search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 123633"

    • மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால்களளை கலெக்டர் வழங்கினார்.
    • அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள ஊரக வளர்ச்சி முகமை அலுவலகக் கூட்டரங்கில் ஊரக வளர்ச்சித் துறை மூலம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ், பணிபுரியும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் அனைத்து மாற்றுத்திற னாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. கலெக்டர் மேகநா தரெட்டி தலைமை தாங்கினார்.

    விருதுநகர் மாவட்டத்தில் சுமார் 25 ஆயிரம் மாற்றுத்திறனாளிகள் வசித்து வருகின்றனர். அவர்களின் குறைகளை தீர்ப்பதற்கும்,

    அவர்களுக்கு தேவையான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கும் வகையிலும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ், பணிபுரியும் மாற்றுத்திறனாளிகளின் குறைகளை தீர்க்கும் வகையிலும் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது.

    இதில், வேலைவாய்ப்பு, சுயதொழில் கடனுதவி, வீட்டுமனை பட்டா, வீடு, உதவித்தொகை, இருசக்கர வாகனம், 3 சக்கர வண்டி, குடும்ப அட்டை, திறன் பயிற்சி, அடையாள அட்டை, மாற்றுத்திறனாளி உபகரணங்கள், மகாத்மா காந்தி தேசிய ஊரக உறுதி திட்ட அடையாள அட்டை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக சுமார் 500 மனுக்கள் பெறப்பட்டன.

    இந்த மனுக்களுக்கு தீர்வுகாணுமாறு, கலெக்டர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மனு அளித்த கால்களை இழந்த 2 மாற்றுத்திறனாளிகளுக்கு முதல்-அமைச்ச ர் காப்பீட்டு திட்டத்தின் கீழ், நவீன செயற்கை கால்களையும், ஊன்றுகோல் வேண்டி மனு அளித்த பார்வையற்ற மாற்றுத்திறனாளிக்கு நவீன ஊன்றுகோல் மற்றும் மூக்கு கண்ணாடியையும் கலெக்டர் மேகநாதரெட்டி வழங்கினார்.

    இதில் திட்ட இயக்குநர்கள் திலகவதி, தெய்வேந்திரன், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம் ) ஜெயராணி, வேளாண்மை இணை இயக்குநர் உத்தண்டராமன், மருத்துவப்பணிகள் இணை இயக்குநர் முருகவேல், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) சங்கர்நாராயணன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் சந்திரசேகர், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் பாண்டிசெல்வன், உதவி கலெக்டர் (பயிற்சி) ஷாலினி மற்றும் பல ர் கலந்து கொண்டனர்.

    • மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மகிழ்நன் தலைமையில் மாற்றுத் திறனாளிகள் தனித்துவ அடையாள அட்டைக்கான விண்ணப் பம் பெறும் முகாம் நடை பெற்றது.
    • இந்த முகாமை ஏற்காடு மகளிர் திட்ட ஒருங்கிணைப்பாளர் சிலம்பரசன் ஏற்பாடு செய்திருந்தார்.

    ஏற்காடு:

    சேலம் மாவட்டம் ஏற்காட்டில் நேற்று மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மகிழ்நன் தலைமையில் மாற்றுத் திறனாளிகள் தனித்துவ அடையாள அட்டைக்கான விண்ணப் பம் பெறும் முகாம் நடை பெற்றது. இந்த முகாமை ஏற்காடு மகளிர் திட்ட ஒருங்கிணைப்பாளர் சிலம்பரசன் ஏற்பாடு செய்திருந்தார்.

    இந்த முகாமில் ஏற்காடு மலை கிராமங்களை சேர்ந்த 65 மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டைக்கான விண்ணப்பங்களை கொடுத்தனர். அதனை தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மகிழ்நன் அந்த விண்ணப்பங்களின் ஆவணங்களை முகாமிலேயே சரிபார்த்து அடையாள அட்டை வழங்குவதற்கான ஒப்புதலும் வழங்கினார்.

    மேலும் முகாமில் விண்ணப்பம் கொடுத்த அனைவருக்கும் சில நாட்களில் அடையாள அட்டை வழங்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

    • முகாம்கள் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடக்கிறது.
    • மாற்றுத்திறனாளிகள் பல்வேறு திட்டங்களில் பயன்பெற விண்ணப்பிக்கலாம்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள், நலத்திட்ட உதவிகள் மற்றும் உதவி உபகரணங்கள் பெறுவதற்காக ஒருங்கிணைந்த மருத்துவ முகாம் வருகிற 26-ந் தேதி முதல் தொடங்குகிறது. அன்று வெள்ளகோவில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், 27-ந் தேதி தாராபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் நடக்கிறது. அடுத்த மாதம் 2-ந் தேதி குண்டடம் அரசு உயர்நிலைப்பள்ளியிலும், 3-ந் தேதி குடிமங்கலத்தில் உள்ள பெதப்பம்பட்டி என்.வி. பாலிடெக்னிக் கல்லூரியிலும், 9-ந் தேதி மடத்துக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியிலும், 17-ந் தேதி அவினாசி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், 24-ந் தேதி காங்கயம் அரசு மேல்நிலைப்பள்ளியிலும் முகாம்கள் நடைபெற உள்ளது.

    இந்த முகாம்கள் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடக்கிறது. முகாமில் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெறாதவர்களுக்கு அட்டை வழங்குதல், மாற்றுத்திறனாளிகள் நல வாரியத்தில் பதிவு செய்தல், தனித்துவம் வாய்ந்த ஸ்மார்ட் கார்டு அடையாள அட்டை பதிவு செய்தல், பராமரிப்பு உதவித்தொகை, வங்கிக்கடன் மானியம், இலவச வீட்டுமனைப்பட்டா, வேலைவாய்ப்பு பதிவு, புதுப்பித்தல், வேலைவாய்ப்பற்றோர் நிதி உதவித்தொகை, மாவட்ட தொழில் மையம் மூலம் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம், வீடு கட்டுவதற்கு கடனுதவி, முதல்-அமைச்சரின் காப்பீட்டு திட்டத்தின் மூலம் மருத்துவ காப்பீட்டுக்கான உறுப்பினர் சேர்க்கை போன்ற திட்டங்களில் பயன்பெற விண்ணப்பிக்கலாம்.

    மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, தனித்துவம் வாய்ந்த ஸ்மார்ட் கார்டு, ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை ஆகிய ஆவணங்களின் அசல் மற்றும் நகலுடன் 5 புகைப்படங்களை முகாமில் கொடுக்க வேண்டும். இதை மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.

    • குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து மொத்தம் 306 மனுக்கள் பெறப்பட்டது.
    • மோட்டார் பொருத்தப்பட்ட நகரும் வண்டியை தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு மாவட்ட கலெக்டர் ஆகாஷ் வழங்கினார்.

    தென்காசி:

    தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்ட அரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.இதில் பொதுமக்களிடம் இருந்து இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, அடிப்படை வசதிகள் ஏற்படுத்தித் தர கோருதல், பட்டாமாறுதல்,மாற்றுத் திறனாளிகள் உதவி தொகை மற்றும் இதர மனுக்கள் என மொத்தம் 306 மனுக்கள் பெறப்பட்டது.

    இந்த கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் தகுதி வாய்ந்த மனுக்கள் ஆக உள்ளதா என்பதை விசாரணை செய்து விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரர்களுக்கு உரிய பதில் அளிக்குமாறு சம்பந்தப்பட்ட அனைத்து துறை அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டது.

    கூட்டத்தில் மாற்றுத்தி றனாளிகள் நலத்துறையின் மூலம் ரூ.1 லட்சம் மதிப்பிலான மோட்டார் பொருத்தப்பட்ட நகரும் வண்டியை முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு மாவட்ட கலெக்டர் ஆகாஷ் வழங்கினார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்னுலாப்தீன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவி யாளர் (பொறுப்பு) முத்து மாத வன் மற்றும் சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை ஆட்சியர் (பொறுப்பு) ராஜ மனோகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக்கான சங்கம் சார்பில் முற்றுகைப் போராட்டம் நடந்தது.
    • நிறுத்தப்பட்ட உதவித் தொகையை உடனே வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது.

    உசிலம்பட்டி

    உசிலம்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக்கான சங்கம் சார்பில் முற்றுகைப் போராட்டம் நடந்தது. மாவட்டச் செயலாளர் முருகன், ஒன்றிய செயலாளர் சின்னசாமி, மாவட்டத் தலைவர் தவமணி, பொருளாளர் சின்ன கருப்பன், ஒன்றிய பொருளாளர் வீரையா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அரசாணை எண் 41-க்கு எதிராக மாற்றுத்திறனாளிகளின் உதவித்தொகையை நிறுத்திய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், நிறுத்தப்பட்ட உதவித் தொகையை உடனே வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது. மாற்றுத்திறனாளிகளிடம் சமூக நல பாதுகாப்பு வட்டாட்சியர் அன்பழகன் பேச்சுவார்த்தை நடத்தி, இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

    • மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் வருகிற 18-ந் தேதி நடக்கிறது.
    • தங்களது பகுதியில் நடைபெற உள்ள சிறப்பு முகாமில் கலந்து கொண்டு பயனடையலாம்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மத்திய அரசின் சமூகநீதி மற்றும் அதிகாரம் வழங்கல் அமைச்சகம் மூலம் RVY திட்டம் மற்றும் CSR scheme of General Insurance corporation என்ற திட்டங்களின் கீழ் சிவகங்கை மாவட்டத்தில் வசிக்கும் 60 வயது அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு முடநீக்கு கருவிகள், செயற்கை பல்செட், ஊன்றுகோல்கள், செயற்கை அவயங்கள், பார்வையற்றவர்களுக்கான கண்ணாடிகள் மற்றும் செவித்திறன் அற்றவர்களுக்கான காதொலிக்கருவிகள் ஆகிய உபகரணங்களை Alimco என்ற நிறுவனத்தின் மூலம் இலவசமாக வழங்க மாவட்ட நிர்வாகமும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையுடன் இணைந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.

    இதையடுத்து நேற்று தேவகோட்டையிலும், இன்று (11-ந் தேதி) கண்ணங்குடியிலும், நாளை (12-ந் தேதி) சாக்கோட்டையிலும், 13-ந் தேதி கல்லலிலும், 16-ந் தேதி எஸ்.புதூரிலும், 17-ந் தேதி சிங்கம்புணரியிலும், 18-ந் தேதி சிவகங்கை வட்டார வளர்ச்சி அலுவலகங்களிலும் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன.

    கடந்த 2-ந் தேதி திருப்பத்தூரில் நடந்த முகாமில் 251 எண்ணிக்கையிலும், 3-ந் தேதி காளையார்கோவிலிலும் நடந்த சிறப்பு முகாமில் 257 எண்ணிக்கையிலும், 4-ந் தேதி மானாமதுரையில் நடந்த முகாமில் 459 எண்ணிக்கையிலும், 5-ந் தேதி திருப்புவனத்தில் நடந்த முகாமில் 338 வகையான உதவி உபகரணங்களும், 6-ந் தேதி இளையான்குடியல் நடந்த முகாமில் 407 எண்ணிக்கையிலான உதவி உபகரணங்களும் மொத்தம் 1,712 வகையிலான உதவி உபகரணங்கள் மற்றும் பிற உதவிகள் மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு வழங்க தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

    எனவே, மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்கள் பாஸ்போர்ட் அளவு புகைப்படம்-4, மாற்றுத்திறனாளி அடையாள அட்டை ஆதார் அட்டை மற்றும் ரேசன் கார்டு ஆகிய சான்றுகளுடன் தங்களது பகுதியில் நடைபெற உள்ள சிறப்பு முகாமில் கலந்து கொண்டு பயனடையலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • விழுப்புரத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு வங்கி கடன் மானியம் கலெக்டர் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்ட ஆட்சி தலைவர் மோகன் மாற்றுத் திறனாளிகளை ஊக்குவிக்கும் விதமாக மானியம் ஒன்றை அறிவித்தார்.

    அதில் மாற்றுத்திறனாளி நலத்துறையின் மூலம் மாற்றுத் திறனாளிகளுக்கு சுய வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டத்தில் 14 வயதுக்கு மேற்பட்ட மன வளர்ச்சி குன்றியோர், 18 வயதுக்கு மேற்பட்ட உலக சிந்தனை அற்றவர்கள் மற்றும் தசை சிதைவு நோயினால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் சுயதொழில் தொடங்கிட தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் இருந்து மாற்றுத் திறனாளிகளின் பெற்றோர்களுக்கு வங்கிகளில் இருந்து பெரும் கடன் தொகையில் 20 விழுக்காடு அல்லது அதிகபட்சமாக 15 ஆயிரம் மானியம் வழங்க உத்தரவிட்டுள்ளார். 

    • விருதுநகரில் மாற்றுத்திறனாளிகளுக்கான சுயம்வர நிகழ்ச்சி நடந்தது.
    • இந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் தலைமை தாங்கினார்.

    விருதுநகர்

    விருதுநகரில் புதுவசந்தம் மாற்றுத்திறனுடையோர் கூட்டமைப்பு, ராம்கோ சமூக சேவைக்கழகம் மற்றும் தமிழ்நாடு மாற்றுத்திறனுடையோர் கூட்டமைப்பு சங்கம், கீதாபவன் அறக்கட்டளை இணைந்து மாற்றுத்திறனா ளிகளுக்கான சுயம்வரம் விழாவை நடத்தியது.

    கலெக்டர் மேகநாத ரெட்டி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் பேசியதாவது:-

    மாற்றுத்திறனாளிகளின் திருமண வாழ்க்கையை கருத்தில் கொண்டு மாற்றுத்திறனாளிக ளுக்கான சுயம்வரம் விழா தனியார் கூட்டமைப்பு சங்கங்கள் மற்றும் அறக்கட்டளைகள் சார்பில் நடைபெறுகிறது. மாற்றுத்திறனாளிகள் வாழ்க்கைத்துணையை தேர்ந்தெடுக்க நல்ல வாய்ப்பாக இந்த விழா அமைந்துள்ளது.

    இதில் தேர்வு செய்யப்படுவோர், சென்னைக்கு அழைத்து செல்லப்பட்டு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு, திருமணம் நடத்தி வைக்கப்படும்.

    மேலும், மாற்றுத்திற னாளிகள் அனைத்து துறைகளிலும் மற்றவர்களுக்கு இணையாக சாதனை புரிந்து வருகின்றனர். மாற்றுத்திறனாளிகளுக்கு தமிழக அரசும், மாவட்ட நிர்வாகம் மூலமும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

    அதன்படி, இந்தியா விலேயே முதன் முறையாக தமிழக அரசின் வழிகாட்டுதல்படி, மாவட்ட நிர்வாகத்தின் சிறப்பு முயற்சியாக உதயம் திட்டத்தின் கீழ் மாற்றுத் திறனாளிகள் பிறர் உதவியை எதிர்பார்க்காமல், சுயமரியாதையுடனும், கண்ணியத்துடனும் தாங்களே எளிதாக பயன்படுத்தக் கூடிய வகையில், குறிப்பாக மாற்றுத்திறனாளி பெண்களின் பாதுகாப்பினை கருத்திற்கொண்டும், சிரமத்தினை தவிர்க்கும் வகையில், பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டு கட்டப்ப ட்ட 100 நவீன கழிப்பறைகள் பயனாளிகளின் பயன்பாட்டிற்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது.

    மாற்றுத்திறனா ளிகளுக்கு தேவையான உதவிகளை செய்யும் பட்சத்தில் அவர்களின் வாழ்க்கை தரம் மேம்படும். மேலும், அனைவரும் மாற்றுத்திறனாளிகளை மற்றவர் என கருதாமல் தங்களில் ஒருவராக பழக வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் ராம்கோ சிமெண்ட்ஸ் நிர்வாக தலைவர் ராமலிங்கம், தமிழ்நாடு மாற்றுத்திறனுடையோர் கூட்டமைப்பு சங்க மாநில தலைவர் சிம்மசந்திரன், மாவட்ட மத்திய கூட்டுறவு மேலாண்மை இயக்குநர் ராஜலட்சுமி, மாவட்ட நபார்டு வங்கி துணை பொது மேலாளர் ராஜராஜேசுவரன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சந்திரசேகரன், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தீர்மானங்கள் குறித்து மாநில பொதுச்செயலாளர் நம்புராஜன் பேசினார்.
    • மாற்றுத்திறனாளி உதவித்தொகை வழங்க மறுக்கக்கூடாது.

    உடுமலை:

    உடுமலையில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக்கான திருப்பூர் மாவட்ட மாநாடு நடந்தது.மாவட்டத்தலைவர் ஜெயபால் தலைமை வகித்தார். மாவட்ட துணைத்தலைவர் குருசாமி கொடியேற்றினார். மாநிலச்செயலாளர் வில்சன் மாநாட்டை துவக்கி வைத்தார்.

    தீர்மானங்கள் குறித்து மாநில பொதுச்செயலாளர் நம்புராஜன் பேசினார்.இதில் சமூக நலத்துறை சார்பில் வழங்கப்படும் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகையை 1,000 ரூபாயிலிருந்து 3 ஆயிரமாகவும், கடுமையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு, 2 ஆயிரத்திலிருந்து 5 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும்.கல்வி, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீட்டை உறுதி செய்யவும், சிறு, குறு தொழில் வணிக கடன் அலைக்கழிக்காமல் எளிதாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கவும், 100 நாள் வேலை உறுதித்திட்டத்தில் பாரபட்சமின்றி வேலை வழங்கவும், சமையல் கியாஸ் இணைப்பு உள்ளவர்களுக்கு, மாற்றுத்திறனாளி உதவித்தொகை வழங்க மறுக்கக்கூடாது.மருத்துவச்சான்று வழங்குவதை எளிமைப்படுத்தவும், செயற்கை அவையங்கள் உடனடியாக வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • கோரிக்கை மனுக்களை கலெக்டரிடம் வழங்கலாம்.
    • தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் தலைமையில் வருகிற 22-ந் தேதி மதியம் 12 மணிக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. மாற்றுத்திறனாளிகள் மட்டும் தங்களுடைய கோரிக்கை மனுக்களை கலெக்டரிடம் வழங்கலாம். இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.

    • மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு குறைதீர் கூட்டம் நடக்கிறது.
    • அரசு உதவிகள் பெறுவதற்கு விண்ணப்பங்களும், ஆலோசனைகளும் வழங்கப்படும்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டத்திலுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் சென்றடைவதை உறுதி செய்யும் வகையில், 'மாற்றுத்திறனா ளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் வருவாய் கோட்ட அளவில் மாதந்தோறும் நடைபெற்று வருகிறது.

    அதன் தொடா்சியாக, தேவகோட்டை கோட்டாட்சியர் தலைமையில் வருகிற

    20-ந் தேதி காலை 10 மணி அளவில் காரைக்குடி கண்ணதாசன் மணி மண்டபத்திலும், சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் 26-ந் தேதி அன்று காலை 10 மணி அளவில் மானாமதுரை வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும் 'மாற்றுத்திறனா ளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம்" நடைபெற உள்ளது.

    இச்சிறப்பு குறைதீர் நாளன்று சிறப்பு நிகழ்வாக மாற்றுத்திற னாளிகளுக்கான ஒற்றைச்சாளர முறையிலான சிறப்பு மருத்துவ முகாமும் நடைபெற உள்ளது. இந்நாளில் மாற்றுத்திறனா ளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்குதல், யூ.டி.ஐ.டி. பதிவு மேற்கொள்ளுதல், ஆதார் அட்டை பதிவு மற்றும் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் பதிவு ஆகியவை மேற்கொள்ளப்படும்.

    மேற்குறிப்பிட்ட உதவிகளைப் பெறுவதற்கு ஒவ்வொரு பதிவிற்கும் தனித்தனியாக பாஸ்போர்ட் அளவு புகைப்படம் -4, குடும்ப அட்டை நகல் (அல்லது) ஆதார் அட்டை நகல் (அல்லது) இருப்பிடச்சான்று ஆகியவற்றுடன் முகாமில் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    ஏற்கனவே, மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டை பெற்றவர்களுக்கு உதவி உபகரணங்கள் மற்றும் மாத உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, வங்கிக்கடன் மற்றும் பிற அரசு உதவிகள் பெறுவதற்கு விண்ணப்பங்களும், ஆலோசனைகளும் வழங்கப்படும்.

    சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் இச்சிறப்பு குறைதீர் நாட்களில் கலந்து கொண்டு பயனடைய வேண்டும்.

    மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி தெரிவித்துள்ளார்.

    • விரைந்து வழங்க வேண்டும். ஸ்கேன், எக்ஸ்ரே பரிசோதனை செய்ய அலைக்கழிக்கக்கூடாது என்று அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்.
    • இதனால் கோரிக்கை மனுக்களையும் பெற வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள் சிறப்பு முகாமை கலெக்டர் வினீத் ஆய்வு செய்தார். அப்போது அவர் மாற்றுத்திறனாளிகளுக்கு பஸ் பாஸ், ரெயில் பாஸ் வழங்குவதில் தாமதம் செய்யக்கூடாது. விரைந்து வழங்க வேண்டும். ஸ்கேன், எக்ஸ்ரே பரிசோதனை செய்ய அலைக்கழிக்கக்கூடாது என்று அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்.

    மாற்றுத்திறனாளிகள் சிறப்பு முகாமுக்கு வரும்போது, மற்ற தகவல்களை அவர்கள் பெறும் வகையில் தகவல் மையத்தை அமைத்தால் விண்ணப்பிக்கும் முறை, மனு எழுதுவது, மற்ற துறைகளுக்கு செல்வது போன்ற விவரங்களை கேட்டு அறிய முடியும். அதுபோல் மாற்றுத்திறனாளிகள் தங்கள் கோரிக்கைகள் தொடர்பான மனுக்களையும் இந்த முகாமில் பெற்றுக்கொண்டால் அவர்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு அலைய வேண்டிய நிலை இருக்காது. இதனால் கோரிக்கை மனுக்களையும் பெற வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.

    ×