search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குற்றவாளிகள்"

    ஆசிட் வீச்சு சம்பவங்களில் தொடர்புடைய குற்றவாளிகள் கருணை அடிப்படையில் தண்டனை குறைப்பு கோர தகுதியற்றவர்கள் என சுப்ரீம் கோர்ட் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. #SC #AcidAttack
    புதுடெல்லி:

    இமாசலப்பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த 19 வயது இளம்பெண் மீது கடந்த 2004ம் ஆண்டு இரண்டு பேர் ஆசிட் வீசினர். இந்த தாக்குதலில் அந்த இளம்பெண் படுகாயம் அடைந்தார்.

    இதுதொடர்பாக நடைபெற்ற வழக்கில் விசாரணை நீதிமன்றம், குற்றவாளிகள் இருவருக்கும் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், தலா ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டது.

    இதையடுத்து, தங்களுக்கு வழங்கப்பட்ட தண்டனையை குறைக்க கோரி குற்றவாளிகள் அம்மாநில ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி, அவர்களது தண்டனையை 5 ஆண்டுகளாக குறைத்து, அபராத தொகையை தலா ரூ. 25 ஆயிரமாக உயர்த்தி உத்தரவிட்டார்.

    குற்றவாளிகளுக்கு ஆதரவாக குறைக்கப்பட்ட தண்டனைக்கு தடைவிதிக்க கோரி மாநில அரசு சார்பில் கடந்த 2008ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதற்கிடையே, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் குற்றவாளிகள் இருவரும் தண்டனை காலம் முடிந்து சிறையில் இருந்து விடுதலை ஆகினர். அபராத தொகையையும் அவர்கள் செலுத்திவிட்டனர்.



    இந்நிலையில்,  இமாசலப்பிரதேசம் மாநில அரசு தொடுத்த வழக்கு சுப்ரீம் கோர்ட் நீதிபதி கன்வில்கர் மற்றும் நீதிபதி அஜய் ரஸ்டோகி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

    வழக்கை விசாரித்த நீதிபதிகள், இளம்பெண் மீது ஆசிட் வீசிய குற்றவாளிகளுக்கு எந்த விதத்திலும் கருணை காட்ட முடியாது. ஆசிட் வீச்சு சம்பவங்களில் தொடர்புடைய நாகரீகமற்ற, இதயமே இல்லாத குற்றவாளிகள் கருணை அடிப்படையில் தண்டனை குறைப்பு கோர தகுதியற்றவர்கள் என திட்டவட்டமாக தெரிவித்தனர்.

    மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு குற்றவாளிகள் இருவரும் தலா ஒன்றரை லட்சம் ரூபாய் இழப்பீடாக தரவேண்டும். மாநில அரசும்  ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இழப்பீடு அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.  #SC #AcidAttack
    பள்ளி மாணவிகள் இருவரை விபசாரத்தில் ஈடுபடுத்திய வழக்கில் மதபோதகர் உள்பட 16 பேர் குற்றவாளிகள் என்று கடலூர் மகளிர் கோர்ட்டு பரபரப்பான தீர்ப்பு வழங்கியது. #Students #Harassment
    கடலூர்:

    கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த 2014-ம் ஆண்டு 7-ம் வகுப்பு படித்து வந்த 13 வயது மாணவியும், 8-ம் வகுப்பு படித்து வந்த 14 வயது மாணவி ஒருவரும் இணைபிரியாத தோழிகளாக இருந்தனர்.

    இவர்களில் 13 வயது மாணவி தனது பெற்றோரை இழந்தவர் என்பதால், தனது பாட்டியின் பராமரிப்பில் தங்கி படித்து வந்தார்.

    இவர்கள் பள்ளிக்கூடத்தின் அருகே உள்ள இட்லி கடைக்கு சென்று பலகாரங்களை வாங்கி சாப்பிடுவது வழக்கம். ஒருநாள் 13 வயது மாணவி பலகாரம் வாங்குவதற்காக இட்லி கடைக்கு சென்றபோது இட்லி கடை உரிமையாளரான செந்தில்குமாரின் மனைவி தனலட்சுமி (வயது 40) தனது கள்ளக்காதலனான திருக்கண்டேஸ்வரத்தை சேர்ந்த டவர் என்ற ஆனந்தராஜூடன் (24) உல்லாசமாக இருந்ததை பார்த்து விட்டார்.

    அதனால் அதிர்ச்சி அடைந்த தனலட்சுமி, தனது லீலை வெளியே தெரியாமல் இருப்பதற்காக அந்த மாணவியை தனது வீட்டுக்கு அழைத்துச்சென்று கட்டாயப்படுத்தி, ஆனந்தராஜூடன் உல்லாசமாக இருக்க வைத்தாள். அதன்பிறகு ஆனந்தராஜ் பலமுறை மிரட்டி அந்த மாணவியுடன் உல்லாசம் அனுபவித்ததோடு, தனது நண்பர்களான திட்டக்குடியைச் சேர்ந்த மோகன் என்ற மோகன்ராஜ் (28), மதிவாணன் (23) ஆகியோருக்கும் மாணவியை விருந்தாக்கினான்.

    இதனால் உடல்நிலை பாதிக்கப்பட்ட மாணவி தனலட்சுமியிடம் கூறி கதறி அழுதார். பின்னர் தனலட்சுமி மிரட்டியதால் தனது 14 வயது தோழியையும் தனலட்சுமியின் வீட்டுக்கு அழைத்துச்சென்றார். அந்த மாணவியும் ஆனந்தராஜின் காமப்பசிக்கு இரையானாள்.

    பின்னர் தனலட்சுமி மாணவிகள் இருவரையும் விருத்தாசலத்தில் உள்ள விபசார புரோக்கர் கலாவின் வீட்டுக்கு அழைத்துச்சென்று கட்டாயப்படுத்தி விபசாரத்தில் ஈடுபடுத்தினாள்.

    அதன்பிறகு கலா இருவரையும் திட்டக்குடியைச் சேர்ந்த மதபோதகர் அருள்தாஸ் என்பவர் வீட்டுக்கு அனுப்பிவைத்தாள். அங்கு அவர் 13 வயது மாணவியுடன் உல்லாசம் அனுபவித்தார்.



    இதேபோல் கலாவும், தனலட்சுமியும், சக புரோக்கர்களும் இரு மாணவிகளையும் விழுப்புரம் மாவட்டம் வளவனூர், சேலம், கடலூர் மாவட்டம் வடலூர் ஆகிய இடங்களுக்கு அழைத்துச்சென்று லாட்ஜிலும், வாடகை வீடுகளிலும் தங்க வைத்து விபசாரத்தில் ஈடுபடுத்தினார்கள்.

    கடைசியாக வடலூரில் சதீஷ்குமார், அவரது மனைவி தமிழரசி ஆகியோருக்கு மாணவிகள் விற்கப்பட்டனர். அவர்கள் இரு மாணவிகளையும் வடலூரில் உள்ள வாடகை வீட்டில் தங்கவைத்து விபசாரத்தில் ஈடுபடுத்தினார்கள். ஒருநாள் இரவில் மாணவிகள் இருவரும் அங்கிருந்து தப்பி திட்டக்குடிக்கு சென்று போலீசில் தங்களுக்கு நேர்ந்த கொடுமை பற்றி தெரிவித்தனர்.

    இது தொடர்பாக 10 பெண்கள் உள்பட 19 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    அவர்கள் பெயர் விவரம் வருமாறு:-

    1. சதீஷ்குமார் (28), அரியலூர் மாவட்டம் உடையார் பாளையம் இடையாக்குறிச்சியை சேர்ந்தவர்.

    2. தமிழரசி (27), சதீஷ்குமாரின் மனைவி.

    3. கலா (48), விருத்தாசலம் நாச்சியார்பேட்டை.

    4. தனலட்சுமி, திட்டக்குடி பெரியார் நகரைச் சேர்ந்த செந்தில்குமாரின் மனைவி.

    5. மதபோதகர் அருள்தாஸ்

    6. ஸ்ரீதர் (23), ஊ.மங்கலம் காட்டுக்கூனங்குறிச்சி

    7. பாத்திமா (35), வளவனூர் கூட்டுறவு நகரைச் சேர்ந்த சாதிக் பாட்ஷா என்பவரின் மனைவி.

    8. மகா என்ற மகாலட்சுமி (20) பண்ருட்டியைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் மனைவி.

    9. ராதா என்ற கிரிஜா (35), நெல்லிக்குப்பம் சுல்தான்பேட்டை.

    10. ஷர்மிளாபேகம் (34), விருத்தாசலம்.

    11. கவிதா என்ற ராஜலட்சுமி (34), வடலூர் ஆபத்தராணபுரத்தைச் சேர்ந்த அஞ்சாபுலி என்பவரின் மனைவி.

    12. அன்பழகன் (28), சேலம் அயோத்தியாபட்டணம்.

    13. அமுதா (28), அன்பழகனின் மனைவி.

    14. மோகன் என்ற மோகன்ராஜ் (28), திட்டக்குடி பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர்.

    15. மதிவாணன் (23), திட்டக்குடி.

    16. அன்பு என்ற செல்வராஜ், விருத்தாசலம்.

    17. டவர் என்ற ஆனந்தராஜ், திருக்கண்டேஸ்வரம்.

    18. பாலசுப்பிரமணியன் (42), விருத்தாசலம் புதுப்பேட்டை பாரதிநகர்.

    19. ராதா என்ற ராதிகா (30) பண்ருட்டி செக்கு மேட்டுத்தெருவைச் சேர்ந்த முத்துவேல் என்பவரின் மனைவி.

    மேற்கண்ட 19 பேர் மீதும் ‘போக்சோ’ சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகளின் கீழ் திட்டக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    இந்த வழக்கில் சதீஷ்குமார், அவரது மனைவி தமிழரசி ஆகியோர் தலைமறைவாக உள்ளனர். மற்ற 17 பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இதற்கிடையே இந்த வழக்கின் விசாரணையில் தொய்வு ஏற்பட்டதால் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணைக்கு வழக்கை மாற்ற வேண்டும் என்று 14 வயது மாணவியின் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் ‘ரிட்’ மனு தாக்கல் செய்யப்பட்டது.

    அந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு கடந்த 4-7-2016 அன்றைய தேதி இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது.

    இதைத்தொடர்ந்து சி.பி. சி.ஐ.டி. கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு லாவண்யா மேற்பார்வையில் கடலூர் இன்ஸ்பெக்டர் தீபா விசாரணை நடத்தி 19 பேர் மீதும் கடலூர் மகளிர் கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தார்.

    இந்த வழக்கு விசாரணை கடலூர் மகளிர் கோர்ட்டில் நீதிபதி லிங்கேஸ்வரன் முன்னிலையில் நடைபெற்று வந்தது. அப்போது பாதிக்கப்பட்ட இரு மாணவிகளும் கோர்ட்டில் ஆஜராகி 17 பேரையும் அடையாளம் காட்டினார்கள். மேலும் சிறைச்சாலையில் நடந்த அடையாள அணி வகுப்பிலும் இரு மாணவிகளும் 17 பேரையும் அடையாளம் காட்டினார்கள்.

    இந்த வழக்கு விசாரணை நடைபெறும் போது, பாதிக்கப்பட்ட இரு மாணவிகளும் பாதுகாப்பு கருதி சென்னையில் உள்ள காப்பகத்தில் தங்கவைக்கப்பட்டனர். அவர்களில் ஒரு மாணவி மேல்படிப்பு படிக்கிறார்.

    எனவே இரு மாணவிகளுக்கும் அரசு சார்பில் இடைக்கால நிவாரணம் வழங்கக்கோரி அரசு வக்கீல் க.செல்வபிரியா கடலூர் மகளிர் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதி லிங்கஸ்வேரன் இரு மாணவிகளுக்கும் இடைக்கால நிவாரணமாக தலா 2 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என்று அரசுக்கு உத்தரவிட்டார்.

    இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில் நேற்று தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனால் 17 பேரும் நேற்று கடலூர் மகளிர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

    நீதிபதி லிங்கேஸ்வரன் மாலை 4 மணி அளவில் பரபரப்பான தீர்ப்பை வழங்கினார். வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மகா என்ற மகாலட்சுமி என்பவர் சதீஷ்குமாரால் பாதிக்கப்பட்டவர் என்பதால் மகாலட்சுமியை மட்டும் விடுதலை செய்து நீதிபதி லிங்கேஸ்வரன் உத்தரவிட்டார். மதபோதகர் அருள்தாஸ் உள்பட மற்ற 16 பேரும் குற்றவாளிகள் என்று நீதிபதி தீர்ப்பு அளித்தார்.

    இவர்களுக்கான தண்டனை விவரம் வருகிற 7-ந் தேதி (திங்கட்கிழமை) அறிவிக்கப்படும் என்று நீதிபதி லிங்கேஸ்வரன் அறிவித்தார்.

    இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் க.செல்வபிரியா ஆஜராகி வாதாடினார். #Students #Harassment
    மும்பை பயங்கரவாத தாக்குதல் குற்றவாளிகள் பற்றியோ அல்லது அதற்கு திட்டம் தீட்டிய அல்லது உதவியவர்கள் பற்றிய தகவல் அளித்தால் 5 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.35 கோடி) பரிசு வழங்கப்படும் என அமெரிக்கா அறிவித்துள்ளது. #MumbaiTerrorAttack #USReward
    வாஷிங்டன்:

    மும்பையில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் 10 பேர் கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் மாதம் 26-ம் தேதி கடல் வழியாக ஊடுருவி திடீர் தாக்குதல் நடத்தினர். 29-ம் தேதி வரை பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட இந்த தாக்குதல்களில் 6 அமெரிக்கர்கள் உள்ளிட்ட 166 பேர் உயிரிழந்தனர். 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். தாக்குதலில் ஈடுபட்ட 9 பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். உயிருடன் பிடிபட்ட பயங்கரவாதி அஜ்மல் கசாப் 2012ம் ஆண்டு தூக்கிலிடப்பட்டான். உலகையே உலுக்கிய இந்த தாக்குதல் சம்பவத்தின் 10ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

    இந்நிலையில், மும்பை தாக்குதலில் தொடர்புடைய குற்றவாளிகள் குறித்து துப்பு கொடுத்தால் 5 மில்லியன் டாலர் (இந்திய ரூபாய் மதிப்பில் 35 கோடி) வெகுமதி வழங்கப்படும் என அமெரிக்கா அறிவித்துள்ளது.


    மும்பை தாக்குதலில் ஈடுபட்டவர்கள், தாக்குதலுக்கு சதி செய்தவர்கள் மற்றும் உதவியவர்கள் எந்த நாட்டில் இருந்தாலும் அவர்கள் குறித்து தகவல் தெரிவித்தால் இந்த வெகுமதி வழங்கப்படும் என அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி மைக் பாம்பியோ கூறியுள்ளார். #MumbaiTerrorAttack #USReward
    தேனி மாவட்டத்தில் 10 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்த வழக்கில் 3 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து மகிளா நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. #DeathPenalty #Theni
    தேனி:

    தேனி மாவட்டத்தில் கடந்த 2014-ம் ஆண்டு தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் 10 வயது சிறுமி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.

    இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சுந்தர்ராஜ், ரூபின், மற்றும் குமரேசன் ஆகியோர் மீதான குற்றம் நீரூபிக்கப்பட்டு அவர்களுக்கு இன்று தண்டனை வழங்கப்பட்டது. 10 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்த வழக்கில் மூவருக்கும் தூக்கு தண்டனை விதித்து தேனி மாவட்ட மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #DeathPenalty #Theni
    இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் சிறைச்சாலைகள் இடிந்து விழுந்ததில், அங்கிருந்த கைதிகள் தப்பியோடியுள்ளனர். #Indonesiaquaketsunami
    ஜகர்த்தா:

    இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் கடந்த வெள்ளியன்று 7.5 ரிக்டரில் நிலநடுக்கமும், 170 முறை நில அதிர்வுகளும் ஏற்பட்டதைத் தொடர்ந்து பலு, டோங்கலா பகுதிகளில் சுனாமியும் தாக்கியது.

    இயற்கையின் இந்த சீற்றத்தால் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும், பல்லாயிரக்கணக்கானோர் தங்கள் உடமைகளை இழந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் ஏற்பட்ட பாதிப்புகளை சீர்செய்ய அந்நாட்டு அரசு தீவிரமாக போராடி வருகிறது.

    இந்நிலையில், நிலநடுக்கத்தின்போது சுற்றுச்சுவர் இடிந்ததால் பலு மற்றும் டோங்கலா சிறைகளில் இருந்து ஆயிரத்து 200 குற்றவாளிகள் தப்பியுள்ளனர். நிலநடுக்கம், சிறை வளாகத்தில் புகுந்த நீர் ஆகியவற்றால் உயிர் பயத்தாலும், தங்கள் குடும்பத்தினரின் நிலை அறியவும் குற்றவாளிகள் தப்பியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. #Indonesiaquaketsunami
    மத்தியப்பிரதேசம் மாநிலம், மன்ட்சவுர் மாவட்டத்தில் கடந்த ஜூன் மாதம் 7 வயது சிறுமி கற்பழிக்கப்பட்ட வழக்கில் இரு குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. #2mengetdeathsentence #Mandsaurminorgirl
    போபால்:

    மத்தியப்பிரதேசம் மாநிலம், மன்ட்சவுர் மாவட்டத்தில் கடந்த ஜூன் மாதம் 26-ம் தேதி மாலை பள்ளி முடிந்ததும் வீட்டுக்கு அழைத்து செல்லவரும் தந்தைக்காக 7 வயது சிறுமி காத்திருந்தாள்.

    அப்போது, அங்கு வந்த இர்பான்(எ)பய்யு(20), ஆசிப்(24) ஆகியோர் அந்த சிறுமியின் வாயைப்பொத்தி அங்கிருந்து கடத்திச் சென்றனர். அருகாமையில் உள்ள ஒதுக்குப்புறமான இடத்தில் சிறுமியை கற்பழித்தனர். மேலும், கழுத்தை அறுத்து அவளை கொல்லவும் முயன்றனர்.

    உயிருக்கு போராடி, கதறிய சிறுமியின் கூச்சலை கேட்டு அப்பகுதியை கடந்துசென்ற சிலர் உதவிக்கு ஓடிவந்தனர். இதை கண்டதும் அந்த இரு காமுகர்களும் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

    இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், பிறப்புறுப்பு உள்ளிட்ட உடலின் பல பாகங்களில் படுகாயங்களுடன் கிடந்த சிறுமியை இந்தூரில் உள்ள அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

    இன்னும் அவள் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இவ்வழக்கை விரைந்து விசாரித்த சிறப்பு நீதிமன்ற நீதிபதி நிஷா குப்தா, குற்றவாளிகள் இருவருக்கும் (சமீபத்தில் அமலுக்கு வந்த 12 வயதுக்கும் குறைவான சிறார்-சிறுமியர் கற்பழிப்பு தண்டனை சட்டத்தின்கீழ்) மரண தண்டனை விதித்து இன்று தீர்ப்பளித்தார். #2mengetdeathsentence  #Mandsaurminorgirl   
    கதுவா கற்பழிப்பு வழக்கில் ஜம்மு காஷ்மீர் சிறையில் உள்ள குற்றவாளிகளை குர்தஸ்ப்பூர் சிறைக்கு மாற்றம் செய்து உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. #KathuaCase
    புதுடெல்லி:

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் கதுவா பகுதியில் 8 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்த சம்பவம் தொடர்பாக குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

    சிறுமி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள மன்னு என்பவரை போலீசார் துன்புறுத்துவதாக பதன்கோட் நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டது. இந்த மனு தொடர்பாக அம்மாநில டி.ஜி.பி பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதுதொடர்பாக பதிலளித்த டி.ஜி.பி இந்த குற்றச்சாட்டில் உண்மை ஏதும் இல்லை என பதிலளித்தார்.

    இதேபோல், சிறப்பு புலனாய்வுத்துறை அதிகாரிகளும் இந்த மனு பொய்யானது என தங்களது பதிலை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர். இதையடுத்து, சிறையில் இருக்கும் மன்னுவின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

    இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை இன்று விசாரித்த தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அடங்கிய அமர்வு, கதுவா வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளிகளை ஜம்மு காஷ்மீர் சிறையில் இருந்து பஞ்சாப்பில் உள்ள குர்தஸ்ப்பூர் சிறைக்கு மாற்றம் செய்யுமாறு உத்தரவிட்டனர்.

    மேலும், விசாரணை நீதிமன்றத்தின் செயல்பாடுகளில் திருப்தி இல்லை என்றால், பஞ்சாப் அல்லது அரியானா மாநிலங்களில் உள்ள நீதிமன்றங்களுக்கு இந்த வழக்கை மாற்றிக்கொள்ளலாம் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

    இதைத்தொடர்ந்து, இந்த வழக்கினை விசாரித்து வரும் நீதிபதி மற்றும் சிறப்பு அரசு வக்கீல் ஆகியோருக்கு ஜம்மு காஷ்மீர் அரசு கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும், குற்றம் சாட்டப்பட்டவர்களின் பெற்றோர்கள் அவர்களை சந்திக்க விரும்பினால் காஷ்மீர் மாநில அரசின் செலவில் அவர்களை பார்க்க அனுமதிக்குமாறும் உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது. #KathuaCase
    நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் மரண தண்டனையை ரத்து செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மறு ஆய்வு மனுக்கள் மீது உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்க உள்ளது.
    புதுடெல்லி:

    டெல்லியில், கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பர் 16-ந் தேதி இரவு, ஓடும் பஸ்சில் மருத்துவ மாணவி நிர்பயா 6 பேர் கொண்ட கும்பலால் கற்பழித்துக் கொல்லப்பட்டார். குற்றவாளிகள் 6 பேரும் கைது செய்யப்பட்டனர். ஒருவன், சிறுவன் என்பதால் குறைந்தபட்ச தண்டனையுடன் தப்பினான். முக்கிய குற்றவாளி ராம்சிங், சிறையில் தற்கொலை செய்துகொண்டான்.

    மற்ற குற்றவாளிகளான முகேஷ், பவன், வினய், அக்‌ஷய் ஆகியோருக்கு டெல்லி ஐகோர்ட்டு மரண தண்டனை விதித்தது. பின்னர் மேல்முறையீட்டில் இந்த தண்டனையை சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்தது. அதன்பின்னர் முகேஷ், பவன், வினய் ஆகியோர், மரண தண்டனையை மறுஆய்வு செய்யக்கோரும் மனுக்களை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தனர். அக்‌ஷய் மனு தாக்கல் செய்யவில்லை. 3 பேரின் மனுக்கள் மீது விசாரணை நடத்தப்பட்டு, கடந்த மே 4-ந் தேதி தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது.

    இந்நிலையில், தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில் நீதிபதி அசோக் பூஷன், ஆர்.பானுமதி ஆகியோர் அடங்கிய அமர்வு, இன்று அந்த மனுக்கள் மீது தீர்ப்பு அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. #NirbhayaCase #Nirbhaya
    உத்திரப்பிரதேச மாநிலத்தில் பல்வேறு குற்றவழக்குகளில் தேடப்பட்டு வந்த 2 குற்றவாளிகள் போலீசார் நடத்திய என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
    லக்னோ:

    உத்திரப்பிரதேச மாநிலம் ராம்நகர் பகுதியில் 17 குற்ற வழக்குகளில் தேடப்பட்டு வந்த முஷிர் மற்றும் இப்ராகிம் ஆகிய 2 குற்றவாளிகள் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்று அதிகாலை குற்றவாளிகள் பதுங்கி இருக்கும் இடத்தை போலீசார் சுற்றி வளைத்தனர்.

    போலீசாரை கண்ட முஷிர் மற்றும் இப்ராகிம் அங்கிருந்து தப்பிப்பதற்காக போலீசாரை துப்பாக்கியால் சுட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் காவல்துறையினரும் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

    போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 குற்றவாளிகளும் கொல்லப்பட்டனர். இதுகுறித்து எஸ்.பி. ஸ்ரீவசதாவ் கூறுகையில், 'அவர்கள் துப்பாக்கியால் சுட்டதில் 3 காவலர்கள் காயமடைந்தனர். தற்காப்புக்காக நாங்கள் சுட்டதில் முஷிர் மற்றும் இப்ராகிம் கொல்லப்பட்டனர்' என தெரிவித்துள்ளார்.

    முஷிர் மற்றும் இப்ராகிமை பிடித்துக்கொடுக்க 50 ஆயிரம் ரூபாய் தொகை அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
    சட்ட விதிகைள மீறி சிமி இயக்கம் நடத்திய பயிற்சி முகாம் தொடர்பான வழக்கில் 18 பேர் குற்றவாளிகள் என தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. #NIAcourt #SIMItrainingcampcase
    திருவனந்தபுரம்:

    நாட்டிற்கு எதிராக சிமி என்ற இயக்கம் கடந்த 2007-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கர்நாடகா, மத்திய பிரேதசம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் பயிற்சி முகாம்களை நடத்தியது. இதைதொடர்ந்து, கேரளா மாநிலம் கோட்டயம் என்ற பகுதியிலும் சிமி இயக்கம் ரகசிய முகாம் நடத்தியது.

    இந்த முகாமில்,  ஆயுத பயிற்சி, வெடி குண்டு தயாரித்தல், கயிறு ஏறும் பயிற்சி, மோட்டார் சைக்கிள் ரேஸ் பயிற்சி போன்ற பயிற்சிகள் அளிக்கப்பட்டது. மேலும், பயங்கரவாத தாக்குதல்களை நடத்த தேவையான அனைத்து பயிற்சிகளும் வழங்கப்பட்டு வந்தது.
     
    இதுதொடர்பாக பலர் கைது செய்யப்பட்டனர். கொச்சியில் உள்ள தேசிய புலனாய்வு அமைப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது. இந்த வழக்கு இன்று சிறப்பு நீபதிபதி கவுசர் எடப்பாகாத் முன்னிலையில் விசாரைணக்கு வந்தது. இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதி அறிவித்தார்.

    இந்த வழக்கில் குற்றம்சாடப்பட்ட 35 பேர்களில், 18 பேரை குற்றவாளிகளாக அறிவித்தும் 17 பேரை இந்த வழக்கில் இருந்து விடுவித்தும் நீபதிபதி தீர்ப்பு அளித்தார். குற்றவாளிகளுக்கான தண்டனை விபரம் நாளை அறிவிக்கப்படுகிறது. #NIAcourt #SIMItrainingcampcase 
    ×