search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெங்களூர்"

    பாராளுமன்ற தேர்தலையொட்டி உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடத்திய வாகன சோதனையில் 3 மூட்டை குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. #LSPolls

    கோவை:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி விஜய லலிதாம்பிகை தலைமையிலான அதிகாரிகள் அதிகாலை 3 மணியில் இருந்து வெளியூரில் இருந்து கோவைக்கு வரும் ஆம்னி பஸ்களில் காந்திபுரம், நவ இந்தியா, ஆவாரம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் அதிரடி சோதனை நடத்தினர்.

    அப்போது பெங்களூரில் இருந்து கோவைக்கு வந்த ஆம்னி பஸ்சில் காய்கறி பொருட்களுக்கு நடுவே 3 மூட்டைகளில் 150 கிலோ எடையுள்ள தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்தி வந்தது தெரிய வந்தது. இதனையடுத்து அதிகாரிகள் அந்த 3 மூட்டை புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ. 1 லட்சம் என தெரிய வந்தது.மேலும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்தி வந்த ஆம்னி பஸ்சையும் பறிமுதல் செய்தனர்.

    புகையிலை பொருட்களை எடுக்க வந்த மர்மநபர்கள் அதிகாரிகள் சோதனையிடுவதை அறிந்து தப்பி ஓடிவிட்டனர். அவர்களையும் அதிகாரிகள் தேடி வருகிறார்கள். #LSPolls

    கர்நாடக மாநிலம் பெங்களூருவில் முன்னாள் பிரதமர் தேவேகவுடாவை ஆந்திரப்பிரதேசம் முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு இன்று சந்தித்து பேசினார். #ChandrababuNaidu #Devegowda #Kumaraswamy
    பெங்களூர்:

    ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கவில்லை என்று கூறி பா.ஜனதா கூட்டணியில் இருந்து ஆந்திர முதல்-மந்திரியும், தெலுங்கு தேச தலைவருமான சந்திரபாபு நாயுடு விலகினார்.

    அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து மிகப்பெரிய கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் சந்திரபாபு நாயுடு ஈடுபட்டுள்ளார்.

    அதன்படி அவர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சமீபத்தில் சந்தித்து பேசினார். மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக்அப்துல்லா, சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம்சிங் யாதவ் ஆகியோரையும் சந்தித்தார்.

    ஏற்கனவே பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி, ஆம் ஆத்மிதலைவர் கெஜ்ரிவால், சரத்யாதவ் ஆகியோரையும் சந்தித்து இருந்தார்.

    இந்நிலையில் சந்திரபாபு நாயுடு இன்று மாலை முன்னாள் பிரதமரும், மதச்சார்பற்ற ஜனதா தள தலைவருமான தேவேகவுடாவை சந்தித்தார்.

    பத்மநாபா நகரில் உள்ள தேவேகவுடா வீட்டில் இந்த சந்திப்பு நடைபெற்றது. அவரது மகனும் கர்நாடகா முதல்- மந்திரியுமான குமாரசாமியும் அப்போது உடன் இருந்தார். இதை மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி தெரிவித்து உள்ளது.

    கர்நாடகாவில் காங்கிரஸ்- மதசார்பற்ற ஜனதா தள கூட்டணி ஆட்சி நடை பெற்று வருகிறது. சமீபத்தில் நடந்த இடைத்தேர்தலில் இந்த கூட்டணி 4 தொகுதிகளில் வெற்றி பெற்றது. பாஜக ஒரே ஒரு தொகுதியை மட்டுமே கைப்பற்றியது. #ChandrababuNaidu #Devegowda #Kumaraswamy
    ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியை ஏமாற்றத்துடன் தொடங்கி உள்ள சென்னையின் எப்.சி. அணி தனது முதல் லீக்கில் பெங்களூருவிடம் வீழ்ந்தது. #ISL2018 #BangaluruFC #ChennaiyinFC
    பெங்களூரு:

    5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் சென்னையின் எப்.சி., பெங்களூரு எப்.சி., நார்த் ஈஸ்ட் யுனைடெட் (கவுகாத்தி), எப்.சி.கோவா, மும்பை சிட்டி, ஜாம்ஷெட்பூர், அட்லெடிகோ டி கொல்கத்தா, கேரளா பிளாஸ்டர்ஸ், டெல்லி டைனமோஸ், புனே சிட்டி ஆகிய 10 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் உள்ளூர், வெளியூர் அடிப்படையில் 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்குள் நுழையும்.



    இந்த நிலையில் பெங்களூருவில் நேற்றிரவு நடந்த 2-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னையின் எப்.சி. அணி, பெங்களூரு எப்.சி.யை சந்தித்தது. இரு அணிகளும் தொடக்கத்தில் இருந்தே தாக்குதல் பாணியை கடைபிடித்தன. 19-வது நிமிடத்தில் சென்னை அணியின் நட்சத்திர வீரர் ஜெஜெ லால்பெகுலா பந்துடன் இலக்கை வெகுவாக நெருங்கினார். அவர் தைரியமாக வலையை நோக்கி பந்தை உதைத்திருக்க வேண்டும். அதை விடுத்து கம்பம் அருகில் நின்ற சக வீரர் ஜெர்மன்பிரீத்சிங் நோக்கி அடிக்க, பந்து வெளியே ஓடி வாய்ப்பு வீணானது. இதே போல் 33-வது நிமிடத்தில் மற்றொரு வாய்ப்பையும் லால்பெகுலா நழுவ விட்டார்.

    41-வது நிமிடத்தில் பெங்களூரு அணி கோல் போட்டு உள்ளூர் ரசிகர்களை குதூகலப்படுத்தியது. சக வீரர் ஸிஸ்கோ தட்டிக்கொடுத்த பந்தை, மிகு சூப்பராக அடித்து கோலாக்கினார். இதனால் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்ற பெங்களூரு அணி அதை கடைசி வரை தக்க வைத்துக் கொண்டது.

    பந்து அதிக நேரம் (56 சதவீதம்) சென்னை வீரர்கள் வசமே சுற்றிக்கொண்டிருந்தது. ஷாட்டுகள் அடிப்பதிலும் எதிரணியை விட (9 முறை) சென்னையின் கையே ஓங்கி இருந்தது. ஆனால் பதில் கோல் திருப்ப எடுத்த முயற்சிக்கு பலன் கிட்டவில்லை. விறுவிறுப்பான ஆட்டத்தின் முடிவில் பெங்களூரு அணி 1-0 என்ற கோல் கணக்கில் சென்னை அணியை தோற்கடித்தது. இதன் மூலம் கடந்த ஆண்டு இறுதி ஆட்டத்தில் சென்னையிடம் அடைந்த தோல்விக்கும் அந்த அணி பழிதீர்த்துக் கொண்டது.

    கவுகாத்தியில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கும் 3-வது லீக் ஆட்டத்தில் கவுகாத்தி- கோவா அணிகள் மோதுகின்றன.  #ISL2018 #BangaluruFC #ChennaiyinFC
    பெங்களூரில் விமான நிலையத்துக்கு சென்ற பெண்ணை மானபங்கப்படுத்திய கார் டிரைவரை போலீசார் கைது செய்தனர். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    பெங்களூர்:

    பெங்களூரை சேர்ந்த கட்டிட கலை வடிவமைப்பாளரான 26 வயது பெண் கடந்த 1-ந் தேதி மும்பை புறப்பட்டார்.

    அதிகாலை 2 மணி அளவில் அவர் வாடகை காரில் விமான நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

    ஆனால் திடீரென கார் டிரைவர் மாற்றுப் பாதையில் அழைத்து சென்றார். அப்போது அந்த பெண் இது குறித்து கேட்ட போது மிரட்டினார். அந்த பெண்ணை காரில் கடத்தி சென்றார். பின்னர் தனது காரில் வைத்து மானபங்கப்படுத்தினார்.

    அதோடு அந்த பெண்ணின் ஆடையை கட்டாயமாக அவிழ்த்ததும் மிகவும் கொடூரமாக நடந்து கொண்டார். மேலும் படம் எடுக்க போஸ் கொடுக்குமாறும் கட்டாயப்படுத்தினார்.

    இதுகுறித்து புகார் கொடுத்தால் நண்பர்களுடன் சேர்ந்து கற்பழித்து விடுவோம் என்றும் மிரட்டினார்.

    அந்த பெண் மும்பை சென்றடைந்த பிறகு நடந்த சம்பவம் குறித்து பெங்களூர் போலீஸ் கமி‌ஷனருக்கு இமெயில் மூலம் புகார் அனுப்பினார். இந்த புகார் மனு ஜே.பி. நகர் போலீஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டது.

    இந்த புகாரின் அடிப்படையில் பெண்ணை மானபங்கப்படுத்திய வாடகை கார் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

    இது தொடர்பாக போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:-

    செல்போனில் படம் எடுப்பதற்காக குற்றவாளி அந்த பெண்ணின் ஆடையை அவிழ்க்குமாறு கட்டாயப்படுத்தினார். ஆனால் அந்த பெண் மறுத்தார். மிரட்டி படம் எடுத்து உள்ளார்.

    இவ்வாறு போலீஸ் அதிகாரி கூறியுள்ளார். #Tamilnews
    பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறும் ஆர்வத்தில் ராஜஸ்தான்- பெங்களூர் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றனர். மற்றொரு ஆட்டத்தில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ்- ஐதராபாத்துடன் மோதுகிறது. #IPL2018
    ஜெய்ப்பூர்:

    ஐ.பி.எல். போட்டியில் லீக் ஆட்டம் இறுதிகட்டத்தை எட்டி உள்ளது.

    சன்ரைசர்ஸ் ஐதராபாத் (18 புள்ளி), சென்னை சூப்பர் கிங்ஸ் (16 புள்ளி), ஆகிய 2 அணிகள் மட்டுமே ‘பிளேஆப்’ சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. எஞ்சிய 2 அணி எவை எவை என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (14 புள்ளி) மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், ராஜஸ்தான் ராயல்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் (தலா 12 புள்ளி) ஆகிய 5 அணிகள் இதற்கான போட்டியில் உள்ளன. டெல்லி டேர்டெவில்ஸ் (8 புள்ளி) ஏற்கனவே வாய்ப்பை இழந்துவிட்டது.

    இன்னும் 4 ஆட்டங்களே எஞ்சியுள்ளன. அதாவது 8 அணிக்கும் ஒரு ஆட்டமே உள்ளன. இன்றைய போட்டியின் முடிவில் ஒரு அணி வெளியேற்றப்படும்.

    நாளையுடன் ‘லீக்‘ ஆட்டம் முடிகிறது. 43-வது நாளான இன்று இரண்டு ஆட்டங்கள் நடக்கிறது.

    மாலை 4 மணிக்கு ஜெய்ப்பூரில் நடைபெறும் ஆட்டத்தில் ரகானே தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ்- விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றன.

    இதில் வெற்றி பெறும் அணி ‘பிளே ஆப்’ வாய்ப்பில் நீடிக்கும். தோல்வி அடையும் அணி போட்டியில் இருந்து வெளியேற்றப்படும். இதனால் இரு அணியும் தங்களது கடைசி லீக் ஆட்டத்தில் வெற்றி பெற கடுமையாக போராடும்.

    ரன்ரேட் முக்கிய பங்கு வகிப்பதால் வெற்றி பெறும் அணி நிகர ரன்ரேட்டையும் உயர்த்துவது அவசியமாகும். பெங்களூர் அணியின் ரன்ரேட் +0.26 ஆக உள்ளது. ராஜஸ்தான் நிகர ரன்ரேட் -0.39 ஆகும்.

    பட்லா, பென்ஸ்டோர் ஆகியோர் இங்கிலாந்துக்கு திரும்பியது ராஜஸ்தான் அணிக்கு பாதிப்பே. உள்ளூரில் விளையாடுவது மட்டுமே அந்த அணிக்கு சாதகம். அந்த அணியில் கேப்டன் ரகானே, சஞ்சு சாம்சன், ஆர்சிஷார்ட் போன்ற முன்னணி வீரர்கள் உள்ளனர். பெங்களூரை ராஜஸ்தான் 19 ரன்னில் தோற்கடித்து இருந்தது. இதனால் மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளது.

    பெங்களூர் அணி ராஜஸ்தானுக்கு பதிலடி கொடுத்து வெற்றியை பெற்று ‘பிளே- ஆப்’ சுற்றில் நீடிக்கும் ஆர்வத்தில் உள்ளது. விராட் கோலி, டிவில்லியர்ஸ், மொய்ன்அலி போன்ற அதிரடி வீரர்கள் முழு திறமையை வெளிப்படுத்தி தங்களது அணியை முன்னேற்றப் பாதைக்கு கொண்டு செல்ல போராடுவார்கள். பந்து வீச்சில் சாஹல், உமேஷ்யாதவ் நல்ல நிலையில் உள்ளனர்.

    ஐதராபாத்தில் இரவு 8 மணிக்கு நடைபெறும். 2-வது ஆட்டத்தில் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத்- தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.

    ஐதராபாத் அணியை பொறுத்தவரை சம்பிரதாயமான ஆட்டமே. ஏற்கனவே ‘பிளே ஆப்’ சுற்றுக்கு முன்னேறியது. ஆனால் அந்த அணி 10-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது. கடைசியாக ஆடிய 2 போட்டியில் தோற்றதால் அந்த அணி வெற்றிக்காக போராடும். கேப்டன் வில்லியம்ஸ், தவான், மனிஷ் பாண்டே, யூசுப்பதான் போன்ற சிறந்த பேட்ஸ்மேன்களும், புவனேஸ்குமார், ரஷித்கான், சித்தார்த்கவுல் போன்ற சிறந்த பவுலர்களும் உள்ளனர்.

    கொல்கத்தா அணி, ஐதராபாத்தை வீழ்த்தி ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு நுழையும் ஆர்வத்தில் உள்ளது. 14 புள்ளியுடன் இருக்கும் அந்த அணி வெற்றி பெற்றால் தகுதி பெறும்.

    தோல்வி அடைந்தால் நாளை நடைபெறும் ஆட்டங்களின் முடிவுக்காக காத்திருக்க வேண்டும். அதே நேரத்தில் மோசமாக தோற்றால் வெளியேறும் நிலையும் ஏற்படலாம். இதனால் அந்த அணி வீரர்கள் வெற்றிக்காக போராடுவார்கள். கிறிஸ் லின், உத்தப்பா, கேப்டன் தினேஷ் கார்த்திக், நரேன், ரஸ்சல் போன்ற சிறந்த வீரர்கள் அந்த அணியில் உள்ளனர்.

    கொல்கத்தா அணி ஏற்கனவே ஐதராபாத்திடம் 5 விக்கெட்டில் தோற்றது. இதனால் பதிலடி கொடுக்கும் வகையில் ஆடும்.

    பிளே ஆப் சுற்றுக்கு நுழையும் ஆட்டங்கள் என்பதால் இன்றைய 2 போட்டிகளும் பரபரப்பாக இருக்கும். #IPL2018
    ×