search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 118697"

    • அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு பவுர்ணமி அன்று கிரிவலம் வருவது சிறப்பானது.
    • திருவண்ணாமலை மலையை சுற்றி 14 கிலோ மீட்டர் கிரிவலம் செல்வார்கள்.

    திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். மேலும் திருவண்ணாமலையில் மலையையே சிவனாக வழிபடுவதால் பவுர்ணமி நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வந்து கோவிலின் பின்புறம் உள்ள அண்ணாமலை என்று பக்தர்களால் அழைக்கப்படும் மலையை சுற்றி 14 கிலோ மீட்டர் கிரிவலம் செல்வார்கள்.

    மாதந்தோறும் வரும் பவுர்ணமி மட்டுமின்றி முக்கிய விசேஷ நாட்களிலும் பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள். இந்த மாதத்திற்கான பவுர்ணமி நாளை (வியாழக்கிழமை) காலை 10.16 மணிக்கு தொடங்கி மறுநாள் (வெள்ளிக்கிழமை) காலை 8 மணிக்கு நிறைவடைகிறது.

    பவுர்ணமியை முன்னிட்டு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மேற்கொள்வதற்காக முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகிறது.

    • அம்மன் வீதியுலா நடைபெற்றது.
    • உண்ணாமலை அம்மன் சன்னதி முன்பு தீமிதி விழா நடைபெற்றது.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. இந்த கோவிலுக்கு வெளி மாநிலங்கள், வெளி மாவட்டங்களில் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து விட்டு செல்கின்றனர். மேலும் பவுர்ணமி நாட்களில் கிரிவலம் செல்ல வரும் பக்தர்களால் கோவிலில் கூட்டம் அதிகமாக காணப்படும். இந்த கோவிலில் பல்வேறு விழாக்கள் நடைபெறுகின்றன. அதில் கார்த்திக்கை தீபத் விழா, ஆனி பிரம்மோற்சவம், ஆடிப்பூர பிரம்மோற்சவம் போன்றவை முக்கியமானதாகும்.

    இந்த ஆண்டிற்கான ஆடிப்பூர பிரம்மோற்சவ விழா உண்ணாமலை அம்மன் சன்னதி முன்பு உள்ள தங்க கொடி மரத்தில் கடந்த 23-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி 23-ந் தேதி முதல் நேற்று முன்தினம் வரை காலை மற்றும் மாலையில் விநாயகர், பராசக்தி அம்மன் வீதியுலா நடைபெற்றது.

    ஆடிப்பூர பிரம்மோற்சவ விழா நிறைவையொட்டி நேற்று காலை கோவிலில் பஞ்சமூர்த்திகளுக்கு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து கோவில் வளாகத்தில் உள்ள சிவகங்கை தீர்த்த குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது.

    முன்னதாக பராசக்தி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி மங்கள வாத்தியங்கள் முழங்க சிவகங்கை தீர்த்த குளத்திற்கு வந்தார். இதையடுத்து சூலரூபமான அம்மனுக்கு குளத்தில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் கூற மங்கள வாத்தியங்கள் முழங்க தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து மாலையில் அம்மன் வளைகாப்பு மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து வளைகாப்பு உற்சவம் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் அம்மன் வீதியுலா நடைபெற்றது.

    ஆடிப்பூரத்தை முன்னிட்டு நேற்று இரவு சுமார் 12 மணிக்கு மேல் உண்ணாமலை அம்மன் சன்னதி முன்பு தீமிதி விழா நடைபெற்றது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் அசோக்குமார் மற்றும் அலுவலர்கள், விழா குழுவினர் செய்திருந்தனர்.

    • பராசக்தி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
    • 10-ம் நாளன்று பராசக்தி அம்மனுக்கு வளைகாப்பு உற்சவம் நடக்கிறது.

    திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோவிலில் ஆடிப்பூரம் பிறம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் இன்று காலை தொடங்கியது.

    விழாவை முன்னிட்டு விநாயகர், பராசக்தி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர். தொடர்ந்து அம்மன் சன்னதியில் உள்ள தங்க கொடிமரத்தில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கொடியேற்றம் நடைபெற்றது.

    விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். தொடர்ந்து 10 நாட்களுக்கு தினமும் காலையும் மாலையும் விநாயகர் பராசக்தி அம்மன் கோவிலின் மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி தருவார்கள்.

    10-ம் நாளன்று பராசக்தி அம்மனுக்கு வளைகாப்பு உற்சவமும், அன்று இரவு உண்ணாமுலை அம்மன் சன்னதி முன்பு தீமிதி திருவிழாவும் நடைபெற உள்ளன.

    • இந்த விழா வருகிற ஆகஸ்டு மாதம் 1-ந்தேதி வரை நடக்கிறது
    • 1-ந்தேதி உண்ணாமலை அம்மன் சன்னதி முன்புறம் தீமிதி உலா நடைபெற உள்ளது.

    பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் விளங்குகிறது. இக்கோவிலுக்கு வெளி மாநிலங்கள், வெளி மாவட்டங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து விட்டு செல்கின்றனர்.

    மேலும் பவுர்ணமி நாட்களில் ஏராளமான பக்தர்கள் வந்து கோவிலில் சாமி தாிசனம் செய்து விட்டு கோவிலின் பின்புறம் உள்ள மலையை சுற்றி கிரிவலம் செல்கின்றனர். அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திக்கை தீப திருவிழா, ஆனி பிரம்மோற்சவம், ஆடிப்பூர பிரம்மோற்சவம் என பல்வேறு நிகழ்ச்சி நடைபெறும்.

    இந்த ஆண்டிற்கான ஆடிப்பூர பிரம்மோற்சவ விழா நாளை (சனிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவை முன்னிட்டு காலையிலும், மாலையில் விநாயகர் உற்சவ உலா நடைபெற உள்ளது. தொடர்ந்து நாளை காலை சுமார் 6 மணியில் இருந்து 7.30 மணிக்குள் உண்ணாமலை அம்மன் சன்னதியின் முன்பு உள்ள தங்க கொடி மரத்தில் கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    தொடர்ந்து விழா நாட்களில் காலையும், மாலையும் விநாயகர் மற்றும் பராசக்தி அம்மன் உற்சவம் மாட வீதியுலா நடைபெறுகிறது. இந்த விழா வருகிற ஆகஸ்டு மாதம் 1-ந் தேதி வரை நடக்கிறது. 1-ந் தேதி காலை பஞ்சமூர்த்திகள் அபிஷேகமும், மாலையில் வளைகாப்பு உற்சவமும், பின்னர் பராசக்தி அம்மன் கோவில் வீதி உலாவும் நடைபெற உள்ளது.

    அதனைத்தொடர்ந்து அன்று இரவு 12 மணிக்கு மேல் உண்ணாமலை அம்மன் சன்னதி முன்புறம் தீமிதி உலாவும், பின்னர் அம்மன் வீதியுலாவும் நடைபெற உள்ளது.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் அசோக்குமார் மற்றும் அலுவலர்கள், விழா குழுவினர் செய்து வருகின்றனர்.

    • பவுர்ணமி நாட்களில் கிரிவலம் செல்வதற்காக வரும் பக்தர்களால் கோவிலில் கூட்டம் அலைமோதும்.
    • காலையும், மாலையும் சந்திரசேகரர் மற்றும் விநாயகர் உற்சவ உலா மாட வீதியில் நடைபெற்றது.

    பஞ்சபூத ஸ்தலங்களில் ஒன்றாக அக்னி ஸ்தலமாக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் விளங்குகிறது. இக்கோவிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். இந்த கோவிலில் விடுமுறை நாட்கள், விசேஷ நாட்களில் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படும்.

    மேலும் பவுர்ணமி நாட்களில் கிரிவலம் செல்வதற்காக வரும் பக்தர்களால் கோவிலில் கூட்டம் அலைமோதும். இக்கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் முக்கிய விழாக்களில் ஆனி பிரம்மோற்சவமும் ஒன்றாகும். இந்த ஆண்டுக்கான ஆனி பிரம்மோற்சவ விழா கடந்த 8-ந் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் காலையும், மாலையும் சந்திரசேகரர் மற்றும் விநாயகர் உற்சவ உலா மாட வீதியில் நடைபெற்றது.

    இந்த நிலையில் ஆனி பிரம்மோற்சவ விழா நிறைவு நாளான நேற்று மதியம் 12 மணியளவில் திருவண்ணாமலை அய்யங்குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக கோவிலில் சாமி சன்னதியில் இருந்து சிறப்பு அலங்காரத்தில் அம்பாளுடன் சந்திரசேகரர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

    பின்னர் கோவிலில் இருந்து புறப்பட்டு மாட வீதியில் வலம் வந்து அய்யங்குளத்தில் உள்ள மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு சாமிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. பின்னர் சூல ரூபத்திற்கு அய்யங்குளத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது. தொடர்ந்து சிவாச்சாரியார்கள் மங்கள வாத்தியங்களுடன் வேத மந்திரங்கள் முழங்க சூலத்திற்கு அபிஷேகம் மற்றும் ஆராதனை செய்தனர். பின்னர் சாமிக்கும் தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • இன்று அதிகாலை பவுர்ணமி தொடங்கியதால் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.
    • கிரிவல பாதை முழுவதும் பக்தர்கள் கூட்டம் நிரம்பியது.

    திருவண்ணாமலையில் மலையையே சிவனாக வழிபடுவதால் பவுர்ணமி நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வந்து கோவிலின் பின்புறம் உள்ள அண்ணாமலை என்று பக்தர்களால் அழைக்கப்படும் மலையை சுற்றி 14 கிலோ மீட்டர் கிரிவலம் சென்று வருகின்றனர்.

    மாதந்தோறும் வரும் பவுர்ணமி மட்டுமின்றி முக்கிய விஷேச நாட்களிலும் பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.

    ஆனி மாதத்திற்கான பவுர்ணமி இன்று (புதன்கிழமை) அதிகாலை 3.18 மணிக்கு தொடங்கி நள்ளிரவு 12.52 மணிக்கு நிறைவடைகிறது.

    இன்று அதிகாலை பவுர்ணமி தொடங்கியதால் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். கிரிவல பாதை முழுவதும் பக்தர்கள் கூட்டம் நிரம்பியது. நேரம் செல்ல செல்ல பக்தர்கள் கூட்டம் அதிகரித்தது.

    சென்னை, வேலூர் உள்பட முக்கியமான நகரில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

    பவுர்ணமியை முன்னிட்டு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தது.

    • பவுர்ணமி நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு கிரிவலம் வருவார்கள்.
    • பவுர்ணமி மட்டுமின்றி முக்கிய விசேஷ நாட்களிலும் பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.

    திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். மேலும் திருவண்ணாமலையில் மலையையே சிவனாக வழிப்படுவதால் பவுர்ணமி நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வந்து கோவிலின் பின்புறம் உள்ள அண்ணாமலை என்று அழைக்கப்படும் மலையை சுற்றி 14 கிலோ மீட்டர் கிரிவலம் செல்வார்கள்.

    மாதந்தோறும் வரும் பவுர்ணமி மட்டுமின்றி முக்கிய விசேஷ நாட்களிலும் பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள். இந்த மாதத்திற்கான பவுர்ணமி நாளை (புதன்கிழமை) அதிகாலை 3.18 மணிக்கு தொடங்கி நள்ளிரவு 12.52 மணிக்கு நிறைவடைகிறது.

    பவுர்ணமியை முன்னிட்டு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மேற்கொள்வதற்காக முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகின்றது.

    • பவுர்ணமி அன்று கிரிவலம் வருவது புண்ணியமாக கருதப்படுகிறது.
    • லட்சகணக்கான சிவ பக்தர்கள் இங்கு பவுர்ணமி அன்று கிரிவலம் வருகின்றனர்.

    திருவண்ணாமலையில் இருக்கும் அருணாச்சலேஸ்வரர் கோயில் தமிழ்நாட்டில் இருக்கும் மிக பழமை வாய்ந்த கோயிலாகும். பஞ்சபூதங்களில் ஒன்றான அக்னி வடிவத்தில் ஈசன் இங்கு உருவெடுத்துள்ளதால் பக்தர்களிடையே இதற்கு மேலும் சிறப்புண்டு. சென்னையிலிருந்து 180 கி.மீ தொலைவில் உள்ளது. சிவன் இங்கு மலை வடிவத்தில் தோன்றுவதால் அண்ணாமலை என்றும் அழைக்கப்படுகிறார்.

    ஓவ்வொரு மாதமும் பவுர்ணமி அன்று பக்தர்கள் கிரிவலம் வருவது வழக்கமாகவும் புண்ணியமாகவும் கருதப்படுகிறது. லட்சகணக்கான சிவ பக்தர்கள் இங்கு பவுர்ணமி அன்று கிரிவலம் வருகின்றனர். ஒரு முறை இந்த மலையை சுற்றி வருவதற்கு 14 கி.மீ நடக்கவேண்டும். இதை மேற்கொள்ளும் அனைத்து பெரியவர்கள், சிறியவர்கள் அனைவரும் மன அமைதிபெறுவார்கள். உடல் முழு உற்சாகம் அடையும் என்பது பக்தர்களிடையே உள்ள நம்பிக்கையாகும்.

    கிரிவலம் வரும் வழியில் முதலில் தோன்றுவது இந்திரலிங்கம். இந்தலிங்கம் கிழக்கே பார்த்து அமைக்கப்பட்டுள்ளது. இந்த லிங்கம் பூலோக தேவனான இந்திரதேவனால் நிறுவப்பட்டது. சூரியன் மற்றும் சுக்கிரனின் ஆட்சியில் உள்ள லிங்கம் வணங்கும் பக்தர்களுக்கு நீண்ட ஆயுளும் பெருத்த செல்வமும் வழங்கும்.

    கிரிவலம் வரும் வழியில் இரண்டாவது லிங்கம் அக்னிலிங்கம். இந்த லிங்கம் தென்கிழக்கு திசையை நோக்கி உள்ளது. இந்த லிங்கத்தின் சிறப்பம்சம் என்னவென்றால் இது கிரிவலம் செல்லும் வழியில் இடது புறம் இருக்கும் ஒரே லிங்கம் ஆகும். அக்னிலிங்கத்தை பிரார்த்தனை செய்யும் பக்தர்கள் நோயின்றி முழு ஆரோக்கியத்துடன் வாழ்வார்கள் என நம்பப்படுகிறது. இந்த லிங்கத்தின் கிரகம் சந்திரன். மேலும் சந்திரகிரகம் என்பதால் வாழ்க்கையில் வரும் இடைஞ்சல்களை அகற்றும் சக்தியுள்ளது என நம்புகிறார்கள். இந்த லிங்கம் தாமரை தெப்பகுளத்திற்கு அருகே உள்ளது.

    மூன்றாவது லிங்கமாக அமைந்துள்ள லிங்கம் எமலிங்கம். இந்த லிங்கம் தெற்கு திசையை நோக்கி உள்ளது. எம தர்மனால் நிறுவப்பட்ட லிங்கம் என கூறப்படுகிறது. இது செவ்வாய் கிரகத்திற்கு உட்பட்ட லிங்கம். இதனருகில் சிம்ம தீர்த்தம் எனப்படும் தெப்பகுளம் அமைந்துள்ளது. இதை வேண்டுபவர்கள் பண நெருக்கடி இல்லாமல் சந்தோஷமாக வாழலாம்என நம்பப்படுகிறது.

    நான்காவதாக உள்ள லிங்கம் நிருதி லிங்கம். இதன் திசை தென்கிழக்காகும். இதனுடைய கிரகம் ராகுவாகும். பூதங்களின் ராஜாவால் இந்த லிங்கம் நிறுவப்பட்டது. சனி தீர்த்தம் என அழைக்கப்படும் தெப்பகுளம் இதனருகில் உள்ளது. இதை வேண்டும் பக்தர்கள் நிம்மதியாக பிரச்சினைகளின்றி வாழலாம்.

    ஐந்தாவதாக உள்ள லிங்கம் வருண லிங்கம். இதற்குரிய திசை மேற்கு. மலைதரும் வருணதேவனால் இந்த லிங்கம் நிறுவப்பட்டது.

    இந்த லிங்கத்தை ஆட்சி செய்யும் கிரகம் சனி பகவான். இங்கு வருண தீர்த்தம் என்னும் தெப்பக்குளம் உள்ளது. சமூகத்தில் முன்னேற்றமடையவும் கொடிய நோய்களில் இருந்து தப்பிக்கவும் இந்த லிங்கத்தை பக்தர்கள் பிரார்த்தனை செய்ய வேண்டும்.

    ஆறாவதாக உள்ள லிங்கம் வாயு லிங்கம். இந்த லிங்கம் வடமேற்கு திசையை நோக்கி உள்ளது. வாயு பகவானால் இந்த லிங்கம் நிறுவப்பட்டது. இதை ஆட்சி செய்யும் கிரகம் கேதுவாகும். இந்த லிங்கத்தை சேவித்து வந்தால் இருதயம், வயிறு, நுரையீரல், மற்றும் பொதுவாக வரும் நோய்களில் இருந்து காத்து கொள்ளலாம்.

    ஏழாவது லிங்கம் குபேர லிங்கம். வடதிசையை நோக்கியுள்ள இந்த லிங்கம் குருவை ஆட்சி கிரகணமாக கொண்டுள்ளது. செல்வத்தை வழங்கும் குபேர தெய்வத்தினால் இந்த லிங்கம் நிறுவப்பட்டது. பக்தர்கள் செல்வ செழிப்புடன் திகழ இந்த லிங்கத்தை பிரார்த்தனை செய்ய வேண்டும்.

    கிரிவலத்தில் உள்ள கடைசி லிங்கம் ஈசானிய லிங்கம். வடகிழக்கை நோக்கி உள்ள இந்த லிங்கம் ஈசானிய தேவரால் நிறுவப்பட்டது. புதன் கிரகம் இந்த லிங்கத்தை ஆட்சி செய்கிறது. இந்த லிங்கத்தை சேவித்து வரும் பக்தர்கள் மன அமைதி யுடனும், அனைத்து காரியங்களிலும் வெற்றி கொண்டு திகழ்வார்கள்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பவுர்ணமி அன்று காலையில் இருந்து இரவு வரை பல்வேறு இடங்களில் இருந்து கூடுதலாக பஸ்கள் இயக்கப்படும்.
    • பொதுமக்கள் வசதிக்காக விழுப்புரம் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் பவுர்ணமி அன்று திருவண்ணாமலைக்கு இயக்கப்படுகிறது.

    சென்னை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி அன்று பக்தர்கள் கிரிவலம் செல்லும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறுவது உண்டு.

    தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் அந்நாளில் திருவண்ணாமலைக்கு சென்று கிரிவலம் செல்வார்கள்.

    ஒவ்வொரு மாதமும் ஒரு சிலர் இதனை கைவிடாமல் பின்பற்றி வருகிறார்கள். பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்ல பஸ், கார்களில் சென்று வருகின்றனர்.

    பொதுமக்கள் வசதிக்காக விழுப்புரம் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் பவுர்ணமி அன்று திருவண்ணாமலைக்கு இயக்கப்படுகிறது.

    வருகிற 13-ந்தேதி கிரிவலம் நடைபெறுகிறது. இதற்காக சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    சென்னை கோயம்பேடு, தாம்பரம், காஞ்சிபுரம், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், ஆற்காடு, ஆரணி, புதுச்சேரி ஆகிய பகுதிகளில் இருந்து 500 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    இதுகுறித்து போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் கூறுகையில்:-

    வருகிற 13-ந்தேதி பவுர்ணமி வருவதால் அன்று திருவண்ணாமலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    அன்று காலையில் இருந்து இரவு வரை பல்வேறு இடங்களில் இருந்து கூடுதலாக பஸ்கள் இயக்கப்படும். பக்தர்கள் இந்த வசதியை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்றார்.

    • பிரம்மோற்சவ விழா வருகிற 17-ந்தேதி வரை நடைபெற உள்ளது.
    • 17-ந்தேதி அய்யங்குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

    பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் விளங்குகிறது. இக்கோவிலில் தினமும் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து விட்டு செல்கின்றனர். அதுமட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். இந்த கோவிலில் விடுமுறை நாட்களும், விசேஷ நாட்களிலும் பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்படும். மேலும் பவுர்ணமி நாட்களில் கிரிவலம் செல்ல வரும் பக்தர்களால் கோவிலில் கூட்டம் அலைமோதும்.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் ஆனி பிரம்மோற்சவமும் ஒன்றாகும். இந்த ஆண்டுக்கான ஆனி பிரம்மோற்சவம் இன்று காலை 6 மணியளவில் மங்கள வாத்தியங்கள் முழங்க கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக சாமிக்கும், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்து தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இதையடுத்து உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன், விநாயகர் வீதி உலா நடைபெற்றது விழாவை முன்னிட்டு நேற்று காலையிலும், மாலையிலும் விநாயகர் வீதி உலா நடைபெற்றது. இந்த விழா வருகிற 17-ந் தேதி வரை நடைபெற உள்ளது. விழா நாட்களில் காலை, மாலை விநாயகர், சந்திரசேகர் வீதியுலாவும் நடைபெற உள்ளது.

    விழாவில் நிறைவு நாளான 17-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அய்யங்குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் அசோக்குமார் தலைமையிலான விழா குழுவினர் செய்து உள்ளனர்.

    • ஆனி மாதம் உத்திர நட்சத்திரத்தன்று நடைபெறும் திருமஞ்சனமும் மிகவும் சிறப்புக்குரியது.
    • நடராஜருக்கும், சிவகாமசுந்தரி அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது.

    ஆனந்த நடனமாடும் நடராஜருக்கு மார்கழி திருவாதிரையில் அருணோதய கால பூஜை, மாசி வளர்பிறை சதுர்த்தியில் சந்திகால பூஜை, சித்திரை திருவோணத்தில் மதியம் பூஜை, ஆனி உத்திரத்தில் சாயரட்சை பூஜை, ஆவணி வளர்பிறை சதுர்த்தி, புரட்டாசி வளர்பிறை சதுர்த்திகளில் அர்த்தஜாம பூஜை ஆகியவை மிகவும் விஷேசமானது. அதன்படி சிவாலயங்களில் எழுந்தருளிய நடராஜருக்கு மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தன்று நடைபெறும்

    ஆருத்ரா தரிசனமும், ஆனி மாதம் உத்திர நட்சத்திரத்தன்று நடைபெறும் திருமஞ்சனமும் மிகவும் சிறப்புக்குரியது. ஆனி மாதம் உத்திர நட்சத்திரத்தன்று சாயரட்சை பூஜையில் சிறப்பு அபிஷேகமும், அலங்காரத்துடன் ஆனி திருமஞ்சனம் செய்யப்படுகிறது. அதன்படி திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் எழுந்தருளி உள்ள நடராஜருக்கு ஆனி திருமஞ்சன விழா நேற்று வெகு சிறப்பாக நடைபெற்றது.

    அதையொட்டி நேற்று முன்தினம் இரவு அருணாசலேஸ்வரர் கோவிலில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் சிவகாமசுந்தரி சமேத நடராஜர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது சிறப்பு ஆராதனை நடந்தது.

    தொடர்ந்து நேற்று காலை நடராஜருக்கும், சிவகாமசுந்தரி அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது. இதையடுத்து காலை 9.15 மணியளவில் சிறப்பு பூஜை செய்யப்பட்டு மங்கல வாத்தியங்கள் முழங்க மகா தீபாராதனை நடந்தது. அப்போது சாமி தரிசனம் செய்த பக்தர்கள் அரோகரா கோஷம் எழுப்பினர். பின்னர் நடராஜரும், சிவகாமசுந்தரி அம்பாளும் ஆயிரங்கால் மண்டபத்தின் வெளியே எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். அதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதையடுத்து பக்தர்கள் மத்தியில் ஆடியபடி வந்த நடராஜரும், சிவகாமசுந்தரி அம்பாளும் கோவிலின் 5-ம் பிரகாரம் வழியாக வந்து திருமஞ்சன கோபுரம் வழியாக புறப்பட்டு மாட வீதியில் உலா வந்தனர். வழிநெடுகிலும் பக்தர்கள் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

    • சிவபெருமானே மலையாக வீற்றிருப்பதால் திருவண்ணாமலை புனிதமானதாக கருதப்படுகிறது.
    • பவுர்ணமி தோறும் கிரிவலம் வருவது சிறப்புக்குரியது.

    நினைத்தாலே முக்தி அளிக்கும் திருத்தலம் என்று போற்றப்படுவது, திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் திருக்கோவில். விஷ்ணுவும், பிரம்மாவும் 'யார் பெரியவர்?' என்று சர்ச்சையில் ஈடுபட்டபோது, அவர்கள் இருவரும் அடிமுடி காண முடியாதபடி ஜோதி வடிவாக உயர்ந்து நின்றார், சிவபெருமான். அந்த சிறப்புக்குரிய தலம் இது.

    பஞ்சபூதத் தலங்களில் இது அக்னித் தலமாக விளங்குகிறது. அக்னிக்குரிய நாள் செவ்வாய்க்கிழமை, அந்த நாளில் இங்கு சிறப்பு பூஜைகள் நடக்கின்றன.

    'அண்ணுதல்' என்பதற்கு 'நெருங்குதல்' என்று பொருள். 'அண்ணா' என்பது, 'நெருங்க முடியாத' என்ற பொருளைத் தரும். பிரம்மனாலும், விஷ்ணுவாலும் நெருங்க முடியாத நெருப்பு மலையாக நின்றதால், இத்தலம் 'அண்ணாமலை' என்று பெயர் பெற்றது.

    இத்தல கிளி கோபுரத்தின் கீழ் இட பக்கம் ஒரு விநாயகர் சன்னிதி உள்ளது. இவருக்கு 'அல்லல் தீர்க்கும் விநாயகர்' என்று பெயர். முருகப்பெருமானுக்கு இருப்பது போல விநாயகருக்கும் உள்ள ஆறு படைவீடுகளில், இது முதல் படைவீடாகும்.

    கிரிவலப்பாதையின் எட்டு திசைகளுக்கும் எட்டு லிங்கங்கள் இருக்கின்றன. இதனை அஷ்டலிங்கங்கள் என்கிறோம். அவை, இந்திர லிங்கம், அக்னி லிங்கம், எம லிங்கம், நிருதி லிங்கம், வருண லிங்கம், வாயுலிங்கம், குபேரலிங்கம், ஈசான லிங்கம் ஆகியவை ஆகும்.

    இங்குள்ள இறைவன், 'அண்ணாமலையார், அருணாச்சலேஸ்வரர்' என்றும், அம்பாள் 'உண்ணாமுலையம்மன், அபிதகுஜாம்பாள்' என்றும் அழைக்கப்படுகிறார்கள். அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது 'அருணை சக்தி பீட'மாக விளங்குகிறது.

    25 ஏக்கர் பரப்பளவில் அமைந்த பிரமாண்ட ஆலயம் இது. இதில் 9 கோபுரங்கள், 6 பிரகாரங்கள், 142 சன்னிதிகள், 306 மண்டபங்கள், ஆயிரங்கால் மண்டபம் உள்ளிட்டவை அடங்கியிருக்கின்றன.

    அண்ணாமலையார் ஆலயத்தின் தற்போதைய முழுமையான கட்டிட அமைப்புகள் அனைத்தும் கட்டி முடிக்க, சுமார் 1000 ஆண்டுகள் ஆகி இருப்பதாக கல்வெட்டுகள் உறுதி செய்கின்றன.

    * கயிலாய மலையில் சிவபெருமான் வீற்றிருப்பதால் அது புனிதமானது. அதே போல் சிவபெருமானே மலையாக வீற்றிருப்பதால் திருவண்ணாமலையும் புனிதமானதாக கருதப்படுகிறது.

    * இந்த மலை கிருத யுகத்தில் நெருப்பு மலையாகவும், திரேதா யுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபர யுகத்தில் பொன் மலையாகவும், கலியுகத்தில் கல் மலையாகவும் உள்ளதாக புராணம் சொல்கிறது.

    * பவுர்ணமி தோறும் கிரிவலம் வருவது சிறப்புக்குரியது. கிரிவலம் வரும் ஒவ்வொரு கிழமைக்கும் ஒவ்வொரு பலன் கிடைப்பதாக ஐதீகம். சித்தர்கள் இன்றும் அரூபமாக வாழ்வதாக கருதப்படும் இங்கு, கிரிவலப் பாதையை சித்தர்களும் வலம் வருவதாக நம்பிக்கை நிலவுகிறது.

    * கார்த்திகை தீபத் திருநாள் அன்று, 2668 அடி உயரம் கொண்ட மலை உச்சியில், தீபம் ஏற்றப்படுகிறது. 7½ அடி உயரம் கொண்ட கொப்பரையில், 1000 மீட்டர் காடா துணியால் ஆன திரி, 3 ஆயிரம் கிலோ பசுநெய், 2 கிலோ கற்பூரம் சேர்த்து இந்த தீபம் ஏற்றப்படும். தீபம் தொடர்ந்து 11 நாட்கள் எரியும்.

    ×