search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 118938"

    வயது முதிர்ந்தோர் இளைஞர்களுக்கு வழிவிட வேண்டும் என்று புதுவை என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தலைவர் ரங்கசாமி கூறினார். #LSPolls #Rangaswamy
    புதுச்சேரி:

    புதுவை என்.ஆர்.காங்கிரஸ் கட்சி வேட்பாளராக டாக்டர் நாராயணசாமியை அறிமுகப்படுத்தி கட்சியின் தலைவர் ரங்கசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    புதுவை பாராளுமன்ற தொகுதி அகில இந்திய என்.ஆர்.காங்கிரஸ் பேரியக்கத்தின் வேட்பாளராக அ.தி.மு.க., பா.ஜனதா, பா.ம.க., தே.மு.தி.க. ஆகிய கட்சிகளின் ஆதரவோடு நாராயணசாமி போட்டியிடுகிறார். டாக்டருக்கு படித்த சிறுவயது இளைஞர்.

    டாக்டர் நாராயணசாமி

    ஒரு இளைஞரை பாராளுமன்றத்திற்கு அனுப்பினோம் என்ற பெருமையை நாம் பெற முடியும். இவர் நன்றாக மக்கள் பணியாற்றுவார் என்ற நம்பிக்கை உள்ளது. வயது முதிர்வு காரணமாக சோர்வு ஏற்படும். வயது முதிர்ந்தோர் இளைஞர்களுக்கு வழிவிட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

    இளைஞர் என்பதால் வேட்பாளர் நாராயணசாமிக்கு சோர்வு ஏற்படாது. நீண்டநாட்கள் அரசியலில் ஈடுபட்டு மக்களுக்கு பணியாற்றுவார். நிறைய அனுபவத்தையும், நல்ல அனுபவத்தையும் அவர் பெறுவார்.

    என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து பிரதமர் மோடி, தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பிரசாரம் செய்ய புதுவை வர உள்ளனர்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    தட்டாஞ்சாவடி தொகுதி வேட்பாளர் யார்? என நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு, விரைவில் அறிவிக்கப்படுவார் என ரங்கசாமி தெரிவித்தார்.

    சொத்துக்குவிப்பு வழக்கில் சிக்கி என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ. பதவி இழந்துள்ளார். இதனால் தட்டாஞ்சாவடி தொகுதியில் என்.ஆர்.காங்கிரசுக்கு மக்கள் ஆதரவு கிடைக்குமா? என எழுப்பிய கேள்விக்கு மக்களுக்கு நன்றாக தெரியும். யார்-யார் எப்படி? என தெரியும். அனைவரையும் புதுவை மக்கள் நன்றாக அறிந்து வைத்துள்ளனர் என்று ரங்கசாமி தெரிவித்தார். #LSPolls #Rangaswamy

    பணி ஓய்வு என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகும். பணி ஓய்வுக்குப் பின்னர் பலர் ஓய்வே வாழ்க்கை என்று ஒரு இடத்தில் முடங்கி விடுகிறார்கள். இதனால் உடல் நலக்கேடு வரும்போது மிகவும் துவண்டு விடுகிறார்கள்.
    பலரும் பணி ஓய்வு என்பதை நிரந்தர ஓய்வு என்றே எண்ணுகிறார்கள். அரசுப்பணி, பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் ஒரு குறிப்பிட்ட வயதில் பணியாளர்களை பணி ஓய்வு செய்கிறார்கள். இந்தியாவும், சீனாவும் அதிவேக வளர்ச்சி பெறுவதைப்பார்த்து மேலை நாடுகள் வியப்பு அடைகின்றன. இதற்கு காரணம் மக்கள் தொகையில் இளைஞர்கள் அதிக அளவில் இருப்பதே ஆகும். எனவே பணி ஓய்வு என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகும். பணி ஓய்வு என்பது விவசாயிகளுக்கோ, வக்கீல் தொழில் செய்பவர்களுக்கோ, மருத்துவர்களுக்கோ, வியாபாரம் செய்பவர்களுக்கோ கிடையாது.

    ஏனென்றால் அவர்கள் ஒரு நிறுவனத்தை சார்ந்து இல்லை. இவர்களுக்கு ஓய்வு என்பதே கிடையாது. உடலும், உள்ளமும் நன்றாக இருக்கும் வரை உழைத்துக்கொண்ட இருப்பார்கள். ஒரு சைக்கிள் ரிக்‌ஷா ஓட்டுகிறவர் கூட தன் உடம்பில் வலு இருக்கும் வரை தன் தொழிலை செய்கிறார். பணி ஓய்வுக்குப் பின்னர் பலர் ஓய்வே வாழ்க்கை என்று ஒரு இடத்தில் முடங்கி விடுகிறார்கள். தங்களையும் தங்கள் உடல் நலத்தையும் பற்றி நினைத்தே வாழ்க்கையை கழிக்கிறார்கள். இதனால் உடல் நலக்கேடு வரும்போது மிகவும் துவண்டு விடுகிறார்கள்.

    அடுத்தவர்களின் உதவியை எதிர்பார்க்கிறார்கள். தங்கள் மகனோ, மகளோ தங்களை கவனிக்கவில்லை என்ற வருத்தம் சிலரிடம் மேலோங்கி இருக்கிறது. ஓய்வு சிலருடைய மன நிலையையும் பாதிக்கிறது. கணவன், மனைவிக்குள் தேவையற்ற வாதங்கள் தோன்றி வருத்தங்களாக முடிகிறது. இதற்கெல்லாம் காரணம் இவர்களிடம் இருக்கும் அதீத நேரம்தான்.

    காலையில் நடைபயிற்சி மற்றும் நண்பர்களை சந்திப்பது, பத்திரிகைகள் படிப்பது, காலை உணவுக்குப்பின் சிறு உறக்கம், மதிய உணவு, அதன்பின் சிறு உறக்கம், மாலை மற்றும் இரவில் தொலைக்காட்சியில் முழு கவனம் என்று பலர் பட்டியலிட்டபடி வாழ்கின்றனர். சிலர் நடைபயிற்சியையோ அல்லது உடற்பயிற்சியையோ கூட மேற்கொள்வதில்லை. தற்போதைய எந்திர யுகத்தில் பெரும்பாலானோர் வாட்ஸ்-அப், முகநூல் போன்றவற்றில் மணிக்கணக்கில் பொழுதை செலவழிக்கிறார்கள். இந்த வாழ்க்கை இவர்களுக்கு சில வருடங்களில் ஒரு சலிப்பை உண்டாக்குகிறது. மேலை நாடுகளில் நண்பர்கள் மற்றும் உறவினர்களின் முன் அனுமதி இல்லாமல் அவர்கள் வீட்டுக்கு செல்ல முடியாது. ஆனால் இவர்களோ திடீரென்று நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீட்டுக்கு செல்வார்கள். நேரம் போவது தெரியாமல் பேசிக்கொண்டிருப்பார்கள். நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் இது மிகவும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தும்.

    அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பணி புரிந்தவர்களுக்கு ஓய்வூதியம் கிடைக்கும். அந்த சொற்ப ஓய்வூதியத்திலேயே தங்கள் வாழ்க்கையை அடக்கிக்கொண்டு தங்களுக்கும் தங்கள் மனைவிக்குமான தேவைகளை குறைத்துக்கொள்வார்கள். ஆனால் தனியார் நிறுவனங்களில் வேலை செய்து ஓய்வுபெற்ற பலருக்கு ஓய்வூதியம் என்பது கிடையாது. பணி ஓய்வுபெறும்போது தங்கள் மாத வருமானம் தடைபடுவது அவர்களுக்குள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இது எதிர்பார்த்த ஒன்றுதான். அதற்கான திட்டமிடலை பல வருடங்களுக்கு முன்பே தொடங்கி இருக்க வேண்டும்.

    இந்த நிலைமைக்கு காரணம் நாம் நமக்கு என்று ஒரு பணியை தேர்ந்தெடுக்காமல் ஓய்வை தேர்ந்தெடுப்பதுதான். செயலற்ற மனது பிசாசுகளின் பட்டறை என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். இன்றைய முன்னேறிய மருத்துவ உலகில் ஆரோக்கியம் வெகு விரைவில் கெட்டுப்போவதில்லை. முன்பை விட நாம் நீண்ட நாட்கள் வாழ்கிறோம் என்பதே உண்மை. எனவே பணி ஓய்வு என்பது நிறுவனத்தின் பார்வையில் நமக்கு அவர்கள் கொடுத்திருந்த பணியில் இருந்து மட்டும்தான் விடுதலை. ஆனால் உடலும் உள்ளமும் நமக்கு நன்றாகவே உள்ளது. எனவே நாம் நமக்கு பிடித்த ஒரு பணியை செய்ய வேண்டும். அந்த பணி நாம் பல நாட்கள் செய்ய நினைத்து அலுவலக அவசரங்களினால் செய்ய முடியாமல் போயிருக்கலாம்.



    சிலர் புகைப்படம் எடுப்பதில் தேர்ந்தவர்களாக இருப்பார்கள். இப்போது அதை ஒரு தொழிலாக செய்யலாம். ஒரு தொழில் முனைவோராக மாறலாம். இதற்காக பல பயிற்சிகளும் வங்கிகள் வாயிலாக கடன் உதவிகளும் அரசின் மானியமும் கிடைக்கின்றன. தங்கள் அனுபவத்தில் பயிற்சி வகுப்புகள் நடத்தலாம். ஒரு சமுதாய முன்னேற்றமாக கிராமங்களில் ஏழைகளுக்கு எழுத படிக்க கற்றுத்தரலாம். இப்படி ஏதாவது ஒரு தொழில் செய்யும் போது அதில் ஒரு வருவாயும் ஏற்படும் மற்றும் சேவையில் தங்களை ஈடுபத்திக்கொள்ளும்போது மனதிருப்தியும் உடல் ஆரோக்கியமும் பெறுவார்கள். அப்போது குடும்பத்தில் ஒரு மகிழ்ச்சி திரும்புவதை உணர்வார்கள்.

    நீங்கள் உங்கள் மன நிலையை ஓய்வுக்கு தள்ளிவிடாதீர்கள். மனதுக்கு உற்சாகம் அளியுங்கள். முன்னைப்போலவே நல்ல ஆடைகளை அணியுங்கள். ஆண்கள் தினமும் முகச்சவரம் செய்ய மறக்காதீர்கள். கோவில்களுக்கு சென்று வாருங்கள். நண்பர்களிடம் மற்றும், உறவினர்களிடம் உற்சாகமாக பேசுங்கள். மேலும் மற்றவர்களைப்பற்றி பொழுதுபோக்குக்காகக்கூட தவறாகப்பேச பேச வேண்டாம்.

    இது எதிர்மறையான மனநிலையை உங்களுக்குள் வளர்க்கும். மேலும் ஒரு எதிர்மறை சக்தி உங்களை சுற்றி உருவாகும். இந்த எதிர்மறை சக்தி எதிர்மறை விளைவுகளையே உங்களுக்கு உருவாக்கும். ஆரோக்கியமாக பேசுங்கள். நல்ல விஷயங்களை பேசுங்கள். உங்கள் மனது இலகுவாகும். இது உங்கள் தன்னம்பிக்கையை வளர்க்கும். உங்களுக்கு பிடித்த ஒரு தொழிலை செய்யுங்கள். அலுவலகத்தில் கைகட்டி மேலதிகாரிகளின் கீழ் வேலை பார்த்த உங்களுக்கு தொழிலில் நீங்கள்தான் முதலாளி என்று எண்ணும்போது உங்களுக்குள் ஒரு மகிழ்ச்சி உண்டாகும். கிடைத்துள்ள நேரத்தை பயனுள்ளதாக்குவோம். நாம் ஓய்வுக்கு ஒரு ஓய்வு கொடுப்போம்.

    எஸ்.ஹரிகிருஷ்ணன், முன்னாள் பொது மேலாளர், இந்திய ரிசர்வ் வங்கி
    கணவன்-மனைவி, குழந்தைகளுக்கென வீடுகளில் தனித்தனி அறைகள் அமைக்கப்படுவதைப் போல் முதியவர்களுக்கும் தனி அறை அமைப்பது அவசியமாகிவிட்டது.
    கணவன்-மனைவி, குழந்தைகளுக்கென வீடுகளில் தனித்தனி அறைகள் அமைக்கப்படுவதைப் போல் முதியவர்களுக்கும் தனி அறை அமைப்பது அவசியமாகிவிட்டது. முதுமை எல்லோருக்கும் வரும் என்பதால் பெற்றோருக்காகவோ, தாத்தா-பாட்டிகளுக்காகவோ கட்டும் அறைகள் பிற்காலத்தில் நமக்கு உதவும் என்ற தொலைநோக்கு யோசனையும் தேவை. சரி, முதியவர்களுக்கான அறை, அதில் வசதிகள் எப்படி இருக்க வேண்டும்?

    தரையை அழகாய் வடிவமைக்கிறார்கள். அழகழகான டைல்ஸ்கள் வீட்டின் தோற்றத்தை எடுப்பாகக் காட்டும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், டைல்ஸ் தரைகளால் முதியவர்களுக்கு பாதிப்பு ஏற்படலாம் என்றே சொல்லலாம். வழுக்குத் தன்மையுள்ள டைல்ஸ் தரைகளில் முதியவர்கள் நடக்கும்போது வழுக்கி விழ வாய்ப்புகள் அதிகம். குறிப்பாகக் காலை நனைத்து விட்டு வரும்போது விழும் வாய்ப்புகள் அதிகம். முதியவர்கள் கீழே விழுவது அவர்களின் உடல் நலத்துக்குக் கேடு விளைவித்துவிடும். எனவே வழுக்கும் தன்மையுள்ள டைல்ஸ்களுக்குப் பதிலாக, சொரசொரப்புத் தன்மையுள்ள டைல்ஸ்களைப் பதிக்கலாம்.

    மாடிகள் நல்ல வி‌ஷயம். ஆனால் இது வயதானவர்களுக்கு ஏற்றதல்ல. முடிந்த அளவுக்கு வீட்டுக்குள் உள்ள மாடி படிக்கட்டுகளைச் சாய்வு தளமாக அமைப்பது முதியவர்களுக்கு வசதியாக இருக்கும். மேலும் படிக்கட்டுகளின் ஓரத்தில் நிச்சயமாகக் கைப்பிடி அமைக்க வேண்டும். மாடிப் படிக்கட்டுகளில் டைல்ஸ்கள் பதிப்பதைத் தவிர்க்கலாம். குளியலறையில் சொரசொரப்புத் தன்மையுள்ள டைல்ஸ்களைப் பயன்படுத்துவது முதியவர்களுக்கு மட்டுமின்றி அனைவருக்கும் ஏற்றது.



    குளியலறை அலமாரிகளை குறைந்த உயரத்தில் அமைப்பது நல்லது. குளியலறையில் பொருத்தப்பட்டுள்ள கைப்பிடிகள் வலுவாக இருப்பதை அடிக்கடி உறுதி செய்யவும்.

    கழிவறையில் இந்திய பாணிக் கழிவறைகள்தான் சிறந்தது. ஆனாலும் நோயாளிகள் மற்றும் முதியவர்களுக்கு மேற்கத்திய பாணிக் கழிப்பிடங்களே ஏற்றது. இந்திய பாணிக் கழிப்பிடங்கள் முதியவர்களுக்குக் க‌ஷ்டத்தையே கொடுக்கும்.

    முதியவர்கள் உட்கார்ந்து எழ மிகவும் க‌ஷ்டப்படுவார்கள் என்பதால் சுவர்களின் பக்கவாட்டில் கைப்பிடிகள் அமைப்பது அவர்களுக்குப் பயனளிக்கும். மேற்கூறிய அனைத்து அறைகளும் முதியவர்கள் விழுவதற்கும், காயம் ஏற்படுவதற்கும் வாய்ப்புள்ள பகுதிகள். எனவே முதியவர்களுக்கான வசதிகள் கண்டிப்பாக தேவை. மற்ற அறைகளிலும், முதியவர்களுக்கு ஏற்ற வகையில் வசதிகளைச் செய்து கொடுப்பதும் நல்லதுதான். 
    முதியோர்களை கவனிக்கவும், பராமரிக்கவும் ‘ஹலோ திட்டம்’ என்ற புதிய மனிதநேய திட்டத்தை கோவை போலீசார் ஏற்படுத்தி இருக்கிறார்கள். #HelloPlan
    கோவை:

    ஹலோ...

    பாட்டிம்மா..

    யாருப்பா...?

    போலீஸ், பாட்டி!

    போலீசா....?

    பயப்படாதீங்க பாட்டி! உங்களுக்கு உதவி செய்யத்தான் பேசுறேன். இனி தினமும் இப்படி பேசுவேன். பக்கத்தில் புள்ள இல்லைன்னு கவலைப்படாதீங்க. உங்க பிள்ளை மாதிரி என்னை நெனச்சுக்குங்க! என்ன உதவி வேணுமின்னாலும் கேளுங்க...

    என்ன தம்பி ஆச்சரியமா இருக்கு. போலீசுங்கிறே... எனக்கு உதவி செய்யப் போவதா சொல்றே...

    நிஜம்தான் பாட்டி, உங்களைப் போல் ஆதரவு இல்லாம இருப்பவர்களுக்கு உதவி செய்கிறோம்.

    கேக்கவே சந்தோ‌ஷமா இருக்குப்பா. ரொம்ப நன்றிப்பா...!

    இப்படி ஒரு உரையாடல் கோவை மாநகரில் பணிபுரியும் போலீசாருக்கு அந்த பகுதியில் வசிக்கும் முதியோர்களுக்கும் இடையே நடக்கிறது.


    வாழ்க்கையில் முதுமை பருவத்தை அடையும்போது யாரும் திரும்பி பார்ப்பதில்லை. ஏன் பெற்ற பிள்ளைகள் கூட அவர்களை பாரமாக நினைத்து முதியோர் இல்லங்களிலோ அல்லது வீட்டில் தனியாக விட்டு விட்டோ பொருள்தேட சென்று விடுகிறார்கள்.

    பராமரிக்க ஆயிரக்கணக்கில் பணம் கொடுக்கலாம். அவர்களுக்கு அது தேவையில்லை. பக்கத்தில் இருந்து அன்பு காட்டி அரவணைக்க ஒரு அன்புக்கரம் தேவை. அதைத்தான் எதிர்பார்க்கிறார்கள்.

    ஆனால் பணம்தான் வாழ்க்கை என்று ஆகிவிட்ட நிலையில் அவர்களை கவனிக்க மனம் இல்லை.

    இப்படிப்பட்ட சூழ்நிலையில் இளமை, வளமை, சிறப்பு என்று வாழ்க்கையில் எல்லாவற்றையும் அனுபவித்து முதுமை என்னும் கடைசி கட்டத்தில் கவனிப்பாரற்று இருக்கிறார்கள்.

    இப்படிப்பட்டவர்களை கவனிக்கவும், பராமரிக்கவும் ‘ஹலோ திட்டம்’ என்ற புதிய மனிதநேய திட்டத்தை கோவை போலீசார் ஏற்படுத்தி இருக்கிறார்கள்.

    மாவட்டத்தில் நிராதரவாக இருக்கும் முதியோர் பற்றி கணக்கெடுத்து வைத்துள்ளார்கள். 700 பேர் இருப்பதாக தெரிய வந்துள்ளது.

    எண்ணிக்கையை பார்த்ததும் கண்ணீர் வடித்த காவல் அதிகாரியின் மூளையில் உதித்ததுதான் இந்த திட்டம்.


    ஒவ்வொரு போலீஸ் நிலைய சரகத்துக்குள் வசிப்பவர்களிடம் அந்த அந்த காவல் நிலைய போலீசார் தினமும் போனில் தொடர்பு கொண்டு பேசுவார்கள்.

    நலம் விசாரிப்பதோடு ஏதேனும் உதவிகள் தேவையா? என்று கேட்டறிந்து உதவுவார்கள். ஒரு மகனாக, பேரனாக மனித நேயத்தோடு முதியவர்களுக்கு செய்ய வேண்டிய கடமையை செய்கிறார்கள்.

    காக்கி சட்டைக்குள் ஈரம் அல்ல. இதயம் இருக்கிறது. அது துயரத்தில் தவிப்பவர்களுக்காக துடிப்பதை நினைக்கும் போது பெருமையாக இருக்கிறது.

    கோவை போலீசுக்கு ஒரு பெரிய “சல்யூட்”. #HelloPlan
    முதுமையினை மருத்துவத்தால் வெல்ல முடியாது. இது மனித அன்பினால் மட்டுமே முடியும். இதனை நாமும் உணர்ந்து முதியோர்களின் வாழ்வினை ஆரோக்கியமாக்குவோம்.
    மனிதனின் சில முறையற்ற வாழ்வு முறையினை காலம் அவனுக்கு உணர்த்தி திருத்தி விடும். ஆனால் அந்த காலம் சற்று நீண்டு இருக்கலாம். அதனால் பல இழப்புகளுக்குப் பிறகே நல்ல பலன்கள் கிடைக்கலாம். இது இயற்கையின் சூழல். இதன் போக்கினை மாற்றுவது கடினம். ஆனால் முடிவில் நல்லதே ஏற்படும். அவ்வகையில் இன்று ஆச்சர்யப்படும் படியான ஒரு மாற்றம் நிகழ்ந்து வருகின்றது.

    வெளிநாடுகளில் காலம் காலமாக ஒரு பழக்கம் இருந்து வருகின்றது. வயதானவர்கள், முதியோர்கள் ஆகியோர் முதியோர் இல்லங்களிலேயே இருப்பார்கள். அங்கு முதியோர் இல்லங்களும், அரசாங்கமும் அந்த முதியவர்களை நன்கு கவனித்துக் கொள்ளும். அவர்களின் உடல்நலம், மனநலம் இவற்றுக்கு எந்த குறையும் இல்லாத கவனிப்பு இருக்கும்.

    இவர்களின் பிள்ளைகளும், உறவினர்களும் முக்கிய பண்டிகை நாட்களிலும், பிறந்த நாட்களின் பொழுதும் சென்று இவர்களை பார்த்து வருவார்கள். வெளி நாடுகளில் வீடுகளுக்கு வேலை செய்ய உதவி ஆட்கள் கிடையாது. உதவி ஆட்கள் வந்தாலும் செலவு மிக அதிகம். அனைத்து வேலைகளையும் வீட்டு மனிதர்களே செய்துகொள்ள வேண்டும்.

    அனைவரும் வேலைக்கு சென்று சம்பாதிக்க வேண்டிய அவசியம் உள்ளது. இந்நிலையில் முதியோர்களை கவனித்துக் கொள்வது கடினம் என்ற காரணமே அநேக முதியோர் இல்லங்கள் தோன்றின. அது சாதாரண நிகழ்வாகவே பார்க்கப்பட்டது. அதனைப் பார்த்தே நம் நாட்டிலும் முதியோர் இல்லங்கள் தோன்றின. இங்கு பொருளாதார பிரச்சினை அதிகம்.

    எனவே கூடுதல் செலவு செய்தாலே நல்ல முதியோர் இல்லங்கள் கிடைக்கும் நிலை உள்ளது. இவ்விடத்தில் நான் பெற்றோரை பிள்ளைகள் கவனிக்கவில்லை என்ற பேச்சினைப் பற்றி கூறவரவில்லை. நான் கூறவருவதெல்லாம் வெளிநாடுகளில் எத்தனை வசதிகள் இருந்தாலும் அநேக முதியவர்கள் தன் குடும்பத்துடனே வாழ முற்படுகின்றனர். குடும்பம் இல்லாதவர்கள் தன் போன்று இருக்கும் பிறருடன் சேர்ந்து ஒரு குடும்பமாக வாழும் முயற்சியினை மேற்கொள்கின்றனர் என்பது பற்றிதான்.



    * பல வசதிகள் இருந்தாலும் உறவு, நட்பு இன்றி தனித்து இருப்பதே பல நோய்கள் பாதிப்பிற்கு காரணமாகி விடுகின்றது என ஆய்வுகள் கூறுகின்றன. தனிமை இவர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி விடுகின்றதாம்.

    * உடன், உறவுகள் இருக்கும் பொழுது ஆரோக்கியமான உணவினை நன்கு சமைத்து உண்ண முடிகின்றதாம். தனித்து இருப்பவர்களுக்கு இது இயலுவதில்லை.

    * உடன் இருப்பவர்களால் பல உதவிகளை பெற முடிகின்றது. உடைமாற்ற, மாத்திரை எடுத்துக் கொள்வது போன்றவை உடன். உறவுகள் இருக்கும் பொழுதே முடிகின்றதாம்.

    * வேலைச் சுமை குறைவதால் எளிதில் சோர்வடையாமல் இருக்கச் செய்கின்றதாம்.

    * வெளியில் துணையோடு சென்று வர முடிகின்றது.

    * அவசரத்திற்கு அருகில் நம்பகமானவர்கள் இருப்பதால் அச்சமின்றி இருக்க முடிகின்றது.

    மருத்துவ முன்னேற்றம் இன்று மனிதனுக்கு நீண்ட ஆயுளை கொடுத்துள்ளது. ஆனால் முதுமையினை மருத்துவத்தால் வெல்ல முடியாது. இது மனித அன்பினால் மட்டுமே முடியும். இதனை வெளிநாட்டினர் நன்கு உணர ஆரம்பித்து விட்டனர். இதனை நாமும் உணர்ந்து முதியோர்களின் வாழ்வினை ஆரோக்கியமாக்குவோம்.
    ×