search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பதவி"

    விவசாயிகளுக்காக மத்திய மந்திரி பதவியை ராஜினாமா செய்தவர் அம்பரீஷ் என்று சுமலதா ஆவேசமாக கூறியுள்ளார். #Sumalatha #MandyaConstituency
    பெங்களூரு :

    நடிகை சுமலதா, மாண்டியா தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடுகிறார். அவர் நேற்று தனது ஆதரவாளர்களுடன் ஊர்வலமாக சென்று மாண்டியா கலெக்டர் அலுவலகத்தில், தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான மஞ்சுஸ்ரீயிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். இதில் நடிகர் தர்ஷன், யஷ் உள்பட கன்னட திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

    அதன் பிறகு மாண்டியா சில்வர் ஜூப்ளி பூங்காவில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் நடிகை சுமலதா கலந்துகொண்டு பேசியதாவது:-

    நான் இன்று (அதாவது நேற்று) வேட்புமனு தாக்கல் செய்துள்ளேன். அரசியலுக்கு வர வேண்டும் என்ற விருப்பம் எனக்கு இருக்கவில்லை. ஆனால் எனது கணவர் மாண்டியாவுக்கு செய்ய வேண்டிய பணிகளில் இன்னும் சிலவற்றை விட்டுச் சென்றுள்ளார். அது என்ன என்பது எனக்கு தெரியும்.

    அந்த பணிகளையும், அம்பரீசின் கனவுகளையும் நிறைவேற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் தான் அரசியலுக்கு வந்துள்ளேன். நான் இங்கு வெற்றி பெற்றுவிட்டால், வெளிநாட்டுக்கு சென்றுவிடுவேன் என்றெல்லாம் சொல்கிறார்கள்.

    நான் ஏற்கனவே எல்லா நாடுகளுக்கும் சென்று வந்துவிட்டேன். நான் கன்னடம் உள்பட 5 மொழி படங்களில் நடித்துள்ளேன். எனக்கு அதில் இருந்து போதுமான அளவுக்கு புகழ் கிடைத்துள்ளது. அதனால் அரசியலுக்கு வந்து தான் புகழ் சம்பாதிக்க வேண்டும் என்ற அவசியம் எனக்கு இல்லை.

    மாண்டியா மக்களுக்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்பது தான் எனது நோக்கம். நான் மாண்டியாவில் கிராமம், கிராமமாக சென்று மக்களிடம் கருத்துகளை கேட்டேன். அவர்கள், நான் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று கூறினார்கள். அதை ஏற்று நான், காங்கிரஸ் தலைவர்களை சந்தித்து பேசினேன்.

    மக்களின் விருப்பப்படி நான் மாண்டியா தொகுதியில் போட்டியிட டிக்கெட் வழங்குமாறு கேட்டேன். ஆனால் கூட்டணி தர்மத்தை பின்பற்ற வேண்டும், டிக்கெட் கிடைக்க வாய்ப்பு இல்லை என்று கூறிவிட்டனர்.

    அதனால் நான் சுயேச்சையாக போட்டியிட்டு உள்ளேன். இன்று (நேற்று) வேட்பு மனு தாக்கல் செய்துள்ளேன். நான் யார் என்று கேட்கிறார்கள். நான் அம்பரீசின் மனைவி. இந்த மண்ணின் மகள், மருமகள். நான் அரசியலுக்கு வருவதற்கு முன்பே, என்னை பற்றி பல்வேறு விமர்சனங்கள் வந்தன. எனக்கு அவமானங்கள் ஏற்படுத்தப்பட்டன. அதற்கு நான் பதில் சொல்ல வேண்டியது இல்லை. நீங்களே (மக்கள்) பதில் சொல்லுங்கள்.



    என் முன்னால் இமயமலை அளவுக்கு பெரிய சவால் உள்ளது. அந்த சவாலை உங்களின் ஆதரவுடன் எதிர்கொண்டு வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை உள்ளது. என்னை இந்த தொகுதியில் நீங்கள் வெற்றி பெற வைக்க வேண்டும்.

    அம்பரீஷ் இந்த தொகுதிக்கு என்ன செய்தார் என்று கேட்கிறார்கள். மாண்டியா மருத்துவ கல்லூரியை கொண்டு வந்தது அவர் தான். பள்ளி கட்டிடங்களை கட்டி கொடுத்தார். கிராமங்களில் சமுதாய கூடங்களை கட்டினார். இப்படி பல்வேறு பணிகளை செய்துள்ளார். கிராமங்களுக்கு சென்று மக்களிடம் கேட்டால் அவர்கள் சொல்கிறார்கள்.

    வேறு தொகுதியில் டிக்கெட் தருவதாகவும், எம்.எல்.சி. பதவி, மந்திரி பதவி தருவதாக என்னிடம் கூறினர். மாண்டியா தொகுதியில் போட்டியிட வேண்டாம் என்று கூறினர். பதவி ஆசை இருந்திருந்தால், அதை ஏற்றுக்கொண்டு போய் இருப்பேன். இங்கு போட்டியிட்டு இருக்கமாட்டேன். மாண்டியா தொகுதி மக்களுக்கு செய்ய வேண்டிய நன்றிக்கடன் உள்ளது. அதை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் தான் நான் இந்த தொகுதியில் போட்டியிடுகிறேன்.

    எனக்கு மிரட்டல் விடுத்தனர். எங்கள் ஆதரவாளர்களை மிரட்டுகிறார்கள். உங்களின் அன்புக்கு முன்னால் அது எடுபடாது. அதை பற்றி நான் கவலைப்படவில்லை. நான் இந்த தொகுதி மக்களின் பிரச்சினைகள் பற்றி பாராளுமன்றத்தில் குரல்கொடுப்பேன். விவசாயிகளின் பிரச்சினைகளை பற்றி பேசுவேன்.

    நடிகர்கள் தர்ஷன், யஷ் எனக்கு ஆதரவாக இருக்கிறார்கள். இதையும் விமர்சனம் செய்கிறார்கள். அவர்கள் எனது குழந்தைகளை போன்றவர்கள். ஒரு தாய்க்கு ஆதரவாக குழந்தைகள் பிரசாரம் செய்வது தவறா?. உங்கள் (குமாரசாமி) மகனுக்கு ஆதரவாக நீங்கள் பிரசாரம் செய்யவில்லையா?.

    அம்பரீஷ் விவசாயிகளுக்கு என்ன செய்தார் என்று கேட்கிறார்கள். விவசாயிகள் கஷ்டத்தில் இருந்தபோது, மத்திய மந்திரி பதவியை ராஜினாமா செய்துவிட்டு வந்தார்.

    இவ்வாறு சுமலதா பேசினார்.

    இதில் சுமலதாவின் மகன் அபிஷேக், நடிகர் தர்ஷன், தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் உள்பட கன்னட திரைத்துறையினர் மற்றும் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர். #Sumalatha #MandyaConstituency 
    பதவி சுகத்துக்காகவே ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். இணை பிரியாமல் உள்ளனர் என்று அ.ம.மு.க. கொள்ளை பரப்பு செயலாளர் தங்க தமிழ்செல்வன் தெரிவித்தார். #Thangatamilselvan
    திண்டுக்கல்:

    ஒட்டன்சத்திரத்தில் நடந்த அ.ம.மு.க. பொதுக் கூட்டத்தில் பங்கேற்று ஊர் திரும்பிய நிர்வாகிகள் 4 பேர் விபத்தில் சிக்கினர். அவர்கள் காயத்துடன் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களை கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் தங்கதமிழ்செல்வன் சந்தித்து ஆறுதல் கூறினார்.

    பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் பொதுக்கூட்டம் நடத்துவது என்றால் அதற்கு போலீசார் அனுமதி அளிக்க மறுக்கின்றனர். ஒவ்வொரு கூட்டத்துக்கும் நாங்கள் கோர்ட்டுக்கு சென்றே அனுமதி பெற வேண்டியது உள்ளது.

    எங்கள் கட்சி கூட்டத்துக்கு சேரும் மக்களை பார்த்து தமிழக முதல்வரும், துணை முதல்வரும் மிரண்டு போய் உள்ளனர். அதன் காரணமாகவே பல்வேறு கெடுபிடிகளை விதித்து கூட்டம் நடத்த தடை எற்படுத்தி வருகின்றனர்.



    முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கட்டுப்பாட்டில் உள்ள நெடுஞ்சாலைத் துறையில் ரூ.1500 கோடி ஊழல் நடந்துள்ளதாக கடந்த 6 மாதத்துக்கு முன்பே நாங்கள் தெரிவித்தோம். ஆனால் தற்போதுதான் கம்யூனிஸ்டு, காங்கிரஸ், தி.மு.க., பா.ம.க. போன்ற கட்சிகள் அதனை கூறி வருகின்றன.

    18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் குறித்து தீர்ப்பு வரும் வரை ஆட்சியை காப்பாற்றிக் கொள்ள முதல்வரும், துணை முதல்வரும் ஒற்றுமையாக இருக்கின்றனர். அவர்களை பொறுத்தவரையில் மக்கள் நலன் குறித்த அக்கறை கிடையாது. பதவி சுகத்துக்காகவே ஒற்றுமையாக இருப்பது போல் காட்டிக் கொள்கின்றனர்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார். #Thangatamilselvan

    இந்தியாவின் 14-வது ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த் பதவி ஏற்று ஓராண்டு நிறைவு பெற்றதை யொட்டி பிரதமர் மோடி ‘டுவிட்டர்’ மூலம் வாழ்த்து தெரிவித்து உள்ளார். #President #RamNathKovind #Modi
    புதுடெல்லி:

    இந்தியாவின் 14-வது ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த் கடந்த ஆண்டு ஜூலை 25-ந் தேதி பதவி ஏற்றார். அவர் ஜனாதிபதியாகி ஓராண்டு நிறைவு பெற்றதை யொட்டி, ஆப்பிரிக்க நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி அவருக்கு ‘டுவிட்டர்’ மூலம் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

    அதில், சிறப்பான பணி, ஞானம் மற்றும் பணிவின் மூலம் இந்தியர்களின் அன்புக்குரியவராக விளங்கி, ஓராண்டு பதவி காலத்தை நிறைவுசெய்துள்ள தங்களுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறி உள்ளார். மேலும், இளைஞர்கள், விவசாயிகள் மற்றும் ஏழைகளுக்கு அதிகாரங்கள் கிடைப்பதற்கு ஜனாதிபதி பாடுபடுவதாகவும் அதில் அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.   #President #RamNathKovind #Modi
    அமெரிக்காவில் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக பதவி வகித்த அந்தோணி கென்னடி ஓய்வு பெறுவதையடுத்து, அவருடைய இடத்துக்கு புதிய நீதிபதியை நியமிக்கும் பணியில் டிரம்ப் தீவிரமாக இறங்கி உள்ளார். #Justice #AnthonyKennedy
    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக பதவி வகித்து வருபவர் அந்தோணி கென்னடி (வயது 81). இவர் அடுத்தமாதம் (ஜூலை) 31-ந் தேதி, தான் பணியில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று முன்தினம் அறிவித்தார்.

    இது தொடர்பாக அவர் ஜனாதிபதி டிரம்பை, வெள்ளை மாளிகையில் சந்தித்து தன்னுடைய முடிவை தெரிவித்தார். அந்தோணி கென்னடி ஓய்வு பெறுவதையடுத்து, அவருடைய இடத்துக்கு புதிய நீதிபதியை நியமிக்கும் பணியில் டிரம்ப் தீவிரமாக இறங்கி உள்ளார்.

    இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி பதவிக்கு, 25 நீதிபதிகளின் பெயர்களை டிரம்ப் பட்டியலிட்டு இருப்பதாக அமெரிக்க ஊடகங்கள் நேற்று செய்தி வெளியிட்டன. இந்த பட்டியலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த நீதிபதி அமுல் தாபர் பெயரும் இடம்பெற்று இருப்பது தெரியவந்துள்ளது.

    அமுல் தாபர், கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்காவின் 6-வது மேல்முறையீட்டு கோர்ட்டின் நீதிபதியாக டிரம்பால் நியமனம் செய்யப்பட்டவர் ஆவார். அதன் மூலம் அமெரிக்காவில் மேல்முறையீட்டு கோர்ட்டின் நீதிபதியான முதல் தெற்கு ஆசிய வம்சாவளி என்கிற பெயரை அவர் பெற்றார்.

    இந்தியாவில் இருந்து சென்று அமெரிக்காவில் குடியேறிய தம்பதியின் மகனான அமுல் தாபர், 1991-ம் ஆண்டு பாஸ்டன் கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்றார். அதன் பின்னர் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் சட்ட மேற்படிப்பை முடித்தார். இவர் கென்டக்கி மாகாணத்தில் உள்ள மாவட்ட கோர்ட்டில் வக்கீலாகவும், நீதிபதியாகவும் பணியாற்றி உள்ளார்.

    கடந்த ஆண்டு அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில் காலியாக இருந்த நீதிபதி பதவிக்கு அமுல் தாபர் பெயர் பரிசீலிக்கப்பட்டதும், இதற்காக டிரம்ப் அவரிடம் நேர்காணல் நடத்தியதும் குறிப்பிடத்தக்கது.  #Justice #AnthonyKennedy #tamilnews
    இணையதள சேவை முடக்கத்தை மத்திய, மாநில அரசுகள் கைவிட்டு, உடனடியாக இணையதள சேவை தொடங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். #EdappadiPalanisamy #Resignation #TNChiefMinister
    சென்னை:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதவி விலகும் வரை போராடுவோம் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

    தி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக, தூத்துக்குடியில் பேரணி சென்ற பொதுமக்கள் மீது, காவல்துறை மூலம் துப்பாக்கிச்சூடு நடத்தி 13 அப்பாவி உயிர்களைப் பறித்ததற்கு, தார்மீக பொறுப்பேற்று நீங்கள் பதவி விலகுங்கள், என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை பார்த்துக் கேட்டு விட்டுத்தான் பேரவைத்தலைவர் கூட்டிய அலுவல் ஆய்வுக் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தேன்.



    முதல்-அமைச்சர் அறை முன்பு அமர்ந்து, அவர் பதவி விலக வேண்டும் என்று மறியல் செய்தேன். ஆனால், அங்கு என்னை நேரில் சந்தித்து விளக்கம் சொல்லாத முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பத்திரிகையாளர்களை சந்தித்து, நான் ஏதோ அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்திலிருந்து திடீரென்று வெளியேறிவிட்டு, இப்படியொரு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக அபாண்டமாக கூறியிருக்கிறார்.

    முதல்-அமைச்சரிடம் நேருக்கு நேர், ‘நீங்கள் ராஜினாமா செய்ய வேண்டும்’, என்று கூறி விட்டுதான் வெளிநடப்புச் செய்தேன் என்பதை மீண்டும் உறுதிபட தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

    துப்பாக்கிச்சூடு நடைபெற்று 3 தினங்கள் கழித்து, நான் இன்றைக்கு அவர் அலுவலகம் முன்பு அமர்ந்து மறியல் செய்தபிறகே, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பத்திரிகையாளர்களை சந்தித்துள்ளார். போராட்டத்தில் கலந்துகொண்டவர்களைப் பார்த்து, சமூக விரோதிகள் என்று நா கூசாமல் பொய் சொல்லியிருக்கிறார் முதல்-அமைச்சர்.

    சொந்த நாட்டு மக்களைப் பார்த்து ‘சமூகவிரோதிகள்’ என்று கூறும் முதல்-அமைச்சருக்கு வேண்டுமானால் இப்படி அபத்தமான குற்றச்சாட்டை சுமத்துவது வாடிக்கையாக இருக்கலாம். ஆனால், மக்கள் இதை மன்னிக்க மாட்டார்கள் என்பதை அவர் உணர வேண்டும்.

    100 நாட்களுக்கு மேல் மக்கள் போராடி வருகிறார்கள். 14 முறை அரசு அதிகாரிகள் பேசியதாக கூறுகிறார். சம்பந்தப்பட்ட துறையின் அமைச்சரோ, முதல்-அமைச்சரோ ஜனநாயக ரீதியில் போராடும் மக்களை எத்தனைமுறை அழைத்துப் பேசினார்கள்.

    துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த குடும்பங்களைக் கூட நேரில் சந்தித்து ஆறுதல் சொல்ல ஏன் முதல்-அமைச்சர் போகவில்லை? ஸ்டெர்லைட் ஆலைக்காக மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது ஏன்?

    ‘அமைதியாக போராடியவர்கள் மீது துப்பாக்கிச்சூடு ஏன் நடத்தப்பட்டது’, என்று பத்திரிக்கையாளர்கள் கேட்டதற்கு, தாக்க வந்தால் தடுக்கத்தானே செய்வார்கள் என்று ஈவு இரக்கமின்றி பதில் சொல்லும் முதல்-அமைச்சர் அந்தப் பதவியில் இருக்க லாயக்கற்றவர் என்பதால் தான் உடனே பதவி விலகுங்கள் என்று தி.மு.க. மட்டுமல்ல, இன்றைக்கு ஒட்டுமொத்த தமிழகமே கேட்கிறது.

    144 தடை உத்தரவு போடப்பட்டிருக்கும் போது, எப்படி ஸ்டாலின் போனார்?, என்று கேள்வி எழுப்பி இருக்கிறார் முதல்-அமைச்சர். அப்பாவி மக்கள் 13 பேர் உயிரிழந்திருக்கிறார்கள்.

    நூற்றுக்கணக்கான பேர் படுகாயமடைந்து சிகிச்சைப் பெற்று வருகிறார்கள். எண்ணிக்கையில் அடங்காத இளைஞர்களை காணவில்லை என்று தூத்துக்குடி மக்கள் கொந்தளித்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படி துயரத்தில் துடித்துக் கொண்டிருக்கும் அப்பாவி மக்களை மருத்துவமனையில் சென்று சந்திக்கக்கூடாது என்று முதல்-அமைச்சர் கூறுவது, அவருக்கு இதயத்தில் ஈரமில்லை என்பதை வெளிக்காட்டுகிறது.

    அரசியல் சட்டத்திற்கு விரோதமாக முதல்-அமைச்சர் பதவியில் உட்கார்ந்து, தமிழகத்தை சீரழித்துக் கொண்டிருக்கும் எடப்பாடி பழனிசாமி, சட்டத்தை முதலில் மதிக்க வேண்டும், என்பது வேடிக்கையானது. நான் குறிப்பிட விரும்புவது, 13 உயிர்களை பறித்துவிட்டு, பலரது மண்டையை உடைத்துவிட்டு, இன்று வரை காவல்துறையை நள்ளிரவில் வீடுகளுக்குள் அனுப்பி பெண்களை அச்சுறுத்தியும், பள்ளிக்கூடம் செல்லும் பிள்ளைகளைக் கூட அடித்து, உதைத்து கைது செய்யவும் உத்தரவிட்டு விட்டு, சட்டத்தின் ஆட்சி பற்றி பேசுவற்கு எந்தத் தகுதியும் முதல்-அமைச்சருக்கு இல்லை, என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

    ஆகவே, ‘நீங்கள் ஆண்டதும் போதும், மக்கள் மாண்டதும் போதும், பதவியை விட்டு விலகுங்கள்’, என்று மீண்டும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை கேட்டுக்கொள்கிறேன். இல்லையென்றால் முதல்-அமைச்சர் பதவி விலகி சட்டம்-ஒழுங்கு டி.ஜி.பி. நீக்கப்படும் வரை எங்கள் போராட்டம் தொடரும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    மு.க.ஸ்டாலின் மற்றொரு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தூத்துக்குடி மருத்துவமனையில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்தபோது, அவர்கள் அனைவரும் ஒரே குரலில் காவல்துறையின் அட்டூழியத்தை அராஜகத்தை, சீருடையில்லாமல் சாதாரண உடையில் காவல்துறையினரை வாகனத்தின் மேல் நிறுத்தி குறி வைத்துச்சுட்டு வீழ்த்திய பயங்கரக் கொடுமைகளைக் கதறி அழுது கொட்டித்தீர்த்தது இன்னும் என் இதயத்தைக் கசக்கிப் பிழிந்து கொண்டிருக்கிறது.

    அப்பாவி மக்கள் மீது இருமுறை துப்பாக்கிச்சூடு நடத்தி, பலமுறை விருப்பம்போல் தடியடி நடத்தி, அங்கு ஒரு போர்க்கள ஒத்திகையை நடத்த உத்தரவிட்டது முதல்-அமைச்சரா? காவல்துறை சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி.யா? அல்லது தலைமைச் செயலாளரா? என்ற கேள்வி எல்லோருடைய மனதிலும் எழுகிறது.

    ஏதுமறியாத மக்கள் மீது அடக்குமுறையை கட்டவிழ்த்து, அரச பயங்கரவாதத்தை நிறைவேற்றினார்கள் என்பதற்கு தி.மு.க. ஆட்சி தமிழக மக்களின் பேராதரவோடு அமைந்தவுடன் நிச்சயம் பதில் சொல்ல வேண்டியதிருக்கும். பொறுப்பற்ற முறையில் செயல்பட்ட யாரும் சட்டரீதியான நடவடிக்கையில் இருந்து நிச்சயம் தப்பிக்க முடியாது என்று எச்சரிக்க விரும்பு கிறேன்.

    ஈழத்தில் கொடுங்கோலன் ராஜபக்சே நடத்தியதை நினைவுபடுத்துவதைப் போல, வேண்டுமென்றே ஊருக்குள் புகுந்து கைது செய்யப்பட்டவர்கள், பேரணியில் கைது செய்யப்பட்டவர்கள் எல்லாம் எங்கு இருக்கிறார்கள்? அவர்கள் எல்லாம் பாதுகாப்பாக இருக்கிறார்களா? அல்லது அவர்களுடைய உயிருக்கு அச்சுறுத்தலா? என்பது பற்றி அ.தி.மு.க. அரசு உடனடியாக ஒரு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள மற்றொரு அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய 3 மாவட்டங்களில் இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையான பாதிப்புக்கு உள்ளாக்கியுள்ளது. ஆன்லைன் மூலம் நடைபெற்றுவரும் ஏற்றுமதி, இறக்குமதி தொழில்கள் அனைத்துமே முடங்கியுள்ளது. தூத்துக்குடி துறைமுகப் பணிகள் மிகமோசமாக தேக்கமடைந்துள்ளன.

    தங்கள் பெற்றோர், உறவுகள் பத்திரமாக இருக்கிறார்களா? என்பதை தெரிந்துகொள்ள முடியாமல் வெளிநாட்டு வாழ் தூத்துக்குடி மக்கள் தவிக்கிறார்கள். மதிப்பெண் சான்றிதழ் பதிவிறக்கம் செய்யமுடியாமல் மாணவர்கள் திண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். ஆகவே இணையதள சேவை முடக்கத்தை உடனே மத்திய, மாநில அரசுகள் கைவிட்டு, உடனடியாக இணையதள சேவை தொடங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.  #EdappadiPalanisamy #Resignation #TNChiefMinister 
    ×