search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வைக்கோல்"

    • லாரி டயர் மற்றும் டீசல் டேங் வெடித்து சிதறியது.
    • அதிஷ்டவசமாக லாரி டிரைவர் உயிர் தப்பினார்.

    பாபநாசம்:

    தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா உமையா ள்புரம் கிராமத்தில் உள்ள விவசாயி களிடமிருந்து 60 கட்டு வைக்கோல் போரை வாங்கிகொண்டு மினி லாரியில் ஏற்றி கொண்டு லால்குடி புறப்பட்டு சென்றனர்.

    இந்நிலையில் உமையாள்புரம் மெயின்ரோ ட்டில்ல வரும்பொழுது மின் வயரில் லாரி உரசியதாக கூறப்படுகிறது.

    இதில் லாரியில் இருந்த வைக்கோல் போர் தீ பிடித்து எரிந்தது. மேலும் லாரி டயர் மற்றும் டீசல் டேங் வெடித்து சிதறியது.

    இதில் அதிஷ்டவசமாக லாரி டிரைவர் உயிர் தப்பினார்.

    இது குறித்து லாரியின் உரிமையாளர் லால்குடி சாமிநாதன் கொடுத்த புகாரின் பேரில் பாபநாசம் தீயணைப்பு நிலைய அலுவலர் செல்வம் தலைமையில் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து மேலும் தீ பரவாமல் இருக்க தீயை அணைத்தனர்.

    இந்த விபத்தில் ரூ. 4 லட்சம் சேதம் ஏற்பட்டது.

    இது குறித்து கபிஸ்தலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    கரூர் அருகே வைக்கோல் ஏற்றிச்சென்ற டிராக்டர் தீப்பிடித்து எரிந்ததில் ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள வைக்கோல் நாசமாயின.
    வேலாயுதம்பாளையம்:

    கரூர் மாவட்டம், மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார் ( வயது 45). இவர் தனது டிராக்டரில் அருகாமையில் உள்ள கோவிந்தம் பாளையத்தில் இருந்து வைக்கோல் ஏற்றிக் கொண்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது எல்லை என்ற பகுதியில் வந்த போது டிராக்டரில் இருந்த வைக்கோல் தார் சாலையின் மேல் சென்று கொண்டிருந்த மின்சாரக்கம்பியில் உரசி திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதை அறிந்த செந்தில்குமார் டிராக்டரை நிறுத்தி டிப்பரிலிருந்து என்ஜினை கழற்றி வெளியே எடுத்து சென்றார். அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து தீயை அணைக்க முயற்சி செய்தனர். இருப்பினும் தீயை அணைக்க முடியவில்லை. இதுகுறித்து செந்தில்குமார் வேலாயுதம்பாளையம் தீயணைப்பு துறையினருக்கு, தகவல் தெரிவித்தனர்.

    தகவலின் பேரில் நிலைய அலுவலர் திருமுருகன் தலைமையிலான தீயணைப்பு குழுவினர், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று டிப்பர் மற்றும் வைக்கோலில் வேகமாக எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்து கட்டுப்படுத்தினர். இருப்பினும் ரூ.50 ஆயிரம் மதிப்பிலான வைக்கோல் தீயில் எரிந்து நாசமாயின. மேலும் டிப்பரின் பாதி பாகம் தீயில் எரிந்தது. #tamilnews
    ×