search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 118868"

    பெரம்பலூரில் வீட்டின் பூட்டை உடைத்து 31 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள நெய்குப்பை பகுதியை சேர்ந்தவர் சுரேந்தர் (வயது 35). இவர் கண்காணிப்பு கேமரா பொருத்தும் தொழில் செய்து வருகிறார். தொழில் சம்பந்தமாக பெரம்பலூர் வடக்கு மாதவி சாலையில் கணபதி நகரில் உள்ள ஒரு குடியிருப்பின் மேல் தளத்தில் வாடகைக்கு வசித்து வருகிறார்.

    கிறிஸ்தவரான இவர் தனது மனைவி ஜெனிபர் மற்றும் மகன் சுஜன் ஆகியோருடன் நேற்று முன்தினம் கிறிஸ்தவ ஆலயத்திற்கு வழிபாடு செய்வதற்காக இரவு 11 மணி அளவில் தனது வீட்டை பூட்டிவிட்டு சென்றார். சுரேந்தர் மற்றும் குடும்பத்தினர் வழிபாட்டை முடித்துக்கொண்டு நள்ளிரவு 2 மணி அளவில் வீட்டிற்கு திரும்பினர். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சுரேந்தர் மற்றும் அவரது மனைவி ஜெனிபர் உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த 31 பவுன் நகைகள் திருட்டுபோய் இருப்பது தெரிந்தது.

    சுரேந்தர் கிறிஸ்தவ ஆலயத்திற்கு புறப்பட்டு சென்றதை நோட்டமிட்ட கொள்ளையர்கள் அவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இந்த சம்பவம் குறித்து சுரேந்தர் பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் பெரம்பலூர் போலீஸ் துணை சூப்பிரண்டு ரவீந்திரன், இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

    மேலும் தடவியல் நிபுணர்கள், துப்பறியும் மோப்ப நாயுடன் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர். தடயவியல் நிபுணர்கள் கொள்ளையர்களின் கைரேகைகள் உள்ளிட்ட தடயங்களை பதிவு செய்தனர்.

    மோப்ப நாய் சம்பவ இடத்தில் மோப்பம் பிடித்துவிட்டு சிறிது தூரம் ஓடி சென்று நின்றுவிட்டது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. பின்னர் இதுகுறித்த புகாரின் பேரில் பெரம்பலூர் போலீசார் வழக்குபதிவு செய்து நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடிவருகின்றனர். கொள்ளை போன நகைகளின் மதிப்பு சுமார் ரூ.7 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

    பெரம்பலூரில் கடந்த சில மாதங்களாக கொள்ளை சம்பவங்களும், திருட்டு சம்பவங்களும் அதிகரித்து வரு கிறது. பெரம்பலூர் வடக்கு மாதவி சாலையில் நெருக்கடியான குடியிருப்பு பகுதியில் நகைகள் கொள்ளைப்போன சம்பவம் அப்பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #tamilnews
    பி.எஸ்.என்.எல். அதிகாரி வீட்டின் கதவை உடைத்து 16 பவுன் நகை மற்றும் ரூ.52 ஆயிரத்தை மர்ம மனிதர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
    மதுரை:

    மதுரை கோசாகுளம் எம்.பி.நகரைச் சேர்ந்தவர் ஜோதிநாதன் (வயது 55). இவர் எல்லீஸ் நகர் பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் அதிகாரியாக உள்ளார்.

    சம்பவத்தன்று ஜோதிநாதன் மற்றும் குடும்பத்தினர் வீட்டை பூட்டி விட்டு கேரளாவுக்குச் சென்றனர்.

    இந்த நிலையில் அவர்களது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்துள்ளதை அந்த வழியே சென்றவர்கள் பார்த்தனர்.

    இதுபற்றி அவர்கள் ஜோதிநாதனுக்கு தகவல் கொடுத்தனர். அவர் உடனடியாக விரைந்து வந்து பார்த்தார். வீட்டினுள் இருந்த பீரோ திறந்து பொருட்கள் சிதறிக் கிடந்ததை கண்ட ஜோதிநாதன், கூடல்புதூர் போலீசில் புகார் செய்தார்.

    போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். வீட்டில் ஆள் இல்லாததை அறிந்து யாரோ, கதவை உடைத்து உள்ளே புகுந்திருப்பது தெரிய வந்தது.

    பீரோவில் இருந்த 16 பவுன் தங்க நகைகள், ரூ.52 ஆயிரம் கொள்ளை போயிருப்பதாக போலீசாரிடம் ஜோதிநாதன் தெரிவித்தார்.

    வீடு புகுந்து கொள்ளையடித்த மர்ம மனிதர்களை போலீசார் தேடி வருகின்றனர். தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, கைரேகைள் சேகரிக்கப்பட்டன.

    மோப்ப நாய் வரவழைக்கப்பட்டும் சோதனை நடத்தப்பட்டது. பூட்டிய வீட்டில் நடைபெற்ற கொள்ளை சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    மற்றொரு சம்பவம்...

    மதுரை ஜீவா நகரைச் சேர்ந்த மவுலானா (58) வீட்டின் பீரோவில் இருந்த ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் திடீரென மாயமானது.

    இதுகுறித்து போலீசில் புகார் செய்த மவுலானா, வீட்டு வேலைக்காரி மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்திருந்தார்.

    ஜெய்ஹிந்துபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வீரகாளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த வேலைக்காரி ராஜேஸ்வரியை பிடித்து விசாரித்தனர்.

    இதில் அவர் தான் பணத்தை எடுத்திருப்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து ராஜேஸ்வரியை போலீசார் கைது செய்தனர்.

    மதுரை தாசில்தார் நகரைச் சேர்ந்த காந்திமதி (75) வீட்டில் படுத்திருந்தபோது, யாரோ மர்ம மனிதன் நைசாக உள்ளே புகுந்துள்ளான். அவன், காந்திமதி கழுத்தில் கிடந்த தங்கச்சங்கிலியை பறித்துச் சென்றான்.

    இதுகுறித்து அண்ணாநகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


    வீடு புகுந்து தூங்கி கொண்டிருந்த பெண்ணிடம் மர்ம நபர்கள் நகையை பறித்து சென்ற சம்பவம் அந்த பகுதி பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    கள்ளகுறிச்சி:

    விழுப்புரம் மாவட்டம் கள்ளகுறிச்சி அருகே உள்ள புது உச்சிமேடு பகுதியை சேர்ந்தவர் செல்வம் விவசாயி. இவரது மனைவி அலமேலு(வயது23). இவர்களுக்கு திருமணமாகி 2 வருடங்கள் ஆகிறது. இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது.

    இந்த நிலையில் நேற்று சொந்த வேலை காரணமாக செல்வம் வெளியூருக்கு சென்று விட்டார்.

    அலமேலு தனது குழந்தையுடன் வீட்டில் தனியாக இருந்தார். நேற்று இரவு உணவை முடித்து விட்டு அலமேலு அவரது குழந்தையுடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார்.

    இதை நோட்டமிட்ட மர்மமனிதர்கள் சிலர் நள்ளிரவில் அலமேலுவின் வீட்டிற்குள் புகுந்தனர்.

    பின்னர் அவர்கள் அயர்ந்து தூங்கி கொண்டிருந்த அலமேலுவின் கழுத்தில் கிடந்த 6 பவுன் தங்க சங்கலியை பறித்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். சிறிது நேரத்திற்கு பிறகு அலமேலுவின் குழந்தை கதறி அழுதது.

    இந்த சத்தம் கேட்டு அலமேலு கண் விழித்தார். அழுது கொண்டிருந்த குழந்தையை சமதான படுத்தினர். அப்போது அவர் தனது கழுத்தில் கிடந்த தங்க சங்கிலியை பார்த்தார். அதை காணவில்லை. அப்போது தான் சங்கிலி திருடு போயிருப்பது அலமேலுவுக்கு தெரிய வந்தது.

    பின்னர் அவர் திருடன்...திருடன்...என அலறினார் . அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு வந்தனர். அவர்களிடம் நகை திருடு போன சம்பவத்தை கூறினார்.

    உடனே அந்த பகுதி பொதுமக்கள் திருடர்களை அந்த பகுதியில் தேடி பார்த்தனர். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை. மர்ம மனிதர்கள் திருடி சென்ற நகையின் மதிப்பு ரூ1½ லட்சம் ஆகும்.

    இது குறித்து வரஞ்சரம் போலீசில் அலமேலு புகார் செய்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் நாகமுத்து வழக்கு பதிவு செய்து நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம மனிதர்களை வலை வீசி தேடி வருகிறார்.

    பெரியார் பல்கலைக்கழக ஊழியர் வீட்டில் 10 பவுன் நகை, ரூ.80 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சேலம்:

    சேலம் மாவட்டம் மல்லூர் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் பொன்னுவேல். பெரியார் பல்கலைக்கழக ஊழியர். இவரது மனைவி சுதா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

    இந்த நிலையில் 2-வது குழந்தையான ஹெம்ரிஸ்சின் (வயது 2) இடுப்பு பகுதியில் ஒரு கட்டி உள்ளதால் சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள ஒரு ஆஸ்பத்திரிக்கு அடிக்கடி வந்து சென்றனர்.

    வழக்கம் போல கடந்த 7-ந் தேதி பென்னுவேல்-சுதா தம்பதியினர் தனது குழந்தைகளை அழைத்து கொண்டு சேலத்தில் உள்ள அந்த ஆஸ்பத்திரிக்கு வந்தனர். கடந்த 3 நாட்களாக தங்கியிருந்து குழந்தைக்கு சிகிச்சை பெற்ற அவர்கள் நேற்றிரவு மீண்டும் வீடு திரும்பினர்.

    அப்போது வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது வீட்டின் கூரை பிரிக்கப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டினுள் இருந்த பீரோவை திறந்து பார்த்தபோது அங்கிருந்த 10 பவுன் நகை மற்றும் ரூ.80 ஆயிரம் பணமும் மாயமாகி இருந்தது. கூரையை பிரித்து உள்ளே இறங்கிய மர்ம நபர்கள் அங்கிருந்த பணம்-நகையை கொள்ளையடித்து சென்றதை அறிந்த பொன்னுவேல் மல்லூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கூரையை பிரித்து வீட்டில் கொள்ளையடித்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.

    குழந்தை ஹேம்ரிஸ்சுக்கு சிகிச்சைக்காக சீட்டு எடுத்து வீட்டில் வைத்திருந்த பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றதால் குழந்தையின் சிகிச்சைக்கு பணம் இல்லாமல் பொன்னுவேல் தவித்து வருகிறார். எனவே கொள்ளையர்களை பிடித்து போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    நம் பெண்கள் உலகின் சமீபத்திய ஹாட் டாக். எப்படி அணிந்தோம் எனத் தெரியாத அளவுக்கு ஏகப்பட்ட வித்தியாசமான தோடுகள் அணிவகுக்கத் துவங்கியுள்ளன.
    நம் பெண்கள் உலகின் சமீபத்திய ஹாட் டாக். எப்படி அணிந்தோம் எனத் தெரியாத அளவுக்கு ஏகப்பட்ட வித்தியாசமான தோடுகள் அணிவகுக்கத் துவங்கியுள்ளன.

    டபுள் சைடட்

    ஒரு பக்கம் சிறியது, இன்னொரு பக்கம் பெரியதுமாக இரண்டு பந்துகள் இருக்கும். மேலும் இவை ஒரு பக்கம் பூ அல்லது கல் என மாறி மாறி வரும். அதாவது திருகாணிக்கு பதில் இரண்டு பக்கமும் தோடுகளாக போடும் விதம். இவை சாலையோர கடைகளிலேயே ரூ.30 துவங்கி ஆன்லைனில் ரூ.250க்கு 12 கலர் காம்போக்களாகவும் கிடைக்கின்றன. இவைகள் மிருகங்களாகவும் வருகின்றன.

    ஹக்கி

    பெயரே ஹக்கி(அரவணை). காது மடலை அரவணைத்தபடி இருக்கும். சிறிய வகை வளையம், இதயம், சதுரம், அறுங்கோணம், ஸ்டார் வடிவ காதணிகள். இவை நம்மூர் கல்லூரிப் பெண்கள் தங்கத்தில் இரண்டாவது தோடாகவும் அணிவதைப் பார்க்கலாம். சிலவகை இதில் சின்ன செயின் ட்ராப்களும் இருக்கும். இவைகள் பிளாஸ்டிக் துவங்கி தங்கம், பிளாட்டினம், வைரம் வரையென பல விலைகளில் உண்டு. இவைகளை நயன்தாரா அடிக்கடி அணிவதைப் பார்க்கலாம்.

    பார்பெல்

    பார்ப்பதற்கு சிறிய அளவிலான ஜிம்மில் தூக்கப்படும் வெயிட் போல் இருக்கும். ஒரு சிலவகை நீளமான மேல்புற காது மடல்களை இணைக்கும்படியும் இருக்கும். இதற்கென காதில் பல துளைகளைப் போட்டுக்கொள்ளும் இளசுகளும் உண்டு. இவை ஆண்களாலும் அணியப்படும் காதணி வகை. இவைகள் சாதார ணமாகவே ஃபேன்ஸி கடைகளிலேயே ரூ.10 முதல் கிடைக்கிறது.



    பேக் ஸ்டட்

    முன்பக்கம் சின்ன ஸ்டட் மட்டுமே இருக்கும். பின்பக்கம் பெரிய அளவிலான பூக்கள். அல்லது வரிசையான கற்கள் என பார்க்க காது மடலை பின்பக்கத்திலிருந்து விரித்துப் பிடித்திருப்பது போல் இருக்கும். இவைகள் ரூ.100 முதல் தரத்திற்கு ஏற்ப ஆன்லைனில் கிடைக்கிறது.

    இயர் த்ரெட்

    காதில் மெல்லிய செயினில் சின்ன கல் அல்லது வளையம் தொங்கும். பார்க்க நூலை காதில் இரண்டு பக்கமாக தொங்கும்படி அணிந்திருப்பது போல் தோற்றம் கொடுக்கும். ரூ.200 முதல் ஆன்லைன் மற்றும் மால் கடைகளில் வாங்கலாம்.

    இயர் ஸ்பைக்

    காதுகளில் கூர்மையாக ஒன்றோ அதற்கு மேலோ என அப்படியே நிற்கும் படி அணியும் தோடுகள். ‘இருமுகன்’ படத்தில் ‘கண்ணை விட்டு’ பாடலில் நயன்தாரா அணிந்திருக்கும் மற்றுமொரு தோடு. இவைத் தவிர ‘டேங்லர்’ எனப்படும் பெரிய அளவிலான தொங்கும் தோடு, ‘இயர் கஃப்’ எனப்படும் காதுகளை கவ்விப் பிடித்துக்கொள்ளும் வகை. ‘ஸ்டட்’, ‘ட்ராப்ஸ்’, ‘ஹூப்’ தோடுகள் என தினந்தோறும் பயன்படுத்தும் வகைகளும் உண்டு.

    ஸ்லேவ்

    ஸ்லேவ்(அடிமை).அடிமைப் போல் தோடு ஒரு சங்கிலியுடன் காது மடலுடன் இணைக்கப்பட்டிருக்கும். இவை மாட்டலாக முடியுடன் அணியும் வகையிலிருந்து வந்த லேட்டஸ்ட் ரகம். இவைகள் கொஞ்சம் விலை அதிகம். ரூ.400 முதல் ஆரம்பம்.

    புட்லூரில் வீட்டுக்குள் புகுந்த கொள்ளை கும்பலுக்கு நகை-பணம் சிக்காததால் ஆத்திரத்தில் வீட்டை தீ வைத்து எரித்து சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருவள்ளூர்:

    திருவள்ளூரை அடுத்த புட்லூர் உல்லாசம் நகரைச் சேர்ந்தவர் பிரபாகர். சென்னை ரெயில்வேயில் சட்டப்பிரிவில் பணியாற்றி வருகிறார்.

    நேற்று காலை அவர் வழக்கம் போல் வேலைக்கு சென்றார். அவரது மனைவி வீட்டை பூட்டி விட்டு வில்லிவாக்கத்தில் உள்ள தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.

    மாலையில் பிரபாகர் திரும்பி வந்தபோது வீட்டு பூட்டு உடைந்து கிடந்தது. பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த ஆவணங்கள் கிழித்து வீசப்பட்டு கிடந்தன.



    மேலும் பொருட்களை குவித்து வைத்து வீட்டுக்கு தீ வைத்து எரித்து இருந்தனர். தீ பெரிய அளவில் பிடிக்காமல் உடனடியாக அணைந்ததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

    வீட்டுக்குள் புகுந்த கொள்ளை கும்பலுக்கு நகை-பணம் சிக்காததால் ஆத்திரத்தில் வீட்டை தீ வைத்து எரித்து உள்ளனர்.

    இதையடுத்து அறையில் இருந்த டி.வி., 2 லேப்-டாப் மற்றும் மோட்டார்சைக்கிளை திருடி மர்ம கும்பல் தப்பி இருப்பது தெரிய வந்தது.

    வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம கும்பல் கைவரிசை காட்டி உள்ளனர். எனவே இதில் ஈடுபட்டது அதே பகுதியைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று தெரிகிறது.

    இதுகுறித்து செவ்வாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ரெயில்வே ஊழியர் வீட்டுக்கு கொள்ளை கும்பல் தீ வைத்த சம்பவம் புட்லூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews
    அவினாசி அருகே பனியன் தொழிலாளி வீட்டில் 25 பவுன் நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தையடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அவினாசி:

    நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர் வெள்ளத்துரை. இவர் தனது மனைவி மாதவியுடன் அவினாசி அருகே உள்ள ஏ.வி.டி லே அவுட் எக்ஸ்டன்சன் பகுதியில் தங்கி உள்ளார். அங்குள்ள பனியன் நிறுவனத்தில் வெள்ளத்துரை வேலை பார்த்து வருகிறார். நேற்று இவர் தனது சொந்த ஊரான நெல்லைக்கு சென்று விட்டார். அவரது மனைவி மாதவி உறவினர் வீட்டிற்கு சென்றார்.

    வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் காம்பவுண்டு சுவர் ஏறி குதித்து உள்ளே புகுந்தனர்.

    பின்னர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் பீரோவை திறந்து அதில் வைக்கப்பட்டு இருந்த 25 பவுன் நகை மற்றும் ரூ. 1 லட்சம் ரொக்கப் பணத்தை கொள்ளையடித்து சென்று விட்டனர். இன்று காலை வீட்டிற்கு திரும்பிய மாதவி நகை-பணம் கொள்ளை போய் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவினாசி போலீசில் புகார் செய்தார். போலீசார் அங்கு விரைந்து சென்றனர். மேலும் கைரேகை நிபுணர்களும் வந்து தடயங்களை சேகரித்தனர். கொள்ளையர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

    உத்தங்குடியில் வீடு புகுந்து நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகிறார்கள்.
    மதுரை:

    உத்தங்குடி வளர் நகரைச் சேர்ந்தவர் ஜெயகிருஷ்ணன் (வயது 51). மாட்டுத்தாவணியில் ஓட்டல் நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இரவு இவர் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார்.

    அப்போது பின்வாசல் வழியாக வீட்டுக்குள் நுழைந்த மர்ம நபர், பீரோவில் இருந்த பணம், 2 பவுன் நகை, 4 செல்போன்களை திருடிக் கொண்டு தப்பினான்.

    இது குறித்த புகாரின் பேரில் புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகிறார்கள்.

    மற்றொரு சம்பவம்...

    மதுரை தெற்குவெளி வீதியில் பட்டாணி கோவில் தெற்கு சந்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் (41). நேற்று இரவு இவர், தூங்கிக் கொண்டிருந்த போது வீட்டுக்குள் புகுந்த மர்ம வாலிபர் திருடுவதற்கு முயற்சி செய்துள்ளார்.

    சத்தம் கேட்டு விழித்த சுப்பிரமணியன் அந்த வாலிபரை கையும் களவுமாக பிடித்து தெற்குவாசல் போலீசில் ஒப்படைத்தார்.

    போலீஸ் விசாரணையில், அந்த வாலிபர் சிம்மக்கல் பச்சையா தெருவைச் சேர்ந்த மணிகண்டன் மகன் முத்துமணி (21) என்பது தெரியவந்தது. அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கீரைத்துறை தாயுமானவர் நகரைச் சேர்ந்த காளிமுத்து மகன் மணிகண்டன் (23). நேற்று இரவு இவர் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது சுப்பிரமணியபுரம் அரிஜன காலனியைச் சேர்ந்த மகாலிங்கம் மகன் திவாகரன் (20) என் பவர் வீட்டில் இருந்த 2 செல்போன்களை திருடினார்.

    இது குறித்து கீரைத்துறை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் திவாகரனை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    விருகம்பாக்கம் காளியம்மன் கோவில் அருகே வாலிபரிடம் மர்மநபர் நூதன முறையில் நகை, செல்போனை பறித்த சென்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பூந்தமல்லி:

    சென்னை வளசரவாக்கம் ஆழ்வார் திருநகர், லட்சுமி நகரைச் சேர்ந்தவர் தினேஷ்(வயது 19). நேற்று முன்தினம் இரவு கோயம்பேட்டில் இருந்து வீட்டுக்கு மோட்டார்சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். விருகம்பாக்கம் காளியம்மன் கோவில் அருகே சென்றபோது பின்னால் மற்றொரு மோட்டார்சைக்கிளில் வந்த மர்மநபர், தினேசை வழிமறித்து நிறுத்தினார்.

    பின்னர் அவர், தனது நண்பரை மோட்டார்சைக்கிளில் இடித்துவிட்டு வந்து விட்டதாக கூறி அதற்கு இழப்பீடு தரும்படிகேட்டு, தினேஷிடம் இருந்த 2 பவுன் நகை, செல்போனை பறித்துக்கொண்டார். மேலும் தனது நண்பரிடம் வந்து மன்னிப்பு கேட்கும்படி வற்புறுத்தி தனது மோட்டார் சைக்கிளில் தினேஷை ஏற்றிச்சென்றார்.

    சிறிது தூரம் சென்றதும் மோட்டார்சைக்கிளை நிறுத்திய மர்மநபர், தினேஷிடம் பணம் கொடுத்து மதுபானம் வாங்கி வரும்படி கூறினார். பயந்துபோன தினேஷூம் கடைக்கு சென்று மதுபானம் வாங்கி வந்தார்.

    அப்போது அந்த நபரை காணவில்லை. அதன்பிறகுதான் அந்த நபர் நூதன முறையில் தன்னிடம் இருந்து நகை, செல்போனை பறித்து சென்றது தினேஷூக்கு தெரியவந்தது. இதுபற்றி விருகம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். #tamilnews
    தேவதானப்பட்டியில் வீடு புகுந்து பீரோவை தூக்கி சென்று நகை, பணத்தை அள்ளி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    தேவதானப்பட்டி:

    தேனி மாவட்டம் தேவதானப்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் செல்லப்பாண்டி (வயது38). இவருக்கு திருமணம் ஆகி குழந்தைகள் உள்ளனர். இவருக்கு சொந்தமாக கொடைக்கானல் பள்ளங்கியில் விவசாய நிலம் உள்ளது.

    புயல் காரணமாக இவரது விளை நிலம் மற்றும் தோட்டத்து வீடு பாதிக்கப்பட்டால் அதனை சீரமைப்பதற்காக குடும்பத்துடன் அங்கே தங்கி இருந்தார்.

    இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் நேற்று இரவு செல்லப்பாண்டியின் வீட்டிற்குள் புகுந்தனர். பின்னர் பீரோவை தூக்கி அருகில் இருந்த தோட்டத்திற்குள் கொண்டு வந்தனர்.

    பீரோவை உடைத்து உள்ளே இருந்த 10 பவுன் நகை, ரூ.20 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்து விட்டு தப்பி சென்றனர். இன்று காலையில் தோட்டத்தில் பீரோ கிடந்ததை பார்த்து அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இது குறித்து தேவதானப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விசாரணையில் செல்லப்பாண்டி வீட்டில் கொள்ளை நடந்தது தெரிய வந்தது. இது குறித்து செல்லப்பாண்டிக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

    வீட்டிற்குள் புகுந்து பீரோவை தூக்கி சென்று நகை, பணத்தை கொள்ளையடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    நீடாமங்கலம் அருகே கோவில் பூட்டை உடைத்து உண்டியல் பணம் மற்றும் நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
    நீடாமங்கலம்:

    திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே பழைய நீடாமங்கலம் கிராமத்தில் பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலின் அர்ச்சகர் நேற்று காலை வழக்கம்போல் கோவிலுக்கு சென்றார். அப்போது கோவிலின் பின் பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கோவிலுக்குள் சென்று பார்த்தபோது உண்டியல் உடைக்கப்பட்டு, அதில் இருந்த பணம் மாயமாகி இருந்தது. மேலும் கோவிலுக்குள் 2 அம்மன் சிலைகளில் அணிவிக்கப்பட்டு இருந்த தங்க சங்கிலிகளை காணவில்லை.



    நள்ளிரவில் கோவிலின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தையும், அம்மன் சிலைகளுக்கு அணிவிக்கப் பட்டிருந்த நகைகளையும் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. நகைகளின் மதிப்பு என்ன? என்பது பற்றி தெரியவில்லை.

    இதுகுறித்து தகவல் அறிந்த நீடாமங்கலம் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், தனிப்பிரிவு ஏட்டு கமலநாதன் மற்றும் போலீசார் கோவிலுக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். இதுதொடர்பாக பழையநீடாமங்கலம் கிராம தலைவர் பரமசிவம் அளித்த புகாரின் பேரில் நீடாமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவிலின் பூட்டை உடைத்து உண்டியல் பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
    மாதவரத்தில் முனுசாமி நகரில் வசித்து வரும் ரவி நாராயணன் என்பவருடைய வீட்டில் இருந்த நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மாதவரம்:

    மாதவரம் பொன்னியம்மன் மேடு முனுசாமி நகரில் வசித்து வருபவர் ரவி நாராயணன். இவர் வீட்டினை பூட்டி விட்டு அருகில் உள்ள மகளின் வீட்டுக்கு சென்றார். பின்னர் திரும்பி வந்தபோது வீட்டில் இருந்த 24 பவுன் நகை மற்றும் ரூ.10 ஆயிரம் ஒரு வெள்ளி குத்து விளக்கு திருட்டு போய் இருந்தது.

    இதுகுறித்து மாதவரம் போலீசில் புகார் செய்தார். கொள்ளையர்கள் பூட்டை உடைக்காமல் கள்ளச்சாவி மூலம் திறந்து உள்ளே சென்றார்களா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×