search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பா.ஜனதா"

    • ஒவ்வொரு குழுவிலும் இரண்டு பிராந்திய எம்.பி.க்கள் இடம் பெறுவார்கள்
    • ஜே.பி. நட்டா, ராஜ்நாத் சிங் இந்த கூட்டத்தில் கலந்து கொள்வார்கள்

    மக்களவை தேர்தலுக்கு எதிர்க்கட்சிகள் தயாராகி வரும் நிலையில், 3-வது முறையாக தொடர்ந்து ஆட்சியை பிடிக்க பா.ஜனதாவும் திட்டம் வகுத்து வருகிறது. எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்திற்கு போட்டியாக 38 கட்சிகளுடன் கடந்த 18-ந்தேதி டெல்லியில் கூட்டம் நடத்தியது.

    தற்போது மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில் பா.ஜனதா எம்.பி.க்கள் மற்றும் கூட்டணி கட்சி எம்.பி.க்கள் கலந்து கொண்டு வருகிறார்கள். மக்களவை தேர்தல் நெருங்குவதால், தேர்தல் குறித்து திட்டம் வகுக்க, இந்த வாய்ப்பை பயன்படுத்தி பிரதமர் மோடி எம்.பி.க்களை 10 குழுக்களாக பிரித்து அவர்களுடன் தினந்தோறும் ஆலோசனை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    ஒவ்வொரு குழுவிலும் 35 முதல் 40 எம்.பி.க்கள் இருப்பார்கள் எனத் தெரிகிறது. பிராந்தியம் வகையில் குறிவைக்கும் நோக்கமாக இது பார்க்கப்படுகிறது. ஜூலை 25-ந்தேதியில் இருந்து இந்த கூட்டம் நடைபெற இருக்கிறது.

    இந்த எம்.பி.க்கள் குழு பிராந்தியம் ரீதியில் பிரிக்கப்படுகிறது. ஒவவொரு குரூப்பிலும் இரண்டு பிராந்தியத்தில் உள்ள எம்.பி.க்கள் இடம் பெறுவார்கள். முதல் கூட்டத்தில் உத்தர பிரதேசம் மற்றும் வடகிழக்கு பிராந்திய எம்.பி.க்களுடன் ஆலோசனை நடத்துவார் எனத் தெரிகிறது.

    பிரதமர் மோடி மாலை 6.30 மணிக்கு ஒரு கூட்டம், இரவு 7.30 மணிக்கு ஒரு கூட்டம் என இரண்டு கூட்டமாக நடத்த இருக்கிறார். பிரதமர் மோடியுடன் பா.ஜனதா தலைவர் நட்டா, பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் ஆகியோரும் ஒவ்வொரு கூட்டத்திலும் இருப்பார்கள்.

    இந்த ஆலோசனை கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ள சஞ்சீவ் பல்யான், அஜய் பாத், பா.ஜனதா கட்சி அதிகாரிகள், மத்திய அமைச்சர்களும் இடம் பெற இருக்கிறார்கள். தேசிய ஜனநாயக கூட்டணி 25 வருடத்தை நிறைவு செய்யும் நிலையில் இநத் கூட்டம் நடைபெற இருக்கிறது.

    பிரதமர் மோடி தலைமையில் 2024 மக்களவை தேர்தலை பா.ஜனதா சந்திக்க உள்ளது. இந்த முறை மிகப்பெரிய அளவில் மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைக்க திட்டமிட்டுள்ளது.

    • எதிர்க்கட்சிகள் முதல் கூட்டத்தில் 14 கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர்
    • கர்நாடகாவில் நடைபெறும் 2-வது கூட்டத்தில் 24 கட்சித் தலைவர்கள் கலந்து கொள்ள வாய்ப்பு

    மோடி தலைமையிலான பா.ஜனதா கூட்டணி மத்தியில் ஆட்சி செய்து வருகிறது. கூட்டணி என்றாலும் தனிப்பெரும்பான்மை என்பதால் பா.ஜனதா தன்னிச்சையாக செயல்பட்டு வருகிறது. இரண்டு முறை தொடர்ந்து மத்தியில் ஆட்சியை பிடித்துள்ளது. இந்த முறையும் ஆட்சியை பிடிக்க தீவிரம் காட்டி வருகிறது.

    மோடி ஹாட்ரிக் வெற்றி பெற்றால், அது நாட்டிற்கு ஆபத்து எனக் கூறிவரும் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் வேலை நடைபெற்று வருகிறது. இதற்கான முதல் கூட்டம் பாட்னாவில் நடைபெறுகிறது. அதில் 14 கட்சிகள் இடம் பிடித்திருந்தன. இன்றும், நாளையும் கர்நாடகாவில் நடைபெற இருக்கும் காங்கிரஸ் ஏற்பாடு செய்துள்ள கூட்டத்தில் 24 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    இதற்கு போட்டியாக பா.ஜனதா நாளை தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டத்தை டெல்லியில் நடத்துகிறது. இதில் 30 கட்சிகள் கலந்து கொள்ளும் எனத் தெரிகிறது.

    இந்த நிலையில் பா.ஜனதாவின் இந்த திடீர் கூட்டம் குறித்து காங்கிரஸ் கட்சியின் ஊடகப்பிரிவு பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில் ''பிரதமர் மோடி, பா.ஜனதா மலைத்துப் போய் உள்ளனர். பாட்னாவில் நடைபெற்ற எதிர்க்கட்சிகள் கூட்டத்திற்குப் பிறகு, பிரதமர் திடீரென தேசிய ஜனநாயக கூட்டணி குறித்து யோசித்துள்ளார்.

    அந்த கூட்டணிக்கு மூச்சு கொடுத்து உயிர்கொடுக்க முயற்சிக்கிறார். திடீரென, நாளை டெல்லியில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் கூட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளனர். பாட்னாவில் நடைபெற்ற கூட்டத்தின் முடிவே இதுவாகும்'' என்றார்.

    • முன்னால் சென்ற வாகனத்தினை முந்த முயன்று போது முடியாமல் திடீர் என பிரேக் பிடித்தார்.
    • தூக்கி வீசப்பட்ட சசிகலா தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலே பலியானர்.

    சென்னிமலை:

    சென்னிமலை யூனியன், 1010 நெசவாளர் காலனியில் வசிப்பவர் சசிகலா (36). இவர் சென்னிமலை மண்டல பா.ஜனதா கட்சியின் மகளிர் அணி பொதுச்செயளாளராக பதவி வகித்து வருகிறார்.

    இந்நிலையில் சகிகலாவுக்கு திருமணம் ஆகி கணவரை பிரிந்து வசித்து அவிநாசி அருகே தெக்கலூரில் தனியார் கார்மெட்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.

    சம்பவத்தன்று காலை வேலைக்கு செல்வதற்காக தனது மோட்டார் சைக்கிளில் சென்னிமலை- ஈங்கூர் மெயின் ரோட்டில் ஈங்கூர் ெரயில்வே மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது தனக்கு முன்னால் சென்ற வாகனத்தினை முந்த முயன்று போது முடியாமல் திடீர் என பிரேக் பிடித்தார்.

    அப்போது தூக்கி வீசப்பட்ட சசிகலா தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலே பலியானர்.

    இது குறித்து சசிகலா அண்ணன் ஜோசப் ராஜப்பா கொடுத்த புகாரின் பேரில் சென்னிமலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மண்ணரை மற்றும் பாளையக்காடு பகுதியில் பல்லாயிரக்கணக்கான வீடுகள் உள்ளன .
    • தினந்தோறும் இரவு 12 மணிக்கு மின்வெட்டு ஏற்பட்டு அடுத்த நாள் தான் வருகிறது.

    திருப்பூர் :

    திருப்பூர் மண்ணரையில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் மண்ணரை மற்றும் பழைய காடு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பாரதிய ஜனதா கட்சியினர் இன்று காலை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் மின்வாரிய அலுவலர்களை சந்தித்து ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

    மண்ணரை மற்றும் பாளையக்காடு பகுதியில் பல்லாயிரக்கணக்கான வீடுகள் உள்ளன . இங்கு ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இந்தநிலையில் இந்த பகுதிகளில் தினந்தோறும் இரவு 12 மணிக்கு மின்வெட்டு ஏற்பட்டு அடுத்த நாள் தான் வருகிறது. இதனால் வேலைக்கு செல்லும் ஆண்கள்,பெண்கள் மற்றும் வயதான பெரியவர்கள் தற்போது பள்ளி திறந்துள்ள நிலையில் மின்வெட்டால் மாணவ, மாணவிகளும் பாதிப்படைத்து வருகின்றனர். மேலும் இந்த இரவு நேரம் மின்தடையால் அதிக சமூக விரோத செயல்கள் நடந்து வருகிறது. இதனால் எங்கள் பகுதியில் இருக்கும் மக்கள் மிகவும் அச்சத்துடன் வசித்து வருகின்றனர்.

    அதே போல் கடந்த ஒரு வாரத்தில் அதிக மின் அழுத்தம் காரணமாக டிவி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின் என்று பல பொருட்கள் பல வீட்டில் சேதம் அடைந்துள்ளது. எனவே இதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளனர்.

    • பா.ஜனதா அரசின் 9 ஆண்டுகால சாதனை விளக்க அணிகள் மாநாடு நடைபெற்றது.
    • பொற்காலத்தின் தொடக்கத்தில் நாம் உள்ளோம்.

    திருப்பூர் :

    பிரதமர் மோடியின் தலைமையிலான மத்திய பா.ஜனதா அரசின் 9 ஆண்டுகால சாதனை விளக்க அணிகள் மாநாடு திருப்பூரில் உள்ள மண்டபத்தில் நடைபெற்றது. பா.ஜனதா கட்சியின் திருப்பூர் வடக்கு மற்றும் திருப்பூர் தெற்கு சட்டமன்றத்திற்கு உட்பட்ட அணியின் நிர்வாகிகள் பங்கேற்றனர். கூட்டத்துக்கு வடக்கு மாவட்ட தலைவர் செந்தில்வேல் தலைமை தாங்கினார்.

    மாநில துணைத்தலைவர் கனகசபாபதி சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசியதாவது:- பொற்காலத்தின் தொடக்கத்தில் நாம் உள்ளோம். கோவை, திருப்பூரில் பா.ஜனதா வலுவாக உள்ளது. பாராளுமன்ற தேர்தலில் நிச்சயம் வெற்றி பெற வேண்டும். அதற்காக வீடு, வீடாக சென்று மத்திய அரசின் திட்டங்களை அணி நிர்வாகிகள் எடுத்துக் கூற வேண்டும். பிரதமர் மோடி மீண்டும் இந்தியாவின் பிரதமராக சபதம் ஏற்போம். இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான பா.ஜ.க.நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    தென்காசி:

    தமிழகத்தில் தி.மு.க. அரசு கள்ளச்சாராயத்தை தடுக்க தவறியதாக கூறி தமிழக அரசை கண்டித்து தென்காசி புதிய பஸ் நிலையம் அருகே தென்காசி மாவட்ட பா.ஜனதா மகளிர் அணி சார்பில் மாவட்ட மகளிர் அணி தலைவி அனிதா செந்தில்குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட மகளிர் அணி பொதுச்செய லாளர் வளர்மதி முன்னிலை வகித்தார். பொருளாளர் மரகதம், தென்காசி நகர தலைவர் மந்திர மூர்த்தி வரவேற்புரை யாற்றினார். ஆர்ப்பாட்ட த்திற்கு சிறப்பு அழைப்பா ளர்களாக தென்காசி மாவட்ட பார்வையாளர் மகாராஜன், பொதுச் செயலாளர்கள் பாலகுருநாதன், ராமநாதன், அருள்செல்வன், மாநில செயற்குழு உறுப்பினர் ராமரா ஜா, மாவட்ட பொருளாளர் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட ஏராளமான நிர்வா கிகள் கலந்து கொண்டனர்.

    • ராயகிரியில் டாஸ்மாக் கடை திறக்க அரசாங்கம் ஏற்பாடு செய்து வருவதாக தெரிகிறது.
    • டாஸ்மாக் கடை திறந்தால் மக்களின் அமைதியான வாழ்வாதாரம் பாதிக்கும்.

    சிவகிரி:

    சிவகிரி அருகே ராயகிரியில் டாஸ்மாக் கடை திறக்கும் திட்டத்தை கைவிடு மாறு வாசுதேவ நல்லூர் வடக்கு ஒன்றியம் ராயகிரி பா.ஜனதா கட்சி சார்பாக வாசுதேவ நல்லூர் வடக்கு ஒன்றிய தலைவர் சோழராஜன் தலைமையில், சிவகிரி தாசில்தாரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட பொருளாளர் பாலகிருஷ்ணன், ஒன்றிய பொதுச்செயலாளர் சுப்பிரமணியன், ஒன்றிய பொருளாளர் மாடசாமி, ஓ.பி.சி. அணி மாவட்ட துணை தலைவர் தங்கம், வர்த்தக அணி ஒன்றிய தலைவர் முருகேசன், இளைஞர் அணி ஒன்றிய தலைவர் மெக்கன்பெருமாள், விவசாய அணி மாவட்ட பொறுப்பாளர் ராகவன், பிரசார பிரிவு ஒன்றிய தலைவர் வன்னியராஜா, ராயகிரி நகர தலைவர் கணேசன், அமைப்புசாரா நலவாரிய ஒன்றிய தலைவர் சபரிமலை, மாரியப்பன் ஆகியோர் கலந்துகொண்டனர்.சிவகிரி தாசில்தாரிடம் அளித்த மனுவில் கூறப்பட்டிருப்ப தாவது:-

    சிவகிரி அருகே ராயகிரியில் டாஸ்மாக் கடை திறக்க அரசாங்கம் ஏற்பாடு செய்து வருவதாக தெரிகிறது. இந்த பகுதிகளில் சிறந்த கல்விக்கூடங்கள் செயல்பட்டு வருகிறது. பொதுமக்கள் அமைதியாக வாழ்ந்து வருகிறார்கள். இந்நிலையில் இப்பகுதியில் டாஸ்மாக் கடை திறந்தால் பொதுமக்களுக்கும், விவசாயிகளுக்கும் மிகவும் இடையூறாக இருப்பதோடு மக்களின் அமைதியான வாழ்வாதாரம் பாதிக்கும் என்பதால் ராயகிரியில் டாஸ்மாக் கடை திறக்கும் திட்டத்தை கைவிடுமாறு தமிழக அரசையும், டாஸ்மாக் நிர்வாகத்தையும் வாசுதேவநல்லூர் ஒன்றிய பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    • தமிழக பா.ஜனதா பட்டியல் அணி மாநில பொருளாளர் சங்கர் என்பவர் சில நாட்களுக்கு முன்பு படு கொலை செய்யப்பட்டார்.
    • ஆர்ப்பாட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட பா.ஜனதாவினர் கலந்து கொண்டனர்.

    நெல்லை:

    காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் வளர்புரம் ஊராட்சி மன்ற தலைவரும், தமிழக பா.ஜனதா பட்டியல் அணி மாநில பொருளாளருமான சங்கர் என்பவர் சில நாட்களுக்கு முன்பு படு கொலை செய்யப்பட்டார்.

    இதனை கண்டித்தும், தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சீர்குலைந்து விட்டதாக கூறி தி.மு.க அரசை கண்டித்தும் நெல்லை வடக்கு மாவட்ட பா.ஜனதா சார்பில் இன்று வண்ணார்பேட்டை செல்லப்பாண்டியன் மேம்பாலம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் தயாசங்கர் தலைமை தாங்கினார். பட்டியல் அணி மாவட்ட தலைவர் துளசி பாலா முன்னிலை வகித்தார்.

    இதில் மாவட்ட பொது செயலாளர் வேல் ஆறுமுகம், மாவட்ட செய லாளர் வக்கீல் வெங்கடா ஜலபதி என்ற குட்டி, மாவட்ட இளைஞரணி தலைவர் பிரபாகரன், இளைஞரணி செயலாளர் ஜெட் ராஜா, மாவட்ட மகளிர் அணி தலைவி ஜெயசித்ரா, மண்டல தலைவர்கள் குரு கண்ணன், பெரியதுரை உள்பட ஏரா ளமானோர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர்.

    இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட பா.ஜனதாவினர் கலந்து கொண்டனர்.

    • முதலீட்டாளர்கள் மாநாடு நடத்த வலியுறுத்த வேண்டும் என்று பா.ஜனதா கோரிக்கை விடுத்துள்ளது.
    • சதீஷ், ஆசாத், சோலைமணி கண்டன் உள்பட பலர் உடனிருந்தனர்.

    வாடிப்பட்டி

    மதுரையை தொழில் நகரமாக்க முதலீட்டாளர்கள் மாநாடு நடத்த வலியுறுத்த வேண்டும் என்று பா.ஜ.க. மாநில பொதுச் செயலாளர் ராம சீனிவாசன், கலெக்டர் அனீஷ்சேகரிடம் கோரிக்கை மனு கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது:-

    வரலாற்று சிறப்பு மிக்க பழமையான நகரமாக மதுரை உள்ளது. மதுரைக்கென்று பல தனிசிறப்புகள் உள்ளன. மதுரையை தொழில் நகர மாகவும் அழைக்கப்பட வேண்டும். மதுரையில் மிகப்பெரிய தொழிற்சாலைகளோ, மிகப்பெரிய தொழில் நிறுவனங்களோ இல்லை.

    இதனால் மதுரை உள்ளிட்ட தென்மாவட்டங்களில் வசிக்கும் இளைஞர்கள் வேலைதேடி சென்னை, திருப்பூர், கோவை போன்ற தொழில் நகரங்களை நோக்கி செல்கின்றனர்.

    இன்னும் சில ஆண்டு களில் மதுரை உள்கட்ட மைப்பு அமையப்பெற்ற நகரமாக மாற உள்ளது. இந்த சூழ்நிலையை பயன்படுத்தி மதுரையை தொழில் நகரமாக மாற்றும் வகையிலும் மிகப்பெரிய தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையிலும் முதலீட்டாளர்கள் மாநாடு மதுரையில் நடந்த மாநில அரசை வலியுறுத்த வேண்டும்.

    தற்பொழுது தமிழக அரசால் மாட்டுத்தாவ ணியில் அமைய இருக்கும் டைட்டல் பார்க்கை இதற்கு முந்தைய தி.மு.க ஆட்சியின் போது தகவல் தொழிநுட்ப பூங்காவுக்கு என்று ஒதுக்கப்பட்டு அடிக்கல் நாட்டப்பட்ட வடபழஞ்சியில் அமைக்க வேண்டும்.

    அந்த பகுதியில் டைட்டல் பார்க் அமையும் பட்சத்தில் அதனை சுற்றி உள்ள பகுதிகள் வளர்ச்சி பெறும். அந்த பகுதிகளில் வசிக்கும் மக்களின் வாழ்வாதாரமும் உயரும். அதே போல் மதுரையை சுற்றியுள்ள அனைத்து மாவட்டங்க ளிலும் கிரைனைட் குவாரிகள் இயங்கி வருகிறது.

    மதுரையில் மட்டும் அனைத்து கிரைனைட் குவாரிகளும் தடைசெய்யபட்டுள்ளது. இதனால் மேலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் வசிக்கும் மக்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கபட்டுள்ளது.

    சிவகங்கை மாவட்டம் பூவந்தியில் கிரானைட் குவாரி செயல்படுகிறது. ஆனால் அதன் அருகில் மதுரை மாவட்டத்தில் அமைந்துள்ள கிரானைட் குவாரிகள் இயங்கவில்லை. இது மிகவும் வருந்தத்தக்கது.

    அரசு விதிகளுக்கு புறம்பாக செயல்பட்ட குவாரிகளை தவிர்த்து மற்ற கிரைனைட் குவாரிகள் இயங்க விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    அப்போது மதுரை மேற்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் சசிக்குமார், ஊடகபிரிவு கோட்ட பொறுப்பாளர் நாகராஜன், முன்னாள் ஓ.பி.சி. அணி மாநில துணை தலைவர் கே.ஆர்.முரளி ராமசாமி, வக்கீல் ரவீந்திரன், வேல்முருகன், வெற்றி கண்ணன், காளிதாஸ் கருப்பையா, சதீஷ்,

    ஆசாத், சோலைமணி கண்டன் உள்பட பலர் உடனிருந்தனர்.

    • விவசாயிகளின் பொருளாதாரத்தில் பெரும் பங்கு வகிப்பது கால்நடை வளர்ப்பு மற்றும் பால் விற்பனை.
    • மாட்டுப் பாலுக்கு 50 ரூபாய், எருமை பாலுக்கு 60 ரூபாயும் உயர்த்தி தர வேண்டும்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயலாளர் மலர்கொடி, திருப்பூர் வடக்கு மாவட்ட தலைவர் செந்தில் வேல், விவசாய அணி தலைவர் ரமேஷ் குமார் மற்றும் நிர்வாகிகள் கறவை பாலுடன் வந்து திருப்பூர் மாவட்ட கலெக்டரை சந்தித்து ஒரு கோரிக்கை மனு கொடுத்துள்ளனர். அதில் அவர்கள் கூறியிருப்ப தாவது:-

    திருப்பூர் மாவட்டத்தில் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்த பெரிதும் உதவியாக இருப்பது கால்நடை வளர்ப்பு, அவ்வகையில் விவசாயிகளின் பொருளாதாரத்தில் பெரும் பங்கு வகிப்பது கால்நடை வளர்ப்பு மற்றும் பால் விற்பனை மட்டுமே எனவே விவசாயிகளின் நலன் கருதி அரசு பால் கொள்முதல் குறைந்தபட்ச விலையை மாட்டுப் பாலுக்கு 50 ரூபாய்,எருமை பாலுக்கு 60 ரூபாயும் உயர்த்தி தர வேண்டும்.அதேபோல் மாட்டு தீவன வகையிலான சோளத்தட்டு வைக்கோல் போன்றவற்றை மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கிட வேண்டும்.அரசு ஆவின் மூலம் வழங்கும் அடர் தீவனத்தை நல்ல தரத்துடன்அனைத்து விவசாயிகளுக்கும் கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும்.பால் கொள்முதல் நிலையங்களில் எந்த பாகுபாடும் ஏற்றத்தாழ்வும் இல்லாமல் பால் கொள்முதல் அனைவரிடத்திலும் சரியான முறையில் செய்யப்பட வேண்டும். விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    • ஒரு சில காரணங்களால் அண்ணாமலை பங்கேற்கும் நிகழ்ச்சி மாற்றி அமைக்கப்பட்டிருந்தது.
    • மாவட்ட பா.ஜ.க தலைமை அலுவலக வளாகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

    தென்காசி:

    தென்காசியில் கடந்த 12,13 ஆகிய தேதிகளில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை சுற்றுப் பயணம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதாக இருந்தது.

    ஒரு சில காரணங்களால் அவர் பங்கேற்கும் நிகழ்ச்சி மாற்றி அமைக்கப்பட்டி ருந்தது.

    இந்நிலையில் தென்காசி யில் அண்ணாமலை பங்கேற்கும் பொதுக்கூட்டம் வருகிற 24-ந் தேதி நடைபெறும் என மாவட்ட பா.ஜ.க. சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி தென்காசி, கடையநல்லூர் மற்றும் ஆலங்குளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சக்தி கேந்திர பொறுப்பாளர்கள், மண்டல் மையக்குழு உறுப்பி னர்கள், மாவட்ட அணி மற்றும் பிரிவு தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம், மாவட்ட பா.ஜ.க தலைமை அலுவலக வளாகத்தில் உள்ள ஜெகந்நாத் அரங்கத்தில் நடைபெற்றது.

    இதில் மாவட்டத் தலைவர் ராஜேஷ் ராஜா , மாவட்ட பார்வையாளர் மகாராஜன்,பாலகுருநாதன், ராமநாதன், பொதுச்செய லாளர்கள் மற்றும் மாவட்ட, மண்டல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • பா.ஜனதா சார்பில் 108 பானைகள் வைத்து பொங்கலிட்டு கொண்டாடப்பட்டது.
    • விழாவில் சிறப்பு அழைப்பாளராக அய்யாவழி அரசம்பதி சிவச்சந்திரன் கலந்து கொண்டார்.

    தென்காசி:

    கீழப்பாவூர் மேற்கு ஒன்றிய பா.ஜனதா சார்பில் நம்ம ஊரு மோடி பொங்கல் திருவிழா நிகழ்ச்சி பாவூர்சத்திரம் முப்புடாதி அம்மன், சுடலைமாட சுவாமி கோவில் திடலில் 108 பானைகள் வைத்து பொங்கலிட்டு கொண்டாடப்பட்டது.

    நிகழ்ச்சிக்கு கீழப்பாவூர் மேற்கு ஒன்றிய தலைவர் மாரியப்பன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக அய்யாவழி அரசம்பதி சிவச்சந்திரன் கலந்து கொண்டார்.

    இதில் தென்காசி மாவட்ட தலைவர் ராஜேஷ் ராஜா, மாநில வர்த்தக பிரிவு செயலாளர் கோதை மாரியப்பன், ஒன்றிய பார்வையாளர் வழக்கறிஞர் முத்துலட்சுமி, ஊடகப்பிரிவு மாவட்ட தலைவர் செந்தூர்பாண்டியன், ஒன்றிய பொதுச்செயலாளர்கள் சேர்மன், பேச்சிமுத்து, ஒன்றிய பொருளாளர் தட்சிணாமூர்த்தி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் முத்துராஜ், இளைஞரணி மாவட்ட செயலாளர் சரவணன், விவசாய அணி மாவட்ட பொதுச்செயலாளர் விஜய் சேகர், கூட்டுறவு பிரிவு மாவட்ட செயலாளர் கார்மேகநாதன், சில்லரைபுரவு ஊராட்சி மன்ற தலைவர் குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ×