search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 118868"

    சூலூரில் பனியன் கம்பெனி அதிபர் வீட்டில் மர்ம ஆசாமிகள் புகுந்து 33 பவுன் தங்க நகை, ரூ.15 லட்சத்தை திருடி சென்றனர்.
    சூலூர்:

    கோவையை அடுத்த சூலூர் அருகே உள்ள சிந்தாமணிபுதூர் பகுதியில் உள்ள சத்ய நாராயணபுரம், வி.ஐ.பி. கார்டனை சேர்ந்தவர் பிரதீப் குமார் (வயது 44). திருப்பூரில் சொந்தமாக பனியன் கம்பெனி வைத்து நடத்தி வருகிறார். இவருடைய மனைவி சவிதா, கோவை பீளமேட்டில் தனியார் கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றி வருகிறார்.

    நேற்று முன்தினம் வழக்கம் போல் கணவன்-மனைவி இருவரும் பணிக்கு சென்றுவிட்டனர். இரவு 8 மணிக்கு வீட்டுக்கு திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் முன்புற கேட் மற்றும் வீட்டின் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.

    இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் வீட்டின் உள்ளே சென்று பார்த்தனர். அப்போது வீட்டில் வைத்து இருந்த பொருட்கள் ஆங்காங்கே சிதறி கிடந்தன. பீரோ உடைக்கப்பட்டு, அதில் வைத்து இருந்த 33 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.15 லட்சம் ஆகியவை திருட்டு போய் இருந்தது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த சூலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.

    பின்னர் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு வீட்டில் பதிவாகி இருந்த கைரேகைகளை சேகரித்த னர். துப்பறியும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது சிறிது தூரம் ஓடியது. ஆனால் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை.

    இந்த சம்பவம் குறித்து சூலூர் போலீசார் கூறியதாவது:- காலை முதல் இரவு வரை அந்த வீட்டில் யாரும் இருக்க மாட்டார்கள் என்று முன்கூட்டியே தெரிந்து கொண்ட மர்ம ஆசாமிகள் வீட்டின் பூட்டை உடைத்து பணம், நகையை கொள்ளையடித்து சென்று உள்ளனர். திருட்டு நடந்த வீட்டில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படவில்லை. இருப்பினும் அந்த வீட்டின் அருகே பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வருகிறோம். தப்பி ஓடிய குற்றவாளிகளை விரைவில் கைது செய்து விடுவோம். இவ்வாறு அவர்கள் கூறினார்கள். இந்த சம்பவம் குறித்து பொதுமக்கள் கூறுகையில், சூலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் திருட்டு, வழிப்பறி சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதனால் மாலை நேரங்களில் வீட்டை விட்டு செல்லவே அச்சமாக உள்ளது. எனவே சூலூர் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்க போலீசார் ரோந்து செல்ல வேண்டும் என்று கூறினார்கள்.

    கோவை சரவணம்பட்டி அம்மன் நகரை சேர்ந்தவர் பானுமதி (45). இவர் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் வெளியில் சென்று இருந்தார். திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைத்து இருந்த 15 பவுன் நகை, ரூ.3 லட்சத்தை மர்ம ஆசாமிகள் திருடி சென்றது தெரியவந்தது. இது குறித்து சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகிறார்கள். 
    வருகிற 12-ந்தேதி திருமணம் நடக்க உள்ள நிலையில் நகை, பணத்துடன் புதுப்பெண் மாயமான சம்பவம் குறித்து சப்-இன்ஸ்பெக்டர் ஞானரூபி பரிமளா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    கடையநல்லூர்:

    கடையநல்லூர் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் முப்பிடாதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வடிவேலு. இவரது மகள் கார்த்திகை ஜோதி. பட்டதாரி. இவருக்கும் சிவகாசி பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு வருகிற 12-ந்தேதி திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

    இதற்கான வேலைகள் நடைபெற்று வந்தன. இந் நிலையில் திருமண அழைப்பிதழை கொடுப்பதற்காக வடிவேலு குடும்பத்துடன் உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தார். அப்போது வீட்டில் கார்த்திகை ஜோதி மட்டும் இருந்தார். பின்னர் அழைப்பிதழை கொடுத்து விட்டு வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டில் கார்த்திகை ஜோதியை காணவில்லை.

    மேலும் வீட்டில் திருமணத்திற்காக வைக்கப்பட்டிருந்த 8 பவுன் நகைகள், ரூ.48 ஆயிரம் ரொக்கப்பணம் மற்றும் துணிமணிகள் ஆகியவையும் மாயமாகி இருந்தன. அக்கம்பக்கம் உள்ளிட்ட உறவினர் வீடுகளில் தேடியும் அவரை காணவில்லை.

    இதனால் அதிர்ச்சியடைந்த வடிவேலு இதுகுறித்து கடையநல்லூர் போலீசில் புகார் செய்தார். புகாரில் தனது மகளை குமந்தாபுரத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவரான செல்வம், அவரது மனைவி சிவகாமி, அவர்களது மகன் சூர்யா (23) ஆகியோர் சேர்ந்து கடத்தி உள்ளதாக தெரிகிறது என கூறியிருந்தார்.

    இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் ஞானரூபி பரிமளா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். திருமணத்திற்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் புதுப்பெண் கடத்தப்பட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    கல்பாக்கம் அணுமின் நிலைய பெண் விஞ்ஞானி வீட்டில் நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    மாமல்லபுரம்:

    கல்பாக்கம் அணுமின் நிலைய மின் உற்பத்தி பிரிவில் விஞ்ஞானியாக பணி புரிபவர் செல்வியா. கல்பாக்கம் நகரியத்தில் உள்ள அதிகாரிகள் குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

    நேற்று மாலை அவர் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் வெளியே சென்றார். இரவு திரும்பி வந்தபோது வீட்டின் பின்புறம் உள்ள ஜன்னல் உடைக்கப்பட்டு இருந்தது. மேலும் பீரோவில் இருந்த 30 பவுன் தங்க நகை, ரூ.75 ஆயிரம் கொள்ளை போய் இருப்பது தெரியவந்தது.

    கல்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அங்கு பதிவான கைரேகைகளை பதிவு செய்தனர். அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகிறார்கள்.

    வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்படவில்லை. அருகில் மறைத்து வைத்திருந்த சாவியை எடுத்து நகை-பணத்தை மர்மநபர்கள் சுருட்டி உள்ளனர். எனவே வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்ற நபர்கள் இதில் ஈடுபட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

    உயர் பாதுகாப்பில் உள்ள அணுமின் நிலைய அதிகாரிகள் குடியிருப்பில் கொள்ளை நடந்த சம்பவம் அங்கு வசிப்பவர்களிடையே அதிர்ச்சியை அளித்துள்ளது.

    திருச்சி நெ.1 டோல்கேட் அருகே வீட்டு பூட்டை உடைத்து தங்கம்,வெள்ளி நகைகளை கொள்ளையடித்த மர்ம கும்பல் மேலும் 3 வீடுகளில் திருட முயற்சி செய்தனர்.
    திருச்சி:

    திருச்சி நெ.1 டோல்கேட் அருகே உள்ள கூத்தூர் கிராமம் குடிதெருவை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன், டிரைவராக பணியாற்றி வருகிறார். இவரது மகன் கண்ணன் (வயது 38).

    இவர் கம்பரசம்பேட்டையில் கூட்டு குடிநீர் திட்டத்தில் தற்காலிக ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி விட்டது. இவர்கள் அனைவரும் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர்.

    இந்நிலையில் நேற்று இரவு பாலகிருஷ்ணன் மற்றும் பணிக்கு கண்ணன் சென்று விட்டனர். கண்ணனின் மனைவி தனியாக இருக்க பயந்து வீட்டை பூட்டி விட்டு அருகில் உள்ள உறவினர் வீட்டில் தூங்கினார்.

    இதை அறிந்த மர்ம நபர்கள் கண்ணனின் வீட்டு பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து பீரோவை உடைத்து அதில் இருந்த 15 பவுன் நகைகள், 1 கிலோ வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர்.

    கொள்ளைபோன தங்கம் மற்றும் வெள்ளி நகை, பொருட்களின் மதிப்பு ரூ.3 லட்சத்து 60 ஆயிரம் இருக்கும் என கூறப்படுகிறது.

    இது குறித்து தகவல் அறிந்ததும் கொள்ளிடம் நெ.1 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்களும் வந்து ரேகையை பதிவு செய்தனர்.

    முதல்கட்ட விசாரணையில் கண்ணனின் வீடுபூட்டி கிடைப்பதை அறிந்த மர்ம நபர்கள் வீட்டு பூட்டை உடைத்து நகையை கொள்ளையடித்து உள்ளனர். மேலும் கொள்ளைபோன வீட்டின் அருகே உள்ள 3 வீடுகளில் பூட்டையும் உடைத்து உள்ளே நுழைந்துள்ளனர். அங்கு எதுவும் கிடைக்காததால் திரும்பி சென்று உள்ளனர் என தெரிய வந்தது.

    இது குறித்து கொள்ளிடம் நெ.1 போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். #tamilnews
    ஆரோவில் அருகே பெண்ணிடம் 5 பவுன் சங்கிலியை பறித்துச்சென்ற வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். #JewelleryTheft
    விழுப்புரம்:

    வானூர் தாலுகா ராவுத்தன்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்தராஜ். இவருடைய மனைவி விஜயகுமாரி (வயது 28). இவர்களுடைய மகன் விமல் (5) ஆரோவில் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்து வருகிறான்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை சிறுவன் விமலை பள்ளியில் இருந்து வீட்டிற்கு அழைத்து வருவதற்காக விஜயகுமாரி தனது மாமனார் கோவிந்தராஜியுடன் மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார்.

    பள்ளியின் அருகே வந்தபோது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் திடீரென விஜயகுமாரி கழுத்தில் கிடந்த 5 பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச்சென்று விட்டார். பறிபோன நகையின் மதிப்பு ரூ.1 லட்சமாகும்.

    இதுகுறித்து விஜயகுமாரி, ஆரோவில் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை பறித்துச்சென்ற வாலிபரை வலைவீசி தேடி வருகின்றனர். 
    நெய்வேலியில் ஓய்வு பெற்ற என்.எல்.சி. தொழிலாளி வீட்டில் ரூ.4 லட்சம் நகையை மர்ம மனிதர்கள் கொள்ளையடித்து சென்றுவிட்டனர்.
    நெய்வேலி:

    நெய்வேலி அருகே உள்ள தில்லை நகர் அண்ணாசாலை பகுதியில் குடியிருப்பவர் முருகேசன்(வயது 62). ஓய்வு பெற்ற என்.எல்.சி. தொழிலாளி. இவருடைய மகன் சென்னையில் வசித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 4-ந்தேதி தனது மகன் வீட்டுக்கு முருகேசன் தனது மனைவியுடன் சென்னைக்கு சென்றார். அதே பகுதியை சேர்ந்த இவருடைய உறவினர் ரங்கநாதன் என்பவர், தினசரி மாலை நேரத்தில் முருகேசனின் வீட்டுக்கு வந்து மின்விளக்கு போட்டு செல்வார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று முருகேசனின் வீட்டில் மின்விளக்கை போடுவதற்கு ரங்கநாதன் வரவில்லை. இதை தொடர்ந்து மறுநாள், ரங்கநாதன் வந்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், உடனடியாக செல்போன் மூலம் முருகேசனுக்கு தகவல் தெரிவித்தார்.

    இதையடுத்து சென்னையில் இருந்து முருகேசன் வீடு திரும்பினார். தொடர்ந்து அவர் வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது, அங்கிருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 18 பவுன் நகை, ½ கிலோ வெள்ளி பொருட்கள், வங்கி ஏ.டி.எம். கார்டுகள் ஆகியவற்றை காணவில்லை. இதன் மூலம் வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட மர்ம மனிதர்கள், கதவு பூட்டை உடைத்து நகையை கொள்ளையடித்து சென்று இருப்பது தெரியவந்தது.

    இதுபற்றி தகவல் அறிந்த டவுன்ஷிப் போலீசார் நேரில் வந்து விசாரித்தனர். மேலும் கைரேகை நிபுணர்கள் நேரில் வந்து, கொள்ளை நடந்த வீட்டில் இருந்த கைரேகையை பதிவு செய்து சென்றனர்.

    கொள்ளைபோன பொருட் களின் மதிப்பு ரூ.4 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்ம மனிதர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 
    ஆண்டிமடம் அருகே தனியார் பள்ளி ஆசிரியர் வீட்டில் நகை-பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
    வரதராஜன்பேட்டை:

    அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள அண்ணா தெருவை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ் (வயது 36). இவர் ஆண்டிமடத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு வேல்விழி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு ஜெயபிரகாஷ் குடும்பத்தினருடன் உறங்கி கொண்டிருந்தார். பின்னர் காலையில் வழக்கம் போல் வேல்விழி எழுந்து பார்த்த போது வீட்டின் பின் பக்க கதவு திறந்து கிடந்தது. மேலும் வீட்டின் உள்ளே உள்ள மற்றொரு அறையில் இருந்த பீரோவும் திறந்து கிடந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 5 பவுன் தங்க நகை, வெள்ளி கொலுசு, ரூ.1,000-த்தை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

    இதேபோல் அதே தெருவில் ஜெயபிரகாஷ் பக்கத்து வீட்டில் உள்ள பத்மநாபன், சகுந்தலா ஆகியோரின் வீடுகளிலும் பின் பக்க கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்மநபர்கள் பீரோவை திறந்து நகைகளை திருட முயற்சி செய்துள்ளனர். ஆனால் வீட்டில் நகைகள் ஒன்றும் இல்லாததால் ஏமாற்றத்துடன் மர்மநபர்கள் திரும்பி சென்றுள்ளனர்.

    இதுகுறித்து ஜெயபிரகாஷ் ஆண்டிமடம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் நித்யா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை, பணத்தை திருடி சென்ற மர்மநபர்களை வலை வீசி தேடி வருகின்றனர். 
    முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் வீட்டில் நகை-பணம் திருட்டு போய்விட்டது. இதுதொடர்பாக வீட்டில் வேலை பார்த்த 2 பெண்களை போலீசார் பிடித்து விசாரித்தனர்.
    சென்னை:

    முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் வீட்டில் நகை-பணம் திருட்டு போய்விட்டது. இதுதொடர்பாக வீட்டில் வேலை பார்த்த 2 பெண்களை போலீசார் பிடித்து விசாரித்தனர். ஆனால் போலீசில் கொடுத்த புகாரை திடீர் என வாபஸ் பெற்றுவிட்டனர்.

    முன்னாள் மத்திய மந்திரியும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரத்தின் வீடு சென்னை நுங்கம்பாக்கம் பைகிராப்ட்ஸ் கார்டன் சாலை பகுதியில் உள்ளது. இங்கு ப.சிதம்பரம், அவரது மனைவி நளினி சிதம்பரம், மகன் கார்த்தி சிதம்பரம், மருமகள் ஸ்ரீநிதி ஆகியோர் வசிக்கின்றனர். ப.சிதம்பரம் வீட்டில் திருட்டு போய்விட்டதாக, அவரது மேலாளர் முரளி நேற்று முன்தினம் ஆயிரம்விளக்கு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

    புகாரில், ப.சிதம்பரம் வீட்டு பீரோவில் வைக்கப்பட்டிருந்த சில தங்க நகைகள், ஒரு தங்கக்காசு, 6 பட்டு புடவைகள் மற்றும் ரூ.1.5 லட்சம் ரொக்கப்பணம் திருட்டு போய்விட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை துணியால் மூடி மறைத்துள்ளதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த புகார் தொடர்பாக நுங்கம்பாக்கம் உதவி கமிஷனர் முத்துவேல்பாண்டி மேற்பார்வையில் ஆயிரம்விளக்கு குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

    இந்த திருட்டு வழக்கில், ப.சிதம்பரம் வீட்டில் கடந்த 10 ஆண்டுகளாக தங்கி வீட்டு வேலை பார்க்கும் பெண்கள் வெண்ணிலா, விஜி ஆகியோருக்கு தொடர்பு இருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. வெண்ணிலா, விஜி ஆகியோர் உடன்பிறந்த சகோதரி ஆவார்கள். அவர்கள் இருவரையும் பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில், நகைகள் மற்றும் பொருட்கள் திருடிய குற்றத்தை வெண்ணிலா, விஜி ஆகியோர் ஒப்புக்கொண்டதாக தெரிகிறது. திருட்டு போன நகை மற்றும் பொருட்களை தியாகராயநகரில் உள்ள ஒரு வீட்டில் மறைத்து வைத்திருப்பதும் கண்டறியப்பட்டது. அவற்றை மீட்கும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்.

    இந்தநிலையில் நேற்று பிற்பகலில் ப.சிதம்பரத்தின் மேலாளர் முரளி தான் கொடுத்த புகாரை வாபஸ் பெற்றுக்கொள்வதாக எழுத்துப்பூர்வமாக தெரிவித்தார். இதனால் இந்த வழக்கில் மேல் நடவடிக்கை எதுவும் எடுக்கப்பட மாட்டாது என்றும், வழக்கு முடித்து வைக்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்தனர். 
    திருமானூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகை-ரூ.10 ஆயிரம் பணத்தை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    திருமானூர்:

    அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே உள்ள காரைபாக்கம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பாலு (வயது 55). இவரது மனைவி கிருஷ்ணவேணி (வயது 40). இந்த தம்பதியினர் அதே பகுதியில் புதிதாக வீடு கட்டி வசித்து வருகின்றனர். நெசவுத்தொழிலாளியான பாலு தற்போது நெசவுத்தொழில் நலிவடைந்ததால் தனது மகளுடன் சென்னையில் தங்கி அங்குள்ள ஜவுளிக்கடை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு பாலு சொந்த ஊருக்கு வந்து இருந்தார். இந்நிலையில் கடந்த 4-ந்தேதி பாலு வீட்டை பூட்டிவிட்டு மனைவி கிருஷ்ணவேணியுடன் ஆடுதுறையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார். இந்நிலையில் நேற்று பாலுவின் வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.

    இதனை கண்ட அக்கம், பக்கத்தினர் இது குறித்து பாலுவுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் வீட்டுக்கு பாலு தனது மனைவியுடன் வந்தார். பின்னர் அவர்கள் வீட்டின் உள்ளே சென்று பார்த்தனர். அப்போது பீரோவில் இருந்த துணிகள் சிதறிக்கிடந்தது. மேலும் பீரோவில் இருந்த 10 பவுன் நகைகள், ரூ.10 ஆயிரம் திருடு போயிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பாலு குடும்பத்தினர் வெளியூர் சென்றதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து, பீரோவில் இருந்த நகைகள், பணத்தை திருடி சென்றது தெரிய வந்தது.

    இது குறித்த புகாரின் பேரில் திருமானூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து திருட்டில் ஈடுபட்ட மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். 
    வேப்பனப்பள்ளி அருகே விவசாயி வீட்டில் புகுந்து கத்திமுனையில் மிரட்டி நகை, பணம் மற்றும் செல்போன்கள் கொள்ளையடித்தது தொடர்பாக வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    வேப்பனப்பள்ளி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள அலேகிருஷ்ணபுரம் கிராமத்தை சேர்ந்தவர் அஸ்வத் நாராயணன். விவசாயி. இவரது வீட்டில் கடந்த 9-ந்தேதி மர்ம நபர்கள் 4 பேர் புகுந்து கத்திமுனையில் மிரட்டி நகை, பணம் மற்றும் செல்போன்கள் கொள்ளையடித்து சென்றனர். இந்த சம்பவம் குறித்து அஸ்வத் நாராயணன் வேப்பனப்பள்ளி போலீசில் புகார் செய்தார்.

    அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிராபவதி, சப்-இன்ஸ்பெக்டர் அறிவழகன் ஆகியோர் வழக்குப் பதிவு செய்து மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில் அதே பகுதியை சேர்ந்த ராமசாமி மகன் தங்கவேல் (வயது 22) என்பவர் தனது நண்பர்கள் 3 பேருடன் சேர்ந்து இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் தங்கவேலை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து ரூ.60 ஆயிரம், 8 பவுன் நகை மற்றும் 3 செல்போன்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள தங்கவேலின் நண்பர்கள் 3 பேரை போலிசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    காரைக்குடியில் ஒரு மணி நேரத்திற்குள் 3 பெண்களிடம் 34 பவுன் நகை பறிப்பு சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் ஒரே கும்பலைச் சேர்ந்த 3 நபர்கள் ஈடுபட்டது கண்காணிப்பு கேமரா மூலம் அம்பலமாகி உள்ளது.
    காரைக்குடி:

    காரைக்குடியில் ஒரு மணி நேரத்திற்குள் 3 பெண்களிடம் 34 பவுன் நகை பறிப்பு சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் ஒரே கும்பலைச் சேர்ந்த 3 நபர்கள் ஈடுபட்டது கண்காணிப்பு கேமரா மூலம் அம்பலமாகி உள்ளது.

    காரைக்குடி ஹவுசிங் போர்டு பகுதியில் வசிப்பவர் வெற்றி. இவர் காரைக்குடி நகராட்சியில் எலக்ட்ரீசியனாக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ஜெயந்தி (வயது 40). இவர் தனது மகளுடன் காரைக்குடி கழனிவாசலுக்கு சென்று விட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பினார். அப்போது ஒரு மோட்டார்சைக்கிளில் பின்தொடர்ந்து வந்த 3 மர்ம நபர்கள், இருசக்கர வாகனத்தை உதைத்து கீழே தள்ளினர். அதில் கீழே விழுந்த ஜெயந்தியின் கழுத்தில் கிடந்த 15 பவுன் நகையை பறித்துக்கொண்டு தப்பியோடினர்.

    இதேபோல காரைக்குடி ஆறுமுகநகர் 5-வது வீதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். ஓய்வு பெற்ற நீதிபதி. இவரது மனைவி செல்வி (30). இருவரும் காரைக்குடி டவுனுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று விட்டு பெரியார் சிலை அருகே சென்றுகொண்டிருந்தனர். அப்போது மற்றொரு மோட்டார்சைக்கிளில் வந்த 3 மர்ம நபர்கள் செல்வியின் கழுத்தில் கிடந்த 8 பவுன் நகையை பறித்து சென்றுவிட்டனர்.

    காரைக்குடி கீழத்தெருவைச் சேர்ந்தவர் விக்னேஸ்வரி(25). இவர் முடியரசனார் சாலையில் உள்ள மருத்துவமனைக்கு சென்று விட்டு கண்டனூர் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 3 மர்ம நபர்கள் விக்னேஸ்வரியின் கழுத்தில் கிடந்த 11 பவுன் நகையை பறித்துக்கொண்டு தப்பியோடினர்.

    தொடர் சம்பவங்கள் குறித்து காரைக்குடி வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவம் நடைபெற்ற 3 இடங்களில் இருந்த கண்காணிப்பு கேமராவில் ஆய்வு செய்தனர். அப்போது 3 சம்பவங்களிலும் ஈடுபட்டது ஒரே கும்பலைச் சேர்ந்த 3 பேர் என்று தெரியவந்தது. சம்பவம் நேற்று முன்தினம் இரவு 7.30 மணி முதல் 8.30 மணிக்குள் நடந்துள்ளது. ஒருமணி நேரத்திற்குள் 3 பெண்களிடம் 34 பவுன் சங்கிலி பறிப்பு சம்பவம் நடைபெற்றுள்ளதால் காரைக்குடியில் வெளியே செல்லும் பெண்கள் பெரிதும் அச்சமடைந்துள்ளனர்.

    மேலும் காரைக்குடி குற்றப்பிரிவு போலீசில் பணியாற்றிய அனுபவம் வாய்ந்த போலீசார் பல்வேறு பிரிவிற்கு மாறுதலாகி விட்டதால் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்துள்ளது. எனவே குற்றப்பிரிவு போலீஸ் ரோந்து பணியை அதிகரிக்க வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரனுக்கு காரைக்குடி பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
    பண்ருட்டி அருகே திருமண வீட்டில் ரூ.2 லட்சம் நகை-பணத்தை கொள்ளையடித்த மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    புதுப்பேட்டை:

    பண்ருட்டி அருகே திருமண வீட்டில் ரூ.2 லட்சம் நகை-பணத்தை கொள்ளையடித்த மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

    புதுப்பேட்டை அருகே மணப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன் (வயது 58). கொத்தனார். இவருடைய மகன் தாமோதரன். இவர் கோவையில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் தாமோதரனுக்கும், அதே பகுதியை சேர்ந்த பெண்ணுக்கும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி இவர்களது திருமணம் நேற்று முன்தினம் திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோவிலில் நடைபெற்றது. பின்னர் மாலை பண்ருட்டியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதையொட்டி கண்ணன் தனது வீட்டை நேற்று முன்தினம் அதிகாலை பூட்டிவிட்டு குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் திருமண நிகழ்ச்சியில் மும்முரமாக இருந்தார். இந்த நிலையில் திருமண வீடு பூட்டி கிடப்பதை நோட்டமிட்ட மர்மநபர்கள், வீட்டின் பின்பக்க கதவை உடைத்து நைசாக உள்ளே புகுந்தனர். பின்னர், அவர்கள் வீட்டில் இருந்த 5½ பவுன் நகைகள், ரூ.70 ஆயிரம் ரொக்கத்தை கொள்ளையடித்து சென்றனர். இந்த நிலையில் இரவு 10.30 மணிக்கு மேல் கண்ணன் தனது குடும்பத்தினர் மற்றும் புதுமண தம்பதியை அழைத்து கொண்டு வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் பின்பக்க கதவு திறந்து கிடந்தது. இதில் அதிர்ச்சியடைந்த அவர் வீட்டிற்குள் சென்று பார்த்த போது நகை-பணம் கொள்ளை போனது தெரியவந்தது. இதன் மொத்த மதிப்பு ரூ.2 லட்சம் ஆகும்.

    திருமண வீட்டில் நகை-பணம் கொள்ளை போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது பற்றி புதுப்பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன், சப்-இன்ஸ்பெக்டர்கள் பழனிவேல், செல்வம் ஆகியோர் நேரில் வந்து விசாரணை நடத்தினர்.

    மேலும் இது தொடர்பான புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து நகை-பணத்தை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். 
    ×