search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிரார்த்தனை"

    பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் பிரசாரத்தை தொடங்க உள்ள காங்கிரஸ் தலைவர்கள், சபர்மதி ஆசிரமத்தில் இன்று பிரார்த்தனை செய்தனர். #CongressWorkingCommittee #CWCMeeting #SabarmatiAshram
    அகமதாபாத்:

    பாராளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக காங்கிரஸ் கட்சியின் காரியக் கமிட்டி கூட்டம் இன்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடக்கிறது. கட்சித்தலைவர் ராகுல் காந்தி தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் சோனியா, மன்மோகன் சிங், பிரியங்கா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். 58 ஆண்டுகளுக்குப் பிறகு குஜராத் மாநிலத்தில் காரிய கமிட்டி கூட்டம் நடைபெறுவதால் காங்கிரஸ் கட்சியினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.

    காரிய கமிட்டி கூட்டத்தில் பங்கேற்பதற்காக குஜராத் மாநிலத்திற்கு வந்திருந்த சோனியா, ராகுல், மன்மோகன் சிங், பிரியங்கா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் அனைவரும் இன்று காலை அகமதாபாத்தில் உள்ள சபர்மதி ஆசிரமத்திற்கு சென்றனர்.  மகாத்மா காந்தி தண்டி யாத்திரையை தொடங்கிய நாளான இன்று, சபர்மதி ஆசிரமத்தில் நடந்த பிரார்த்தனைக் கூட்டத்தில் அனைவரும் பங்கேற்றனர்.



    வல்லவாய் படேல் தேசிய நினைவிடத்தில் காரிய கமிட்டி கூட்டம் நடைபெற உள்ளது. காரிய கமிட்டி கூட்டம் முடிவடைந்ததும் கட்சி சார்பில், பல்வேறு விவகாரங்களை உள்ளடக்கிய அறிக்கை வெளியிடப்படும்.

    காரியக் கமிட்டிக் கூட்டத்திற்குப் பிறகு காந்திநகரின் அடலாஜ் பகுதியில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடக்கிறது. இதில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் தலைவர் சோனியா, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட உயர்மட்ட தலைவர்கள் உரையாற்றுகிறார்கள்.

    சமீபத்தில் அரசியலுக்குள் அடியெடுத்து வந்த பிரியங்கா காந்தி பங்கேற்கும் முதல் பொதுக்கூட்டம் என்பதால், அவர் உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. #CongressWorkingCommittee #CWCMeeting #SabarmatiAshram
    வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் பெரிய தேர்பவனி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் உற்சாக மிகுதியில் கைத்தட்டி ‘மரியே வாழ்க‘ என கோ‌ஷமிட்டு பிரார்த்தனை செய்தனர். #velankannichurch

    வேளாங்கண்ணி:

    இந்தியாவில் உள்ள பிரசித்தி பெற்ற கத்தோலிக்க கிறிஸ்தவ தேவாலயங்களில் நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கிய மாதா பேராலயம் முக்கிய இடம் வகிக்கிறது. இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் 11 நாட்கள் திருவிழா விமர்சையாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த மாதம்(ஆகஸ்ட்) 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழா தொடங்கியது முதல் ஒவ்வொரு நாளும் பேராலயத்திலும், பேராலய வளாகத்தில் உள்ள விண்மீன் ஆலயம், மேல்கோவில், கீழ்கோவில் ஆகிய இடங்களிலும் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம், கொங்கனி, மராத்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. அதேபோல சிலுவை பாதை வழிபாடு, ஜெப மாலை, நவநாள் ஜெபம், மாதா மன்றாட்டு, திவ்ய நற்கருணை உள்ளிட்ட பிரார்த்தனை நிகழ்ச்சிகள் விமரிசையாக நடைபெற்றன.

    வேளாங்கண்ணி பேராலய திருவிழாவின் பிரதான நிகழ்ச்சியான மாதா பெரிய தேர்பவனி நேற்று இரவு நடந்தது. நிகழ்ச்சியில் தஞ்சை மறை மாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் தலைமையில் சிறப்பு கூட்டு திருப்பலி நிறைவேற்றப்பட்டது. இதில் பேராலய அதிபர் பிரபாகர், பங்குதந்தை சூசை மாணிக்கம், பொருளாளர் யாகப்பா ராஜரத்தினம், உதவி பங்கு தந்தைகள் மற்றும் அருட்தந்தையர்கள் கலந்து கொண்டனர். திருப்பலியை தொடர்ந்து தஞ்சை மறை மாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் தேரை புனிதம் செய்தார்.

    இதையடுத்து இரவு 7.55 மணிக்கு பேராலயத்தின் மணிகள் ஒலிக்க, மின் விளக்கு மலர் அலங்காரத்துடன் தயார் நிலையில் இருந்த புனித ஆரோக்கிய மாதா சொரூபம் தாங்கிய பெரிய தேர், பேராலய முகப்பில் இருந்து புறப்பட்டு சென்றது.

    தேர் புறப்பட்டதும் பேராலயத்தை சுற்றி திரண்டு இருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் உற்சாக மிகுதியில் கைத்தட்டி ‘மரியே வாழ்க‘ என கோ‌ஷமிட்டு பிரார்த்தனை செய்தனர். மாதா தேருக்கு முன்பாக புனித மிக்கேல் சம்மனசு, புனித சூசையப்பர், புனித அந்தோணியார், புனித செபஸ்தியார், அமலோற்பவ மாதா, புனித உத்திரியமாதா ஆகியோரின் தேர்கள் வண்ண விளக்குகளின் அலங்காரங்களுடன் அணிவகுத்தன.

    இந்த 7 தேர்களின் முன்பாகவும், தேரை பின்தொடர்ந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சென்றனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் மத்தியில் அலங்கார தேர்கள் வலம் வரும் நிகழ்ச்சி கண்கொள்ளா காட்சியாக அமைந்தது. தேர்வலம் வரும்போது பக்தர்கள் தேர் மீது பூக்களை தூவி ஜெபித்தனர். தேர்பவனி பேராலய முகப்பிற்கு வந்து சேர்ந்ததும், புனித ஆரோக்கிய மாதாவிற்கு நன்றி செலுத்தும் விதமாக பிரார்த்தனை நிறைவேற்றப்பட்டது.

    விழாவில் நாகை மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார், தஞ்சை சரக டி.ஐ.ஜி. லோகநாதன், போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார், வேளாங்கண்ணி பேரூராட்சி செயல் அலுவலர் கனகராஜ் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். #velankannichurch

    கேரள வெள்ள பாதிப்புகளில் இருந்து மக்கள் விரைவில் மீள, நாகை வேளாங்கண்ணி பேராலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
    நாகப்பட்டினம்:

    கேரள மாநிலத்தில் நீடித்து வரும் வரலாறு காணாத மழை, வெள்ளத்தால் இதுவரை 40 பேர் பலியாகி உள்ளனர். மேலும் பல்லாயிரக்கணக்கான கோடி மதிப்பில் சேதம் ஏற்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான மக்கள் தங்களது வீடுகள், உடமைகளை இழந்து தவிக்கிறார்கள்.

    கேரளாவில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்புக்கு தமிழக அரசு சார்பில் ரூ.1 கோடி நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் நடிகர்களில் கமல் ரூ. 25 லட்சமும், சூர்யா, கார்த்தி ஆகியோர் ரூ.25 லட்சமும் நிவாரண நிதி அளித்தனர். இதைபோல் தமிழகத்தில் பலவேறு பகுதிகளில் இருந்தும் தன்னார்வ அமைப்புகள் கேரள மாநிலத்துக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளன.

    இந்த நிலையில் கேரள மாநிலத்தில் இயற்கைச் சிற்றங்கள் நீங்கி, வெள்ள பாதிப்புகளில் இருந்து மக்கள் விரைவில் மீளவும், வெள்ளத்தில் பலியானவர்களின் ஆன்மா சாந்தி அடைய வேண்டியும், நாகை வேளாங்கண்ணி பேராலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

    வேளாங்கண்ணி பேராலய விண்மீன் ஆலயத்தில் நடந்த இந்த பிரார்த்தனையை பேராலய அதிபர் ஏ.எம்.ஏ.பிரபாகர் அடிகளார் மற்றும் உதவி பங்குத் தந்தையர்கள் முன்னின்று நடத்தி வைத்தனர். இதில் தமிழ், மலையாளம், ஆங்கிலம் உள்பட பல மொழிகளில் பிரார்த்தனை நடத்தப்பட்டது.

    தமிழகம் மற்றும் பிற மாநிலங்களின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த பிரார்த்தனையில் கலந்து கொண்டனர்.
    ×