடு கொண்டவர்களும் முதுகுவலியால் பாதிக்கப்படுவார்கள். கால்களின் நீளத்தில் மில்லி மீட்டர் அளவில் வேறுபாடு இருந்தால்கூட பாதிப்பை ஏற்படுத்திவிடும். கால்களின் உயரத்தை சீராக்கும் விதத்தில் ஷூக்களை அணிவது நல்லது.

    தசை நார்களில் ஏற்படும் காயங்களுக்கும், முதுகுவலிக்கும் தொடர்பு இருக்கிறது. காயங்கள் வலியை ஏற்படுத்தும்போது முதுகெலும்பை சுற்றிலும் பாதிப்பு உருவாகும். அது வலியை அதிகப்படுத்திவிடும்.
    சமீப காலமாக குடும்ப உறவுகளின் விரிசலால் வாழ்க்கையில் விரக்தியும்,வெறுப்பும் ஏற்பட்டு கொலைகளும், தற்கொலைகளும் சர்வசாதாரணமாக நடைபெறுவதை காணமுடிகிறது.
    சமீப காலமாக குடும்ப உறவுகளின் விரிசலால் வாழ்க்கையில் விரக்தியும்,வெறுப்பும் ஏற்பட்டு கொலைகளும், தற்கொலைகளும் சர்வசாதாரணமாக நடைபெறுவதை காணமுடிகிறது. ஏன் இப்படி நடக்கிறது? உறவுகள் சுருங்கி வருவதும், வருமானம் பெருகி வருவதும், தொழிலில் அகலக்கால் வைத்தலும், நம்பிக்கை துரோகங்களுக்கு ஆட்படுவதும் காரணங்களாக இருக்குமோ என்று எண்ணத் தோன்றுகிறது. உறவுகள் அதிகம் இருக்கும் போது தங்கள் செயல்பாடுகளை, மனக் குறைகளை மனம்விட்டு பேச, ஆலோசனைகள் பெற நல்ல மனம் படைத்த அனுபவஸ்தர்கள் இருந்தார்கள். அவர்கள் சம்பந்தப்பட்டவர்களிடம் பேசி அதை நிவர்த்தி செய்வார்கள். ஆறுதலாக பேசுவார்கள். மன பாரம் குறைக்கும் சுமைதாங்கிகளாக இருந்தார்கள்.

    பண்டிகைக் காலங்களில் அனைவரும் ஒன்று கூடி மகிழ்ந்த வேளைகளில் பல சிக்கல்களுக்குத் தீர்வு கண்டதும் உண்டு. திருமணம் உள்ளிட்ட சடங்குகளில் ஒவ்வொரு உறவும் இதைச் செய்ய வேண்டும் என்று அழைத்ததும் சொந்தம் விட்டுப் போகக் கூடாது என்றுதான். ஆனால் பெரும்பாலும் இன்றைய படிப்பும், பணமும் மன அழுத்தத்தையும், நிம்மதியையும் தவிர எல்லாம் தருகிறது. வாழ்க்கை தொலைந்து போகிறது. குழந்தைகளின் கதி அதோ கதியாகிறது.

    இன்று யூடியூப், கூகுள் சமூக வலைத்தளங்கள் என்று தளங்கள் மாறிவிட்டன. எல்லாம் எங்களுக்குத் தெரியும் என்ற மனப்போக்கினால், பிரச்சினைகள் வரும்போது வடிகாலின்றி மன அழுத்தம், மனக்குமுறல் அதிகமாகிறது. ஆனால் இதனை மனதில் பூட்டி வைத்து அன்றாட பணிகளைச் செய்வது பெரும்பாலும் சாத்தியமாகாது. அது வாழ்க்கையின் விளிம்பிற்கும் விபரீத முடிவுக்கும் அவர்களை அழைத்து செல்கிறது.

    மனம் விட்டு பேசக் கூடிய உறவுகள், நல்ல குடும்ப நண்பர்கள் ஓரிருவர் இருந்தாலும் உதவுவார்கள். இவர்களின் ஆலோசனைகளைக் கேட்டு கணவன், மனைவி இருவரும் தனியே, அந்த ஆலோசனையை மனம் விட்டு அலசி ஆராய்ந்து முடிவெடுக்கலாம். நம்மிருவரைத் தவிர வேறு யாருக்கும் எதுவும் தெரிய வேண்டாம் என்ற மனப்போக்கு மாறவேண்டும்.

    எல்லாவற்றையும் பகிர வேண்டும் என்றில்லை, தொழில் சார்ந்த முக்கிய முடிவுகளை, மனபாரத்தை பகிரலாம், ஆலோசனை பெறலாம். வழிகாட்டுதல்கள் நிச்சயம் பலன் தரும்.கணவன் மனைவி இருவரும் அலுவலகப் பணிகளை வாரத்தில் ஒருநாளாவது குறைந்தபட்சம் மூன்று மணி நேரம் ஒத்தி வைத்துவிட்டு மனம்விட்டு விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையோடு பேச வேண்டும், யார்செய்தது சரி? யார் செய்தது தவறு என்பதல்ல பிரச்சினை! விட்டுக் கொடுத்தால் கெட்டுப்போவதில்லை. தீர்வுதான் நோக்கமாக இருக்க வேண்டும்.

    இப்படி அணுகினால் நிச்சயம் தீர்வும் மன அமைதியும் கிடைக்கும்.குழந்தைகளோடு நேரம் செலவிடுதல் மிக மிக முக்கியம். அது குழந்தைகளுக்கும் பெற்றோருக்கும் நல்ல மகிழ்ச்சியையும் புரிதலையும் தரும். பல்வேறு வகுப்புகளில் சேர்த்து அவர்களை சிறைப்படுத்தாதீர்கள். அவர்களைக் கொண்டு விடுவதிலும், கூட்டி வருவதிலுமே பெற்றோர்களின் நேரம் செலவாகி அயற்சியும், மனச்சோர்வும்தான் மிஞ்சும். இது குடும்ப உறவில் எதிரொலித்து மனக்கசப்புக்கு வழிவகுக்கும்.உளவியல் சார்ந்த நிகழ்ச்சிகள், நூல்கள், வழிபாடு. ஆன்மிக சொற்பொழிவுகள், உடற்பயிற்சி, தியானம், நல்ல சொற்பொழிவாளர்களின் பேச்சு, நகைச்சுவை காட்சிகள் நிச்சயம் மனதை மென்மையாக்கும்.

    குடும்பத்தை பிரிக்கும், பல்வேறு உறவுமுறைகளில் தோன்றும் வில்லத்தனமான காட்சி அமைப்புகளைக் கொண்ட தொடர்கள் நிச்சயம் தவிர்க்கப்பட வேண்டும். மிகுந்த மனப்பாதிப்பை இவை ஏற்படுத்தும். யாரைப் பார்த்தாலும் வெறுப்பும் சந்தேகமும் தான் மிஞ்சும்.

    பெரியாரை துணைக்கொள்ள வேண்டும். இது வள்ளுவரின் வாய்மொழி. நல் வாழ்விற்கு வழிகாட்டும். அறிவுடைய மூத்தோர் நட்பும், அவரைச் சுற்றத்தார்களையும், அவர் கடிந்து கூறினாலும் அவரை பின் தொடர்தலும், நன்மை பயக்கும். பெரியார் தொடர்பில்லா வாழ்க்கை முதல் இல்லா வணிகம், மன்னர்களும் இப்படிப் பட்டோரை துணைகொள்ள வேண்டும் என்று நம்மை வழிநடத்துகிறார். நடப்போம். நல்லதே நினைத்து, நல்லதே செய்து, நல்லவர்கள் மத்தியில் இருந்து நல்லவர்கள் கண்ணில்பட்டால் வாழ்க்கையில் நிச்சயம் மகிழ்ச்சி ததும்பும். வாழ்ந்து காட்டுவோம்!

    ஏ.பி.மதிவாணன்,

    ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி
    மன அழுத்தத்திற்கும், உடலுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. எளிதில் உணர்ச்சிவசப்படுவதும் மன அழுத்த பிரச்சினை தலைதூக்குவதற்கு காரணமாகிவிடுகிறது.
    ஆண்களை விட பெண்கள் மன அழுத்த பாதிப்புக்கு அதிகம் ஆளாகிறார்கள். குடும்பத்தை நிர்வகிப்பதில் ஆண்களைவிட பெண்களுக்கு பொறுப்புக்கள் அதிகம். வீட்டு வேலை, குழந்தை வளர்ப்பு, வரவு செலவு, குடும்ப எதிர்காலம் என குடும்ப சுமைகள் அவர்கள் மனதை பாரமாக்கிவிடுகிறது. நாளுக்கு நாள் பொறுப்புகள் அதிகமாவதை உணரும்போது உடல் நலத்தை கவனத்தில் கொள்ளாமல் விட்டுவிடுகிறார்கள்.

    அது நோய் பாதிப்புகளுக்கு வழிவகுத்துவிடும். பெண்கள் உடல் நலனில் சிறிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தினாலும் அது ஒட்டுமொத்த குடும்ப உறுப்பினர்களையும் பாதிப்புக்குள்ளாக செய்துவிடும். அன்றாட வீட்டு வேலைகளில் தொடங்கி பல விஷயங்களில் பெண்களின் பங்களிப்பு அவசியமானதாக இருக்கிறது. குடும்ப நிர்வாகம் முடங்கி போய்விடும் சூழல் ஏற்படும்போது அது பெண்கள் மனநலத்தையும் பாதிக்கிறது. எளிதில் உணர்ச்சிவசப்படுவதும் மன அழுத்த பிரச்சினை தலைதூக்குவதற்கு காரணமாகிவிடுகிறது.

    மன அழுத்தத்தில் இருந்து விடுபட வழிகள்:

    * மன அழுத்தத்திற்கும், உடலுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. மனக்கவலை அடையும்போது உடலில் உள்ள தசைகள் இறுக தொடங்கும். சிறிது நேரத்திலேயே உடல் சோர்வு அடைந்து விடும். அதற்கு இடம் கொடுக்காமல் மனதையும், உடலையும் ஒருங்கிணைக்க வேண்டும்.

    * மன அழுத்தத்திற்கு ஆளாகும்போது உடலில் ஒருவித பதற்றம் தோன்றக்கூடும். அந்த சமயத்தில் ஐந்து முறை ஆழமாக மூச்சை இழுத்துவிட வேண்டும். அப்படி மூச்சை சீராக இழுத்துக்கொண்டே மனதுக்கு பிடித்தமான வார்த்தைகளை உச்சரித்து வரலாம். அல்லது மனதை சந்தோஷப்படுத்தும் பழைய நினைவுகளை அசைபோடலாம். அது உடலையும், மனதையும் இயல்பு நிலைக்கு கொண்டு வர வழிவகுக்கும்.

    * மன அழுத்தம் அதிகமாகும்போது ஆத்திரத்தில் தவறான முடிவுகள் எடுக்கத் தோன்றும். ஆதலால் மனம் நிம்மதி இழந்து தவிக்கும்போது முடிவெடுப்பதை தள்ளிப்போடுங்கள்.

    * மனம் இயல்பு நிலைக்கு திரும்பும் வரை நிதானத்தையும், பொறுமையையும் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம்.

    * மன அழுத்தம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக வெளிப்படும். சிலருக்கு மனம் படபடக்கும், ஒருசிலருக்கு சீரற்ற தன்மையில் சுவாசம் வெளிப்படும். ஒருசிலருக்கு தலைவலி, தோள்பட்டை வலி ஏற்படக்கூடும். அத்தகைய அறிகுறிகள் தென்படும்போதே மன அழுத்த பாதிப்புக்கு இடம்கொடுக்காமல் அதிலிருந்து மீண்டு வர முயற்சிக்க வேண்டும்.

    * எத்தகைய மன பதற்றத்தையும் போக்கி மனதை சாந்தப்படுத்தும் சக்தி இசைக்கு உண்டு. பிடித்தமான பாடல்களை கேட்கலாம். இனிமையான இசை எகிறும் இதய துடிப்பை இயல்பு நிலைக்கு கொண்டு வர வழிவகுக்கும்.

    * தியானத்திற்கு மன அழுத்தத்தை விரட்டி அடிக்கும் ஆற்றல் உண்டு. மனதை ஒருமுகப்படுத்தும் வண்ணம் இறை வழிபாட்டிலும் கவனம் பதிக்கலாம்.

    * வஜ்ராசனம் போன்ற யோகாசனங்களையும் செய்யலாம். அது மனதையும், உடலையும் ஒரு நிலைப்படுத்தும்.

    * யோகாசனங்களில் கவனம் பதிக்க முடியவில்லை என்றால் நேராக நிமிர்ந்து பின்னர் குனிந்து அமரலாம். அவ்வாறு சிலதடவை செய்யும்போது ரத்த ஓட்டம் சீரடையும். அது மனதையும் இலகுவாக்கும்.

    * மன பாரத்தை இறக்கி வைக்க நடைப்பயிற்சியும் மேற்கொள்ளலாம். கொஞ்ச தூரம் நடைப் பயிற்சி மேற்கொள்ளும்போது கண்கள் கவனத்தை திசைதிருப்பும். பார்க்கும் விஷயங்களில் கவனத்தை பதிய செய்யும்போது மன பாரம் குறையும்.

    * உணவு விஷயத்திலும் கவனம் செலுத்த வேண்டும். மன அழுத்தம் நீடிக்கும் சமயத்தில் காபி பருகுவதை தவிர்க்க வேண்டும். பழச்சாறுகள், தண்ணீர் பருகலாம். நொறுக்கு தீனிகளை தவிர்ப்பதும் நல்லது.

    * போதிய தூக்கம் இல்லாமல் அவதிப்படுவதும் மன அழுத்தம் தோன்ற காரணமாகிவிடும். ஆழ்ந்த தூக்கத்திற்கு மனதை ஆட்படுத்த பழகிக்கொள்ள வேண்டும். 
    போலீசாருக்கு மன அழுத்த பயிற்சி அளிப்பது தொடர்பாக 4 மாவட்ட போலீஸ் அதிகாரிகளுடன் கூடுதல் டி.ஜி.பி. இன்று ஆலோசனை நடத்தினார்.
    கோவை:

    தமிழக கூடுதல் டி.ஜி.பி. (காவல்துறை நலம்) தாமரைக் கண்ணன் இன்று கோவை வந்தார். அவர் கோவை மாநகர போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் 4 மாவட்ட போலீஸ் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

    இதில் மேற்கு மண்டல ஐ.ஜி. பாரி, கோவை மாநகர போலீஸ் கமி‌ஷனர் பெரியய்யா, டி.ஜி.பி. கார்த்திகேயன், கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன், திருப்பூர் மாநகர போலீஸ் கமி‌ஷனர் மனோகரன், மற்றும் திருப்பூர், ஈரோடு, நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் கலந்து கொண்டனர்.

    போலீசாருக்கு மன அழுத்தத்தை குறைப்பது தொடர்பாக ஒவ்வொரு மாநகர், மாவட்டத்தில் இருந்து 15 போலீசார் தேர்வு செய்யப்பட உள்ளனர். அவர்களுக்கு பெங்களூரில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

    இந்த 15 பேர் பெங்களூரில் பயிற்சி பெற்று வந்து அந்தந்த மாவட்டங்களில் உள்ள போலீசாருக்கு மன அழுத்த பயிற்சி அளிக்க உள்ளனர். இது தொடர்பாக கூடுதல் டி.ஜி.பி. தாமரைக்கண்ணன் போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
    சவுதி அரேபியாவில் 70 வயது முதியவர் ஒருவர் கடந்த 30 ஆண்டுகளாக ஒரு நொடி கூட தூங்காமல் அவதிப்பட்டு வருகிறார்.

    ரியாத், ஜூலை, 20-

    சவுதி அரேபியாவில் 70 வயது முதியவர் ஒருவர் கடந்த 30 ஆண்டுகளாக ஒரு நொடி கூட தூங்காமல் அவதிப்பட்டு வருகிறார். தொடக்கத்தில் அவர் சவுதி அரேபியா ராணுவத்தில் பணிபுரிந்தார்.

    அப்போது தொடர்ந்து 20 நாட்கள் தூங்காமல் கண்விழித்து இருந்தார். பணி முடிந்ததும் ஆஸ்பத்திரிக்கு சென்று அதற்கான சிகிச்சை பெற்றார். இருந்தும் அவருக்கு தூக்கம் வரவில்லை. எனவே 4 நாடுகளை சேர்ந்த சிறப்பு மருத்துவர்கள் குழு ஒன்று பரிசோதித்தது.

    இருந்தும் அவரால் 30 ஆண்டுகளாக ஒரு நொடி கூட தூங்க முடியவில்லை. தூங்குவதற்கு தொடர்ந்து சிகிச்சை அளித்தாலும் அவருக்கு தூக்கம் வரவில்லை.

    இதனால் ஆச்சரியம் அடைந்த டாக்டர்கள் குழு அதற்கான காரணத்தை ஆய்வு செய்தனர். சரியான காரணம் தெரியாவிட்டாலும் அவரின் மனஅழுத்தமே இதற்கு காரணமாக இருக் கலாம் என தெரிவித்துள் ளனர்.

    இதற்கிடையே அல் பகா பகுதி நிர்வாகி இவரது நிலை குறித்து அறிந்து அவரிடம் விசாரித்தார். மேலும் அவருக்கு புதிய கார் ஒன்றை பரிசாக அளித்தார். மேலும் அவரது எஞ்சிய காலம் முழுவதும் அவரது அனைத்து தேவைகளையும் செய்து தருவதாக உறுதி அளித்துள்ளார்.

    குழந்தைகளின் மன அழுத்தத்தை அதிகமாக்கும் காரணங்கள் பலப்பல. குழந்தைகளின் மனஅழுத்தத்திற்கான காரணங்கள் என்னவென்று விரிவாக பார்க்கலாம்.
    குழந்தைகளின் மன அழுத்தத்தை அதிகமாக்கும் காரணங்கள் பலப்பல. தங்களுக்கு ஏற்பட்ட மனஅழுத்தத்தை ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு விதமாக வெளிப்படுத்துவார்கள். சில குழந்தைகள் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு யாருடனும் பேசாமல் உம்மென்று இருப்பார்கள்.

    சில குழந்தைகள் தங்கள் மன அழுத்தத்தைக் கோபமாகவும், ஆத்திரமாகவும் வெளிக்காட்டுவார்கள். சில குழந்தைகள் எப்போதும் கவலையோடு காணப்படுவார்கள். இதற்கெல்லாம் காரணங்கள் இருக்கலாம் என்று குழந்தை மனநல மருத்துவர்கள் கூறுகின்றனர். அவையாவன;

    1. குடும்பத்தில் தொடர்ந்து நடைபெறும் குழப்பங்கள், வாக்குவாதங்கள்.

    2. பெற்றோர்கள் மற்றும் உறவினர்களுடன் குழந்தைக்கு உறவில் ஏற்படும் விரிசல்.

    3. நட்பில் உண்டாகும் மனவருத்தம்



    4. குடும்பங்கள் பிரிந்து விடுதல்

    5. மிக நெருக்கமானவர்களின் பிரிவு அல்லது செல்லப்பிராணிகளின் இறப்பு

    6. பெரிதாக ஏற்படும் இழப்புக்கள், அல்லது அதிர்ச்சி ஏற்படுத்திய நிகழ்ச்சிகள்

    7. அடிக்கடி ஏற்படும் உடல்நோய்கள், தொற்றுநோய்கள்

    8. குழந்தைகளை மற்றவர்கள் தவறாகப் பயன்படுத்துதல்

    9. மற்ற குழந்தைகளின் முரட்டுத்தனம், பிடிவாதம்

    10. பள்ளியில் அல்லது வெளிவட்டாரத்தில் தொடர்ந்து ஏற்படும் தோல்விகள்

    11. பெற்றோரைப் பாதிக்கும் மனஉணர்வுகள் சில நேரங்களில் குழந்தையையும் பாதிக்கும்.

    12. உட்கொண்ட மருந்துகளினால் ஏற்படும் பக்க விளைவுகள்.
    இன்று பெண்களுக்கு வீட்டு வேலை, அலுவலக வேலை, குடும்ப உறவுகளை கையாளுவது, நட்புகளை கையாளுவது, குழந்தைகளை வளர்ப்பது.. போன்ற அனைத்தின் மூலமும் மனஅழுத்தம் ஏற்படுகிறது.
    இன்று பெண்களுக்கு வீட்டு வேலை, அலுவலக வேலை, பொது இடங்களில் பயணம் செய்வது, குடும்ப உறவுகளை கையாளுவது, நட்புகளை கையாளுவது, குழந்தைகளை வளர்ப்பது.. போன்ற அனைத்தின் மூலமும் மனஅழுத்தம் ஏற்படுகிறது. மன அழுத்தம் உருவாகாமல் தடுக்க தேவையான அளவு தூக்கம் மிக அவசியம்.

    பெண்கள் தூக்கத்தில் அதிக கவனம் செலுத்தவேண்டும். ‘எவ்வளவு நேரம் தூங்கினாலும் காலையில் எழுந்திருக்க முடியாத அளவுக்கு சோம்பேறித்தனம் இருந்தால்- கண்களை திறக்க முடியாமல், அப்படியே மணிக்கணக்கில் படுத்திருக்கலாம் என்று தோன்றினால்- எப்போதும் கசப்பான சிந்தனைகளே மனதை ஆக்கிரமித்துக் கொண்டிருந்தால்- எல்லோரும் நன்றாக இருக்கிறார்கள், என் வாழ்க்கை மட்டும்தான் இவ்வளவு மோசமாக இருந்துகொண்டிருக்கிறது என்ற எண்ணத்துக்குள்ளே உழன்று கொண்டிருந்தால்- நீங்கள் மனஅழுத்தத்திற்கு உள்ளாகியிருக்கலாம்.

    இதில் இருந்து மீள நீங்கள் மனோதத்துவ நிபுணரை அணுகுவதற்கு முன்னால், உடல் நலத்தை பரிசோதிக்க டாக்டரை சந்திக்கவேண்டும். ஏன்என்றால் மேற்கூறிய அறிகுறிகளில் பெரும்பாலானவை பெண்களின் உடல்நலத்தோடும் சம்பந்தப்பட்டவை. ஆரோக்கியமான மன நலத்திற்கு ஆரோக்கியமான உடல் நலமும் அவசியம்.

    மனஅழுத்தத்திற்கு உட்பட்டிருந்தால் அதில் இருந்து மீள சில எளிய வழிகள்:



    * மனஅழுத்தம் ஏற்பட்டிருப்பதாக நீங்கள் உணர்ந்தால், உங்கள் சிந்தனையை திசை திருப்பவேண்டும். அதற்கு சுயிங்கம் துணைபுரியும் என்று ஆய்வுகள் மூலம் கண்டறிந்திருக்கிறார்கள். அதனால் சுயிங்கத்தை வாயில்போட்டு நிதானமாக மெல்லுங்கள்.

    * எல்லா விஷயங்களையும் சீரியஸ் ஆக்குவதை கைவிடவேண்டும். ‘இதெல்லாம் சாதாரணம் அப்படியே விட்டுவிடுவோம்! சரி.. நடந்தது நடந்துபோச்சு அதுக்கு என்ன செய்ய முடியும்!’ என்று நினைத்து சிறிய விஷயங்களை மனதில் போட்டுவைக்காமல் அப்போதே அப்புறப்படுத்திவிடுங்கள்.

    * நான் ரொம்ப சுத்தமானவள். அதனால் என்னைப் போல் நீங்களும் சுத்தமாக இருக்கவேண்டும். நான் ரொம்ப நல்லவள். அதுபோல் நீங்களும் நல்லவராக இருக்கவேண்டும். நான் கடும் உழைப்பாளி. அதுபோல் நீங்களும் உழைக்கவேண்டும்’ என்று உங்கள் கொள்கைகளை மற்றவர்கள் மீது திணித்து, அவர்களும் அதுபோல் இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள்.

    * பிடித்தமான புத்தகங்களை தேர்ந்தெடுத்து வாசியுங்கள். அவைகளை வாசிக்கும்போது உங்கள் உலகத்தில் இருந்து விடுபட்டு அந்த புத்தகத்தின் கருத்து உலகத்திற்கு நுழைந்துவிடுங்கள். நாய், பூனை போன்று உங்களுக்கு பிடித்த ஏதாவது ஒரு பிராணியை வளருங்கள். அதனுடன் பொழுதை செலவிடுங்கள். தினமும் தியானம் மேற்கொள் ளுங்கள்.
    தனிமையில் வாழ்பவர்கள் மனஅழுத்தம், அச்ச உணர்வால் முன்கூட்டியே மரணம் அடைகின்றனர் என்று புதிய ஆய்வில் தெரிவிரிக்கப்பட்டுள்ளது.
    லண்டன்:

    தனிமையில் வாழ்பவர்களின் பாடு திண்டாட்டம் என்பது பொதுவான நியதி. ஆனால் அவர்கள் விரைவில் மரணம் அடைகிறார்கள் என்று புதிய ஆய்வு தெரிவிக்கிறது. டென்மார்க்கை சேர்ந்த கோபின் கேகன் பல்கலைக்கழக ஆஸ்பத்திரியை சேர்ந்த பயிற்சி மாணவர் அன்னி விண்கார்ட் கிறிஸ்டன்கன் இத்தகைய ஆய்வை மேற்கொண்டார்.

    13,463 இருதய நோயாளிகள் இதில் ஈடுபடுத்தப்பட்டனர். அவர்களிடம் உங்களுக்கு எப்படி இருதய நோய் ஏற்பட்டது. உடல்நலமும், மனநலமும் பாதிக்கப்பட்டது ஏன். புகை பிடித்தல், மது அருந்துதல் மற்றும் வாழ்க்கை முறை மாற்றம் போன்றவற்றால் இருதயநோய் உண்டானதா? என்பன போன்ற கேள்விகள் எழுப்பப்பட்டன.

    அதற்கு பதில் அளித்த அவர்கள் தனிமை கொடுமையால் தான் இத்தகைய நோய் ஏற்பட்டது என்றனர். தனிமையால் இருமடங்கு மனஅழுத்தம் மற்றும் அச்ச உணர்வு ஏற்பட்டு உடல்நலமும், மனநலமும் பாதிக்கப்படுகிறது.

    இதேநிலை தொடரும் பட்சத்தில் அவர்கள் எதிர்பார்த்ததை விட முன் கூட்டியே மரணம் அடைகின்றனர் என ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
    ×